Sunday, 29 June 2025
நீளும் காவல்கொலை பட்டியல்
Saturday, 6 July 2024
பகுஜன் ஆம்ஸ்ட்ராங்
Monday, 29 October 2018
தமிழக மாணவர்களைக் காவுவாங்கும் டெல்லி
தமிழக மாணவர்களைக் காவுவாங்கும் டெல்லி
டெல்லியில் தமிழக மாணவி ஸ்ரீமதி தற்கொலை!
தொடரும் தமிழர் மீதான டெல்லியின் வன்மம்!
இது நான்காவது சம்பவம்!
2016 இல் திருப்பூரைச் சேர்ந்த மாணவர் "சரவணன்" வீச ஊசி போடப்பட்டு மர்மச்சாவு
[டெல்லி பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் (UCMS) மருத்துவ மேற்படிப்பு]
இடதுகைப் பழக்கமில்லாத இவர் வலதுகையில் விஷ ஊசி போட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது.
தற்கொலை என்று பதிவான வழக்கு பிரேத பரிசோதனைக்குப் பிறகு கொலைவழக்காக எடுக்கப்பட்டு விசாரிக்கப்பட்டது.
ஆனால் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை.
2017 சேலம் அரிசிபாளையத்தைச் சேர்ந்த "மாணவர் முத்துக்கிருஷ்ணன் (எ) ரஜினி கிரிஷ்" தூக்கில் தொங்கியநிலையில் மர்மச்சாவு
[டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில் (JNU) பி.எச்.டி]
சேர்க்கையிலும் வாய்மொழித் தேர்விலும் பாரபட்சம் காட்டப்படுவதாக கடைசி முகநூல் பதிவு செய்துள்ளார்.
2018 திருப்பூரைச் சேர்ந்த மாணவர் "சரத் பிரபு" மர்மச்சாவு
[டெல்லி பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் (UCMS) மருத்துவ மேற்படிப்பு]
இவரது உடலில் காயங்கள் இருந்தன.
2018 பிப்ரவரியில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஆர்.கிருஷ்ண பிரசாத் மர்மச்சாவு
[பட்ட மேற்படிப்பிற்கான மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் (PGIMER) சண்டீகர்]
இவர் மாணவர் தங்கும் விடுதியில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கியநிலையில் இறந்து கிடந்தார்.
இந்தி தெரியாததால் தனிமைப்பட்டு மன உளைச்சலில் இருப்பதாக தன் தந்தையிடம் கடைசியாகப் பேசும்போது கூறியுள்ளார்.
இறந்த எவருமே கடிதம் எழுதிவைக்காமல் மர்மமான முறையில் இறந்துள்ளனர்.
இதேபோல 2018 ஜனவரியில் திருநெல்வேலியைச் சேர்ந்த "மாரிராஜ்" தற்கொலை முயற்சி
[அகமதாபாத் பி.ஜே மருத்துவக் கல்லூரி, குஜராத்]
சாதி மற்றும் இனத்தைக் காட்டி தொடர்ச்சியாக அவதானப்படுத்தியதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இதன் தொடர்ச்சியாக டெல்லியில் ஐ.ஏ.எஸ் தேர்வாகி பயிற்சியில் இருந்த சத்தியமங்கம் ஆலாம்பாளையத்தைச் சேர்ந்த மாணவி ஸ்ரீமதி தூக்கில் தொங்கிய நிலையில் இறந்துகிடந்த அதிர்ச்சியான செய்தி இன்று வெளியாகியுள்ளது.
Saturday, 29 September 2018
பரியேறும் பறையர்
பரியேறும் பறையர்
சாதிய ஒடுக்குமுறைக்கு ஆளாகும் பறையர் திரைப்படத்தில் வேண்டுமானால் ஜெயிக்கலாம்.
ஆனால் நிஜத்தில் அப்படி இல்லை.
106 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு சம்பவத்தை ஒத்துள்ளது "பரியேறும் பெருமாள்" திரைப்படம்.
1913 இல் இராகவன் என்ற பறையர், தெலுங்கு உயர் சாதியினரான ரெட்டிகளால் படுகொலை செய்யப்பட்டதே அது.
'பறையன்' பத்திரிக்கை மோதலின் ஆரம்பம் முதலே அந்த பறையருக்காகக் குரல்கொடுத்து நியாயம் வாங்கித் தரமுடியாமல் தோற்றுப்போன கதை அது.
