காந்தியை உருவாக்கிய தமிழர்கள்
காந்தி தென்னாப்பிரிக்காவில் 1893 முதல் 1914 வரை வாழ்ந்தார்.
இந்த 21 ஆண்டுகளில் அவரை மகாத்மாவாக ஆக்கியது தமிழர்களே.
ஆம். தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலேயர் குடியேற்றிய இந்தியர்களில் 90% தமிழர்களே.
அதாவது மலையாளிகளுக்கு திருவிதாங்கூர் சமஸ்தானம்,
தெலுங்கருக்கு ஐதராபாத் சமஸ்தானம்,
கன்னடருக்கு மைசூர் சமஸ்தானம் என ஓரளவு ஆட்சியுரிமை பெற்ற சமஸ்தானங்கள் இருந்தன.
மற்ற இனங்களில் பாதிப்பேராவது ஆங்கிலேயரின் நேரடி அடக்குமுறையில் இருந்து தப்பிக்க இந்த சமஸ்தானங்கள் வழிசெய்தன.
ஆனால் தமிழர்கள் ஐரோப்பியர் கால்வைத்த காலத்திலிருந்தே போராடி கடைசியில் ஆங்கிலேயரின் முழு கட்டுப்பாட்டில் நெடுங்காலம் நசுங்கினர்.
ஆங்கிலேயர்கள் தமிழர்களை உலகம் முழுக்க அடிமாடுகளாக ஓட்டிச்சென்று உழைக்கவைத்தனர்.
இந்தியாவில் பஞ்சம் ஏற்பட்டபோது வெளிநாடுகளில் நிதி திரட்டிய ஆங்கிலேயர் அந்த ரசீதுப் புத்தகத்தை ஆங்கிலத்திலும் தமிழிலுமே அச்சடித்தனர்.
அப்படி இலங்கை மலையகம் சென்றோர் கிட்டத்தட்ட 6லட்சம்.
தென்னாப்பிரிக்கா போனோர் கிட்டத்தட்ட 3லட்சம்.
சூரினாம் கிட்டத்தட்ட 60,000 பேர் சென்றார்கள்.
மொரீசியசு சென்றோர் கிட்டத்தட்ட 60,000.
பிஜி தீவு சென்றோர் கிட்டத்தட்ட 50,000.
ட்ரிடாட் டொபகோ சென்றோர் கிட்டத்தட்ட 40,000.
ரீயூனியன் தீவு சென்றோர் கிட்டத்தட்ட 20,000.
ஜமைக்கா சென்றோர் கிட்டத்தட்ட 15,000.
கயானா சென்றோர் கிட்டத்தட்ட 5,500.
அதாவது இலங்கைக்கு அடுத்ததாக தமிழர்கள் சென்றது தென்னாப்பிரிக்கா.
அவ்வாறு கொண்டுசெல்லப்பட்ட தமிழர்களை வேலைவாங்க அதிகாரிகளாக மற்ற இந்தியர்களும் ஒரு 10% அவர்களுடன் இருந்தனர்.
ஆனால் வெள்ளைக்காரர்கள் அனைவரையும் கீழ்த்தரமாகவே நடத்தினர்.
அதாவது தென்னாப்பிரிக்கா நிறவெறியின் உச்சசூட்டில் இன்றுபோல அன்றும் இருந்தது.
காந்தி வரும் முன்பே தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் அங்கே போராடத் தொடங்கியிருந்தனர்.
ஜோசப் ராயப்பன் என்ற தமிழர் தென்னாப்பிரிக்காவிலேயே பிறந்து படித்து இங்கிலாந்து சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்று மீண்டும் தென்னாப்பிரிக்கா திரும்பி எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர்.
மக்களுக்காகப் போராடியவர்.
காந்திக்கு முன்னுதாரணம் இவரே.
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி 1893 இல் தென்னாப்பிரிக்கா வந்து அப்துல்லா தாதா கம்பெனியின் வழக்கை நடத்தி ஓராண்டு ஒப்பந்தம் முடிந்து திரும்பும் வேளை,
பாலசுந்தரம் என்ற தமிழன் வின்சென்ட் லாசரஸ் என்ற இளம் வழக்கறிஞருடன் காந்தியிடம் வந்தான்.
தன் வெள்ளைக்கார முதலாளி தன்னை அடித்து உதைத்த காயத்துடன் வந்து நின்றான்.
தன் உரிமைக்காக வழக்கு தொடுத்து வாதாடுமாறு காந்தியைக் கேட்டான்.
ஏற்கனவே வெள்ளையர்களிடம் பலமுறை அவமானப்பட்ட காந்தி இந்த வழக்கை நடத்த முடிவெடுத்தார்.
வழக்கை நடத்தி தனது வாதத்திறமையால் அந்த வெள்ளைக்கார முதலாளிக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தார் காந்தி.
வின்சென்ட் அவரிடமே உதவியாளராக சேர்ந்தார்.
தமிழை காந்திக்கு மொழிபெயர்த்து கூறியது இவரே.
மீண்டும் ஊர்திரும்பும் வேளையில் தமிழ்த் தொழிலாளர்களால் ஒரு வழியனுப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டது.
அப்போது தென்னாப்பிரிக்காவில் குடியேற்றப்பட்ட இந்தியர்களுக்கு குடியுரிமை மறுக்கப்படுவது பற்றி பேச்சு எழுந்தது.
அதாவது கரும்பு பயிரிட இந்தியர்களை தென்னாப்பிரிக்கா அழைத்துவரும்போது ஆங்கில அரசாங்கம்,
ஐந்தாண்டு உழைத்தால் நிலம் சொந்தமாகும் என்றும்
குடியுரிமை வழங்கப்படும் என்றும் ஆசைகாட்டி அழைத்து வந்தது.
