Showing posts with label இன எழுச்சி. Show all posts
Showing posts with label இன எழுச்சி. Show all posts

Saturday, 24 March 2018

ஸ்டெர்லைட் முன்பு ஒரு லட்சம் தமிழர்கள்!

ஸ்டெர்லைட் முன்பு ஒரு லட்சம் தமிழர்கள்!

அதே நேரத்தில் லண்டனில் உள்ள அதன் முதலாளி அகர்வால் வீடு முன்பும் போராட்டம்!

ஜல்லிக்கட்டு போராட்டம் போல மீண்டும் ஒரு அதிர்ச்சி வைத்தியம்!

ட்விட்டர் மூலம் ஒருங்கிணைந்த இளைஞர்கள்!

Saturday, 29 July 2017

ஏகாதிபத்திய இனம்

ஏகாதிபத்திய இனம்

ஆமாம்டா!
முதல் ஏகாதிபத்தியம் தமிழன் ஏற்படுத்தியதுதான்!

குமரிக்கண்டத்தில் உருவாகி அது தொட்டுக்கொண்டிருந்த ஆப்பிரிக்கா இந்தியா ஆஸ்திரேலியா என எல்லா இடத்திற்கும் பரவினோம்

குமரிக்கண்டம் மூழ்கும்போது கப்பலில் நெடியோன் தலைமையில் இங்கே வந்தோம்
ஏற்கனவே இங்கிருந்த தமிழர்களை போரிட்டு வென்று அடக்கி குடியேறினோம்.

ஏற்கனவே இருந்த சிற்றரசர்களை எல்லாவற்றையும் பறித்துக்கொண்டு சுடுகாட்டுக்கு வேலை செய்ய அனுப்பிறோம்.

இந்தோனேசியாவுக்கு படையோடு போய் அங்கிருந்த மக்களை விரட்டிவிட்டு நெல்வளம் மிக்க சாலியூரை கைப்பற்றி கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு அங்கிருந்து குவியல் குவியலாக விதைநெல் கொண்டுவந்தோம்.

காடுகளை வெட்டி அழித்து எரித்து அதை விளைநிலமாக்கி உணவுக்கு பயன்படுத்தினோம்

மண்ணை தோண்டி உலோகம் எடுத்து உருக்கி ஆயுதங்கள் செய்தோம்.
காட்டு விலங்குகளை கொலை செய்தோம்.
எதிர்த்து நின்ற எல்லாரையும் கொன்றோம்.

மதுவைக் கண்டுபிடித்தோம்.
ஆண்பெண் எல்லாரும் பருகினோம்.

விழா கொண்டாடுவதை ஏற்படுத்தினோம்.
அன்று கண்ணில்படும் விலங்குகளையெல்லாம் பலியிட்டு சோறுடன் சமைத்து கள்ளுடன் வயிறு புடைக்க உண்டோம்.

விலங்குகளை வேட்டையாடி தின்றதோடு நில்லாமல் அவற்றை அடக்கி வேலை செய்ய பழக்கினோம்.

அவற்றின் குட்டிகளுக்கானப் பாலை கறந்து நாங்கள் எடுத்துக்கொண்டோம்.

யானைகளை பழக்கி போர்செய்வதை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச்சென்றோம்.

போரில் தோற்ற மன்னனின் தலையை வெட்டி அதை கவிழ்த்து சட்டி போல அடுப்பில் வைத்து மூளையை சமைத்து அவன் வெட்டுண்ட கையையே அகப்பையாக்கி கிண்டி எடுத்து பேய்களுக்கு விருந்து வைத்தோம்

ஆற்றில் விழுந்துவந்த காவல்மரத்தின் பழத்தை தின்ற குற்றத்துக்காக வடுகர் பெண்ணை கொன்றோம்

பலமுறை சுற்றுலா மாதிரி இமயம் வரை போய் எதிரே கண்ணில்பட்டவனையெல்லாம் தூக்கிப்போட்டு மிதித்து கொள்ளையடித்து பெரும்பொருள் கொண்டுவந்தோம்.

பல நாட்டிலிருந்தும் பெண்ணெடுத்து பெண்டாட்டியும் வைப்பாட்டியும் கணக்கில்லாமல் வைத்துக்கொண்டோம்.