ஒரேயொரு வித்தியாசம் படத்தில் வருவது போல பறையர் கூலியாள் கிடையாது.
அவரும் நிலம் வைத்திருந்தார்.
தமது வேலையாட்களுக்கு அவர் அதிக கூலி கொடுத்ததால் ரெட்டிகளுக்கு வேலையாட்கள் கிடைக்கவில்லை.
ரெட்டியார்கள் மிரட்ட ராகவன் துணிந்து எதிர்க்கிறார்.
1890 களில் திண்டிவனம் அருகே விட்லாபுரம் எனும் கிராமத்தில் இது நடக்கிறது.
அக்கிராமத்தின் ஜமீன்தார் குடும்பமான கோவிந்தராஜுலு குடும்பம் வேலையாட்களுக்கு ஒரணா கூலி கொடுத்து வேலை வாங்குகிறது.
ராகவன் தமது வேலையாட்களுக்கு இரண்டணா கொடுத்து வந்தார்.
இதனால் மோதல் தொடங்குகிறது.
1897 இல் ராகவனின் விளைந்து நின்ற வயலை ரெட்டிகள் தமது கால்நடைகளை விட்டு நாசம் செய்கின்றனர்.
ராகவன் வீட்டிற்கு நெருப்புக்கு வைக்கின்றனர்.
ராகவனைக் கொலைசெய்ய நாள் குறிக்கின்றனர்.
இதையறிந்த ராகவன் சென்னை தப்பிச் செல்கிறார்.
சென்னையில் இராயப்பேட்டையில் இருந்த தமது உறவினர் தங்கவேலுப்பிள்ளை என்பவர் மூலம் பறையன் இதழுக்கு இது பற்றி எழுதுகிறார்.
அது செய்தியாக வருகிறது.
(பிள்ளை பட்டத்தை பறையரும் பயன்படுத்துவது உண்டு.
அப்போது பறையன் ஏட்டின் பத்ராதிபதியான ரெட்டமலை சீனாவாசன் கூட பிள்ளை பட்டம் கொண்ட பறையர்தான்)
இந்நிலையில் இராகவன் தமது வீடுகளில் திருடிவிட்டு ஓடியதாக ரெட்டிகள் தமது சாதியினரிடம் கையெழுத்து வாங்கி வழக்கு போட்டனர்.
ஏற்கனவே பறையன் இதழில் வெளிவந்த செய்தியை ராகவன் ஆதாரமாகக் காட்ட திண்டிவனம் மாஜிஸ்ட்ரேட் கிருஷ்ணசாமி ஐயர் வழக்கைத் தள்ளுபடி செய்தார்.
அதோடு ரெட்டிகளை கண்டித்து அனுப்பினார்.
இது நடந்தது 1903.
பிறகு ராகவனும் ஊர்திரும்பினார்.
பணவிரயமும் அவமானமும் அடைந்த ரெட்டிகள் 10 ஆண்டுகள் காத்திருந்து இராகவன் கதையை முடித்தனர்.
திட்டமிட்டு தமது மாடுகளை ராகவன் நிலத்தில் மேயவிட்ட ரெட்டிகள் இராகவன் அந்த மாடுகளைப் பிடித்து கிராம நிர்வாக அதிகாரியிடம் ஒப்படைக்கச் சென்றபோது இராகவனை வழியிலேயே மறித்து அடித்தே கொலை செய்தனர்.
இந்த கொலைவழக்கு நடந்தபோது தங்கவேலுப்பிள்ளை ஒரு சாட்சியாக சேர்க்கப்பட்டார்.
கொலை நடந்த பிறகு ராகவனின் மகன் கணபதி என்பவர் எழுதிய விரிவான கடிதமும் 19.03.1913 தேதியிட்ட பறையன் இதழில் வெளியானது.
1914 க்குப் பிறகு பறையன் இதழ் நலிவடைந்து விட்டதால் கொலைவழக்கின் தீர்ப்பு என்னவானது என்பது தெரியவில்லை.
நாம் கூறவிரும்புவது....
தமிழகத்தில் நிலவுடைமை பெரும்பாலும் வந்தேறிகள் கையில்.
தமிழகத்து ஜமீன்தார்கள் பெரும்பாலும் தெலுங்கர்.