ஆனால் பிறகு குடியுரிமையை மறுத்ததோடு தலைக்கு 25 பவுன் கட்டவேண்டும் என்றும் சட்டம் போட்டது.
காந்தி இந்த பிரச்சனைக்காப் போராட தமிழர்கள் வலியுறுத்தினர்.
காந்தி மறுபடியும் ஊர் திரும்புவதை தள்ளிப்போட்டார்.
1894 ஆகஸ்ட் 22 அன்று 'நேட்டால் காங்கிரஸ்' காந்தியால் தொடங்கப்பட்டு இந்தியர்கள் ஒருங்கிணைய முதலடி எடுத்துவைத்தார்.
இதில் அப்துல்லா ஹாஜி என்பவர் தலைவர்.
துணைத் தலைவர்களாக 23 பேரில் 4 தமிழர்கள் இருந்தனர்.
(ஆனால் தொண்டர்கள் பெரும்பாலும் தமிழர்கள்தான்!)
1896 ல் ஆதரவு இந்தியா வந்த காந்தி இது தென்னாப்பிரிக்கத் தமிழர்களின் பிரச்சனை என்பதால் தமிழகத்தில் 14 நாட்கள் தங்கி ஆதரவு திரட்டினார்.
அப்போது இந்தியாவில் யாருக்கும் காந்தியைத் தெரியாது.
ஆனால் தமிழர்களுக்குத் தெரிந்திருந்தது.
ஹிந்து ஜி.சுப்பிரமணிய ஐயர், சர் ராமசாமி முதலியார், பரமேஸ்வரன் பிள்ளை, பாஷ்யன் ஐயங்கார் ஆகியோர் காந்தியை வரவேற்று சென்னையில் தங்கும் வசதிகள் செய்துகொடுத்தனர்.
ராஜா சேதுபதி தந்தி அனுப்பினார்.
இந்தியாவிலேயே முதன்முதலாக சென்னையில் பச்சையப்பன் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசினார்.
ஹிந்து, மெட்ராஸ் ஸ்டான்டர்ட், மெட்ராஸ் மெயில் ஆகிய தமிழக பத்திரிக்கைகளே முதன்முதலாக காந்தி பற்றி அப்போது எழுதின.
1903ல் 'இந்தியன் ஒப்பீனியன்' என்ற ஒரு பத்திரிக்கையை காந்தி தொடங்கினார்.
இதற்கு அச்சுத் தொழிலாளி சாம் என்ற கோவிந்தசாமி முழு ஒத்துழைப்பையும் வழங்கினார்.
1904ல் காந்தி டர்பன் நகரில் பீனிக்ஸ் ஆசிரம் அமைத்தார்.
1906 ல் ஆங்கில நிறவெறியின் அடுத்த அடியாக இந்தியர் அனைவரும் கட்டாய கைரேகை அடையாள அட்டை வைத்திருக்க சட்டம் போடப்பட்டது (அன்றைய ஆதார்).
இந்த சட்டத்திற்கு எதிராக காந்தி போராட முடிவெடுத்து நிதி திரட்டியபோது அம்மாக்கண்ணு, திருமதி.பக்கிரிசாமி ஆகிய இரண்டு தமிழ்ப்பெண்கள் நகைகளைக் கழற்றிக் கொடுத்தனர்.
பெரிய போராட்டம் தொடங்கியது.
ஏராளமான தமிழர்கள் சிறை சென்றனர்.
ஆங்கில அரசு அவர்களை சித்திரவதை செய்தது.
சித்திரவதையால் சிறையில் உயிர்விட்ட முதல் மாவீரனும் ஒரு தமிழனே.
ஆம். நாகப்பன் என்ற அந்த மாவீரன் தனது 17 வது வயதில் 1909 ஜூலை 6 அன்று கொடுமைகளால் உடல் நலிந்து குளிரில் போடப்பட்டு நிமோனியா குளிர்க்காய்ச்சல் வந்து இறந்தான்.
தென்னாப்பிரிக்காவில் பெரிய போராட்டம் வெடித்தது.
இங்கிலாந்து வரை இந்த பிரச்சனை எதிரொலித்தது.
இரண்டாவது மாவீரர் உரிமைக்காகப் போராடியதால் ஆங்கில அரசால் நாடுகடத்தப்பட்ட நாராயணசாமி.
நாடு நாடாக அலைக்கழிக்கப்பட்டு 16.10.1910 ல் கப்பலில் இறந்தார்.
அதன்பிறகு நடந்த ஒரு போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தி செல்வன், சூசை, பச்சையப்பன் என மூன்று தமிழர்கள் வீரமரணம் அடைந்தனர்.
வீரமரணம் அடைந்த முதல் பெண்போராளி தில்லையாடி வள்ளியம்மை.
சிறையில் நோய்வாய்ப்பட்டு வீட்டுக்கு தூக்கிவரப்பெற்று 2.2.1914 அன்று இறந்தார்.
அப்போது அவருக்கு வயது 16.
மேற்கண்ட அனைவரும் தென்னாப்பிரிக்காவிலேயே பிறந்த தமிழர்கள் ஆவர்.
கிறித்துவ திருமணங்கள் மட்டுமே செல்லும் என்று அடுத்த அடி விழுந்தது.
இப்போது பெண்கள் போராட்டத்தில் குதித்தனர்.
ஜோகனஸ்பெர்க் இல் இருந்து நியூகேசில் வரை ஊர்வலம் சென்றனர்.
காந்தியின் மனைவி பங்கேற்ற முதல் போராட்டமான இதில் பங்குபெற்ற 16 பெண்களில் 8 பேர் தமிழர்கள்.
1914 ல் குடியுரிமை பெற போராட்டம் நடந்தபோது காந்தி உட்பட அனைவருக்கும் உணவு உறைவிடம் தந்து உபசரித்து அதனால் அரசினால் துன்புறுத்தப்பட்டவர் லாசரஸ் எனும் தமிழர்.