ஆமைகளை பின்பற்றி கடலில் பயணம் செய்து பல நாடுகளிலும் குடியேறி அவர்களை அடக்கி ஆண்டோம்.
பேசுதல், எழுதுதல், வேளாண்மை, கட்டுமானம், கருவி செய்தல், திருமணம் செய்தல், கூட்டமாக வாழ்தல், விலங்குகளைப் பழக்குதல், போர் செய்தல் என எல்லாவற்றையும் உலகம் முழுவதும் கற்றுக்கொடுத்தோம்.

இந்த உலகத்தில் ஒரு விலங்காகத் திரிந்துகொண்டிருந்த மனிதனை நாகரீகமயமாக்கி மனிதனின் ஆக்கிரமிப்பை இந்த உலகில் உறுதிசெய்தோம்.

வெறும் துணியையும் மிளகையும் கொடுத்து ஐரோப்பாவிலிருந்து தங்கம் பாளம் பாளமாக அள்ளிவந்தோம்

சிங்களவன் மீது போர் தொடுத்து பௌத்த கோவில்களை கொள்ளையடித்து பலரை அடிமையாக பிடித்துக்கொண்டுவந்து அணையும் கோவில்களும் கட்டினோம்.

கன்னடன் மீது படையெடுத்து அவன் நாட்டு பிராமணரையும் பெண்களையும் குழந்தைகளையும் கொன்றோம்

தெலுங்கனை வகைதொகையில்லாமல் கொலை செய்து தெலிங்க குல காலன் என்று பட்டம் போட்டுக்கொண்டோம்

முதன்முதலாக கடல்கடந்து ஆக்கிரமித்து ஏகாதிபத்தியத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டுபோனோம்

நாங்கள் காட்டுமிராண்டிகளாகவும் அதே நேரத்தில் அடிப்படை மாந்தநேயத்துடனும் இருந்தோம்

  இன்றுவரை யாரையும் ஏமாற்றியதில்லை.
முதுகில் குத்தியதில்லை.
யாரையும் கொடுமைப்படுத்தியதும் கிடையாது.
நாடி வந்தவருக்கு இல்லை என்று கூறியது கிடையாது.
கீழ்த்தரமான செயல்களில் இறங்கியதும் கிடையாது.

என்றைக்கு நாங்கள் நியாயம் தர்மம் என்று சிந்தித்தோமோ அன்றுதான் வீழ்ந்தோம்

திரும்பியபோதெல்லாம் முதுகில் குத்தப்பட்டோம்.

நாங்கள் மீண்டும் காட்டுமிராண்டிகளாக மாறி மீண்டும் உலகையே ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்து எங்கள் காலடியில் கொண்டுவர ரொம்பநேரம் ஆகாது.

இலுமினாட்டிகளுக்கெல்லாம் அப்பனுக்கப்பன் நாங்கள்!

ஒற்றுமை இல்லாதது மாதிரியும் துரோகிகள் நிறைந்திருப்பது போலவும் தெரியலாம்.

நாங்கள் திடீரென்று ஒன்றுசேர்ந்து அசுரபலத்துடன் திருப்பியடிப்போம்

எதிரிகள் அதிர்ச்சியிலிருந்து மீளுமுன் அவர்கள் கதை முடிந்திருக்கும்.

தமிழன் முன்பை விட அதிக ஆதிக்கவெறியுடன் மீண்டும் திடுமென எழுவான்!
தயாராக இருங்கள் வேற்றினத்தாரே!

Monday, 27 February 2017

தமிழின விடுதலை விறுவிறுப்பாக இருக்காது

தமிழின விடுதலை விறுவிறுப்பாக இருக்காது

தமிழக மக்கள் உணவும் உறைவிடமும் தருவார்கள்!

இந்திய ஒன்றியத் தமிழர்கள் இனவழி சக்திகளை திரட்டித் தருவார்கள்!

ஈழத்தமிழர்கள் தளபதிகளைத் தருவார்கள்!

மலேசியத் தமிழர்கள் ஆயுதம் தருவார்கள்!

தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் கப்பல்கள் தருவார்கள்!

சிங்கப்பூர் தமிழர்கள் விமானம் தருவார்கள்!

