Showing posts with label பண்டிகை. Show all posts
Showing posts with label பண்டிகை. Show all posts

Monday, 12 May 2025

கள்ளழகர் கதை ஒரு பொய்க்கதை

கள்ளழகர் கதை ஒரு பொய்க்கதை
26.04.2017

திருமலை நாயக்கர் காலத்திற்கு முன்,

மாசி மாதத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம் நடக்கும்
இது மாசித் திருவிழா.
மீனாட்சியம்மனும் சுந்தரேஸ்வரரும் தம்பதிகளாக ஊர்வலம் வரும் தெருக்கள் இன்றும் மாசிவீதிகள் என்று அழைக்கப்படுகின்றன.

இரண்டு மாதம் கழித்து,
சித்திரை மாதத்தில் அழகர் ஆற்றில் இறங்குவார்.
அதுவும் மதுரையில் அல்ல தேனூர் அருகே.

என்றால் கள்ளழகர், மீனாட்சி கல்யாணத்தைப் பார்க்க வருகிறார் என்ற கதை பொய்தானே?!

திருமலை நாயக்கர் இந்த இரண்டு விழாவையும் ஒன்றாக்கி சித்திரையில் கொண்டாடுமாறு மாற்றியமைத்துள்ளார்.

மீனாட்சி அழகரின் தங்கை என்பதற்கு எனக்குத் தெரிந்தவரை எந்த சான்றும் கிடையாது.

இதேபோல இராசராசனின் சதய திருவிழாவும் மாதம் மாற்றப்பட்டுள்ளது.

கடவுள்கள் வரலாறை ஆள்பவன் நினைத்தால் மாற்றமுடிகிறதே?!

வந்தேறிகள் இப்படித்தான் ஆளும் அதிகாரத்தைக் கைப்பற்றி தமிழர்களின் ஒவ்வொரு விழாவையும் குழப்பி  வைத்துள்ளனர்.

Friday, 11 October 2024

ஆய்த பூசனை

ஆய்த பூசனை

19.10.2018 அன்றைய பதிவு 

சங்ககாலத்தில் அதியமானுக்கும் தொண்டைமானுக்கும் போர் மூளும் சூழல் உருவானது.
அதியமானின் தோழியான ஔவை போரைத் தவிர்க்கும் பொருட்டு தொண்டமானிடம் தூது போகிறாள்.
தொண்டைமான் தனது ஆயுத சாலையைப் பார்வையிட அழைத்துச் செல்கிறான்.

அங்கே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களைப் பார்த்து ஒரு ஔவை பாடல் பாடுகிறாள்.

"இவ்வே பீலி அணிந்து மாலை சூட்டிக்
கண்திரள் நோன்காழ் திருத்தி நெய் அணிந்து
கடியுடை வியன்நக ரவ்வே  அவ்வே
பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து
கொல்துறைக் குற்றில மாதோ என்றும்
உண் டாயின் பதம் கொடுத்து
இல் லாயின் உடன் உண்ணும்
இல்லோர் ஒக்கல் தலைவன்
அண்ணல்எம் கோமான் வைந் நுதி வேலே"
(புறநானூறு -95)

இலக்கணம் பற்றி படிக்கும்போது பாடல் வஞ்சப் புகழ்ச்சி அணியில் நீங்கள் இதை ஏற்கனவே படித்திருக்கலாம்.

அதாவது ஔவையார் தொண்டைமானைப் பார்த்து,
இங்கே ஆயுதங்கள் எல்லாம் (துருவேறாமல் பாதுகாக்க) எண்ணெய் பூசப்பெற்றுத்
அழகுக்காக ஆயுதக் குவியல்களின்மீதும் அடுக்குகளின்மீதும் மயில் தோகைகளால் அலங்கரிக்கப்பட்டு
ஆயுத வரிசைகளின்மேல் பூக்களால் தொடுக்கப்பட்ட மாலைகளும் அணிவிக்கப்பட்டு மினுமினுப்பாக அழகாகத் தெரிகின்றன.
அங்கே அதியமான் ஆயுதங்களோ ஓய்வே கிடைக்காமல் போரில் பயன்படுத்தப்பட்டு எப்போதும் பழுநீக்கத்திலேயே கிடக்கின்றன"
என்று கூறுகிறார்.

இதன் மூலம் அதியமான் தன்னைவிட பெரிய வீரன் என்று உணர்ந்த தொண்டைமான் அவனுடன் போரிடும் எண்ணத்தைக் கைவிடுகிறான்.

ஆம். ஆயுதங்களை அலங்கரித்து மரியாதை செய்வது (வணங்குவது அல்ல) தமிழர் பண்பாடு ஆகும்.

இதற்கு ஒரு விழாவும் இருந்துள்ளது.
அதன் பெயர் வாண்மங்கலம் (வாள்+மங்கலம்).
இது வாளுடை விழவு என்றும் அழைக்கப்பட்டது.