1916ல் கோச்ரப் கிராமத்தில் காந்தி தமது முதல் ஆசிரமத்தை நிறுவினார்.
அதில் குடியேறிய 25 பேரில் 11 பேர் தமிழர்கள்!
லைசன்ஸ் வாங்காமல் கடை நடத்தும் போராட்டம் நடத்தியபோது காந்தியின் மகனோடு சேர்த்து 6 பேர் கைதாயினர்.
அதில் 4 பேர் தமிழர்கள்.
ஒரு ஜெர்மானிய முதலாளியிடம் பேசி வெள்ளை முதலாளிகளிடம் வேலையிழந்த தொழிலாளர்களுக்கு அவர் பண்ணையில் வேலை வழங்க ஏற்பாடு செய்து அதை ஒரு புகலிடமாகவே உருவாக்கிய நால்வரில் இருவர் தமிழர்.
சபர்மதி ஆசிரமத்தை அமைத்தபோது குண்டு வாங்கி இறந்த செல்வனின் மனைவி மற்றும் இரு மகன்களை தரங்கம்பாடியில் இருந்து அழைத்துவந்து தங்கவைத்தார்.
தமிழர் அல்லாதோரில் குறிப்பிடத் தகுந்த ஒருவர் உண்டு.
அவர் தம்பி நாயுடு.
8 முறை சிறை சென்றவர்.
அவரது குடும்பமே காந்தியின் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டது.
ஆனால் வி.ர.செட்டியார் போன்ற இவரை மிஞ்சிய தமிழர்கள் காந்தியுடன் இருந்தனர்.
இவர் 4 முறை சென்றவர்.
சொத்துகள் அனைத்தையும் இழந்தவர்.
செட்டியாரின் மகனோ 7 முறை சிறைசென்றவர்.
வீடே ஜப்தி செய்யப்பட்ட முனுசாமி,
காந்தியின் இயக்கத்தை வளர்த்ததில் முக்கிய பங்கு வகித்து (நெல்சன் மண்டேலா பின்னாட்களில் அடைக்கப்பட்ட சிறையான) டிப்குளுப் சிறையில் அடைக்கப்பட்ட துரைசாமி,
மாணவராக இருந்தபோதே போராடி நாடுகடத்தப்பட்டு சிறையில் போடப்பட்ட மாணிக்கம்பிள்ளை,
ஒவ்வொரு போராட்டத்திலும் பங்கேற்ற ஆர்.எல்.சி பிள்ளை, டி.ஏ. சுப்பிரமணிய ஆசாரி என பல தமிழர்கள் காந்தியுடன் இருந்தனர்.
அ.ராமசாமி எழுதிய 'தமிழ்நாட்டில் காந்தி' நூலில் காந்தியின் பக்கம் நின்று சிறைசென்ற 88 தமிழர்களையும்
நாடுகடத்தப்பட்ட 28 தமிழர்களையும் பட்டியலிட்டுள்ளார்.
வேறு எந்த இனமும் இதில் பாதி கூட காந்திக்காக உழைத்ததில்லை.
1919 ல் ரௌலட் சட்டத்தை எதிர்க்க முடிவெடுத்ததும்
1921 ல் மதுரையில் ஆடம்பர ஆடை துறந்து அரைநிர்வாணம் ஆனது என பல முக்கிய முடிவுகள் தமிழகத்தில் எடுக்கப்பட்டன.
மொழிவாரியாக காங்கிரஸ் கிளைகளை காந்தி பிரித்தபோது அந்த கூட்டத்திற்குத் தலைமை தாங்கியதும் ஒரு தமிழரே.
இதுவே மொழிவழி உரிமையின் முதல் நடவடிக்கை ஆகும்.
ஆக காந்தியை முன்னிறுத்தி பின்னால் நின்று நகர்த்தியது தமிழர்களே.
படம்: காந்தி தமிழில் எழுதிய கடிதம்
Friday, 26 May 2017
காந்தியை உருவாக்கிய தமிழர்கள்
Thursday, 27 April 2017
இலங்கைக்கு ஏன் ஆறுமாதம் கழித்து சுதந்திரம்?
இலங்கைக்கு ஏன் ஆறுமாதம் கழித்து சுதந்திரம்?
ஆங்கிலேயன் இந்தி'யாவுக்கு 1947 ஆகஸ்ட் 15 அன்று விடுதலை கொடுத்தான்.
வெறும் 6 மாதம் கழித்து இலங்கைக்கு 1948 பிப்ரவரி 4 அன்று விடுதலை கொடுத்தான்.
ஏன் தெரியுமா?
ஆங்கிலேயனின் பிரித்தாளும் தந்திரம் என்பது எளிமையானது போலத் தெரியும்.
ஆனால் உண்மையில் அது கடினமான வேலை.
தொடர்பே இல்லாத பல்வேறு மக்களை போலியான இரு அடையாளங்களுக்குள் அடைக்கவேண்டும்.
பிறகு இல்லாத அடையாளத்துடன் அவர்களை அடித்துக்கொள்ள வைக்கவேண்டும்.
ஆங்கிலேயனின் இந்து-முஸ்லீம் பிரித்தாளுதல் கொள்கை தமிழகத்தைத் தவிர மற்ற இடங்களில் நன்றாக வேலை செய்தது.
அது காலம் கடந்து ஈழத்தில் கூட வேலை செய்கிறது.
ஆனால் தமிழகத்தில் மட்டும் மதப்பிரிவினை ஆங்கிலேயன் எவ்வளவோ முக்கியும் வேலை செய்யவே இல்லை.
அதனால் இங்கே ஆரியர் - திராவிடர் பிரிவினைக் கருத்தியல் வந்தேறிகளைக் கொண்டு விதைக்கப்பட்டது.
