Showing posts with label பெரியார். Show all posts
Showing posts with label பெரியார். Show all posts

Wednesday, 16 July 2025

பெண்ணுரிமை என்று ஈவேரா உளறியவை

பெண்ணுரிமை என்று ஈவேரா உளறியவை

 ஈ.வே.ரா தன் வாழ்நாளில் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை ஒரு நிலைப்பாட்டில் இருந்து மாறாமல் இருந்தார் என்றால் அது அவரது பெண்களைப் பற்றிய நிலைப்பாடுதான்!

"பெண்கள் விடுதலைக்கு பிள்ளை பெறும் தொல்லை அடியோடு ஒழிந்து போகவேண்டும்.
அது ஒழியாமல் சம்பளம் கொடுத்து புருஷனை நியமித்துக் கொள்வதாயிருந்தாலும் பெண்கள் பொதுவாக உண்மைவிடுதலை அடைந்துவிட முடியாது என்றே சொல்லுவோம்"
- ஈ.வே.ரா (குடி அரசு,12-08-1928)
------------------
"தவிர 'பெண்கள், பிள்ளை பெறுவதை நிறுத்திவிட்டால் உலகம் விர்த்தியாகாது, மானிட வர்க்கம் விர்த்தியாகாது'
என்று தர்ம நியாயம் பேசச் சிலர் வருவார்கள்.
உலகம் விர்த்தியாகாவிட்டால் பெண்களுக்கு என்ன நஷ்டம்?
மானிட வர்க்கம் பெருகாவிட்டால் பெண்களுக்கு என்ன ஆபத்து ஏற்பட்டுவிடக்கூடும்?"
- ஈ.வே.ரா (குடி அரசு,12-08-1928)
-------------------
"பெண்கள் பிள்ளை பெறுவதில்லை என்கின்ற காரியத்தில் ஆண்களுக்கு எவ்விதக் கஷ்டமும் நஷ்டமும் கிடையாது என்பதோடு ஆண்களுக்கு இலாபமும் உண்டு என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
எப்படியெனில் ஒரு மனிதன் தான் பிள்ளைகுட்டிக்காரனாய் இருப்பதினாலேயே யோக்கியமாகவும் சுதந்திரமாகவும் நடந்து கொள்ளப் பெரிதும் முடியாமலிருக்க வேண்டியவனாய் விடுகிறான்.
அன்றியும் அவனுக்கு அனாவசியமான கவலையும் பொறுப்பும் அதிகப்படவும் நேரிடுகின்றது"
- ஈ.வே.ரா (குடி அரசு,12-08-1928)
-----------------
ஆண், பெண் இருவர்களின் சுயேச்சைக்குமே கர்ப்பமாவதும், பிள்ளைகளைப் பெறுவதும் இடையூறான காரியமாகிறது. அதிலும் பெண்கள் சுயேச்சைக்கு, கர்ப்பம் என்பது கொடிய விரோதியாய் இருக்கிறது. அதனால்தான் நாம் கண்டிப்பாய் "பிள்ளை பெறுவதை நிறுத்தியே ஆக வேண்டும்' என்கிறோம்.
- "குடியரசு' (6.4.1930)
---------
"ஆண் இரண்டு வைப்பாட்டிகளை வைத்துக்கொண்டால் பெண்கள் மூன்று ஆசைநாயகர்களை வைத்துக்கொள்ள முற்பட வேண்டும்.
உடனே நிலைமை சரிப்பட்டுப்போகும்.
உண்மையான சமரசம் தோன்றிவிடும்.
பிறகு கஷ்டமே இருக்காது"
- ஈ.வே.ரா (குடி அரசு 8-2-1931)
-----------------
"ஆண்களும், பெண்களும் ஒரே மாதிரியாக வேஷ்டி கட்டவேண்டும்.
ஜிப்பா போடவேண்டும்.
உடைகளில் ஆண், பெண் வித்தியாசம் இருக்கக்கூடாது"
- ஈ.வே.ரா (நூல்: பெரியார் ஒரு வாழ்க்கை நெறி)
--------
"பெற்றோர்கள் தங்கள் பெண்களை பெண் என்றே அழைக்காமல் ஆண் என்றே அழைக்கவேண்டும்.
பெயர்களும் ஆண்கள் பெயர்களையே இடவேண்டும்"
- ஈ.வே.ரா (குடியரசு, 21-09-1946)

---------
"திருமணம் என்பது மனிதத்தன்மைக்காக ஏற்படவில்லை. மனிதன் பெண்களை அடிமைகொள்ளவே ஏற்பட்டது. அது ஆண்களுக்கு நன்மையாகவும் பெண்களுக்குக் கேடாகவும் இருக்கிறது. பெண்ணடிமைக்கு அடிப்படைக் காரணங்கள் திருமணம், கற்பு என்பவைகளேயாகும்.  பெண்களை அடிமையாக வைத்திருப்பது என்பது ஆண்களுக்கு லாபமாக இருக்கிற காரணத்தால், பெண்கள் உரிமைக்கு ஆண்கள், ஒப்புவது இல்லை. இந்த நிலை மாறியாக வேண்டும். நாளைக்கே ஒரு அரசாங்கம் வந்து, திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று சட்டம் செய்து விட்டால் பிரச்சனை இல்லை... எனவே, பெண்ணடிமை ஒழிய திருமண முறை ஒழிந்தாக வேண்டும். அதோடு மட்டுமல்ல. மனிதன் சுதந்திர மனிதனாக இருக்க வேண்டுமென்றாலும், இந்த திருமண முறை ஒழிந்தே ஆக வேண்டும்."
- ஈ.வே.ரா (நூல்: உயர்ந்த எண்ணங்கள்) 
----------------
"உத்தியோகத்துக்குப் போக ஆரம்பித்தால் பிள்ளைபெற வேண்டும் என்ற எண்ணமே பெண்களுக்கு வராது.
உத்தி யோகத்தில் சரிபகுதி பெண்களுக்குக் கொடுக்க வேண்டும்.
அதில் அவர்களை திருப்பி விட்டால் தாங்களாகவே பிள்ளை பெறுவதைத் தடுத்துக்கொள்வார்கள்.
பிள்ளை பெறுவதைத் தொல்லையாக கருதுவார்கள்.”
- ஈ.வே.ரா 17-3-1970
----------
"தாலி என்பது நாய்க்கு நகராண்மைக் கழகம் கட்டும் பட்டை போன்றது.
தாலி பெண்ணை அடக்கி ஆளும் மூர்க்கத் தனத்தின் சின்னம்.
தாலிபற்றிப் புலவர்கள் பேசும்போது காளையை அடக்குதல், புலிவேட்டையாடுதல் போன்ற பொருத்தமற்ற இலக்கிய ஆதாரங்களை அள்ளி வீசுவார்கள்.
பெண்களுக்கு அறிவு வந்தாலொழியத் தாலியை நீக்கமுடியாது"
- ஈ.வே.ரா (நூல்: நாய்க்கு லைசன்ஸ் பெண்ணுக்குத் தாலி)
-----------
"உலகில் ‘கற்பு’, ‘காதல்’ என்பன போன்ற வார்த்தைகளை எப்படி பெண் மக்களை அடிமைப்படுத்தி, அடக்கியாளவென்று ஏற்படுத்தி பயன்படுத்தப்பட்டு வருகின்றனவோ,
அது போலவேதான் ‘ஒழுக்கம்’ என்னும் வார்த்தையும்"
- ஈ.வே.ரா ( நூல்: மெட்டீரியலிசம் அல்லது பிரகிருதிவாதம்)
-----------

'பெண்களே உங்களுடைய கர்ப்பப் பைகளை வெட்டி எறியுங்கள்'

‘பெண் விடுதலைக்கு ஆண்மை அழிய வேண்டும்’ (தலைப்பு)

‘ஆண்கள் முயற்சியால் செய்யப்படும் எவ்வித விடுதலை இயக்கமும் எவ்வழியிலும் பெண்களுக்கு உண்மையான விடுதலையை அளிக்க முடியாது’

(நூல்: பெண் ஏன் அடிமையானாள்)
----------------
ஈவேரா சொன்னவற்றை சுருக்கமாகச் சொன்னால்
 "ஒரு பெண் திருமணம் செய்யாமல் குழந்தை பெறாமல் வாழவேண்டும் அதுதான் பெண் சுதந்திரம்" 

06.09.2017 அன்றைய முகநூல் பதிவை மேம்படுத்திய பதிவு 

Monday, 27 January 2025

திராவிடமும் புஷ்பா திரைப்படமும்

திராவிடமும் புஷ்பா திரைப்படமும்

 புஷ்பா -2 திரைப்படம் எல்லாரும் பார்த்திருப்பீர்கள்!
 அதன் கதை ஒரு தகப்பனுக்கு முறையில்லாமல் பிறந்த ஒருவன் தவறான வழியில் போயேனும் தன் குடும்ப வாரிசாக அங்கீகாரம் பெற போராடுவது ஆகும்.
  இந்த அங்கீகாரம் வழி வழியாக வரும் குடிப்பட்டத்தை தன் பெயருடன் சேர்த்துக்கொள்ள நடக்கிறது.
 உலகில் குடிப்பட்டம் என்பது எந்த ஒரு இனத்திலும் உள்ளது.
 இது ஒரு இயல்பான அடையாளம் தான்.
 காரல் "மார்க்ஸ்",  சே "குவேரா",  கரம்சந்த் "காந்தி", ஹோ சி "மின்", மார்ட்டின் "லூதர்கிங்", பிடல் "காஸ்ட்ரோ", மா "சே துங்",  போன்ற அனைவருமே தமது குடிப்பட்டத்துடன் தான் எல்லா மக்களுக்கும் பொதுவான சிந்தித்தார்கள்.
அனைத்து சாதி மக்களும் ஆதரிக்கும் தலைவர்களாக உருவானார்கள்.
 உலகில் குடிப்பட்டத்தை நீக்கிக் கொண்டவர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து அடிமையாக கொண்டு செல்லப்பட்ட கருப்பின மக்கள் மட்டுமே!
 இவர்கள் அடிமையாக விற்கப்பட்டு கால்நடைகள் போல இனப்பெருக்கம் செய்யப்பட்டு தகப்பன் பெயர் தெரியாமல் தன் முதலாளியின் குடிப்பட்டத்தை அடையாளமாகக்கொண்டு வாழ்ந்தார்கள்.
  இந்த அடிமைத்தன அடையாளத்தை ஒழிக்கவே மால்கம் எக்ஸ் போன்ற தலைவர்கள் நமது குடிப்பட்டத்தை நீக்கிவிட்டனர்.

