Monday, 14 April 2025
தமிழ்ப் புத்தாண்டு குழப்பத்திற்குத் தீர்வு
Monday, 16 October 2017
இலக்கியங்களில் மழை பற்றிய அறிவியல்
இலக்கியங்களில் மழை பற்றிய அறிவியல்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
பனிகடல் பருகி வலன்ஏர்பு
கோடு கொண்டெழுந்த கொடுஞ்செலவு எழிலி
பெரும்பெயல் பொழிந்த
- முல்லைப்பாட்டு 1-6
இப்பாடலில் மேகத்தின் இயக்கம் அறிவியல் முறையில் விளக்கப்பட்டுள்ளது.
கடலில் நீர் பருகி வலப்புறமாக எழுந்த மேகமானது நெடுந்தொலைவு பயணித்து மலையில் தங்கி பெருமழையை பொழிந்தது
------------------
பனித்துறைப் பெருங்கடல் இறந்து நீர் பருகிக்
காலை வந்தன்றால் காரே
- அகநானுறு183
குளிர்ந்த கடலில் நீரை மேகங்கள் குடிப்பது பற்றி வருகிறது
-----------
இரு விசும்பு அதிர மின்னி
கருவி மாமழை கடல் முகந்தனவே
- நற்றிணை 329:11
கருமையான வானம் பெரும் சத்தத்துடன் இடி இடித்து மின்னி மழைக்குரிய மேகக் கூட்டத்தோடு கடலில் சென்று நீர் முகந்துவரும் கார்காலம்.
(அதாவது மேகம் கடலில் இருந்து நீரை எடுத்து மழையாக பொழியும் மழைக்காலம்)
---------------
மின்னு வசிபு
அதிர்குரல் எழிலி முதிர்கடன் தீர
கண் தூர்பு விரிந்த கனை இருள் நடுநாள்
- நற்றிணை 228:1
மின்னலுடன் முழங்கும் பெரும் சத்தத்துடன் நீர் நிறைந்த மேகம் பூமியிலிருந்து பெற்ற கடன் தீருமாறு மழையை கண்தெரியாத இருளடைந்த நடு இரவில் பொழியும்.
--------------------
இன் நீர்த்
தடங் கடல் வாயின் உண்டு சில் நீர்
- நற்றிணை 115:3
மேகங்கள் இனிய நீரையுடைய பெரிய கடலகத்து வாயினால் உண்டு, எஞ்சிய கடலின் நீர் சிறிது என்னும்படி கொணர்ந்தன.
(இது கடல் நீரை மேகங்கள் கொள்வதை சற்று மிகைப்படுத்திக் கூறுகிறது.
அதாவது பாதிக்கும் மேல் உறிஞ்சிவிட்டதாம்!)
-----------
நன்னுதல் அரிவை காரினும் விரைந்தே
- ஐங்குறுநூறு 492
மேகம் காற்றில் அடித்துச் செல்லப்படுவதை கூறுகிறது
-----------
மேகங்களின் நகர்வு பற்றியும் குறித்துள்ளனர்,
வலனேர்பு அங்கண் இரு விசும்பதிர
ஏறொரு பெயல் தொடங்கின்றே வானம்
- ஐங்குறுநூறு 469
பணை முழங்கு எழிலி பெளவம் வாங்கி
தாழ் பெயற் பெருநீர் வலன் ஏர்பு வளைஇ
- அகநானூறு 840
கொண்டல் மாமழை குடக்கு ஏர்பு குழைத்த
- நற்றிணை 140
கடல் முகந்து கொண்ட காமஞ் சூல்
மாமழை சுடர் நிமிர் மின்னொடு வலன் ஏர்பு
- அகநானூறு 43
போன்ற பாடல்கள் கடலில் உருவான மழைமேகம் மேற்கு நோக்கி (வலப்பக்கமாக) நகர்வதாக குறித்துள்ளனர்.
அதாவது வடகிழக்குப் பருவக்காற்று பற்றி கூறப்பட்டுள்ளது.
--------------
நளி கடல் முகந்து செறிதக இருளி
கனை பெயல் பொழிந்து
- நற்றிணை 289
கடல் நீரைக் குடித்து செறிவு (அடர்த்தி) அதிகமான மேகம் மழை பொழிவதாகக் கூறுகிறது இப்பாடல்
-------------
கடுஞ்சூல் மகளிர் போலநீர் கொண்டு
விசும்பிவர் கல்லாது தாங்குபு புணரிச்
செழும்பல் குன்றம் நோக்கிப்
பெருங்கலி வான மேர்தரும் பொழுதே
- குறுந்தொகை - 287
அதாவது நிறைமாத சூலி போல நீரைச் சுமந்துகொண்டு எடையால் மேலே எழமுடியாமல் தாழ்ந்து பறந்து மழைமேகங்கள் மலையை நோக்கி செல்கின்றன என்று கூறுகிறது.
