Thursday, 4 July 2024
என்னடா ஆர் எஸ் பாரதி நாயே
Monday, 5 June 2023
SC நாயுடு
Thursday, 17 November 2022
நரிக்காரர் குறவர் ஆனது எப்போது
Tuesday, 2 August 2022
சாதிவெறியில் முதலிடம் திமுக
Monday, 8 March 2021
சொத்துரிமை அடிப்படையில் இடவொதுக்கீடு
சொத்துரிமை அடிப்படையில் இடவொதுக்கீடு
பொதுவாகவே ஒருவர் தன் வாழ்க்கையில் எவ்வளவு முன்னேறுவார் என்பது அவர் பிறக்கும்போதே தீர்மானிக்கப் பட்டுவிடுகிறது. அதைத் தீர்மானிக்கும் காரணிகளில் சொத்து, சாதி, உடல் ஆரோக்கியம், பாலினம், பிறப்பிடம், கல்வி, தொழில், மதம் ஆகியன.
இது தவிர அவரது அறிவு, திறமை, குணநலன், அதிர்ஷ்டம், முயற்சி, குடும்பத்தார், வாழ்க்கைத் துணை, பழக்க வழக்கம் போன்றவையும் உண்டு.
(இங்கே முன்னேறுதல் என்பது சொத்து சேர்ப்பது என்றே பொருள் கொள்ள வேண்டும். அதாவது அடிப்படைத் தேவைக்கு மட்டும் பொருள் ஈட்டுவது முன்னேற்றம் ஆகாது. தனக்கும் தன் துணை மற்றும் வாரிசுகளுக்கு உணவு, உடை, உறைவிடம், வீட்டு வசதிகள் ஆகிய தேவைகளை நிறைவேற்றி வாரிசுகளுக்கு கல்வியும் ஏற்படுத்தித் தர முடிந்தவர் வாழ்பவர் என்று வரையறுக்கலாம். போன தலைமுறை அசையாச் சொத்துக்களை விட தான் அதிகம் அசையாச் சொத்து வைத்திருந்தால் அவர் முன்னேறியவர் என்று வரையறுக்கலாம்)
மேற்கண்ட காரணிகளை ஒப்பிட இரண்டு உதாரணங்களைப் பார்ப்போம்.
அதாவது தாய் தந்தை பெயரில் அசையாச் சொத்துடைய, ஒரு ஆண், oc யில் வரும் சாதியில், ஒரு மாநகரத்தில், இந்து குடும்பத்தில், உடல் குறைபாடு எதுவுமின்றி பிறந்து, உயர்தர கல்வி கற்று, பெரிய முதலீடு போட்டு தொழில் (அல்லது நல்ல நிறுவனத்தில் வேலை) செய்கிறார் என்றால் அவர் வாழ்க்கையில் முன்னேற அதிக வாய்ப்பிருக்கிறது.
ஆனால் அடிப்படை வசதி கூட இல்லாத ஒரு குக்கிராமத்தில், பட்டியல் சாதியில், சொந்த வீடுகூட இல்லாத, கிறித்துவ மதத்தை பின்பற்றும், தாய்தந்தைக்கு, உடல் ஊனத்துடன் பிறந்த ஒரு பெண், கடினப்பட்டு ஆரம்ப கல்வி முடித்து, சிறுதொழில் (அல்லது கூலிவேலை) செய்கிறார் என்றால் அவர் முன்னேறுவது மிக மிக கடினம்.
(மேற்கண்ட காரணிகள் சிறப்பாக கிடைக்கப்பெறாமல் மிகவும் அடிமட்டத்திலிருந்து மிக முன்னேறிய நிலைக்குச் சென்றவர்களும் இருக்கவே செய்கிறார்கள். அவர்கள் விதிவிலக்கு நாம் இங்கே பொதுவான நடைமுறையைப் பேசுகிறோம்)
இதில் அரசு செய்யவேண்டிய வேலை ஏற்றத்தாழ்வினை ஈடுகட்டுவதாகும். ஆனால் ஒருவரின் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் முதன்மைக் காரணி அவரது தாய்தந்தையின் சொத்துமதிப்பே ஆகும். ஆனால் அதற்கு அடுத்த இடத்தில் இருக்கும் சாதி முக்கிய கருதப்பட்டு அதை முதன்மையாக வைத்து இங்கே இடவொதுக்கீடு வழங்கப்படுகிறது.
