Showing posts with label திருக்குறள். Show all posts
Showing posts with label திருக்குறள். Show all posts

Wednesday, 6 November 2019

குறளை

குறளை

குறள் வேறு! குறளை வேறு!

கோதை (அதாவது ஆண்டாள்) "திருக்குறள் ஓதமாட்டோம்" என்று சொல்ல நினைத்திருந்தால்

"தீக்குறளை ஓதோம்" என்று மட்டும் கூறியிருக்கலாம்.
அதென்ன 'சென்று' ஓதுவது?!

ஒருவேளை அக்காலத்து பாடசாலை படிப்பு சொல்லிக் கொடுக்கும்போது திருக்குறளையும் கற்றுக் கொடுத்திருக்கலாம் இல்லையா?!
அங்கு 'சென்று' ஓதமாட்டோம் என்று கூறியிருக்கலாம் இல்லையா?!

அப்படியே சொல்ல நினைத்திருந்தால் "தீக்குறளைச் சென்றோதோம்" என்று 'ச்' போட்டு சொல்லியிருக்க வேண்டும்.

என்றால் கோதை கூறிய பொருள் என்ன?!

அவள் கூறவந்ததோ "தீக்குறளையைச் சென்றோதோம்" என்றுதான்.

ஆனால் இரண்டாம் வேற்றுமைத் தொகையில் கூறிவிட்டால் அதாவது 'யை' தொக்கிவிட்டது.
அதாவது மறைந்துவிட்டது.

குறளை என்றால் என்ன?!

"குறளை ஓதுதல்" என்றால் "கோல் மூட்டுதல்" அல்லது "புறம் பேசுதல்" என்று பொருள்.

ஒருவரிடம் கேட்டதை அவருக்கு தெரியாமல் இன்னொருவரிடம் 'சென்று' கூறி கோள் மூட்டமாட்டோம் என்கிறாள் கோதை.

பொதுவாக புறங்கூறுதல் பெண்களின் குணம் என்பார்கள்.
கோதையும்
"நாட்காலே நீராடி மையிட் டெழுதோம்;
மலரிட்டுநாம் முடியோம்;
செய்யா தனசெய்யோம்;
தீக்குறளை சென்றோதோம்"
என்று பெண்கள் செய்வதை தொடர்ச்சியாகக் கூறும்போதுதான் இதையும் சொல்கிறாள்.

'குறளை' பற்றி பெருஞ்சித்திரனார் தனது "திருக்குறள் மெய்ப்பொருளுரை" யில் எழுதியுள்ளார்...

‘கடுக்கி ஒருவன் கடுங்குறளை பேசி'
- நாலடியார் 1891

‘பொய்யே குறளை கடுஞ்சொல் பயனில் சொல்லென'
- மணிமேகலை 30:68

‘குறளையுள் நட்பளவு தோன்றும்’
- திரிகடுகம் 371

‘பொய்குறளை வெளவல் அழுக்காறு இவைநான்கும்
ஐயந்தீர் காட்சியார் சிந்தியார்’
- ஆசாரக்கோவை 381

‘கடையாயார் முன்னின்று கூறும்
குறளை தெரிதலால்
பின்னின்னா பேதையார் நட்பு'
- பழமொழி நாற்பது 13.34

‘பொருளல்லார் கூறிய பொய்குறளை’
- பழமொழி நாற்பது 1471

‘காப்பாரே போன்றுரைத்த பொய்குறளை’
- பழமொழி நாற்பது 1932

‘குறளை வெய்யோர்க்கு மறைவிரி எளிது'
- முதுமொழிக்காஞ்சி 74

‘பொய்யே குறளை கடுஞ்சொல் பயனில்சொல் நான்கும்
மறலையின் வாயின வாம்’
- ஏலாதி 28:3-4

'கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும்'
- கந்த சஷ்டி கவசம்

குறள் என்றால் குறுகிய என்று பொருள் உண்டு.
திருக்குறள் குறுகத் தரித்ததால் அப்பெயர் பெற்றது.

குறளை என்பது வேறு!

"ஆண்டாள் ஒரு பாப்பாத்தி!
அவள் தமிழர் வேதமான திருக்குறளை ஓதமுடியாது என்று கூறிவிட்டாள்"
என்று ஒரு சிலர் பார்ப்பனரை தமிழர் இல்லை என்று திரித்துக் கூற முற்படுகின்றனர்.