  இதிலிருந்து நாம் தெரிவது என்ன?!
 குடிப்பட்டம் இல்லாமல் இருப்பது அடிமைத்தனம் அல்லது முறையற்ற பிறப்பு என்பதை குறிக்கும்!
 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று கூறியவரே " கணியன்" பூங்குன்றன் என்று குடிப்பெயரோடு தான் தன் பெயரைப் பதிந்துள்ளார்.
 நம் கண்முன்னே சிதம்பரம் பிள்ளை, முத்துராமலிங்கத் தேவர் போன்ற தலைவர்கள் அனைத்து சாதியினருக்கும் போராடிய நம் இன தலைவர்கள் தம் குடிப்பட்டத்துடன் தான் போராடினார்கள்.
 மக்களுக்காக பெரும் இழப்புகளை ஏற்றுக் கொண்டார்கள்.
 அத்தகைய தலைவர்களை குடிப்பட்டம் போட்டுக் கொண்ட இயல்பான நடைமுறையை வைத்து சாதிய தலைவர்கள் என்று முத்திரை குத்திவிட்டனர் வந்தேறிகள்.
 தமிழர்கள் தமது குடிப்பட்டத்தை போட விடாமல் தடுத்தது திராவிட சதி!
 இதை இவர்கள் ஏன் செய்தார்கள் என்றால் தேவதாசி முறைப்படி அப்பன் பெயர் தெரியாத கூட்டம் வெளியில் இருந்து தமிழகத்திற்கு வந்தவர்களுடன் வந்தனர்.
  இந்த வந்தேறிகள் ஆங்கிலேயர் ஆதரவுடன் திராவிடத்தை உருவாக்கி ஆட்சியை ப் பிடித்திருந்தனர்.
 இவர்களை மடக்கி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய தேவதாசி வகையறா தமக்கு குடிபட்டம் இல்லை என்பதாலேயே எல்லா தமிழர்களையும் அவ்வாறு ஆக்கிவிட்டனர்.
  இதனால் மேற்கண்ட தலைவர்களை விட இவர்கள் பெரிய புரட்சியாளர்கள் என்று ஆகிவிட்டது.
  இது தமிழகத்தில் உள்ள பிற இனத்தவர் தமது அடையாளத்தை மறைத்துக் கொள்ளவும் வசதியாக இருந்ததால் அவர்களும் ஏற்றுக் கொண்டனர்.
 இதற்காகவே தமிழர்களை தேவிடியா மகன்கள் என்று தொடர்ந்து கூறியும்
தமிழின பட்டியல் சமூகத்தாரை சாதி பட்டம் இழிவானது என்று பிரச்சாரம் செய்தும் அதை நீக்க செய்தவர் ஈவேரா!
 இந்த நடைமுறையை பின்பற்றுவது உலக இயல்புக்கு மாறானது!
 எனவே தமிழர்கள் அனைவரும் தமது குடிப்பட்டத்தை பயன்படுத்த வேண்டும்!
 ஒரு தமிழ்க்குடி இன்னொரு தமிழ்க் குடியை அதன் குடிப்பட்டத்தை வைத்து ஜாதி பெயர் என்று விமர்சிப்பதும் உயர்வாகவோ தாழ்வாகவோ நினைப்பதும் கூடவே கூடாது!
 

Friday, 10 January 2025

நீதிக்கட்சி தெலுங்கர் ஆதிக்கம் ஈவேரா ஆதரவு

நீதிக்கட்சி தெலுங்கர் ஆதிக்கம் ஈவேரா ஆதரவு

 1929 இலிருந்து ஈவேரா சுயமரியாதை இயக்கம் நடத்திக் கொண்டு நீதிக் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார்.
 நீதிக் கட்சி ஆட்சியில் 1931 இல் பொப்பிலி ராஜா வட்டமேசை மாநாடு லண்டன் இல் நடந்தபோது அங்கே சென்றுவிட்டார். இந்த இரண்டு மாத இடைவெளிக்காக தற்காலிக பிரிமீயர் (அன்றைய முதலமைச்சருக்கு நிகரான பதவி) ஆக பி.டி.ராசன் எனும் தமிழர் பொறுப்பேற்கிறார். 
 இதைக்கூட பொறுக்க முடியாத தெலுங்கர்கள் அவரை எதிர்க்கிறார்கள். நீதிக் கட்சியில் இருந்த தமிழருக்கும் தெலுங்கருக்கும் முரண்பாடுகள் தோன்றுகின்றன.

 அதே நேரம் பொப்பிலி ராஜா லண்டனில் வட்டமேசை மாநாட்டிலேயே தெலுங்கருக்கு தனி மாநிலம் கேட்டு கோரிக்கை வைத்தார். பொப்பிலி ராஜாவை ஈவேரா எதிர்க்கவில்லை. ஆனால் நீதிக்கட்சி ஆட்சியில் தமிழர்கள் தமக்கான அரசியல் நலன்களைப் பேசியபோது 16.12.1934 பகுத்தறிவு இதழில் "ஆந்திரர் தமிழர் என்று பிரிக்கப் பார்ப்பதா" என்று கட்டுரை எழுதினார் ஈ.வெ.ரா. 
 அதில் "ஜஸ்டிஸ் கட்சியில் தமிழர்களை விட ஆந்திரர்கள் அதிகமாக சாதித்துக்கொண்டதாக சொல்லமுடியாது. உதாரணமாக ஒரு ஆந்திரர் பனகல் ராஜா முதல்மந்திரி ஆனார் என்றால் தமிழர் சுப்பராயன் முதல்மந்திரி ஆகியுள்ளார்"
 இதில் கவனிக்க வேண்டியது சுப்பராயன் நீதிக் கட்சியிலிருந்து வெளியேறி சுயேட்சையாக வென்று சுதந்திரா கட்சியிலிருந்து சுப்பையா முதலியார் ஆதரவுடன்தான் முதல்வர் ஆனார் (இந்த சுப்பையா முதலியார்தான் நீதிக் கட்சி வெறும் பெயருக்கு வடிவமைத்து கிடப்பில் போட்டிருந்த இடவொதுக்கீடு திட்டத்தை அரசாணை இட்டு நடைமுறைக்கு கொண்டுவந்தவர். இடவொதுக்கீடு நீதிக்கட்சி கொண்டுவந்தது அல்ல).

மேலும் ஈவேரா எழுதுவது "மந்திரிகளில் ஆந்திராவைச் சேர்ந்த பனகால், சர்.பந்த்ரோ, முனுசாமி நாயுடு, சர்.கே.வி.ரெட்டி, பொப்பிலி ஆகிய 5 பேர் மந்திரி ஆகியுள்ளனர். தமிழர்களில் சுப்புராயலு ரெட்டியார், சிவஞானம்பிள்ளை, டாக்டர் சுப்பராயன், முத்தையா முதலியார், சேதுரத்தினம் ஐயர், பி.டி.ராஜன், குமாரசாமி ரெட்டியார் ஆகிய 7 பேர் மந்திரி ஆகி இருக்கிறார்கள்"
இங்கே கவனிக்க வேண்டியது இந்த 7 பேரில் சிவஞானம்பிள்ளை நீதிக் கட்சியைச் சேர்ந்தவரே கிடையாது. இருவர் ரெட்டியார்கள்.
ஒருவர் ஐயர் அதாவது பார்ப்பனர் தமிழரே கிடையாது அவர்கள் ஆரியர் என்று கூறிவந்த ஈவேரா இப்போது மட்டும் ஒரு பார்ப்பனர் தமிழர் என்கிறார்.

 மேலும் அவர் "நிர்வாக கவுன்சில் மெம்பர்களில் ஆந்திரர் கே.வி.ரெட்டியார் இருந்தார் என்றால் தமிழர்களில் சீனிவாச ஐயங்கார், சர்.உஸ்மான், சர்.சி.பி.ராமசாமி ஐயர், கே.ஆர்.வெங்கட்ராம சாஸ்திரி, கிருஷ்ணன் நாயர், பன்னீர்செல்வம் ஆகியோர் இருந்தனர்"
 இப்போதும் ஒரு ஐயங்கார், ஐயர் ஆகிய பார்ப்பனர்கள் தமிழர்கள் என்று தம் கொள்கை மாறிப் பேசுகிறார். 
 உஸ்மான், வெங்கட்ராம சாஸ்திரி, கிருஷ்ணன் நாயர் ஆகியோர் தமிழர் கிடையாது. அவர்களையும் தமிழர் என்கிறார் ஈவேரா.

 அதாவது பிராமண ஆதிக்கத்தை எதிர்த்து தொடங்கப்பட்ட நீதிக் கட்சியில் பிராமணரல்லாதோர் பெறவேண்டிய பதவிகளில் தெலுங்கர் உட்கார்ந்துகொண்டு பதவி பங்கீட்டு கணக்கு காட்டும்போது பிராமணரில் இருக்கும் தமிழரையும் கணக்கு காட்டுகின்றனர்.

 1930 களில் நீதிக் கட்சிக்கு ஆதரவளித்த காலகட்டத்தில் தெலுங்கருக்காக இவ்வாறு பரிந்து பேசிய ஈவேரா தெலுங்கர் தனி மாநிலமே கேட்டபோது பிரிவினை என்று கண்டிக்கவில்லை.

 ஆனால் 1950 களில் தமிழர் தனிமாநிலம் கேட்டு போராடிய போதும் எல்லை மாவட்டங்களை இழக்க நேரிட்ட சூழலில் அதை தடுக்க முற்பட்டபோதும் மிகக் கடுமையாக எதிர்த்தார் ஈ.வெ.ரா.

 தகவல்களுக்கு நன்றி:-  ராவணா வலையொளி மகிழன் அவர்களது பேட்டி 

Tuesday, 17 December 2024

ஈ.வே.ரா ஆதரித்த பிராமணர்கள்


ஈ.வே.ரா ஆதரித்த பிராமணர்கள்

"நெல்லூர் மகாநாட்டில் பார்ப்பனர்களை சட்டச்சபைக் கட்சியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்கிற தீர்மானம் தென்னிந்திய நல உரிமைச்சங்க நிர்வாக சபையின் பேரால் பிரேரேபிக்கப்பட்டு,
என்னால் ஆமோதிக்கப்பட்டு அது விஷயாலோசனைக் கமிட்டியில் ஒரு ஓட்டில் தோல்வியடைந்து விட்டது."
- ஈ.வே.ரா 'எனது தோல்வி' என்ற தலைப்பில் 'குடியரசு' ஏட்டில் 13.10.1929 இல் எழுதியது.

1929இல் செங்கற்பட்டில் ஈ.வே.ரா நடத்திய முதல் சுய மரியாதை மாநாட்டிலும் தெலுங்கரான மணத்தட்டை சேதுரத்தின ஐயர் தலைமை தாங்கினார்.
அதாவது இதற்கு முன்னர் மதுரையில் (1926) மற்றும் கோவையில் (1927 ) நடத்திய முதல் இரண்டு மாநாடுகளை 'பிராமணரல்லாதார் மாநாடு' என்று நடத்திய ஈ.வே.ரா மூன்றாவது மாநாட்டை 'சுயமரியாதை மாநாடு' என்று பெயர்மாற்றி ஒரு பிராமணரையே தலைமையும் தாங்கவைத்தார்.

1930ல் இரண்டாவது சுயமரியாதை மாநாட்டிலும் மணத்தட்டை சேதுரத்தின ஐயர் முன்னிலை வகித்தார்.

