Showing posts with label உலகப்போர். Show all posts
Showing posts with label உலகப்போர். Show all posts

Monday, 2 October 2017

காந்தியின் அகிம்சை

காந்தியின் அகிம்சை
***********************

கே: காந்தியை உருவாக்கியது தமிழர்கள் என்கிறீர்கள்!
ஆனால் அவரது வழி தவறு என்கிறீர்கள்!
இது முரணாக இருக்கிறதே?!

ப: காந்தியை ஒரு அகிம்சை போராளியாக உருவாக்கியது தென்னாப்பிரிக்கத் தமிழர்கள்தான்.
இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
அகிம்சை போராட்டம் ஆயுத போராட்டத்திற்கு சற்றும் சளைத்தது இல்லை.

ஆனால் தென்னாப்பிரிக்காவில் தமிழர்கள் போராடியது சம உரிமைக்காக
அதனால் அகிம்சை வழி சரியாக இருந்தது.

ஆனால் விடுதலை எப்போதும் அகிம்சை மூலம் கிடைக்காது.
இதுதான் வரலாறு நமக்கு தரும் பாடம்.

  சம உரிமை பெற காந்திக்கு தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் கற்றுக்கொடுத்த அகிம்சை வழியை
அவர் இங்கே வந்து ஆங்கிலேயரிடம் விடுதலை பெற பயன்படுத்தினார்.

இது ஆங்கிலேயருக்கு வசதியாகப் போய்விட்டது.

ஆங்கிலேயர் இந்த நாட்டை விட்டு போக முதல் காரணம் அவர்கள் உலககம் முழுவதும் சுரண்டி சேர்த்துவைத்த செல்வமெல்லாம் இரண்டு உலகப்போர்களில் காலியானதுதான்.

இதற்கு காரணம் ஜெர்மனி.
ஜெர்மனியை ஆங்கிலேயர் மீது ஏவியது ஒரு தமிழரான செண்பகராமன் பிள்ளை மற்றும் அவரது வழிநடந்த நேதாஜி (மற்றும் அவர் படையிலிருந்த தமிழர்கள்)

ஜெர்மனியை பிரிட்டிஷ் இரண்டு உலகப்போர்களிலும் தோற்கடித்தாலும் தனது செல்வம் அனைத்தையும் இழந்து அதன் பொருளாதாரம் வீழ்ந்தது.
  உலக நாடுகளை அடக்கி சுரண்டும் வலு அதனிடம் இல்லை.
அதனால் இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் அவர்கள் ஆதிக்கம் செலுத்திய பகுதிகளில் இருந்து காலி செய்தனர்.
காந்தியால் சுதந்திரம் கிடைத்தது என்பது 1% கூட உண்மை இல்லை.
------------
மேலும் அறிய,
search காந்தியை உருவாக்கிய தென்னாப்பிரிக்க தமிழர் வேட்டொலி

search இலங்கைக்கு ஏன் ஆறுமாதம கழித்து சுதந்திரம்? வேட்டொலி

search எம்டன் செண்பகராமன் ஹிட்லரை அடக்கிய நேதாஜியின் குரு வேட்டொலி

search அறவழி விடுதலை அடைய உதவுமா வேட்டொலி

Sunday, 5 March 2017

உலகின் பெரிய ராணுவம் வந்து தமிழினத்தின் மீது மூன்றாம் உலகப்போர் நடத்தினாலும்....

உலகின் மிகப்பெரிய ராணுவம் சீனாவின் படையே ஆகும்.

ஆள்பலம் 23 லட்சம்.

  தமிழினத்தின் இளைஞர் எண்ணிக்கை ஒன்றரை கோடி ஆகும்.

தமிழ் இளைஞர்களில் பத்தில் ஒருவர் போர்வீரர் ஆனால் கூட போதும்.

இதுவரை நடந்ததில் பெரிய போர் இரண்டாம் உலகப்போர்.

அதில் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு 6 கோடி.

அத்தனை பெரிய போர் நடக்கப்போவதில்லை.
அப்படியே நடந்தாலும் தமிழர் தரப்பில் 3 கோடி உயிர்கள் போகும்.

தமிழினத்தின் மொத்த மக்கட்தொகை 8 கோடி ஆகும்.

Saturday, 24 December 2016

சயாம் - மரணத் தொடரியில் மரித்த தமிழர்கள் (பாகம் 2/2)

சயாம் - மரணத் தொடரியில் மரித்த தமிழர்கள் (பாகம் 2/2)

காலம்: 1942
இடம்: நோங் பிளாடூக்கி, சயாம்.

"அடிமைகளே! இங்கே சயாமில் தொழிலாளர்கள் இல்லாமல் இல்லை. ஆனால் மலாய் தோட்டத் தொழிலாளர்களின் கடுமையாக உழைக்கும் திறனைப் பற்றி கேள்விப்பட்டே உங்களை அள்ளிக்கொண்டு வந்துள்ளோம்.
நீங்கள் போரில் எங்களுடன் தோற்ற வெள்ளைக்கார அடிமைகளுடன் சேர்ந்து வேலை செய்யவேண்டும்.
உங்களுக்கு சம்பளம் என்பது சாப்பாடு மட்டுமே.
உயிரோடு இருக்க நினைப்பவர்கள் ஒழுங்காக உழைக்கவேண்டும்.
தினமும் மூவாயிரம் டன் தோண்டவேண்டும் என்பது இலக்கு.
ஜப்பான் முழு ஆசியாவையும் ஆளும் காலம் வந்துவிட்டது.
ஆக எங்களுக்கு அடங்கியிருப்பதே உங்களுக்கு நல்லது"

"அதிகாரி சொன்னதைப் புரிந்துகொண்டீர்களா?
நீங்கள் வழித்தடத்திலுள்ள மரங்களை வெட்டுவது, மேட்டைப் பள்ளமாக்குவது, பள்ளத்தை மேடாக்குவது, பாறைகளை உடைப்பது, தண்டவாளத்தைப் பொருத்துவது, கட்டைகளை அடிப்பது, ஜல்லி உடைப்பது, அதைக் கொட்டுவது என அனைத்து வேலைகளையும் செய்யவேண்டும்.
சூரியன் உதிக்கும்போது நீங்கள் வேலையை ஆரம்பித்திருக்க வேண்டும்.
அதிகாரிகள் சொல்லும் வரை வேலைசெய்துகொண்டே இருக்கவேண்டும்.
நண்பகலில் அரைமணிநேரம் உணவு இடைவேளை.
இடையில் எங்கும் போகக்கூடாது.
பேசக்கூடாது. மீறினால் கடுமையான தண்டனை கிடைக்கும்"

வேலை தொடங்கியது.
அந்த நாள் முழுவதும் வேலை.
உணவு இடைவேளை வந்தது.
உட்காரக்கூட அனுமதியில்லை.
கையிலே உணவைத் தந்தனர்.
பரங்கிக்காய் சூப்பும் சுண்ணாம்பு அரிசியும் புண்ணாக்கும் புழுக்களும் விரவிக்கிடந்தன.

