Sunday, 15 January 2023
எது சமத்துவ பொங்கல்
Thursday, 11 January 2018
பொங்கல் கொண்டாடும் தமிழின இசுலாமியர் கிறித்தவர் புகைப்பட தொகுப்பு
தமிழர் அனைவருக்கும் பொதுவான பொங்கல் திருநாளை கொண்டாடும் தமிழின இசுலாமியர், கிறித்துவர் படங்கள் குறைவாகவே காணக்கிடைக்கின்றன.
அதற்கு காரணம் தமிழின கிறித்தவர், இசுலாமியர்கள் பொங்கல் கொண்டாடும்போது பிற தமிழர்கள் போலவே உடை அணிவதினால் வேறுபாடு தெரிவதில்லை.
கிடைத்த படங்களை பதிவேற்றி உள்ளேன்.
Friday, 20 January 2017
Saturday, 16 January 2016
Friday, 15 January 2016
Thursday, 14 January 2016
பொங்கல் வைக்கும் இசுலாமியப் பெண்கள்
பல புகைப்படங்கள் கிடைக்கின்றன.
பெரும்பாலானவற்றில் இசுலாமியர்கள் என்ற வெளிப்படையாகத் தெரியலில்லை.
இசுலாமியத் தமிழர்கள் மற்ற இசுலாமியர்கள் போல புற அடையாளங்களைப் பின்பற்றுவதில்லை.
பொங்கல் இந்து பண்டிகையாமே?!
பொங்கல் இந்து பண்டிகையாமே?!
எவன் சொன்னது?
அது தமிழர் பண்டிகை.
நம் தங்கச்சிகள் பொங்கல் வைக்கும் அழகைப் பாருங்கள்
Wednesday, 13 January 2016
Saturday, 25 July 2015
Wednesday, 15 July 2015
பொங்கலும் இறைமறுப்பும்
பொங்கலும் இறைமறுப்பும்
ஞுஞுஞுஞுஞுஞுஞுஞுஞுஞுஞுஞு
பொங்கல் ஏன் கொண்டாடுகிறோம்?
கதிரவனுக்கு நன்றி தெரிவிக்கக் கொண்டாடுகிறோம்.
பழங்காலத் தமிழனுக்குத் தெரிந்திருந்தது கதிரவனின் உண்மையான நிறம் சிவப்பு என்று.
அதனால் அது சிவம் என்று அழைக்கப்பட்டது.
பின்பு அது சிவன் என்ற ஆண் கடவுளாகத் திரிக்கப்பட்டது.
பிறகு அது ஆதிநாதர் என்ற சடைமுடியுடன் புலித்தோல் உடுத்தி 10,000 ஆண்டுகள் முன்பு வாழ்ந்த ஒரு தலைவனுடன் திரிக்கப்பட்டு சிவபெருமான் ஆக்கப்பட்டது.
அதன்பிறகு பல்வேறு கட்டுக்கதைகள் புராணங்களாக எழுதப்பட்டு தமிழர் வணங்கிவந்த சித்தர்களுக்கு அக்கதைகளில் பல்வேறு பாத்திரங்கள் அளிக்கப்பட்டு சைவ மதமானது.
பிறகு ஆங்கிலேயர் சூட்டிய பெயரான ஹிந்து என்ற பெயர்கொண்ட மதத்துடன் திரிக்கப்பட்டுவிட்டது.
வணங்குதல், கும்பிடுதல் என்பன மரியாதையைத் தெரிவிப்பது என்றே பொருள்படுவன ஆகும்.
வழிபடுவது என்பது வழிநடப்பது என்றே பொருள்படும்.
மதம் என்பது மதித்தல் என்றவாறே பொருள்படும்.
நமச்சிவாயம் என்றால் நம்+அச்சு+இவ்+ஆயம்.
நம்மை அச்செடுத்தது போன்றதே நமது சுற்றம்.
