Showing posts with label காட்டுமிராண்டி. Show all posts
Showing posts with label காட்டுமிராண்டி. Show all posts

Wednesday, 15 November 2017

ஈ.வே.ராமசாயின் அக்காமாலா(குடி அரசு) மற்றும் கப்சி(விடுதலை)

ஈ.வே.ராமசாயின் அக்காமாலா(குடி அரசு) மற்றும் கப்சி(விடுதலை)


 திராவிடியா மகன்: எங்க பெரியார் மட்டும்தான் நல்ல தமிழில் பெயர்வைத்து பத்திரிக்கை நடத்தினார்


 தமிழன்: நடத்தி...

'தமிழ் காட்டுமிராண்டி மொழி', 'தமிழ்த்தாய் பாலைக் கரந்து சத்து இருக்கிறதா என்று ஆராயவேண்டும்', 'வேலைக்காரியோடு ஆங்கிலம் பேசுங்கள்' அப்டினு தமிழுக்கு எதிராகத்தானே எழுதுனாரு?!

 "தமிழ்பேசும் பார்ப்பனர் பெரிய தலைவலியாக இருக்கின்றனர்.

 இந்து-முஸ்லீம் பிரிவினை வேறு தெற்கே எடுபடவில்லை.

 எனவே பிராமணர்-பிராமணரல்லாதார் என தனியாக பிரித்து பிராமணன் இடத்தில் நீங்கள் அமர்ந்துகொள்ளுங்கள்" 

அப்டினு வெள்ளைக்காரன் போட்டுக்கொடுத்த ஸ்கெட்ச்தானே உங்க திராவிடம்.

 கடைசிவர அவனுக்கு விசுவாசமாத்தானே இருந்தீங்க?!

 உள்ளே ஆங்கில பூர்வீகமே இருக்க, தலைப்பு மட்டும் தமிழில் வைத்துவிட்டால் போதுமா?

Thursday, 24 November 2016

தமிழைப் பழித்த ஈ.வே.ரா

தமிழைப் பழித்த ஈ.வே.ரா

 "தமிழ்த்தாய் பாலை கறந்து எடுத்து ரசாயனப் பரிசோதனை ஸ்தாபனத்தில் பரீட்சித்து பார்த்தால்,
உடலுக்கு உரம் ஊட்டும் சாதனம் அதில் என்னென்ன இருக்கின்றது கண்டுபிடித்து சொல்ல சொன்னால்
அப்போது தெரியும் தாய்ப்பால் யோக்கியதை!"
- ஈ.வே.ரா, தாய்ப் பால் பைத்தியம் (நூல்)

‘தமிழ் மொழி 3000-4000 ஆண்டுகளுக்கு முந்தி ஏற்பட்ட மொழி’ என்பதை, தமிழின் பெருமைக்கு ஒரு சாதனமாகக் கொண்டு பேசுகிறார்கள்.
நானும் தமிழ் 'காட்டுமிராண்டி மொழி' என்பதற்கு அதைத்தானே முக்கியக் காரணமாகச் சொல்கிறேன்
-ஈ.வே.ரா, தாய்ப் பால் பைத்தியம் (நூல்)

தமிழ் படித்தால் பிச்சைகூட கிடைக்காது.
தமிழ் படித்து பிச்சை எடுப்பதைத் தவிர வேறு உயிர் வாழ ஒன்றுக்கும் பயன்படவில்லை என்பதோடு,
அதற்காகச் செலவு செய்த காலத்தை வேறு துறையில் செலவிட்டால், வாழ்வில் பயன் ஏற்பட்டிருக்கும் என்பதை ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் கற்ற ஓர் அனுபவப் புலவர் பாடியுள்ளார்.
- ஈ.வே.ரா, விடுதலை (27.11.1943)

"வள்ளுவர் குறளையும், அந்தப்படியே அப்போது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன்.
எல்லாவற்றையும் குறை சொல்லும் போது பலர் என்னிடம், ‘எல்லாம் போய் விட்டால் நமக்கு எதுதான் நூல்?’ என்று கேட்பார்கள்.
நான், இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது. அதை எடுத்து விடு’ என்று கூறினால்
‘அந்த இடத்தில் என்ன வைப்பது என்றா கேட்பது..?' என்று பதில் கூறுவேன்"
-ஈ.வே.ரா, விடுதலை (1.6.1950)

உயர்தர படிப்புகளையெல்லாம் கல்லூரியிலும் கூட தமிழிலேயே ஆக்குகிறோம் என்றால், மக்களை முட்டாளாக்குகிறோம் என்றுதானே பொருள்?
இப்படியான நிலை ஏற்பட்டால் இது முக்கொலை என்றுதானே ஆகும்?
தமிழ் மொழியும் கெட்டு,
பாட விஷயமும் பொருளும் கெட்டு,
ஆங்கிலமும் கெடும்படி ஆவதால்
இது மூன்று கொலை செய்ததாகத்தானே முடியும்?
- ஈ.வே.ரா, விடுதலை (5.4.1967)