வாயில் வைத்ததும் வாந்தி எடுத்தனர்.
முதுகில் சவுக்கால் அடி விழுந்தது.
கண்ணை மூடிக்கொண்டு விழுங்கினர்.
மீண்டும் வாந்தி எடுத்தோரை சோப்பு நீரை குடிக்கச்செய்து மேலும் வாந்தியெடுக்க வைத்தனர்.

சிறுநீர் கழிக்குமிடத்தருகே தண்ணீர் குடிக்கும் இடத்தருகே ஒரு ஜப்பானியன் உட்கார்ந்திருப்பான்.

சிறுநீர் கழிக்கவோ தண்ணீர் குடிக்கவோ சென்றவர்கள் அடிவாங்காமல் அதைச் செய்யமுடியாது.
தண்ணீரும் அசுத்தமானதாகவே இருந்தது.
அதனால் நோய்வந்து இறந்தோர் பலர்.

சிறிய தவறு செய்தாலும் கொடூர தண்டனைகள் கொடுக்கப்பட்டன.
கட்டிவைத்து அடிப்பார்கள்.
பிறகு முசிறு எறும்புகளை உடலில் விடுவார்கள்.
கால் சோர்ந்து உட்கார்ந்தால் வாயில் பெட்ரோல் ஊற்றினார்கள்.
ஒரு நொடி அசையாமல் இருந்தாலும் துப்பாக்கிக் கட்டையால் இடித்தனர்.
எதிர்த்து ஒரு பார்வை பார்த்தாலும் பெரிய டின்களில் மண் நிரப்பி தோளில் போட்டவாறு வேலை செய்யச்சொன்னார்கள்.
மண் சுமந்தபடி நிழலில் ஒதுங்கி நடந்தோரை உச்சிவெயிலில் நிற்க வைத்தனர்.
இரண்டு கையாலும் வேலை செய்யாதோரின் ஒரு கையை வெட்டினர்.
தண்டவாளப் பலகைகள் செய்ய தேக்கு மரங்களை வெட்டி வெறும் தோளில் தூக்கிச்செல்ல கட்டாயப்படுத்தினர்.
பலர் பூச்சிக் கடியிலும் அட்டைக்கடியிலும் உடல் ரணமாகி சாய்ந்தனர்

அந்த நாள் பொழுதுசாய்ந்தும் வேலை நடந்தது.
இரவு முழுவதும் வேலை நடந்தது.
ஒரே நாளில் 2 கி.மீ இரயில் பாதை உருவானது.
மறுநாள் விடிந்தும் வேலை நடந்தது.
பலர் மயங்கி விழுந்தனர்.
வேலையை நிறுத்த வேண்டியோர் எலும்பு நொறுக்க அடிவாங்கினர்.

அன்று மதியம் உணவு இடைவேளை வந்தது.
உணவை முழுதாக உண்ணும் முன்பே மீண்டும் வேலைக்குத் துரத்தினர்.

அன்று இரவு வேலை நிறுத்தப்பட்டபோது பலர் ஆங்காங்கே கிடந்தனர்.
அதில் பலர் இறந்திருந்தனர்.
வெட்டவெளியில்தான் படுக்கவேண்டும். எல்லா தேவைகளையும் நிறைவேற்றிக்கொள்ளவேண்டும்.

அன்றிரவு அங்கே வந்த ஜப்பானியர் இளம்பெண்களை இழுத்துக்கொண்டு சென்றனர்.
பெண்களின் கதறல் இரவு முழுவதும் கேட்டது.
காலையில் அவர்கள் நிர்வாணமாக பிணமாக கிடந்தனர்.
ஓடிப்போக முயற்சி செய்தோரைப் பிடித்து தூணில் கட்டிவைத்திருந்தனர்.
அவர்கள் சாகும் வரை அப்படியே விடப்பட்டனர்.

இரயில் பாதை நீள நீள அருகருகே ஒரு குழியும் தோண்டப்பட்டு  பிணங்கள் போடப்பட்டு கொண்டே இருந்தன.
அக்குழிகள் அங்கே வேலை முடிந்த பிறகே மூடப்பட்டன.

ஆனால் மலேயாவிலிருந்து தமிழர்கள் இறக்குமதி ஆகிக்கொண்டே இருந்தனர்.
போகப்போக பெண்களும் இளம்வயதினரும் கொண்டுவரப் பட்டனர்.

பலருக்கு காலரா மலேரியா போன்ற நோய்கள் வந்தன.
நோய் வந்தவர்களை வேலைசெய்யும் நேரம்போக மீதிநேரம் தனியாக ஒதுக்கி வைத்தனர்.
அங்கே யாரும் போகவோ பேசவோ முடியாது.
நோயாளிகளுக்கு எந்த சிகிச்சையும் அளிக்கப்படவில்லை.
பல முறை சீக்காளிகளை மொத்தமாக எரித்துவிடுவர்.

கண்முன்னே தன் சொந்தங்கள் துடிதுடித்து இறந்துபோனதை பலர் தூரத்தில் இருந்து பார்த்தனர்.
பலருக்கு மனநலம் பாதித்து பைத்தியமாகினர்.
ஆனால் ஜப்பானியர் அனைவரையும் வேலை வாங்கினர்.

வேலை செய்தபோது பிள்ளை பெற்ற பெண்ணை உடனடியாக வேலை செய்யவைத்ததும் நடந்தது.

மெசாலி என்ற இடத்தில் தொழிலாளர் முகாமில் உள்ளே நுழைந்த ஓனோ டெரா என்ற சப்பானிய அதிகாரி பத்தொன்பது வயது தமிழ் பெண்ணை தொழிலாளர்கள் முன்பே வல்லுறவு செய்து சில தொழிலாளர்களையும் அவளை வன்புணரச் செய்தார்.
அன்று இரவு மனம் சிதைந்த அந்த பெண் தானே மாண்டுபோனார்.

ஆம்புலன்ஸ் பிரிவின் தலைவர் மேஜர் குடோ என்பவர் தொழிலாளர்களை மிக கொடூரமாக கொடுமைப்படுத்தியுள்ளார்.
பல தமிழ்ப்பெண்களை சீரழித்தார்.
பெண்களை ஜப்பானியர் முன் நிர்வாண நடனம் ஆடச்செய்தார்.
பிறகு அப்பெண்கள் கூட்டாக வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப்பட்டனர்.

