Showing posts with label ஷரி அத். Show all posts
Showing posts with label ஷரி அத். Show all posts

Friday, 1 August 2014

தமிழச்சி

தமிழச்சி ரிசானா தலையை சீவிய சரியத் சட்டம்

//முதலாளியாக
இருந்தால் அவன் ரிசானா போன்று வேலைக்கு வந்த
ஒருவரை கொலை செய்தால் அவன்
வீட்டிற்கு வேலைக்கு வந்துள்ள
இன்னொரு பெண்ணை கொலை செய்துக்கொள்ளச்
சொல்லுகிறது. எஜமானர்களுக்கு சேவை செய்யும்
சட்டம். இது ஒரு சீரிய சட்டம் என்றும்,
காலத்திற்கும்
பொருத்தமான சட்டம் என்றும் உதார் விடுகிறார்கள்//
// ரிசானாவிற்கு மரண தண்டனை வழங்கப்பட்ட
தினத்தன்று சந்தித்த மௌலவி ஏ.ஜே.எம்.மக்கதூம்
ரிசானாவின் பெற்றோருக்கு எழுதிய கடிதத்தில்
சிலவரிகள் பின்வருமாறு:
'இறுதி ஆசை மற்றும் மரணசாசனம் ஏதும்
உண்டா என்று கேட்டேன். அதற்கு அவர் "ஊருக்கு நான்
எப்பொழுது செல்வது" என்று கேட்டார்' என்றும்,
"என்னை மன்னித்து விட்டுவிடச் சொல்லுங்கள் நானா"
என்று கெஞ்சிய குரலில் அவர்
கூறியது எனது உள்ளத்தை உருக்கிவிட்டது"
என்றும் எழுதியுள்ளார். இந்த
இரண்டு வரிகளை என்னால் தட்டச்சு செய்ய முடியாமல்
பல மணிநேரம் கழிந்தது
போதுமான
மொழிபெயர்ப்பு வசதியைக்கூட இந்த மிருகங்கள்
ஏற்படுத்தித் தராததால், கடைசி நிமிடங்கள்
வரை தான் குற்றம் செய்யவில்லை என்பதால்
மன்னிப்பு கிடைத்துவிடும் என்று அல்லாவின்
கருணைமீது நம்பிக்கையுடன் 7 வருட
காலங்களை சிறையில் கழித்திருக்கிறாள் இந்தச்
சிறுமி. ஒவ்வொருநாளும் எப்படி கழிந்திருக்கும்
என்று சிந்தித்துப் பாருங்கள. இந்த 7 வருட
சிறைதண்டனையே இதற்கு அதிகம். ஆனால் மரணதண்டனை
…….
எனது காதில் "ஊருக்கு நான்
எப்பொழுது செல்வது" என்ற ரிசானா நபீக்கின் குரல்
மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
உங்கள் காதுகளில் அது கேட்கிறதா? கேட்டால் இந்த
காட்டுமிராண்டிகால சரியத் சட்டத்தையும்,
மதத்தையும் தூக்கி எரியுங்கள். மனிதர்களாக
வாழுங்கள்//
நன்றி: இசுலாம் மதத்தை சான்றுகளுடன்
விமர்சித்துவரும் திரு.தஜ்ஜால் அவர்களின்
'இறையில்லா இஸ்லாம்' வலைப்பக்கம்.
முழுவதும் படிக்க: http://iraiyillaislam.b
logspot.in/2013/02/blog-post.html?m=1
( https://m.facebook.com/photo.php?fbid=416993871737605&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739 )