விட்லாபுரம் போல கீழவெண்மணி, குறிஞ்சாக்குளம் என மேலும் எடுத்துக்காட்டுகள் உண்டு
படம்: ஆங்கிலேயர் கால நிலவுடைமைச் சாதிகள் (வரைபடம்)
பரியேறும் பறையர்
பரியேறும் பறையர்
சாதிய ஒடுக்குமுறைக்கு ஆளாகும் பறையர் திரைப்படத்தில் வேண்டுமானால் ஜெயிக்கலாம்.
ஆனால் நிஜத்தில் அப்படி இல்லை.
106 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு சம்பவத்தை ஒத்துள்ளது "பரியேறும் பெருமாள்" திரைப்படம்.
1913 இல் இராகவன் என்ற பறையர், தெலுங்கு உயர் சாதியினரான ரெட்டிகளால் படுகொலை செய்யப்பட்டதே அது.
'பறையன்' பத்திரிக்கை மோதலின் ஆரம்பம் முதலே அந்த பறையருக்காகக் குரல்கொடுத்து நியாயம் வாங்கித் தரமுடியாமல் தோற்றுப்போன கதை அது.
ஒரேயொரு வித்தியாசம் படத்தில் வருவது போல பறையர் கூலியாள் கிடையாது.
அவரும் நிலம் வைத்திருந்தார்.
தமது வேலையாட்களுக்கு அவர் அதிக கூலி கொடுத்ததால் ரெட்டிகளுக்கு வேலையாட்கள் கிடைக்கவில்லை.
ரெட்டியார்கள் மிரட்ட ராகவன் துணிந்து எதிர்க்கிறார்.
1890 களில் திண்டிவனம் அருகே விட்லாபுரம் எனும் கிராமத்தில் இது நடக்கிறது.
அக்கிராமத்தின் ஜமீன்தார் குடும்பமான கோவிந்தராஜுலு குடும்பம் வேலையாட்களுக்கு ஒரணா கூலி கொடுத்து வேலை வாங்குகிறது.
ராகவன் தமது வேலையாட்களுக்கு இரண்டணா கொடுத்து வந்தார்.
இதனால் மோதல் தொடங்குகிறது.
1897 இல் ராகவனின் விளைந்து நின்ற வயலை ரெட்டிகள் தமது கால்நடைகளை விட்டு நாசம் செய்கின்றனர்.
ராகவன் வீட்டிற்கு நெருப்புக்கு வைக்கின்றனர்.
ராகவனைக் கொலைசெய்ய நாள் குறிக்கின்றனர்.
இதையறிந்த ராகவன் சென்னை தப்பிச் செல்கிறார்.
சென்னையில் இராயப்பேட்டையில் இருந்த தமது உறவினர் தங்கவேலுப்பிள்ளை என்பவர் மூலம் பறையன் இதழுக்கு இது பற்றி எழுதுகிறார்.
அது செய்தியாக வருகிறது.
(பிள்ளை பட்டத்தை பறையரும் பயன்படுத்துவது உண்டு.
அப்போது பறையன் ஏட்டின் பத்ராதிபதியான ரெட்டமலை சீனாவாசன் கூட பிள்ளை பட்டம் கொண்ட பறையர்தான்)
இந்நிலையில் இராகவன் தமது வீடுகளில் திருடிவிட்டு ஓடியதாக ரெட்டிகள் தமது சாதியினரிடம் கையெழுத்து வாங்கி வழக்கு போட்டனர்.
ஏற்கனவே பறையன் இதழில் வெளிவந்த செய்தியை ராகவன் ஆதாரமாகக் காட்ட திண்டிவனம் மாஜிஸ்ட்ரேட் கிருஷ்ணசாமி ஐயர் வழக்கைத் தள்ளுபடி செய்தார்.
அதோடு ரெட்டிகளை கண்டித்து அனுப்பினார்.
இது நடந்தது 1903.
பிறகு ராகவனும் ஊர்திரும்பினார்.
பணவிரயமும் அவமானமும் அடைந்த ரெட்டிகள் 10 ஆண்டுகள் காத்திருந்து இராகவன் கதையை முடித்தனர்.
திட்டமிட்டு தமது மாடுகளை ராகவன் நிலத்தில் மேயவிட்ட ரெட்டிகள் இராகவன் அந்த மாடுகளைப் பிடித்து கிராம நிர்வாக அதிகாரியிடம் ஒப்படைக்கச் சென்றபோது இராகவனை வழியிலேயே மறித்து அடித்தே கொலை செய்தனர்.