அந்தமான் தமிழர்கள் மறைவிடம் தருவார்கள்!

அமெரிக்கத் தமிழர்கள் தொழில்நுட்பம் தருவார்கள்!

ஐரோப்பியத் தமிழர் உலக அரசியலை நம் பக்கம் திருப்புவார்கள்!

கரீபியன் தமிழர்கள் அமெரிக்க கண்டங்களை நம் பக்கம் திருப்புவார்கள்!

எதுவும் தரமுடியாவிட்டாலும் மலையகத் தமிழர் உயிரையே தருவார்கள்!

நாம் செய்யவேண்டியது எல்லாம் கால்மேல் கால் போட்டபடி உட்கார்ந்த இடத்திலிருந்து
ஒரே அடியில் பெரியபெரிய வல்லாதிக்க சக்திகளையெல்லாம் வீழ்த்திவிட்டு நம் விடுதலையை நாமே எடுத்து, நமக்கு நாமே மகுடம் சூட்டிக்கொள்வதுதான்.

Friday, 7 October 2016

நான்.

நான்.

2012, 2013களில் முகநூல் தமிழ்தேசியவாதிகள் எத்தனைபேர் தெரியுமா?

வெறும் 5,6 பேர்.

அவர்களும் கத்துக்குட்டிகள்.

அன்று 30,35 வயது இளைஞர்கள் ம.தி.மு.க வில் இருந்தனர்.
இணையம் முழுக்க அவர்களே நிரம்பிக் கிடந்தனர்.

அன்று அந்த 5,6 தமிழ்தேசியர்கள் இல்லையென்றால் ஈழ ஆதரவை மொத்தமாக வாரிச்சுருட்டி ம.தி.மு.க மூன்றாவது கட்சியாக வளர்ந்திருக்கும்.

இது நடக்காமல் தடுத்தவர் சீமான் என்று பலரும் நினைப்பார்கள்.
அதுதான் இல்லை.

சீமான் அண்ணன் அப்போது இயக்கம்தான் ஆரம்பித்தார்.
அவருக்கு வந்தேறிகளை அடையாளம் தெரிந்திருக்கவில்லை.

தமிழ்பேசும் தமிழரல்லார்தான் அனைத்திற்கும் காரணம் என்ற விழிப்புணர்வை முதன்முதலில் முகநூலில் பரப்புரை செய்தவர் "தமிழறிவன் தே" என்பவர் ஆவார்.

அவர்தான் எனக்கு வழிகாட்டி.

பார்ப்பனர் தமிழரே என்பதையும்

இந்தியா நமக்கான நாடு கிடையாது, தமிழருக்கு தனிநாடு வேண்டும் என்பதையும்

ஈ.வே.ராவின் உண்மையான முகத்தையும்

தமிழ்பேசுவோர் அனைவரும் தமிழர் அல்லர் என்பதையும்

தமிழகத்தை ஆண்ட,ஆள்கிற அத்தனை பேரும் தமிழர் அல்லாதார் என்பதையும்

தமிழ் என்பது பிறப்புவழி இன அடையாளம் ஆதலால் உலகம் முழுவதும் தமிழை மறந்த தமிழினத்தவரும் நம்மினமே என்பதையும்

பார்ப்பனர் தமிழரே என்பதையும்

தமிழ்த்தாய் வாழ்த்தை வந்தேறிகள் தம் வசதிக்கேற்றவாறு திருத்தியுள்ளனர் என்பதையும்

திராவிடம் என்பதே வந்தேறிகளின் கூடாரம் என்பதையும்

எனக்கு காட்டியவர் அவர்தான்.
ஆனால் அவர் சைவப்பற்று கொண்டவராகவும் இசுலாமிய கிறித்துவ தமிழர்களை வெறுப்பவர்களாகவும் இருந்தார்.

2013களில் தமிழறிவன் போய்விட்டார்.

அந்த காலகட்டம் பேசியில் தமிழ் எழுத்துகூட தெரியாத காலகட்டம்.
தமிழ்தேசியவாதிகளுக்கு அரசியல் அறிவோ
புள்ளிவிபரங்களோ வரலாறோ
எதுவுமே தெரியாது.

