Friday 15 November 2019

ஒரு தற்கொலைக்கு எத்தனை சாயங்கள்




















ஒரு தற்கொலைக்கு எத்தனை சாயங்கள்

 பிற மாநிலங்களில் நேர்காணலில் நீங்கள் BC என்று கூறினால் அவனுக்கு புரியாது.
 OBC என்று கூறவேண்டும்.
ஏனென்றால் தமிழகத்தில் மட்டுமே 69% இடவொதுக்கீடு.

 மற்றபடி எல்லா மாநிலங்களிலும் 50% மட்டுமே!

 இதில் OC (other castes) என்பது 50%.
 இது இடவொதுக்கீடு என்று ஆகாது.

 அதாவது ஒரு கல்லூரியில் 100 சீட் இருக்கிறது என்றால்
 50 சீட் வரை மதிப்பெண் அடிப்படையில் நிரப்பபடும்.
 இதில் போதுமான மதிப்பெண் எடுத்த SC, ST யும் கூட இடம்பெறுவர்.

 மீதி 50% இடவொதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்படும்.
 அதாவது குறைந்த மதிப்பெண்  OBC, SC, ST இதில் இடம்பெறுவர்.

 மத்திய அரசு பின்பற்றும் இடவொதுக்கீடு
Scheduled Castes (SCs): 15%
Scheduled Tribes (STs): 7.5%
Other Backward Castes (OBCs): 27%
இது போக
புதிதாக 10% Reservation for Economically Weaker Sections (EWS)

 ஓசி என்று எந்த ஒதுக்கீடும் கிடையாது.
 இங்கே OC என்றாலே பார்ப்பனர் என்று பிரச்சாரம் செய்யப்படுகிறது.

 ஐஐடி யில் இந்த இடவொதுக்கீடு சரியாக பின்பற்றப்படவில்லை.
 இது விதிமீறல்தான்.

 ஆனால் இதில் தமிழக அரசுக்கோ, தமிழக குடிமக்களுக்கோ, தமிழக பார்ப்பனருக்கோ எந்த தொடர்பும் இல்லை.

 தமிழகத்தின் கட்டுப்பாட்டிலேயே இல்லாத IIT முழுக்க மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது.
 பல மாநிலத்து மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.

 அங்கே நடக்கும் கொடுமைக்கு நாம் எப்படி பொறுப்பாக முடியும்?!

 பாத்திமா லத்தீப் விடயத்தில் "தமிழகத்தை நம்பிதானே அனுப்பினோம்?" என்று பெற்றோர் புலம்புவது அப்பாவித்தனமா அல்லது உள்நோக்கமுடையதா என்று புரியவில்லை.

 இதுவே தமிழகத்தில் ஒரு பொது இடத்தில் பாத்திமா பாதிக்கப்பட்டிருந்தால் தமிழகம் பொறுப்பு.
 மற்றபடி பாத்திமா தற்கொலைக்கு தனிமனிதர்கள் தான் காரணம்.

தன் சாவுக்கு காரணமென அந்த மாணவி குறிப்பிட்ட மூன்று பேருமே வெவ்வேறு பின்னணி கொண்டவர்கள்

 1. சுதர்ஷன் பத்பநாபன், ஆரியத்துவ ஆதரவாளர்.
 (அறப்போர் இயக்கத்தை சார்ந்தவர் அல்ல என்று அந்த அமைப்பு மறுத்திருக்கிறது. )

2.ஹேமசந்திர காரா,
மாற்றுத்திறனாளி.

3. மிலிந்த் ப்ராமே,
அம்பேத்கர் பெரியார் வாசக வட்ட ஆலோசகர்.
 தலித்திய திராவிட ஆதரவாளர்.

 இந்த தற்கொலைக்கு இசுலாமிய இயக்கங்கள் மதச் சாயம் பூசி,
திராவிட இயக்கங்கள் சாதிச் சாயம் பூசி,
கேரள அரசு இனச் சாயமும் பூசி அரசியல் ஆதாயம் பார்க்கிறார்கள்.

 தனிமனிதர் மட்டுமன்றி கல்வி முறையும் கூட ஒரு முக்கிய காரணம்.
 இந்தியாவில் மாணவர்கள் தற்கொலை மிக அதிக அளவில் உள்ளது.
  3 இடியட்ஸ் (நண்பன்) மாதிரி சில படங்கள் கூட வெளிவந்துள்ளன.

 தற்கொலை கூட கோழைத்தனம்.
 ஆனால் தமிழகத்திலிருந்து இதே போல மத்திய அரசு நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு சென்ற தமிழகத்து மாணவர்கள் 4 பேர் கொலை செய்யப்பட்டு அது தற்கொலையாக மாற்றப்பட்டுள்ளது
 (தேடுக: தமிழக மாணவர்களைக் காவுவாங்கும் டெல்லி வேட்டொலி).

 தற்கொலைக்கு உண்மையான காரணத்தை ஆராய்ந்து தொடர்புள்ளோரை தண்டிக்கவேண்டும்.

 கல்விமுறையில் மாற்றம் கொண்டுவரவேண்டும்.

 பாத்திமா லதீப் விடயத்தில் இதற்கு அரசியல் சாயம் பூசி திசைமாற்றி அந்த மாணவிக்கு மேலும் அநீதி இழைக்க வேண்டாம்.

No comments:

Post a Comment