Thursday 17 November 2022

நரிக்காரர் குறவர் ஆனது எப்போது

நரிக்காரர் குறவர் ஆனது எப்போது?

 குறத்தி மகன் (1972) என்கிற படம் எடுக்கிறார்கள். அதைப் பார்ப்பவர் குறவர்கள் என்றாலே ஊசி பாசி விற்றுக்கொண்டு துப்பாக்கி வைத்துக்கொண்டு 'ஓ சாமியோ!' என்று அழைத்துக்கொண்டு இருப்பார்கள் என்று நினைப்பார்கள். ஆனால் அது நரிக்காரர் பற்றிய படம். அதில் காட்டப்படும் எதுவுமே குறவர் வாழ்வியலில் இல்லை. 
அம்மையார் ஜெயலலிதா 'கந்தன் கருணை' (1967) திரைப்படத்தில் குறத்தியாக நடித்திருப்பார். அதுதான் உண்மையான குறவர் தோற்றம்.

 BC இல் மிகவும் பின்தங்கியவர்கள் MBC என்று கொண்டுவரும்போது 'நக்கலே' என்கிற பெயரில் BC இல் இருந்த 'நரிக்காரர்கள்' பெயர்மாற்றப்பட்டு 'நரிக்குறவர்' என்கிற பெயரில் MBC இல் சேர்க்கப் படுகிறார்கள். அதற்கு முன்னர் 'நரிக்குறவர்' என்று எந்த சாதியும் கிடையாது. இப்படி புதியதாக ஒரு சாதி உருவாக்கப்பட்டது முறையில்லை என்று சட்டநாதன் அறிக்கை கூட சுட்டுகிறது. ஆந்திராவில் இன்னமும் நரிக்கார மக்கள் நக்கலே என்றுதான் ஆவணங்களில் குறிக்கப்படுகின்றனர்.

 17 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் குஜராத்தின் மோவார் எனும் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து பஞ்சத்தின் காரணமாக புலம்பெயர்ந்து ஆந்திரா வந்தவர்கள் இந்த நரிக்காரர்கள். அவர்களின் தாய்மொழி ஹிராணியம் என்கிற எழுத்து வடிவம் அற்ற மொழி. 

குறவர்கள் ஆதி தமிழ்க்குடி. சங்க காலத்திலேயே பெண்பாற் புலவர் 'குறமகள் இளவெயினி' எழுதிய 18 பாடல்கள் புறநானூற்றில் உண்டு. குறவர்கள் முழுத் தமிழர்கள். நரிக்காரர்கள் மொழி, கலாச்சாரம் என முற்றிலும் தமிழர்களுக்கு வேறானவர்கள். இந்த பெயர் குழப்பதால் குறவர்களின் வாழ்வியல், அடையாளம், பண்பாடு ஆகியன சிதைவிற்கு உள்ளாகிறது. 

எம்.ஜி.ஆர் தொடங்கி பல தலைவர்கள் நரிக்காரர்கள் வீட்டுக்கு சென்று சாப்பிட்டுள்ளனர். குறவர்களும் வரவேற்கிறோம். அவர்கள் முன்னேற்றத்தை நாங்களும் விரும்குகிறோம். ஆனால் எங்கள் அடையாளத்தை விட்டுக்கொடுக்க முடியாது.

நன்றி: 
இரணியன் அவர்களது பேட்டி
Dots media (29.09.2022)

 குறவர்கள் காடுகளில் வாழும் பழங்குடிகள்.
குற்றாலம் மலையில் சன்னியாசி புடவு பகுதியில் 2500 ஆண்டுகள் பழமையான தமிழி எழுத்துகள் 'குறவ' என்று உள்ளது. முருகனுக்கு பெண் கொடுத்த தமிழ்க் குடி அவர்கள்.
 நரிக்காரர்கள் நகரங்களில் தெருவோரத்தில் வாழும் நாடோடிகள். நாகரிகம் அற்றவர்கள். இரவு நேரங்களில் குறவர் குறத்தி ஆட்டம் என்கிற ஆபாச நடனம் நரிக்காரர் செய்வதே! இன்று குறவர்களுக்கு கிடைக்க வேண்டிய அரசு சலுகைகள் நரிக்காரர்கள் கைக்குப் போய்விட்டன.
 ஆம்!
 நரிக்காரருக்கு மத்திய (குஜராத்திகள்) அரசால் பழங்குடி (ST) இடவொதுக்கீடு  கொடுத்துவிட்டது. அதே மாதத்தில் குறவர்களுக்கு குறவர் என்று சாதிச்சான்று கூட கிடைக்காமல் ஐந்தாண்டு அலைந்த விரக்தியில் படப்பையில் வேல்முருகன் என்பவர் தற்கொலை செய்துகொண்டார். 
  
இதனால் மேற்கண்ட பேட்டியளித்த இரணியன் அவர்கள் (வனவேங்கைகள் கட்சி) ஆறு நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். அவரையும் அவரை அழைத்து வந்த தென்காசி எம்.பி தனுஷ்.எம்.குமார் (பள்ளர்) அவர்களையும் நிற்கவைத்து கால்மேல் கால்போட்டபடி 'தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர்' சாத்தூர் ராமச்சந்திரன் எனும் KKSSRR (தெலுங்கர்) திமிராக பேசி அனுப்பினார்.

 வந்தேறிகள் என்றால் நகரங்களில் தெருவோரங்களில் பரதேசிகள் வரை நினைத்ததைச் சாதிக்கலாம். ஆனால் இந்த மண்ணின் மைந்தர்கள் பழங்குடியில் இருந்து மந்திரி வரை அவமானத்தை மட்டுமே சந்திப்பது வாடிக்கையாகி விட்டது. 

No comments:

Post a Comment