----------
வெஞ்சுடர் கரந்த காமஞ்சூல் வானம்
நெடும்பல் குன்றத்துக் குறும்பல மறுகி
தாஇல் பெரும்பெயல் தழைஇய யாமத்து
- நற்றிணை 261
வளிபொரு மின்னொடு வான்இருள் பரப்பி
விளிவுஉன்று கிளையொடு மேல்மலை முற்றி
தளிபொழி சாரல் ததர்மலர் தாஅய்
- பதிற்றுப்பத்து 12
மேகங்கள் மலையில் மோதி மழைபொழிவதைக் கூறுகிறது
----------
பெய்துபுலந் திறந்த பொங்கல் வெண்மழை
எஃகுஉறு பஞ்சித் துய்ப்பட் டன்ன
- அகநானுறு 217
பெய்து தீர்த்த மேகம் வெண்மையான மென்பஞ்சுபோல ஆகிவிடும் என்று கூறுகிறது.
-----------
மேற்கண்டவற்றை ஆராய்ந்தால் சங்ககாலத்திலேயே தமிழர்கள் அனைவரும் மழை எவ்வாறு பொழிகிறது என்று அறிந்திருந்ததை உணரமுடிகிறது.
பெயிலுலந் தெழுந்த பொங்கல் வெண்மழை அகலிரு விசும்பிற் றுவலை கற்ப
- நெடுநெல்வாடை 20
மழை பெய்துவிட்ட வெண்மையான மேகம் மேலெழுந்து சாரலை ஏற்படுத்துவது பற்றி வருகிறது
-----------------------
மழைப்பொழிவை முன்பே கணித்த குறிப்புகளும் உண்டு,
பொய்யா எழிலி பெய்விட நோக்கி
முட்டைக் கொண்டு வற்புலஞ் சேரும்
சிறு நுண் ணெறும்பின்
- புறநானூறு 173
எறும்புகள் தம் முட்டைகளை எடுத்துக்கொண்டு சற்று மேட்டு நிலத்துக்குச் சென்றால் மழை பெய்யவுள்ளதாக பொருள்
-----------
இலங்குகதிர் வெள்ளி தென்புலம் படரினும்
- புறநானூறு 35:7
தென்றிசை மருங்கின் வெள்ளி ஓடினும்
- புறம் 117:2
வசையில் புகழ் வயங்கு வெண்மீன்
திசை திரிந்து தெற்கு ஏகினும்
தற்பாடிய தனி உணவில்
புட்டேம்பப் புயன்மாறி
வான்பொய்ப்பினும் தான் பொய்யா
மலைத்தலைய கடற்காவிரி
- பட்டினப்பாலை 1-6
மேற்கண்டவை உணர்த்தும் பொருள் யாதெனில்,
வானத்தில் வெள்ளி கோள் வடக்கு திசை நோக்கிச் சென்றால் மழைவளம் அதிகமாகும் என்றும்
தென்திசை நோக்கிச் சென்றால் மழைவளம் குறையும்
(ஆனாலும் காவிரி பொயக்காது)
----------
அழல் சென்ற மருங்கின் வெள்ளி ஓடாது
மழை வேண்டு புலத்து மாரி நிற்ப
- பதிற்றுப்பத்து 13:25
செவ்வாய்க் கோள் சென்ற வழியில் வெள்ளி கோள் செல்லாததால் மழை தேவையான இடங்களிலெல்லாம் உன் நாட்டில் மழை பெய்கிறது.
(அதாவது வானில் கோள்கள் நகர்வு மூலம் மழையை கணித்துள்ளனர்)
----------
பழமையான மொழியான தமிழில் அறிவியல் இல்லை என்று சில பிறமொழி வந்தேறிகள் பிதற்றுகின்றனர்.
மேலே உள்ள மழை பற்றிய குறிப்புகள் மட்டுமே.
இதேபோல பல்வேறு விடயங்களை தமிழ் இலக்கியம் அறிவியல் பார்வையுடன் பதிவுசெய்துள்ளது.
வேறு எந்த மொழியினது தொடக்ககால இலக்கியத்திலும் இத்தகைய அறிவியல் பார்வை இருப்பதாகத் தெரியவில்லை.
Friday, 14 April 2017
தமிழ்ப் புத்தாண்டு குழப்பத்திற்குத் தீர்வு
தமிழ்ப் புத்தாண்டு குழப்பத்திற்குத் தீர்வு
தமிழர்களிடம் புத்தாண்டு கொண்டாடும் வழக்கம் இல்லை.
இருந்தாலும் புத்தாண்டு என்பது இருந்திருக்க வேண்டும்.
இந்திய துணைக்கண்டம் முழுவதும் பரவி வாழ்ந்த இனமல்லவா?