என்று பொருள்வரும்.
இவை அனைத்துமை இறையை வலியுறுத்துவதில்லை.
தமிழர் எதை வழிபட்டனர்?
எதனை மதித்துப் போற்றினர்?
தமிழினம் ஒரு அறிவார்ந்த இனம்.
இயற்கையை பாதுகாப்பதையும் முன்னோர்களை நினைவுகொள்வதையும் வலியுறுத்துவதே அவ்வினத்தின் இறையியல்.
"மன்ற மராஅத்த பேஎமுதிர்க் கடவுள்"
என்று குறுந்தொகை கூறுகிறது.
மரத்தைக் கடவுளாகப் பார்த்த இனம் நம் தமிழினம்.
தமிழகத்தின் திருத்தலங்கள் அனைத்தும் மரவழிபாட்டுத் தலங்களே ஆகும்.
சிதம்பரம்(தில்லையம்பலம்)=தில்லைமரம்.
காஞ்சி=மாமரம்.
கீழைப்பழுவூர்=புள்ளமங்கை.
திருவிடைமருதூர்=மருதமரம்.
திருவானைக்கா=நாவல்மரம்.
குற்றாலம்=ஆலமரம்.
திருநெல்வேலி(வேணுவனம்)=மூங்கில்(வேணு).
திருவொற்றியூர்=மகிழமரம்.
திருமயிலை=புன்னை.
மதுரை(கடம்பவனம்)=கடம்பம
தமிழ்மண்ணில் ஒவ்வொரு ஊரும் கல்,பாறை,பூ,மரம்,குளம்,ஆறு,ஏரி என்ற பதங்களைச் சேர்த்தே வழங்கப்படுகின்றன.
(நூல்:நெல்லையப்பர் கோவில், பக்57)
"மரம் சா மருந்தும் கொள்ளார்"
என்கிறார் கணியன் பூங்குன்றனார் (நற்றிணை -226)
ஒரு மரத்தை அழித்து உயிர்வாழ்வதை பாவமாகக் கருதினர் அன்றைய தமிழர்.
மரம் என்பது என்ன?
கழிவுகளை தன் உடல்வழியே செலுத்தி உணவாக மாற்றுவது.
மானிடன் என்பவன் உணவை உடல்வழியே செலுத்தி கழிவாக மாற்றும் விலங்கு.
ஒரு மாந்தன் ஒருநாளில் மூன்றுவேளை உண்டு வெளியேற்றும் கழிவின் அளவு ஒருநாளில் ஒருமரம் உருவாக்கும் உணவை விட பலமடங்கு அதிகம்.
தவிர மரங்களை அழிப்பதன் மூலம் மானிட இனம் அழிவைநோக்கி விரைவாக செல்கிறது.
பொங்கல் அன்று கரும்பு, மஞ்சள், பனங்கிழங்கு, உப்பு, மற்ற காய்கறிகளைப் படையல்வைத்து புது அரிசியை வாசலில் பொங்கலிட்டு கதிரவனுக்கு படைத்து நன்றி தெரிவிப்பது இயற்கையை காப்பதை வலியுறுத்தாமல் வேறு எதை வலியுறுத்துகிறது?
தமிழர்கள் மரம் மட்டுமன்றி விலங்குகளையும் பாதுகாப்பதை அறிந்திருந்தனர்.
மாட்டுப்பொங்கல் வலியுறுத்துவது அதைத்தான்.
காடுகளைப் பாதுகாக்கும் புலிகளையும் கடலைப் பாதுகாக்கும் வேட்டைமீனையும் அவர்கள் பெருமைப்படுத்த அரச சின்னங்களாக வைத்திருந்தனர்.
"புணரி பொருத பூ மணல் அடைகரை
ஆழி மருங்கின் அலவன் ஓம்பி
வலவன் வள்பு ஆய்ந்து ஊர
நிலவு விரிந்தன்றால் கானலானே"
-என்கிறார் உலோச்சனார், நற்றிணை - 11.(நெய்தல்).
