Showing posts with label கடிதம். Show all posts
Showing posts with label கடிதம். Show all posts

Saturday, 4 April 2020

தமிழ் எழுத்துக்களில் மலையாளம் (1789)

தமிழ் எழுத்துக்களில் மலையாளம் (1789)

1789 இல் திப்பு சுல்தான் கொச்சி டச்சுப்படைக்கு எழுதிய கடிதம் மற்றும் அதற்கு டச்சு தரப்பில் அனுப்பப்பட்ட மறுமொழி இங்கே தரப்பட்டுள்ளது.
  இதில் மலையாளம் தமிழ் எழுத்துக்களில் எழுத்தப்பட்டுள்ளதைக் காணலாம்.
சான்று: The dutch in malabar (page 110)
 அதாவது 9 ஆம் நூற்றாண்டிலேயே தமிழ் வட்டெழுத்து முறையுடன் சமஸ்கிருத உச்சரிப்புக்கான கிரந்த எழுத்துக்கள் கலந்து எழுதி மலையாள எழுத்து வடிவம் உருவாக்கப்பட்டுள்ளது.
 (இந்த கிரந்த எழுத்துகள் தமிழ் வடிவம் தழுவியவை, சமஸ்கிருதம் எழுதவே இந்த கிரந்த முறை அதிகம் பயன்பட்டது)
 இப்படி கேரளா முழுவதும் பல்வேறு எழுத்துமுறைகள் தோன்றின.
 1500 களில் துஞ்சத்து இராமானுசன் எழுத்தச்சன் என்பவர் மலையாள எழுத்துக்களை ஒழுங்காக்கி தொகுத்து தற்போதைய மலையாள எழுத்துருவைத் தோற்றுவித்தார்.
 ஆனால் 1800 கள் வரை புழக்கதில் கிரந்தம் கலந்த தமிழ் எழுத்துக்களே இருந்தன.
 1772 இல் மலையாளம் அச்சில் ஏறியது.
 1842 இல் முதல் முழுமையான மலையாள புத்தகம் வெளிவந்தது.
 1872 இல் மலையாள அகராதி வெளிவந்தது.
 இறுதியாக கேரளத்தின் வடபகுதியான மலபார் 1950 களில் தமிழ் எழுத்துருக்களை கைவிட்டது.
1971 இல் தான் மலையாள எழுத்துக்கள் குறைக்கப்பட்டு எளிதாக்கப்பட்டு தற்போதைய வடிவத்தை அடைந்தது. 
நன்றி: Gabriel Raja

Saturday, 28 July 2018

கருணாநிதியைத் தண்டிக்க முடியாதா?

கருணாநிதியைத் தண்டிக்க முடியாதா?

கருணாநிதி தொடக்கத்தில் இருந்தே தமிழின எதிரி.
1997 இல் புலிகளின் மருந்தையும் பணத்தையும் பறித்து சிறைப்படுத்தியது அந்த கருநாகம்!

ஆம்.
தமிழகத்திற்கு மருந்துவாங்க வந்த புலிகளைப் பிடித்து சிறையிலடைத்து 50 லட்சம் ரூபாய் பணத்தை பிடுங்கிக்கொண்டதை நமது தேசியத்தலைவர் பிரபாகரனார் பழ.நெடுமாறன் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.
---------------

23–7–97.
தமிழீழம்

நான் நலமேயுள்ளேன்.
அதுபோல் நீங்களும் நலமேயிருக்க தமிழ் அன்னையை வேண்டுகிறேன்.
இங்கு இப்போது. மருந்துப் பொருட்களுக்குத்தான் பெரிய தட்டுப்பாடு.
அண்ணா, நீங்கள் அருட்பிதா சேவியர் மூலம் ஒழுங்கு செய்த மருந்துப் பொருட்கள் எமக்குக் கிடைத்தன.
நான் அதற்குரிய ஒரு நன்றிக்கடிதம் அவருக்கு கொடுத்துள்ளேன்.
அண்ணா அதை அவரிடம் நீங்களே நேரில் கொடுத்து விடுங்கள்.

