Tuesday, 14 January 2025
எனது சிந்தனைகள் மீள்பதிவு
Monday, 19 June 2023
இலக்கியம் கூறும் தமிழ்நாடு எனும் சொல்
Sunday, 26 August 2018
தமிழ்தேசியக் கருத்தியல் ஒப்பீடு
தமிழ்தேசியக் கருத்தியல் ஒப்பீடு
கேள்வி: உலகம் அழிய ஒரு மணிநேரம் உள்ளது.
அதை யாராலும் தடுக்கமுடியாது.
நீங்களும் ஒரு அழகான இளம்பெண்ணும் ஒரு தனி அறையில் இருக்கிறீர்கள்.
என்ன செய்வீர்கள்?
சாமானியன்:
அந்த பெண்ணை உடலுறவுக்கு அழைப்பேன்.
மறுத்தால் கட்டாயப் படுத்துவேன்.
காந்தியவாதி:
வலிக்காமல் எப்படி தற்கொலை செய்துகொள்வது என்று சொல்லிகொடுப்பேன்.
நானும் அவளுக்கு இடைஞ்சல் இல்லாமல் சாவேன்.
பெண்ணாதிக்கவாதி:
நான் அந்த பெண்ணாக இருந்தால் உடைகளை விலக்கி உடலுறுப்புகளைத் திறந்துகாட்டி அந்த ஆண் நெருங்கி வரும்போது அவன் பார்வையில் தவறு உள்ளதாக குற்றம்சாட்டுவேன்.
இளைத்தவன் என்றால் அவனை அடித்து உதைப்பேன்.
கிறித்துவவாதி:-
பைபிளில் கூறியபடி உலகம் அழிகிறது எனவே அவளிடம் கிறித்தவத்திற்கு மாறினால் நரகத்தில் இருந்து தப்பிக்கலாம் என்று கூறி மதம் மாறச்செய்வேன்.
இருவரும் பாவ மன்னிப்பு கேட்போம்.
இந்துத்துவவாதி:-
கலியுகம் முடியப் போகிறது.
மனிதர்களின் பாவம் எல்லை கடந்துவிட்டதால் கடவுள் உலகத்தை அழிக்கிறார்.
எனவே அவளுக்கு ஸ்லோகம் சொல்லிக்கொடுத்து பிரார்த்தனையில் ஈடுபடச்சொல்வேன்.
இசுலாமியவாதி:
அவளை மதம் மாறச்சொல்வேன்.
அவளை பர்தாவால் மூடி ஓரமாக அமரவைத்து விட்டு நான் தொழுகையில் ஈடுபடுவேன்.
பௌத்தவாதி:
அவள் உடலுறவுக்கு அழைத்தால் அந்த ஆசையை விடச் சொல்வேன்.
இருவரும் உண்ர்ச்சியின்றி அமர்ந்திருப்போம்.
சமணவாதி:
உடைகளைக் களைந்துவிட்டு அமர்வோம்.
என்னை நானே துன்புறுத்திக் கொள்வேன்.
ஆன்மீகவாதி:-
இருக்கும் நேரத்தை எப்படி சந்தோசமாக கழிப்பது என்று பார்ப்பேன்.
தியானம், யோகா செய்வேன்.
கவலைகளை மறந்து மகிழ்ச்சியான தருணங்கள் பற்றி கலந்துரையாடுவோம்.
நடுநிலைவாதி:
உலகம் அழிந்ததில் எங்கள் இருவர் மீதும் சமமான தவறிருக்கிறது என்று அவளுக்கு புரியவைப்பேன்.
அவள் மறுத்தால் வாக்குவாதத்தில் ஈடுபடுவேன்.
மனிதநேயவாதி:
அவளுக்கு உடலுறவு தேவைப்படுகிறதா என்று கேட்பேன்.
அவளுடைய ஆசை எதையாவது கூறினால் அதை என்னால் நிறைவேற்றமுடியுமா என்று பார்ப்பேன்.
திராவிடவாதி:
உலக அழிவு பார்ப்பனரால் வந்தது என்றும் பெரியார் இருந்திருந்தால் இதை எப்படியெல்லாம் தடுத்திருப்பார் என்றும் பத்து புத்தகம் எழுதுவேன்.