வருமானம் நிலையற்றது என்று அதன் அடிப்படையில் இடவொதுக்கீடு வழங்காமை சரிதான். ஆனால் சொத்து அப்படியில்லை. அதை வருமானம் போல எளிதில் மறைக்க முடியாது. அது ஏறத்தாழ நிலையானது. அதிலும் ஒரு தலைமுறைக்காவது அது நிலையாக இருக்கும். அது கரைந்தாலும் வேறு வடிவம் எடுக்குமே தவிர மறைந்துவிடாது. செல்வச் சீமானாக இருந்து ஒரே நாளில் ஒன்றுமில்லாமல் போனவர்களும் ஒன்றுமே இல்லாமல் திடீரென்று செல்வச்சீமான் ஆனோரும் மிகச்சிலரே!
தற்போதைய இடவொதுக்கீடு என்பது அந்த அந்த சாதியில் முன்னேறியவரே மீண்டும் மீண்டும் முன்னேறுவதற்கே வழி செய்கிறது. இடவொதுக்கீடு சலுகை எந்த சாதி ஏழைகளுக்கும் பெரிதாகப் பயன்படவில்லை என்பது இப்போது வரை பட்டியல் சாதியினர் முன்னேறவில்லை என்பதிலிருந்து அறிந்துகொள்ளலாம்.
அரசின் இந்த சாதியை முதன்மையாகக் கொண்ட பார்வையே சாதிய அரசியலுக்கும் வழிவகுக்கிறது. ஒவ்வொரு சாதியிலும் வசதி படைத்தவரே அரசியலிலும் லாபம் அடைகின்றனர். அவர்களை ஆதரிப்பதைத் தவிர அந்த சாதி ஏழைகளுக்கு வேறு வழியும் இல்லை.
அப்பன் தொழிலை மகன் செய்த காலத்தில் ஆங்கிலேயர் கல்விக்காக கொண்டுவந்த இடவொதுக்கீடு இன்னமும் அதே பழைய பார்வையுடன் இருக்கிறது.
எனவே, ஒருவர் ஆரம்பக் கல்வி முடிக்கும் போது இடவொதுக்கீடு வழங்கப்பட வேண்டும் (ஆரம்பக் கல்வி வரை அனைவருக்கும் கல்வி மற்றும் கல்விக்கான வசதிகள் இலவசமாக செய்து தரப்பட வேண்டும்).
இந்த இடவொதுக்கீடு அப்போதைய அவரது தாய் தந்தை (அல்லது அவர்களது பெற்றோரான இரண்டு தாத்தா பாட்டிகள்) பெயரில் இருக்கும் சொத்து மீதான அவரின் சொத்துரிமையை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்பட வேண்டும்.
(அதாவது அவரது குடும்ப சொத்து மதிப்பில் அவருடன் பிறந்தாருக்கான பாகம் கழிக்கப்பட்டு அவரது சொத்துரிமை நிர்ணயிக்கப்படும்)
பிற்காலத்தில் அவரது குடும்பம் சொத்துகளை இழந்தாலும் சம்பாதித்தாலும் அதை கணக்கில் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
யாரும் ஒரு இடவொதுக்கீட்டுக்காக சொத்துகளை பினாமி பெயரில் மாற்றிவிட்டு பிறகு தன் பெயருக்கு மாற்றிக்கொள்ள மாட்டார்கள். இருந்தாலும் இடவொதுக்கீடு வழங்கும் சமயத்தில் சமீபத்தில் கைமாறிய சொத்துகள் கண்கானிக்கப்பட வேண்டும்.
ஒருவருக்கு திருமணம் ஆனதும் அவருக்கான சொத்துகளைப் பிரித்து அவர் பெயரில் எழுத்துப்பூர்வமாக வழங்கிட அரசாங்கம் அறிவுறுத்துவதும் இங்கே அவசியம் (மரணத்திற்குப் பிறகு என்றாவது எழுதிவைக்க வேண்டும்). ஒருவரின் 30 வயதிற்குள் இது நடந்தால் மிகவும் நல்லது.