இப்பாடல் தேர்செலுத்தி வரும் தலைவன் மணலில் ஊர்ந்துசெல்லும் வண்டுகள் மேல் சக்கரங்கள் ஏறிவிடாதபடி கவனமாக செலுத்தச்செய்ததைக் கூறுகிறது.
நண்டுகளைக் கூட நேசித்தனர்.
இன்று தமிழினம் தம் முன்னோர் காட்டியவழியில் செல்லாது அழிவுப்பாதையில் பயணித்துவருகிறது.
தமிழர்களின் திருநாளான பொங்கலின் முதல்நாள் ஒட்டுமொத்த இயற்கையின் ஒற்றை அடையாளமாக கதிரவனை வணங்கி
அதன்பிறகு விலங்குகளின் ஒற்றை அடையாளமாக மாடுகளை வணங்கி
அதற்குப் பிறகுதான் காணும்பொங்கலில் உடன்வாழும் சொந்தங்களைச் சென்றுபார்க்கின்றனர்.
ஆக இயற்கைக்கு முதலிடம், விலங்கினத்திற்கு இரண்டாவது இடம், அதற்பிறகே மாந்தர்கள்.
பொங்கல் என்பது இல்லாத ஒரு கடவுளை வணங்குவது இல்லை.
அது இறைமறுப்பிற்கும் முற்போக்காகத் திகழும் கருத்தியல்.
அதாவது இயற்கையையும் விலங்குகளையும் மாந்தரையும் போற்றிப்பாதுகாக்கும் கருத்தியல்.
எனவே இதை மதம்தாண்டி தமிழர் அனைவரும் கொண்டாடுவதே முறை.
(இசுலாமியரும் கொண்டாடும் பொங்கல்
https://m.facebook.com/photo.php?fbid=406803462756646&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739 ) .
Sunday, 19 October 2014
கரிப்புகை கொண்டாட்டம்
கரிப்புகைக் கொண்டாட்டம்
மமமமமமமமமமமமமமமமம
கதையைக் கேளுங்கள்.
ஒரு அரக்கன் இருந்தானாம் அவன் கடலுக்குள் பூமாதேவியை ஒழித்துவைத்தானாம்.
கிருஷ்ணன் பன்றி அவதாரம் எடுத்துப்போய் அதை மீட்டுவந்தானாம்.
உடனே பூமாதேவியை அந்த பன்றி பாலியல் உறவு செய்ததாம்.
பூமி கர்ப்பமாகி நரகாசுரனைப் பெற்றதாம்.
அவன் கொடுமைகள் பல செய்தானாம். உடனே கிருஷ்ணன் அவனைக் கொன்றுவிட்டானாம்.
இந்த கருமாந்திர எழவை நாம் கொண்டாடவேண்டுமாம்.
தீப்=சுடர், ஆவலி=வரிசை
தீபாவலி(அ) திவாலி என்ற சமசுக்கிருதப் பண்டிகையைக் கொண்டாட விளக்குதானே ஏற்றவேண்டும்?
ஏன் சீன மக்கள் கண்டுபிடித்த sulfur, charcoal , potassium-nitrate கலந்து தயாரிக்கப்படும் வெடியை வெடிக்கவேண்டும்?
happy diwali என்று ஆங்கில எழுத்தில் வாழ்த்தனுப்பிவிட்டு சமசுக்கிருதப் பண்டிகையான தீவாலியை கொண்டாட டெல்லியில் ஒரு வடயிந்தியன் பட்டாசு வெடிப்பான்
சிதறும் குப்பைத்தாளில் தமிழ் எழுத்துக்கள் கருகிப்போய் இருக்கும்.