பொதுவுடைமைவாதி:
உலக அழிவு பெருமுதலாளிகளால் வந்தது என்பதையும்
இயற்கையை அழித்து அவர்கள் அடைந்த லாபத்தில் தொழிலாளர்களுக்கு பங்கும் கொடுக்கவில்லை என்பதையும் அவளுக்கு கடினமான வார்த்தைகளால் புரியவைக்க முயற்சிப்பேன்.
தலித்தியவாதி:
உயர்சாதியினர் அழிந்தனர் என்று சந்தோசப்படுவேன்.
அந்த பெண் உயர்சாதி என்றால் காலில் விழுந்து என்னை எதுவும் செய்துவிடவேண்டாம் என்று கேட்டுக் கொள்வேன்.
அவள் உடலுறவுக்கு அழைத்தால் கத்தி கூப்பாடு போடுவேன்.
சோசலிசவாதி:
அவளுடன் நட்பாக பேசி தொட்டு உணர்ச்சிகளைத் தூண்டி உடலுறவுக்கு சம்மதிக்க வைப்பேன்.
மறுத்தால் கோபம் கொள்ளாமல் நட்புடன் பேசுவதைத் தொடர்வேன்.
பழமைவாதி:
அவளை உடலுறுவுக்கு அழைப்பேன்.
வராவிட்டால் அடிப்பேன்.
நவீனத்துவவாதி:
என் கைபேசியிலிருந்து ஆபாச படத்தை அவளுக்கு காட்டி அதுபோலச் செய்யலாம் என்பேன்.
கற்பு, ஒழுக்கம் எல்லாம் மூடநம்பிக்கை என்று கூறுவேன்.
சுற்றுச்சூழல் போராளி:
இயற்கையை நமது பேராசையால் அழித்துவருவதைப் பற்றி நான் எழுதிய புத்தகங்கள், போராட்டங்கள், கோரிக்கைகள் ஆகியன பற்றி கூறுவேன்.
யாருமே கேட்கவில்லையே என்று வருத்தப்படுவேன்.
தமிழ்தேசியவாதி:
குமரிக்கண்டம் மூழ்கிய போது மீன்களைப் பின்தொடர்ந்து பாண்டியர் தப்பித்த வரலாறையும்
கடல் நீரோட்டத்தில் செல்லும் ஆமைகளைப் பின்பற்றி சோழர்கள் உலகமெல்லாம் குடியேறிய வரலாறையும் அந்த பெண்ணிடம் எடுத்துக்கூறுவேன்.
இருவரும் அறையை விட்டு வெளியே வருவோம்.
பிற உயிரினங்கள் என்ன செய்கின்றன என்று கவனித்து பின்பற்றி தப்பிக்க இறுதிவரை முயல்வோம்.
Wednesday, 21 March 2018
அடுத்தது நம்மில் யார்?
அடுத்தது நம்மில் யார்?
முகநூலில் தமிழ்தேசியம் பேசுவதோடு நில்லாமல் இயக்கம், கட்சி என களத்தில் இறங்கியவர்கள் எனக்குத் தெரிந்து 10 பேர் வரை சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இறந்துள்ளனர்.
தற்போது செல்வா பாண்டியர் சாலை விபத்தில் இறந்துவிட்டார்.
* பள்ளர்கள் sc பட்டியலில் இருந்து வெளியேற்றம்
* பெரியார் திடல் முற்றுகை
* திரைத்துறை வந்தேறி ஆதிக்கத்தை எதிர்த்து உண்ணாவிரதம்
*முகநூல் தமிழ்தேசிய எழுச்சி பற்றி முதல் புத்தகம் வெளியீடு
* ஒரிசா பாலு அவர்களுடன் இணைந்து பணி
என செல்வா அவர்களது தமிழ்தேசியப் பணி மறக்கவியாதது.
கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்
ஒரு பெரிய உறுத்தல் உண்டு.
தமிழ்நாடு தெற்கு வடக்கு என இரண்டாக பிரிக்கப்பட அவர் ஆதரவு தெரிவிக்காமல் இருந்திருந்தால் நான் இரங்கல் தெரிவித்திருப்பேன்.
என் நாட்டைத் துண்டாட நினைத்த ஒருவருக்கு இரங்கல் தெரிவிக்க என் நாட்டுப்பற்று தடுக்கிறது.