தொழிலாளர்களுக்கு எப்போதாவது சிறிது ஓய்வும் கருவாடோடு வாகரிசிக் கஞ்சியும் கிடைத்துள்ளது.

தொழிலாளர்களை கசக்கிப் பிழிந்து வேலை வாங்கி 5 ஆண்டுகளில் நடக்கவேண்டிய வேலை வெறும் ஒன்றரை ஆண்டில் முடிக்கப்பட்டது.

சயாம் மரண ரயில் பணியில் இரண்டரை லட்சம் பேர் இறந்தனர்.

இதில் ஒன்றரை லட்சம் பேர் தமிழர்கள்.

அங்கே மரணமடைந்த போர்க் கைதிகளுக்கு அவரவர் நாட்டைச் சேர்ந்தோர் அழுத்தம் கொடுத்து நினைவிடம் எழுப்பியுள்ளனர்.
ஆனால் அங்கே இறந்த தமிழர்களுக்கு என்று நினைவிடம் இல்லை.
எத்தனை பேர் இறந்தனர்.
அவர்களின் அடையாளம் என்ன? எதுவுமே தெரியவில்லை.

கொடுமை இதோடு முடியவில்லை.
1945ல் ஜப்பானை விரட்டிவிட்டு மீண்டும் ஆங்கிலேய ஆட்சி நடந்தது.
அப்போதும் தொழிலாளர்களை நசுக்குவது தொடர்ந்தது.

1949ல் மலாயா எஸ்.ஏ.கணபதி, வீரசேனன் ஆகியோர் தூக்கில் போடப்பட்டு கொல்லப்பட்டனர்.

1967ல் இந்த படுபாதக செயலுக்காக ஜப்பான் மலேசியாவிடம் இரண்டரை கோடி வெள்ளிகள் இழப்பீடு கொடுத்ததாக அறிவித்தது.

அந்த இழப்பீடை தங்களுக்குத் தர சீனரும் மலாயரும் சங்கம் அமைத்து போராடி வருகின்றனர்.
ஆனால் தமிழர்கள் அடைந்த துன்பத்திற்கு முன் அவர்கள் அடைந்த துன்பம் ஒன்றுமேயில்லை.
 
ஆனால் மலேசியத் தமிழர்களுக்கு சரியான தலைமை இல்லாததால் அந்த நட்ட ஈடும் கிடைப்பதற்கான முயற்சிகள் நடக்கவில்லை.

மலேசியாவில் 1940 களில் மிகப்பெரிய அளவில் தொழிலாளர் போராட்டம் நடத்திய தமிழர் மலாயா கணபதிக்கு அன்று இருந்த தமிழ்ச்சங்கமான 'மலாயா மத்திய இந்தியர் சங்கம்' எந்த உதவியும் செய்யவில்லை.

காரணம்  அதில் வந்தேறிகளே பொறுப்புகளில் இருந்தனர்.
அன்று இருந்த தொழிற்சங்கமான 'தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கம்' எந்த உதவியும் செய்யவில்லை.
காரணம் அன்று அதன் தலைவர் ஆங்கில அடிருடி மலையாளி பி.பி.நாராயணன்.
இந்த மலையாளி 50 ஆண்டுகள் பதவியில் இருந்தார்.
இவருக்கு பிறகு பதவிக்கு வந்த முகுந்தன் நாயர் என்ற மலையாளி இன்றும் அதிகாரத்தில் உள்ளார்.

மலேசியத் தமிழ்ச் சங்கத்தை அன்று நடத்தி வந்தோரும் தெலுங்கு வந்தேறிகளே.
1940களிலும் 1950களிலும் ஈ.வே.ராவையும் காமராசரையும் மலேசியா அழைத்து தமிழ் மாநாடு நடத்தியது கோவிந்தராஜூலு நாயுடு என்ற தெலுங்கரே.

மலேசியாவின் தமிழர்களுக்கான கட்சியாக இன்று விளங்கும் 'மலேசிய இந்திய காங்கிரஸை' 1946ல் தொடங்கியவர் ஒரு தமிழர்.
அதன்பிறகு  50களில் தலைமையில் இருந்தவர் கே.எல்.தேவாசர் என்ற வடயிந்தியர்.
அதன்பிறகு 1955ல் அது தமிழர்கள் கைக்கு வந்தது.
 
அன்று இன்றும் மலேசிய இந்தியரில் 90% தமிழர்கள்.
இன்றும் 80% மேல் தமிழர்கள்.

தமிழர் கட்சியின் தலைமை ஏற்றபிறகு தமிழர்கள் மத்தியில் ஓரளவு ஒற்றுமையும் முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளன.

ஆனாலும் இந்தியர் என்றே அடையாளப்படுத்தப்பட்டு வேற்றினத்தவர் ஊடுருவ வழிசெய்யப்பட்டுள்ளது.

மலேசியத் தமிழர்கள் இந்தியர் என்ற அடையாளத்தை விட்டுவிட்டு
மலேசிய அரசின் இசுலாமிய ஆட்சிக்கெதிராக இந்து என்ற அடையாளத்தை ஏற்காமல் இன அடையாளத்தை மட்டுமே ஏற்றுக்கொண்டு
தம்மோடு விரவி இருக்கும் தமிழ்பேசும் வேற்றினத்தவரை ஒதுக்கிவிட்டு
தமிழராக ஒன்றிணைந்து தமிழர் பகுதிகளில் தற்போதைய நிலையை விட சிறப்பான ஆட்சியை நடத்தவேண்டும்.

Tuesday, 22 November 2016

கம்யூனிசம் என்றால்?

கம்யூனிசம் என்றால்?

இங்கே பலரும் கம்யூனிசத்தை ஏதோ உயர்ந்த கொள்கை போல பேசுகிறார்கள்.

கம்யூனிசம் என்பது அடிப்படையில் முதலாளிகள் செய்யும் இயற்கை அழிவுகளைப் பற்றி கவலைப்படாமல்
அவர்களின் லாபத்தில் பங்கு கேட்கும் கொள்கையே ஆகும்.

ஐரோப்பாவில் 1800களுக்குப் பிறகு மனிதர்கள் மூலம் செய்யும் வேலையை இயந்திரங்கள் மூலம் செய்விக்கும் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன.

தொழிலாளர்களின் முக்கியத்துவம் குறைந்து அவர்கள் நசுக்கப்பட்டனர்.

உற்பத்தி பல மடங்கு அதிகமாகிறது.   இந்த தொழிற்சாலைகளுக்கு தீனி போடவே கடல்கடந்து நாடுகளைப் பிடித்து வளங்களை சுரண்டி கொண்டுவந்து
தொழிற்சாலையில் அதனை பயன்பாட்டுப் பொருளாக மாற்றி
மீண்டும் கடல்கடந்து அதே  நாட்டில் கொண்டுபோய் விற்று
நன்கு கொழுத்தன ஐரோப்பிய நாடுகள்.