திராவிடவாதிகள் (அதிலும் குறிப்பாக மதிமுகவினரில் "வால்டேர் வில்லியம்ஸ்" "ஹரி ஹரன்"  போன்றோர் ) தமிழ்தேசியவாதிகளை ஈவு இரக்கமே இல்லாமல் கூட்டம் கூட்டமாக வந்து விவாதத்தில் தோற்கடிப்பார்கள்.
பதில் அளிக்க தெரியாத தமிழ்தேசியர்கள் ஏடாகூடமாக பதில் சொல்ல அது குடுமிப்பிடி சண்டையில் போய் முடியும்.

அதாவது இன்று திராவிடவாதிகள் எவ்வளவு பரிதாப நிலையில் இருக்கிறார்களோ
அதைவிட மோசமான நிலையில் தமிழ்தேசியவாதிகள் இருந்தோம்.

ஈழத் தமிழர்களுக்கோ வைகோவை எதிர்க்க மனமில்லை.
அன்று மதிமுகவை விட இணையம் அதிகம் பயன்படுத்திவந்தோர் ஈழத்தமிழர்களே.
அவர்கள் சமாதானம் செய்யத்தான் முயற்சித்தார்கள்.
அவர்கள் எதிர்பார்ப்பெல்லாம் 8கோடி தமிழர்கள் 100கோடி இந்தியரின் ஆதரவை பெற்று ஈழம் அமைய வழிசெய்யவேண்டும் என்பதுதான்.
இதற்கு ஏற்றாற்போல "ஸ்ரீனிவாஸ் திவாரி" போன்றவர்கள் இந்தியா ஈழம்பெற்றுத் தரும் என்று வலம்வந்தனர்.
பிறகு விரக்தி அடைந்து ஈழத்தமிழர்கள் 2012 வாக்கில் முகநூலில் இருந்தே ஒதுங்கிக் கொண்டார்கள்.

ஆக அன்று எங்களிடம் தெளிவு இல்லை.
தரவுகள் இல்லை.
ஈழத்தமிழர் ஆதரவு இல்லை.
ஒரு பதிவு போட்டால் நூறு எதிர்பதிவுகளைச் சந்திக்கவேண்டி இருந்தது.
வழிகாட்ட யாருமில்லை.
ஆனாலும் ஒரு வெறி.
நாங்கள் தொடர்ந்து இயங்கினோம்.

பிறகு நாங்கள் 2,3 பேர்தான் இருந்தோம்.
2014ல் அவர்களும் காணாமல் போய் நான் மட்டும்தான் இன்றுவரை தொடர்ந்து இயங்கிவருகிறேன்.
(காணாமல் போன தமிழ்தேசியர்களில் "மாணிக்கவாசகம்" அண்ணன் மீண்டும் தற்போது திரும்பியுள்ளார்)

2014க்குப் பிறகுதான் திறன்பேசிகளின் வரவால் பல சராசரி இளைஞர்களுக்கும் முகநூல் மூலமாகப்
படிப்படியாக விழிப்புணர்வு பரவியது.

2014ன் முடிவில் சிங்கள தலைவர்களே வடுக தெலுங்கர்கள்தான் என்ற அதிர்ச்சிகரமான உண்மையை "இசைப்பிரியா தம்பி" என்பவர் ஆராய்ந்து வெளியிட்டார்.

அதன்பிறகுதான் வடுக வந்தேறிகளின் உண்மையான முகம் பலருக்கும் தெரிந்தது.
(ஆனாலும் பெரும்பான்மையான ஈழத்தமிழர்கள் இன்னமும் திருந்தவில்லை)

திராவிட எதிர்ப்பாளர்கள், தமிழ் மொழிப்பற்றாளர்கள், இந்துத்துவவாதிகள், சாதியவாதிகள் என பலரும் திராவிடத்திற்கு எதிராக முகநூலில் களம் இறங்கினர்.

இன்று முகநூல் முழுவதும் திராவிடம் மண்ணைக் கவ்விக்கொண்டு இருக்கிறது. தமிழ்தேசியம் கொடிகட்டிப் பறக்கிறது.

