Showing posts with label மார்வாடி. Show all posts
Showing posts with label மார்வாடி. Show all posts

Saturday, 23 March 2019

நாம்தமிழர் தோற்கவேண்டிய தொகுதி

நாம்தமிழர் தோற்கவேண்டிய தொகுதி

  திருப்பெரும்புதூர் (ஸ்ரீபெரும்புதூர்) தொகுதியில் நாம்தமிழர் நிறுத்தும் வேட்பாளர் இரா.மகேந்திரன் எனும் மஹேந்தர் ஜெயின் ஒரு மார்வாடி.

இந்த உண்மையை நாம் தமிழர் கட்சியினர் மறைப்பதேன்?

வந்தேறிகளின் அடையாள மறைப்புக்கு உடைந்தையாக ஏன் இருக்கவேண்டும்?!

அந்த வேட்பாளர் அப்படி எதையாவது சாதித்தாரா என்றால் அதுவும் இல்லை.

பணக்காரன் என்பதற்காக இதைச் செய்கிறார்கள் என்றால் இது அப்பட்டபான (அரசியல்)விபச்சாரம்.

பிற மாநிலங்களில் உள்ள தமிழர் பகுதிகளில் கூட ஒரு கவுன்சிலர் பதவி நமக்கு கிடைப்பதில்லை.

ஆனால் இங்கே விரல்விட்டு எண்ணும் அளவுக்கு உள்ள ஒரு வந்தேறி மார்வாடிக்கு நேரடியாக அமைச்சர் நாற்காலி வரை சிவப்பு கம்பளம் விரிக்கப்படுகிறது.

தமிழர்களின் ஜனநாயக உரிமைகளைக் காக்க அமைச்சர் பதவி மிக முக்கியம்.

ஹிந்திய ஜனநாயகத்தில் நமக்கு கிடைத்துள்ள அதிகாரப் பகிர்வே குறைவு,
அதுவும் வந்தேறிகளின் கைகளில்.

இதற்கு மாற்றாக நாம்தமிழரை ஆதரித்தால் அதுவும் வந்தேறிகளை தலையில் தூக்கிக்கொண்டு வருகிறது.
நாம் எங்கேபோய் முட்டிக்கொள்ள?!

சீமானிடம் இத்தகைய சகிக்கவே முடியாத குறைகள் இருக்கின்றன.

எனவே பெரும்புதூரில் நாம்தமிழர் படு மோசமாகத் தோற்கவேண்டும்.

இதன்மூலம் சீமானுக்கு நல்லதொரு பாடம் கற்பிக்கவேண்டும்.

Friday, 7 December 2018

இனி சேலம் இன்னொரு சௌகார்பேட்டை

இனி சேலம் இன்னொரு சௌகார்பேட்டை 

எட்டுவழிச் சாலை வருவது யாருக்காக?!

சேலத்திற்கு ரோகிணி கலெக்டராக அமர்த்தப்பட்டு அவரது விளம்பரத்திற்கு செலவு செய்வது  யார்?!

சேலம் உட்பட சென்னை முதல் கோவை வரை வடமாவட்டங்களில் மகாவீரர் ஜெயந்தி அன்று கறிக்கடைகளை திறக்கவிடாமல் தகராறு செய்து கடைசியில் கலெக்டர்கள் மூலம் தடை விதித்து லோக்கல் சட்டமாகவே கொண்டுவந்து யார்?!

புதுச்சேரி முதல்வரையே வரவைத்து சாதாரண ஆள்போல தேரை இழுக்கவைத்தது யார்?!

பெரிதாக எதையுமே சாதிக்காத சேலம் பியூஸ் மானூஸ் எப்படி திடீரென்று பிரபலமானார்?!

இசுலாமியர் நாய்க்கறி போடுவதாக கொளுத்திப் போட்டது யார்?!

விடை தெரிய தொடர்ந்து படியுங்கள்...

சேலம் எருமாபாளையம் அருகில் 1995-ஆம் ஆண்டு சில ஜெயின் மதத்தை சார்ந்தவர்கள் (அதாவது பனியா சமூகம்) குஜராத் ராஜஸ்தான் பகுதிகளில் இருந்து வந்து குடியேறினார்கள்.