ஈ.வே.ரா வின் ஆதரவுடன் 1946ல் தெலுங்கு பிராமணரான தங்கதூரி பிரகாசம் பந்துலு (இடைக்கால) சென்னை மாகாண அரசின் தலைமை அமைச்சரானார்.

1957ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காஞ்சிபுரம் சட்ட மன்றத் தொகுதியியல் சி.என்.அண்ணாத்துரையை எதிர்த்துக் காங்கிரசு தரப்பில் போட்டியிட்ட பிராமணரான மருத்துவர் பி.எசு. சீனிவாசனை ஆதரித்து ஈ.வெ.ரா. நேரடியாகவே வாக்குக் கேட்டார்.
இருந்தாலும் அண்ணாதுரை வென்றார்.

இதே 1957இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் தேர்தலில் தி.மு.க. ஆதரவுடன் போட்டியிட்ட பி.பாலசுப்பிரமணியத்தை தோற்கடிக்க காங்கிரஸின் காலில் விழுந்தார் ஈ.வே.ரா.
காங்கிரசு தரப்பில் போட்டியிட்ட பிராமணரான டி.டி.கிருஷ்ணமாச்சாரியை ஆதரித்து ஈ.வெ.ரா. வாக்குக்கேட்டார்.
அதோடு நில்லாது பி.பாலசுப்பிரமணியத்தைத் தோற்கடிக்க வேண்டுமென்றே சுயேட்சையாக எஸ்.இராமநாதன் என்பவரை என்ஜின் பெட்டிச் சின்னத்தில் போட்டியிட வைத்தார் ஈ.வே.ரா.

1967இல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் தஞ்சைத் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க உறுப்பினர் எஸ்.டி. சோமசுந்தரத்தை தோற்கடிக்கவேண்டும் என்பதற்காக காங்கிரசு கட்சியின் சார்பில் இந்திராகாந்தியால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிராமணராகிய ஆர்.வெங்கட்ராமனை நேரடியாக ஆதரித்து ஈ.வெ.ரா. வாக்குக் கேட்டார்.
தேர்தல் பரப்புரை செய்த ஈ.வெ.ரா,
“கழுதைகளாக இருந்தாலும் பிராமணராக இருந்தாலும் எல்லாக் காங்கிரசு வேட்பாளர்களுக்கும் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும்" என்றார்.

13.11.2016 
திராவிடம் கூட்டுவைத்த பிராமணர்கள்
என்ற பதிவின் ஒரு பகுதி

Wednesday, 23 October 2024

ஈவேரா காமராசரை ஏன் ஆதரித்தார்?



ஈ.வே.ரா காமராசரை ஏன் ஆதரித்தார்?

1951 ன் இறுதி மாதங்களில் தேர்தல் வரவிருந்ததை ஒட்டி
"அடித்துக் கொல்லப்பட வேண்டிய நச்சுப் பாம்பு"
என்று 'ஈ.வே.ரா' தனது 'விடுதலை' இதழில் எழுதிய

நச்சு பாம்புகள் பட்டியல் இதோ ,
1) கு.காமராஜ் (காமராசர்)
2) பி.டி. அனந்த சயனம் ஐங்கார்,
3) பி.எஸ்.குமாரசாமி ராஜா,
4) தேனி என்.ஆர்.தியாகராசன்,
5) வி.வி.கிரி,
6) டி.டி.கிருஷ்ணமாச்சாரி (டிடிகே)

ஆனாலும் காமராசர் வெற்றி பெற்றார்.
அவர் பதவிக்கு வந்த மறுநாளே அவரைப் பலவாறு புகழ்ந்து எழுதினார் ஈ.வே.ரா.
அதன் பிறகு  ஈ.வே.ரா காமராசரைத் தொடர்ந்து புகழ்ந்து பாராட்டி எழுதவும் பேசவும் தொடங்கினார்.

இதனை பரப்பிக்கொண்டு என்னமோ காமராசரின் வளர்ச்சிக்கே ஈ.வே.ரா தான் காரணம் என்பது போல பரப்புரை செய்கின்றனர் திராவிடர்கள்.

கதை இதோடு முடியவில்லை.
ஈ.வே.ரா எவ்வளவு மோசமான பிழைப்புவாதி என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்.

ஈ.வே.ரா தன்னை விட 46 வயது குறைந்த தன் வளர்ப்பு மகளைத் திருமணம் செய்தார்.
அதுவும் திராவிடத் தொண்டர்களைப் போல (அன்று சட்டப்படி செல்லாத) சுயமரியாதைத் திருமணம் செய்யவில்லை.
தன் சொத்துக்களைக் காப்பாற்ற முறைப்படி திருமணம் செய்தார்.
இதனால் கோபமடைந்த அண்ணாதுரை தனியாக கட்சி தொடங்கினார்.
அண்ணாதுரையும் ஈவேராவும் ஒருவரை ஒருவர் படுமோசமாக விமர்சித்து எழுதினர்.
அண்ணாதுரை தன்னை கொலை செய்ய முயல்வதாகவும் ஈ.வி.கே சம்பத் அதற்கு உதவுவதாகவும் ஈ.வே.ரா எழுதினார்.
அண்ணாவும் சம்பத்தும், பெரியார் மற்றும் மணியம்மை மீது அவதூறு வழக்கு தொடர்ந்து இருவரையும் நீதிமன்றம் வந்து மன்னிப்பு கேட்க வைத்தனர்.

1960களில் தி.மு.க பெரிய அளவில் செல்வாக்கு பெறத் தொடங்கியது.

அண்ணாதுரையைப் பழி வாங்கவேண்டும் என்பதற்காகவே காமராசரை தீவிரமாக ஆதரித்தார் ஈ.வே.ரா.

ஆனாலும் காமராசர் தோற்றார். 1967ல் அண்ணாதுரை பதவிக்கு வந்தார்.

உடனே பழைய சண்டைகள் அத்தனையையும் மறந்துவிட்டு தி.மு.க ஆதரவாளராக மாறி மறுபடியும் அவர்களோடு போய் ஒட்டிக்கொண்டார் ஈ.வே.ரா.

18.04.2016 அன்றைய பதிவு 

Sunday, 2 June 2024

அறிவுத் திருட்டு அல்லது பெண் ஏன் அடிமையானாள்

அறிவுத் திருட்டு அல்லது பெண் ஏன் அடிமையானாள் 

பதிவின் சுருக்கம்:-
 ஈவேரா எழுதிய பெண்ணுரிமைப் புத்தகம் நோபல் பரிசு பெற்ற புத்தகத்தின் அப்பட்டமான காப்பி.
 
 பொதுவுடைமை கருத்தியல் உலகம் முழுவதும் பரவத் தொடங்குகிறது. அதில் முக்கியமாகப் பெண்களின் பங்கு இருக்கிறது.
 அன்று காலனியவாத நாடுகள் இதை எதிர்கொள்ள இந்த வர்க்கப் போராட்டத்தை பாலினப் போராட்டமாகக் குழப்ப பெண் விடுதலை என்று ஆரம்பித்தார்கள்.
George Orwell, Bertrand Russell, Denis Healey, Stephen Spender, Guy Burgess போன்ற எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், தத்துவ மேதைகள் என சமூகத்தில் பிரபலமானவர்களை விலைக்கு வாங்கி பெண்களைத் தூண்டிவிட்டு ஆண்களுக்கு எதிராக தனித்து தற்குறித்தனமாக இயங்கவைக்கும் கருத்துகளைப் பரப்பினர்.
 இதை எவ்வாறு செய்தோம் என்று பிரிட்டன் உளவுத்துறை (MI6) காலம்கடந்து விட்டதாக எண்ணி தற்போது வெளியிட்டுள்ளது.
 இதில் Bertrand Russell என்பவர் புரட்சிகர சிந்தனையாளராக தம்மைக் காட்டிக்கொண்டு எழுதிய புத்தகம் Marriage and Morals. இது எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தியதால் ஏகாதிபத்திய அரசுகள் இதற்கு நோபல் கிடைக்க வழிசெய்தன.
 இதை அப்படியே நகலெடுத்து 'பெண் ஏன் அடிமையானாள்' என்று ஈவேரா எழுதியுள்ளார்.
 இரண்டு நூல்களிலும் இருக்கும் தலைப்புக்கள் கூட ஒத்துப் போகின்றன.
1)கற்பு - Sexual ethic 
2)காதல் - Romantic Love 
3)விபச்சாரம் - Prostituition 
4) கல்யாண விடுதலை - Divorce 
5) ஆண்மை அழிய வேண்டும் - Fatherhood dominion and Fatherhood Unknown.
 மேலும் Eugenics, Psychology தொடர்பான அறிவியல் தலைப்புக்களை மொழிபெயர்க்க இயலாமல் அவற்றை தவிர்த்துவிட்டார்.
 அரிஸ்ட்டாட்டில், பிளாட்டோ  என வரும் இடங்களில் வள்ளுவரையும், குறளையும் திணித்து இருக்கிறார்.
 இன்னமும் வேடிக்கை என்னவென்றால் வீரமணி இந்த நூலுக்கு எழுதியுள்ள முன்னுரையில் ஈவேரா சிந்தனைகள் ரஸ்ஸல் சிந்தனையுடன் ஒத்துப்போவதாக எழுதியிருப்பது தான்.

Кришна Кумар (முனைவர். கிருஷ்ணா) அவர்களின் முழுமையான பதிவு:-

'பெண் ஏன் அடிமையானாள்' எனும் முழு 'யுனெஸ்கோ' பித்தலாட்டம். 