அந்த சதிகாரர்கள் பேச்சை நம்பவேண்டாம்.

பார்ப்பனர் தமிழரே!

Monday, 22 October 2018

நான்மறை படைத்தது தமிழரே!

நான்மறை படைத்தது தமிழரே!

நான்மறை என்றாலே ரிக்,யஜூர், சாமம், அதர்வணம் என்று தவறாகப் பொருள் கொள்ளப்படுகிறது.

வடக்கே வேதங்கள் என்றாலே ரிக், யஜுர், சாமம் ஆகிய மூன்றுதான்.
ரிக் வேதத்திலும், மனுஸ்மிருதியிலும் வேதம் மூன்று (வேதம் த்ரியே) என்றே வருகிறது.
நாம் "நான்மறை" என்றழைப்பதுபோல வடவர் "த்ரிவேதா" என்றே அழைக்கின்றனர்.
(திரிவேதி எனும் வடயிந்திய பிராமணப் பட்டம் இதைக் குறிப்பதே)
‘அதர்வண வேதம்’ ஒரு வேதமாக ஒப்புக் கொள்ளப்பட்டது மிக மிகப் பிற்பட்ட காலத்தில்தான் என்று வரலாற்றாசிரியர் தத்தர் கூறுகின்றார். (R.C.Dutt, early Hindus clivilization Page 116)

உண்மையில் நான்மறை என்பது தமிழ் மறைகளான அறம், பொருள், இன்பம், வீடு ஆகியன ஆகும்.
--------------

கி.பி.1050 இல் இயற்றப்பட்ட திருவள்ளுவமாலை அந்தணர்கள் நான்மறையை எழுதிவைக்காமல் வாய்வழிக் கல்வியாகவே கற்பித்துவந்தனர்.
(குறுந்தொகை 156 பார்ப்பனர் ஓதுவதை 'எழுதாக் கற்பு' என்றே கூறுகிறது)
அந்த மறைகளை வள்ளுவர் முப்பாலாக எளிமையாக எழுத்தில் எழுதினார் என்று உள்ளது.

"ஆற்றல் அழியுமென்று அந்தணர்கள் நான்மறையைப்
போற்றி உரைத்து ஏட்டின் புறத்தில் எழுதார் - ஏட்டை எழுதி
வல்லுநரும் அல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச்
சொல்லிடினும் ஆற்றல் சோர்வின்று”

இதிலிருந்து வள்ளுவர் இயற்றிய திருக்குறள் அந்தணர் கற்பித்துவந்த நான்மறைதான் என்பது தெளிவாகிறது
----------------------

கி.பி. 7ஆம் நூற்றாண்டில் பார்ப்பனரான திருஞானசம்பந்தர் இதையே கூறியுள்ளார்.

"...சைவவேடம் தான் நினைந்து ஐம்புலனும்
அழிந்த சிந்தை அந்தணாளர்க்கு
அறம் பொருள் இன்பம் வீடு
மொழிந்த வாயான் முக்கணாதி மேயது முதுகுன்றே"

அதாவது அந்தணர்க்கு அறம், பொருள், இன்பம், வீடு சொல்லிக்கொடுத்த சிவனை போற்றுகிறார் அவர்
----------

கி.பி. 3 ஆம் நூற்றாண்டு வாக்கில் எழுதப்பட்ட சிலப்பதிகாரம் மறை ஓதும் பார்ப்பனரை 'வண்டமிழ் மறையோர்' என்று குறிப்பிடுகிறது.

இது பற்றிய கட்டுரைக் காதை பாடல் வருமாறு,

"வலவைப் பார்ப்பான் பராசர னென்போன்
குலவுவேற் சேரன் கொடைத்திறங் கேட்டு
வண்டமிழ் மறையோற்கு வானுறை கொடுத்த
திண்டிறல் நெடுவேற் சேரலற் காண்கெனக்
காடும் நாடும் ஊரும் போகி
நீடுநிலை மலயம் பிற்படச் சென்றாங்கு"

இதன் பொருள்,
பார்ப்பனரான பராசரன் என்பவர் வளமான தமிழ்மறைகளில் வல்லவரான மறையோருக்கு வானளவு பொருள் கொடுத்து உதவிய, உறுதியான வளமிகுந்த நீண்ட வேலுடைய, சேரனைக் காண காடு, நாடு, ஊர் என அனைத்தையும் கடந்து உயர்ந்த பொதியமலையும் பின்னால் இருக்கும்படி (கடந்து) வெகு தூரம் சென்று அவனைச் சந்தித்தார்.