மிகச் சிறுபான்மையாக இருந்த இவர்கள் வெறும் 20 ஆண்டுகளில் சேலத்தை கைப்பற்றி தமது கைக்குள் கொண்டுவந்து விட்டார்கள்.

நம்ப முடியவில்லையா?!
ஆனால் இதுதான் உண்மை.

ஒரு பக்கம் மார்வாடிகளும் ஒரு பக்கம் ஜெயின்களும் மெல்ல மெல்ல குடியேறி சத்தமேயில்லாமல் படு சாமர்த்தியமாக எருமாபாளையம் தொடங்கி பழைப்பேருந்து நிலையம், செவ்வாய்பேட்டை, அரசிபாளையம், நான்கு ரோடு, சங்கர் நகர், காந்தி ரோடு என ஒரு வட்டமான பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான கடைகளையும் வீடுகளையும் வாங்கி குவித்துவிட்டார்கள்.

அதுதான் இன்று சேலத்தின் இதயம்.
அந்த இதயத்தில் பனியாக்கள் குத்தவைத்து உட்கார்ந்து விட்டனர்.
இப்பகுதி முழுவதும் மார்வாடியும் ஜெயினும் பெரும் ஆதிக்க சக்தியாக மாறியதன் விளைவாக சங்கர் நகர் பகுதிகளில் நான்கு தெருவின் பெயரையே அரசு கெஜட்டில் "ஜெயின் தெரு" என்று மாற்றிவிட்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஏன் சேலத்தைக் குறிவைத்துள்ளனர்?!

இங்குதான் தமிழகத்தின் முக்கியமான கனிம வளம் குவிந்துள்ளது.
(பார்க்க படம்: Mineral map of Tamil Nadu)

சேலத்திலும் அதைச் சுற்றிலும் உள்ள கனிமங்களைக் கொள்ளையடிக்க பனியா கம்பெனிகள் பல ஆண்டுகளாக காய்நகர்த்தி வருகின்றன.

அதன் விளைவு சேலம் எட்டு வழிச்சாலை மற்றும் சேலம் உருக்காலை தனியார் மயமாக்கும் முயற்சி போன்றன.

இவர்களுக்கு ஒத்தாசையாக நடந்ததே மேற்படி குடியேற்றம் மற்றும் ஆதிக்க மாற்றம்.

இதை எப்படி செய்கிறார்கள்?!

பொதுவாக வடயிந்திய வணிக சமூகமான பனியாவில் இரு பெரும் பிரிவுகள் உண்டு.
மார்வாடி மற்றும் ஜெயின்.
அம்பானி, அதானி, மிட்டல், வேதாந்தா, ஜிண்டால் என கார்ப்பரேட் பணமுதலைகள் பனியா சமூகமே.
இவர்கள்தான் மத்திய அரசை இயக்குவது.

இதில் மார்வாடிகள் இந்து மதத்தையும் ஜெயின் மக்கள் மகாவீரரின் போதனைகளையும் பின்பற்றினாலும் இரண்டு தரப்பும் பாஜகவை ஆதரிப்பவர்கள்.

காரணம் அவர்களின் வியாபாரத்திற்கு  காங்கிரசை விட பாதுகாப்பாக பாஜக ஆட்சி இருக்கிறது என்பதால்.

இயல்பில் ஜெயினும் மார்வாடியும் ஒன்றிப்போவது இல்லை.
அவர் வீதியில் இவர் வசிப்பது இல்லை, இவர் வீதியில் அவர் வசிப்பது இல்லை.

இவர்கள் இரண்டு பேருமே முதலாளி சமூகம் என்பதால் இவர்கள் இந்தி பேசிக்கொண்டு வருகின்ற பீகாரிகளை தொழிலாளிகளாக அடிமாட்டு கூலிக்கு பயன்படுத்துகிறார்கள்.
(பொதுவாகவே கஞ்சத்தனம் உள்ளவர்கள்.
சொத்து சேர்த்துக்கொண்டே போவார்கள்.
ஆனால் அனுபவிக்க மாட்டார்கள்)

இம்மூன்று பேருக்குள்ளும் எதில் முரண்கள் இருந்தாலும் வியாபாரம், அரசியல், நில ஆக்கிரமிப்பு போன்றவற்றில் ஒத்த சிந்தனை உடையவர்களாக இருக்கின்றனர்.