காலனிய கைக்கூலிகளின் எதிர்ப்புரட்சி -வழமையான வரலாறு. கடந்த நாற்பது, ஐம்பது ஆண்டுகளாக தமிழர்களுக்கு பெண் உரிமை, பெண் விடுதலை, பெண்ணியம் குறித்தான விழிப்புணர்வை திரு ஈ வெ ராமசாமி அவர்கள் தான் ஏற்படுத்தியதாக, தொடர்ந்து ஊடகங்கள்,  அரசியல்வாதிகள், அரசு செய்திக் குறிப்புகள், பள்ளிக் குழந்தைகளின் பாட புத்தகங்கள் மற்றும் அரசு பாட நூல் நிறுவனங்கள் வழியாக மக்கள் மனதில் தொடரந்து திணிப்பதை உணரலாம். பல்லாயிரம் கோடி நிதியுடன் இயங்கும் திராவிட அரசியல் நிறுவனங்களும், திராவிட அரசியல் கட்சிகளும் ஆண்டு தோறும் 'பெண்ணிய போராளி விருது, பெண் சாதனையாளர் விருது' என்றெல்லாம் திரு ஈ வெ ராமசாமி பெயரிலும், சர்ச்சைக்குரிய அவரது கடைசி மனைவி மணியம்மை பெயரிலும் வழங்குவதையும் அறியலாம்.
குறிப்பாக, திராவிட அரசியல் கட்சிகளின்,  நிறுவனங்களின், அக்கட்சி தலைவர்களின் குடும்பங்களின் ஊது குழல்களாக இருக்கும் பல பெண்களும் ஆண்டு தோறும் இவ்விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு கவுரவிக்கப் படுகின்றனர்.
மேலும் அவர்கள் அதற்கு முன்னரும், அதற்கு பின்னர் மிக வீரியமாகவும் மேற்சொன்ன அரசியலுக்கும், அவர்கள் குடும்பங்களுக்கும் விசுவாசமாக இருப்பதோடு, பெண்மை, பெண் விடுதலை, பெண்ணியம் போன்றவற்றை உலகுக்கு கண்டுபிடித்து உணர்த்தியதே திரு ஈ வெ ராமசாமி அவர்கள்தான் என்பார்கள்.
மிக குறிப்பாக, இப்படியான விருதுகளை பெற்றவர்கள் திராவிடத்தாரின் ஆங்கிலத்தில் வரும் lapdog எனும் பதம் போல, செல்ல வளர்ப்பு நாய்களாக மாறி திராவிட அரசியலுக்கு எதிரான தமிழர்களை பிராண்டி குதறுவதும் உண்டு. தமிழகத்தில் பெண்ணிய அரிதாரம் பூசி, அவதாரம் எடுத்து பவனி வரும் இப்படிப்பட்ட பெண்களை கணக்கில் எடுத்து பார்த்தால் திரு ஈவெ ராமசாமி அவர்களின் 'பெண் ஏன் அடிமையானாள்' என்கிற நூல்தான் தங்களுக்கு அறிவூட்டி, செறிவூட்டி தங்களை பெண்கள் என்றே உணர வைத்ததாக பக்கம் பக்கமாக பேசியும் எழுதியும் வருவார்கள். அப்படிப்பட்ட திரு ஈவெ ராமசாமி அவர்களின் 'பெண் ஏன் அடிமையானாள்' நூல் குறித்து இளந்தலைமுறை தமிழர்கள் அறிந்து கொள்வது மிக அவசியம்.
நிற்க. முதல் உலகப்போருக்கு பிந்தைய காலத்தில் ஆப்பிரிக்காவிலும், ஆசியாவின் பல பகுதிகளிலும் ஐரோப்பியர்களின் காலனிய ஆதிக்கத்திற்கு எதிராக பூர்வ குடிகளின் கிளர்ச்சி வலுப்பெற்ற அதே சமகாலத்தில், (மறுபுறம்) புரட்சிகர இடதுசாரி தத்துவம் உலகெங்கும் வலுப்பெற துவங்கியது. பல நிலப்பரப்புக்களில் காலனிய ஆதிக்கத்திற்கு எதிரான உள்ளூர் இளைஞர்களின் சிந்தனையை தூண்டியதே இடதுசாரி தத்துவமாகத்தான் இருந்தது. அதே காலத்தில் ரஷ்யாவிலும், மற்றும் உலகெங்கும் புரட்சிகர செங்கொடி ஓங்கி உயரே பறக்க துவங்கியது. சோவியத் பள்ளியின் அரசியல் தாக்கமும் உலகை துளைத்து, காலனிய எதிர்ப்பு சிந்தனையை செறிவூட்டியது. அந்த 'புதிய அரசியல் சமநிலையின்மையை' சரிகட்ட காலனியவாதம் தனது ஆட்களை, தனது காலனியம் பரவியிருந்த பல்வேறு நிலப்பரப்புக்களில் இறக்கி, முடுக்கிவிட்டது. காலனிய வல்லாதிக்க நிறவெறி ஆங்கிலேயே அரசின் ரகசிய உளவு அமைப்பான MI6ம், அதன் வெளியுறவுத்துறை propaganda நிறுவனமான Information Research Department (IRD)ம் பல பிரபலங்களை ரகசியமாக பணியில் அமர்த்தி செங்கொடிக்கும், சோவியத்தை மையமாக வைத்து தூசி கிளப்பி பூமியின் நாற்புறத்தையும் சூறாவளியாய் தாக்கிய அதன் புரட்சிகர சித்தாந்தத்திற்கும் எதிரான வேலைப்பாடுகளை துவங்கியது. George Orwell, Bertrand Russell, Denis Healey, Stephen Spender, Guy Burgess போன்ற எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், தத்துவ மேதைகள் என சமூகத்தில் பிரபலமாக பவனிவந்த பலரும் ஆங்கிலேய காலனிய நிறவெறி அரசின் Payroll'க்குள் வந்தார்கள். இந்த ரகசியங்களை காலாவதியான கோப்புக்கள் என்கிற முறையில் பிரித்தானிய உளவு நிறுவனமே சமீபத்தில் வெளியிட்டு இருந்தது அவர்கள் வெறும் பணத்திற்கு வீழ்ந்தார்களா அல்லது தங்களுக்குள் ஒளிந்திருந்த காலனிய ஆதிக்கவாத நிறவெறியை வாழவைக்க இணங்கினார்களா என்பதை விவாதிப்பதல்ல இக்கட்டுரையின் நோக்கம். இந்த லிஸ்டில் George Orwell'ம், Bertrand Russell'ம் மிக முக்கியமானவர்கள். இருவரும் தங்களை இடதுசாரிகளாக அறிமுகப்படுத்திக் கொண்டு, முழுநேரமும் இடதுசாரிகளை வீழ்த்தும் எதிர்ப்புரட்சி வேலையை செய்தவர்கள். இதில் George Orwellன் 'Animal Farm' பற்றி பலரும் அறிவீர்கள். சோசலிஸ்ட் வேடமிட்டு, உளவுபார்த்து சோவியத்துகளுடன் நெருக்கமாக இருந்த முக்கியமான தலைவர்கள் 38 பேரின் பெயர்களை MI6க்கு அவர் வழங்கியது 'Orwell's List' என்று இப்போதும் இழிவாக நையாண்டி செய்யப்படுகிறது அடுத்து, இந்த கட்டுரைக்கு மிக முக்கியமான நபரான 'Bertrand Russell'. இவரும் காலனிய நிறவெறி அரசின் மிக முக்கியமான உளவாளி. ஆசிய தொடர்பான அஜெண்டாவில் வேலை செய்தவர். இந்திய யூனியனின் விடுதலைக்கு முன்னர் இங்கே இருந்த பல தலைவர்களுடன் மிக நெருக்கமான நட்பு பாராட்டியவர். இந்திய யூனியன் உருவாக்கத்திற்கு பிறகும் ஆங்கிலேயே காலனிய அரசின் தாக்கம் இந்திய யூனியனில் இருக்குமாறு விடுதலை ஏற்பாட்டை செய்தவர். அவர் எழுதிய நூல் 'Marriage and Morals'. தன்னை ஒரு சோஷலிஸ்ட்டாக அடையாளப்படுத்திக்கொண்டு இடதுசாரி தத்துவத்தை வீழ்த்த Russell எடுத்த வழிதான் பெண் விடுதலை. அடிப்படையில், ஐரோப்பா உள்ளிட்ட மேற்கத்திய உலகில் பெண்களுக்கு ஓட்டுரிமை கூட இல்லாத காலத்திலேயே, சமூகத்தின் சரி பாதியான பெண்களை மானுட சமூகத்தின் மேம்பாட்டிற்கு பயன்படுத்தாது அவர்களை வீட்டிற்குள் முடக்கி வைப்பது, மானுட சமூகத்தின் பாய்ச்சலை சரிபாதியாக குறைக்கிறது என்று சொல்லி லெனின் அவர்களை உற்பத்தியிலும், சமூக மற்றும் சோவியத் உருவாக்கத்திலும் பயன்படுத்த துவங்கிய காலம் அது. இப்போதும் ரஷ்ய தெருக்களில் லெனின் தவிர்த்து எங்கெல்லாம் தலைவர்கள் சிலைகள் இருக்கிறதோ அங்கெல்லாம் சமமாக பெண்களின் சிலைகளும் இருக்கும். இங்கே சில படங்கள் கமெண்டில். போருக்கு செல்லும் இளைஞன் கைகளில் துப்பாக்கி இருப்பதைப்போல, பெண்களின் தோள்களில் ராக்கெட் லாஞ்சர்கள் இருக்கும்; போருக்கு செல்ல அழைப்பு வந்திருக்கிறது என்பதை காதலிக்கு சொல்ல செல்லும் காதலனிடம் தனக்கும் வேறு ஒரு எல்லைக்கு செல்ல அழைப்பு வந்திருப்பதாக காட்டும் காதலி சிலைகள் ரஷ்ய பூங்காக்கள் தோறும் ஏராளம். இதுதான் கம்யூனிஸ்டுகளின் உண்மையான பெண் விடுதலை. ஆனால் அப்படிப்பட்ட இடதுசாரி தத்துவ எழுச்சியை தடுக்க, பெண்ணிய குதர்க்கவாதம் பேசி, அதை பிளவுபடுத்த முதலாளித்துவ காலனிய வல்லாதிக்கம் Bertrand Russellகளை பயன்படுத்தியது. அதற்கு கூலியாக ஐரோப்பிய காலனிய வல்லாதிக்கம் அவரின் இந்த நூலுக்கு நோபல் பரிசு கொடுத்து கவுரவித்தது. ஆணும் பெண்ணும் ஒன்றுபட்டு சமூக, வர்க்க, மற்றும் மானுட விடுதலை அடைவதை தடுக்க பெண் விடுதலை எனும் பெயரில் அவர்களை பிரித்து தடுத்து எதிர்ப்புரட்சி செய்தது காலனியவாதம். பெண்ணியம் எனும் பெயரில் பெண்களை நுகர்வோர் கலாச்சாரத்தின் பண்டமாக மாற்றி, அவர்களை வெறும் நுகர்வோர்களாக திரித்து, விளம்பர போதை ஏற்றி, சுதந்திரம் என்கிற பெயரில் முதலாளித்துவத்திற்கு அடிமையாக்கியது இப்படியான நூல்கள். காலனிய உளவாளி Bertrand Russell எழுதிய அந்த 'Marriage and Morals' என்கிற நூலின் அச்சு அசல் பிசகாத மொழிமாற்ற நூல்தான் 'பெண் ஏன் அடிமையானாள்' என்கிற ஈவெ ராமசாமியின் நூல். பொருளடக்கம், உள்ளடக்கம் என யாவற்றையும் 'பெண் ஏன் அடிமையானாள்' என்கிற அந்த நூலில் 100% மொழிமாற்றம் செய்திருக்கிறார்கள். இப்படியாக, Bertrand Russell என்கிற காலனிய உளவாளி எழுதிய நூலை ஈவெரா எழுதியதாக கிட்டத்தட்ட 50 ஆண்டுகாலம் தமிழ் நாட்டில் விளம்பரம் செய்திருப்பது வழக்கமான திராவிட பித்தலாட்டம்தான்.