அப்போது ஐரோப்பாவின் காற்று நீர் நிலம் என எல்லாமே மாசடைந்து போனது.

இதில் ஏற்பட்ட போட்டியே உலகப்போருக்கு வழிவகுத்தது.

இந்த காலகட்டத்தில் உருவானதே கம்யூனிசம்.

அவர்கள் மாசடைந்த இயற்கைக்காகப் போராடவில்லை.
லாபத்தில் பங்கு கேட்டுத்தான் போராடினர்.
இதற்கு வெளிமுலாம் பூசவே பல்வேறு பிரச்சனைகளை உள்வாங்கி தொடர்புபடுத்தி 'உலகப் போராட்டம் அனைத்தும் வர்க்கப் போராட்டமே' என்று ஒற்றைவரியில் முடித்தனர்.

பேராசான் மார்க்ஸ் கூறிய முதன்மை முழக்கம் 'உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்' என்பது இல்லை,
'உலக நாடுகளின் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்' என்பதே.

அதாவது தொழிலாளர்களுக்குள் சாதி மத பேதமெல்லாம் கிடையாது.

ஆனால் நாடு என்னும் வேறுபாடு உள்ளது என மார்க்ஸ் கூறுகிறார்.

நாடு என்பதற்கு பொதுவான மொழி பொதுவான உணர்ச்சி கொண்ட மக்கள் தனிநாடாக இருக்கவேண்டும் என வரையறை செய்கிறார் மார்க்ஸ்.

இங்கே சுரண்டலை எதிர்த்து போராடும் கம்யூனிஸ்டுகளை நான்,
தாங்கள் சுரண்ட வைத்துள்ளதை வேறொருவன் சுரண்டுவதை எதிர்ப்பதாகவே பார்க்கிறேன்.

ஆக கம்யூனிசம் தமிழர்களுக்கான தீர்வு அல்ல என்பது என் கருத்து.

Monday, 16 May 2016

"எம்டன்" செண்பகராமன் - ஹிட்லரை அடக்கிய நேதாஜியின் குரு

"எம்டன்" செண்பகராமன்
- ஹிட்லரை அடக்கிய நேதாஜியின் குரு

செண்பகராமன் 1891ல் திருவாங்கூர் சமஸ்தானத்துக்குட்பட்ட தமிழர் மண்ணான திருவனந்தபுரத்தில் "நாஞ்சில் வெள்ளாளர்" குடியில் பிறந்த தமிழர்.
அவரது பெற்றோர் திரு.சின்னசாமிப்பிள்ளை, திரு.நாகம்மாள் ஆகியோராவர்.

திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியிலே படித்துக் கொண்டிருந்த செண்பகராமன்.
மாணவர் பருவத்திலேயே விடுதலை உணர்வோடு தீவிரமாக செயல்பட்டு வந்தார்.
ஆங்கிலேயர்கள் மாணவர்களின் குடும்பத்தினரை எச்சரித்தனர்.
மாணவர்களின் தலைவர் போல இருந்த செண்பகராமனுக்கு கல்லூரி நிர்வாகத்திடமிருந்தும் எச்சரிக்கை வந்தது.
இதனால் அவருக்கு நெருக்கடி முற்றியது.
இது பற்றி அறிந்த சர் வால்டர் வில்லியம் ஸ்ரிக்லாண்ட் என்ற ஒரு ஜெர்மன் உளவாளி அவரை ஜெர்மனிக்கு அழைத்துசென்றார்.

1908-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் திகதி தனது 17வது அகவையில் என். எல். ஜி. யோர்க் என்ற ஜெர்மனிய கப்பலில் ஏறி செண்பகராமன் தலை மறைவானார்.

ஏழைக் குடும்பத்தில் பிறந்த செண்பகராமன் ஐரோப்பா சென்று மிகக் குறுகிய காலத்தில் மிகப்பெரிய ஆள் ஆனார்.
இத்தாலியில் போய் இறங்கி சிறிது காலம் அங்கே வாழ்ந்தார்.
அங்கு இலக்கியம், அறிவியல் ஆகிய துறைகளில் தேர்ச்சி பெற்றார்.
பிறகு சுவிட்சர்லாந்திற்குச் சென்றார்.
அங்குள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் செண்பகராமன் பட்டம் பெற்றார்.

பிறகு சுவிட்சர்லாந்திலிருந்து ஜெர்மனியின் தலைநகரான பெர்லினுக்குச் சென்றார்.
அங்கு பொறியியல் துறையில் பட்டம் பெற்றார்.

வேலை செய்து படித்துக்கொண்டே சக இந்தியர்களைத் திரட்டி கூட்டம் போட்டார்.
இந்திய விடுதலை நிகழ்வுகளில் பங்குபெற்று சொற்பொழிவாற்றினார்.
இந்த நேரத்தில்தான் "ஜெய்ஹிந்த்" என்ற சொல்லை உருவாக்கினார்.

ஜெர்மானியர்களிடம் இருந்த பிரிட்டிஷ் வெறுப்புணர்வை புரிந்துகொண்ட செண்பகராமன் அங்கேயே நிலைகொண்டு போராட்டத்தைத் தொடர முடிவெடுத்தார்.
“இந்திய ஆதரவு சர்வதேச கமிட்டி” ஒன்று நிறுவினார்.
டாக்டர் செண்பகராமனே அதற்கு தலைவராக இருந்து “ப்ரோ இந்தியா” (Pro-India) எனும் ஆங்கிலப் பத்திரிகையை ஆரம்பித்து ஐரோப்பிய நாடுகளில் இந்திய விடுதலைக்கு ஆதரவு திரட்டினார்.

1914ல் ஜெர்மானியப் பேரரசராக இருந்த அப்போதிருந்த கெய்சர் வில்ஹெம் செண்பகராமனை அழைத்து ஆங்கில அரசுக்கெதிராக செயல்பட தான் உதவுவதாகக் கூறினார்.
செண்பகராமனின் தோற்றத்தையும் அறிவாளித்தனத்தையும் பார்த்த கெய்சர் அவரைத் தனது நண்பராக ஏற்றுக்கொண்டார்.
அரசு விழாக்களில் தன்னுடன் அழைத்துச்சென்றார்.
ஜெர்மன் அரசின் உயரிய பட்டமான "வொன்" செண்பகராமனுக்கு வழங்கப்பட்டது.