உதாரணமாக ஒரு வீடு விற்பனைக்கு வந்தால் நான்கு குடும்பம் ஒன்று சேர்ந்து அதனை வாங்கி நான்கு அடுக்குமாடி வீடு கட்டி குடிவருகிறார்கள்.

அருகிலேயே ஒரு கொட்டகை போட்டு பீகாரிகளை குடியமர்த்தி வைக்கிறார்கள்.

இதன் விளைவாக நிலம் நீர் மின்சாரம் என்ற அனைத்தையும் சுரண்டுகிறார்கள்.

குறிப்பாக இவர்கள் கட்டும் வீடுகள் காலியாகவே கிடந்தாலும் வாடகைக்கு கூட தமிழர்களைத் தங்க வைப்பது இல்லை.

இதன் உச்சபட்ச கொடுமையாக எருமாபாளையத்தில் ஒரு ஏரியையே வளைத்து ஒரு பிரமாண்டமான ஜெயின் கோயிலை கட்டிவிட்டார்கள்
(சேலத்தின் பிரபலமான சமூக சேவகரென நாம் கொண்டாடுகின்ற பியூஸ் மானுஸ் இந்த கோயில் கட்டப்பட்டதற்கு முக்கிய காரணம்).

அதில் தமிழர்கள் நுழையத் தடை என்பது கூடுதல் செய்தி.
அங்கு மட்டும் அல்ல, அவர்கள் வாழும் அனைத்து பகுதிகளிலும் ஒரு ஜெயின் கோயில் கட்டி முடித்துவிட்டார்கள்.

தமிழர்களை அண்டவிடக் கூடாது என்பதில் மட்டும் இவர்கள் அனைவருமே தெளிவாக இருக்கிறார்கள்.

ஒரு தெருவில் வரிசையாக வீடுகளை வாங்கி அதன் பொதுவழியில் தடுப்பு போட்டு அதைத் தனி தீவுபோல ஆக்கிக் கொள்கின்றனர்.

உள்ளே நடப்பது தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களான புகையிலை மற்றும் பாக்கு உற்பத்தி.

இவற்றிற்கு தடை விதித்ததே இவர்கள்.
முதலில் போதைப் பொருட்களை மக்களுக்குப் பழக்கப்படுத்தி அவர்கள் அடிமையான பிறகு தடை விதித்து பத்து மடங்கு விலைக்கு விற்பார்கள்.

இதன் மூலமே இவர்கள் பெருமளவில் பொருள் ஈட்டுகின்றனர்.

இது தவிர வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வெளிப்பார்வைக்கு நகைக்கடை அல்லது அடகுக்கடை நடத்துவதும் இவர்கள் பல தலைமுறைகளாக செய்துவரும் உத்தி
(அயன் படத்தில் கூட காட்டியிருப்பர்).

இவர்களிடம் பணம் விளையாடுவது இந்த மாதிரியான சட்டவிரோத தொழில்களைக் காலங்காலமாக கச்சிதமாக செய்துவருவதால்தான்.

இவர்கள் தமது பண பலத்தால் சேலத்தில் முக்கிய விற்பனைப் பொருட்களான கட்டுமானப் பொருட்கள், தங்கம், வெள்ளி, துணி, பான்பாராக், புகையிலை, எலக்ட்ரானிக், கைவினைப் பொருட்கள், செருப்பு உட்பட அனைத்தையும் கைப்பற்றிவிட்டனர்.
இப்போது சேலத்தில் ஊசி முதல் பங்களா வரை உற்பத்தி முதல் விற்பனை வரை மார்வாடியோ ஜெயினோ தான் செய்கிறார்கள்.

அது சார்ந்த வேலைகளுக்கு பீகார் சார்கண்ட் உத்திரபிரதேச பகுதிகளை சார்ந்த 15 வயதிற்கு உட்பட்ட பல்லாயிரக்கணக்கான குழந்தை தொழிலார்களை கொண்டு வந்து சேலம் முழுவதும் நிரப்பிவிட்டார்கள்.