வடயிந்தியரை சமாளிக்க தென்னிந்தியரைக் கேடயமாக்கிக்கொள்ள தமிழர்களுக்கும் இது தேவைப்பட்டது.
அதனால் திராவிடத்தை ஆதரித்தனர்.
அதுவேலை செய்தாலும் ஆங்கிலேயர் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை.
தமிழர்கள் மீது ஆங்கிலேயருக்கு எப்போதும் அடங்காத எரிச்சல் இருந்தது. இருக்கிறது.
ஏனென்றால் தமிழ்மண்ணைக் கைப்பற்றுவது அத்தனை எளிதாக இருக்கவில்லை.
ஆங்கிலேயப் பேரரசு வீழ்ந்ததற்குக் காரணம் உலகப்போர்,
இதைத் தூண்டியதும் ஒரு தமிழனே!
ஆங்கிலேயரின் எதிரிநாடாக ஜெர்மனிக்குப் போய் அதன் அரசரின் வலதுகரமாகி இங்கிலாந்தோடு போரிடத் தூண்டியவன் செண்பகராமன் என்ற தமிழன்.
இவரே நேதாஜியின் குரு.
இவரே ஜெர்மனியிலிருந்து எம்டன் கப்பலில் சென்னை வந்து ஜார்ஜ் கோட்டையில் குண்டுபோட்டது.
ஜெர்மனி தோல்வியடைந்தாலும் செண்பகராமனை இங்கிலாந்திடம் ஒப்படைக்க மறுத்துவிட்டது.
நேதாஜியை உருவாக்கியதும் தமிழரே.
அவரது படையிலும் பெரும்பாலும் தமிழர்.
நேதாஜி மட்டுமல்லாமல்,
காந்தியை (21 ஆண்டுகளில்) மகாத்மாவாக உருவாக்கியதும் தென்னாப்பிரிக்கத் தமிழர்களே.
அவரது அகிம்சை வழிமுறையும் தமிழர்களின் கருத்தியலே.
அதாவது வடயிந்தியர்களை தலைவனாக்கி அவனையே கேடயமாக்கி பின்னால் தமிழர்கள் நின்றுகொண்டிருந்தனர்.
ஆங்கிலேயர் மீது அறவழி ஆயுதவழி என்று இருமுனைத் தாக்குதல்.
தமிழர்களின் அரசியல் நகர்வுகளால் எதிர்விளைவுகளும் நடந்தன.
அதனாலும் இழப்புகள் ஏற்பட்டன, ஏற்படுகின்றன.
ஆங்கிலேயருக்கு உண்மையான தோல்வியைத் தந்த தமிழர்களை ஆங்கிலேயர் பண்ணாத கொடுமைகள் இல்லை.
அவர்களின் மிகமோசமான அடக்குமுறையை மிக நீண்டகாலம் தாங்கியவர்கள் தமிழர்கள்.
ஆனாலும் ஈ.வே.ரா, அம்பேத்கர், நேரு, (பிற்கால) காந்தி ஆகியோரைப் போல ஆங்கிலேயருக்கு விசுவாசமான ஒரு அடிமை தமிழினத்தில் அவர்களுக்குக் கடைசிவரை கிடைக்கவேயில்லை.
(இதில் ஆங்கிலேயர் இடத்தில் ஹிந்தியரும்
வடயிந்தியர் இடத்தில் திராவிடரும் இப்போது இருக்கிறார்கள்)
ஆங்கிலேயன் தன் படுதோல்விக்கு பழிவாங்கத்தான்,
இங்கிலாந்தை விடப் பெரியநாடான தமிழர்நாட்டை இரண்டாக உடைக்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக மட்டும்தான் இலங்கையை தனிநாடு ஆக்கிவிட்டு போனார்கள்.
என்ன செய்வது இடையில் கடல் புகுந்துவிட்டதே?!
இயற்கையை வெல்ல முடியுமா?
முடியும்.
நிலம் பிரிந்து இருந்தால்தானே இரண்டு நாடு ஆகும்.
கடலையே மண் போட்டு நிரப்பி நிலத்தொடர்பை ஏற்படுத்திவிட்டால்?!
முடியாது என்று எதுவுமில்லை.
கடலையும் நிரப்ப முடியும்.
நிரப்பிக் காட்டியிருக்கிறார்கள்.
நெல்லூர் முதல் அம்பாறை வரை,
பாலக்காடு முதல் புத்தளம் வரை,
பெங்களூரில் இருந்து அனுராதபுரம் வரை,
தமிழர்நாடு ஒரே நிலமாக,
உலகின் 77வது பெரிய நாடாக,
எல்லா வளங்களுடன்,
முப்படைகளுடன்,
வல்லரசாக,
ஒரு நல்லரசாக
இப்புவியில் வீற்றிருக்கும்.
Monday, 10 April 2017
ஆங்கிலேயன் சாதித்தது நம்மால் முடியாதா?
ஆங்கிலேயன் சாதித்தது நம்மால் முடியாதா?
தமிழர்நாடு வல்லரசாகும், பேரரசாகும் என்று நாம் சொன்னால் சிரிக்கிறார்கள்.
ஆனால் தமிழகத்தை விட சிறிய நாட்டிலிருந்து வந்த ஆங்கிலேயர்தான் உலகிலேயே பெரிய பேரரசை உருவாக்கி ஆண்டனர் என்ற உண்மை தெரியுமா?
வரைபடத்தில் சிவப்பாக இருப்பது 1922 ல் ஆங்கிலேயர் ஆண்ட பகுதி.
வெள்ளைப் பகுதி அவர்கள் படையெடுக்காத நாடுகள்.
பச்சை நிறம் அவர்கள் தாய்நிலம் !!!!
உலகில் கால் பகுதி அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது.