இந்த கொலைவழக்கு நடந்தபோது தங்கவேலுப்பிள்ளை ஒரு சாட்சியாக சேர்க்கப்பட்டார்.
கொலை நடந்த பிறகு ராகவனின் மகன் கணபதி என்பவர் எழுதிய விரிவான கடிதமும் 19.03.1913 தேதியிட்ட பறையன் இதழில் வெளியானது.
1914 க்குப் பிறகு பறையன் இதழ் நலிவடைந்து விட்டதால் கொலைவழக்கின் தீர்ப்பு என்னவானது என்பது தெரியவில்லை.
நாம் கூறவிரும்புவது....
தமிழகத்தில் நிலவுடைமை பெரும்பாலும் வந்தேறிகள் கையில்.
தமிழகத்து ஜமீன்தார்கள் பெரும்பாலும் தெலுங்கர்.
விட்லாபுரம் போல கீழவெண்மணி, குறிஞ்சாக்குளம் என மேலும் எடுத்துக்காட்டுகள் உண்டு
படம்: ஆங்கிலேயர் கால நிலவுடைமைச் சாதிகள் (வரைபடம்)
Tuesday, 29 May 2018
கச்சநத்தம் பள்ளர் பெருமக்களே!
கச்சநத்தம் பள்ளர் பெருமக்களே!
உங்களை வெட்டியவன் தனிப்பட்ட காரணமல்லாமல் சாதிவெறியினாலே வெட்டினான் என்றால்,
வெட்டியவனை நீங்கள் விடாதீர்கள்!
திருப்பி வெட்டுங்கள்!
அவன் அகமுடையானா? தமிழனா? ஒரே ஊர்க்காரனா? என்றெல்லாம் பார்க்காதீர்கள்.
வெட்டுக்கு பதில்வெட்டு கொடுங்கள்!
பள்ளர்கள் ஒருங்கிணைந்து வெட்டிய குற்றவாளிகளைக் கண்டறிந்து அவர்கள் உங்களை எப்படி வெட்டினார்களோ அதேபோல வெட்டுங்கள்!
அதற்காக குற்றவாளிகளின் ஒட்டுமொத்த சாதிக்கு எதிராகத் திரும்பாதீர்கள்!
பிற சாதியினரையோ அல்லது கூலிக்கு மாரடிக்கும் கட்சிகளையோ இயக்கங்களையோ நடுவில் வரவிடாதீர்கள்!
நீங்கள் அவ்வாறு செய்யவும் மாட்டீர்கள்.
தமிழ்தேசிய சிந்தனையை பள்ளர்களுக்கு விளக்கவேண்டிய அவசியம் இல்லை.
இருந்தாலும் பதிவிடுகிறேன்.
Tuesday, 17 April 2018
ஏன் என்று ஆசிபா சம்பவத்திற்கு பிறகு புரிந்தது
தன் சிறுவயது மகளுக்கு தலைவர் துப்பாக்கி பயிற்சி அளிக்கும் படம்.
ஏன் என்று ஆசிபா சம்பவத்திற்கு பிறகு புரிந்தது
Wednesday, 21 March 2018
அடுத்தது நம்மில் யார்?
அடுத்தது நம்மில் யார்?
முகநூலில் தமிழ்தேசியம் பேசுவதோடு நில்லாமல் இயக்கம், கட்சி என களத்தில் இறங்கியவர்கள் எனக்குத் தெரிந்து 10 பேர் வரை சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இறந்துள்ளனர்.
தற்போது செல்வா பாண்டியர் சாலை விபத்தில் இறந்துவிட்டார்.
* பள்ளர்கள் sc பட்டியலில் இருந்து வெளியேற்றம்
* பெரியார் திடல் முற்றுகை
* திரைத்துறை வந்தேறி ஆதிக்கத்தை எதிர்த்து உண்ணாவிரதம்
*முகநூல் தமிழ்தேசிய எழுச்சி பற்றி முதல் புத்தகம் வெளியீடு
* ஒரிசா பாலு அவர்களுடன் இணைந்து பணி
என செல்வா அவர்களது தமிழ்தேசியப் பணி மறக்கவியாதது.
கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்
ஒரு பெரிய உறுத்தல் உண்டு.
