Showing posts with label கம்யூனிசம். Show all posts
Showing posts with label கம்யூனிசம். Show all posts

Thursday, 12 September 2019

ஈ.வே.ரா ஒரு கம்யூனிஸ்டாம்

ஈ.வே.ரா ஒரு கம்யூனிஸ்டாம்

வந்தேறி:-
உங்களுக்கு தெரியாது தோழர்!
ஈ.வே.ரா மாதிரி ஒரு கம்யூனிஸ்ட்ட பாக்கவே முடியாது.
அவரு ஆங்கிலேயர் ஆட்சியை முழுமையா ஆதரிச்சாரு.
அவங்களும் அவர மதிச்சாங்க.
ஆனா பாருங்க! அவர் வாழ்நாள்லயே ஒரே ஒரு தடவ அவருக்கும் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கும் பிரச்சன வந்தது.
அது ஏன்னா கம்யூனிச ஆதரவு பேசினப்பதான்.
அப்பறம் 26.02.1966 ல "ரஷ்யப் படையெடுப்பை வரவேற்கிறேன்" அப்டின்ற தலைப்புல புரட்சிகரமா ஒரு கட்டுரை எழுதிருக்காரு பாருங்க.
"இந்தியா மீது ரஷ்யா படையெடுத்து வருமானால், அதை நான் எதிர்க்க மாட்டேன்; வரவேற்பேன்!
ஏனென்றால், நானே ரஷ்யா சென்றிருந்தபோது, கம்யூனிஸ்ட் உறுப்பினர் ஆனவன்தான்!" அப்டினு எழுதிருக்கார்.

தமிழன்:-
டேய்! டேய்! ரொம்ப பூ சுத்தாதீங்கடா!
அந்த ஆளு வெள்ளக்காரனுக்கு விசுவாசமா கடைசிவரைக்கும் இருந்தாரு!
நல்ல வருமானம் சேந்துச்சு!
என்ஜாய் பண்ண வெளிநாடெல்லாம் சுத்திபாத்தாரு.
அப்படி உலக பயணம் போனப்ப ரஷ்யாவுக்கு போய் எட்டிபாத்துட்டு வந்தாரு.
அதுக்கே மூணாங்கிளாஸ் தாண்டாத அவர ரஷ்யாக்காரன் ஆலத்தி எடுத்து வரவேற்று 3000 பேர் கூடி சொற்பொழிவு ஆத்த சொன்னாங்கனு ஏற்கனவே ஒரு முழம் பூவ காதுல சுத்திட்டிங்க.

அவரு சுற்றுலா முடிஞ்சி திரும்பி வந்து அந்த அறுபவத்த எழுதறப்போ கம்யூனிசம் பத்தி ஏதோ கிறுக்கினாரு.
கம்யூனிசம் புடிக்காத வெள்ளக்காரன் தன் அடிமைனு கூட பாக்காம தன்னோட கைப்பாவை அரசான ஜஸ்டிஸ் கட்சியை விட்டு அந்தாள உள்ள தூக்கி போட்டுட்டான்.
வெளிய வந்து பேசாம இருக்கலாம்னா ஜீவானந்தம் வந்து உண்மையான கம்யூனிஸ்ட்டான பகத் சிங் எழுதின "நான் ஏன் நாத்திகன்" புத்தகத்த வெளியிட கூப்டுறாரு.
ஈ.வே.ரா பயந்துகிட்டு தான் போகாம தன் பத்திரிக்கை ஆசிரியரான தன்னோட சகோதரன அனுப்புறாரு.
அவரும் போய் மேடைல ஓரமா உக்காந்துட்டு வந்துடுறாரு.
பகத் சிங் பேர கேட்டதும் கொலவெறியான வெள்ளைக்காரன் அத வெளியிட்ட அத்தனபேரயும் புடிச்சுட்டு போய் தேசதுரோகம் பண்ணதா கேஸ் போட்டு நொங்க பிதுக்கிட்டான்.
ரெண்டுபேரும் "தெரியாம பண்ணிட்டோம்" னு கெஞ்சி மன்னிப்பு கேட்டாங்க.
  அத எழுதி வாங்கின வெள்ளக்காரன் பத்திரிக்கைல இத போடணும்னு கட்டளை போட்டான்.