தேவடியாள் எப்படி பார்ப்பதற்கு அலங்காரமாய் இருப்பாளோ, ஆனால் உள்ளே போய் பார்த்தால் உள்ளமெல்லாம் வஞ்சகம் நிறைந்தும்,
உடலெல்லாம் நோய்கொண்டும்,
வளையல் அணிந்து மக்களை ஏய்த்துப் பிழைப்பதாகக் காணப் படுகின்றதோ அது போலத்தான் இந்த சிலப்பதிகாரமும் ஆகும்.
- ஈ.வே.ரா, விடுதலை (28.7.1951)

"தமிழ் நூல்களே அதிக கேடுபயப்பவை.
தமிழில் படிக்கும் கம்பராமாயணத்தால் ஏற்பட்ட, ஏற்படும் முட்டாள்தனமும், கேடும்
இந்தி படிக்கும்துளசிதாஸ் ராமாயணத்தாலோ,
வங்காள ராமாயணத்தாலோ,
வால்மீகி ராமாயணத்தாலோ ஏற்படாது என்பது உறுதி"
- ஈ.வே.ரா, விடுதலை (8.3.1965)

"தமிழ்கெட்டு விடுமே என்கின்ற எண்ணத்தில் நான் இந்தியை எதிர்க்கவில்லை.
தமிழ்கெடுவதற்கு தமிழில் எதுவும் மீதி இல்லை.
புலவர்களே தமிழைக் கெடுத்துவிட்டார்கள்"
- ஈ.வே.ரா, விடுதலை (3.3.1965)

Friday, 1 August 2014

தமிழச்சி

தமிழச்சி ரிசானா தலையை சீவிய சரியத் சட்டம்

//முதலாளியாக
இருந்தால் அவன் ரிசானா போன்று வேலைக்கு வந்த
ஒருவரை கொலை செய்தால் அவன்
வீட்டிற்கு வேலைக்கு வந்துள்ள
இன்னொரு பெண்ணை கொலை செய்துக்கொள்ளச்
சொல்லுகிறது. எஜமானர்களுக்கு சேவை செய்யும்
சட்டம். இது ஒரு சீரிய சட்டம் என்றும்,
காலத்திற்கும்
பொருத்தமான சட்டம் என்றும் உதார் விடுகிறார்கள்//
// ரிசானாவிற்கு மரண தண்டனை வழங்கப்பட்ட
தினத்தன்று சந்தித்த மௌலவி ஏ.ஜே.எம்.மக்கதூம்
ரிசானாவின் பெற்றோருக்கு எழுதிய கடிதத்தில்
சிலவரிகள் பின்வருமாறு:
'இறுதி ஆசை மற்றும் மரணசாசனம் ஏதும்
உண்டா என்று கேட்டேன். அதற்கு அவர் "ஊருக்கு நான்
எப்பொழுது செல்வது" என்று கேட்டார்' என்றும்,
"என்னை மன்னித்து விட்டுவிடச் சொல்லுங்கள் நானா"
என்று கெஞ்சிய குரலில் அவர்
கூறியது எனது உள்ளத்தை உருக்கிவிட்டது"
என்றும் எழுதியுள்ளார். இந்த
இரண்டு வரிகளை என்னால் தட்டச்சு செய்ய முடியாமல்
பல மணிநேரம் கழிந்தது
போதுமான
மொழிபெயர்ப்பு வசதியைக்கூட இந்த மிருகங்கள்
ஏற்படுத்தித் தராததால், கடைசி நிமிடங்கள்
வரை தான் குற்றம் செய்யவில்லை என்பதால்
மன்னிப்பு கிடைத்துவிடும் என்று அல்லாவின்
கருணைமீது நம்பிக்கையுடன் 7 வருட
காலங்களை சிறையில் கழித்திருக்கிறாள் இந்தச்
சிறுமி. ஒவ்வொருநாளும் எப்படி கழிந்திருக்கும்
என்று சிந்தித்துப் பாருங்கள. இந்த 7 வருட
சிறைதண்டனையே இதற்கு அதிகம். ஆனால் மரணதண்டனை
…….
எனது காதில் "ஊருக்கு நான்
எப்பொழுது செல்வது" என்ற ரிசானா நபீக்கின் குரல்
மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
உங்கள் காதுகளில் அது கேட்கிறதா? கேட்டால் இந்த
காட்டுமிராண்டிகால சரியத் சட்டத்தையும்,
மதத்தையும் தூக்கி எரியுங்கள். மனிதர்களாக
வாழுங்கள்//
நன்றி: இசுலாம் மதத்தை சான்றுகளுடன்
விமர்சித்துவரும் திரு.தஜ்ஜால் அவர்களின்
'இறையில்லா இஸ்லாம்' வலைப்பக்கம்.
முழுவதும் படிக்க: http://iraiyillaislam.b
logspot.in/2013/02/blog-post.html?m=1
( https://m.facebook.com/photo.php?fbid=416993871737605&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739 )