"மாணார்ச் சுட்டிய வாள்மங்கலமும்" என்று தொல்காப்பியம் கூறுகிறது (புறத்திணையியல், 30, பாடாண் திணை)

"கயக்கு அருங்கடல் தானை
வயக் களிற்றான் வாள் புகழ்ந்தன்று"
என்று புறப்பொருள் வெண்பாமாலை கூறுகிறது.
(223, பாடாண் படலம்)

"றொன்மிசைந் தெழுதரும் விரிந்திலங் கெஃகிற்
றார்புரிந் தன்ன வாளுடை விழவிற்
போர்படு மள்ளர் போந்தோடு தொடுத்த
கடவுள் வாகைத் துய்வீ யேய்ப்ப”
என்கிறது பதிற்றுப் பத்து (பாட்டு-66).

பதினாறாம் நூற்றாண்டு வாழ் புலவரான "காசிக்கலியன் கவிராயர்" என்பவர் எழுதிய "வீரபாண்டியன் வாண்மங்கலம்" என்னும் நூலின் பெயரை தென்காசி விஸ்வநாதர் கோயில் கோபுர வாயில் நிலையில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு குறிப்பிடுகின்றது.

புதுக்கோட்டை சமஸ்தான ஆவணமும் இப்புலவர் இயற்றிய வீரபாண்டியன் வாண்மங்கலம், வீரபாண்டியன் குடைமங்கலம், வீரபாண்டியன் நாண்மங்கலம் ஆகிய சிற்றிலக்கியம் பற்றி கூறுகிறது.

ஆனால் மேற்கண்ட நூற்கள் நமக்குக் கிடைக்கவில்லை.

"பட்டவர்த் தனமாம் பண்பு
பெற்றவெங் களிறு கோலம்
பெருகுமா நவமி முன்னாள்
மங்கல விழவு கொண்டு
வருநதித் துறைநீ ராடி"
என்று 5 ஆம் நூற்றாண்டு பெரிய புராணம் கூறுகிறது.

இந்த திருமுறை பாடலில் "மா நவமி" என்று அழைக்கப்படும் ஒன்பதாம் நாளான மங்கல விழாவிற்கு முன் அரசின் போர் யானையை நீராட்டி விழா எடுத்து கொண்டுவரப்படிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது தற்காலத்தில் புரட்டாசி மாதத்தில் அஸ்த நட்சத்திரம் தொடங்கி திருவோண நட்சத்திரம் வரை பெண்-தெய்வ வழிபாடு செய்யபடுகிறது.
இதன் ஒன்பதாவது நாள்தான் ஆயுத பூசை.
இதற்கான தயாரிப்பாகவே (இப்போது வாகனங்களைக் கழுவி மாலைபோட்டு அலங்கரிப்பது போல) யானை நீராட்டப்பட்டு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டுள்ளது.

பத்தாவது நாள் விஜய தசமி இது வெற்றி விழா ஆகும்.

போரில் வெற்றி பெற்றவுடன் வென்ற மன்னன் தன் வாளுக்கு அபிசேகம் செய்து வெற்றியைக் கொண்டாடுவது அக்கால வழக்கம் (வாளுடை விழவு).
இதிலிருந்து விஜய தசமி வந்திருக்கலாம்.

வாளை வழிபடுவது போல அம்பு எய்வதற்கும் ஒரு விழா உள்ளது.
அன்று வன்னிமரம் அல்லது வாழைமரம் நோக்கி அம்பு எய்துகாட்டும் சடங்கு நடக்கிறது.

தெம்முனை சிதைத்த கடும்பரிப் புரவி
வார்கழற் பொலிந்த வன்கண் மழவர்
பூந்தொடை விழவின் தலைநாள் அன்ன
(அகநானூறு 187)

மழவர் கொண்டாடிய இத்திருவிழா பல நாட்கள் நடந்துள்ளது.
அதில் முக்கியமான தலைநாள் அன்று நகரம் முழுவதும் புதுமணல் பரப்பியிருந்ததாக இப்பாடல் கூறுகிறது.

இவ்விழா பூந்தொடை அல்லது பூந்தொடு எனும் பெயரில் இன்றும் வேட்டுவர் (வேட்டுவக் கவுண்டர்) சமுதாயத்தால் புரட்டாசி திருவோணம் அன்று கொண்டாடப் படுகிறது.

மேற்கண்ட தரவுகளிலிருந்து நமக்குத் தெரிவன,
1) ஆய்த பூசனை தமிழர் விழாவே!
2) வெற்றிவிழா தமிழர் விழாவே!
3) பூந்தொடை தமிழர் விழாவே!
4) இன்று அவை பெயர் மாறியும் மத சடங்குகளாகவும் திரிந்து விட்டன.