தமிழ்நாடு தெற்கு வடக்கு என இரண்டாக பிரிக்கப்பட அவர் ஆதரவு தெரிவிக்காமல் இருந்திருந்தால் நான் இரங்கல் தெரிவித்திருப்பேன்.
என் நாட்டைத் துண்டாட நினைத்த ஒருவருக்கு இரங்கல் தெரிவிக்க என் நாட்டுப்பற்று தடுக்கிறது.
எனவே அவரது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் இயத்தினர் பெரியமனம் செய்து என்னை மன்னிக்கவும்.
அடுத்து யாரோ?!
Thursday, 25 January 2018
மருத்துவ மாணவி (படக்கதை)
Wednesday, 13 September 2017
வி.சி.க ஒரு தலித் கட்சியா?
வி.சி.க ஒரு தலித் கட்சியா?
திட்டக்குடி அருகே தர்மகுடிகாடு என்ற ஊர் உள்ளது.
அதன் நிலங்கள் அருகே உள்ள கோழியூரின் பிள்ளைமார்களுக்கு சொந்தமாக இருந்தது.
அந்த பிள்ளைமார்களிடம் வேலைக்கு சேர்ந்த அருந்ததியர்கள் (அதாவது தெலுங்கர்) அந்த நிலத்தை பராமரித்தபடி அங்கேயே தங்கியிருந்தனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி அந்த நிலம் கோழியூர் வேணுகோபாலசாமி கோவிலுக்கு சொந்தமானது என்பதை கண்டுபிடித்தனர்.
கோவிலின் உரிமை பறையர்களுக்கு இருந்தது.
ஆக பறையர்களின் கோவில் நிலத்தை பராமரிக்க ஒருகாலத்தில் அமர்த்தப்பட்டதே பிள்ளைமார் குடும்பம்.
பிள்ளைமார்களிடம் அந்த நிலத்தை திருப்பித் தரும்படி பறையர்கள் கேட்டனர்.
பிள்ளைமார்களும் கொடுத்துவிட்டனர்.
இப்போது பிள்ளைமார்கள் வேலைக்கு அமர்த்திய அருந்ததியர்கள் போகமாட்டேன் என்று கூறியதோடு புதிதாக கிடைத்த பகுதியில் பங்கு கேட்கும் விதமாக குடிசையும் போட்டனர்.
தகவல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர் அலெக்சாண்டருக்கு போனது.
அவர் ஆட்களுடன் வந்து அருந்ததியரை அடித்துவிரட்ட அந்த மோதலில் சிவக்குமார் என்பவர் காயமடைந்து மருத்துவமனையில் இறந்துவிட்டார் (02.08.2017).
ஆக தலித் தலித் என்று பேசிக்கொண்டு தெலுங்கரும் தலித் என்று பங்குக்கு வரும்போது தூக்கிப்போட்டு மிதிப்பதும்,
அவர்களை மொழிவழி சிறுபான்மை என்று குறிப்பிட்டு அறவே ஒதுக்குவதும்,
அருந்திய பெண்ணின் கணவர் பறையர் என்பதால் ஒருமுறை வாய்ப்பளித்ததும்,
தலித்தியமா?
பறையரியமா?
இல்லை தலித்தியத்திற்குள் ஒரு தமிழ்தேசியமா?
Friday, 1 September 2017
சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட தமிழரசன்
சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட தமிழரசன்
ஆயதக் கொள்ளையர்களை பொதுமக்கள் வெறுங்கையாலேயே அடித்துக்கொன்ற சம்பவம் உலகில் எங்கேயாவது நடந்ததுண்டா?
ஆனால் வங்கியில் நுழைந்து தம் கண்முண்ணே ஒருவரை சுட்டுக் கொன்றுவிட்டு வரும் ஆயுதம் தாங்கிய 5 கொள்ளையர்களை வெறுங்கையால் சாதாரண மக்கள் தாக்கிக் கொன்றனர்!
தமிழகத்தில் அந்த அதிசயம் நடந்தது (???!!!!)
ஆம். தமிழ்நாடு ஹிந்திய அரசிடம் இருந்து விடுதலை அடைய 'தமிழ்நாடு விடுதலைப் படை' என்ற இயக்கம் நிறுவி ஆயுதம் தாங்கி போராடிய தமிழரசன்,
கர்நாடகா விதிமுறையை மீறி கட்டிய ஹேமாவதி அணையைத் தகர்க்க திட்டமிட்டார்.
