பாம்பு நிலவை விழுங்குமோ?
நேற்று நான் இட்ட விந்தணு அண்டத்துடன் சேரும் சென்னிமலை கோவில் சிற்பத்தை சிலர் பாம்பு நிலவினை விழுங்கும் காட்சி என்கின்றனர்.
அதற்காக அவர்கள் காட்டும் சான்று
கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று
(குறள் 1146)
அதாவது காதலி கூறுகிறாள்
தன் காதலனை அவள் ஒருநாள்தான் சந்தித்தாளாம்,
ஆனால் அதை நிலவை விழுங்கிய பாம்பு போல அது பரவி ஊரே புறம் பேசுகிறாம்.
இதற்கு உரை எழுதிய அனைவரும் சற்றும் சிந்திக்காமல் இதுபோலவே எழுதியுள்ளனர்.
பாம்பு நிலவை விழுங்கும்?
வள்ளுவர் என்ன அவ்வளவு முட்டாளா?
இங்கே அரவு என்பது மேகத்தைக் குறிக்கிறது.
அரவு நுங்கு மதியின் நுதல் ஒளி
(அகநானூறு 134)
மழைதரும் கருமேகங்கள் சூழ்ந்ததால் நிலவின் ஒளி மங்கியது போல
அழுகையை வரவைக்கும் சோகத்தால் கண்களின் ஒளி மறைந்ததாம்.
இதே போல 'பாம்பு' என்பதும் மேகத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டு உள்ளது
பாம்பு ஊர் மதியின் நுதல் ஒளி
(நற்றிணை 128)
வெள்ளை நிற எருதை அடக்கும் கரிய நிற வீரனை வருணிக்கும் கலித்தொகை (135) 'அரவின்வாய்க் கோட்பட்டுப் போதரும் பால்மதியும்' என்கிறது.
நிலாவை மேகம் மறைக்கும் காட்சியை பல இடங்களில் உவமையாகப் பயன்படுத்தியுள்ளனர் சங்கத் தமிழர்.
அரவு நுங்கு மதியின்
(அகநானூறு 115)
பாம்பு சேர் மதி போல
(கலித்தொகை 15)
பெயல் சேர் மதி போல
(கலித்தொகை 115)
திங்கள் அரவு உறின்
(கலித்தொகை 140)
அரவு நுங்கு மதியுனுக்கு
(குறுந்தொகை 395)
அரவு செறி உவவு மதியென
(பரிபாடல் 10)
பாம்பு ஒல்லை மதியம் மறைய
(பரிபாடல் 11)
மதிசேர் அரவின் மானத் தோன்றும்
(சிறுபாணாற்றுப்படை 185)
நாகம் என்பது மேகத்திற்கு பயன்பட்டுள்ளது
நீடுநாக மூடுமேக மோட
(கம்பராமாயணம் கலன்காண்.37)
எம்மை நாக மேலிருத்து
(கந்த புராணம் திருவிளை. 99)
மேகமும் பாம்பைப் போல ஊர்ந்து செல்லும்
பாம்பு நாக்கைப் போல மின்னை வெளியிடும்
இதை தவறாகப் புரிந்துகொண்ட எவனோ பாம்புதான் நிலாவை விழுங்குகிறது என்று தமிழனே கூறிவிட்டான் அது உண்மையாகத்தான் இருக்கும் என்று நம்பி
பாம்பு நிலாவை விழுங்குவதால் சந்திர கிரகணம் வருகிறது என்று புராணம் எழுதி
ராகு கேது போன்றவற்றை படைத்து அதை வைத்தே ஜாதகமும் எழுதிவிட்டான்.
நன்றி: திங்களைப் பாம்பு கொண்டற்று
_பொன்.சரவணன் thiruttham. blogspot
Showing posts with label திருத்தல். Show all posts
Showing posts with label திருத்தல். Show all posts
Tuesday, 9 February 2016
பாம்பு நிலவை விழுங்குமோ?