இதிலிருந்து மறைகள் தமிழில் இருந்தது என அறியலாம்.
அவற்றை ஓதிய பார்ப்பனருக்கு சேரன் கொடையளித்ததைக் கேட்டு பராசரன் எனும் பார்ப்பனரும் அவனை நாடிச் சென்றதையும் அறியலாம்.
-------------
  தொல்காப்பியம் (பிறப்பியல் 20) கூறுகிறது,

"..வளியிசை யரில்தப நாடி
அளபிற் கோடல் அந்தணர் மறைத்தே"

அதாவது ஒரு எழுத்தின் உச்சரிப்பு எப்படி இருக்கவேண்டும் என்பதை அந்தணர் ஓதும் மறைகளை வைத்து முடிவு செய்யுமாறு கூறுகிறது.

பழமையான தமிழின் முதன்மையான இலக்கண நூலே அந்தணரின் ஓதும் உச்சரிப்பை வரையறையாகக் கூறுகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
------------

என்றால் சமஸ்கிருதம் எப்படி ஓதப்படும் மொழியாக ஆனது?!

வேதங்கள் சமஸ்கிருதத்தில் இருந்தன.
அதற்கு பொருளே தெரியாமல் இருந்ததால் யாரும் அவற்றை விரும்பவில்லை.

(நம்மாழ்வார் இயற்றிய நான்கு பாசுர நூல்களான திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி ஆகியன நால்வேதத்தின் சாரமாக இருப்பதாகக் கூறி அவரை 'வேதம் தமிழ் செய்த மாறன்' என்று மதுரகவியாழ்வார் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் மேற்கண்ட பாசுர நூல்களுக்கும் சமஸ்கிருத வேதங்களுக்கும் பொருத்தம் இல்லை)

இன்று நான்கு வேதங்களுக்கு கிடைக்கும் ஒரே விளக்க உரை சாயனர் எனும் கன்னடர் எழுதிய விளக்க உரை மட்டுமே!

இவர் யாரென்றால் வேதாரண்யரின் உடன்பிறந்தவர் ஆவார்.

வேதாரண்யர் யார்?!

கிபி 14 ஆம் நூற்றாண்டில் சிருங்கேரி மடத்தின் 12வது சங்கராச்சாரியார் வேதாரண்யர்.
கன்னடரான இவரும் வடமொழியில் சிறந்த புலவர்.
சம்ஸ்கிருதத்தில் பல படைப்புகளைத் தந்தவர்.

இவரே தமிழகத்தில் வடுகர் ஆட்சி அமையக் காரணமானவர்.
பாண்டியப் பேரரசு வாரிசுரிமைப் போரில் சிக்கியிருந்தபோது டெல்லி சுல்தான்கள் பாண்டியரை வீழ்த்தி மதுரை வரை முன்னேறினர்.
அப்போது மதுரை சுல்தானிய படைத்தளபதிகளான ஹரிஹர, புக்கரை மனம் மாற்றி மதுரை மீது ஏவியர் வேதாரண்யரே!
அவர்கள் துருக்கியரை விரட்டி மதுரையைக் கைப்பற்ற காரணமானவர்.
விஜயநகர பேரரசு க்கு அடித்தளமிட்டவர்.

கோயில்கள் பிராமண மயமானதர்க்கும் சமஸ்கிருத மயமானதற்கும் மூல காரணம் விஜயநகர பேரரசு மற்றும் அதன் வழிவந்த நாயக்கர் அரசுகளே!

தமிழகத்து நாயக்கர் ஆட்சியை சமஸ்கிருதத்தின் பொற்காலம் என்றே கூறலாம்.

சோழர் காலத்தில் தாய்லாந்து சென்ற தமிழ்ப் பார்ப்பனர் இன்றும் தமிழில் ஓதிதான் அந்நாட்டு மன்னருக்கு முடிசூட்டுகின்றனர்.