தங்களை பெண் விடுதலை சேம்பியன்கள் என சுயதம்பட்டம் அடித்துக்கொள்ளும் அறிவீலிகளுக்கு அது ஒரு மொழிமாற்ற என்கிற அடிப்படை அறிவு கூட கிடையாது. அந்த அடிப்படை அறிவு கூட இல்லாத இப்படியான சமூக கழிசடைகளை தமிழக இளையோர் பின்தொடர்ந்து சமூக விடுதலைக்கு துரோகம் இழைக்க கூடாது. அடுத்தவனின் சிந்தனையை திருடி அதில் தன் பெயரை எழுதும் கேவலத்தையும் தாண்டி.. அதற்கெல்லாம் முத்தாய்ப்பாக 'பெண் ஏன் அடிமையானாள்' என்கிற நூலில் ஒரு மிக இழிவான வேலையை செய்திருக்கிறார்கள். அந்த நூலின் முன்னுரையில் திரு வீரமணி அவர்கள் உலகின் முக்கியமான ஆளுமைகள் ஒரேபோல சிந்திப்பார்கள் என்பார்கள். அதைப்போல ஈவெராவும் பெட்ராண்ட் ரசலும் ஒரேபோல சிந்தித்து இருக்கிறார்கள் என்று எழுதி் இருக்கிறார். (படம் கமெண்ட்டில்) ஒரு நூலின் அத்துணை வரியையும் ஒரேபோல சிந்திப்பது உலக அதிசயமல்லவா? 'யுனெஸ்கோ விருது' பெற்றது போல் இந்த அதிசயத்திற்குமல்லவா 'கின்னஸ் விருது' பெற்றிருக்க வேண்டும்? இரண்டு நூல்களிலும் இருக்கும் தலைப்புக்களை பாருங்கள்: 1)கற்பு Vs Sexual ethic 2)காதல் Vs Romantic Love 3)விபச்சாரம் Vs Prostituition 4) கல்யாண விடுதலை Vs Divorce 5) ஆண்மை அழிய வேண்டும் Vs Fatherhood dominion and Fatherhood Unknown 6)கர்ப்பத்தடை Vs The Liberation of Women. மொத்தமாக 'பெண் ஏன் அடிமையானாள்'இல் 10 தலைப்புக்களும் அதன் கருத்துக்களும் மொழிமாற்றம் செய்யப்பட்டவை. Marriage and Moralsஇல் Eugenics, Psychology தொடர்பான அறிவியல் தலைப்புக்கள் வருகின்றன, அறிவியலை மொழிமாற்றம் செய்ய அறிவற்ற திராவிட அறிவிலிகள் அத்தலைப்புக்களை தவிர்த்து விட்டார்கள். இந்த நூலில் அரிஸ்ட்டாட்டில், பிளாட்டோ, கிறிஸ்டியன் பிலாசபி என வரும் இடங்களில் வள்ளுவரையும், குறளையும் திணித்து இருக்கிறார்கள். உலகில் இவ்வளவு கேவலமான, இழிவான வேலையை இவர்களை விட வேறு எவராலும் முடியாது. ஒரு நோபல் பரிசு பெற்ற நூலையே திருடி, அதில் தங்கள் பெயரை எழுதிக் கொள்கிறார்கள் என்றால் இவர்கள் எவ்வளவு இழிவானவர்கள் என்பது விளங்கும். அது மட்டுமல்ல, இவர்களின் செயலை பகுப்பாய்வு செய்யும்போது 'இழிவு' என்கிற வார்த்தையே எவ்வளவு வீரியமற்றதாக இருக்கிறது என்பதை உணரலாம். தமிழர் இனம் ஈன்றெடுத்த சமரசமற்ற போராளி 'தோழர் ஜீவா'. அவர் தனது நூலான 'ஈரோட்டுப்பாதை சரியா' என ஈவெ ராமசாமியின் சித்தாந்தங்கள், குதர்க்கவாதங்கள் குறித்து எழுதி இருப்பார். அந்த நூலின் அட்டைக்கு ஒரு மிகச் சிறந்த வர்ணத்தை தேர்ந்தெடுத்து இருப்பார். அது காலனியவாத ஆங்கிலேய அரசின் கொடியான 'யூனியன் ஜாக்' ஆகும். தோழர் ஜீவா எவ்வளவு நேர்த்தியாக திரு ஈவெ ராமசாமியை 'காலனியவாத கிழக்கிந்திய கம்பெனியின் கைக்கூலி' என்று சொல்லிவிட்டு சென்றிருக்கிறார். ஆனால் அவர் உருவாக்கிவிட்டு சென்ற கம்யூனிச இயக்கங்களில் உடல் வளர்க்கும் சாதிய-இனவெறி போலிகள் இன்று அதே 'பெண் ஏன் அடிமையானாளுக்கு' செங்கொடி பாதுகாப்பு தருகிறார்கள். இந்த குறிப்பிட்ட நூல் திருட்டு குறித்து பல பக்கங்கள் ஆதாரங்களுடன் விளக்கலாம். ஆனால் மேலும் ஒரே ஒரு சுவாரசியமான தகவலை மட்டும் இங்கே பகிர வேண்டும். காலனிய வல்லாதிக்கத்தின் கைக்கூலிகளான ஆர்வெல் குறித்தும், ரபெட்ராண்ட் ரஸ்ஸல் குறித்தும் பத்தாண்டுகளுக்கு முன்பே பிராமணிய மருதையனின் 'வினவு' கட்டுரை வரைந்திருக்கிறது. ஆனால் அதை திருடி தனது பெயரில் வெளியிட்டுக்கொண்ட ஈவெரா குறித்து தெரிந்தும் மருதையன் வாய் திறக்கவில்லை. அதைத்தான் தென்னிந்திய பிராமணர்கள்தான் திராவிடர்கள் என்கிறது மனுஸ்மிரிதி. இனப்பற்று!

Thursday, 30 May 2024

சுயமரியாதைத் திருமணம் எனும் கேலிக்கூத்து

சுயமரியாதைத் திருமணம் எனும் கேலிக்கூத்து

 25.09.1928 ரெங்கசாமி ரெட்டியார் என்கிற தெலுங்கர் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்டார்.
 பார்ப்பனர் அல்லாமல் ஈவேரா முன்னிலையில் எந்த மத சடங்குகளும் இல்லாமல் நடந்த இதுவே முதல் முற்போக்குத் திருமணம் என்று ஈவேரா பக்தர்கள் இன்றுவரை பிரச்சாரம் செய்கின்றனர்.

 ஆனால் இதற்கு 39 ஆண்டுகள் முன்பே காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவரான தஞ்சாவூர்
திரு.ஜி.சுப்பிரமணியம் 1889 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டு மேடையில் இளம் வயதில் கணவனை இழந்த தன் மகளுக்கு இரண்டாவது திருமணம் செய்துவைத்து மறுமணம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

 அதை ஒப்பிடும்போது இந்த ரெட்டியார் ரெண்டு தாலி கட்டி மூவராக முதலிரவு அறைக்குள் சென்ற சுயமரியாதை திருமணம் ஒரு கேலி கூத்து.

 சட்டப்படி செல்லாது என்றாலும் இப்படியே திருமணம் செய்யுமாறு ஈவேரா வலியுறுத்த அதை பின்பற்றி 1930 களில் பல ஈவேரா தொண்டர்கள் இதே போல சட்டப்படி செல்லாத திருமணம் செய்து கொண்டனர்.
 திமுக 1967 இல் ஆட்சிக்கு வரும் வரை அதாவது ஏறத்தாழ 40 ஆண்டு காலம் இவர்கள் சட்டப்படி திருமணம் ஆகாதவர்கள் என்கிற வகையில் இவர்களுக்கு குடும்ப அட்டை கூட கிடைக்கவில்லை. இவர்களின் குழந்தைகள் சட்டப்படி தாய் தகப்பன் இல்லாத அனாதைகளாக இருந்தனர். 

 இப்படி பலர்  உரிய சான்றிதழ்கள் இல்லாமல் அல்லாடிய நிலையில் 1948 இல் ஈவேரா மணியம்மை திருமணம் சட்டப்படி செல்லும் திருமணமாக நடந்தது.
 ஈ.வே.ரா தம் வளர்ப்பு மகள் மணியம்மையை சுயமரியாதை திருமணம் செய்யவில்லை ஏனென்றால் அப்போதுதான் சொத்து மணியம்மை பெயருக்கு மாறும்.

 இவர்கள் செய்யாத ஏமாற்றே இல்லை!

சில தகவல்களுக்கு நன்றி: விசுவநாதன் கரிகாலன்

Saturday, 12 November 2022

பெண்கள் பெரியார் பட்டம் வழங்கவில்லை

பெண்கள் பெரியார் பட்டம் வழங்கவில்லை

13.11.1938 அன்று நடந்த பெண்கள் மாநாட்டில் ஈ.வே.ரா வுக்கு பெரியார் என்று பட்டம் வழங்கப்பட்டதாக கூறுவது பொய்!
 இந்த மாநாடு பற்றி ஈ.வே.ரா வின் 'குடி அரசு' ஏடு செய்தியும் வெளியிட்டதுள்ளது. அதில் பட்டம் வழங்கப்பட்டதாக எதுவும் இல்லை.
 மீனாம்பாள் அவர்கள் இப்பட்டத்தை வழங்கியதாக கூறுவதும் பொய்!
 உண்மையான பெரியார் தொண்டர் யாராவது இருந்தால் பெண்கள் அல்லது பெண் தலைவர் எவர் எந்த மேடையில் பெரியார் பட்டம் வழங்கினார் என்று சான்று தரவும்!

Saturday, 1 April 2017

ஈ.வே.ராமசாமியும் சாதி ஒழிப்பும்

ஈ.வே.ராமசாமியும் சாதி ஒழிப்பும்
--------------------

வேலைக்கு சேர்க்கும் முன் சாதியைக் கேட்பார் ஈ.வே.ரா?

”1949-இல் அண்ணா ஆலோசனையின் பேரில் விடுதலையில் சேர மீரான்சாகிப் தெருவில் இருந்த விடுதலை அலுவலகத்தில் பெரியாரைச் சந்தித்தேன்.
அவர் கேட்ட முதல் கேள்வியே,
”நீ என்ன சாதி...?” என்று கேட்டார்.
( 'அண்ணாவின் வார்த்தை ஜாலம்'
-ஜே வி கண்ணன்
த சன்டே இந்தியன் 21.09.2010 )
--------------------

பட்டியல் சாதி மக்களையும் எதிரிகளாக எண்ணினார் ஈ.வே.ரா

"1.பார்ப்பனர்கள்
2.நம்மில் கீழ்த்தர மக்கள்
3.முஸ்லீம்கள்
4.கிறித்துவர்கள்
ஆக இன்று நமக்கு சமுதாய எதிரிகளாக இந்த நான்கு கூட்டங்கள் இருக்கின்றன"
_ ஈ.வே.ரா (தமது 85 வது பிறந்தநாள் விழா மலரில்)

இங்கே 'நம்மில்' 'நமக்கு' என்பது பிராமணல்லாத (ஆதிக்க) சாதிகள், 'கீழ்த்தர மக்கள்' என்பது பட்டியல் சாதிகள்.
-----------------

தனது இனமான தெலுங்கு நாயக்கர் சாதிக்கென வெளிப்படையாக குரல்கொடுத்துள்ளார் ஈ.வே.ரா

"ஜனத்தொகையும், பிரபலமும், செல்வாக்கும், அரசியலில் ஞானமும் ஊக்கமும் உடையவர்கள் ஆந்திர நாயக்கமார்கள்"