வருங்காலத்தில் இந்த நடைமுறை பலன் தந்தால் மேலே கூறப்பட்ட அடுத்தடுத்த முக்கிய காரணிகளையும் கணக்கில் எடுத்து இடவொதுக்கீடுக்கான புள்ளிகள் வழங்கப்பட்டு அந்த புள்ளிகள் அடிப்படையில் இடவொதுக்கீடு கொடுக்கலாம்.
முக்கிய காரணிகள் (வரிசைப்படுத்தியது)
1. சொத்துரிமை
2. சாதி
3. உடல் ஆரோக்கியம்
4. பிறப்பிடம்
5. பாலினம்
6. மதம்
மற்றபடி ஒரு மாநில எல்லைக்குள் இயங்கும் மத்திய, மாநில, பன்னாட்டு, தனியார் நிறுவனங்களில் வேலை மற்றும் கல்வி வாய்ப்புகளில் அந்த மாநிலத்தில் பிறந்தாருக்கே 90% ஒதுக்கப்பட வேண்டும் என்பதையும் இங்கே அழுத்தமாகக் கூறவேண்டியுள்ளது.
18.02.2021
Friday, 15 November 2019
ஒரு தற்கொலைக்கு எத்தனை சாயங்கள்
பிற மாநிலங்களில் நேர்காணலில் நீங்கள் BC என்று கூறினால் அவனுக்கு புரியாது.
OBC என்று கூறவேண்டும்.
ஏனென்றால் தமிழகத்தில் மட்டுமே 69% இடவொதுக்கீடு.
மற்றபடி எல்லா மாநிலங்களிலும் 50% மட்டுமே!
இதில் OC (other castes) என்பது 50%.
இது இடவொதுக்கீடு என்று ஆகாது.
அதாவது ஒரு கல்லூரியில் 100 சீட் இருக்கிறது என்றால்
50 சீட் வரை மதிப்பெண் அடிப்படையில் நிரப்பபடும்.
இதில் போதுமான மதிப்பெண் எடுத்த SC, ST யும் கூட இடம்பெறுவர்.
மீதி 50% இடவொதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்படும்.
அதாவது குறைந்த மதிப்பெண் OBC, SC, ST இதில் இடம்பெறுவர்.
மத்திய அரசு பின்பற்றும் இடவொதுக்கீடு
Scheduled Castes (SCs): 15%
Scheduled Tribes (STs): 7.5%
Other Backward Castes (OBCs): 27%
இது போக
புதிதாக 10% Reservation for Economically Weaker Sections (EWS)
ஓசி என்று எந்த ஒதுக்கீடும் கிடையாது.
இங்கே OC என்றாலே பார்ப்பனர் என்று பிரச்சாரம் செய்யப்படுகிறது.
ஐஐடி யில் இந்த இடவொதுக்கீடு சரியாக பின்பற்றப்படவில்லை.
இது விதிமீறல்தான்.
ஆனால் இதில் தமிழக அரசுக்கோ, தமிழக குடிமக்களுக்கோ, தமிழக பார்ப்பனருக்கோ எந்த தொடர்பும் இல்லை.
தமிழகத்தின் கட்டுப்பாட்டிலேயே இல்லாத IIT முழுக்க மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது.
பல மாநிலத்து மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.
அங்கே நடக்கும் கொடுமைக்கு நாம் எப்படி பொறுப்பாக முடியும்?!
பாத்திமா லத்தீப் விடயத்தில் "தமிழகத்தை நம்பிதானே அனுப்பினோம்?" என்று பெற்றோர் புலம்புவது அப்பாவித்தனமா அல்லது உள்நோக்கமுடையதா என்று புரியவில்லை.
இதுவே தமிழகத்தில் ஒரு பொது இடத்தில் பாத்திமா பாதிக்கப்பட்டிருந்தால் தமிழகம் பொறுப்பு.
மற்றபடி பாத்திமா தற்கொலைக்கு தனிமனிதர்கள் தான் காரணம்.
தன் சாவுக்கு காரணமென அந்த மாணவி குறிப்பிட்ட மூன்று பேருமே வெவ்வேறு பின்னணி கொண்டவர்கள்
1. சுதர்ஷன் பத்பநாபன், ஆரியத்துவ ஆதரவாளர்.
(அறப்போர் இயக்கத்தை சார்ந்தவர் அல்ல என்று அந்த அமைப்பு மறுத்திருக்கிறது. )
2.ஹேமசந்திர காரா,
மாற்றுத்திறனாளி.