குடிவரும் அனைவருக்கும் பத்து நாட்களுக்குள் வாக்காளர் அடையாள அட்டையும் மூன்று மாதங்களுக்குள் ரேசன் கார்டும் தேடி வருகின்றன.

  இந்த பனியா ஆக்டோபஸின் மூளை சென்னை செளக்கார்பேட்டை யில் உள்ளது.
அங்கு ஏற்கனவே இவர்களுக்கு ஆள், பத்திரிக்கை, பணம், சங்கம், பதவி, சரக்குப் போக்குவரத்து என அனைத்துக்கும் ஏற்பாடு உள்ளது.

இந்த ஆக்டோபஸ் சென்னை முதல் கோவை வரை தன் கால்களைப் பரப்பியுள்ளது.
இதன் அடுத்த குறி மதுரை ஆகும்.
தற்போது மதுரை மீனாட்சி கோவிலைச் சுற்றி அனைத்து வீதிகளிலும் முக்கால்வாசி ஜெயின் - மார்வாடிகளுக்கு சொந்தம்.

மதுரையின் இரண்டு வார்டுகள் பீகாரிகள் குடியேறி வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் வாக்காளர்களாக ஐந்தே ஆண்டுகளில் ஆகிவிட்டனர்.

தமிழகம் முழுக்க இவர்களுக்கு போட்டி தெலுங்கர் மட்டுமே.
தெலுங்கர் வியாபாரத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டதால் இப்பொழுது தங்கள் ஆதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்ள இவர்களும் இந்துத்துவ அமைப்புகளில் சேர தொடங்கிவிட்டார்கள்.

முதலில் குடியேற்றம்,
பிறகு கள்ளக் கடத்தல்,
பிறகு நில ஆக்கிரமிப்பு,
பிறகு சந்தை கைப்பற்றல்,
பிறகு அந்நிலத்தை தக்க வைக்கவும் தமது மக்களை ஒருங்கிணைக்கவும் ஜெயின் கோயில்,
கோயில் மூலம் கூட்டுநிதி,

அந்த நிதி மூலம் இனம் மொழி என்கிற வரையறையில் வராத தேசிய அல்லது மதவாத அரசியல் மற்றும் விளம்பரம்,
இதன் மூலம் வரும் பிரச்சனைகளைச் சமாளிக்க பனியா கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கண்கானி வேலை பார்த்து அதிகாரத்தை பெறுவது,
குடியேறி வாக்குவங்கி அளிப்பது, தேர்தல் பணி செய்வது, நிதி அளிப்பது, கார்ப்பரேட் ஆதரவு என மத்திய அரசை  ஆட்டிப்படைக்கும் ஒரு வலிமையான அரசியலை மார்வாடியும் ஜெயினும் இந்தியா முழுவதும் கட்டவிட்டனர்.
தமிழகத்தில் கட்டத் தொடங்கி பாதி வெற்றிபெற்று விட்டனர்.

இவர்கள் அதிகாரத்தின் நீட்சித்தான் இப்பொழுது புதிதாக தமிழ்நாட்டின் எல்லா நகரங்களிலும் ஆர்எஸ்எஸ் ஊர்வலம், ஜெயின் ஊர்வலம் ஆகியன நடத்தப்படுகிறது.

இவர்களின் முதல் இலக்கு சாதாரண மக்கள் அல்ல;
ஒவ்வொரு நகரத்திலும் இருக்கின்ற உள்ளூர் வியாபாரிகள்தான்.

இந்த வியாபாரிகளையும் சந்தையையும் கைப்பற்றிவிட்டால் நிலத்தையும் அரசியலையும் கைப்பற்ற முடியுமென திட்டமிடுகிறார்கள்.

இத்தகைய சூழலில் மொழி இனம் நிலம் என்று பேசுகின்ற ஒரு கட்சி தமிழ்நாட்டில் உருவானால் மார்வாடி மற்றும் ஜெயின் வியாபாரமும் அவர்களின் குடியேற்றமும் சிக்கலுக்கு உள்ளாகும் என்பதால்தான் நாம் தமிழர், தமிழ்தேசியப் பேரியக்கம் போன்ற தமிழ்தேசிய அரசியலை நசுக்க பார்க்கிறார்கள்.
பாரிசாலன் இரண்டு மாதம் உள்ளே இருந்தது இவர்கள் கைங்கர்யம்தான்.