"கோயமுத்தூர் ஜில்லாவில் அசம்பளிக்கு உள்ள 8 ஸ்தானங்களிலும் ஒன்றுக்குக்கூட நாயக்கர்களில் யாரையும் நியமிக்காமல் காங்கிரஸ்காரர்கள் பட்டை நாமம் சாத்திவிட்டார்கள்"

" நாயக்கர்மார்கள் தலைஎழுத்து இவ்வளவுதானா என்று கேட்கின்றோம்.
அவனாசி கோயமுத்தூர் தாலூக்காக்களின் ஸ்தானத்தை ஏன் நாயக்கர்மார்களுக்கு விட்டுவிடக்கூடாது என்று கேட்கின்றோம்.
தோழர் வி.சி. பழனிச்சாமிக் கவுண்டர் அவர்களுக்கு ஜில்லாபோர்டு பிரசிடெண்டு ஒன்றுபோதாதா?"
_ ஈ.வே.ரா (குடியரசு 15.11.1936)
------------

புலையர் பெண்கள் ரவிக்கை போடுவதை தாங்கமுடியாத ஈ.வே.ரா

"புலைச்சியெல்லாம் ஐம்பர் போட ஆரம்பிச்சிட்டா அதனாலேதான் துணிவிலை உயர்ந்துவிட்டது"
_ ஈ.வே.ரா 1962 ஜனவரியில் மேடைப்பேச்சு
(இது 1962 முரசொலி பொங்கல் மலரில் கோட்டோவியமாக அதாவது கார்ட்டூனாக வந்தது)
----------------

தனது சாதித்திமிரால் பறையரை மிக மோசமாக வெறுத்தார் ஈ.வே.ரா

"பள்ளு பறையனுங்க படிக்க ஆரம்பிச்சிட்டானுக அதனாலதான் வேலை இல்லா திண்டாட்டம்"
_ ஈ.வே.ரா 1962 சனவரி  மேடைப்பேச்சு
(மேலது சான்று)

”தீண்டாமை விலக்கு என்பதும்
கோவில் பிரவேசம் என்பதும்
சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதுதானா?
பறையன் கீழ்சாதி என்பது மாற்றப்படவில்லையானால்,
அதற்காக சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதா?
இந்த அனுமதியானது இதுவரை நடுசாதியாக இருந்த சூத்திரர் என்பவர்கள் இப்போது கீழ்சாதியாகவே ஆக்கப்பட்டுவிட்டார்கள்.
ஆனதால் இதை நாம் அனுமதிக்கக்கூடாது"
(நூல்: வைக்கம்போராட்ட வரலாறு
– வீரமணி)
------------------------

ஈ.வே.ரா தீண்டாமைக்கு எதிராக போராடியதில்லை

"தீண்டாமை விலக்கு விசயத்தில் நான் ஏதாவது ஒரு சிறிதாகிலும் வேலை செய்திருப்பதாக ஏற்படுமானால் அது எங்கள் நலத்திற்காகச் செய்ததாகுமேயொழிய உங்கள் நலத்திற்கென்று செய்ததாக மாட்டாது."
_ ஈ.வே.ரா (குடியரசு 16.6.1926.)

இதில் 'எங்கள்' என்பது பிராமணரல்லா ஆதிக்க சாதிகள்
'உங்கள்' என்பது தீண்டாமைக்கு ஆளாவோர்
-----------------------

ஆதி திராவிடர் அதாவது தமிழக பட்டியல் சாதியாருக்காக அவர் போராடியதில்லை

"ஆதி திராவிடர் நன்மை கருதிப் பேசப்படும் பேச்சுகளும் செய்யப்படும் முயற்சிகளும்,
'ஆதி திராவிடரல்லாத மக்களில்' 'பார்ப்பனரல்லாத எல்லோருடைய' நன்மைக்கும் என்பதாக உணருங்கள்"
(குடியரசு 11.10.1931)
-------------------
வைக்கம் போராட்டத்தில் ஈ.வே.ரா பங்கு கடுகளவு

ஈழவர், புலையர் இணைந்து டி.கே.மாதவன் தலைமையில் கேரளாவில் வைக்கம் கோயிலில் நுழைவதற்கான தடையைநீக்க முன்னெடுத்த போராட்டம் 30.03.1924 அன்று ஆரம்பித்தது.

17.11.1925 வரை ஒன்றரை ஆண்டு நடந்த வைக்கம் போராட்டத்தில்,
நடுவில் மூன்றுமாதம் கூட முழுமையாகக் கலந்துகொள்ளாத ஈ.வே ராவை 'வைக்கம் வீரர்' என்பது வேடிக்கையானது.

1925 ஏப்ரல்14 அன்று வைக்கம் சென்ற ஈ.வே.ரா இரண்டு வாரங்கள் அங்கே மேடையில் பேசினார்.
ஏப்ரல் 28ஆம் தேதி பேசிய பேச்சுக்காக ஒரு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டார்.
ஒருமாதம் கழித்து விடுதலையாகி மறுநாள் ஜூன் 28ம் தேதியிலிருந்து மீண்டும் பத்து நாட்கள் பேசினார்.
கைதாகும் சூழ்நிலை வந்ததும் ஜூலை 5ல் வைக்கம் போராட்டக்களத்தை விட்டு காலி செய்தார்.
ஆயினும் இந்த வழக்கில், அவர் ஜூலை 28 கைது செய்யப்பட்டு, பின் செப்டம்பர்1ல் விடுதலை ஆனார்.
அதன்பிறகும் ஒரு ஆண்டு நடந்த அந்த போராட்டம் பக்கம் தலைவைத்துப் படுக்கவில்லை.

ஆக ஈ.வே.ரா வின் பங்கு வைக்கம் போராட்டத்தில்,
24 நாட்கள் பிரச்சாரமும்
இருமாத சிறையும் மட்டுமே.
(1927 வரை அவர் தன்னை 'ராமசாமி நாயக்கர்' என்றுதான் கூறிக்கொள்வார்)
-----------
கீழ்வெண்மணி படுகொலையாளிக்கு ஆதரவாக இருந்தார் ஈ.வே.ரா

கோபாலகிருஷ்ண நாயுடு என்ற பண்ணையார் அப்பகுதி பள்ளர், பறையர் மீது ஆதிக்கம் செலுத்திவந்தார்.
அதை அம்மக்கள் எதிர்த்ததன் விளைவாக பண்ணையாரின் அடியாட்கள்  44 பேரை (பெரும்பாலும் பள்ளர்) எரித்துக்கொன்றனர்.
கீழ்வெண்மணி படுகொலை ஒரு சாதியப் படுகொலை ஆகும்.

கம்யூனிஸ்ட் கட்சி கூலி உயர்வு கேட்க  தூண்டியதால் படுகொலை நடந்ததாக கூலித்தொழிலாளருக்கு ஆதரவாக இருந்த கம்யூனிஸ்ட்டுகள் மீது பழியைப் போட்டார் ஈ.வே.ரா.

"நாகை தாலுக்காவிலே கலகம் செய்யத் தூண்டியது கம்யூனிஸ்ட் கட்சி.
அதன் காரணமாக 42 பேர் உயிரிழந்தனர்"
_ஈ.வே.ரா (28.12.1968 அறிக்கை)

எந்த இடத்திலும் தன் இனமான தெலுங்கு வந்தேறி கோபால கிருஷ்ண நாயுடுவைக் குறிப்பிடவோ கண்டித்ததோ கிடையாது.
---------------------

இடவொதுக்கீடு ஈ.வே.ரா வின் கொள்கை கிடையாது.

இடவொதுக்கீடு சாதிவாரியாக வாய்ப்பு வழங்குவது.
ஈ.வே.ரா முதலிலிருந்தே போராடியது 'வகுப்புவாரி பிரதிநிதித்துவம்' அதாவது பிராமணர் ஒரு வகுப்பு பிராமணரல்லாதார் ஒரு வகுப்பு.
பிராமணர் 3% ஆக எல்லாவற்றிலும் 3% வாய்ப்புதான் வழங்கப்படவேண்டும்.

இதை இடவொதுக்கீட்டுடன் குழப்பி ஏதோ இடவொதுக்கீடே ஈ.வே.ரா போராடியதால் கிடைத்ததாகக் கூறுகின்றனர்.

இடவொதுக்கீடு அம்பேத்கர் ஆங்கிலேயருக்கு ஆதரவாக இருந்து அதன் பலனாக 1943லேயே மக்களுக்குப் பெற்றுத்தந்துவிட்டார்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அவர்களது வேலைக்காக படிப்புக்காக எந்த போராட்டமும் செய்யாத ஈ.வே.ரா.
"குழாய் தனித் தனியாக போட்டுவிட்டீர்கள் தொட்டியில் தண்ணீரே இல்லையே" என்று நக்கல் செய்த ஈ.வே.ரா.

1950ல் பிராமணர்கள் வழக்கு தொடுத்து சாதிவாரி இட ஒதுக்கீடு நீக்கம் செய்யப்பட்டபோது தெருவுக்கு வந்து போராடினார்.
அதாவது பிராமண வெறுப்பினால்.
ஈ.வே.ரா 'வகுப்புரிமை நாள்' என்றுதான் அறிவித்து போராடினார்.
பலரும் போராடினர்.

அவர் செய்த ஒரே ஒரு போராட்டத்தால் இடவொதுக்கீடு கிடைக்கவில்லை என்பது உறுதி.
------------

பலரும் ஈ.வே.ரா சாதி ஒழிப்பு போராளி என்று கூறுகிறார்கள்.
உண்மையில் அவர் பார்ப்பனரை கீழே இறக்கி ஆதிக்க சாதிகள் (அதிலும் வந்தேறிகள்) முதலிடம் பெற போராடிய சாதிவெறியரே ஆவார்.

அவர் எதிர்த்தது பார்ப்பனரையே பிராமணரை இல்லை.

  “உங்களுக்கு உறுதியாக இறுதியாக ஒன்றைக் கூறுகிறேன்.
மறந்தும் உங்கள் வாயில் பிராமணன் என்று வரக் கூடாது.
பார்ப்பான் என்று கூறுங்கள்.
கண்டிப்பாக பிராமணன் என்று கூறக் கூடாது.
கண்ணீர்த் துளிகள் (தி.மு.க.) பிராமணன் என்பதைத் தவிர வேறு வார்த்தையை உபயோகிக்க மாட்டார்கள்”
(விடுதலை 30.06.1957)

பார்ப்பனர் என்பார் தமிழ் பேசும் பூசாரகர் சாதியார் ஆவர்.

ஆக அவரது ஒட்டுமொத்த போராட்டமும் தமிழர்களை எதிர்த்தே அமைந்திருந்தது.