எனவே அவரது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் இயத்தினர் பெரியமனம் செய்து என்னை மன்னிக்கவும்.
அடுத்து யாரோ?!
Friday, 8 September 2017
பா.ரஞ்சித் அவர்களே!
பா.ரஞ்சித் அவர்களே!
'கபாலி படத்தில் பெரியாரைக் காட்டவில்லை' என்று சண்டித்தனம் செய்த திராவிட ஆண்டைகளிடம்
'என் படம், நான் எதையும் காட்டுவேன்' என்று கூற தைரியமில்லாமல் மன்னிப்பு கோரிய அடிமையாகிய உங்களுக்கு ஒரு தமிழ்தேசியவாதியின் மடல்.
"தமிழ், தமிழன் என்று எத்தனை நாட்களுக்கு ஏமாற்றுவீர்கள்?"
என்று சம்பந்தமே இல்லாமல் அனிதா தங்கைக்காக கூட்டப்பட்ட கூட்டத்தில் கலகம் செய்துள்ளீர்கள்.
உங்களது நோக்கம் அனிதா மரணத்திற்கு காரணமான, மாநில உரிமைக்கு எதிரான நீட்டுக்கு எதிராக திரளும் தமிழர்களை பழிப்பதன் மூலம் பறையர்களுக்கு எதிராக திருப்புவது.
அதாவது
'நான் ஒரு பறையன் மட்டுமே'
'தமிழனாக என்னை உணரவில்லை' என்று உங்களை பதிவுசெய்யவே இப்படி செய்துள்ளீர்கள்.
1000 ஆண்டு முன்பு ராஜராஜன் காலத்தில்கூட பார்ப்பனர்களும் சேரியில் தான் இருந்துள்ளனர்.
அவரது அண்ணனைக் கொன்றவர்கள் பார்ப்பன சேரியைச் சேர்ந்தவர்கள் என்று ராசரானின் கல்வெட்டும் உள்ளது.
வெறும் 500 ஆண்டுகளுக்கு முன்பு கோயிலுக்கு நிலமும் தானமும் அளித்த பூவன் பறையன் எனும் பாண்டிய மன்னனின் மெய்க்காப்பாளனுடைய கல்வெட்டு உள்ள அம்பாசமுத்திரம் எனது ஊர்.
அப்படி இருக்க அவர்கள் வீழ்ந்தது எப்படி என்று கேட்கிறீர்களா?
நான் கூறுகிறேன்.
700 ஆண்டுகளாக இங்கே தமிழர்கள் ஆளவில்லை.
வேற்றின ஆட்சிதான் இங்கே நடக்கிறது.
அதுவே சாதிய ஏற்றத்தாழ்வுக்குக் காரணம் என்கிறேன்.
நீங்கள் தலித் என்று குறிப்பிடும் 'தமிழினத்து பட்டியல் சாதியாரை' பிற தமிழர்கள் தம் உடன்பிறப்புகளாக நினைக்க வைக்கும் தமிழ்தேசியம் இதற்கான தீர்வு என்கிறேன் நான்.
ஆனால் நீங்கள் முன்வைக்கும் தலித்தியம் என்பது தலித் மக்கள் மட்டும் ஒன்றுதிரண்டு அதிகாரத்தில் பங்கு கேட்பதன் மூலம் முன்னேற்றம் அடைந்து பிறருக்கு சமமாக வருவது.
எது சரியானது என்று மக்களே முடிவு செய்யட்டும்.
முதலில் பிரச்சனை என்ன என்பதை புரிந்துகொள்வோம்.
நீட் என்பது பொருளாதாரத்தில் பின் தங்கியோர் மற்றும் தாய்மொழியில் மாநில பாடத்திட்டத்தில் கல்வி கற்றோருக்கு எதிரானது.
அதாவது இது ஒரு பொருளாதார பிரச்சனை மற்றும் மொழி பிரச்சனை.
இதிலே எங்கிருந்து வந்தது சாதி?
இப்போது தலித் தலித் என்று ஒப்பாரி வைக்கும் ரஞ்சித் அவர்களே!
தங்கை அனிதா மரணமடையும் முன்பே நீட்டை எதிர்த்து வந்த தமிழ் இயக்கங்களை என்னால் காட்டமுடியும்.