இன்றைய சூழலில் தமது முதல் எதிரி நாம் தமிழர் கட்சிதான் என்பதில் இவர்கள் தெளிவாக இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டின் இளைஞர்கள் இந்த புரிதல்களுக்கு வந்துவிடாமல் தடுக்கவே இந்து முன்னணியை வளர்த்து விடுவது
ரஜினியை அரசியலுக்குள் இழுத்துவிடுவது
இன்டர்நெட்டில் வெட்டித்தனமான நடவடிக்கைகளை ஊக்குவிப்பது என காய்நகர்த்துகின்றனர்.

இன்னும் பத்தே ஆண்டுகளில் தமிழகத்திலும் இவர்கள் சொல்வதுதான் சட்டம் என்ற சூழல் வரும்.

உறவுகளே நம்புங்கள்...

ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துகொண்டு இருக்கிறோம்...

Tuesday, 21 August 2018

2021 இல் தமிழகத்தில் ஒன்றரை கோடி வந்தேறிகள்

2021 இல் தமிழகத்தில் ஒன்றரை கோடி வந்தேறிகள்

பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியிடப்படும் மக்கட்தொகைக் கணக்கீட்டின் படி தமிழகத்தின் மக்கட்தொகையானது தமிழகப் பிறப்பு விகிதத்தின்படி 51 லட்சம் தான் அதிகரித்திருக்க வேண்டும்.
ஆனால் தமிழக மக்கட்தொகை பத்தாண்டுகளில் 97 லட்சம் அதிகரித்துள்ளது.

அதாவது கடந்த பத்தாண்டுகளில் மட்டும் ஏறத்தாழ 50 லட்சம் பேர் தமிழகத்தில் குடிபுகுந்து ரேசன் கார்டு வாங்கியுள்ளனர்.

அதனாலேயே தமிழக குடிமக்களின் எண்ணிக்கை அரைக் கோடி கூடுதலாக அதிகரித்துள்ளது.
இவர்களில் பெரும்பாலோர் வடயிந்தியர் ஆவர்.

சென்னையையும் கோவையையும் குடியேறி நிறைத்த பிறகு தற்போது மதுரையை குறிவைத்துள்ளனர்.

மதுரையைச் சுற்றியுள்ள மாசி வீதிகளிலும் சித்திரை வீதிகளிலும் உள்ள அனைத்து கடைகள், கட்டிடங்கள், நிறுவனங்கள் அனைத்தையும் மார்வாடிகள் விலைக்கு வாங்கிவிட்டனர்.

இதற்கு காரணம் குஜராத்திய மக்களான சௌராஷ்டிர மக்கள் மதுரை முதல் திருமங்கலம் வரை தொடர்ச்சியாக பெரும்பான்மையுடன் குட்டி தாய்நிலம் அமைத்து வாழ்வதுதான்.

இங்கே தற்போது பெருகியுள்ள பாஜக ஆதரவும் மதுரை மார்வாடிகளின் பணமும் சேர்ந்து திட்டமிட்டு மதுரையில் ஹிந்தியரைக் குடியேற்றி மதுரையைத் தமக்குச் சொந்தமாக்கப் பார்க்கின்றனர்.
 
மதுரையில் குறிப்பிட்ட வார்டுகளில் வடயிந்தியரைக் குடியேற்றி வருகின்றனர்.
அங்கே மார்வாடிகளை நிறுத்தி வெற்றிபெற வைக்கவுள்ளனர்.

மதுரை 79 வது வார்டில் 600 பேராக இருந்த வடயிந்திய வாக்காளர்கள் தற்போது 4000 பேராகியுள்ளனர்.

இதேபோல 58 வது வார்டில் 7000 பேர் இருக்கிறார்கள்.

மதுரை மத்திய தொகுதியில் 20,000 வடயிந்திய வாக்காளர்கள் உள்ளனர்.