ஆக தமிழ் மறைகளை புறக்கணித்து சமஸ்கிருதத்தைப் புகுத்தியது தமிழரல்லாத ஆட்சியே!
----------
பெரும்பான்மையான தகவல்களுக்கு நன்றி: பாண்டிய ராசன் சட்டத்தரணி
-----------

Thursday, 24 November 2016

தமிழைப் பழித்த ஈ.வே.ரா

தமிழைப் பழித்த ஈ.வே.ரா

 "தமிழ்த்தாய் பாலை கறந்து எடுத்து ரசாயனப் பரிசோதனை ஸ்தாபனத்தில் பரீட்சித்து பார்த்தால்,
உடலுக்கு உரம் ஊட்டும் சாதனம் அதில் என்னென்ன இருக்கின்றது கண்டுபிடித்து சொல்ல சொன்னால்
அப்போது தெரியும் தாய்ப்பால் யோக்கியதை!"
- ஈ.வே.ரா, தாய்ப் பால் பைத்தியம் (நூல்)

‘தமிழ் மொழி 3000-4000 ஆண்டுகளுக்கு முந்தி ஏற்பட்ட மொழி’ என்பதை, தமிழின் பெருமைக்கு ஒரு சாதனமாகக் கொண்டு பேசுகிறார்கள்.
நானும் தமிழ் 'காட்டுமிராண்டி மொழி' என்பதற்கு அதைத்தானே முக்கியக் காரணமாகச் சொல்கிறேன்
-ஈ.வே.ரா, தாய்ப் பால் பைத்தியம் (நூல்)

தமிழ் படித்தால் பிச்சைகூட கிடைக்காது.
தமிழ் படித்து பிச்சை எடுப்பதைத் தவிர வேறு உயிர் வாழ ஒன்றுக்கும் பயன்படவில்லை என்பதோடு,
அதற்காகச் செலவு செய்த காலத்தை வேறு துறையில் செலவிட்டால், வாழ்வில் பயன் ஏற்பட்டிருக்கும் என்பதை ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் கற்ற ஓர் அனுபவப் புலவர் பாடியுள்ளார்.
- ஈ.வே.ரா, விடுதலை (27.11.1943)

"வள்ளுவர் குறளையும், அந்தப்படியே அப்போது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன்.
எல்லாவற்றையும் குறை சொல்லும் போது பலர் என்னிடம், ‘எல்லாம் போய் விட்டால் நமக்கு எதுதான் நூல்?’ என்று கேட்பார்கள்.
நான், இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது. அதை எடுத்து விடு’ என்று கூறினால்
‘அந்த இடத்தில் என்ன வைப்பது என்றா கேட்பது..?' என்று பதில் கூறுவேன்"
-ஈ.வே.ரா, விடுதலை (1.6.1950)

உயர்தர படிப்புகளையெல்லாம் கல்லூரியிலும் கூட தமிழிலேயே ஆக்குகிறோம் என்றால், மக்களை முட்டாளாக்குகிறோம் என்றுதானே பொருள்?
இப்படியான நிலை ஏற்பட்டால் இது முக்கொலை என்றுதானே ஆகும்?
தமிழ் மொழியும் கெட்டு,
பாட விஷயமும் பொருளும் கெட்டு,
ஆங்கிலமும் கெடும்படி ஆவதால்
இது மூன்று கொலை செய்ததாகத்தானே முடியும்?
- ஈ.வே.ரா, விடுதலை (5.4.1967)

தேவடியாள் எப்படி பார்ப்பதற்கு அலங்காரமாய் இருப்பாளோ, ஆனால் உள்ளே போய் பார்த்தால் உள்ளமெல்லாம் வஞ்சகம் நிறைந்தும்,
உடலெல்லாம் நோய்கொண்டும்,
வளையல் அணிந்து மக்களை ஏய்த்துப் பிழைப்பதாகக் காணப் படுகின்றதோ அது போலத்தான் இந்த சிலப்பதிகாரமும் ஆகும்.
- ஈ.வே.ரா, விடுதலை (28.7.1951)