அதுபடி 24.03.1935 அன்னக்கி ஈ.வே.ரா பத்திரிக்கைல மன்னிப்பு கேட்ட செய்திய வெளியிட்டாரு.
அப்பறம் கம்யூனிசம் பத்தி மூச்சு கூட விடலயே!
வெள்ளக்காரன் போயி 20 வருசம் கழிச்சுதான் மறுபடி வாயத் தொறக்கறாரு.

அதுவும் ஏன்?!
சீனாவோட போர்ல இந்தியா தோத்துருது.
திராவிட இயக்கங்கள் இத வச்சிகிட்டு நேருவ நக்கல் பண்றானுக.
கடுப்பான நேரு தனிநாடு பேசுறவங்க தேர்தல்ல போட்டிபோட முடியாதபடி பிரிவினைவாத தடுப்பு சட்டம் போடுறாரு.

அண்ணாதுரை உடனடியா "திராவிட நாடு" கோரிக்கையை கைவிடுறோம் னு அறிக்கை விட்டுட்டு நேரு கால்ல விழுறாரு.

ஈ.வே.ரா ஒடனே "பாக்கிஸ்தானோ, சீனாவோ இந்தியாமீது படையெடுத்தால், முறியடித்துத் துரத்திடவே நான் விரும்புகிறேன்;
அதற்காக ஒத்துழைக் கிறேன்.
ஆனால் இந்தியாமீது ரஷ்யா படையெடுத்து வருமானால், அதை நான் எதிர்க்க மாட்டேன்; வரவேற்பேன்!" அப்டினு எழுதுறாரு.

அதாவது "நா அடுத்தவனுக்கு அடிமையா இருப்பேன் ஆனா தனிநாடு கேட்கமாட்டேன்"னு சுத்திவளைச்சு சொல்றாரு.

நேரு காலடில அண்ணாதுரை ஸ்ட்ரெயிட்டா சம்மர் சால்ட் அடிச்சாருன்னா
ஈவேரா தலைகீழா சம்மர் சால்ட் அடிச்சிருக்கார்.
அவ்ளதான்.

புகைப்படத்திற்கு நன்றி: கதிர் நிலவன்

Sunday, 26 August 2018

தமிழ்தேசியக் கருத்தியல் ஒப்பீடு

தமிழ்தேசியக் கருத்தியல் ஒப்பீடு

கேள்வி: உலகம் அழிய ஒரு மணிநேரம் உள்ளது.
அதை யாராலும் தடுக்கமுடியாது.
நீங்களும் ஒரு அழகான இளம்பெண்ணும் ஒரு தனி அறையில் இருக்கிறீர்கள்.
என்ன செய்வீர்கள்?

சாமானியன்:
அந்த பெண்ணை உடலுறவுக்கு அழைப்பேன்.
மறுத்தால் கட்டாயப் படுத்துவேன்.

காந்தியவாதி:
வலிக்காமல் எப்படி தற்கொலை செய்துகொள்வது என்று சொல்லிகொடுப்பேன்.
நானும் அவளுக்கு இடைஞ்சல் இல்லாமல் சாவேன்.

பெண்ணாதிக்கவாதி:
நான் அந்த பெண்ணாக இருந்தால் உடைகளை விலக்கி உடலுறுப்புகளைத் திறந்துகாட்டி அந்த ஆண் நெருங்கி வரும்போது அவன் பார்வையில் தவறு உள்ளதாக குற்றம்சாட்டுவேன்.
இளைத்தவன் என்றால் அவனை அடித்து உதைப்பேன்.

கிறித்துவவாதி:-
பைபிளில் கூறியபடி உலகம் அழிகிறது எனவே அவளிடம் கிறித்தவத்திற்கு மாறினால் நரகத்தில் இருந்து தப்பிக்கலாம் என்று கூறி மதம் மாறச்செய்வேன்.
இருவரும் பாவ மன்னிப்பு கேட்போம்.