Saturday, 4 March 2017

ஈ.வே.ரா பற்றிய எனது பதிவுகளின் தொகுப்பு தக்க சான்றுகளுடன்

.வே.ரா பற்றிய எனது பதிவுகள்
தக்க சான்றுகளுடன்

தனிவலை தொடங்க இருப்போர் பயன்படுத்திக்கொள்க

ஈ.வே.ரா தனித்தமிழ்நாடு கேட்டாரா?
vaettoli.blogspot.in/2016/02/blog-post_65.html

ஈ.வே.ரா எதிர்த்தது பார்ப்பனரையே.
பிராமணரை அல்ல.
vaettoli.blogspot.in/2016/11/blog-post_15.html

ஈ.வே.ரா.வின் அடித்தளம்
vaettoli.blogspot.in/2014/11/blog-post_6.html

ஈ.வே.ரா ஆதரித்த பிராமணர்கள்
vaettoli.blogspot.in/2016/11/blog-post_54.html

பறையர் புலையர் பற்றி ஈ.வே.ரா (முரசொலி படம்)
vaettoli.blogspot.in/2016/10/blog-post_67.html

ஈ.வே.ரா நேர்மையான இறைமறுப்பாளரா?
vaettoli.blogspot.in/2016/08/blog-post_19.html

இடவொதுக்கீடு ஈ.வே.ரா பெற்றுத்தந்ததா?
vaettoli.blogspot.in/2016/08/blog-post_51.html

நான் கன்னடன் - ஈ.வே.ரா
vaettoli.blogspot.in/2016/07/blog-post_71.html

ஈ.வே.ரா காமராசரை ஏன் ஆதரித்தார்?
vaettoli.blogspot.in/2016/04/blog-post_18.html

தமிழன் எவனுக்கும் தலைவனாகும் தகுதி இல்லை
- ஈ.வே.ரா
vaettoli.blogspot.in/2016/04/blog-post_15.html

பறையரையும் இசுலாமியரையும் கேவலமாகப் பேசிய ஈ.வே.ரா
vaettoli.blogspot.in/2016/02/blog-post_18.html

நாயக்க சாதி கிளர்ந்தெழட்டும் -ஈ.வே.ரா
vaettoli.blogspot.in/2015/09/blog-post_23.html

ஈ.வே.ரா மது ஆதரவு
vaettoli.blogspot.in/2015/07/blog-post_65.html

வந்தவழியே திரும்பிப்போ
vaettoli.blogspot.in/2014/07/blog-post_296.html

ஈ.வே.ரா மண்மீட்பில் உதவினாரா?
vaettoli.blogspot.in/2016/06/blog-post_77.html

சங்கம் வைத்து இந்தி வளர்த்த ஈ.வே.ரா
vaettoli.blogspot.in/2016/06/blog-post_47.html

இந்தியை எதிர்த்தாரா ஈ.வே.ரா?
vaettoli.blogspot.in/2016/06/blog-post_24.html

பார்ப்பனர் = சாணி, இசுலாமியர் = மலம் _ஈ.வே.ரா
vaettoli.blogspot.in/2017/02/blog-post_17.html

தமிழைப் பழித்த ஈ.வே.ரா
vaettoli.blogspot.in/2016/11/blog-post_24.html

ஈ.வே.ரா செய்த எழுத்து சீர்கேடு
vaettoli.blogspot.com/2017/04/blog-post_85.html

சென்னையை தமிழர் மீட்பதில் தடையாக இருந்த ஈ.வே.ரா
vaettoli.blogspot.in/2016/07/blog-post_22.html?

கீழ்சாதிப் பறையனோடு நடுசாதி சூத்திரனைச் சேர்க்கலாமா? -ஈ.வே.ரா ஆவேசம்
vaettoli.blogspot.in/2016/05/blog-post_31.html

கூலி உயர்வு கேட்டதால்தான் கீழ்வெண்மணி படுகொலை நடந்தது
- ஈ.வே.ரா அறிக்கை
vaettoli.blogspot.in/2017/03/blog-post_4.html

இசுலாமியர் எங்களுக்கு எதிரி, இசுலாமியர் மலத்துக்கு சமம், இசுலாமியப் பெண்கள் உழைக்காதவர்கள் _ ஈ.வே.ரா
vaettoli.blogspot.in/2017/03/blog-post_84.html

இந்தியை எதிர்க்கும் 'காலி'களைச் சுட்டுத் தள்ளுங்கள் _ ஈ.வே.ரா
vaettoli.blogspot.in/2017/03/blog-post_23.html

ஈ.வே.ராமசாமியும் சாதி ஒழிப்பும்
vaettoli.blogspot.in/2017/04/blog-post_1.html

வெறும் இராமசாமி ஈ.வே.ரா
- பெருஞ்சித்திரனார் கட்டுரை
vaettoli.blogspot.nl/2017/04/blog-post_62.html

பெண்ணுரிமை என்ற பெயரில் ஈ.வே.ரா உளறியவை
http://vaettoli.blogspot.in/2017/08/blog-post_11.html

ஈ.வே.ரா வளர்ப்பு மகளே மணியம்மை
http://vaettoli.blogspot.in/2017/10/blog-post_12.html

தமிழ்நாடு தமிழருக்கே என்று முழங்கிய மூன்றாமவர் ஈ.வே.ரா
http://vaettoli.blogspot.com/2018/06/blog-post_17.html

யாரெல்லாம் திராவிடர் - ஈ.வே.ரா விளக்கம்
http://vaettoli.blogspot.com/2018/07/blog-post_53.html

கீழே "பதிவு: வேட்டொலி" என்று எனது வலையின் பெயரைப் போட்டால் போதும்

Sunday, 13 November 2016

ஈ.வே.ரா ஆதரித்த பிராமணர்கள்

ஈ.வே.ரா ஆதரித்த பிராமணர்கள்

"நெல்லூர் மகாநாட்டில் பார்ப்பனர்களை சட்டச்சபைக் கட்சியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்கிற தீர்மானம் தென்னிந்திய நல உரிமைச்சங்க நிர்வாக சபையின் பேரால் பிரேரேபிக்கப்பட்டு,
என்னால் ஆமோதிக்கப்பட்டு அது விஷயாலோசனைக் கமிட்டியில் ஒரு ஓட்டில் தோல்வியடைந்து விட்டது."
- ஈ.வே.ரா 'எனது தோல்வி' என்ற தலைப்பில் 'குடியரசு' ஏட்டில் 13.10.1929 இல் எழுதியது.

1929இல் செங்கற்பட்டில் ஈ.வே.ரா நடத்திய முதல் சுய மரியாதை மாநாட்டிலும் தெலுங்கரான மணத்தட்டை சேதுரத்தின ஐயர் தலைமை தாங்கினார்.
அதாவது இதற்கு முன்னர் மதுரையில் (1926) மற்றும் கோவையில் (1927 ) நடத்திய முதல் இரண்டு மாநாடுகளை 'பிராமணரல்லாதார் மாநாடு' என்று நடத்திய ஈ.வே.ரா மூன்றாவது மாநாட்டை 'சுயமரியாதை மாநாடு' என்று பெயர்மாற்றி ஒரு பிராமணரையே தலைமையும் தாங்கவைத்தார்.

1930ல் இரண்டாவது சுயமரியாதை மாநாட்டிலும் மணத்தட்டை சேதுரத்தின ஐயர் முன்னிலை வகித்தார்.

ஈ.வே.ரா வின் ஆதரவுடன் 1946ல் தெலுங்கு பிராமணரான தங்கதூரி பிரகாசம் பந்துலு (இடைக்கால) சென்னை மாகாண அரசின் தலைமை அமைச்சரானார்.

1957ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காஞ்சிபுரம் சட்ட மன்றத் தொகுதியியல் சி.என்.அண்ணாத்துரையை எதிர்த்துக் காங்கிரசு தரப்பில் போட்டியிட்ட பிராமணரான மருத்துவர் பி.எசு. சீனிவாசனை ஆதரித்து ஈ.வெ.ரா. நேரடியாகவே வாக்குக் கேட்டார்.
இருந்தாலும் அண்ணாதுரை வென்றார்.

இதே 1957இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் தேர்தலில் தி.மு.க. ஆதரவுடன் போட்டியிட்ட பி.பாலசுப்பிரமணியத்தை தோற்கடிக்க காங்கிரஸின் காலில் விழுந்தார் ஈ.வே.ரா.
காங்கிரசு தரப்பில் போட்டியிட்ட பிராமணரான டி.டி.கிருஷ்ணமாச்சாரியை ஆதரித்து ஈ.வெ.ரா. வாக்குக்கேட்டார்.
அதோடு நில்லாது பி.பாலசுப்பிரமணியத்தைத் தோற்கடிக்க வேண்டுமென்றே சுயேட்சையாக எஸ்.இராமநாதன் என்பவரை என்ஜின் பெட்டிச் சின்னத்தில் போட்டியிட வைத்தார் ஈ.வே.ரா.

1967இல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் தஞ்சைத் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க உறுப்பினர் எஸ்.டி. சோமசுந்தரத்தை தோற்கடிக்கவேண்டும் என்பதற்காக காங்கிரசு கட்சியின் சார்பில் இந்திராகாந்தியால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிராமணராகிய ஆர்.வெங்கட்ராமனை நேரடியாக ஆதரித்து ஈ.வெ.ரா. வாக்குக் கேட்டார்.
தேர்தல் பரப்புரை செய்த ஈ.வெ.ரா,
“கழுதைகளாக இருந்தாலும் பிராமணராக இருந்தாலும் எல்லாக் காங்கிரசு வேட்பாளர்களுக்கும் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும்" என்றார்.

Friday, 19 August 2016

ஈ.வே.ரா நேர்மையான இறைமறுப்பாளரா?

ஈ.வே.ரா நேர்மையான இறைமறுப்பாளரா?

"நான் எனக்கு ஞாபகமிருக்கிற வரையில் என்னுடைய 10-வது வயதிலிருந்தே நாத்திகன்.
சாதி சமய சடங்குளில் நம்பிக்கை இல்லாதவன்..."
- ஈ.வே.ரா  (விடுதலை 1.1.1962 )

ஆனால் ஈ.வே.ரா குடியரசு இதழைத் தொடங்கியபோது வயது 46.
அந்த முதல் இதழில்,
"இப்பெரு முயற்சியில் இறங்கியுள்ள எமக்கு போதிய அறிவையும் ஆற்றலையும் எல்லாம் வல்ல இறைவன் தந்து அருள் பாலிப்பானாக."
என்று எழுதியுள்ளார்.

குடியரசு பத்திரிகையை ஞானியர் அடிகள் என்ற சாமியார் மூலம் துவக்கிவைத்து ஈ.வே.ரா பேசிய பேச்சு அதே குடியரசில் 10-ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

".....இப்பத்திரிகையை திறப்பதற்கு ஈசன் அருளால் ஸ்ரீ சுவாமிகள் போன்ற பெரியார் கிடைத்தது அரிதேயாகும்.
இறைவன் அருளாலும், சுவாமிகளது அருளாலும் பத்திரிகை செவ்வனே நடைபெற வேண்டுமாய் ஆசீர்வதிக்கும்படி சுவாமிகளை வேண்டுகிறேன்..."

அதாவது 46 வயது வரை இறைநம்பிக்கையுடன் இருந்ததை மறைத்து ஏதோ தான் ஒரு பிறவி மேதாவி என்றவாறு ஈ.வே.ரா எழுதியுள்ளார்.