இந்த நேரத்தில்தான் ஆங்கிலேய அரசு தான் நெடுநாட்களாகத் தேடிக்கொண்டிருந்த அந்த தீவிரவாத மாணவன் ஜெர்மனியில் தொடமுடியாத உச்சத்தில் இருப்பது தெரிந்தது.
ஐரோப்பிய நாடுகளில் உள்ள இந்தியரைத் திரட்டி ஆங்கில அரசுக்கெதிரான செருமானிய நடவடிக்கைகளில் ஒத்துழைக்க செண்பகராமன் முயல்வதும் தெரியவந்தது.

1914 முதல் உலகப்போர் மூண்டது.
ஜெர்மனியில் வாழும் இந்தியரைத் திரட்டி ஐ.என்.ஏ (Indian national volunteers) என்ற தொண்டர் படையை நிறுவினார்.

ஜெர்மனியின் எம்டன் (Emden) என்ற போர்க்கப்பலை செண்பகராமன் பெற்றுக்கொண்டு இந்தியப் பெருங்கடலில் ஆங்கில அரசின் கட்டுப்பாட்டுப் பகுதிகளைத் தாக்கினார்.

1914ல் செப்டம்பர் 22 எம்டன் கப்பல் கடலில் நின்றபடி சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையை தாக்கிவிட்டு மறைந்தது.
அது தாக்கிய விதத்தை மக்கள் இன்றும் மறக்கவில்லை.
பயங்கரமான ஆட்களை எம்டன் என்ற பெயர்கொண்டு இன்றும் சென்னை மக்கள் அழைக்கிறார்கள்.

அன்று அந்த கப்பலின் தலைமைப் பொறியாளராகவும் இரண்டாம்கட்ட தளபதியாகவும் இருந்தது ஒரு 23 வயதான தமிழர் என்ற உண்மை யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.

1915ல் வீரேந்தர்நாத் சட்டோபாத்யாய் என்பவர் மூலம் வங்காள ஆயுத போராளிகளான ஜுகாந்தர் குழுவிற்கு ஆயுதங்களை அனுப்பிவைத்து உதவினார்.

1916 ஆப்கானிஸ்தான் மீது பிரிட்டிஷ் படை எடுத்தது.
அப்போது காபூலில் 'நாடுகடந்த இந்திய அரசாங்கத்தை' ஜெர்மனியின் கூட்டுப்படைகளின் ஆதரவுடன் இந்திய தலைவர்கள் ஏற்படுத்தினர்.
அதில் வெளியுறவு அமைச்சராக செண்பகராமன் நியமிக்கப்பட்டார்.

ஜெர்மனி போரில் தோற்றதும் 1919 ல் அங்கிருந்து ரஷ்யா தப்பிச்சென்று லெனினைச் சந்தித்து உரையாடினார்.

ஜெர்மனி சரணடைந்து வெர்ஸெயிர்ல்ஸ் உடன்படிக்கை கையெழுத்தானபோது செண்பகராமனை பிரிட்டனிடம் ஒப்படைக்க ஆங்கிலேயர் கோரினர்.
ஆனால் தமக்கு பெரிதும் உதவிய செண்பகராமனை ஜெர்மானியர் ஒப்படைக்க மறுத்துவிட்டனர்.

பிறகு ஜெர்மனி திரும்பிய செண்பகராமன் ஜனநாயக நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.

உலகில் அத்தனை மூலைகளிலும் ஒடுக்கப்பட்ட மக்கள் இருப்பதைக் கண்ட செண்பகராமன் “ஒடுக்கப்பட்ட மக்களின் சங்கம்”
“ கீழ் நாட்டவர் சங்கம்” ஆகிய அமைப்புகளைத் தொடங்கினார்.
இவற்றின் கிளைகளை நிறுவுவதற்காக பன்னிரண்டு மொழிகளில் மிகச் சரளமாக பேசும் திறமைபெற்ற செண்பகராமன் பட்டேவியா, பர்மா, சயாம், சீனா, எகிப்து, துருக்கி, அமெரிக்கா, தென்ஆபிரிக்கா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்தார்.

அமெரிக்கா சென்றபோது செண்பகராமன்  கறுப்பர்கள் வாழும் பகுதிகளுக்கு சென்று சொற்பொழிவாற்றினார்.
கறுப்பின மக்களுக்காக அன்றைய அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சனை சந்தித்து நெடுநேரம் உரையாடினார்.

பிறகு தென்னாப்பிரிக்கா சென்றார்.
ஆங்கில அரசின் கட்டுப்பாட்டில் இருந்த தென்னாப்பிரிக்காவில் செண்பகராமன் நுழைந்தது தெரிந்ததும் பிரிட்டிஷ் அரசு அவர் தலைக்கு ஒரு லட்சம் பவுண்ட் அறிவித்தது.

அவர் பயணம் செய்த எல்லா இடத்திலும் பிரிட்டிஷ் உளவாளிகள் அவரைப் பிடிக்க தொடர்ந்து முயற்சித்துக் கொண்டேயிருந்தனர்.
மாறுவேடமிடுவதிலும் பெயர்மாற்றிக்கொண்டு எல்லையைக் கடப்பதிலும் வல்லவரான செண்பகராமனை அவர்களால் பிடிக்கவேமுடியவில்லை.
அவர் உலகின் பல மூலைகளில் தோன்றி மறைந்து பிரிட்டிஷ் அரசைக் குழப்பினார்.

இறுதியில் பெர்லினுக்கே திரும்பிவிட்டார்.

1930-ம் ஆண்டில் இந்திய வர்த்தக சபை சமாஜத்தின் பெர்லின் பிரதிநிதியாக நியமனம் செய்யப்பெற்றார்.
பெர்லின் நகரில் வாழ்ந்துவந்த மணிப்பூரைச் சேர்ந்த லஷ்மி பாய் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.

முதலாம் உலகப்போர் முடிந்திருந்த நேரம் ஒரு உணவு விடுதியில் செண்பகராமன் அமர்ந்திருந்தபோது
அடால்ப் ஹிட்லர் என்ற ஒரு இளைஞன் ஜெர்மானியர் உயர்ந்த ஆரிய இனமென்றும்
அவர்களே உலகை ஆளவேண்டும் என்றும்
இந்தியர்கள் ஜெர்மானியரால் ஆளப்படவேண்டிய கீழ்மக்கள் என்றும் ஒரு சிறிய குழு முன் நின்று சத்தமாகப் பேசிக்கொண்டிருந்தான்.