உலக மக்கட்தொகையில் மூன்றில் ஒரு பங்கு ஆங்கில ஆட்சியின் கீழ் இருந்தனர்.
உலகில் ஏறத்தாழ 200 நாடுகள் உள்ளன.
இதில் ஆங்கிலேயர் படையெடுக்காத நாடு வெறும் 22 மட்டுமே.
அவை,
Andorra, Belarus, Bolivia, Burundi, Central African Republic, Chad, Congo, Republic of Guatemala, Ivory Coast, Kyrgyzstan, Liechtenstein, Luxembourg, Mali, Marshall Islands, Monaco, Mongolia, Paraguay, Sao Tome and Principe, Sweden, Tajikistan, Uzbekistan, Vatican City.
அதாவது உலகத்தில் 90% நிலப்பரப்பு அவர்களால் படையெடுக்கப்பட்டு கைப்பற்ற முயற்சி நடந்துள்ளது.
33 கோடி பேர் இருந்த பிரிட்டிஷ் இந்தியாவை (இன்றைய இந்தியாவை போல் ஒன்றரை மடங்கு) வெறும் ஒரு லட்சம் வெள்ளையர்கள் ஆண்டனர்.
ஆக தாய்நிலமோ மக்கட்தொகையோ முக்கியமில்லை.
பிற நாடுகளை அடக்கி பேரரசாக வரவேண்டிய எண்ணம் கூட நமக்கில்லை.
நம் தாய்நிலத்தை நாம் முப்படைகளுடன் எவரும் அடிபணியாமல் ஆள நினைக்கிறோம்.
இது முடியாதா?
ஆங்கிலேயர் ஒருகாலத்தில் ரோமானியப் பேரரசிடம் அடிமையாக இருந்தது போல தற்போது நாம் இருக்கிறோம்.
நம்மால் ஏன் முடியாது?
(26 அக்டோபர் 2016 அன்று முகநூலிலிட்டது)
Monday, 16 May 2016
"எம்டன்" செண்பகராமன் - ஹிட்லரை அடக்கிய நேதாஜியின் குரு
"எம்டன்" செண்பகராமன்
- ஹிட்லரை அடக்கிய நேதாஜியின் குரு
செண்பகராமன் 1891ல் திருவாங்கூர் சமஸ்தானத்துக்குட்பட்ட தமிழர் மண்ணான திருவனந்தபுரத்தில் "நாஞ்சில் வெள்ளாளர்" குடியில் பிறந்த தமிழர்.
அவரது பெற்றோர் திரு.சின்னசாமிப்பிள்ளை, திரு.நாகம்மாள் ஆகியோராவர்.
திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியிலே படித்துக் கொண்டிருந்த செண்பகராமன்.
மாணவர் பருவத்திலேயே விடுதலை உணர்வோடு தீவிரமாக செயல்பட்டு வந்தார்.
ஆங்கிலேயர்கள் மாணவர்களின் குடும்பத்தினரை எச்சரித்தனர்.
மாணவர்களின் தலைவர் போல இருந்த செண்பகராமனுக்கு கல்லூரி நிர்வாகத்திடமிருந்தும் எச்சரிக்கை வந்தது.
இதனால் அவருக்கு நெருக்கடி முற்றியது.
இது பற்றி அறிந்த சர் வால்டர் வில்லியம் ஸ்ரிக்லாண்ட் என்ற ஒரு ஜெர்மன் உளவாளி அவரை ஜெர்மனிக்கு அழைத்துசென்றார்.
1908-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் திகதி தனது 17வது அகவையில் என். எல். ஜி. யோர்க் என்ற ஜெர்மனிய கப்பலில் ஏறி செண்பகராமன் தலை மறைவானார்.
ஏழைக் குடும்பத்தில் பிறந்த செண்பகராமன் ஐரோப்பா சென்று மிகக் குறுகிய காலத்தில் மிகப்பெரிய ஆள் ஆனார்.
இத்தாலியில் போய் இறங்கி சிறிது காலம் அங்கே வாழ்ந்தார்.
அங்கு இலக்கியம், அறிவியல் ஆகிய துறைகளில் தேர்ச்சி பெற்றார்.
பிறகு சுவிட்சர்லாந்திற்குச் சென்றார்.
அங்குள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் செண்பகராமன் பட்டம் பெற்றார்.
பிறகு சுவிட்சர்லாந்திலிருந்து ஜெர்மனியின் தலைநகரான பெர்லினுக்குச் சென்றார்.
அங்கு பொறியியல் துறையில் பட்டம் பெற்றார்.
வேலை செய்து படித்துக்கொண்டே சக இந்தியர்களைத் திரட்டி கூட்டம் போட்டார்.
இந்திய விடுதலை நிகழ்வுகளில் பங்குபெற்று சொற்பொழிவாற்றினார்.
இந்த நேரத்தில்தான் "ஜெய்ஹிந்த்" என்ற சொல்லை உருவாக்கினார்.
ஜெர்மானியர்களிடம் இருந்த பிரிட்டிஷ் வெறுப்புணர்வை புரிந்துகொண்ட செண்பகராமன் அங்கேயே நிலைகொண்டு போராட்டத்தைத் தொடர முடிவெடுத்தார்.
“இந்திய ஆதரவு சர்வதேச கமிட்டி” ஒன்று நிறுவினார்.
டாக்டர் செண்பகராமனே அதற்கு தலைவராக இருந்து “ப்ரோ இந்தியா” (Pro-India) எனும் ஆங்கிலப் பத்திரிகையை ஆரம்பித்து ஐரோப்பிய நாடுகளில் இந்திய விடுதலைக்கு ஆதரவு திரட்டினார்.
1914ல் ஜெர்மானியப் பேரரசராக இருந்த அப்போதிருந்த கெய்சர் வில்ஹெம் செண்பகராமனை அழைத்து ஆங்கில அரசுக்கெதிராக செயல்பட தான் உதவுவதாகக் கூறினார்.
