Thursday 30 May 2024

சுயமரியாதைத் திருமணம் எனும் கேலிக்கூத்து

சுயமரியாதைத் திருமணம் எனும் கேலிக்கூத்து

 25.09.1928 ரெங்கசாமி ரெட்டியார் என்கிற தெலுங்கர் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்டார்.
 பார்ப்பனர் அல்லாமல் ஈவேரா முன்னிலையில் எந்த மத சடங்குகளும் இல்லாமல் நடந்த இதுவே முதல் முற்போக்குத் திருமணம் என்று ஈவேரா பக்தர்கள் இன்றுவரை பிரச்சாரம் செய்கின்றனர்.

 ஆனால் இதற்கு 39 ஆண்டுகள் முன்பே காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவரான தஞ்சாவூர்
திரு.ஜி.சுப்பிரமணியம் 1889 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டு மேடையில் இளம் வயதில் கணவனை இழந்த தன் மகளுக்கு இரண்டாவது திருமணம் செய்துவைத்து மறுமணம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

 அதை ஒப்பிடும்போது இந்த ரெட்டியார் ரெண்டு தாலி கட்டி மூவராக முதலிரவு அறைக்குள் சென்ற சுயமரியாதை திருமணம் ஒரு கேலி கூத்து.

 சட்டப்படி செல்லாது என்றாலும் இப்படியே திருமணம் செய்யுமாறு ஈவேரா வலியுறுத்த அதை பின்பற்றி 1930 களில் பல ஈவேரா தொண்டர்கள் இதே போல சட்டப்படி செல்லாத திருமணம் செய்து கொண்டனர்.
 திமுக 1967 இல் ஆட்சிக்கு வரும் வரை அதாவது ஏறத்தாழ 40 ஆண்டு காலம் இவர்கள் சட்டப்படி திருமணம் ஆகாதவர்கள் என்கிற வகையில் இவர்களுக்கு குடும்ப அட்டை கூட கிடைக்கவில்லை. இவர்களின் குழந்தைகள் சட்டப்படி தாய் தகப்பன் இல்லாத அனாதைகளாக இருந்தனர். 

 இப்படி பலர்  உரிய சான்றிதழ்கள் இல்லாமல் அல்லாடிய நிலையில் 1948 இல் ஈவேரா மணியம்மை திருமணம் சட்டப்படி செல்லும் திருமணமாக நடந்தது.
 ஈ.வே.ரா தம் வளர்ப்பு மகள் மணியம்மையை சுயமரியாதை திருமணம் செய்யவில்லை ஏனென்றால் அப்போதுதான் சொத்து மணியம்மை பெயருக்கு மாறும்.

 இவர்கள் செய்யாத ஏமாற்றே இல்லை!

சில தகவல்களுக்கு நன்றி: விசுவநாதன் கரிகாலன்

No comments:

Post a Comment