மற்றும் மருந்துப் பொருட்கள் எடுப்பதற்காக அங்கு வந்த எமது போராளிகள் பிடிபட்டு, இதுவரை ஐம்பது லட்சம் வரையான பணம், தமிழ்நாட்டு போலீசாரிடம் பிடிபட்டுள்ளது.
எமக்கு இங்கு இருக்கும் எவ்வளவோ பணக்கஸ்டத்தின் மத்தியிலும், மருந்து பொருட்கள் வாங்க அனுப்பிய பணம், தமிழ் தமிழ் என முழங்கும் கலைஞரின் ஆட்சியிலேயே பறிக்கப்படுவதுதான், வேதனையை தருகிறது.

ஆனாலும், உங்கள் உதவி எமக்கு ஒரு நம்பிக்கையையும், ஆறுதலையும் தருகிறது.
எங்களுக்கு இங்கு இப்போதைக்கு தேவையானது, மருந்துப் பொருட்கள்தான்.
தொடர்ந்தும் இது போல எமக்கு மருந்துப் பொருட்கள் கிடைக்க உதவி செய்யுங்கள், அண்ணா.
அது இங்கு எமது போராட்டத்திற்கு உதவியாக இருக்கும் அண்ணா.

இப்படிக்கு,
வே.பிரபாகரன்.
------------

பழ.நெடுமாறன் எழுதிய "பிரபாகரன் - தமிழர் எழுச்சி வடிவம்" என்ற நூலில் இக்கடிதம் இடம்பெற்றுள்ளது.

2009 இல் உலகமே பார்க்க 1,75,000 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
அதற்கு முக்கிய காரணமான கருணாநிதியை நம்மால் தண்டிக்க முடியவில்லை.
அவனும் ஆண்டு அனுபவித்து இறந்துவிட்டான்.

ஆனாலும் ஒருநாள் நமக்கான நாடும், ராணுவமும், உளவுத்துறையும் நாம் அமைப்போம்.
அப்படி அமைத்துக் கொண்ட பிறகு நாம் கருணாநிதி வம்சத்தையே கருவறுக்கவேண்டும்.

இது நியாயமா என்று சிலர் கேட்கலாம்.

எப்படி ஈழத்தமிழரைக் கொலை செய்து அரசியலில் வெற்றிபெற்று ராஜபக்ச இலங்கையிலேயே பணக்காரன் ஆனானோ,
அதுபோல  ஈழத்தமிழரையும் தமிழகத்தமிழரையும் கொன்று சுரண்டி கருணாநிதி ஆசியாவிலேயே பெரிய பணக்காரன் ஆனான்.

அவனது உறவினர்களான மாறன் சகோதரர்கள் இந்தியாவிலேயே முக்கிய பணக்காரர்களாக ஆயினர்.

இந்த பணம் யாருக்கு போகும்?

இவர்களது வாரிசுகளுக்குத்தானே?!

எனவே பாவமும் அவர்களையே சேரும்.

இதேபோல தமிழினத்தைக் கொலைசெய்த வேற்றினத்தவர் அவரது பிள்ளைகள், அவர்களது பிள்ளைகள் என நேரடி வாரிசுகள் உலகில் எந்த மூலையில் எத்தனை பேர் எந்த நிலையில் இருந்தாலும் தமிழர்நாட்டு உளவுத்துறையால் அழித்தொழிக்கப்படுவர்.

தமிழர்களே!
இந்த சிந்தனையை மனதில் இறுத்திக் கொள்ளுங்கள்!

பெற்றோர் பாவம் பிள்ளைகளைச் சேரும்!

இதுவே நமது தண்டிக்கும் நடைமுறை.

இதை அனைவரும் உணர்ந்தால் குற்றம் குறையும்.

தமிழர்நாடு!
இரும்புநாடு!

Monday, 19 June 2017

வாஞ்சிநாதன் கடிதம் - உண்மையான பொருள்

வாஞ்சிநாதன் கடிதம்
- உண்மையான பொருள்

வாஞ்சிநாதன் பையில் கிடைத்த அந்த கடிதத்தின் வரிகளை சற்று நிதானமாகப் படியுங்கள்

" ஆங்கில சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக்கொண்டு, அழியாத ஸனாதன தர்மத்தைக் காலால் மிதித்துத் துவம்சம் செய்துவருகிறார்கள்.

ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேசச் சத்துருவாகிய ஆங்கிலேயனைத் துரத்தி, தர்மத்தையும் சுதந்திரத்தையும் நிலைநாட்ட முயற்சி செய்துவருகிறான்.

எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குரு கோவிந்தர், அர்ஜுனன் முதலியவர் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்துவந்த தேசத்தில்,
கோமாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை முடிசூட்ட உத்தேசம் செய்துகொண்டு, பெருமுயற்சி நடந்துவருகிறது.

அவன் எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும்பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்கினை செய்துகொண்டிருக்கிறோம்.
அதைத் தெரிவிக்கும்பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று இச்செய்கை செய்தேன்.
இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவனும் செய்யவேண்டிய கடமை.

இப்படிக்கு,
R. வாஞ்சி அய்யர்
R. Vanchi Aiyar of Shencotta "

இதிலே "அழியாத ஸனாதன தர்மத்தை" என்ற இடமும் "கோமாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை" என்ற இடமும் தவறாகப் பொருள்கொள்ளப் படுகின்றன.

'சனாதன' என்றால் 'நிலைத்த' என்று பொருள்.
சனாதன தர்மம் என்பதே இந்து மதத்தின் பழைய பெயர்.
அதாவது உண்மையான பெயர்.
இதற்கும் சாதிக்கும் தொடர்பில்லை.
இதைத்தான் 'அழியாத சனாதன' என்று வாஞ்சி எழுதியுள்ளார்.
ஒருவேளை இரண்டிற்கும் ஒரே பொருள் என்பது அவருக்கு தெரியாமல் இருக்கலாம்.
அதாவது பலர் 'நடுசென்டர்' என்று கூறுவது போல.
தவிர சனாதான தர்மத்தை ஆங்கிலேயர் மிதிப்பதாகக் கூறுகிறார்.
இது 'சாதி அமைப்பு' என்றால் ஆங்கிலேயர் சாதியமைப்பை ஒழிக்க எதாவது செய்திருக்கிறார்களா என்றால் ஆங்கிலேயர் சாதியொழிப்பு நடவடிக்கை எதையும் செய்யவில்லை.

இன்னொன்று 'கோமாமிசம் அதாவது மாட்டிறைச்சி தின்பது' பற்றிய திரிபு.
அதாவது மாட்டிறைச்சி தலித்துகளின் உணவாம் அதனால் பிராமணர்கள் வெறுக்கிறார்களாம்.
அதனால் அது சாதிவெறியின் வெளிப்பாடாம்.
உண்மை என்னவென்றால் தாய்க்கு அடுத்து நமக்கு பால் தருவது பசு.
அதனால் அதைக் கோமாதா என்று அழைத்து அதைக் கொல்வதை பிற்கால இந்துத்துவம் தடைசெய்தது.
(இந்துமத வேதங்களில் மாட்டிறைச்சி உண்பது ஊக்குவிக்கப் படுகிறது).
வெள்ளைக்காரர்கள் காலத்தில் 'மாட்டைக் கொல்லும் கூடங்கள்'  பல ஏற்படுத்தப்பட்டு மாட்டிறைச்சி மிக அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டது.
ஆங்கில கல்லூரிகளில் மாட்டிறைச்சியும் விஸ்கியும் உண்பது புகுத்தப்பட்டது.
பசுக்களைக் காப்பது ஆங்கிலேய எதிர்ப்பு நடவடிக்கையாக அப்போது எண்ணப்பட்டது.
இதற்கு பல இயக்கங்களும் நடத்தப்பட்டன.

மூன்றாவது 'மிலேச்சன்' என்பது.
இது கீழ்சாதியைக் குறிக்குமாம்.
ஆனால் மிலேச்சன் அந்நியன், வெளிநாட்டவன் என்றே பொருள்படும்.
மிலேச்சன் என்று ஆங்கிலேயரை வாஞ்சி குறிப்பிட்டுள்ளது அந்நியன் என்ற பொருளில்தான்.
(சீவக சிந்தாமணி 2216)

நான்காவது 'பஞ்சமன்' எனும் சொல்.
நால்வர்ணத்திற்கும் கீழானோர் பஞ்சமர் என்றழைக்கப்பட்டு அது கீழ்சாதி பெயர் ஆனது என்கின்றனர்.
ஆனால் 'பஞ்சம்' எனும் சொல் 'ஐந்தாவது' என்றே பொருள்படும்.
வாஞ்சிநாதன் 'ஐந்தாம் ஜார்ஜ்' என்பதை 'ஜார்ஜ் பஞ்சமன்' என்று எழுதியுள்ளார்.
அதாவது 1911ல் இந்தியாவிற்கு இங்கிலாந்து மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் வருவதாக இருந்தபோது அவரைக் கொல்லப்போவதாக வாஞ்சிநாதன் கூறுகிறார்.