இதற்கெல்லாம் காரணம் அன்று திராவிடத்தோடு இறுதிவரை மல்லுகட்டிய கத்துக்குட்டிகள்தான்.
அந்த ஆரம்பகால போராளிகளில்

தமிழறிவன் தே
மதிமுகிலன் தமிழ்வேங்கை
கிருஷ்ணா தமிழ்டைகர்
அகழ்வான் கணேசன்
சாரதாதேவி சத்தியமூர்த்தி

ஆகியோரே என் நினைவுக்கு வருகின்றனர்.

ஆனாலும் தமிழ்தேசியம் ஒரு பலமான இயக்கமாக, ஒரு வலுவான கட்சியாக இன்னும் வளரவில்லை என்பது கவலையளிக்கிறது.

தமிழ்தேசியம் தனக்கென ஒரு ஊடகம் இல்லாவிட்டாலும் ஒரு சமூக வலையை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு இன்று தமிழ் இளைஞர்கள் மனதில் வேரூன்றி வருகிறது.
இதற்கு நான் ஒரு முக்கிய பங்கு வகித்துள்ளேன் என்பதே எனக்கு மனநிறைவாக உள்ளது.

தாய்நிலத்திலிருந்து பலநூறு கிலோமீட்டர் தொலைவில் ஒரு திறன்பேசியையும் 2ஜி இணையத்தையும் வைத்துக்கொண்டு என்னால் முடிந்தது இவ்வளவுதான்.

ஆனாலும் செய்யவேண்டிய பணிகள் இன்னும் நிறைய உள்ளன.

அன்று 'இந்தியா என் தாய்நாடு' என்று பிதற்றிக்கொண்டு aathi1947 என்று முகநூல் ஆரம்பித்த நான் இன்று எவ்வளவு தெளிந்துவிட்டேன் என்பது எனக்கே வியப்பாக உள்ளது.

2013லிருந்து பதிவுபோட தொடங்கிய நான் தமிழ்தேசியத்திற்கு தேவையான அத்தனை தகவல்களையும் திட்டங்களையும் பதிவு போட்டுவிட்டதாகவே உணர்கிறேன்.

அதற்காக முகநூலிலிருந்து போய்விடமாட்டேன்.
தொடர்ந்து இயங்குவேன்.

Sunday, 21 August 2016

நாங்கள் காட்டுமிராண்டிகளாக இருக்கலாம்

நீங்கள் கூறுவது போல நாங்கள் காட்டுமிராண்டிகளாகவும்,
மொழிப்பித்தர்களாகவும்,
இனவெறியர்களாகவும்,
சாதி வெறியர்களாகவும்,
ஒற்றுமை இல்லாதவர்களாகவும் இருக்கலாம்.

அதற்காக நீங்கள் எங்கள் உரிமைகளைப் பறித்து எங்களை ஆளலாம் என்பதை ஏற்கமுடியாது.

நாங்கள் ஒன்றுபட முடியாது என்ற மிதப்பில் இருக்காதீர்கள்.
அதற்கு அதிக நேரம் ஆகாது.
இனம் என்பது சாதி, மதம், நாகரீகம், ஏன் பேச்சுமொழி தோன்றும் முன்பே தோன்றிய கட்டமைப்பு.

நாங்கள் கைநீட்டும் முன்பாக எதிர்க்குரல் கொடுக்கும் இந்த நேரத்தில் இப்போதே தோல்வியை ஏற்றுக்கொண்டு பணிந்துவிடுங்கள்.

இல்லையென்றால் நாங்கள் உண்மையிலேயே காட்டுமிராண்டிகளாக மாறி,
ஒற்றுமையாக இல்லாவிட்டாலும் தனித்தனியாகவேணும்,
எங்கள் மொழிவெறியையும் இனவெறியையும் சாதிவெறியையும் உங்கள் மொழிக்கும் இனத்திற்கும் சாதிகளுக்கும் எதிராக திருப்புவோம்.

நீங்கள் ஓடி ஒளியக்கூட வாய்ப்பு இருக்காது.

கடைசியில் உங்களுக்கு நியாயம் கிடைக்கலாம்.
அப்போது நாங்கள் இருக்கிறோமோ இல்லையோ
நீங்கள் அதைப் பெற்றுக்கொள்ள நீங்கள் இருக்கமாட்டீர்கள்.