"தமிழ் நூல்களே அதிக கேடுபயப்பவை.
தமிழில் படிக்கும் கம்பராமாயணத்தால் ஏற்பட்ட, ஏற்படும் முட்டாள்தனமும், கேடும்
இந்தி படிக்கும்துளசிதாஸ் ராமாயணத்தாலோ,
வங்காள ராமாயணத்தாலோ,
வால்மீகி ராமாயணத்தாலோ ஏற்படாது என்பது உறுதி"
- ஈ.வே.ரா, விடுதலை (8.3.1965)

"தமிழ்கெட்டு விடுமே என்கின்ற எண்ணத்தில் நான் இந்தியை எதிர்க்கவில்லை.
தமிழ்கெடுவதற்கு தமிழில் எதுவும் மீதி இல்லை.
புலவர்களே தமிழைக் கெடுத்துவிட்டார்கள்"
- ஈ.வே.ரா, விடுதலை (3.3.1965)

Wednesday, 20 July 2016

ஐயன் வள்ளுவனை அறிவிலி வடவன் ஏற்றால்தான் வியப்பு

ஐயன் வள்ளுவனை அறிவிலி வடவன் ஏற்றால்தான் வியப்பு

ரஷ்யரான லியோ டால்ஸ்டாய்க்கு தெரிந்திருந்த வள்ளுவரின் புகழ்,

திருவள்ளுவருக்கு வெள்ளைக்கார அரசு சார்பாக தங்கநாணயம் வெளியிட்ட ஆங்கிலேயர் எல்லீசு துரைக்கு புரிந்த வள்ளுவனின் புகழ்,
உலகில் சிறந்த 10 சிந்தனையாளர்களில் இடம்கொடுத்து சிலை நிறுவிய சிங்கப்பூர் அரசுக்குத் தெரிந்திருந்த வள்ளுவனின் புகழ்,

எந்த பேரழிவையும் தாங்கும் அனைத்துலக பாதுகாப்புப் பெட்டகத்தில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ள
உலகிலேயே அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட மூன்றாவது நூல் என்ற பெருமை பெறுமளவுக்கு உலகமெல்லாம் படிக்கும் நூலை இயற்றிய வள்ளுவனின் புகழ்,

அறிவிலிகளான வடஹிந்தியர்களுக்குப் புரிந்தால்தான் வியப்பு.

ஹிரித்வார் என்ன? கங்கை என்ன?

அதையும் தாண்டி இமயத்தில் வாழும் 'கவரிமா' உடலில் மயிர் இல்லாவிட்டால் குளிரில் இறந்துவிடும் என்ற செய்தி கூட குறளில் வருகிறது.

இமயம் வரை பரவியிருந்தது வள்ளுவர் வாழ்ந்த தமிழர்நாடு.

Tuesday, 21 June 2016

மாண்புறு.எல்லீசு

மாண்புறு.எல்லீசு துரை
திருவள்ளுவருக்காகத் தங்கக்காசும், திருக்குறளில் கல்வெட்டும் பதித்த வெள்ளையர்

http://www.varalaaru.com/default.asp?articleid=539

14 ஜூன் 2014

Tuesday, 9 February 2016

பாம்பு நிலவை விழுங்குமோ?

பாம்பு நிலவை விழுங்குமோ?

நேற்று நான் இட்ட விந்தணு அண்டத்துடன் சேரும் சென்னிமலை கோவில் சிற்பத்தை சிலர் பாம்பு நிலவினை விழுங்கும் காட்சி என்கின்றனர்.

அதற்காக அவர்கள் காட்டும் சான்று

கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று
(குறள் 1146)

அதாவது காதலி கூறுகிறாள்
தன் காதலனை அவள் ஒருநாள்தான் சந்தித்தாளாம்,
ஆனால் அதை நிலவை விழுங்கிய பாம்பு போல அது பரவி ஊரே  புறம் பேசுகிறாம்.

இதற்கு உரை எழுதிய அனைவரும் சற்றும் சிந்திக்காமல் இதுபோலவே எழுதியுள்ளனர்.

பாம்பு நிலவை விழுங்கும்?
வள்ளுவர் என்ன அவ்வளவு முட்டாளா?

இங்கே அரவு என்பது மேகத்தைக் குறிக்கிறது.