(இதிலே 18 வயதுக்கு குறைந்தோர் மற்றும் குடியுரிமை பெறாதோரைச் சேர்க்கவில்லை)

அதாவது ரேசன்கார்டு வாங்குவதற்கு நிரந்தர முகவரி தேவை அதனால் இப்போதெல்லாம் வடயிந்தியர்கள் முதலில் வாக்காளர் அடையாள அட்டை வாங்கிவிடுகின்றனர்.

2016 செப்டம்பர் 1 அன்று மத்திய பா.ஜ.க அரசு தமிழக அரசின் மீது அழுத்தம் கொடுத்து ஓ.பன்னீர்செல்வம் மூலம் தமிழ் தெரியாதோரும் வெளிமாநிலத்தவரும் வெளிநாட்டவரும் கூட தமிழக அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்கும் சலுகையை அறிவித்தது.
(இதை தமிழ்தேசிய பேரியக்கம் தலைவர் பெ.மணியரசன் கடுமையாக எதிர்த்தது நினைவிருக்கலாம்)

கடந்த ஆண்டில் அரைகோடி பேர் குடிவந்தனர் என்றால் இந்த சலுகை இன்னும் பத்தாண்டுகளில் ஒரு கோடிபேர் குடிபுக வழிசெய்யும்.

மெல்ல மெல்ல தமிழர்கள் இங்கே சிறுபான்மை ஆக்கப்படுவர்.

தாய்நிலத்திற்கு ராணுவ வேலி போடாத இனத்திற்கு அதுதான் நடக்கும்

சில தகவல்களுக்கு நன்றி: நக்கீரன்

Saturday, 24 March 2018

ஸ்டெர்லைட் முன்பு ஒரு லட்சம் தமிழர்கள்!

ஸ்டெர்லைட் முன்பு ஒரு லட்சம் தமிழர்கள்!

அதே நேரத்தில் லண்டனில் உள்ள அதன் முதலாளி அகர்வால் வீடு முன்பும் போராட்டம்!

ஜல்லிக்கட்டு போராட்டம் போல மீண்டும் ஒரு அதிர்ச்சி வைத்தியம்!

ட்விட்டர் மூலம் ஒருங்கிணைந்த இளைஞர்கள்!

Saturday, 15 July 2017

காமராசர் - ஒரு முடிந்துபோன கதை

காமராசர் - ஒரு முடிந்துபோன கதை

சில வன்னியர்கள்,
காமராசரால் அரசியலில் வன்னியர் ஓரம் கட்டப்பட்டதையும்

அதை எதிர்த்து வெளிய வந்த வன்னிய தலைவர்கள் (எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் மற்றும் மாணிக்கவேல் நாயகர்)
தனி கட்சி ஆரம்பித்து பெருவாரி வெற்றி பெற்றதையும் எழுதி

ஏதோ காமராசரை வன்னியர்களுக்கு எதிரானவர் என்றும்
நாடார் சாதிவெறியர் என்றும் அடையாளப்படுத்த முயல்கின்றனர்.

அடேய் தம்பிகளா !

அதே காமராசர்,
நேசமணி நாடார் தமிழ்நாடு காங்கிரசில் இணைய வந்தபோது முடியாது என்று மறுத்தார் என்பதையும்

அதன் பிறகு அவர் தனிக்கட்சி தொடங்கி நிறுத்திய 14 வேட்பாளர்களை எதிர்த்து
தாமே எதிர் வேட்பாளர்களை நிறுத்தி தாமே நேசமணி நாடாருக்கு எதிராக பிரச்சாரம் செய்தார்  என்பதையும் அறிக.

அதோடு காமராசர் நிறுத்திய 14 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர் என்பதையும்
நேசமணி நாடாரின் வேட்பாளர்கள் பெருவாரி வெற்றிபெற்றனர் என்பதையும் அறிக.

காமராசரை முதலமைச்சர் பதவியிருந்து தூக்கி எறிந்தது சிவகாசி நாடார்கள் என்பதையும் அதனால் தெலுங்கரான சீனிவாசன் வெற்றிபெற்றார் என்பதையும் அறிக.

காமராசர் விசுவாசமாக இருந்தது நேரு குடும்பத்துக்கு மட்டும்தான்.

தன் சொந்த சாதிக்கோ இனத்திற்கோ எந்த நன்மையும் செய்ததில்லை.