உங்களால் அப்படியொரு தலித் இயக்கத்தைக் காட்டமுடியுமா?
அல்லது நீங்களாவது எங்கேயாவது நீட் பற்றி பேசியதுண்டா?
இந்தியா முழுக்க ஏன் தமிழகத்திலே கூட தலித்திய அரசியல் பேசும் எவரும் நீட் தேர்வுக்கு எதிரான எந்த முயற்சியும் இதுவரை செய்யவில்லையே?!
அதை விடுங்கள்.
தமிழகம் தாண்டி எந்த தலித் இயக்கமாவது தங்கைக்கு அஞ்சலியாவது செலுத்தியுள்ளனரா?
நீட்டை எதிர்ப்பது தமிழகம் மட்டுமே!
அனிதாவுக்காக போராடுவது தமிழகம் மட்டுமே!
அதற்காக கூடிய கூட்டம் தமிழ் தமிழன் என்று பேசாமல் அனிதா பற்றியோ நீட் பற்றியோ வாயே திறக்காத தலித்தியம் பற்றியா பேசும்?
ரஞ்சித் அவர்களே!
நீங்கள் சாதிய ஒடுக்குமுறையால் தனிப்பட்ட முறையில் பெரிய அளவில் பாதிக்கப்பட்டவராக இருக்கவேண்டும்.
அதற்காக மேடை மேடையாகப் போய் குரல் எழுப்புங்கள்.
திரைப்படமாக எடுத்துத் தள்ளுங்கள்.
இயக்கமோ கட்சியோ தொடங்கி தமிழ்ச் சமூகத்திடம் நியாயம் கேளுங்கள்.
ஆனால் அனிதா தங்கையின் பிணத்தின் மீது நின்றுகொண்டு அதற்கான நியாயம் கேட்பது உங்களுக்கே அசிங்கமாக இல்லையா?
உங்களுக்கு விளம்பரம் தேட வேறு இடமே கிடைக்கவில்லையா?
அனிதா இறந்தது சாதிய ஒடுக்குமுறையால் அல்ல.
ஹிந்தியாவின் தமிழகத்தின் மீதான ஒடுக்குமுறையால்!
தமிழ்வழியில் பாடம் படித்ததால்!
வறுமை கூட இரண்டாவது காரணம்தான்.
ஒரு தாய் இறந்து நடுவீட்டில் கிடக்கும்போது இழவுக்கு வந்தவர்களிடம் நகைப் பங்கீடு சரியில்லை என நியாயம் கேட்கும் சுயநலகம்பிடித்த மகளைப்போல நடந்துகொள்கிறீர்கள்.
ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிந்துகொள்ளுங்கள்.
அனிதாவை தமிழர்கள் கைவிடமாட்டார்கள்!
பறையர்கள் உங்கள் பின்னால் வரமாட்டார்கள் !
Monday, 10 July 2017
சடையவர்மன் சுந்தர பாண்டியன்
சடையவர்மன் சுந்தர பாண்டியன்
முதலில் வடுகர் படைத்தலைவனை அனுப்பி போர்தொடுத்த சேரமன்னனை அவனது நான்கு மடங்கு பெரிய படையோடு மோதி முறியடிக்கிறான்.
அதன்பிறகு அரை வடுகர்களாகிவிட்ட (சாளுக்கிய) சோழர்கள் மீது போர்தொடுத்து அவர்களை அடக்கிவிட்டு
அப்படியே வடமேற்கில் ஒய்சளர்களை ஓட ஓட விரட்டிவிட்டு
வட கிழக்கில் பல்லவ வம்சாவழி காடவர்களை வென்று அடக்குகிறான்.
தெற்கே ஈழத்தில் நுழைந்து பாதி தீவை பிடிக்கிறான்.
இறுதியாக வடமேற்கில் தெலுங்கு சோழர்களை முற்றாக அழிக்கிறான்.
நெல்லூரில் வீராபிசேகம் செய்துகொள்கிறான்.
இராசராசன் இராசேந்திரன் ஆகியோரை விட அதிக சாதனைகள் புரிந்தவன் இவனே!
அன்றைய தமிழ்தேசியத்தின் வடிவம்!
(எப்படி மண உறவு மூலம் சோழர்களை கலப்பாக்கி வீழ்த்தினார்களோ!