ஆனாலும் இன்றைய காலகட்டத்தில் இத்தகைய விழாக்கள் தொடரவேண்டுமா என்பதையும் சிந்திக்க வேண்டும்.

ஆயுதபூசை தொழில் ரீதியாக பயனுள்ளதாக உள்ளது.
தொழிலகம், கருவிகள், வாகனங்கள் ஆகியவற்றைத் தூய்மைப்படுத்தி பேணி அலங்கரித்து வைக்க அந்நாள் பயன்படுகிறது.

எனவே தொழில்கூடங்களில் அனைத்து தமிழரும் ஆயுத பூஜையைத் தொடர்வதில் தவறில்லை என்றுதான் தோன்றுகிறது.

Saturday, 26 October 2019

சிவகாசிக்கு உதவி

சிவகாசிக்கு உதவி

  பட்டாசுக்கு வெடிக்காமல் "பச்சை தீபாவளி" கொண்டாடுவோம் என்று சில சூழலியல் ஆர்வலர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

உடனே சில இசுலாமிய பயங்கரவாதிகள் "பட்டாசை புறக்கணிப்போம்" என்று பிரச்சாரம் செய்ய
"அப்டித்தான் வெடிப்போம்" என்று சில இந்துத்துவ பயங்கரவாதிகள் ஆரம்பிக்க
வழக்கம்போல குழப்பத்தில் சிக்கிவிட்டது தீபாவளி.

இந்திய ஒன்றியம் மற்றும் அதன் அண்டை நாடுகள் வரை தீப்பெட்டியும் வெடியும் ஏற்றுமதி செய்யும் சிவகாசி நிறுவனங்களை நசுக்க களமிறங்கி உள்ளன சில வட ஹிந்திய நிறுவனங்கள்.

இவை போதாது என்று தமிழகத்தின் பொருளாதாரத்தில் குறிப்பிட்ட பங்காற்றும் சிவகாசி வெடிமருந்து தொழில் தற்போது சீன பட்டாசு போட்டியையும் சமாளிக்க வேண்டிய நிலையில் உள்ளது.

ஏற்கனவே மோடி செய்துவரும் பொருளாதார சீர்கேட்டினால் பாதி சிவகாசி நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன.

இவற்றிற்கெல்லாம் தீர்வுதான் என்ன?

இயற்கையும் பாதிப்படையக் கூடாது,
பொருளாதாரமும் பாதிக்கப்படக் கூடாது.

என்ன செய்யலாம்?

சிவகாசி வெடிமருந்து தொழில் அம்மக்களுக்கு வாழ்வாதாரத்தை தருகிறதோ இல்லையோ கட்டாயம் நோயையும் உயிரிழப்பையும் தருகிறது.

கடினமாக உழைக்கும் மக்களால் "குட்டி ஜப்பான்" என்று பெயர் பெற்றாலும் மக்கள் என்னமோ வேறுவழியின்றிதான் வெடிமருந்து தொழிலுக்கு போகிறார்கள்.

அதில் முதலாளிகளுக்கும் சரி தொழிலாளர்களுக்கும் சரி அரசுக்கும் சரி பெரிய வருமானம் எல்லாம் கிடையாது.

சிவகாசி ஒன்றும் பாலைவனப் பகுதி இல்லை.
அது விவசாய பூமி.
இப்போதும் கூட!
இதுபோக சிவகாசி அச்சு தொழிலுக்கும் பெயர் பெற்றது.

அரசாங்கம் இவ்விரண்டையும் முன்னேற்றினால் பட்டாசு ஆலைகளை படிப்படியாக மூடிவிடலாம்.

அதுவரை நாம் சிவகாசி பட்டாசு வெடித்துதான் ஆகவேண்டும்.
ஆனாலும் கொண்டாட்டத்திற்காக இயற்கையை நாசம் செய்வதை ஏற்க முடியாது அல்லவா?!

எனவே கூடிய விரைவில் அரசு மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

இந்த அடிமை திராவிட கட்சிகள் அதைச் செய்யும் என்ற நம்பிக்கை இல்லை.

ஈழத்திற்கு வெடிமருந்து மட்டுமல்லாது செங்கண்ணன் என்கிற ஒரு கரும்புலியையும் அனுப்பிவைத்தது சிவகாசி மண்.

தமிழர்கள் ஆயுதம் தூக்கும்போதும் வெடிமருந்தும் இளைஞர்களும் கொடுத்து முன்னனியில் நிற்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

புலிகள் வழியில் தமிழர்களுக்கான அரசு அமைந்த பிறகு சிவகாசியையே கூட "பச்சைகாசி" ஆக்கிவிடலாம்.