தமிழர்களின் நலன்களையெல்லாம் காவு கொடுத்துதான் அவர் ஹிந்திய தலைவராக உருவெடுத்தார்.
அதாவது அவர் அந்த காலத்து அப்துல் கலாம்.

என்ன பயன்?

இன்று ஹிந்தியாவில் எவனுக்கும் அவர் பெயர்கூடத் தெரியாது

வன்னியர் - நாடார் மோதல் திராவிட தெலுங்கர்களை உள்ளே விட்டதால் 60 ஆண்டு தமிழினம் பட்டதெல்லாம் போதாதா?

முடிந்துபோன கதைகளை ஏன் இழுக்கிறீர்கள்?

உங்களுக்கு ஆளும் தெலுங்கனை எதிர்க்கத் துப்பில்லையா?

அல்லது வட மாவட்டங்களை உள்ளங்கையில் வைத்திருக்கும் மார்வாடிகளை கண்டு குலைநடுக்கமா?

Monday, 10 April 2017

மஹாவீர் ஜெயந்தியாம்

மஹாவீர் ஜெயந்தியாம்

>.< >.< >.< >.< >.< >.< >.< >.<

சென்னை கோவை நகரங்களில் ஒரு இறைச்சிக்கடை திறக்கவில்லை.

மார்வாடி ஏரியா என்றால் சௌகார்பேட்டை மட்டும்தான் என்று நினைத்தால் இன்று கோவை வரை அவர்கள் ஏரியா ஆகிவிட்டதை கண்கூடாகப் பார்க்கமுடிகிறது.

புதுச்சேரியில் எதற்குமே மூடாக் கதவுடைய சாராயக்கடைகளையே அடைத்துவிட்டு முதல்வர் அம்மணமாக அலையும் ஜைன் கூட்டத்துடன் போய் தேரிழுக்கிறார்.

என்றால் ஜைன் மதத்தைப் பின்பற்றும் ஹிந்தியர்கள் (பெரும்பாலும் மார்வாடிகள்)
எவ்வளவு பெரிய ஆதிக்க சக்தியாக வட மாவட்டங்களில் உருவெடுத்துள்ளனர் என்பதை நீங்களே மதிப்பிடுங்கள்.

தமிழகத்தில் 1% மக்கள் கூட கொண்டாடாத ஒரு பண்டிகைக்கு விடுமுறை வேறு

இதேபோல 2013 மகாவீரர் ஜெயந்தி (25 ஏப்ரல்) அன்று கறிக்கடை திறக்கக்கூடாது என்று திருநெல்வேலியில் இசுலாமியர் பகுதியான மேலப்பாளையத்தில் காவல்துறையுடன் வந்து பிரச்சனை செய்தனர்.

திருநெல்வேலிக்காரன் அசரவில்லை.
மொத்தமாக கூடி நின்று முடியவே முடியாது என்று கூறிவிட்டார்கள்.

மகாவீரர் தமிழர், அவர் இறப்புக்குதான் தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளிக்கிறோம்
என்று வரலாறு பேசும் தமிழர்களே!

அதிமேதாவித்தனத்தால் அழிந்தீர்கள்.

இன்று எவன் மகாவீரர் பெயரைச்சொல்லி ரவுடித்தனம் பண்ணுகிறான் என்று உற்றுப்பாருங்கள்.

தமிழர் பண்டிகை எதற்காவது எந்த மாநிலத்தானாவது விடுமுறை விடுகிறானா?

இது தமிழ்நாடா?
அல்லது வந்தேறிகள் அதிகாரம் செய்யும் அடிமைநாடா?
____________________

சென்னை:
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு ஏப்ரல் 2 ஆம் தேதியன்று இறைச்சிக் கடைகளை மூட வேண்டும் என்று சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது...
DINAMANI 2015-03-27

புதுச்சேரி:
புதுவையில் மகாவீர் ஜெயந்தியையொட்டி வியாழக்கிழமை (ஏப்.2ஆம் தேதி இறைச்சிக் கடைகள் மூடப்பட வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது....
DINAMANI 2015-03-29

சேலம்:
இறைச்சிக் கடைகளுக்கு இன்று விடுமுறை
மகாவீரர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை (ஏப்ரல் 2) சேலம் மாநகரில் இறைச்சிக் கடைகள் செயல்படக் கூடாது.
மீறி திறக்கப்படும் கடைகள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை...
DINAMANI 2015-04-02