உடனே அருகிலிருந்த செண்பகராமன் அவனை விவாதத்திற்கு அழைத்து இந்தியர்கள் ஒன்றும் கீழ்மக்கள் இல்லை என்று வரலாற்று ஆதாரங்களுடன் நிறுவி அவனது திமிரை அடக்கினார்.
ஹிட்லர் எழுத்து மூலம் மன்னிப்பு கேட்ட பிறகே அவனை விட்டார்.
( அன்று அதிகம் அறியப்படாத அந்த இளைஞனே பின்னாளில் ஜெர்மனிய அதிபராகி
தன் உயிரைப் பறிப்பான் என்று அவர் கனவிலும் நினைத்திருக்கமாட்டார்)

ஜெர்மனி செல்லும் இந்திய தலைவர்கள் அனைவரும் செண்பகராமனை போய்ப் பார்க்காமல் வருவதில்லை.
சுபாஷ் சந்திரபோஸ், ஜவஹர்லால் நேரு, அவரது தந்தை பண்டித மோதிலால் நேரு, லால்சந்த், ஹீராசந்த், விட்டல்பாய் பட்டேல் ஆகியோர் டாக்டர்.பிள்ளையின் வீட்டில் தங்கியவர்கள் ஆவர்.

நேரு தனது சுயசரிதையில் பொறாமையுடனும் வெறுப்புடனும்
கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார்.
"நாடுகடத்தப்பட்டவர்களில் ஒருவரான டாக்டர் செண்பகராமன் பிள்ளையைச் சந்தித்தோம்.
அவர் பழைய யுத்தகோஷ்டியைச் சேர்ந்தவர்களில் பெயர்பெற்ற அங்கத்தவர்.
பெர்லினில் அவர் மிக படாடோபமாக வாழ்ந்துவந்தார்.
அங்குள்ள இளம் மாணவர்கள் அவருக்கு பொருத்தமற்ற பட்டம் ஒன்றை வழங்கினர்.
டாக்டர் பிள்ளை தேசியம் ஒன்றில் மட்டுமே தம் சிந்தனையைச் செலுத்தினார்.
பொருளாதார, சமூக பிரச்சனைகளில் போதிய அக்கறை காட்டவில்லை.
உருக்கு தொப்பி அணிந்த ஜெர்மனிய தேசியவாதிகளுடன் எவ்வித வேறுபாடுமின்றி மிக சகஜமாகப் பழகினார்.
நாஜிக்களுடன் கலந்து சற்றும் பயமின்றி பணிபுரிந்த சொற்ப இந்தியர்களில் டாக்டர் பிள்ளை முதன்மையானவர்.
நான் மீண்டும் சிறையில் இருந்த காலத்தில் பெர்லின் நகரில் டாக்டர் பிள்ளை மரமடைந்ததைக் கேள்வியுற்றேன்"

17வயதில் தலைமறைவான செண்பகராமன் பிள்ளை.
1933 அக்டோபர் 7 அன்று தனது  தலைமறைவு வாழ்க்கையின் 25வது ஆண்டைக் கொண்டாட ஒரு விழா ஏற்பாடு செய்தார்.
ஜெர்மனியின் பெரிய மனிதர்கள் அனைவரும் அதில் கலந்துகொண்டனர்.

ஹிட்லரை அடியபணிய வைத்த அந்த வீரத்தமிழ்மகன் ஹிட்லர் ஆட்களால் மெல்லக்கொல்லும் நஞ்சு கொடுக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

1934 மே 26 அன்று செண்பகராமன் சாகும் முன் தன் மனைவியிடம் கடைசி ஆசையாக,
தன் அன்னையின் அஸ்தி கரைக்கப்பட்ட அதே கரமனை ஆற்றில் தன் அஸ்தியில் பாதியைக் கரைத்துவிட்டு நாஞ்சில் நாட்டு வயல்களில் மீதி அஸ்தியைத் தூவுமாறு கூறிவிட்டு இறந்தார்.

நாஜிகள் அவரது உடலை எரியூட்டியபிறகு அவரது மனைவி கெஞ்சி கதறி அவரது அஸ்தியை வாங்கிக்கொண்டார்.
பிறகு அவர் நாஜிக்களால் மனநல மருத்துவமனையில் அடைத்துவைக்கப்பட்டார்.
அங்கிருந்து தப்பி இத்தாலி சென்று ஸ்பெயின் வழியே 1936ல் மும்பை வந்து சேர்ந்தார்.
அதன்பிறகு அவர் தன் கணவனின் கடைசி ஆசையை நிறைவேற்ற 30 ஆண்டுகள் படாதபாடு பட்டார்.
நேருவும் காந்தியும் கூட அவரது அஸ்தியை இந்தியா கொண்டுவர ஒத்துழைக்கவில்லை.

Free Press Journal of Bombay என்ற பத்திரிக்கை செம்டம்பர் 12, 1966 அன்று வெளியிட்ட செய்தி கீழ்வருமாறு
" In early 1930's Dr.Pillai incurred the wrath of Hitler whose ominous rumblings were just beginning to be heard.
In May 1934, Pillai died of suspected slow poisoning.
His body was cremated in Berlin."

லட்சுமிபாயின் பெருமுயற்சிக்கு கிடைத்த வெற்றியாக செண்பகராமன் இறந்து 32ஆண்டுகள் கழித்து 1966 செபடம்பர் 19ல் இந்தியாவின் முதல் போர்க்கப்பலான ஐ.என்.எஸ்.டெல்லி மூலம்,
மும்பையிலிருந்து எர்ணாகுளம் வரை செண்பகராமனின் அஸ்தி எடுத்துவரப்பட்டு கரமனை ஆற்றில் கரைக்கப்பட்டது.
ஆனால் நாஞ்சில் வயல்களில் தூவப்படவில்லை.
அந்த தமிழனின் கடைசி ஆசை கூட அரைகுறையாகத்தான் நிறைவேற்றப்பட்டது.

செண்பகராமனைப் பற்றி அவர் உதவி செய்த வங்காள ஆயுத போராளிகள் மூலம் அறிந்த சுபாஷ் சந்திரபோஸ் அவரை ஒருமுறை சந்தித்தார்.
அவர் இறந்துபோன பிறகு அவர் வழியிலேயே போராட முடிவு செய்தார்.
காங்கிரசிலிருந்து விலகினார்.
1941ல் ஆங்கிலேயரிடமிருந்து தப்பி ஜெர்மனி சென்று அதன் அதிபர் ஹிட்லரிடம் உதவி கேட்டார்.
ஜெர்மானிய நீர்மூழ்கி கப்பல் மூலம் தனது நட்பு நாடான ஜப்பானுக்கு ஹிட்லர் அவரை அனுப்பினார்.
ஜப்பானிடம் இருந்த இந்திய கைதிகளைக் கொண்டு செண்பகராமனனின் I.N.V போலவே I.N.A ஐத் தொடங்கி செண்பகராமனின் முழக்கமான ஜெய்ஹிந்தையே தனது முழக்கமாகவும் வைத்துக்கொண்டார் நேதாஜி.
ஆக நேதாஜியின் குரு செண்பகராமனே.