Thursday, 10 July 2014
ஐனகனமன என்று ஆங்கிலேயனை வாழ்த்து

எழுந்து நில்
ஐன கன மன என்று வெள்ளையனை வாழ்த்து
()))((()()))((()()))((()()
இந்தியர் என்கிற என்றும் இல்லாத உணர்வுடன் பல்வேறு தேசிய இனங்கள் எழுந்து நின்று
ஜன கன மன அதிநாயக ஜெயஹே
பாரத பாக்ய விதாதா
என்று வெள்ளைக்காரனைத்தான் போற்றிப்பாடுகின்றனர்;
ஆம்; இந்தப்பாடல் யாரைப் புகழ்கிறது? இதன் பொருள் என்ன? என்று தெரிந்தால் கூனிக்குறுகிப் போவீர்கள்;
1911 ஆம் ஆண்டு டிசம்பர் 25 அன்று கல்கத்தா வந்தார் இங்கிலாந்து மன்னர் ஐந்தாம் ஜார்ஜ்; ரவீந்திரநாத் தாகூரே நேரடியாகச் சென்று வரவேற்று அவரைப் பலர் முன்னிலையில் தானே தனது வாயால் புகழ்ந்து பாடிய பாட்டுதான் இந்த ஜன கன மன என்ற பாடல்; அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது எப்படி என்று புரிகிறதா? அன்றைய காலத்தில் நைட்ஹுட் என்ற பட்டம் ஆங்கில அடிமைகளுக்கு வழங்கப்பட்டது நினைவுவருகிறதா?
இன்றைய இந்தியாவின் தேசியகீதத்தின் பொருள் பின்வருமாறு;
ஐன கன மன அதிநாயக ஜயஹே
*(மக்களின் இதயங்களில் பெருமையாக வீற்றிருக்கும் உயர்ந்த தலைவனே நீ வாழ்க)
பாரத பாக்ய விதாதா
*(பாரத நாட்டின் தலைவிதியை நீ எழுதுகிறாய்)
பஞ்சாப ஸிந்து குஜராத்த மராட்டா திராபிட உத்கல பங்கா
*((பஞ்சாப், சிந்து(பாகித்தானில் உள்ளது), குஜராத்,மகாராசுட்டிரா, திராவிடம்(தென்னிந்தியாவாம்
விந்த்ய ஹிமாசல யமுனா கங்கா உச்சல ஜலதி தரங்கா
*(விந்தியமலை இமயமலைகளில் அலைகள் பரப்பியபடி ஒடும் யமுனையும் கங்கையும்)
தப சுப நாமே ஜாகே
*(உன் புனிதப்பெயரைச் சொல்லியே துயிலெழுகின்றன)
தப சுப ஆஸிஸ மாங்கே
*(உனக்காக புனித அருள் வேண்டுகின்றன-இந்த வரி இப்பாடல் இறைவனைப் போற்றுகிறது என்று கூறும் சிலரை தோலுரிக்கிறது)
காஹே தப ஜெய காதா
*(உன் வெற்றியையே போற்றவும் பாடவும் செய்கின்றன)
ஜன கன மங்கள தாயக ஜெயஹே
பாரத பாக்ய விதாதா
*(மக்களின் இதயங்களின் வீற்றிருக்கும் நீயே அவர்களுக்கு நற்குணங்களைப் பகிர்த்தளித்தவனே! நீதான் பாரதத்தின் விதியை எழுதுபவன்)
இதன் பிறகு அரசனின் மணிமுடியையும் அரியணையையும் கூச்சநாச்சமேயில்லாமல் புகழும் வரிகள் நீக்கப்பட்டு
ஜெய ஹே ஜெயஹே ஜெயஜெய ஹே
என்று மன்னன் ஜார்ஜை வாழ்க வாழ்க என்று வாழ்த்தி முடிகிறது அந்தப் பாடல்.
இதுதான் இந்தியா! இந்த எளவுதான் நமது தேசியப்பாடல்! இந்த அசிங்கம்தான் தமிழர் உட்பட பல தேசிய இனங்கள் மீது நாட்டுப்பற்று என்று தலையில் உட்கார வைக்கப்பட்டுள்ளது;
இதுவாவது பரவாயில்லை;
நம் தமிழ்த்தாய் வாழ்த்திலும்
"எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளி
துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன்
இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும்
கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல
வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந்
தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத்
திறம்வியந்து "
என்ற ஆரிய, திராவிடத்தை விட தமிழை உயர்த்திப் பிடிக்கும் வரிகள் நீக்கப்பட்டு நம் நெத்தியில் ஒட்டப்பட்டுள்ளது.இதைப் படிக்கும் நீங்கள் இவ்வளவு நாள் இது தெரியாதே என்று கூறினால் எவ்வளவு முட்டாளாக்கப் பட்டுள்ளோம் என்பதை உணர்வீர்களாக..
https://www.facebook.com/photo.php?fbid=374583592645300&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739
Subscribe to:
Posts (Atom)