3. மிலிந்த் ப்ராமே,
அம்பேத்கர் பெரியார் வாசக வட்ட ஆலோசகர்.
தலித்திய திராவிட ஆதரவாளர்.
இந்த தற்கொலைக்கு இசுலாமிய இயக்கங்கள் மதச் சாயம் பூசி,
திராவிட இயக்கங்கள் சாதிச் சாயம் பூசி,
கேரள அரசு இனச் சாயமும் பூசி அரசியல் ஆதாயம் பார்க்கிறார்கள்.
தனிமனிதர் மட்டுமன்றி கல்வி முறையும் கூட ஒரு முக்கிய காரணம்.
இந்தியாவில் மாணவர்கள் தற்கொலை மிக அதிக அளவில் உள்ளது.
3 இடியட்ஸ் (நண்பன்) மாதிரி சில படங்கள் கூட வெளிவந்துள்ளன.
தற்கொலை கூட கோழைத்தனம்.
ஆனால் தமிழகத்திலிருந்து இதே போல மத்திய அரசு நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு சென்ற தமிழகத்து மாணவர்கள் 4 பேர் கொலை செய்யப்பட்டு அது தற்கொலையாக மாற்றப்பட்டுள்ளது
(தேடுக: தமிழக மாணவர்களைக் காவுவாங்கும் டெல்லி வேட்டொலி).
தற்கொலைக்கு உண்மையான காரணத்தை ஆராய்ந்து தொடர்புள்ளோரை தண்டிக்கவேண்டும்.
கல்விமுறையில் மாற்றம் கொண்டுவரவேண்டும்.
பாத்திமா லதீப் விடயத்தில் இதற்கு அரசியல் சாயம் பூசி திசைமாற்றி அந்த மாணவிக்கு மேலும் அநீதி இழைக்க வேண்டாம்.
Monday, 17 September 2018
மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு அளித்த சோழர்
காண்பார்வை அற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு அளித்த சோழர் அரசாணை.
இன்று மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு இட ஒதுக்கீடு மூலம் வேலைவாய்ப்பு வழங்குகிறது.
ஆனால் 800 ஆண்டுகளுக்கு முன்பே சோழ அரசாங்கத்தால் இது நடை முறைப் படுத்தப்பட்டுள்ளது.
விழுப்புரம் அருகே உள்ள திருவாமாத்தூரில் உள்ள "அபிராமேசுவரர் கோவில்" கல்வெட்டில் இருந்து இந்த தகவலை தெரிந்து கொள்ள முடிகிறது.
இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் இக்கோவிலில் திருப்பதிகங்கள் பாடுவதற்கு 16 பார்வையற்றவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அவர்கள் கோவிலுக்கு வந்து செல்வதற்கு உதவியாக இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் இருவரையும் "கண் காட்டுவார்" எனக் கல்வெட்டு குறிப்பிடுகிறது.
இந்த பதினெட்டு பேருக்கும் (அக்கால வழக்கப்படி) ஊதியமாக நெல் வழங்கப்பட்டு உள்ளது.
நன்றி: Andavar Kani
Monday, 23 July 2018
OBC ஒதுக்கீட்டில் வந்தேறிகள் ஆதிக்கம்
OBC ஒதுக்கீட்டில் வந்தேறிகள் ஆதிக்கம்
கீழ்க்கண்ட பதிவில் 1985 இல் அப்போதைய OBC சாதிகளில் தமிழரல்லாதார் செலுத்திய ஆதிக்கம் பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
(படிக்க சோம்பல்படுவோர் கீழ்க்கண்ட பத்தியை மட்டும் படிக்கவும்)
1985 ல் தமிழரல்லாதார் (ஓபிசி மக்கட்தொகையில்) தமது சமூக சதவீதத்தை விட அதிகமான இடங்களை ஆக்கிரமித்து இருந்தனர்....