அதற்கு தேவைப்பட்ட நிதியை திரட்ட அரசு வங்கியைக் கொள்ளையடித்தார்.
ஆனால் இந்த தகவல் முன்பே உளவுத்துறைக்கு தெரிந்திருந்தது.
தமிழரசனை தடுத்து நிறுத்த ஒரே வழி அவரைக் கொல்வதுதான் என்று முடிவு கட்டிய ஆளும் வர்க்கம்,
நேரடியாக மோத பயந்துகொண்டு அவரது பலவீனம் எது என ஆராய்ந்தார்கள்.
அவர் ஒரு மனிதநேயம் கொண்ட போராளி.
எனவே வெறுங்கையாலேயே குறிப்பிட்ட இடங்களில் அடித்து நொடியில் கொலைசெய்யும் பயிற்சியளிக்கப்பட்ட உளவுத்துறை ஆட்கள் பொதுமக்கள் போல வேடமிட்டு வங்கியில் காத்திருந்தனர்.
தமிழரசன் வந்தார், கொள்ளையடித்துவிட்டு வாசலை நெருங்கும்போது அந்த உளவுத்துறையினர் திடீரென பாய்ந்தனர்.
மக்கள்தான் தாக்குகிறார்கள் என்று தமிழரசனும் அவரது கூட்டாளிகளும் ஆயுதத்தை பயன்படுத்த தயங்கியதால் சில நொடிகளிலேயே தமிழரசன் உயிரைவிட்டார்.
குழப்பமும் அதிர்ச்சியும் அடைந்த அவரது தோழர்களும் இவ்வாறே அடுத்தடுத்து சில நொடிகளில் கொல்லப்பட்டனர்.
உடனடியாக புகைப்படம் எடுத்து ஏதோ மக்களே இதைச் செய்தது போல ஊடகங்களில் பரப்பப்பட்டது.
இதையெல்லாம் திட்டமிட்டு வெற்றிகரமாகச் செய்தது அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் மற்றும் அவரது ஏவல்துறை.
ஆம். முல்லைப்பெரியாறு அணை உரிமையைத் திட்டமிட்டு தன் இனத்திற்கு தாரைவார்த்த அதே மலையாளி ராமச்சந்திரன்தான்
காவிரி நீரைத் தடுத்து தமிழர்களின் கழுத்தை நெறித்துக்கொண்டு இருக்கும் ஹேமாவதி அணையையும் உடையாமல் பார்த்துக்கொண்டவர்.
அது மட்டுமல்லாது நக்சலைட் வேட்டை என்று கூறிக்கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்நாட்டுப் பற்றுகொண்ட இளைஞர்களைக் கொன்று தமிழ்நாட்டின் ஆயுத எழுச்சியை அடக்கியது எம்.ஜி.ஆர் ஆட்சி.
தமிழர்களில் விடுதலை எழுச்சி தமிழரசன் மரணத்தால் பெரும் பின்னடைவைச் சந்தித்தது.
ஆனாலும் தமிழரசன் வழியில் தொடர்ந்து இயங்கிய தமிழ்நாடு விடுதலைப் படை (TNLA) வீரப்பனாருடன் கைகோர்த்து,
கன்னட உச்ச நடிகர் ராஜ்குமார் கடத்தல் மூலம் மீண்டும் தமிழர் உரிமைக் குரலை ஹிந்தியம் அதிர எழுப்பியது.
பிறகு வீரப்பனாரும் வயது முதிர்ந்து தளர்ந்த நிலையில் கன்னடர் ஜெயலலிதாவால் கொலைசெய்யப்பட்டார்.
மேலும் அறிய,
காண்க காணொளி :-
தமிழரசன் வங்கி கொள்ளை பற்றி பழனிபாபா (vaettoli.wordpress)
search இனம்னா என்ன? வேட்டொலி
search வீரப்பனார் பிடித்த கன்னடக்குடுமி வேட்டொலி
Monday, 19 June 2017
வாஞ்சிநாதன் கடிதம் - உண்மையான பொருள்
வாஞ்சிநாதன் கடிதம்
- உண்மையான பொருள்
வாஞ்சிநாதன் பையில் கிடைத்த அந்த கடிதத்தின் வரிகளை சற்று நிதானமாகப் படியுங்கள்
" ஆங்கில சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக்கொண்டு, அழியாத ஸனாதன தர்மத்தைக் காலால் மிதித்துத் துவம்சம் செய்துவருகிறார்கள்.
ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேசச் சத்துருவாகிய ஆங்கிலேயனைத் துரத்தி, தர்மத்தையும் சுதந்திரத்தையும் நிலைநாட்ட முயற்சி செய்துவருகிறான்.
எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குரு கோவிந்தர், அர்ஜுனன் முதலியவர் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்துவந்த தேசத்தில்,
கோமாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை முடிசூட்ட உத்தேசம் செய்துகொண்டு, பெருமுயற்சி நடந்துவருகிறது.
அவன் எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும்பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்கினை செய்துகொண்டிருக்கிறோம்.
அதைத் தெரிவிக்கும்பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று இச்செய்கை செய்தேன்.
இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவனும் செய்யவேண்டிய கடமை.
இப்படிக்கு,
R. வாஞ்சி அய்யர்
R. Vanchi Aiyar of Shencotta "
இதிலே "அழியாத ஸனாதன தர்மத்தை" என்ற இடமும் "கோமாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை" என்ற இடமும் தவறாகப் பொருள்கொள்ளப் படுகின்றன.
'சனாதன' என்றால் 'நிலைத்த' என்று பொருள்.
சனாதன தர்மம் என்பதே இந்து மதத்தின் பழைய பெயர்.
அதாவது உண்மையான பெயர்.
இதற்கும் சாதிக்கும் தொடர்பில்லை.
இதைத்தான் 'அழியாத சனாதன' என்று வாஞ்சி எழுதியுள்ளார்.
ஒருவேளை இரண்டிற்கும் ஒரே பொருள் என்பது அவருக்கு தெரியாமல் இருக்கலாம்.
அதாவது பலர் 'நடுசென்டர்' என்று கூறுவது போல.
தவிர சனாதான தர்மத்தை ஆங்கிலேயர் மிதிப்பதாகக் கூறுகிறார்.
இது 'சாதி அமைப்பு' என்றால் ஆங்கிலேயர் சாதியமைப்பை ஒழிக்க எதாவது செய்திருக்கிறார்களா என்றால் ஆங்கிலேயர் சாதியொழிப்பு நடவடிக்கை எதையும் செய்யவில்லை.
இன்னொன்று 'கோமாமிசம் அதாவது மாட்டிறைச்சி தின்பது' பற்றிய திரிபு.
அதாவது மாட்டிறைச்சி தலித்துகளின் உணவாம் அதனால் பிராமணர்கள் வெறுக்கிறார்களாம்.
அதனால் அது சாதிவெறியின் வெளிப்பாடாம்.
உண்மை என்னவென்றால் தாய்க்கு அடுத்து நமக்கு பால் தருவது பசு.
அதனால் அதைக் கோமாதா என்று அழைத்து அதைக் கொல்வதை பிற்கால இந்துத்துவம் தடைசெய்தது.
(இந்துமத வேதங்களில் மாட்டிறைச்சி உண்பது ஊக்குவிக்கப் படுகிறது).
வெள்ளைக்காரர்கள் காலத்தில் 'மாட்டைக் கொல்லும் கூடங்கள்' பல ஏற்படுத்தப்பட்டு மாட்டிறைச்சி மிக அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டது.
ஆங்கில கல்லூரிகளில் மாட்டிறைச்சியும் விஸ்கியும் உண்பது புகுத்தப்பட்டது.
பசுக்களைக் காப்பது ஆங்கிலேய எதிர்ப்பு நடவடிக்கையாக அப்போது எண்ணப்பட்டது.
இதற்கு பல இயக்கங்களும் நடத்தப்பட்டன.
மூன்றாவது 'மிலேச்சன்' என்பது.
இது கீழ்சாதியைக் குறிக்குமாம்.
ஆனால் மிலேச்சன் அந்நியன், வெளிநாட்டவன் என்றே பொருள்படும்.
மிலேச்சன் என்று ஆங்கிலேயரை வாஞ்சி குறிப்பிட்டுள்ளது அந்நியன் என்ற பொருளில்தான்.
(சீவக சிந்தாமணி 2216)
நான்காவது 'பஞ்சமன்' எனும் சொல்.
நால்வர்ணத்திற்கும் கீழானோர் பஞ்சமர் என்றழைக்கப்பட்டு அது கீழ்சாதி பெயர் ஆனது என்கின்றனர்.