அனைத்து மத தமிழரும்
எண்ணெய் தேய்த்து குளித்து
கறிச்சோறு உண்டு
தீபங்கள் ஏற்றி
சுளுந்து கொளுத்தி
முன்னோர் வழிபாட்டுடன்
"தீவாளி" எனும் "கார்த்திகை" யைக் கொண்டாடலாம்.

ஆனால் அதுவரை சிவகாசிப் பட்டாசு வெடித்தே ஆகவேண்டும்!

Friday, 19 October 2018

ஆய்த பூசனை

ஆய்த பூசனை

சங்ககாலத்தில் அதியமானுக்கும் தொண்டைமானுக்கும் போர் மூளும் சூழல் உருவானது.
அதியமானின் தோழியான ஔவை போரைத் தவிர்க்கும் பொருட்டு தொண்டமானிடம் தூது போகிறாள்.
தொண்டைமான் தனது ஆயுத சாலையைப் பார்வையிட அழைத்துச் செல்கிறான்.

அங்கே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களைப் பார்த்து ஒரு ஔவை பாடல் பாடுகிறாள்.

"இவ்வே பீலி அணிந்து மாலை சூட்டிக்
கண்திரள் நோன்காழ் திருத்தி நெய் அணிந்து
கடியுடை வியன்நக ரவ்வே  அவ்வே
பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து
கொல்துறைக் குற்றில மாதோ என்றும்
உண் டாயின் பதம் கொடுத்து
இல் லாயின் உடன் உண்ணும்
இல்லோர் ஒக்கல் தலைவன்
அண்ணல்எம் கோமான் வைந் நுதி வேலே"
(புறநானூறு -95)

இலக்கணம் பற்றி படிக்கும்போது பாடல் வஞ்சப் புகழ்ச்சி அணியில் நீங்கள் இதை ஏற்கனவே படித்திருக்கலாம்.

அதாவது ஔவையார் தொண்டைமானைப் பார்த்து,
இங்கே ஆயுதங்கள் எல்லாம் (துருவேறாமல் பாதுகாக்க) எண்ணெய் பூசப்பெற்றுத்
அழகுக்காக ஆயுதக் குவியல்களின்மீதும் அடுக்குகளின்மீதும் மயில் தோகைகளால் அலங்கரிக்கப்பட்டு
ஆயுத வரிசைகளின்மேல் பூக்களால் தொடுக்கப்பட்ட மாலைகளும் அணிவிக்கப்பட்டு மினுமினுப்பாக அழகாகத் தெரிகின்றன.
அங்கே அதியமான் ஆயுதங்களோ ஓய்வே கிடைக்காமல் போரில் பயன்படுத்தப்பட்டு எப்போதும் பழுநீக்கத்திலேயே கிடக்கின்றன"
என்று கூறுகிறார்.

இதன் மூலம் அதியமான் தன்னைவிட பெரிய வீரன் என்று உணர்ந்த தொண்டைமான் அவனுடன் போரிடும் எண்ணத்தைக் கைவிடுகிறான்.

ஆம். ஆயுதங்களை அலங்கரித்து மரியாதை செய்வது (வணங்குவது அல்ல) தமிழர் பண்பாடு ஆகும்.

இதற்கு ஒரு விழாவும் இருந்துள்ளது.
அதன் பெயர் வாண்மங்கலம் (வாள்+மங்கலம்).
இது வாளுடை விழவு என்றும் அழைக்கப்பட்டது.

"மாணார்ச் சுட்டிய வாள்மங்கலமும்" என்று தொல்காப்பியம் கூறுகிறது (புறத்திணையியல், 30, பாடாண் திணை)

"கயக்கு அருங்கடல் தானை
வயக் களிற்றான் வாள் புகழ்ந்தன்று"
என்று புறப்பொருள் வெண்பாமாலை கூறுகிறது.
(223, பாடாண் படலம்)

"றொன்மிசைந் தெழுதரும் விரிந்திலங் கெஃகிற்
றார்புரிந் தன்ன வாளுடை விழவிற்
போர்படு மள்ளர் போந்தோடு தொடுத்த
கடவுள் வாகைத் துய்வீ யேய்ப்ப”
என்கிறது பதிற்றுப் பத்து (பாட்டு-66).

பதினாறாம் நூற்றாண்டு வாழ் புலவரான "காசிக்கலியன் கவிராயர்" என்பவர் எழுதிய "வீரபாண்டியன் வாண்மங்கலம்" என்னும் நூலின் பெயரை தென்காசி விஸ்வநாதர் கோயில் கோபுர வாயில் நிலையில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு குறிப்பிடுகின்றது.

புதுக்கோட்டை சமஸ்தான ஆவணமும் இப்புலவர் இயற்றிய வீரபாண்டியன் வாண்மங்கலம், வீரபாண்டியன் குடைமங்கலம், வீரபாண்டியன் நாண்மங்கலம் ஆகிய சிற்றிலக்கியம் பற்றி கூறுகிறது.