அதனால் பல நாட்காட்டிகள் நடைமுறையில் இருந்தன.
கதிரவனின் இயக்கத்தைப் பின்பற்றி ஒரு நாட்காட்டி
நிலவின் இயக்கத்தைப் பின்பற்றி ஒரு நாட்காட்டி.
விண்மீன்களைப் பின்பற்றி ஒரு நாட்காட்டி.
தற்போது தமிழ் மாதங்களும் பஞ்சாங்க ஆண்டுகளும் 15ம் நூற்றாண்டுக்குப் பிறகு அதாவது தெலுங்கர் ஆட்சியில் சமஸ்கிருதத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
ஹேவிளம்பி என்பது தமிழில் பொற்றடை என்று வழங்கப்பட்டது.
இதற்கு சான்று 'விவேக சிந்தாமணி' என்ற நூல் 1400 களில் எழுதப்பட்டது,
அதில் 60 ஆண்டுகளும் (தமிழில்) வருமாறு ஒரு பாட்டு உள்ளது.
ஆக நாரதர் - கிருஷ்ணர் ஆபாசக்கதையை (அதை எழுதியதும் வந்தேறிகளே) திராவிடம் மூலம் பரப்பி அதை ஆரியப் புத்தாண்டு ஆக்கி
தமிழர்கள் தற்போதும் பின்பற்றும் (சமஸ்கிருத மயமாக்கப்பட்ட) தமிழ் (கதிரவன்) நாட்காட்டியை நாமே எதிர்க்குமாறு செய்து நம்மை முட்டாளாக்கி வருகின்றனர்.
நாம் எந்த நாட்காட்டியைப் பின்பற்றவேண்டும்?
எது நமது புத்தாண்டு?
இதையெல்லாம் தமிழர்நாடு அமைந்ததும் வானியல், மெய்யியல், இலக்கியம், வரலாறு என பலதுறைகளைச் சேர்ந்த வல்லுநர் குழுவை அமைத்து முடிவு செய்யவேண்டும்.
அதுவரை குழம்பாமல் அடித்துக்கொள்ளாமல் கதிரவன் புத்தாண்டையே பின்பற்றுங்கள்.
தற்போதைய பஞ்சாங்க ஆண்டுகளின் உண்மையான (தமிழ்ப்)பெயர்களை அண்ணன் மேகநாதன் அவர்கள் பதிவிட்டுள்ளார்.
அது பின்வருமாறு,
01. பிரபவ -நற்றோன்றல்
02. விபவ - உயர்தோன்றல்
03. சுக்ல - வெள்ளொளி
04. பிரமோதூத - பேருவகை
05. பிரசோற்பத்தி - மக்கட்செல்வம்
06. ஆங்கீரச - அயல்முனி
07. ஸ்ரீமுக - திருமுகம்
08. பவ - தோற்றம்
09. யுவ - இளமை
10. தாது - மாழை
11. ஈஸ்வர - ஈச்சுரம்
12. வெகுதானிய - கூலவளம்
13. பிரமாதி - முன்மை
14. விக்கிரம - நேர்நிரல்
15. விஷு - விளைபயன்
16. சித்திரபானு - ஓவியக்கதிர்
17. சுபானு - நற்கதிர்
18. தாரண - தாங்கெழில்
19. பார்த்திப - நிலவரையன்
20. விய - விரிமாண்பு
21. சர்வசித்து - முற்றறிவு முழுவெற்றி
22. சர்வதாரி - முழுநிறைவு
23. விரோதி - தீர்பகை
24. விக்ருதி - வளமாற்றம்
25. கர - செய்நேர்த்தி
26. நந்தன - நற்குழவி
27. விஜய - உயர்வாகை
28. ஜய - வாகை
29. மன்மத - காதன்மை
30. துன்முகி - வெம்முகம்
31. ஹேவிளம்பி - பொற்றடை
32. விளம்பி - அட்டி
33. விகாரி - எழில்மாறல்
34. சார்வரி - வீறியெழல்
35. பிலவ - கீழறை
36. சுபகிருது - நற்செய்கை
37. சோபகிருது - மங்கலம்
38. குரோதி - பகைக்கேடு
39. விசுவாசுவ - உலகநிறைவு
40. பரபாவ - அருட்டோற்றம்
41. பிலவங்க - நச்சுப்புழை
42. கீலக - பிணைவிரகு
43. சௌமிய - அழகு
44. சாதாரண - பொதுநிலை
45. விரோதகிருது - இகல்வீறு
46. பரிதாபி கழிவிரக்கம்
47. பிரமாதீச - நற்றலைமை
48. ஆனந்த - பெருமகிழ்ச்சி
49. ராட்சச - பெருமறம்
50. நள - தாமரை
51. பிங்கள - பொன்மை
52. காளயுக்தி - கருமைவீச்சு
53. சித்தார்த்தி - முன்னியமுடிதல்
54. ரௌத்திரி - அழலி
55. துன்மதி - கொடுமதி
56. துந்துபி - பேரிகை
57. ருத்ரோத்காரி - ஒடுங்கி
58. ரக்தாட்சி - செம்மை
59. குரோதன - எதிரேற்றம்
60. அட்சய - வளங்கலன்
(நன்றி: மேகநாதன்)
மாதங்களின் பெயர்கள் பின்வருமாறு,
சித்திரை - மேழம்
வைகாசி - விடை
ஆனி - ஆடவை
ஆடி - கடகம்
ஆவணி - மடங்கல்
புரட்டாசி - கன்னி
ஐப்பசி - துலை
கார்த்திகை - நளி
மார்கழி - சிலை
தை - சுறவம்
மாசி - கும்பம்
பங்குனி - மீனம்
Tuesday, 9 February 2016
பாம்பு நிலவை விழுங்குமோ?