இந்துத்துவவாதி:-
கலியுகம் முடியப் போகிறது.
மனிதர்களின் பாவம் எல்லை கடந்துவிட்டதால் கடவுள் உலகத்தை அழிக்கிறார்.
எனவே அவளுக்கு ஸ்லோகம் சொல்லிக்கொடுத்து பிரார்த்தனையில் ஈடுபடச்சொல்வேன்.

இசுலாமியவாதி:
அவளை மதம் மாறச்சொல்வேன்.
அவளை பர்தாவால் மூடி ஓரமாக அமரவைத்து விட்டு நான் தொழுகையில் ஈடுபடுவேன்.

பௌத்தவாதி:
அவள் உடலுறவுக்கு அழைத்தால் அந்த ஆசையை விடச் சொல்வேன்.
இருவரும் உண்ர்ச்சியின்றி அமர்ந்திருப்போம்.

சமணவாதி:
உடைகளைக் களைந்துவிட்டு அமர்வோம்.
என்னை நானே துன்புறுத்திக் கொள்வேன்.

ஆன்மீகவாதி:-
இருக்கும் நேரத்தை எப்படி சந்தோசமாக கழிப்பது என்று பார்ப்பேன்.
தியானம், யோகா செய்வேன்.
கவலைகளை மறந்து மகிழ்ச்சியான தருணங்கள் பற்றி கலந்துரையாடுவோம்.

நடுநிலைவாதி:
உலகம் அழிந்ததில் எங்கள் இருவர் மீதும் சமமான தவறிருக்கிறது என்று அவளுக்கு புரியவைப்பேன்.
அவள் மறுத்தால் வாக்குவாதத்தில் ஈடுபடுவேன்.

மனிதநேயவாதி:
அவளுக்கு உடலுறவு தேவைப்படுகிறதா என்று கேட்பேன்.
அவளுடைய ஆசை எதையாவது கூறினால் அதை என்னால் நிறைவேற்றமுடியுமா என்று பார்ப்பேன்.

திராவிடவாதி:
உலக அழிவு பார்ப்பனரால் வந்தது என்றும் பெரியார் இருந்திருந்தால் இதை எப்படியெல்லாம் தடுத்திருப்பார் என்றும் பத்து புத்தகம் எழுதுவேன்.

பொதுவுடைமைவாதி:
உலக அழிவு பெருமுதலாளிகளால் வந்தது என்பதையும்
இயற்கையை அழித்து அவர்கள் அடைந்த லாபத்தில் தொழிலாளர்களுக்கு பங்கும் கொடுக்கவில்லை என்பதையும் அவளுக்கு கடினமான வார்த்தைகளால் புரியவைக்க முயற்சிப்பேன்.

தலித்தியவாதி:
உயர்சாதியினர் அழிந்தனர் என்று சந்தோசப்படுவேன்.
அந்த பெண் உயர்சாதி என்றால் காலில் விழுந்து என்னை எதுவும் செய்துவிடவேண்டாம் என்று கேட்டுக் கொள்வேன்.
அவள் உடலுறவுக்கு அழைத்தால் கத்தி கூப்பாடு போடுவேன்.

சோசலிசவாதி:
அவளுடன் நட்பாக பேசி தொட்டு உணர்ச்சிகளைத் தூண்டி உடலுறவுக்கு சம்மதிக்க வைப்பேன்.
மறுத்தால் கோபம் கொள்ளாமல் நட்புடன் பேசுவதைத் தொடர்வேன்.

பழமைவாதி:
அவளை உடலுறுவுக்கு அழைப்பேன்.
வராவிட்டால் அடிப்பேன்.

நவீனத்துவவாதி:
என் கைபேசியிலிருந்து ஆபாச படத்தை அவளுக்கு காட்டி அதுபோலச் செய்யலாம் என்பேன்.
கற்பு, ஒழுக்கம் எல்லாம் மூடநம்பிக்கை என்று கூறுவேன்.

சுற்றுச்சூழல் போராளி:
இயற்கையை நமது பேராசையால் அழித்துவருவதைப் பற்றி நான் எழுதிய புத்தகங்கள், போராட்டங்கள், கோரிக்கைகள் ஆகியன பற்றி கூறுவேன்.
யாருமே கேட்கவில்லையே என்று வருத்தப்படுவேன்.