ஆக இந்துமத பற்றாளராக இந்துதேசப் பற்றாளராகவே அவர் அக்கொலையைச் செய்துள்ளார்.
தனது இந்து மதத்தைப் புகழும் அதே நேரத்தில் ஆங்கிலேயரின் மதத்தை அவர் திட்டவில்லை.
ஆங்கிலேயரின் ஏகாதிபத்தியத்தையும் பழக்கவழக்கத்தையும் மட்டுமே திட்டியுள்ளார்.
ஆக அவரை பிற மதத்தை வெறுக்கும் மதவெறியர் என்றுகூட கூறமுடியாது.

அவரை சாதிவெறியர் என்று எப்படியெல்லாம் திரிக்கிறார்கள் பாருங்கள்.

வாஞ்சி வாழ்ந்த பகுதியான செங்கோட்டை மற்றும் குற்றாலம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் 1956 வரை இருந்தது.
ஆஷ் திருநெல்வேலிக்கு சப்-கலெக்டர் மட்டுமே.
அவரது அதிகாரம் தென்காசி தாண்டி செல்லாது.
இருவரும் சந்தித்திருக்கவோ தனிப்பட்ட பகை இருந்திருக்கவோ வாய்ப்பில்லை.

ஆஷ் வாஞ்சிநாதன் பகுதியில் செய்த சில தலித் ஆதரவு செயல்பாடுகளாக கூறப்படுபவை கட்டுக்கதைகள் என்பதற்கு இதுவே சான்று.

சரி வாஞ்சிநாதனின் கடிதத்தில் கொலைமிரட்டல் விடுத்த பிறகும் மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் இந்தியா வந்தாரா?

ஆம் வந்தார்.
27.12.1911 அன்று ஐந்தாம் ஜார்ஜ் (George V) இந்தியா வந்தபோது அவரை வரவேற்கும் விதமாக ரவீந்திரநாத் தாகூர் எழுதிய பாடல்தான் 'ஜன கன மன' எனும் இன்றைய ஹிந்திய தேசிய கீதம்.
(search எழுந்து நில் வெள்ளையனை வாழ்த்து வேட்டொலி)

வாஞ்சிநாதன் காணாப்பிணமாகி சாதிவெறியனாக வரலாற்றில் பதிவானதும்
தாகூருக்கு நோபல் பரிசு கிடைத்து தேசியகவி ஆனதும் எப்படி என்று புரிகிறதுதானே?!

சரி, தமிழ்தேசியத்திற்கும் இதற்கும் என்ன தொடர்பு?

அதாவது பார்ப்பனரை சாதிவெறியராக்குவது திராவிடம் தமிழருக்குள் ஊடுருவ வழிவகுக்கிறது.

என்றால் இந்துமதப்பற்று ஹிந்தியர் ஊடுருவ வழிவகுக்காதா?

வாஞ்சிநாதன் காலகட்டத்தில் இந்திய விடுதலை உணர்வு இந்து மதப்பற்றுடன் கலந்திருந்தது.
அப்போதும் வெறிபிடித்த இந்துவாக அல்லாமல் ஒரு பற்றுள்ள இந்துவாக இருந்தது அத்தனை பெரிய குற்றமில்லை.

இன்று தமிழ்தேசியத்தின் காலம்.
இப்போது தமிழ் இனவுணர்வே  தேவை.
அவ்வுணர்வை சாதிவெறியாகத் திரிப்பது திராவிடத்தின் தலையாய வேலையாக உள்ளது.

இன்று தமிழ்தேசிய உணர்வாளனுக்கு முதலில் கிடைப்பது சாதிவெறியன் பட்டமே!

திரிப்புவேலைகளை புரிந்துகொள்ளத்தான் இந்த பதிவு.