உசாத்துணை:-
நூல்: மாவீரன் செண்பகராமன் (1968)
ஆசிரியர்: யோகா பாலச்சந்திரன்
வெளியீடு: கொழும்பு கலைச் சங்கம்

படம்: நக்கீரன்
-------------------------
செண்பகராமன் ஒரு குசராத்தியாகவோ தெலுங்கராகவோ இருந்திருந்தால் சாலைகள், கல்லூரிகள், நிலையங்கள், சிலைகள், பாடப்பகுதி என்று தூள்கிளப்பியிருப்பார்கள்.
தமிழன் என்பதால் பெயர்கூட வெளிவரவில்லை.
தமிழகத்தில் படேல் சாலையும், காந்தி நகரும், நேரு அரங்கமும், ஓமந்தூரார் கட்டடமும் இருக்கும்.

ஆனால் செண்பகராமனுக்கு தமிழகத்தில் ஓரே ஒரு சிலைதான் உள்ளது.
அதுவும் இறந்து 75 ஆண்டுகள் கழித்து 2009ல்தான் நிறுவப்பட்டது.

தமிழகத்துக்கு வெளியே ஒரு முட்டுசந்துக்குக் கூட ஒரு தமிழ்த்தலைவர் பெயர்கூட இல்லையே அது ஏன்?

டெல்லியில் பாரதி பெயரில் ஒரு சாலை உள்ளது.
அவர் பார்ப்பனத் தமிழராக இல்லையென்றால் அதுகூட இருக்காது.

தமிழர்கள் இந்திய சுதந்திரத்திற்காக சிந்திய குருதி அனைத்தும் விழலுக்கு இரைத்த நீராய் வீணாகப் போனதே?!

இந்தியா தமிழர்களுக்கான நாடா?

Sunday, 4 October 2015

ஹிட்லரை மன்னிப்பு கேட்கவைத்த தமிழன்

ஹிட்லரை மன்னிப்பு கேட்கவைத்த தமிழனின் சாம்பலைக் கூட கொண்டுவராமல் அசட்டை செய்த இந்தி'யா

நேதாஜிக்கு முன்பே ஆங்கிலேயரின் கீழ்  போர் செய்து ஜெர்மனிடம் தோற்று கைதியாக இருந்த இந்திய சிப்பாய்களை திரட்டி, இந்தியாவை விடுவிக்க முதன்முதலாக படை அமைத்தவர்;
ஹிட்லரையே மன்னிப்பு கேட்க வைத்தவர்;
'எம்டன்' கப்பலின் தலைவராக சென்னைவரை வந்து கோட்டையைத் தாக்கியவர்;
மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு, சுபாஷ்
சந்திர போஸ் ஆகியோர் தாமே சென்று சந்திக்கும் அளவுக்கு பெரிய மனிதர்;
வீரத்தமிழன் செண்பகராமன்;
1934ல் மரணிக்கும் முன்பு கடைசி விருப்பமாக "நான்பிறந்த தமிழ் நாட்டில், என் அன்னையின் அஸ்தி சங்கமமான கரமனை ஆற்றில்கரைத்துவிடு, மறுபகுதியை நாஞ்சில் நாட்டின் வளமிக்க
வயல்களில் தூவிவிடு" என்று மனைவியிடம் கூறியிருந்தார்;
ஹிந்தியா 1947ல் போலி விடுதலை அடைந்த பிறகும்கூட பல ஆண்டுகாலம் (மணிப்பூரைச் சேர்ந்த) அவரது மனைவி அலையாய் அலைந்துதான் அதை 1966ல் நிறைவேற்றினார்;
ஹிந்தியர்களும் வரலாற்றில் நம் செண்பகராமன் பெயரையே இல்லாமல் அழித்துவிட்டனர்;
பல ஆண்டுகளுக்குப் பிறகு 2009ல்தான் இவருக்கு சிலை நிறுவப்பட்டுள்ளது(தமிழகத்தில்தான்);
செம்பகராமன் யார் என்று பெரும்பாலான தமிழருக்கே தெரியாது .

_________________
பெருமையில் வெடித்ததே நெஞ்சம்
செந்தமிழ் வீரனே செண்பகராமனே
http://noolaham.net/project/02/185/185.htm

உன் இறுதிவிருப்பம்கூட அரைகுறையாகத்தான் நிறைவேறியதா ?!
பாவிகளே இந்தியப் பாவிகளே ?!?!

Monday, 13 July 2015

மூன்றாம் உலகப்போரும் தமிழ் இனவெழுச்சியும்

மூன்றாம் உலகப்போரும்
தமிழ் இனவெழுச்சியும்

ஓட்டோமான் பேரரசின் (Ottoman empire) ஆதிக்கத்தை எதிர்த்த 'செர்பிய இனவெழுச்சி' முதல் உலகப்போரைத் (WW1) தோற்றுவித்தது.

முதல் உலகப்போரில் வென்றநாடுகளின் (Allied powers) ஆதிக்கத்தை எதிர்த்த 'ஜெர்மானிய இனவெழுச்சி' இரண்டாம் உலகப்போரைத் (WW2) தோற்றுவித்தது.

ஹிந்திய ஆதிக்கத்தை எதிர்த்த 'தமிழ் இனவெழுச்சி' மூன்றாம் உலகப்போரைத் (WW3) தோற்றுவிக்கலாம்.
===================
மேலும்
https://m.facebook.com/photo.php?fbid=566942160076108&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739

Sunday, 12 July 2015

உலகில் பிரிவினை கோரும் பகுதிகள்

உலகில் பிரிவினை கோரும் பகுதிகள்

2009ல் வெளியிடப்பட்ட இப்படத்தில் தமிழகமும் உள்ளது.

ஆந்திராவும் உள்ளது நக்சலைட் பகுதியைக் குறிப்பதற்காக இருக்கலாம்
(search- What would the world look like if
all separatists won)
======================

கட்டுப்பாட்டுப் பகுதி வைத்திருக்கும் ஆயுதக்குழுக்கள்
https://m.facebook.com/photo.php?fbid=539951379441853&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&source=56

Saturday, 6 December 2014

ஹோ சி மின் பெற்றுத்தந்த இனவிடுதலை

ஹோ சி மின் பெற்றுத்தந்த இனவிடுதலை

ஹோஹோஹோஹோஹோஹோ

கம்யூனிசம் என்பது முதலில் ஒரு தேசிய இனம் தனக்கான நாட்டை அமைத்தபிறகு நடக்கவேண்டியது என்பதை வியட்நாம் நமக்கு உணர்த்துகிறது.