அதேபோல பாண்டிய வாரிசுகளைத் தூண்டிவிட்டு அவர்களுக்குள்ளே மோதவிட்டு வீழ்த்தினார்கள்)
Friday, 5 May 2017
தமிழ்தேசிய வெள்ளம்
தமிழ்தேசிய வெள்ளம்
வேட்டொலி இணையம்
நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது.
கடந்த மாதம் 4500 முறை பார்க்கப்பட்டுள்ளது.
அதாவது ஒரு நாளைக்கு 150 பேர் சராசரியாக.
(இதில் என் பார்வைகள் சேர்க்கப்படவில்லை).
வேட்டொலிக்கு பெரும்பாலும் முகநூல் மூலம் வந்தடைகின்றனர்.
இது எனது பதிவுகள் உள்ள vaettoli.blogspot இணையம் மட்டும்தான்.
இதுபோக fbtamildata இணையத்தில் பிறரது தமிழ்தேசிய பதிவுகளையும் நான் தேடி எடுத்த சேமிப்பையும் ஏற்றிவருகிறேன்.
தொடங்கி 46 நாட்களில் 1916 பதிவுகள் ஏற்றியுள்ளேன்.
(இன்னும் 1000 பதிவுகள், 4000 புகைப்படங்கள் ஏற்றவேண்டி உள்ளது)
இதற்கு கடந்த மாதம் 3350 பேர் வருகை தந்துள்ளனர்.
அதாவது 111 பேர் / நாள்.
(இதிலும் என் பார்வைகள் சேர்க்கப்படவில்லை).
இவ்வலைக்கு பெரும்பாலும் கூகுள் தேடல் மூலம் வந்தடைகின்றனர்.
இது விரைவில் வேட்டொலியை விஞ்சிவிடும்.
(தற்போது 133 பேர் / நாள்).
மண்மீட்பு பதிவுகள் மிக முக்கியமானவை என்பதாலும்
blogspot ல் சிலசமயம் படங்கள் அழிந்துவிடுவதாலும் vaettoli.wordpress லும் அப்பதிவுகளை ஏற்றிவைத்துள்ளேன்.
இதிலும் நாள்தோறும் 2,3 பேர் வருகை தருகின்றனர்.
முகநூலில் போடுவது எல்லாம் காலப்போக்கில் அழிந்துவிடும்.
இணையத்தில் தேடினாலும் கிடைக்காது.
பல அரிய தமிழ்தேசியப் பதிவுகள் இப்படி அழிந்துவிட்டன.
ஆகவே தொலைநோக்குடன் உங்களது பதிவுகளை மேற்கண்டவாறு ஆவணமாகவும் ஆக்கிவையுங்கள்.
ஊடகத்தைத் தேடாமல் நீங்களே ஊடகமாக மாறுங்கள்.
தமிழ்தேசிய வெள்ளம் இணையத்தை நிரப்பட்டும்.
Tuesday, 21 February 2017
தமிழ்தேசியம்னா என்ன? அதாவதுப்பா...
அதாவதுப்பா
சாமிக்கு பதிலா இயற்கை
சாதிக்கு பதிலா இனம்
இங்கிலீசுக்கு பதிலா தமிழ்
இந்தியாவுக்கு பதிலா தமிழ்நாடு
இவ்ளதான் தமிழ் தேசியம்
Friday, 7 October 2016
நான்.
நான்.
2012, 2013களில் முகநூல் தமிழ்தேசியவாதிகள் எத்தனைபேர் தெரியுமா?
வெறும் 5,6 பேர்.
அவர்களும் கத்துக்குட்டிகள்.
அன்று 30,35 வயது இளைஞர்கள் ம.தி.மு.க வில் இருந்தனர்.
இணையம் முழுக்க அவர்களே நிரம்பிக் கிடந்தனர்.
அன்று அந்த 5,6 தமிழ்தேசியர்கள் இல்லையென்றால் ஈழ ஆதரவை மொத்தமாக வாரிச்சுருட்டி ம.தி.மு.க மூன்றாவது கட்சியாக வளர்ந்திருக்கும்.
இது நடக்காமல் தடுத்தவர் சீமான் என்று பலரும் நினைப்பார்கள்.
அதுதான் இல்லை.