செண்பகராமனின் தோற்றத்தையும் அறிவாளித்தனத்தையும் பார்த்த கெய்சர் அவரைத் தனது நண்பராக ஏற்றுக்கொண்டார்.
அரசு விழாக்களில் தன்னுடன் அழைத்துச்சென்றார்.
ஜெர்மன் அரசின் உயரிய பட்டமான "வொன்" செண்பகராமனுக்கு வழங்கப்பட்டது.
இந்த நேரத்தில்தான் ஆங்கிலேய அரசு தான் நெடுநாட்களாகத் தேடிக்கொண்டிருந்த அந்த தீவிரவாத மாணவன் ஜெர்மனியில் தொடமுடியாத உச்சத்தில் இருப்பது தெரிந்தது.
ஐரோப்பிய நாடுகளில் உள்ள இந்தியரைத் திரட்டி ஆங்கில அரசுக்கெதிரான செருமானிய நடவடிக்கைகளில் ஒத்துழைக்க செண்பகராமன் முயல்வதும் தெரியவந்தது.
1914 முதல் உலகப்போர் மூண்டது.
ஜெர்மனியில் வாழும் இந்தியரைத் திரட்டி ஐ.என்.ஏ (Indian national volunteers) என்ற தொண்டர் படையை நிறுவினார்.
ஜெர்மனியின் எம்டன் (Emden) என்ற போர்க்கப்பலை செண்பகராமன் பெற்றுக்கொண்டு இந்தியப் பெருங்கடலில் ஆங்கில அரசின் கட்டுப்பாட்டுப் பகுதிகளைத் தாக்கினார்.
1914ல் செப்டம்பர் 22 எம்டன் கப்பல் கடலில் நின்றபடி சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையை தாக்கிவிட்டு மறைந்தது.
அது தாக்கிய விதத்தை மக்கள் இன்றும் மறக்கவில்லை.
பயங்கரமான ஆட்களை எம்டன் என்ற பெயர்கொண்டு இன்றும் சென்னை மக்கள் அழைக்கிறார்கள்.
அன்று அந்த கப்பலின் தலைமைப் பொறியாளராகவும் இரண்டாம்கட்ட தளபதியாகவும் இருந்தது ஒரு 23 வயதான தமிழர் என்ற உண்மை யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.
1915ல் வீரேந்தர்நாத் சட்டோபாத்யாய் என்பவர் மூலம் வங்காள ஆயுத போராளிகளான ஜுகாந்தர் குழுவிற்கு ஆயுதங்களை அனுப்பிவைத்து உதவினார்.
1916 ஆப்கானிஸ்தான் மீது பிரிட்டிஷ் படை எடுத்தது.
அப்போது காபூலில் 'நாடுகடந்த இந்திய அரசாங்கத்தை' ஜெர்மனியின் கூட்டுப்படைகளின் ஆதரவுடன் இந்திய தலைவர்கள் ஏற்படுத்தினர்.
அதில் வெளியுறவு அமைச்சராக செண்பகராமன் நியமிக்கப்பட்டார்.
ஜெர்மனி போரில் தோற்றதும் 1919 ல் அங்கிருந்து ரஷ்யா தப்பிச்சென்று லெனினைச் சந்தித்து உரையாடினார்.
ஜெர்மனி சரணடைந்து வெர்ஸெயிர்ல்ஸ் உடன்படிக்கை கையெழுத்தானபோது செண்பகராமனை பிரிட்டனிடம் ஒப்படைக்க ஆங்கிலேயர் கோரினர்.
ஆனால் தமக்கு பெரிதும் உதவிய செண்பகராமனை ஜெர்மானியர் ஒப்படைக்க மறுத்துவிட்டனர்.
பிறகு ஜெர்மனி திரும்பிய செண்பகராமன் ஜனநாயக நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
உலகில் அத்தனை மூலைகளிலும் ஒடுக்கப்பட்ட மக்கள் இருப்பதைக் கண்ட செண்பகராமன் “ஒடுக்கப்பட்ட மக்களின் சங்கம்”
“ கீழ் நாட்டவர் சங்கம்” ஆகிய அமைப்புகளைத் தொடங்கினார்.
இவற்றின் கிளைகளை நிறுவுவதற்காக பன்னிரண்டு மொழிகளில் மிகச் சரளமாக பேசும் திறமைபெற்ற செண்பகராமன் பட்டேவியா, பர்மா, சயாம், சீனா, எகிப்து, துருக்கி, அமெரிக்கா, தென்ஆபிரிக்கா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்தார்.
அமெரிக்கா சென்றபோது செண்பகராமன் கறுப்பர்கள் வாழும் பகுதிகளுக்கு சென்று சொற்பொழிவாற்றினார்.
கறுப்பின மக்களுக்காக அன்றைய அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சனை சந்தித்து நெடுநேரம் உரையாடினார்.
பிறகு தென்னாப்பிரிக்கா சென்றார்.
ஆங்கில அரசின் கட்டுப்பாட்டில் இருந்த தென்னாப்பிரிக்காவில் செண்பகராமன் நுழைந்தது தெரிந்ததும் பிரிட்டிஷ் அரசு அவர் தலைக்கு ஒரு லட்சம் பவுண்ட் அறிவித்தது.
அவர் பயணம் செய்த எல்லா இடத்திலும் பிரிட்டிஷ் உளவாளிகள் அவரைப் பிடிக்க தொடர்ந்து முயற்சித்துக் கொண்டேயிருந்தனர்.
மாறுவேடமிடுவதிலும் பெயர்மாற்றிக்கொண்டு எல்லையைக் கடப்பதிலும் வல்லவரான செண்பகராமனை அவர்களால் பிடிக்கவேமுடியவில்லை.