உலக வல்லரசு என மார்தட்டிய அமெரிக்காவை போரில் மண்ணைக் கவ்வ வைத்த மாபெரும் தலைவர் வியட்நாமின் தந்தை ஹோ சி மின்,
முதலில் தேசியவாதி பிறகுதான் பொதுவுடைமைவாதி என்ற நிலைப்பாட்டையே கொண்டிருந்தார்.

1930ல் அவர் இந்தோ-சீனாவில் (அப்போது பிரெஞ்சுக்காரர்கள் ஆண்ட நிலப்பகுதி) இருந்த பொதுவுடைமைக் கட்சிகளை அழைத்து மூன்று மொழிபேசும் மக்களுக்காக மூன்று கட்சிகள் இருக்கவேண்டும் என்று அறிவுறுத்தி,
அன்னாம், டொன்கின், கொச்சின்சீனா என மூன்றாகப் பிரிந்துகிடந்த வியத்நாமிய கம்யூனிஸ்டுகளை ஒரே கட்சியாக இணைத்தார்.

இரண்டாவதாக இன்னொரு எடுத்துக்காட்டைத் தரமுடியும்.

இரண்டாம் உலகப்போரின்போது 1945ல் ஜப்பானியர்கள் இந்தோசீனாவை பிரெஞ்சுக்காரர்களிடமிருந்து கைப்பற்றிக்கொண்டனர்.
யப்பான் தோற்றபிறகு
வியட்நாமியர்கள் மக்கள் புரட்சி மூலம் அரசு அலுவலகங்கள் அனைத்தையும் கைப்பற்றிக்கொண்டனர்.

1945, செப்டம்பர், 2.
பா-டின்ஹ் சதுக்கத்தில் ஹோசிமின் சுதந்திரப் பிரகடனத்தை வாசித்தார்.

அதில் அவர் ஐக்கிய அமெரிக்கா 1776ல் வெளியிட்ட சுதந்திரப் பிரகடனத்தையும், பிரெஞ்சு புரட்சியையும் மேற்கோள் காட்டியுள்ளாரேயன்றி இரசிய புரட்சியையோ, ரஷ்ய கம்யூனிஸ்ட் அரசைப் பற்றியோ கூறவேயில்லை.
தமது தாய்நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருந்த சப்பானியர்களையும், பிரெஞ்சுக்காரர்களையும் எதிர்த்துப்போராடிய நாட்டுப்பற்று கொண்ட மக்களின் தலைவனாகத்தான் அங்கே அவர் நின்றுகொண்டிருந்தார்.

அந்த பிரகடனத்தில் கூறுகிறார்,
"அவர்கள் (சப்பானிய, பிரெஞ்சு ஆட்சியாளர்கள்) மனித விரோத சட்டங்களை கொண்டுவந்தனர்.
*தேசபக்தர்களை* ஈவிரக்கமின்றி கொன்றனர்.
கருத்துக்களைக் கூறவிடாமல் வாய்ப்பூட்டு போட்டனர்.
கஞ்சாவையும் மதுவையும் கொடுத்து *நம் இனத்தை* பலவீனப்படுத்தினர்.
இயற்கை வளங்களை அபகரித்தனர்.
புதுப்புது வரிகளை விதித்தார்கள்.
நமது ஏற்றுமதி இறக்குமதியை அவர்கள் கைகளில் வைத்துக்கொண்டனர்.
விவசாயிகளை வறுமைக்குத் துரத்தினார்கள்.
*நமது தேசிய முதலாளிவர்க்கம் வளம்பெறாமல் தடுத்தார்கள்*
நம் தொழிலாளர்களைச் சுரண்டினார்கள்".
(மேற்கண்ட சுரண்டல் நிலையில்தான் தமிழினம் இன்று இருக்கிறது).

ஆக நாட்டுப்பற்று கொண்ட ஒரு தலைவன் தமது இனத்தை ஒன்றுதிரட்டி அந்நியர்களின் சுரண்டலுக்கு உள்ளாகியிருக்கும் தமது தாய்நாட்டை புரட்சி மூலம் விடுவித்து அதன் பிறகு தமது இனத்திற்குள்ளே இருக்கும் முதலாளி வர்க்கத்தை கட்டுக்குள் கொண்டுவர கம்யூனிசத்தைப் புகுந்துவதுதான் சரியான வழி.
ஹோசிமின் காட்டிய வழி.

சாதிப் பிரச்சனை, மதப்பிரச்சனை, வர்க்கப் பிரச்சினை, சீர்திருத்தம் ஆகியன தாய்மண்ணின் விடுதலைக்குப் பிறகு நடந்தேறவேண்டியவையே.

அந்நிய ஆட்சியில் இருந்துகொண்டு இந்த மாற்றங்களை எதிர்பார்ப்பது அடிமுட்டாள்த்தனம்.
இங்கே என்ன நடக்கிறது?
ஹிந்தியாவிடமும் சிறிலங்காவிடமும் சுரண்டலில் கொள்ளைபோய்க்கொண்டு இருக்கும் தமிழினத்தில்,
தலித் அமைப்புகள் இனம்தாண்டி கைகோர்க்க முனைகின்றனவேயன்றி தனது தேசியவிடுதலைக்கு உழைப்பதில்லை.
சாதிய அமைப்புகளும் அப்படியே.
எப்படி வியட்நாம் மூன்றாக பிறகு இரண்டாக துண்டாடப்பட்டதோ அப்படியே தமிழ்மண்ணும் ஈழம்-தமிழகம் என்று துண்டாடப்பட்டுள்ளது.
மத அமைப்புகளும் அப்படியே.
அடிமையாக இருக்கும் நாட்டுக்குள் இருந்துகொண்டு அவர்கள் வீசியெறியும் சொற்ப அதிகாரத்தைக் கைப்பற்ற அடித்துக்கொள்கிறார்களே ஒழிய நாட்டுவிடுதலையை தமிழ்த்தேசிய கட்சிகள் உட்பட யாரும் கவனத்தில்கொள்ளவில்லை.

விடுதலைக்குப் பிறகு நடக்கவேண்டிய மாற்றங்களை முன்னரே வலியுறுத்துவதன் மூலம் விடுதலையையும் மாற்றத்தையும் தாமதப்படுத்துகிறார்கள்.
அடித்தளம் கட்டும் முன்பே கதவுகளைப் பற்றி யோசிக்கிறார்கள்.

அன்று வியத்நாம் இருந்தநிலையில் நாம் இன்று இருக்கிறோம்.
தமிழ் கம்யூனிஸ்டுகளே!
உங்களுக்குள் ஒரு ஹோசிமின் எப்போது வரப்போகிறார்????

(ஏட்டுச் சுரைக்காய் பொதுவுடைமை
https://m.facebook.com/photo.php?fbid=403019206468405&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739 )