[1] (தெலுங்கு) மேளக்காரர் 5.25 மடங்கு
[2] (குஜராத்தி) சவுராஸ்டிரர் 3.80 மடங்கு
[3] (கன்னட) கவுடா 3.0 மடங்கு
[4] (தெலுங்கு) கவரா 2.67 மடங்கு
[5] (தெலுங்கு) தேவாங்கர் 2.41 மடங்கு
[6] (கன்னட) ஜங்கம் 1.87 மடங்கு
[7] (தெலுங்கு) கஞ்ச ரெட்டி 1.75 மடங்கு
[8] (ஹிந்திய) சேட்டு 1.75 மடங்கு
[9] (தெலுங்கு) ஈடிகா 1.50 மடங்கு
[10] (உருது) தெக்கணி முஸ்லீம் 1.42 மடங்கு
[11] (கன்னட) கன்னடிகா ஜைன் 1.37 மடங்கு
[12] (கன்னட) வொக்கலிகர் 1.18 மடங்கு
[13] (தெலுங்கு) சாத்துச்செட்டி 1.77 மடங்கு
என அதிகமான பயனடைந்துள்ளனர்.
அதாவது அத்தனை மடங்கு இடங்களை ஆக்கிரமித்துள்ளனர்.
------------------------
(இது பற்றி சற்று விரிவாக அறிய விரும்புவோர் தொடர்ந்து படிக்கவும்)
இதனால் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் மற்ற ஓபிசி சாதியினருக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய இடங்கள் கூட கிடைக்காமல் செய்தனர்.
மிக அதிக பலனடைந்தோர் தெலுங்கரான சின்னமேளம் (மேளக்காரர்) என்றால்,
மிகவும் பாதிக்கப்பட்டோர் வன்னியர்கள்.
இதனால் வன்னியர் தனி இடவோதுக்கீடு பெற 1989 இல் மிகப்பெரிய போராட்டம் நடத்தினர்.
எம்.ஜி.ஆர் ஆட்சியில் வடமாவட்டங்கள் முழுமையாக ஸ்தம்பிக்க போலிசால் கட்டுப்படுத்த முடியாமல் போனது.
எம்.ஜி.ஆர் மத்திய அரசிடம் மன்றாட துணைராணுவம் வந்து 21 பேரை சுட்டுக்கொன்றது.
பிறகு OBC இல் மிகவும் பின்னடைந்த சாதிகளை தனியாக எடுத்து MBC மற்றும் DNC உருவாக்கப்பட்டது.
இதற்கான காரணத்தை ஆராய்வோம்.
1985ல் இதர பிற்படுத்தப்பட்டோர் அமைப்பின் (OBC commission) அறிக்கையின் படி கொடுக்கப்பட்டுள்ள படத்தில் ஆதிக்க விழுக்காடு கணக்கிடப்பட்டுள்ளது.
உதாரணத்துக்கு
1,00,000 பேர்களை 'இதர பிற்படுத்தப்படோர் ஒதுக்கீட்டில்' வேலைக்கு எடுப்பதாகக் கொள்வோம்
அதில் 0.2 உள்விழுக்காட்டை கொண்ட மேளக்காரர்கள் நியாயப்படி 200 பேர்தான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் 1050 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அதேபோல் நியாயப்படி கொங்கு வெள்ளாளக்கவுண்டரில் 6800 பேருக்கு வேலை கிடைத்திருக்க வேண்டும்.
ஆனால் 5916 பேருக்கு மட்டுமே வேலை கிடைத்தது.
இதர பிற்படுத்தப்பட்டோரில் 18% உள் விழுக்காட்டை கொண்டிருந்தாலும் வன்னியர் மிகவும் பின்னடைவில் உள்ளனர்.
இதற்கு காரணம் வேற்றின ஆதிக்கம்.
குறிப்பாக OBC ஒதுக்கீட்டில் 5.25 மடங்கு அதிக சலுகையை அனுபவித்து வந்த மேளக்கார சமூகம்.
ஆனால் வன்னியர் போராடி வாங்கிய MBC யில் சின்னமேளங்களும் சேர்க்கப்பட்டனர்.
(கருணாநிதியின் தனது சாதி மீதான பாசம் இதற்கு காரணம்.
இதனால் இன்றுவரை வன்னியர் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகள் பின்னடைவைச் சந்திக்கின்றன)
இதனால்தான் தமிழ்ச்சாதிகளுக்கு மட்டுமே இனவொதுக்கீடு கொடுக்கப்பட வேண்டும்.
அதுவும் பிசி, ஓபிசி, ஓசி என்று பொத்தம்பொதுவாக இல்லாமல் மக்கட்தொகையில் ஒரு சாதியின் சதவீதத்தைப் பொறுத்து சாதியின் பெயரிலேயே வழங்கப்பட கேட்கிறோம்.