ஆனால் 'பஞ்சம்' எனும் சொல் 'ஐந்தாவது' என்றே பொருள்படும்.
வாஞ்சிநாதன் 'ஐந்தாம் ஜார்ஜ்' என்பதை 'ஜார்ஜ் பஞ்சமன்' என்று எழுதியுள்ளார்.
அதாவது 1911ல் இந்தியாவிற்கு இங்கிலாந்து மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் வருவதாக இருந்தபோது அவரைக் கொல்லப்போவதாக வாஞ்சிநாதன் கூறுகிறார்.
ஆக இந்துமத பற்றாளராக இந்துதேசப் பற்றாளராகவே அவர் அக்கொலையைச் செய்துள்ளார்.
தனது இந்து மதத்தைப் புகழும் அதே நேரத்தில் ஆங்கிலேயரின் மதத்தை அவர் திட்டவில்லை.
ஆங்கிலேயரின் ஏகாதிபத்தியத்தையும் பழக்கவழக்கத்தையும் மட்டுமே திட்டியுள்ளார்.
ஆக அவரை பிற மதத்தை வெறுக்கும் மதவெறியர் என்றுகூட கூறமுடியாது.
அவரை சாதிவெறியர் என்று எப்படியெல்லாம் திரிக்கிறார்கள் பாருங்கள்.
வாஞ்சி வாழ்ந்த பகுதியான செங்கோட்டை மற்றும் குற்றாலம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் 1956 வரை இருந்தது.
ஆஷ் திருநெல்வேலிக்கு சப்-கலெக்டர் மட்டுமே.
அவரது அதிகாரம் தென்காசி தாண்டி செல்லாது.
இருவரும் சந்தித்திருக்கவோ தனிப்பட்ட பகை இருந்திருக்கவோ வாய்ப்பில்லை.
ஆஷ் வாஞ்சிநாதன் பகுதியில் செய்த சில தலித் ஆதரவு செயல்பாடுகளாக கூறப்படுபவை கட்டுக்கதைகள் என்பதற்கு இதுவே சான்று.
சரி வாஞ்சிநாதனின் கடிதத்தில் கொலைமிரட்டல் விடுத்த பிறகும் மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் இந்தியா வந்தாரா?
ஆம் வந்தார்.
27.12.1911 அன்று ஐந்தாம் ஜார்ஜ் (George V) இந்தியா வந்தபோது அவரை வரவேற்கும் விதமாக ரவீந்திரநாத் தாகூர் எழுதிய பாடல்தான் 'ஜன கன மன' எனும் இன்றைய ஹிந்திய தேசிய கீதம்.
(search எழுந்து நில் வெள்ளையனை வாழ்த்து வேட்டொலி)
வாஞ்சிநாதன் காணாப்பிணமாகி சாதிவெறியனாக வரலாற்றில் பதிவானதும்
தாகூருக்கு நோபல் பரிசு கிடைத்து தேசியகவி ஆனதும் எப்படி என்று புரிகிறதுதானே?!
சரி, தமிழ்தேசியத்திற்கும் இதற்கும் என்ன தொடர்பு?
அதாவது பார்ப்பனரை சாதிவெறியராக்குவது திராவிடம் தமிழருக்குள் ஊடுருவ வழிவகுக்கிறது.
என்றால் இந்துமதப்பற்று ஹிந்தியர் ஊடுருவ வழிவகுக்காதா?
வாஞ்சிநாதன் காலகட்டத்தில் இந்திய விடுதலை உணர்வு இந்து மதப்பற்றுடன் கலந்திருந்தது.
அப்போதும் வெறிபிடித்த இந்துவாக அல்லாமல் ஒரு பற்றுள்ள இந்துவாக இருந்தது அத்தனை பெரிய குற்றமில்லை.
இன்று தமிழ்தேசியத்தின் காலம்.
இப்போது தமிழ் இனவுணர்வே தேவை.
அவ்வுணர்வை சாதிவெறியாகத் திரிப்பது திராவிடத்தின் தலையாய வேலையாக உள்ளது.
இன்று தமிழ்தேசிய உணர்வாளனுக்கு முதலில் கிடைப்பது சாதிவெறியன் பட்டமே!
திரிப்புவேலைகளை புரிந்துகொள்ளத்தான் இந்த பதிவு.