ஆனால் மேற்கண்ட நூற்கள் நமக்குக் கிடைக்கவில்லை.

"பட்டவர்த் தனமாம் பண்பு
பெற்றவெங் களிறு கோலம்
பெருகுமா நவமி முன்னாள்
மங்கல விழவு கொண்டு
வருநதித் துறைநீ ராடி"
என்று 5 ஆம் நூற்றாண்டு பெரிய புராணம் கூறுகிறது.

இந்த திருமுறை பாடலில் "மா நவமி" என்று அழைக்கப்படும் ஒன்பதாம் நாளான மங்கல விழாவிற்கு முன் அரசின் போர் யானையை நீராட்டி விழா எடுத்து கொண்டுவரப்படிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது தற்காலத்தில் புரட்டாசி மாதத்தில் அஸ்த நட்சத்திரம் தொடங்கி திருவோண நட்சத்திரம் வரை பெண்-தெய்வ வழிபாடு செய்யபடுகிறது.
இதன் ஒன்பதாவது நாள்தான் ஆயுத பூசை.
இதற்கான தயாரிப்பாகவே (இப்போது வாகனங்களைக் கழுவி மாலைபோட்டு அலங்கரிப்பது போல) யானை நீராட்டப்பட்டு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டுள்ளது.

பத்தாவது நாள் விஜய தசமி இது வெற்றி விழா ஆகும்.

போரில் வெற்றி பெற்றவுடன் வென்ற மன்னன் தன் வாளுக்கு அபிசேகம் செய்து வெற்றியைக் கொண்டாடுவது அக்கால வழக்கம் (வாளுடை விழவு).
இதிலிருந்து விஜய தசமி வந்திருக்கலாம்.

வாளை வழிபடுவது போல அம்பு எய்வதற்கும் ஒரு விழா உள்ளது.
அன்று வன்னிமரம் அல்லது வாழைமரம் நோக்கி அம்பு எய்துகாட்டும் சடங்கு நடக்கிறது.

தெம்முனை சிதைத்த கடும்பரிப் புரவி
வார்கழற் பொலிந்த வன்கண் மழவர்
பூந்தொடை விழவின் தலைநாள் அன்ன
(அகநானூறு 187)

மழவர் கொண்டாடிய இத்திருவிழா பல நாட்கள் நடந்துள்ளது.
அதில் முக்கியமான தலைநாள் அன்று நகரம் முழுவதும் புதுமணல் பரப்பியிருந்ததாக இப்பாடல் கூறுகிறது.

இவ்விழா பூந்தொடை அல்லது பூந்தொடு எனும் பெயரில் இன்றும் வேட்டுவர் (வேட்டுவக் கவுண்டர்) சமுதாயத்தால் புரட்டாசி திருவோணம் அன்று கொண்டாடப் படுகிறது.

மேற்கண்ட தரவுகளிலிருந்து நமக்குத் தெரிவன,
1) ஆய்த பூசனை தமிழர் விழாவே!
2) வெற்றிவிழா தமிழர் விழாவே!
3) பூந்தொடை தமிழர் விழாவே!
4) இன்று அவை பெயர் மாறியும் மத சடங்குகளாகவும் திரிந்து விட்டன.

ஆனாலும் இன்றைய காலகட்டத்தில் இத்தகைய விழாக்கள் தொடரவேண்டுமா என்பதையும் சிந்திக்க வேண்டும்.

ஆயுதபூசை தொழில் ரீதியாக பயனுள்ளதாக உள்ளது.
தொழிலகம், கருவிகள், வாகனங்கள் ஆகியவற்றைத் தூய்மைப்படுத்தி பேணி அலங்கரித்து வைக்க அந்நாள் பயன்படுகிறது.

எனவே ஆய்த பூசனையைத் தொடர்வதில் தவறில்லை என்றுதான் தோன்றுகிறது.

Saturday, 15 September 2018

செங்கோட்டை மதமோதல்

செங்கோட்டை மதமோதல்

தமிழகத்தில் எத்தனையோ ஆன்மீக விழாக்களும் ஊர்வலங்களும் நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.
லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொள்ளும் விழாக்கள் எல்லா மதங்களிலும் உண்டு.

அப்போதெல்லாம் வராத கலவரம் விநாயகர் சதுர்த்தி நடக்கும்போது மட்டும் தவறாமல் வரும்.
சாதாரண பொதுமக்கள் 50,100 நிதி கொடுத்துவிட்டு பிள்ளையார் வந்ததும் போய் தோப்புகரணம் போட்டுவிட்டு பிரசாதம் வாங்கிக்கொண்டு வீட்டில் செய்துவைத்த கொழுக்கட்டையை சாப்பிட்டுவிட்டு படுத்துவிடுவார்கள்.