இதுதான் பதிவின் சாராம்சம்.
----------------------
(இந்த விபரம் எப்படி கணக்கிடப்பட்டது என விரிவாக அறிய விரும்புவோர் தொடர்ந்து படிக்கவும்)
1985ல் இருந்த பழைய OBC யில் தற்போதுள்ள நான்கு குழுக்கள் வரும்.
அவை பிற்படுத்தப்பட்டோர் (BC),
பிற்படுத்தப்பட்ட இசுலாமியர் (BC -M),
மிகவும் பிற்படுத்தப்பட்
டோர் (MBC)
மற்றும் சீர்மரபினர் (DNC).
இது தகவலுக்காக மட்டும்.
பதிவில் 1985ல் என்ன நிலை என்று மட்டுமே விவாதிக்கவுள்ளோம்.
இதர பிற்படுத்தப்பட்டோரில் (OBC) குறிப்பிட்ட சதவீதம் உள்ள ஒரு சமூகம் (Caste) எவ்வளவு பயனடைந்துள்ளது என்று கணிக்க
OBC மூலம் பலனடைந்தோர் எண்ணிக்கையில் அச்சமூக சதவீதத்தை கணக்கிடவேண்டும்.
இந்த பலனடைந்தோர் சதவீதம் (ஓபிசியில்) அந்த சமூகத்தின் சதவீதத்துடன் சமமாக இருக்கவேண்டும்.
அதாவது ஒரு சமூகம் ஓபிசி சாதியினரில் 10% இருக்கிறார்கள் என்றால்,
பலனடைந்தோர் எண்ணிக்கையிலும் 10% இருக்கவேண்டும்.
இடவொதுக்கீட்டின் மூலம் கிடைக்கும் பலன்கள் நான்கு வகைப்படும்.
அவை
1) கல்வி வாய்ப்பு,
2) கட்டண விலக்குடன் ஸ்காலர்சிப்,
3) கட்டணத்துடன் ஸ்காலர்சிப்,
4) வேலைவாய்ப்பு
இந்த நான்கு பலன்களையும் பெற்றோர் எண்ணிக்கையை சமூக வாரியாக பிரித்து கணக்கிட்டால் அச்சமூகம் அடைந்த பலன் தெரிந்துவிடும்.
ஒரு நபருக்கே நான்கும் கிடைத்திருக்கலாம்.
அல்லது ஒரு சமூகத்திற்கு நான்கில் ஒன்று மட்டும் அதிகம் கிடைத்திருக்கலாம்.
எனவே சமூக வாரியாக நான்கையும் கூட்டி நான்கால் வகுத்தால் அச்சமூகம் அடைந்த மொத்த பயன் தெரிந்துவிடும் இல்லையா?
இதைக் கீழ்க்கண்டவாறு கணக்கிடலாம்.
அதாவது,
ஒரு சமூகத்தற்கு கிடைத்த
கல்விவாய்ப்பு + கட்டண விலக்கு & ஸ்காலர்சிப் + ஸ்காலர்சிப்பு மட்டுர் + வேலைவாய்ப்பு இவற்றின் சராசரி விழுக்காடு அச்சமூகம் பெற்ற மொத்த பயன்.
எடுத்துக்காட்டுக்கு,
மேளக்கார சாதியை எடுத்துக்கொள்வோம்.
1985ஆம் ஆண்டறிக்கை படி,
* அச்சமூகத்தின் இடவொதுக்கீட்டில் கல்விவாய்ப்பு கிடைத்தோர் விழுக்காடு 0.4 ஆக உள்ளது.
* மேளக்கார சமூகத்தில் இடவொதுக்கீட்டில் கட்டண விலக்கு ஸ்காலர்சிப்பு பெற்றோர் விழுக்காடு 2.7 ஆக உள்ளது.
* மேளக்கார சமூகத்தில் இடவொதுக்கீட்டில் கட்டண ஸ்காலர்சிப்பு பெற்றோர் விழுக்காடு 0.4 ஆக உள்ளது.
* மேளக்கார சமூகத்தில் இடவொதுக்கீட்டில் வேலைவாய்ப்பு பெற்றோர் விழுக்காடு 0.7 ஆக உள்ளது.
மேலுள்ள நான்கையும் கூட்டி நான்கால் வகுத்தால் 1.05 சதவீதப் புள்ளிகள் வரும்.