தமிழ்தேசியவாதி:

குமரிக்கண்டம் மூழ்கிய போது மீன்களைப் பின்தொடர்ந்து பாண்டியர் தப்பித்த வரலாறையும்
கடல் நீரோட்டத்தில் செல்லும் ஆமைகளைப் பின்பற்றி சோழர்கள் உலகமெல்லாம் குடியேறிய வரலாறையும் அந்த பெண்ணிடம் எடுத்துக்கூறுவேன்.
இருவரும் அறையை விட்டு வெளியே வருவோம்.
பிற உயிரினங்கள் என்ன செய்கின்றன என்று கவனித்து பின்பற்றி தப்பிக்க இறுதிவரை முயல்வோம்.

Tuesday, 22 November 2016

கம்யூனிசம் என்றால்?

கம்யூனிசம் என்றால்?

இங்கே பலரும் கம்யூனிசத்தை ஏதோ உயர்ந்த கொள்கை போல பேசுகிறார்கள்.

கம்யூனிசம் என்பது அடிப்படையில் முதலாளிகள் செய்யும் இயற்கை அழிவுகளைப் பற்றி கவலைப்படாமல்
அவர்களின் லாபத்தில் பங்கு கேட்கும் கொள்கையே ஆகும்.

ஐரோப்பாவில் 1800களுக்குப் பிறகு மனிதர்கள் மூலம் செய்யும் வேலையை இயந்திரங்கள் மூலம் செய்விக்கும் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன.

தொழிலாளர்களின் முக்கியத்துவம் குறைந்து அவர்கள் நசுக்கப்பட்டனர்.

உற்பத்தி பல மடங்கு அதிகமாகிறது.   இந்த தொழிற்சாலைகளுக்கு தீனி போடவே கடல்கடந்து நாடுகளைப் பிடித்து வளங்களை சுரண்டி கொண்டுவந்து
தொழிற்சாலையில் அதனை பயன்பாட்டுப் பொருளாக மாற்றி
மீண்டும் கடல்கடந்து அதே  நாட்டில் கொண்டுபோய் விற்று
நன்கு கொழுத்தன ஐரோப்பிய நாடுகள்.

அப்போது ஐரோப்பாவின் காற்று நீர் நிலம் என எல்லாமே மாசடைந்து போனது.

இதில் ஏற்பட்ட போட்டியே உலகப்போருக்கு வழிவகுத்தது.

இந்த காலகட்டத்தில் உருவானதே கம்யூனிசம்.

அவர்கள் மாசடைந்த இயற்கைக்காகப் போராடவில்லை.
லாபத்தில் பங்கு கேட்டுத்தான் போராடினர்.
இதற்கு வெளிமுலாம் பூசவே பல்வேறு பிரச்சனைகளை உள்வாங்கி தொடர்புபடுத்தி 'உலகப் போராட்டம் அனைத்தும் வர்க்கப் போராட்டமே' என்று ஒற்றைவரியில் முடித்தனர்.

பேராசான் மார்க்ஸ் கூறிய முதன்மை முழக்கம் 'உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்' என்பது இல்லை,
'உலக நாடுகளின் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்' என்பதே.

அதாவது தொழிலாளர்களுக்குள் சாதி மத பேதமெல்லாம் கிடையாது.

ஆனால் நாடு என்னும் வேறுபாடு உள்ளது என மார்க்ஸ் கூறுகிறார்.

நாடு என்பதற்கு பொதுவான மொழி பொதுவான உணர்ச்சி கொண்ட மக்கள் தனிநாடாக இருக்கவேண்டும் என வரையறை செய்கிறார் மார்க்ஸ்.

இங்கே சுரண்டலை எதிர்த்து போராடும் கம்யூனிஸ்டுகளை நான்,
தாங்கள் சுரண்ட வைத்துள்ளதை வேறொருவன் சுரண்டுவதை எதிர்ப்பதாகவே பார்க்கிறேன்.

ஆக கம்யூனிசம் தமிழர்களுக்கான தீர்வு அல்ல என்பது என் கருத்து.