Wednesday, 14 June 2017

பர்மா தமிழர்களின் பரிதாப நிலை

பர்மா தமிழர்களின் பரிதாப நிலை

2008 ல் 40,000 தமிழர்கள் உயிரிழந்தனர்.
1,00,000 தமிழர்கள் வீடிழந்தனர்.
நர்கீஸ் புயலில்.
மியான்மர் (பர்மா) அரசாங்கம் மருந்துக்கு கூட  தமிழர்களுக்கு உதவவில்லை.

இந்த கொடுமை தாய்நிலத் தமிழர்களுக்கு கூட தெரியாது.

தமிழருக்கான அரசு இல்லாது போனாலும்
தமிழர்மீது அக்கறை கொண்ட ஒரு ஊடகம் கூட இல்லாததே இதற்குக் காரணம்.

2012 க்குப் பிறகு இணையப் புரட்சியால் முகநூல் ஓரளவு தமிழின ஒருங்கிணைப்பிற்கு உதவுகிறது.
இது எத்தனை காலத்திற்கோ தெரியவில்லை.

நாடில்லாத இனம் நாதியற்று சாகும்.

தகவல்:
து.ரவிக்குமார்,
சட்டமன்ற உறுப்பினர்,
காட்டுமன்னார்கோயில்,
பொதுச்செயலாளர்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
(27-05-08 அன்று முதலமைச்சருக்கு எழுதிய மடல்)

Friday, 26 May 2017

காந்தியை உருவாக்கிய தமிழர்கள்

காந்தியை உருவாக்கிய தமிழர்கள்

காந்தி தென்னாப்பிரிக்காவில் 1893 முதல் 1914 வரை வாழ்ந்தார்.
இந்த 21 ஆண்டுகளில் அவரை மகாத்மாவாக ஆக்கியது தமிழர்களே.

ஆம். தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலேயர் குடியேற்றிய இந்தியர்களில் 90% தமிழர்களே.

அதாவது மலையாளிகளுக்கு திருவிதாங்கூர் சமஸ்தானம்,
தெலுங்கருக்கு ஐதராபாத் சமஸ்தானம்,
கன்னடருக்கு மைசூர் சமஸ்தானம் என ஓரளவு ஆட்சியுரிமை பெற்ற சமஸ்தானங்கள் இருந்தன.
மற்ற இனங்களில் பாதிப்பேராவது ஆங்கிலேயரின் நேரடி அடக்குமுறையில் இருந்து தப்பிக்க இந்த சமஸ்தானங்கள் வழிசெய்தன.

ஆனால் தமிழர்கள் ஐரோப்பியர் கால்வைத்த காலத்திலிருந்தே போராடி கடைசியில் ஆங்கிலேயரின் முழு கட்டுப்பாட்டில் நெடுங்காலம் நசுங்கினர்.

ஆங்கிலேயர்கள் தமிழர்களை உலகம் முழுக்க அடிமாடுகளாக ஓட்டிச்சென்று உழைக்கவைத்தனர்.

இந்தியாவில் பஞ்சம் ஏற்பட்டபோது வெளிநாடுகளில் நிதி திரட்டிய ஆங்கிலேயர் அந்த ரசீதுப் புத்தகத்தை ஆங்கிலத்திலும் தமிழிலுமே அச்சடித்தனர்.

அப்படி இலங்கை மலையகம் சென்றோர் கிட்டத்தட்ட 6லட்சம்.
தென்னாப்பிரிக்கா போனோர் கிட்டத்தட்ட 3லட்சம்.
சூரினாம் கிட்டத்தட்ட 60,000 பேர் சென்றார்கள்.
மொரீசியசு சென்றோர் கிட்டத்தட்ட 60,000.
பிஜி தீவு சென்றோர் கிட்டத்தட்ட 50,000.
ட்ரிடாட் டொபகோ சென்றோர் கிட்டத்தட்ட 40,000.
ரீயூனியன் தீவு சென்றோர் கிட்டத்தட்ட 20,000.
ஜமைக்கா சென்றோர் கிட்டத்தட்ட 15,000.
கயானா சென்றோர் கிட்டத்தட்ட 5,500.

அதாவது இலங்கைக்கு அடுத்ததாக தமிழர்கள் சென்றது தென்னாப்பிரிக்கா.