இப்புள்ளிகள் மொத்த ஓபிசி இடவொதுக்கீட்டில் மேளக்கார சமூகம் பெற்ற பலன்.
ஆனால் மேளக்கார சாதியினர் ஓபிசி மக்கட்தொகையில் 0.2% மட்டுமே.
1.05/0.2 = 5.1 என்பது மேளக்கார சாதியினரின் ஆக்கிரமிப்பு/ ஆதிக்கத்தைக் குறிக்கும்.
அதாவது மேளக்காரர் தாங்கள் இருக்கும் மக்கட்தொகையை விட ஐந்து மடங்குக்கும் மேல் 'இதரபிற்படுத்தப்
பட்டோருக்கான ஒதுக்கீட்டை' ஆக்கிரமித்துள்ளனர்.
உதாரணத்துக்கு 1,00,000 பேர்களை OBC ஒதுக்கீட்டில் வேலைக்கு எடுக்குறாங்கன்னு வச்சுக்குவோம்.
அதில் 0.2 உள்விழுக்காட்டை கொண்ட மேளக்காரர்கள் நியாயப்படி 200 பேர்தான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் 1050 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுளனர்.
இதே போல் மற்ற தமிழரல்லாத பிறமொழியாளர்களின் ஆதிக்க விழுக்காட்டை கணக்கில் கொண்டு கூறினால்,
மேளக்காரர் தான் இருப்பதை விட 5.1 மடங்கு
சவுராஸ்டிரர் தான் இருப்பதை விட 3.80 மடங்கும்
கவுடா தான் இருப்பதை விட 3.0 மடங்கும்
கவரா தான் இருப்பதை விட 2.67 மடங்கும்
தேவாங்கர் தான் இருப்பதை விட 2.41மடங்கும்
ஜங்கம் தான் இருப்பதை விட 1.87 மடங்கும்
கஞ்ச ரெட்டி தான் இருப்பதை விட 1.75 மடங்கும்
சேட்டு தான் இருப்பதை விட 1.75 மடங்கும்
ஈடிகா தான் இருப்பதை விட 1.50 மடங்கும்
தெக்கணி இசுலாமியர் தான் இருப்பதை விட 1.42 மடங்கும்
கன்னட ஜைனர் தான் இருப்பதை விட 1.37 மடங்கும்
வொக்கலிகர் தான் இருப்பதை விட 1.18 மடங்கும்
சாத்துச்செட்டி தான் இருப்பதை விட 1.77 மடங்கும் பயனடைந்துள்ளனர் அதாவது அத்தனை மடங்கு இடங்களை ஆக்கிரமித்துள்ளனர்.
இதனால் தான் இதரபிற்படுத்தப் பட்டோரில் (OBC) இருந்து மிகவும் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு தனியாக ஒதுக்கீடு வேண்டுமென வன்னியர் சங்கம் போராட்டம் (1989ல்) நடத்தியது.
இதன் விளைவாக மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC) இடவொதுக்கீடு உருவானது.
ஆனால் OBC இடவொதுக்கீட்டில் பிற எந்த சமூகத்தையும் விட அதிகமான மடங்கு இடத்தை ஆக்கிரமித்து வன்னியர் போராடத்திற்கே முதல் காரணமாக இருந்துவந்த மேளக்கார சமூகமும் MBC பட்டியலுக்கு சத்தமில்லாமல் நகர்ந்து விட்டனர்.
1989 க்கு முன்பு இதர பிற்படுத்தப்பட்டோரில் 18% உள்விழுக்காடு கொண்ட வன்னியர்,
போராட்டத்தில் பலரை பறிகொடுத்து பெறப்பெற்ற MBC இடவொதுக்கீட்டால் பெரிய பலன்பெறாமல் இருந்துவருகின்றனர்.
இந்த லட்சணத்தில் இடவொதுக்கீட்டால் தான் இருக்கும் தொகையை விட 13 விழுக்காடு குறைவாக பெற்ற கொங்கு வெள்ளாள கவுண்டரோடு வன்னியர்களை மோதவிடுகின்றன ஹிந்திய, திராவிட, தலித்திய கும்பல்கள்.
ஆம்.