சீமான் அண்ணன் அப்போது இயக்கம்தான் ஆரம்பித்தார்.
அவருக்கு வந்தேறிகளை அடையாளம் தெரிந்திருக்கவில்லை.
தமிழ்பேசும் தமிழரல்லார்தான் அனைத்திற்கும் காரணம் என்ற விழிப்புணர்வை முதன்முதலில் முகநூலில் பரப்புரை செய்தவர் "தமிழறிவன் தே" என்பவர் ஆவார்.
அவர்தான் எனக்கு வழிகாட்டி.
பார்ப்பனர் தமிழரே என்பதையும்
இந்தியா நமக்கான நாடு கிடையாது, தமிழருக்கு தனிநாடு வேண்டும் என்பதையும்
ஈ.வே.ராவின் உண்மையான முகத்தையும்
தமிழ்பேசுவோர் அனைவரும் தமிழர் அல்லர் என்பதையும்
தமிழகத்தை ஆண்ட,ஆள்கிற அத்தனை பேரும் தமிழர் அல்லாதார் என்பதையும்
தமிழ் என்பது பிறப்புவழி இன அடையாளம் ஆதலால் உலகம் முழுவதும் தமிழை மறந்த தமிழினத்தவரும் நம்மினமே என்பதையும்
பார்ப்பனர் தமிழரே என்பதையும்
தமிழ்த்தாய் வாழ்த்தை வந்தேறிகள் தம் வசதிக்கேற்றவாறு திருத்தியுள்ளனர் என்பதையும்
திராவிடம் என்பதே வந்தேறிகளின் கூடாரம் என்பதையும்
எனக்கு காட்டியவர் அவர்தான்.
ஆனால் அவர் சைவப்பற்று கொண்டவராகவும் இசுலாமிய கிறித்துவ தமிழர்களை வெறுப்பவர்களாகவும் இருந்தார்.
2013களில் தமிழறிவன் போய்விட்டார்.
அந்த காலகட்டம் பேசியில் தமிழ் எழுத்துகூட தெரியாத காலகட்டம்.
தமிழ்தேசியவாதிகளுக்கு அரசியல் அறிவோ
புள்ளிவிபரங்களோ வரலாறோ
எதுவுமே தெரியாது.
திராவிடவாதிகள் (அதிலும் குறிப்பாக மதிமுகவினரில் "வால்டேர் வில்லியம்ஸ்" "ஹரி ஹரன்" போன்றோர் ) தமிழ்தேசியவாதிகளை ஈவு இரக்கமே இல்லாமல் கூட்டம் கூட்டமாக வந்து விவாதத்தில் தோற்கடிப்பார்கள்.
பதில் அளிக்க தெரியாத தமிழ்தேசியர்கள் ஏடாகூடமாக பதில் சொல்ல அது குடுமிப்பிடி சண்டையில் போய் முடியும்.
அதாவது இன்று திராவிடவாதிகள் எவ்வளவு பரிதாப நிலையில் இருக்கிறார்களோ
அதைவிட மோசமான நிலையில் தமிழ்தேசியவாதிகள் இருந்தோம்.
ஈழத் தமிழர்களுக்கோ வைகோவை எதிர்க்க மனமில்லை.
அன்று மதிமுகவை விட இணையம் அதிகம் பயன்படுத்திவந்தோர் ஈழத்தமிழர்களே.
அவர்கள் சமாதானம் செய்யத்தான் முயற்சித்தார்கள்.
அவர்கள் எதிர்பார்ப்பெல்லாம் 8கோடி தமிழர்கள் 100கோடி இந்தியரின் ஆதரவை பெற்று ஈழம் அமைய வழிசெய்யவேண்டும் என்பதுதான்.
இதற்கு ஏற்றாற்போல "ஸ்ரீனிவாஸ் திவாரி" போன்றவர்கள் இந்தியா ஈழம்பெற்றுத் தரும் என்று வலம்வந்தனர்.
பிறகு விரக்தி அடைந்து ஈழத்தமிழர்கள் 2012 வாக்கில் முகநூலில் இருந்தே ஒதுங்கிக் கொண்டார்கள்.
ஆக அன்று எங்களிடம் தெளிவு இல்லை.
தரவுகள் இல்லை.
ஈழத்தமிழர் ஆதரவு இல்லை.