திருப்பூர் :
மகாவீர் ஜெயந்தியன்று, இறைச்சி கடைகளுக்கு விடுமுறை அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
மீறும் இறைச்சி கடைகளுக்கு நோட்டீஸ் வினியோகம்
DINAMALAR 2015-04-03

கோவை : மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, கோவையில் நாளை (9ம் தேதி) இறைச்சி மற்றும் மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டது.
DINAMALAR 2017-04-07

ஊட்டி:
நீலகிரி கலெக்டர் சங்கர் அறிக்கை;
இன்று, (19ம் தேதி) மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, நீலகிரியில் உள்ள அனைத்து வகையான இறைச்சிக் கடைகளும், மூடப்பட்டிருக்க வேண்டும்.
மீறி, கடைகள் திறந்தால் நடவடிக்கை
DINAMALAR 2016-04-18

Saturday, 6 August 2016

விழுப்புரம் ஆசாரிகள்

விழுப்புரம் ஆசாரிகள்
●○●○●○●○●○●○●○●○●○

தங்க நகை வேலைப்பாடுகளில் அதுவும் சிறிய அளவிலான நகைகளில் சிறப்பான வேலைப்பாடுகளுடன் செய்துதருவதில் தமிழகத்திலேயே முதலிடம் விழுப்புரம்.
(பெரிய அளவிலான நகைகளுக்கு கோவை)

நகைகளைச் செய்து தந்து கூலி பெறுபவர்கள் ஆசாரிகள்.

ஆனால் தங்கம் முழுவதும் மார்வாடிகள் கையில்,
அதை விற்பதும் லாபம் பார்ப்பதும் பெரும்பாலும் மார்வாடிகள்
(தமிழகம் முழுக்க நிலை இதுதான்)

தமிழ் ஆசாரிகள் சிறுசிறு கடைகளும் பட்டறைகளும் வைத்திருந்தனர்.

இன்று நிலை முன்பை விட மோசம்.

வங்காளிகள் கூட்டம் கூட்டமாகக் குடிவந்து தங்க நகை செய்வது தவிர அதன் உதவி தொழில்களைச் செய்யும் பட்டறைகளைக் கைப்பற்றிவிட்டனர்.
சலங்கை உருக்குதல், பட்டை வெட்டுதல், கம்பி நீட்டுதல் போன்ற துணைத் தொழில்கள் இன்று வங்காள வந்தேறிகள் கையில்.

மார்வாடிகள் வங்காளிகளுக்கு பெரும் ஆதரவளித்து இத்தனைநாள் உழைத்துக் கொட்டிய தமிழர்களை ஒரம்கட்டிவிட்டனர்.

நகை செய்யும் திறமை தமிழ் ஆசாரிகள் கையில்தான் இன்றும் உள்ளது.
அவர்கள் வேறு எந்த சமூகத்துக்கும் அதைச் சொல்லிக்கொடுப்பதில்லை.

ஆனால் காலம் காலமாக கூலிகளாகவே உள்ளனர்.
கிலோ தங்கத்தை உருக்கி நகை செய்து கொடுக்கும் ஆசாரியின் வீட்டுக்குப் போனால் மனைவி மக்கள் கழுத்திலும் காதிலும் குண்டுமணித் தங்கம் இருக்காது.

தங்கத்தொழில் தொடர்பான பட்டறை வைத்திருந்த பல விழுப்புரம் ஆசாரிகள் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்ட நிகழ்வுகளும் பல நடந்தேறி வருகின்றன.

எத்தனை ஆண்டுகாலம் தமிழ் மண்ணின் உப்பைத் தின்றாலும் வடவன் வடவனைத்தான் ஆதரிப்பான்.

இந்த பதிவைப் படித்துவிட்டு 'ஆசாரிகள் தொழிலை கைக்குள் வைத்திருப்பது சாதிவெறி' என திராவிட இயக்கங்கள் பிரச்சாரம் செய்யலாம்.

(தகவலுக்கு நன்றி: கா.தமிழ்வேங்கை
தென்செய்தி)