அவ்வாறு கொண்டுசெல்லப்பட்ட தமிழர்களை வேலைவாங்க அதிகாரிகளாக மற்ற இந்தியர்களும் ஒரு 10% அவர்களுடன் இருந்தனர்.

ஆனால் வெள்ளைக்காரர்கள் அனைவரையும் கீழ்த்தரமாகவே நடத்தினர்.
அதாவது தென்னாப்பிரிக்கா நிறவெறியின் உச்சசூட்டில் இன்றுபோல அன்றும் இருந்தது.

காந்தி வரும் முன்பே தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் அங்கே போராடத் தொடங்கியிருந்தனர்.

ஜோசப் ராயப்பன் என்ற தமிழர் தென்னாப்பிரிக்காவிலேயே பிறந்து படித்து இங்கிலாந்து சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்று மீண்டும் தென்னாப்பிரிக்கா திரும்பி எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர்.
மக்களுக்காகப் போராடியவர்.
காந்திக்கு முன்னுதாரணம் இவரே.

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி 1893 இல் தென்னாப்பிரிக்கா வந்து அப்துல்லா தாதா கம்பெனியின் வழக்கை நடத்தி ஓராண்டு ஒப்பந்தம் முடிந்து திரும்பும் வேளை,
பாலசுந்தரம் என்ற தமிழன் வின்சென்ட் லாசரஸ் என்ற இளம் வழக்கறிஞருடன் காந்தியிடம் வந்தான்.
தன் வெள்ளைக்கார முதலாளி தன்னை அடித்து உதைத்த காயத்துடன் வந்து நின்றான்.
தன் உரிமைக்காக வழக்கு தொடுத்து வாதாடுமாறு காந்தியைக் கேட்டான்.

ஏற்கனவே வெள்ளையர்களிடம் பலமுறை அவமானப்பட்ட காந்தி இந்த வழக்கை நடத்த முடிவெடுத்தார்.

வழக்கை நடத்தி தனது வாதத்திறமையால் அந்த வெள்ளைக்கார முதலாளிக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தார் காந்தி.
வின்சென்ட் அவரிடமே உதவியாளராக சேர்ந்தார்.
தமிழை காந்திக்கு மொழிபெயர்த்து கூறியது இவரே.

மீண்டும் ஊர்திரும்பும் வேளையில் தமிழ்த் தொழிலாளர்களால் ஒரு வழியனுப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டது.
அப்போது தென்னாப்பிரிக்காவில் குடியேற்றப்பட்ட இந்தியர்களுக்கு குடியுரிமை மறுக்கப்படுவது பற்றி பேச்சு எழுந்தது.
அதாவது கரும்பு பயிரிட இந்தியர்களை தென்னாப்பிரிக்கா அழைத்துவரும்போது ஆங்கில அரசாங்கம்,
ஐந்தாண்டு உழைத்தால் நிலம் சொந்தமாகும் என்றும்
குடியுரிமை வழங்கப்படும் என்றும் ஆசைகாட்டி அழைத்து வந்தது.
ஆனால் பிறகு குடியுரிமையை மறுத்ததோடு தலைக்கு 25 பவுன் கட்டவேண்டும் என்றும் சட்டம் போட்டது.
காந்தி இந்த பிரச்சனைக்காப் போராட தமிழர்கள் வலியுறுத்தினர்.
காந்தி மறுபடியும் ஊர் திரும்புவதை தள்ளிப்போட்டார்.

1894 ஆகஸ்ட் 22 அன்று 'நேட்டால் காங்கிரஸ்' காந்தியால் தொடங்கப்பட்டு இந்தியர்கள் ஒருங்கிணைய முதலடி எடுத்துவைத்தார்.
இதில் அப்துல்லா ஹாஜி என்பவர் தலைவர்.
துணைத் தலைவர்களாக 23 பேரில் 4 தமிழர்கள் இருந்தனர்.
(ஆனால் தொண்டர்கள் பெரும்பாலும் தமிழர்கள்தான்!)

1896 ல் ஆதரவு இந்தியா வந்த காந்தி இது தென்னாப்பிரிக்கத் தமிழர்களின் பிரச்சனை என்பதால் தமிழகத்தில் 14 நாட்கள் தங்கி ஆதரவு திரட்டினார்.