அவர் உலகின் பல மூலைகளில் தோன்றி மறைந்து பிரிட்டிஷ் அரசைக் குழப்பினார்.
இறுதியில் பெர்லினுக்கே திரும்பிவிட்டார்.
1930-ம் ஆண்டில் இந்திய வர்த்தக சபை சமாஜத்தின் பெர்லின் பிரதிநிதியாக நியமனம் செய்யப்பெற்றார்.
பெர்லின் நகரில் வாழ்ந்துவந்த மணிப்பூரைச் சேர்ந்த லஷ்மி பாய் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.
முதலாம் உலகப்போர் முடிந்திருந்த நேரம் ஒரு உணவு விடுதியில் செண்பகராமன் அமர்ந்திருந்தபோது
அடால்ப் ஹிட்லர் என்ற ஒரு இளைஞன் ஜெர்மானியர் உயர்ந்த ஆரிய இனமென்றும்
அவர்களே உலகை ஆளவேண்டும் என்றும்
இந்தியர்கள் ஜெர்மானியரால் ஆளப்படவேண்டிய கீழ்மக்கள் என்றும் ஒரு சிறிய குழு முன் நின்று சத்தமாகப் பேசிக்கொண்டிருந்தான்.
உடனே அருகிலிருந்த செண்பகராமன் அவனை விவாதத்திற்கு அழைத்து இந்தியர்கள் ஒன்றும் கீழ்மக்கள் இல்லை என்று வரலாற்று ஆதாரங்களுடன் நிறுவி அவனது திமிரை அடக்கினார்.
ஹிட்லர் எழுத்து மூலம் மன்னிப்பு கேட்ட பிறகே அவனை விட்டார்.
( அன்று அதிகம் அறியப்படாத அந்த இளைஞனே பின்னாளில் ஜெர்மனிய அதிபராகி
தன் உயிரைப் பறிப்பான் என்று அவர் கனவிலும் நினைத்திருக்கமாட்டார்)
ஜெர்மனி செல்லும் இந்திய தலைவர்கள் அனைவரும் செண்பகராமனை போய்ப் பார்க்காமல் வருவதில்லை.
சுபாஷ் சந்திரபோஸ், ஜவஹர்லால் நேரு, அவரது தந்தை பண்டித மோதிலால் நேரு, லால்சந்த், ஹீராசந்த், விட்டல்பாய் பட்டேல் ஆகியோர் டாக்டர்.பிள்ளையின் வீட்டில் தங்கியவர்கள் ஆவர்.
நேரு தனது சுயசரிதையில் பொறாமையுடனும் வெறுப்புடனும்
கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார்.
"நாடுகடத்தப்பட்டவர்களில் ஒருவரான டாக்டர் செண்பகராமன் பிள்ளையைச் சந்தித்தோம்.
அவர் பழைய யுத்தகோஷ்டியைச் சேர்ந்தவர்களில் பெயர்பெற்ற அங்கத்தவர்.
பெர்லினில் அவர் மிக படாடோபமாக வாழ்ந்துவந்தார்.
அங்குள்ள இளம் மாணவர்கள் அவருக்கு பொருத்தமற்ற பட்டம் ஒன்றை வழங்கினர்.
டாக்டர் பிள்ளை தேசியம் ஒன்றில் மட்டுமே தம் சிந்தனையைச் செலுத்தினார்.
பொருளாதார, சமூக பிரச்சனைகளில் போதிய அக்கறை காட்டவில்லை.
உருக்கு தொப்பி அணிந்த ஜெர்மனிய தேசியவாதிகளுடன் எவ்வித வேறுபாடுமின்றி மிக சகஜமாகப் பழகினார்.
நாஜிக்களுடன் கலந்து சற்றும் பயமின்றி பணிபுரிந்த சொற்ப இந்தியர்களில் டாக்டர் பிள்ளை முதன்மையானவர்.
நான் மீண்டும் சிறையில் இருந்த காலத்தில் பெர்லின் நகரில் டாக்டர் பிள்ளை மரமடைந்ததைக் கேள்வியுற்றேன்"
17வயதில் தலைமறைவான செண்பகராமன் பிள்ளை.
1933 அக்டோபர் 7 அன்று தனது தலைமறைவு வாழ்க்கையின் 25வது ஆண்டைக் கொண்டாட ஒரு விழா ஏற்பாடு செய்தார்.
ஜெர்மனியின் பெரிய மனிதர்கள் அனைவரும் அதில் கலந்துகொண்டனர்.
ஹிட்லரை அடியபணிய வைத்த அந்த வீரத்தமிழ்மகன் ஹிட்லர் ஆட்களால் மெல்லக்கொல்லும் நஞ்சு கொடுக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
1934 மே 26 அன்று செண்பகராமன் சாகும் முன் தன் மனைவியிடம் கடைசி ஆசையாக,
தன் அன்னையின் அஸ்தி கரைக்கப்பட்ட அதே கரமனை ஆற்றில் தன் அஸ்தியில் பாதியைக் கரைத்துவிட்டு நாஞ்சில் நாட்டு வயல்களில் மீதி அஸ்தியைத் தூவுமாறு கூறிவிட்டு இறந்தார்.
நாஜிகள் அவரது உடலை எரியூட்டியபிறகு அவரது மனைவி கெஞ்சி கதறி அவரது அஸ்தியை வாங்கிக்கொண்டார்.
பிறகு அவர் நாஜிக்களால் மனநல மருத்துவமனையில் அடைத்துவைக்கப்பட்டார்.
அங்கிருந்து தப்பி இத்தாலி சென்று ஸ்பெயின் வழியே 1936ல் மும்பை வந்து சேர்ந்தார்.
அதன்பிறகு அவர் தன் கணவனின் கடைசி ஆசையை நிறைவேற்ற 30 ஆண்டுகள் படாதபாடு பட்டார்.