ஆனால் பொறுக்கிகள் அப்படியில்லை.
மதுவருந்திவிட்டு குத்தாட்டத்தை தொடங்குவார்கள்.

இதை வழி நடத்துபவர்கள் ஒரு இந்துமத அமைப்பினர்.

அதன் வழிகாட்டுதலின் பேரில் வேண்டுமென்றே இசுலாமியர் தெருவழியாக ஊர்வலம் நடத்தி கலவரம் உருவாக்க வழி உண்டா என்று பார்ப்பார்கள்.

எப்போது விநாயகர் ஊர்வலம் நடந்தாலும் இரு தரப்பினர் அடித்துக் கொள்வது செங்கோட்டையில் வழக்கம்.
அந்த இரு தரப்பினரும் பெரும்பாலும் இந்துக்களாகவே இருப்பார்கள்.

வழக்கமாக இந்த தறுதலைக் கும்பல்கள்தான் ஏழரையைக் கூட்டுவார்கள்.

ஆனால் இந்தமுறை அப்படியில்லை.

செங்கோட்டை ஊரின் வரைபடம் தந்துள்ளேன்.
சிறுபான்மை இசுலாமியர் செறிவாக வாழும் பகுதி பச்சை நிறத்தில் காட்டப்பட்டுள்ளது.

ஊர்வலம் செல்லும் வழி சிவப்பில் காட்டப்பட்டுள்ளது.

பிரச்சனை நடந்த இடம் வட்டமிடப்படுள்ளது.

முன்பெல்லாம் இந்த விநாயகர் ஊர்வலம் நடக்கும்போது இசுலாமியர் பகுதிக்கு அருகே நுழைந்ததும் ஆமை வேகத்தில் நகரந்தபடி செண்டை மேளத்தை சத்தமாக அடித்தபடி இசுலாமியரைச் சீண்டும் வகையில் கோசம் போட்டுக்கொண்டு ஆரவாரத்துடன் செல்வர்.

ஆனால், இப்போதெல்லாம் அப்படியில்லை.
இசுலாமியர்கள் பொறுமையைக் கடைப்பிடித்து முறைப்படி இந்த விடயத்தை கையாண்டதால் காவல்துறை மூலம் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் கண்கானிப்புடன் இவ்வூர்வலம் நடத்தப்படுகிறது.

முதலில் இசுலாமியர் மாற்றுப் பாதையில் செல்லவைக்க முயன்றனர்.
பொதுவழியில்தான் செல்கிறோம் என்று இந்து தரப்பு பாதையை மாற்ற மறுத்துவிட்டது.
அதனால் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
பெரிய சிலை வைக்கமுடியாது,
கோசம் போட முடியாது, வேகத்தைக் குறைக்கமுடியாது, ஆடுவது கத்துவது இருக்காது,
இவை மட்டுமில்லாது  போலீசார் முழு ஊர்வலத்தையும் 4,5 இடங்களில் வீடியோ எடுத்துக்கொண்டு இருப்பர்.
எவனாவது துள்ளினால் அவனை அங்கேயே 'கவனித்து' மறுநாளும் பிடித்துவந்து எச்சரித்து அனுப்பினர்.

நாளாக நாளாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இந்து அமைப்பினர் பெயருக்கு ஏதோ ஒரு ஊர்வலம் என்று நடத்திவந்தனர்.
இளைஞர்களுக்கும் ஆர்வம் குறைந்து கூட்டமும் கணிசமாகக் குறைந்துவிட்டது.

பெரிதாகப் பேசப்பட்ட ராமர் ரத ஊர்வலம் கூட ஏதோ செங்கோட்டை வழியாக சவ ஊர்வலம் மாதிரி அனாதையாகத்தான் போனது.

ஆனாலும் 'உங்கத் தெரு பிள்ளையார் பெருசா' 'எங்கத் தெரு பிள்ளையார் பெருசா' என்கிற போட்டி மட்டும் இருந்தது.

ஆனால் இந்த முறை எந்த நோக்கத்திற்காக இந்த ஊர்வலம் நடத்தப்படுகிறதோ அது நடந்துவிட்டது.
சில இசுலாமிய இளைஞர்களின் முந்திரிக்கோட்டைத் தனத்தால்.

நான் கேள்விப்பட்டு விசாரித்தவரை நடந்தது இதுதான்.

உப்புசப்பில்லாது போய்விட்ட அந்த ஊர்வலம் வந்துகொண்டிருந்த போது மாலை எட்டுமணி அளவில் கீழப் பள்ளிவாசல் தெரு முக்கிய சாலையில் சந்திக்கும் இடத்தில் சில இசுலாமிய இளைஞர்கள் திடீரென்று வழியை மறித்துள்ளனர்.