அரவு நுங்கு மதியின் நுதல் ஒளி
(அகநானூறு 134)

மழைதரும் கருமேகங்கள் சூழ்ந்ததால் நிலவின் ஒளி மங்கியது போல
அழுகையை வரவைக்கும் சோகத்தால் கண்களின் ஒளி மறைந்ததாம்.

இதே போல 'பாம்பு' என்பதும் மேகத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டு உள்ளது

பாம்பு ஊர் மதியின் நுதல் ஒளி
(நற்றிணை 128)

வெள்ளை நிற எருதை அடக்கும் கரிய நிற வீரனை வருணிக்கும் கலித்தொகை (135) 'அரவின்வாய்க் கோட்பட்டுப் போதரும் பால்மதியும்' என்கிறது.

நிலாவை மேகம் மறைக்கும் காட்சியை பல இடங்களில் உவமையாகப் பயன்படுத்தியுள்ளனர் சங்கத் தமிழர்.

அரவு நுங்கு மதியின்
(அகநானூறு 115)
பாம்பு சேர் மதி போல
(கலித்தொகை 15)
பெயல் சேர் மதி போல
(கலித்தொகை 115)
திங்கள் அரவு உறின்
(கலித்தொகை 140)
அரவு நுங்கு மதியுனுக்கு
(குறுந்தொகை 395)
அரவு செறி உவவு மதியென
(பரிபாடல் 10)
பாம்பு ஒல்லை மதியம் மறைய
(பரிபாடல் 11)
மதிசேர் அரவின் மானத் தோன்றும்
(சிறுபாணாற்றுப்படை 185)

நாகம் என்பது மேகத்திற்கு பயன்பட்டுள்ளது

நீடுநாக மூடுமேக மோட
(கம்பராமாயணம் கலன்காண்.37)
எம்மை நாக மேலிருத்து
(கந்த புராணம் திருவிளை. 99)

மேகமும் பாம்பைப் போல ஊர்ந்து செல்லும்
பாம்பு நாக்கைப் போல மின்னை வெளியிடும்

இதை தவறாகப் புரிந்துகொண்ட எவனோ பாம்புதான் நிலாவை விழுங்குகிறது என்று தமிழனே கூறிவிட்டான் அது உண்மையாகத்தான் இருக்கும் என்று நம்பி
பாம்பு நிலாவை விழுங்குவதால் சந்திர கிரகணம் வருகிறது என்று புராணம் எழுதி
ராகு கேது போன்றவற்றை படைத்து அதை வைத்தே ஜாதகமும் எழுதிவிட்டான்.

நன்றி: திங்களைப் பாம்பு கொண்டற்று
_பொன்.சரவணன் thiruttham. blogspot

Wednesday, 6 January 2016

பார்ப்பானின் பிறப்பொழுக்கம்

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் *பார்ப்பான்*
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்
(குறள் 134)

பார்ப்பனன் தான் கற்றதை மறந்துவிட்டால் திரும்ப ஓதி நினைவுவைத்துக் கொள்ளமுடியும்.
ஆனால் அவனது பிறப்பின் சிறப்பு குன்றிவிடும்
என்று சிலர் தவறாக பொருள் கொள்கின்றனர்.

'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற ஐயன் வள்ளுவன்
பார்ப்பனரின் பிறப்பை தனியாகக் குறிப்பிடுவாரோ?!

இதை விளங்க இதற்கு முந்தைய குறளை இப்போது பார்ப்போம்

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்
(குறள் 133)

அதாவது ஒழுக்கத்துடன் இருப்பதே வாழ்க்கை (குடிமை)
ஒழுக்கமில்லாமை(இழுக்கம்) நமது பிறப்பை இழிந்த பிறப்பு ஆகிவிடும்.

இங்கே பிறப்பு என்பது மாந்தனாய் பிறந்ததைக் குறிக்கிறது.

அதாவது ஒழுக்கமாக இருக்காவிட்டால் மாந்தராய்(மனிதராய்)ப் பிறந்ததற்கு பொருளே(அர்த்தமே) இல்லை.

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்;
பிறப்பு- ஒழுக்கம்குன்றக் கெடும்

முதலில் கண்ட குறளை இவ்வாறு படித்தால் பொருள் விளங்கும்.

பார்ப்பனன் வேதத்தை(மறைகளை) மறப்பது இழிவன்று.
அவன் ஒழுக்கம் தவறுதலே இழிவு.