நேருவும் காந்தியும் கூட அவரது அஸ்தியை இந்தியா கொண்டுவர ஒத்துழைக்கவில்லை.
Free Press Journal of Bombay என்ற பத்திரிக்கை செம்டம்பர் 12, 1966 அன்று வெளியிட்ட செய்தி கீழ்வருமாறு
" In early 1930's Dr.Pillai incurred the wrath of Hitler whose ominous rumblings were just beginning to be heard.
In May 1934, Pillai died of suspected slow poisoning.
His body was cremated in Berlin."
லட்சுமிபாயின் பெருமுயற்சிக்கு கிடைத்த வெற்றியாக செண்பகராமன் இறந்து 32ஆண்டுகள் கழித்து 1966 செபடம்பர் 19ல் இந்தியாவின் முதல் போர்க்கப்பலான ஐ.என்.எஸ்.டெல்லி மூலம்,
மும்பையிலிருந்து எர்ணாகுளம் வரை செண்பகராமனின் அஸ்தி எடுத்துவரப்பட்டு கரமனை ஆற்றில் கரைக்கப்பட்டது.
ஆனால் நாஞ்சில் வயல்களில் தூவப்படவில்லை.
அந்த தமிழனின் கடைசி ஆசை கூட அரைகுறையாகத்தான் நிறைவேற்றப்பட்டது.
செண்பகராமனைப் பற்றி அவர் உதவி செய்த வங்காள ஆயுத போராளிகள் மூலம் அறிந்த சுபாஷ் சந்திரபோஸ் அவரை ஒருமுறை சந்தித்தார்.
அவர் இறந்துபோன பிறகு அவர் வழியிலேயே போராட முடிவு செய்தார்.
காங்கிரசிலிருந்து விலகினார்.
1941ல் ஆங்கிலேயரிடமிருந்து தப்பி ஜெர்மனி சென்று அதன் அதிபர் ஹிட்லரிடம் உதவி கேட்டார்.
ஜெர்மானிய நீர்மூழ்கி கப்பல் மூலம் தனது நட்பு நாடான ஜப்பானுக்கு ஹிட்லர் அவரை அனுப்பினார்.
ஜப்பானிடம் இருந்த இந்திய கைதிகளைக் கொண்டு செண்பகராமனனின் I.N.V போலவே I.N.A ஐத் தொடங்கி செண்பகராமனின் முழக்கமான ஜெய்ஹிந்தையே தனது முழக்கமாகவும் வைத்துக்கொண்டார் நேதாஜி.
ஆக நேதாஜியின் குரு செண்பகராமனே.
உசாத்துணை:-
நூல்: மாவீரன் செண்பகராமன் (1968)
ஆசிரியர்: யோகா பாலச்சந்திரன்
வெளியீடு: கொழும்பு கலைச் சங்கம்
படம்: நக்கீரன்
-------------------------
செண்பகராமன் ஒரு குசராத்தியாகவோ தெலுங்கராகவோ இருந்திருந்தால் சாலைகள், கல்லூரிகள், நிலையங்கள், சிலைகள், பாடப்பகுதி என்று தூள்கிளப்பியிருப்பார்கள்.
தமிழன் என்பதால் பெயர்கூட வெளிவரவில்லை.
தமிழகத்தில் படேல் சாலையும், காந்தி நகரும், நேரு அரங்கமும், ஓமந்தூரார் கட்டடமும் இருக்கும்.
ஆனால் செண்பகராமனுக்கு தமிழகத்தில் ஓரே ஒரு சிலைதான் உள்ளது.
அதுவும் இறந்து 75 ஆண்டுகள் கழித்து 2009ல்தான் நிறுவப்பட்டது.
தமிழகத்துக்கு வெளியே ஒரு முட்டுசந்துக்குக் கூட ஒரு தமிழ்த்தலைவர் பெயர்கூட இல்லையே அது ஏன்?
டெல்லியில் பாரதி பெயரில் ஒரு சாலை உள்ளது.
அவர் பார்ப்பனத் தமிழராக இல்லையென்றால் அதுகூட இருக்காது.
தமிழர்கள் இந்திய சுதந்திரத்திற்காக சிந்திய குருதி அனைத்தும் விழலுக்கு இரைத்த நீராய் வீணாகப் போனதே?!
இந்தியா தமிழர்களுக்கான நாடா?
Wednesday, 3 February 2016
வெள்ளையன் வெளியேறினால் விஞ்ஞானம் வெளியேறிவிடும் _அறிஞர்(?) அண்ணாதுரை
1942ல் காந்தி
“வெள்ளையனே வெளியேறு” இயக்கம் தொடங்கி
“செய்யுங்கள் இல்லை செத்துமடியுங்கள்” என்றார்.
அப்போது அண்ணா, என்ன சொன்னார்
“தம்பி(கருணாநிதி?!) காந்தியாருக்கு பைத்தியம் பிடித்துவிட்டது.
இவரைக் குணப்படுத்த இங்கிலாந்து தேசத்து வைத்தியர்கள் தேவை.
வெள்ளையர்கள் வெளியேறினால், விஞ்ஞானமும் வெளியேறிவிடும்.
கார் ஓடாது,
பஸ் ஓடாது,
ரயில் ஓடாது,
தந்தி கூட இருக்காது,
ஏரொப்ளேன் இருக்காது.
ஆல மரத்தையும், அரச மரத்தையும் சுற்றிக் கும்பிட்டு,
பருந்தைக் கண்டால் கன்னத்தில் போட்டுக் கொள்ளத்தான் முடியும்.
நம் மக்களால் குண்டூசி கூட செய்ய முடியாது” என்றார்.
இவர் அறிஞராம்?!
ப்ப்ப்ப்பா
அடிக்கிற வெயிலில் கறுப்புச்சட்டை போடும் திராவிட பகுத்தறிவு ?!!!