போலீசார் அவர்களிடம் சென்று
"இது அனுமதி பெற்ற ஊர்வலம்,
கட்டுக்கோப்பாக நாங்கள் நடத்தித் தருகிறோம்,
உங்கள் தெருக்குள் வரவில்லை,
வழக்கம்போல பம்ப் ஹவுஸ் சாலை வழியாகத்தான் போகவுள்ளது,
காரணமின்றி இப்படி மறிப்பது சரியில்லை" என்று சமாதனம் பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது ஊர்வலத்தில் எவனோ ஒரு பொட்டை கூட்டத்தில் ஒளிந்துநின்று "அல்லா ஒழிக" என்று கத்தியுள்ளான்.

பதிலுக்கு இந்த பக்கம் எவனோ ஒரு பொட்டை இருட்டில் கூட்டத்தின் மத்தியிலிருந்து  பிள்ளையார் சிலை மீது கல்லெறிந்துள்ளான்.

பொதுவழியில் ஊர்வலம் போகக்கூடாது என்று மறியல் செய்தது கூட பெரிய தவறில்லை.

அங்கே கல்லெறிந்து பத்துபேரின் மண்டையை உடைத்திருந்தால் கூட பிரச்சனை வந்திருக்காது.

ஆனால் கடவுள் சிலை மீது கல்லெறிந்து இந்து மக்களின் மத உணர்வுகளைக் காயப்படுத்தியதன் மூலம் இசுலாமியத் தரப்பின் 20 ஆண்டுகால உழைப்பிலும் சகிப்புத்தன்மையிலும் மண்ணள்ளிப் போடப்பட்டு விட்டது.
(அது கரைக்கப்படவுள்ள சிலை என்றாலும் இப்போது அது புனிதமானதாகப் பார்க்கப்படுகிறது)

ஒருவன் கல்லெறிந்ததைத் தொடர்ந்து இந்து தரப்பினர் பதிலுக்கு இசுலாமிய தரப்பினர் மீது கல்லெறிய இசுலாமியர் பலரும் கற்களை சிலையை நோக்கி எறிய  நிலைமை கட்டுகடங்காது போய் இருதரப்பினருக்கும் நடந்த கைகலப்பில் பத்துபேர் காயமடைந்தனர்.
இசுலாமியர் உடைமைகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.
கூடுதல் போலீஸ் வந்து தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்துள்ளனர்.

உடனடியாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருதரப்பு விசமிகளும் கைது செய்யப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

மீண்டும் சொலகிறேன்.
வழக்கமாக இந்து தரப்பு கும்பல்தான் வம்பிழுப்பார்கள்.
அடாவடியில் இறங்குவார்கள்.

ஆனால் இந்த முறை அப்படியில்லை.

இசுலாமிய இளைஞர்கள் அவசரப்பட்டுவிட்டனர்.

நடத்துவது ஒரு மதவெறி அமைப்பாகவே இருந்தாலும் ஜனநாயக நாட்டில் முக்கியமான ஒரு பொதுவழியில் ஒரு ஊர்வலம் போகக்கூடாது என்று கூறமுடியாது.

என்னதான் மாற்றுமதம் என்றாலும் அவர்களது உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கவேண்டும்.

15 நிமிட சகிப்புத்தன்மை இல்லாததால் இன்று கலவரம் உருவாகும் சூழல்.

Thursday, 11 January 2018

பொங்கல் கொண்டாடும் தமிழின இசுலாமியர் கிறித்தவர் புகைப்பட தொகுப்பு

தமிழர் அனைவருக்கும் பொதுவான பொங்கல் திருநாளை கொண்டாடும் தமிழின இசுலாமியர், கிறித்துவர் படங்கள் குறைவாகவே காணக்கிடைக்கின்றன.

அதற்கு காரணம் தமிழின கிறித்தவர், இசுலாமியர்கள் பொங்கல் கொண்டாடும்போது பிற தமிழர்கள் போலவே உடை அணிவதினால் வேறுபாடு தெரிவதில்லை.
கிடைத்த படங்களை பதிவேற்றி உள்ளேன்.

Thursday, 28 December 2017

கிறிஸ்துமஸ் உண்மைகள்

கிறிஸ்துமஸ் உண்மைகள்

ஏசு பிறக்கும் முன்பே Yule என்ற பெயரில் கொண்டாடப்பட்டுவந்த விழா கிறித்துவ மதம் பரவியபிறகு கிறிஸ்துமஸ் என்று ஆக்கப்பட்டு கொண்டாடப்பட்டது.
பிறகு அதுவே இயேசு பிறந்தநாள் என்று கதைகட்டப்பட்டது.

ஆனால் ஏசு பிறந்தது கோடைகாலம்.
மரியாளும் யோசேப்பும் ரோமானியப் பேரரசின் கணக்கெடுப்பிற்காக வந்திருந்தபோது ஏசு பிறந்ததாக விவிலியம் (Luke 2: 1-4) கூறுகிறது.
அந்த கணக்கெடுப்பு பனிக்காலத்தில் நடப்பதில்லை.
அப்போது மேய்ப்பர்கள் ஆடு மேய்த்துக்கொண்டு இருந்ததாக பைபிள் (Luck 2: 7-8) கூறுவது மேலும் ஒரு சான்றாகும்.