1985ன் அறிக்கையின் படி 1,00,000 பேரை வேலைக்கு இதர பிற்படுத்தப்பட்டோரில் எடுக்கின்றனர் என்றால்
அதில் நியாயப்படி கொங்கு வெள்ளாளக்கவுண்டரில் 6800 பேருக்கு வேலை கிடைத்திருக்க வேண்டும்.
ஆனால் 5916 பேருக்கு மட்டுமே வேலை கிடைத்துள்ளது.
தமிழரல்லாதாருக்கு இங்கே சலுகை கொடுப்பதே கூடாது.
இதில் அவர்கள் பல மடங்கு ஆக்கிரமித்தும் வருவதை எப்படி ஏற்கமுடியும்?!
திராவிடவாதிகள் இடவொதுக்கீட்டில் பலனடைந்த சதவீதத்தை கணக்கிடாமல் எண்ணிக்கையை மட்டும் எண்ணி,
பயனடைந்த கொங்கு வெள்ளாளரின் எண்ணிக்கையை வன்னியர்களிடம் காட்டி மோதலைத் தூண்டுகிறார்கள்.
ஆனால் வேற்றின ஆதிக்கத்தால் கொ.வெ.கவுண்டரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மக்கள்தொகையின் அடிப்படையில் கொ.வெ.கவுண்டருக்கு 100பேருக்கு வேலைகிடைக்க வேண்டும் என்றால் 87 கொ.வே.கவுண்டருக்கே வேலை கிடைத்துள்ளது.
தகவல்களுக்கு நன்றி:
தென்காசி சுப்பிரமணியன்
(Rajasubramanian Sundaram Muthiah)
படத்திற்கு நன்றி: அசுஆ சுந்தர்
----------------
அண்டைமாநிலங்களில் பெரும்பான்மைச் சமூகம்கூட தமிழகத்தினுள் குடியேறி சிறுபான்மை ஆகலாம்.
அதிகாரத்தில் இங்கிருக்கும் வந்தேறிகள் துணையுடன் இடவொதுக்கீடும் பெற்று அதையும் தாண்டி பல மடங்கு ஆக்கிரமித்து வாழ்வாங்கு வாழலாம் என்ற நிலையே உள்ளது.
வந்தாரை வாழவைத்து நாம் சீரழிந்துகொண்டு போகிறோம்.
Thursday, 19 July 2018
மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலையில் தெலுங்கர் ஆதிக்கம்
மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலையில் தெலுங்கர் ஆதிக்கம்
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மொத்தம் அறிவிக்கப்பட்டிருக்கும் 44 ஆசிரியர் பணியிடங்களில் 14 பணியிடங்கள் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு (31.81%) தெலுங்கை தாய் மொழியாக கொண்ட சக்கிலியர்/அருந்ததியர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தமிழ் மற்றும் வரலாறு துறைகளில்.
இது மட்டுமல்லாது நிர்வாகப்பிரிவில் பணியாற்றும் 120 பணியிடங்களுக்கும் ஒதுக்கீடு அறிவிப்பு வெளியிடப்பட இருக்கிறது.
இதிலும் கணிசமான இடங்கள் தெலுங்கர்களுக்கே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இட ஒதுக்கீடுகள் போக பொதுப்பிரிவிலும் பெரும்பான்மையாக நாயுடு, முதலியார், ரெட்டியார் உள்ளிட்ட பிரிவினரே இடம்பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முஸ்லீம்களுக்கும் ஒரு இடம் கூட ஒதுக்கப்படவில்லை.
இதற்கு முன்னதாக தெலுங்கை தாய்மொழியாக கொண்ட வசந்தி தேவி அவர்கள் துணைவேந்தராக இருந்தபோது தெலுங்கர்களையே அதிகமாக ஆசிரியர் மற்றும் நிர்வாகப்பணிகளில் பணியிலமர்த்தினார்.
தற்போது தெலுங்கை தாய்மொழியாக கொண்ட பாஸ்கர் அவர்கள் துணைவேந்தராக இருந்து தன் இனத்திற்கு தான் செய்ய வேண்டியதை சரியாக செய்யவுள்ளார்.
தெலுங்கரின் இந்த ஆக்கிரமிப்பை நியமனம் நடக்குமுன் இப்போதே தடுத்தால்தான் உண்டு.
நன்றி: முகமது கான்



























