குறளை 
 குறள் வேறு! குறளை வேறு!
 கோதை (அதாவது ஆண்டாள்) "திருக்குறள் ஓதமாட்டோம்" என்று சொல்ல நினைத்திருந்தால் 
 "தீக்குறளை ஓதோம்" என்று மட்டும் கூறியிருக்கலாம்.
 அதென்ன 'சென்று' ஓதுவது?!
 ஒருவேளை அக்காலத்து பாடசாலை படிப்பு சொல்லிக் கொடுக்கும்போது திருக்குறளையும் கற்றுக் கொடுத்திருக்கலாம் இல்லையா?!
 அங்கு 'சென்று' ஓதமாட்டோம் என்று கூறியிருக்கலாம் இல்லையா?!
 அப்படியே சொல்ல நினைத்திருந்தால் "தீக்குறளைச் சென்றோதோம்" என்று 'ச்' போட்டு சொல்லியிருக்க வேண்டும்.
 என்றால் கோதை கூறிய பொருள் என்ன?!
 அவள் கூறவந்ததோ "தீக்குறளையைச் சென்றோதோம்" என்றுதான்.
 ஆனால் இரண்டாம் வேற்றுமைத் தொகையில் கூறிவிட்டால் அதாவது 'யை' தொக்கிவிட்டது.
 அதாவது மறைந்துவிட்டது.
 குறளை என்றால் என்ன?!
 "குறளை ஓதுதல்" என்றால் "கோல் மூட்டுதல்" அல்லது "புறம் பேசுதல்" என்று பொருள்.
 ஒருவரிடம் கேட்டதை அவருக்கு தெரியாமல் இன்னொருவரிடம் 'சென்று' கூறி கோள் மூட்டமாட்டோம் என்கிறாள் கோதை.
 பொதுவாக புறங்கூறுதல் பெண்களின் குணம் என்பார்கள்.
 கோதையும் 
"நாட்காலே நீராடி மையிட் டெழுதோம்;
 மலரிட்டுநாம் முடியோம்;
செய்யா தனசெய்யோம்;
தீக்குறளை சென்றோதோம்"
 என்று பெண்கள் செய்வதை தொடர்ச்சியாகக் கூறும்போதுதான் இதையும் சொல்கிறாள்.
 'குறளை' பற்றி பெருஞ்சித்திரனார் தனது "திருக்குறள் மெய்ப்பொருளுரை" யில் எழுதியுள்ளார்...
 ‘கடுக்கி ஒருவன் கடுங்குறளை பேசி'
- நாலடியார் 1891 
‘பொய்யே குறளை கடுஞ்சொல் பயனில் சொல்லென'
- மணிமேகலை 30:68 
‘குறளையுள் நட்பளவு தோன்றும்’ 
- திரிகடுகம் 371 
‘பொய்குறளை வெளவல் அழுக்காறு இவைநான்கும் 
ஐயந்தீர் காட்சியார் சிந்தியார்’
 - ஆசாரக்கோவை 381 
 ‘கடையாயார் முன்னின்று கூறும்
குறளை தெரிதலால் 
பின்னின்னா பேதையார் நட்பு'
- பழமொழி நாற்பது 13.34
 ‘பொருளல்லார் கூறிய பொய்குறளை’ 
- பழமொழி நாற்பது 1471 
‘காப்பாரே போன்றுரைத்த பொய்குறளை’ 
- பழமொழி நாற்பது 1932 
‘குறளை வெய்யோர்க்கு மறைவிரி எளிது'
 - முதுமொழிக்காஞ்சி 74 
‘பொய்யே குறளை கடுஞ்சொல் பயனில்சொல் நான்கும்
 மறலையின் வாயின வாம்’
 - ஏலாதி 28:3-4
 'கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும்'
- கந்த சஷ்டி கவசம்
 குறள் என்றால் குறுகிய என்று பொருள் உண்டு.
 திருக்குறள் குறுகத் தரித்ததால் அப்பெயர் பெற்றது.
 குறளை என்பது வேறு!
 "ஆண்டாள் ஒரு பாப்பாத்தி!
 அவள் தமிழர் வேதமான திருக்குறளை ஓதமுடியாது என்று கூறிவிட்டாள்"
 என்று ஒரு சிலர் பார்ப்பனரை தமிழர் இல்லை என்று திரித்துக் கூற முற்படுகின்றனர்.
 அந்த சதிகாரர்கள் பேச்சை நம்பவேண்டாம்.
பார்ப்பனர் தமிழரே!
This comment has been removed by the author.
ReplyDeleteகுறளை என்கிற தமிழ் வார்த்தைக்கு விளக்கம் நன்று.
ReplyDelete