அதேபோல கிறிஸ்துமஸ் தாத்தா பற்றி விவிலியத்தில் எந்த குறிப்பும் இல்லை.
அந்த கற்பனை கதாபாத்திரம் 300 ஆண்டுகள் முன்பு உருவாக்கப்படுள்ளது.

  கிறிஸ்துமஸ் தாத்தாவின் இன்றைய உருவம் 150 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் வரையப்பட்டு பிறகு 1930களில் cocacola கம்பெனியால் தனது விளம்பரங்களில் பயன்படுத்தப்பட்டு பிரபலமானது.

இன்றைய ஏசுநாதர் உருவமும் கற்பனையே!
ஏசுவின் உருவம் எப்படி இருந்துருக்கும் என்பதை ஆய்வு செய்து Dr.Neave என்பவர் ஒரு உருவத்தை வடிவமைந்துள்ளார்
(பார்க்க படம்).

அவர் பிறந்து வளர்ந்த இடத்தை கருத்தில் கொண்டால் ஏசு பச்சைக் கண்களுடன் செம்பட்டை முடியுடன் கூர்மையான மூக்குடன் வெளுத்த தோலுடன்  ஒரு ஐரோப்பியர் போல இருந்திருக்க வாய்ப்பில்லை.

பைபிளோ ஏசுவின் தலை மற்றும் முடி பஞ்சுபோல வெள்ளையாக இருந்ததாக கூறுகிறது (Revelation 1:14).

ஆனால் ஏசு இறக்கும்போதோ அவருக்கு 35 வயது.

Thursday, 24 August 2017

சதுர்த்தி

சதுர்த்தி

முன்பு தமிழர்கள் களிமண்ணால் ஆன உருண்டையை அருகம்புல் அல்லது எருக்கம்பூ உடன் கிணறு, குளம், குட்டை போன்றவற்றில் கரைப்பார்கள்.
(அந்த உருண்டையை பிள்ளையார் என்று அழைப்பார்கள். திருமுருகாற்றுப்படை இலக்கியத்தில் முருகன்தான் பிள்ளையார் என்று அழைக்கப்படுகிறார்)
இதற்கு பின்னால் என்ன அறிவியல் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

ஆனால் இதிலிருந்து தோன்றிய பண்டிகையான  விநாயகர் சதுர்த்தி இன்று தமிழரல்லாத வடயிந்திய இந்து மதவெறியர்களால் கொண்டாடப்படுகிறது.
பண்டிகை என்ற பெயரில் வளமான களிமண்ணை தோண்டியெடுத்து
அதில் பெயிண்ட், பிளாஸ்டிக் போன்றவற்றை கலந்து ஆற்றிலோ கடலிலோ கொண்டு கரைத்து  மாசாக்குவது எந்தவகையிலும் அறிவார்ந்த செயலாகத் தோன்றவில்லை.

Wednesday, 26 April 2017

கள்ளழகர் கதை ஒரு பொய்க்கதை

கள்ளழகர் கதை ஒரு பொய்க்கதை

திருமலை நாயக்கர் காலத்திற்கு முன்,

மாசி மாதத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம் நடக்கும்

இரண்டு மாதம் கழித்து,
சித்திரை மாதத்தில் அழகர் ஆற்றில் இறங்குவார்

என்றால் கள்ளழகர், மீனாட்சி கல்யாணத்தைப் பார்க்க வருகிறார் என்ற கதை பொய்தானே?!

திருமலை நாயக்கர் இந்த இரண்டு விழாவையும் ஒன்றாக்கி சித்திரையில் கொண்டாடுமாறு மாற்றியமைத்துள்ளார்.

மீனாட்சியம்மனும் சுந்தரேஸ்வரரும் தம்பதிகளாக ஊர்வலம் வரும் தெருக்கள் இன்றும் மாசிவீதிகள் என்று அழைக்கப்படுகின்றன.

மீனாட்சி அழகரின் தங்கை என்பதற்கு எனக்குத் தெரிந்தவரை எந்த சான்றும் கிடையாது.

இதேபோல இராசராசனின் சதய திருவிழாவும் மாதம் மாற்றப்பட்டுள்ளது.

கடவுள்கள் வரலாறை ஆள்பவன் நினைத்தால் மாற்றமுடிகிறதே?!

வந்தேறிகள் இப்படித்தான் ஆளும் அதிகாரத்தைக் கைப்பற்றி தமிழர்களின் ஒவ்வொரு விழாவையும் குழப்பி  வைத்துள்ளனர்.