(நன்றி:-
முதல் ”குடியரசு” சில பிரச்சனைகள், விமர்சனங்கள்.
ஆசிரியர்: முருகு இராசாங்கம்)

Monday, 15 August 2016

இடவொதுக்கீடு ஈ.வே.ரா பெற்றுத்தந்ததா?

இடவொதுக்கீடு ஈ.வே.ரா பெற்றுத்தந்ததா?

1871ல் சென்னை மாகாண அரசு கணக்கெடுப்பு நடத்தி பிராமணரல்லாதார் ஒடுக்கப்படுவதாக அறிவித்தது.
ஈ.வே.ரா அப்போது பிறக்கவேயில்லை.
அவர் காங்கிரசிலிருந்து விலகி பிராமணரல்லாதார் கொள்கையை கையிலெடுத்தது இதற்கு 53 ஆண்டு கழித்துதான் (1924ல்).

1893 ல் ஆங்கிலேய ஆட்சி சென்னை மாகாணத்தில் 49 பின்தங்கிய சாதிகளைத் தேர்ந்தெடுத்து கல்வி வழங்குவதில் கவனம் செலுத்தியது.
ஈ.வே.ரா.வுக்கு அப்போது 13 வயது.
ஈ.வே.ரா கல்வியிலும் வேலையிலும் பிராமணரல்லாதார் முன்னுரிமைக்காக பேசியது இதற்கு 32 ஆண்டுகள் கழித்துதான்  (1925ல்).

1927லேயே சென்னை மாகாணம் முழுவதும் அரசு வேலைகளில் சாதிவாரியாக முன்னுரிமை வழங்கப்பட்டது.
அப்போது ஈ.வே.ரா காங்கிரசிலிருந்து விலகி தனியாக சுயமரியாதை இயக்கம் தொடங்கி இரண்டாண்டுகள் கூட ஆகியிருக்கவில்லை.
அதுவரை ஈ.வே.ரா இடவொதுக்கீட்டிற்காக எந்த போராட்டத்தையும் நடத்தியிருக்கவில்லை.

1943 ல் அம்பேத்கரின் முயற்சியால் ஆங்கில அரசு அனைத்து துறைகளிலும் பட்டியல் சாதியினருக்கான 8.33% இட ஒதுக்கீடு நடைமுறைக்கு கொண்டுவந்தது.
இதற்கு ஓராண்டு பிறகுதான் ஈ.வே.ரா திராவிடர் கழகம் தொடங்கினார்.
இட ஒதுக்கீடு தொடர்பாக அவர் போராட்டம் நடத்தியது இதற்கு ஏழாண்டுகள் பிறகுதான் (1950ல்)

அதாவது ஈ.வே.ரா பிறக்கும் முன்னரே பிராமணர் ஆதிக்கம் உணரப்பட்டு அவர் செல்வாக்கு பெறும் முன்பே இடவொதுக்கீடும் கிடைத்துவிட்டது.

ஆங்கிலேயர் வெளியேறிய பின் புதிய சட்டம் 1950 ல் நடைமுறைக்கு வந்தது.
சாதி ரீதியான இடவொதுக்கீடு பிராமணர்கள் வழக்கு தொடுத்ததால் நீக்கப்பட்டது.

அப்போது மக்களைத் திரட்டி போராடிய பலரில் ஈ.வே.ராவும் ஒருவர்.

ஆக கல்வியிலும் வேலையிலும் சாதிரீதியான ஒதுக்கீடு பல ஆண்டுகளாக பல்வேறு தலைவர்கள் மக்களைத் திரட்டிப் போராடியதால் கிடைத்தது.

ஈ.வே.ரா கடைசி நேரத்தில் ஒரே ஒரு போராட்டம் நடத்திவிட்டார் என்பதற்காக இடவொதுக்கீடே அவர்தான் வாங்கித் தந்தார் என்றவாறெல்லாம் திராவிடவாதிகள் எழுதுகின்றனர்.

ஈ.வே.ரா போராடியது 'வகுப்புவாரி இடவொதுக்கீடு' அதாவது பிராமணரல்லாதார் இடவொதுக்கீடு.
அவருக்கு தாழ்த்தப்பட்ட சாதியாரைப் பற்றி எந்த கவலையும் இல்லை.
அவரது நோக்கம் 3% பிராமணர்கள் அரசுவேலையிலும் 3% ற்கு மேல் இருக்கக்கூடாது என்பதே.

ஆனால் 'சாதிவாரி இடவொதுக்கீடு' தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடிப் பெறப்பட்டது.
தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வியிலும் வேலையிலும் இடம்பெறுவதற்காகக் கோரப்பட்டது.
அதை 1943ல் சாதித்து காட்டியவர்தான் அம்பேத்கர்.

சாதிரீதியான இடவொதுக்கீட்டை பிராமணர்கள் எதிர்த்து வழக்குப் போடும்வரை ஈ.வே.ரா அதில் ஆர்வம் காட்டவில்லை.
பிராமணர்கள் வெற்றிபெற்றதும் அது பொறுக்கமுடியாமல் போராட்டத்தை அறிவித்தார்.

தாழ்த்தப்பட்டோருக்காக ஈ.வே.ரா என்றும் எங்கேயும் போராடியதோ பேசியதோ கிடையாது.

அவர் தாழ்த்தப்பட்டவர்களையும் இசுலாயமியரையும் பிராமணரல்லாதாரின் எதிரிகளாகவே கடைசிவரைக்கும் பேசியும் எழுதியும் வந்தார்.

கடைசிவரைக்கும் பறையர்களை கேவலமாகப் பேசியும் எழுதியும் வந்தார்.

கடைசி போராட்டத்தையும் 'வகுப்புரிமை நாளாக'த்தான் அறிவத்து போராட அழைத்தார்.

திராவிடம் இதேபோல கடைசிநேரத்தில் புகுந்து முழு போராட்டவரலாறையும் ஆட்டையைப்போடுவது தொடர்ந்து நடந்துவருகிறது.
_______________________

சிலர் 1927 ல் திராவிட கட்சியான ஜஸ்டிஸ் இடவொதுக்கீடை அமல்படுத்தியதைப் பெருமையாகக் கூறுவார்கள்.

ஆனால் இதற்கு 25 ஆண்டுகள் முன்பே கொல்ஹாப்பூர் அரசர் சத்ரபதி ஸாஹுஜி மகராஜ் 50% பிராமணரல்லாதோருக்கு ஒதுக்கினார்.
(பிறகு பதினெட்டாண்டுகள் கழித்து 90% இடவொதுக்கீடு பிராமணரல்லாதோருக்கு ஒதுக்கினார்)
இதற்கு ஏழாண்டுகள் கழித்துதான் நீதிக்கட்சி இடவொதுக்கீட்டை கொண்டுவருகிறது.
அதாவது அக்கட்சி ஆட்சியில் அமர்ந்து 8 ஆண்டுகள் கழித்து.

அதாவது திராவிடம் ஆட்சிக்கு வருமுன்பே கொல்ஹாப்பூரில் 90% பிராமணரில்லாதோர் பதவி பெற்றுவிட்டனர்.

ஆக இடவொதுக்கீட்டுக்கு முன்னோடி திராவிட கட்சி இல்லை, ஒரு மராத்திய மன்னர்தான்.

நன்றி : Reservation policy in Tamilnadu - Wikipedia
______________________

இது எல்லாமே தொடங்கியது ஆங்கிலேயரின் பிரித்தாளும் மூளையில்தான்.

முதலில் எல்லா உயர் பதவிகளிலும் ஆங்கிலேயரே இருந்தனர்.
இந்தியர்களுக்கும் பதவி வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் தொடங்கப்பட்டது.
1900களில் மிண்டோ - மார்லி சீர்திருத்தம், மாண்டேகு - செம்ஸ்போர்டு சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டு இந்தியர்களுக்கும் பதவிகள் வழங்கப்படுகின்றன.

இப்பதவிகளில் ஆங்கிலக் கல்வி கற்று பிராமணர்கள் நிறைகின்றனர்.
குறிப்பாக தமிழ்ப் பார்ப்பனர்கள்.
தமிழர்கள் பதவிபெறுவதைக் கண்டு வயிறெரிந்தனர் வேற்றின ஆதிக்க சாதிகள்.

(எப்படி தமிழர்களான யாழ்ப்பாண வெள்ளாளர்கள் ஆங்கிலேயருக்கு அடுத்த பதவிகளில்  நிறைந்திருந்தது சிங்களவர் கண்களை உறுத்தியதோ அதேபோல)

வேற்றினத்தாரின் இந்த 'தமிழின வெறுப்பை'த் தனது பிரித்தாளும் அரசியலுக்காகப் பயன்படுத்திக்கொண்டனர் ஆங்கிலேயர்.

திராவிட கட்சியை ஒரு தெலுங்கரையும் மலையாளியையும் வைத்து  உருவாக்கியதும் ஆங்கிலேயரே.
அதனால்தான் முதல் திராவிட கட்சி தோன்றியதும் அதன் முதல் அறிக்கை 'ஆங்கிலேயரிடம் சுதந்திரம் கேட்கக்கூடாது' என்று கூறியது.
திராவிடம் கடைசிவரை ஆங்கிலேயரை எதிர்த்து ஒரு வார்த்தைகூட பேசாமல் கடைசிவரை ஆங்கிலேயர்களுக்கு விசுவாசகமாக வாலை ஆட்டியது.

ஆங்கிலேயருக்கு முன் தமிழகத்தை ஆண்ட தெலுங்கு வம்சாவளிகள் பேராதவு திராவிடத்திற்குக் கிடைத்தது.

  வேற்றின ஆட்சியில் தமிழர்களின் நிலத்தை பிடுங்கி நிலவுடைமையாளர்களாக தமிழகம் முழுக்க நிறைந்துகிடந்த அத்தனை வந்தேறிகளும் ஆதரித்தனர்.
திராவிடத்துக்கு பணம் வந்து குவிந்தது.

ஆங்கிலேயருக்கு அடுத்து அரியணை ஏறப்போகும் வடவரை சமாளிக்க தமிழரும் ஆதரித்தனர்.
திராவிடம் என்ற பெயரில் வேற்றினம் அரியணை ஏறியது.
அது இன்றுவரை தொடர்கிறது.

திராவிடவாதிகளுக்கு இடவொதுக்கீடு பற்றி உண்மையில் அக்கறை இருந்தால் (மற்ற மாநிலங்களைப் போல) தமிழ்-சாதிகளைத் தவிர மற்ற சாதிகளை மாநில சலுகையிலிருந்து நீக்கும் நடவடிக்கை ஏன் செய்யவில்லை?

சட்டநாதன் பரிந்துரையை ஏன் நிறைவேற்றவில்லை?

சாதி சாதியாகப் பிரிந்து ஒரு இனத்துக்குள் வேற்றினம் ஊடுருவும் வழியே இது.

திராவிடம் என்பது உருமாற்றி ஏமாற்றும் அரசியல் நாடகம்.
அதன் ஒரு காட்சிதான் இடவொதுக்கீடு சாதனை.

இனியாவது உண்மையை உணருங்கள்.