அப்போது இந்தியாவில் யாருக்கும் காந்தியைத் தெரியாது.
ஆனால் தமிழர்களுக்குத் தெரிந்திருந்தது.
ஹிந்து ஜி.சுப்பிரமணிய ஐயர், சர் ராமசாமி முதலியார், பரமேஸ்வரன் பிள்ளை, பாஷ்யன் ஐயங்கார் ஆகியோர் காந்தியை வரவேற்று சென்னையில் தங்கும் வசதிகள் செய்துகொடுத்தனர்.
ராஜா சேதுபதி தந்தி அனுப்பினார்.
இந்தியாவிலேயே முதன்முதலாக சென்னையில் பச்சையப்பன் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசினார்.
ஹிந்து, மெட்ராஸ் ஸ்டான்டர்ட், மெட்ராஸ் மெயில் ஆகிய தமிழக பத்திரிக்கைகளே முதன்முதலாக காந்தி பற்றி அப்போது எழுதின.

1903ல் 'இந்தியன் ஒப்பீனியன்' என்ற ஒரு பத்திரிக்கையை காந்தி தொடங்கினார்.
இதற்கு அச்சுத் தொழிலாளி சாம் என்ற கோவிந்தசாமி முழு ஒத்துழைப்பையும் வழங்கினார்.

1904ல் காந்தி டர்பன் நகரில் பீனிக்ஸ் ஆசிரம் அமைத்தார்.

1906 ல் ஆங்கில நிறவெறியின் அடுத்த அடியாக இந்தியர் அனைவரும் கட்டாய கைரேகை அடையாள அட்டை வைத்திருக்க சட்டம் போடப்பட்டது (அன்றைய ஆதார்).
இந்த சட்டத்திற்கு எதிராக காந்தி போராட முடிவெடுத்து நிதி திரட்டியபோது அம்மாக்கண்ணு, திருமதி.பக்கிரிசாமி ஆகிய இரண்டு தமிழ்ப்பெண்கள் நகைகளைக் கழற்றிக் கொடுத்தனர்.

பெரிய போராட்டம் தொடங்கியது.
ஏராளமான தமிழர்கள் சிறை சென்றனர்.
ஆங்கில அரசு அவர்களை சித்திரவதை செய்தது.
சித்திரவதையால் சிறையில் உயிர்விட்ட முதல் மாவீரனும் ஒரு தமிழனே.
ஆம். நாகப்பன் என்ற அந்த மாவீரன் தனது 17 வது வயதில் 1909 ஜூலை 6 அன்று கொடுமைகளால் உடல் நலிந்து குளிரில் போடப்பட்டு நிமோனியா குளிர்க்காய்ச்சல் வந்து இறந்தான்.
தென்னாப்பிரிக்காவில் பெரிய போராட்டம் வெடித்தது.
இங்கிலாந்து வரை இந்த பிரச்சனை எதிரொலித்தது.

இரண்டாவது மாவீரர் உரிமைக்காகப் போராடியதால் ஆங்கில அரசால் நாடுகடத்தப்பட்ட நாராயணசாமி.
நாடு நாடாக அலைக்கழிக்கப்பட்டு 16.10.1910 ல் கப்பலில் இறந்தார்.

அதன்பிறகு நடந்த ஒரு போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தி செல்வன், சூசை, பச்சையப்பன் என மூன்று தமிழர்கள் வீரமரணம் அடைந்தனர்.

வீரமரணம் அடைந்த முதல் பெண்போராளி தில்லையாடி வள்ளியம்மை.
சிறையில் நோய்வாய்ப்பட்டு வீட்டுக்கு தூக்கிவரப்பெற்று 2.2.1914 அன்று இறந்தார்.
அப்போது அவருக்கு வயது 16.

மேற்கண்ட அனைவரும் தென்னாப்பிரிக்காவிலேயே பிறந்த தமிழர்கள் ஆவர்.

கிறித்துவ திருமணங்கள் மட்டுமே செல்லும் என்று அடுத்த அடி விழுந்தது.
இப்போது பெண்கள் போராட்டத்தில் குதித்தனர்.
ஜோகனஸ்பெர்க் இல் இருந்து நியூகேசில் வரை ஊர்வலம் சென்றனர்.
காந்தியின் மனைவி பங்கேற்ற முதல் போராட்டமான இதில் பங்குபெற்ற 16 பெண்களில் 8 பேர் தமிழர்கள்.