ஒரு பதிவு போட்டால் நூறு எதிர்பதிவுகளைச் சந்திக்கவேண்டி இருந்தது.
வழிகாட்ட யாருமில்லை.
ஆனாலும் ஒரு வெறி.
நாங்கள் தொடர்ந்து இயங்கினோம்.
பிறகு நாங்கள் 2,3 பேர்தான் இருந்தோம்.
2014ல் அவர்களும் காணாமல் போய் நான் மட்டும்தான் இன்றுவரை தொடர்ந்து இயங்கிவருகிறேன்.
(காணாமல் போன தமிழ்தேசியர்களில் "மாணிக்கவாசகம்" அண்ணன் மீண்டும் தற்போது திரும்பியுள்ளார்)
2014க்குப் பிறகுதான் திறன்பேசிகளின் வரவால் பல சராசரி இளைஞர்களுக்கும் முகநூல் மூலமாகப்
படிப்படியாக விழிப்புணர்வு பரவியது.
2014ன் முடிவில் சிங்கள தலைவர்களே வடுக தெலுங்கர்கள்தான் என்ற அதிர்ச்சிகரமான உண்மையை "இசைப்பிரியா தம்பி" என்பவர் ஆராய்ந்து வெளியிட்டார்.
அதன்பிறகுதான் வடுக வந்தேறிகளின் உண்மையான முகம் பலருக்கும் தெரிந்தது.
(ஆனாலும் பெரும்பான்மையான ஈழத்தமிழர்கள் இன்னமும் திருந்தவில்லை)
திராவிட எதிர்ப்பாளர்கள், தமிழ் மொழிப்பற்றாளர்கள், இந்துத்துவவாதிகள், சாதியவாதிகள் என பலரும் திராவிடத்திற்கு எதிராக முகநூலில் களம் இறங்கினர்.
இன்று முகநூல் முழுவதும் திராவிடம் மண்ணைக் கவ்விக்கொண்டு இருக்கிறது. தமிழ்தேசியம் கொடிகட்டிப் பறக்கிறது.
இதற்கெல்லாம் காரணம் அன்று திராவிடத்தோடு இறுதிவரை மல்லுகட்டிய கத்துக்குட்டிகள்தான்.
அந்த ஆரம்பகால போராளிகளில்
தமிழறிவன் தே
மதிமுகிலன் தமிழ்வேங்கை
கிருஷ்ணா தமிழ்டைகர்
அகழ்வான் கணேசன்
சாரதாதேவி சத்தியமூர்த்தி
ஆகியோரே என் நினைவுக்கு வருகின்றனர்.
ஆனாலும் தமிழ்தேசியம் ஒரு பலமான இயக்கமாக, ஒரு வலுவான கட்சியாக இன்னும் வளரவில்லை என்பது கவலையளிக்கிறது.
தமிழ்தேசியம் தனக்கென ஒரு ஊடகம் இல்லாவிட்டாலும் ஒரு சமூக வலையை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு இன்று தமிழ் இளைஞர்கள் மனதில் வேரூன்றி வருகிறது.
இதற்கு நான் ஒரு முக்கிய பங்கு வகித்துள்ளேன் என்பதே எனக்கு மனநிறைவாக உள்ளது.
தாய்நிலத்திலிருந்து பலநூறு கிலோமீட்டர் தொலைவில் ஒரு திறன்பேசியையும் 2ஜி இணையத்தையும் வைத்துக்கொண்டு என்னால் முடிந்தது இவ்வளவுதான்.
ஆனாலும் செய்யவேண்டிய பணிகள் இன்னும் நிறைய உள்ளன.
அன்று 'இந்தியா என் தாய்நாடு' என்று பிதற்றிக்கொண்டு aathi1947 என்று முகநூல் ஆரம்பித்த நான் இன்று எவ்வளவு தெளிந்துவிட்டேன் என்பது எனக்கே வியப்பாக உள்ளது.
2013லிருந்து பதிவுபோட தொடங்கிய நான் தமிழ்தேசியத்திற்கு தேவையான அத்தனை தகவல்களையும் திட்டங்களையும் பதிவு போட்டுவிட்டதாகவே உணர்கிறேன்.
அதற்காக முகநூலிலிருந்து போய்விடமாட்டேன்.
தொடர்ந்து இயங்குவேன்.