பாம்பு நிலவை விழுங்குமோ?
நேற்று நான் இட்ட விந்தணு அண்டத்துடன் சேரும் சென்னிமலை கோவில் சிற்பத்தை சிலர் பாம்பு நிலவினை விழுங்கும் காட்சி என்கின்றனர்.
அதற்காக அவர்கள் காட்டும் சான்று
கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று
(குறள் 1146)
அதாவது காதலி கூறுகிறாள்
தன் காதலனை அவள் ஒருநாள்தான் சந்தித்தாளாம்,
ஆனால் அதை நிலவை விழுங்கிய பாம்பு போல அது பரவி ஊரே புறம் பேசுகிறாம்.
இதற்கு உரை எழுதிய அனைவரும் சற்றும் சிந்திக்காமல் இதுபோலவே எழுதியுள்ளனர்.
பாம்பு நிலவை விழுங்கும்?
வள்ளுவர் என்ன அவ்வளவு முட்டாளா?
இங்கே அரவு என்பது மேகத்தைக் குறிக்கிறது.
அரவு நுங்கு மதியின் நுதல் ஒளி
(அகநானூறு 134)
மழைதரும் கருமேகங்கள் சூழ்ந்ததால் நிலவின் ஒளி மங்கியது போல
அழுகையை வரவைக்கும் சோகத்தால் கண்களின் ஒளி மறைந்ததாம்.
இதே போல 'பாம்பு' என்பதும் மேகத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டு உள்ளது
பாம்பு ஊர் மதியின் நுதல் ஒளி
(நற்றிணை 128)
வெள்ளை நிற எருதை அடக்கும் கரிய நிற வீரனை வருணிக்கும் கலித்தொகை (135) 'அரவின்வாய்க் கோட்பட்டுப் போதரும் பால்மதியும்' என்கிறது.
நிலாவை மேகம் மறைக்கும் காட்சியை பல இடங்களில் உவமையாகப் பயன்படுத்தியுள்ளனர் சங்கத் தமிழர்.
அரவு நுங்கு மதியின்
(அகநானூறு 115)
பாம்பு சேர் மதி போல
(கலித்தொகை 15)
பெயல் சேர் மதி போல
(கலித்தொகை 115)
திங்கள் அரவு உறின்
(கலித்தொகை 140)
அரவு நுங்கு மதியுனுக்கு
(குறுந்தொகை 395)
அரவு செறி உவவு மதியென
(பரிபாடல் 10)
பாம்பு ஒல்லை மதியம் மறைய
(பரிபாடல் 11)
மதிசேர் அரவின் மானத் தோன்றும்
(சிறுபாணாற்றுப்படை 185)
நாகம் என்பது மேகத்திற்கு பயன்பட்டுள்ளது
நீடுநாக மூடுமேக மோட
(கம்பராமாயணம் கலன்காண்.37)
எம்மை நாக மேலிருத்து
(கந்த புராணம் திருவிளை. 99)
மேகமும் பாம்பைப் போல ஊர்ந்து செல்லும்
பாம்பு நாக்கைப் போல மின்னை வெளியிடும்
இதை தவறாகப் புரிந்துகொண்ட எவனோ பாம்புதான் நிலாவை விழுங்குகிறது என்று தமிழனே கூறிவிட்டான் அது உண்மையாகத்தான் இருக்கும் என்று நம்பி
பாம்பு நிலாவை விழுங்குவதால் சந்திர கிரகணம் வருகிறது என்று புராணம் எழுதி
ராகு கேது போன்றவற்றை படைத்து அதை வைத்தே ஜாதகமும் எழுதிவிட்டான்.
நன்றி: திங்களைப் பாம்பு கொண்டற்று
_பொன்.சரவணன் thiruttham. blogspot