1914 ல் குடியுரிமை பெற போராட்டம் நடந்தபோது காந்தி உட்பட அனைவருக்கும் உணவு உறைவிடம் தந்து உபசரித்து அதனால் அரசினால் துன்புறுத்தப்பட்டவர் லாசரஸ் எனும் தமிழர்.

1916ல் கோச்ரப் கிராமத்தில் காந்தி தமது முதல் ஆசிரமத்தை நிறுவினார்.
அதில் குடியேறிய 25 பேரில் 11 பேர் தமிழர்கள்!

லைசன்ஸ் வாங்காமல் கடை நடத்தும் போராட்டம் நடத்தியபோது காந்தியின் மகனோடு சேர்த்து 6 பேர்  கைதாயினர்.
அதில் 4 பேர் தமிழர்கள்.

ஒரு ஜெர்மானிய முதலாளியிடம் பேசி வெள்ளை முதலாளிகளிடம் வேலையிழந்த தொழிலாளர்களுக்கு அவர் பண்ணையில் வேலை வழங்க ஏற்பாடு செய்து அதை ஒரு புகலிடமாகவே உருவாக்கிய நால்வரில் இருவர் தமிழர்.

சபர்மதி ஆசிரமத்தை அமைத்தபோது குண்டு வாங்கி இறந்த செல்வனின் மனைவி மற்றும் இரு மகன்களை தரங்கம்பாடியில் இருந்து அழைத்துவந்து தங்கவைத்தார்.

தமிழர் அல்லாதோரில் குறிப்பிடத் தகுந்த ஒருவர் உண்டு.
அவர் தம்பி நாயுடு.
8 முறை சிறை சென்றவர்.
அவரது குடும்பமே காந்தியின் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டது.
ஆனால் வி.ர.செட்டியார் போன்ற இவரை மிஞ்சிய தமிழர்கள் காந்தியுடன் இருந்தனர்.
இவர் 4 முறை சென்றவர்.
சொத்துகள் அனைத்தையும் இழந்தவர்.
செட்டியாரின் மகனோ 7 முறை சிறைசென்றவர்.
வீடே ஜப்தி செய்யப்பட்ட முனுசாமி,
காந்தியின் இயக்கத்தை வளர்த்ததில் முக்கிய பங்கு வகித்து (நெல்சன் மண்டேலா பின்னாட்களில் அடைக்கப்பட்ட சிறையான) டிப்குளுப் சிறையில் அடைக்கப்பட்ட துரைசாமி,
மாணவராக இருந்தபோதே போராடி நாடுகடத்தப்பட்டு சிறையில் போடப்பட்ட மாணிக்கம்பிள்ளை,
ஒவ்வொரு போராட்டத்திலும் பங்கேற்ற ஆர்.எல்.சி பிள்ளை, டி.ஏ. சுப்பிரமணிய ஆசாரி என பல தமிழர்கள் காந்தியுடன் இருந்தனர்.

அ.ராமசாமி எழுதிய 'தமிழ்நாட்டில் காந்தி' நூலில் காந்தியின் பக்கம் நின்று சிறைசென்ற 88 தமிழர்களையும்
நாடுகடத்தப்பட்ட 28 தமிழர்களையும் பட்டியலிட்டுள்ளார்.
வேறு எந்த இனமும் இதில் பாதி கூட காந்திக்காக உழைத்ததில்லை.

1919 ல் ரௌலட் சட்டத்தை எதிர்க்க முடிவெடுத்ததும்
1921 ல் மதுரையில் ஆடம்பர ஆடை துறந்து அரைநிர்வாணம் ஆனது என பல முக்கிய முடிவுகள் தமிழகத்தில் எடுக்கப்பட்டன.

மொழிவாரியாக காங்கிரஸ் கிளைகளை காந்தி பிரித்தபோது அந்த கூட்டத்திற்குத் தலைமை தாங்கியதும் ஒரு தமிழரே.
இதுவே மொழிவழி உரிமையின் முதல் நடவடிக்கை ஆகும்.

ஆக காந்தியை முன்னிறுத்தி பின்னால் நின்று நகர்த்தியது தமிழர்களே.

படம்: காந்தி தமிழில் எழுதிய கடிதம்