Monday 10 April 2017

மஹாவீர் ஜெயந்தியாம்

மஹாவீர் ஜெயந்தியாம்

>.< >.< >.< >.< >.< >.< >.< >.<

சென்னை கோவை நகரங்களில் ஒரு இறைச்சிக்கடை திறக்கவில்லை.

மார்வாடி ஏரியா என்றால் சௌகார்பேட்டை மட்டும்தான் என்று நினைத்தால் இன்று கோவை வரை அவர்கள் ஏரியா ஆகிவிட்டதை கண்கூடாகப் பார்க்கமுடிகிறது.

புதுச்சேரியில் எதற்குமே மூடாக் கதவுடைய சாராயக்கடைகளையே அடைத்துவிட்டு முதல்வர் அம்மணமாக அலையும் ஜைன் கூட்டத்துடன் போய் தேரிழுக்கிறார்.

என்றால் ஜைன் மதத்தைப் பின்பற்றும் ஹிந்தியர்கள் (பெரும்பாலும் மார்வாடிகள்)
எவ்வளவு பெரிய ஆதிக்க சக்தியாக வட மாவட்டங்களில் உருவெடுத்துள்ளனர் என்பதை நீங்களே மதிப்பிடுங்கள்.

தமிழகத்தில் 1% மக்கள் கூட கொண்டாடாத ஒரு பண்டிகைக்கு விடுமுறை வேறு

இதேபோல 2013 மகாவீரர் ஜெயந்தி (25 ஏப்ரல்) அன்று கறிக்கடை திறக்கக்கூடாது என்று திருநெல்வேலியில் இசுலாமியர் பகுதியான மேலப்பாளையத்தில் காவல்துறையுடன் வந்து பிரச்சனை செய்தனர்.

திருநெல்வேலிக்காரன் அசரவில்லை.
மொத்தமாக கூடி நின்று முடியவே முடியாது என்று கூறிவிட்டார்கள்.

மகாவீரர் தமிழர், அவர் இறப்புக்குதான் தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளிக்கிறோம்
என்று வரலாறு பேசும் தமிழர்களே!

அதிமேதாவித்தனத்தால் அழிந்தீர்கள்.

இன்று எவன் மகாவீரர் பெயரைச்சொல்லி ரவுடித்தனம் பண்ணுகிறான் என்று உற்றுப்பாருங்கள்.

தமிழர் பண்டிகை எதற்காவது எந்த மாநிலத்தானாவது விடுமுறை விடுகிறானா?

இது தமிழ்நாடா?
அல்லது வந்தேறிகள் அதிகாரம் செய்யும் அடிமைநாடா?
____________________

சென்னை:
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு ஏப்ரல் 2 ஆம் தேதியன்று இறைச்சிக் கடைகளை மூட வேண்டும் என்று சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது...
DINAMANI 2015-03-27

புதுச்சேரி:
புதுவையில் மகாவீர் ஜெயந்தியையொட்டி வியாழக்கிழமை (ஏப்.2ஆம் தேதி இறைச்சிக் கடைகள் மூடப்பட வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது....
DINAMANI 2015-03-29

சேலம்:
இறைச்சிக் கடைகளுக்கு இன்று விடுமுறை
மகாவீரர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை (ஏப்ரல் 2) சேலம் மாநகரில் இறைச்சிக் கடைகள் செயல்படக் கூடாது.
மீறி திறக்கப்படும் கடைகள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை...
DINAMANI 2015-04-02

திருப்பூர் :
மகாவீர் ஜெயந்தியன்று, இறைச்சி கடைகளுக்கு விடுமுறை அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
மீறும் இறைச்சி கடைகளுக்கு நோட்டீஸ் வினியோகம்
DINAMALAR 2015-04-03

கோவை : மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, கோவையில் நாளை (9ம் தேதி) இறைச்சி மற்றும் மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டது.
DINAMALAR 2017-04-07

ஊட்டி:
நீலகிரி கலெக்டர் சங்கர் அறிக்கை;
இன்று, (19ம் தேதி) மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, நீலகிரியில் உள்ள அனைத்து வகையான இறைச்சிக் கடைகளும், மூடப்பட்டிருக்க வேண்டும்.
மீறி, கடைகள் திறந்தால் நடவடிக்கை
DINAMALAR 2016-04-18

No comments:

Post a Comment