அதை தயாரிக்கும்போது விபத்தில் வருடாவருடம் சிவகாசி மக்கள் சாகிறார்களே அதைப்பற்றி உனக்குக் கவலையுண்டா?
அதை சரமாகப் பின்னும் ஏழைத் தமிழ்மக்கள் முதிர்கன்னிகளாகவோ, கல்வி கிடைக்காத சிறுவராகவோ, வேளாண்மை ஒழிந்த விவசாயியாகவோ இருப்பார்.
அதைப்பற்றி கவலையுண்டா?
தினக்கூலி கொடுத்து பட்டாசு தயாரித்து அதில் கொள்ளை லாபம் பார்க்கும் பணமுதலைகளின் விதிமீறல்கள் பற்றிக் கவலையுண்டா?
அல்லது பட்டாசு வெடித்து வெளிவரும் ரசாயனப் புகை காற்றை மாசுபடுத்துகிறதே
நுரையீரலைப் பாதிக்கிறதே
அதைப்பற்றியாவது கவலையுண்டா?
மரத்தை வெட்டி தயாரிக்கப்படும் காகிதம் வீணாகிறதே, தெருவெல்லாம் குப்பையாகிறதே அதைப்பற்றி கவலையுண்டா?
காசு கரியாகிறதே அதைப்பற்றியாவது கவலையுண்டா?
குழந்தைகள் சில சமயம் காயப்படுகிறார்களே அதைப்பற்றியாவது கவலையுண்டா?
தீவாலி அன்றுகூட விடுமுறை கிடைக்காமல் வேலைக்குச் செல்லும் ஆலைத்தொழிலாளர் பற்றி கவலையுண்டா?
தீவாலிக்கு முதல்நாள் கடன்காரன் காலில் விழும் ஏழைத் தகப்பன் பற்றியாவது கவலையுண்டா?
உனக்குக் கவலையெல்லாம் ஒருநாள் விடுமுறை, அன்றைக்கு குடி, கூத்து, தீனி, கூத்தாடி நடிகைகளின் குலுக்கல்
வேறென்ன?
கொண்டாட நாள் வேண்டுமானால் பொங்கல் ஒன்று போதாதா?
இயற்கை தந்த அரிசியையும் காய்கறியையும் கதிரவனுக்குப் படைத்து, மாட்டுக்குப் படையல் செய்து, காக்கைக்கு சோறுவைத்து, கரும்பும் பனங்கிழங்கும் காய்கறி உணவும் உண்டு, சொந்த பந்தங்களைக் கண்டு ,
'தமிழன்' கொண்டாடும் பொங்கலுக்குக் கால்தூசு பேறுமா தீவாலி?
மகனைக் கொன்றவன் பிராமணன் என்ற ஒரே காரணத்திற்காகக் அவனைத் தண்டிக்காமல் மனுதர்மத்தைக் கடைபிடித்த தெலுங்கு மன்னனான கிருஷ்ணதேவராயனும் அவனது வாரிசுகளும் தமிழகத்தைக் கைப்பற்றி சமசுக்கிருதத்தையும், வர்ணாசிரமத்தையும், தீண்டாமையையும், தீவாலிப்பண்டிகையையும் 500 ஆண்டுகள் முன்பு தமிழன் மீது திணித்தனர்.
10,000 ஆண்டு பழமையான நாகரீகம் கொண்டவன்,
"தன்னாட்டு பிராமணனைக் கொன்று மனுதர்மத்தை மீறிய படுபாவி" என்று சாளுக்கியக் கல்வெட்டு கதறும் இராசராசசோழன் வழிவந்த தமிழன்
நீ இன்றைக்கும் அடிமையாக இருக்கலாமோ?
போர்க்களத்தில் வெடி வெடித்த புலியினமே நீ மனதால் கருகி மாளும் காலம் வந்ததும் ஏனோ?
(நரபலி பக்ரீத்
https://m.facebook.com/photo.php?fbid=499972893439702&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&refid=13 ).