சல்லிக்கட்டு எதிர்ப்பு பிராமண சதியா?
ஒரு பார்ப்பனர் சல்லிக்கட்டை எதிர்த்துவிட்டாராம் உடனே 'ஆரிய சதி' 'பிராமண வெறி' என்று திசைமாறி போய்விட்டது முகநூல் தமிழ்ச் சமூகம்.
ஐ யம் தமிழ், ஐ யம் அகென்ஸ்ட் ஜல்லிக்கட்டு என படம் போட்டோரில் எல்லா சாதியினரும் இருந்தனர்.
அதில் ஒரு பார்ப்பனரை பிடித்து என்னமோ அவர்தான் இதற்கு மூல காரணம் என்பது போல போடுகிறார்கள்.
1998 லேயே "ஜல்லிக்கட்டு ஒழிப்பு குழு" அமைத்து விலங்கு நல வாரியத்துடன் இணைந்து 'ஜல்லிக்கட்டை தடை செய்' என்று முதலில் நம் பாரம்பரிய விளையாட்டை எதிர்த்தோர் தலித் அமைப்பினர்.
திருமாவளவனே 'ஜல்லிக்கட்டு தலித்துகளுக்கு எதிரானது, சாதியத் தன்மை கொண்டது' என்று 2002ல் தலையங்கம் எழுதியுள்ளார்.
2004 வாக்கில் அமராவதி மற்றும் புதூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கும் வகையில் தலித் அமைப்பினர் பிரச்சனை செய்தனர்.
ஜல்லிக்கட்டு என்றில்லை.
கபடி, மாட்டுவண்டி பந்தயம், சேவல் சண்டை, கிடாய் மோதல், பாரி வேட்டை என எல்லாவற்றையும் தடை செய்ய கோரினர்.
கிரிக்கெட் கூட நடக்கக்கூடாது என்று பிரச்சனை செய்த இடங்கள் உண்டு.
உண்மை என்னவென்றால் ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒவ்வொரு விளையாட்டு பிரபலம்.
அதில் நடக்கும் குழுமோதல் சில சமயம் வன்முறையில் போய் முடியும்.
பாதிக்கப்பட்டவன் தலித் என்றால் உடனே அது சாதி பிரச்சனை ஆக்கப்பட்டு சாதிய-தலித்திய-திராவிட அரசியலுக்கு அங்கே விதை தூவப்படும்.
(முதல் விதை1983 பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டில் இரு தரப்பினர் மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டபோது விதைக்கப்பட்டது.
பாரதிய தலித் பேந்தர் அமைப்பு, அம்பேத்கர் மக்கள் இயக்கம் போன்றவை எதிர்ப்பு பேரணி நடத்தின)
சல்லிக்கட்டு எந்த ஒரு தனி சாதிக்கும் மதத்திற்கும் மட்டுமே உரியது கிடையாது.
அனைத்து சாதியினரும் மதத்தினரும் விளையாடலாம்.
மாட்டை பறையடித்து வாடிவாசலுக்கு அழைத்துவரும் பறையருக்கு பரிவட்டம் கட்டி முதல்மரியாதை செய்து தட்சணை கொடுக்கும் வழக்கம் உள்ள தமிழகத்தில் தலித்திய அரசியல்வாதிகளின் பொய்ப்பிரச்சாரம் எடுபடவேயில்லை.
இப்போது தமிழரின் வீரத்தைப் பார்த்து வயிறெரியும் வேற்றினத்தாரும்
பாரம்பரிய வாழ்க்கை முறையை ஒழிக்கவே முழுநேரமும் இயங்கும் பீட்டா போன்ற பன்னாட்டு அமைப்புகளும் நமக்கு எதிராக களமிறங்கி உள்ளனர்.
குறிப்பாக இந்தியா முழுவதும் ஒழிந்துவிட்ட
தமிழகத்தில் மட்டுமே எஞ்சியுள்ள நாட்டுமாடுகளை ஒழிப்பதில் இவை கைகோர்த்துள்ளன.
காட்டுவிலங்கை வைத்து விழா நடத்தி பலமுறை அது வெறி பாகனைத் துவைக்கும் நிகழ்வு அடிக்கடி நடக்கும் கேரளா பக்கம் எவனும் போகமாட்டான்.
ஆனால் வீட்டு விலங்கான மாட்டுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத ஏறுதழுவுதல் இவர்கள் கண்களை உறுத்துகிறது.
வெளிநாட்டு மாட்டினை விற்று அதன்மூலம் சர்க்கரை நோய் வரவைக்கும் இன்சுலின் மருந்து நிறுவனங்கள்,
பசுவின் சாணத்தை ஒழித்து வேதியியல் உரங்களை கொண்டுவர நினைக்கு அமெரிக்க நிறுவனங்கள்,
பசுவை ஊசிமூலம் சினையாக்கும் மருந்தை உற்பத்தி செய்கிற நெதர்லாந்து நிறுவனங்கள்
என பெரிய பெரிய முதலாளித்துவ எதிரிகள் இருக்கிறார்கள்.
நீங்கள் என்னவென்றால் எல்லா பிரச்சனைகளுக்கும் இங்கே இருக்கும் பார்ப்பனரைப் பிடித்து பிராண்டிக்கொண்டு இருக்கிறீர்கள்.
Thursday, 29 December 2016
சல்லிக்கட்டு எதிர்ப்பு பார்ப்பன சதியா?
Friday, 1 July 2016
மாடு இல்ல கண்ணு, மானம்
மாடு இல்ல கண்ணு, மானம்
(_)(_)(_)(_)(_)(_)(_)
.V V V V V V V
" வெறும் மாடு இல்ல கண்ணு!
எங்க பேரு பெரும எல்லாம் அதுதான்.
கொம்புல குத்துவாங்கி செத்த அம்பது பேர நா காட்டுறேன்.
மாடுபிடிக்கறப்போ செத்துபோன ஒரு மாட்ட காட்டு பாப்போம்.
குத்துவாங்குற எங்களுக்கு பயமில்ல.
வேடிக்கபாக்குற ஒனக்கு எங்க குடையுது?!
அதென்னமோ நெதர்லாந்துக்காரன் காளமாடே இல்லாம ஊசி போட்டே கன்னுபோட வைக்கானாமே?!
அவன் ஊசி இந்தியாவுலயே தமிழ்நாட்டுல மட்டும் விக்கலயாமே?!
எப்பிடி விக்கும்?!
எங்க ஜல்லிக்கட்டுகாள ஓங்குதாங்கா வளந்து நிக்கும்போது?
நாளக்கே அவன் ஓசி போட்டு கொழந்த பெத்துக்கலாம்பான்.
சரினு சொல்லிருவியா?!
மாட்டோட சாணியயும் கோமியத்தயும் கலந்து வயல்ல போட்டா பொன்னா வெளஞ்சு கொட்டுமேடா!
இங்லீசு ஒரத்த போட்டு மண்ண வெசமாக்கி மனுசனயே கொல்ல துணிஞ்ச பெரியமனுசங்கதானடா நீங்க
மாட்ட ஒழிக்கறத பத்தி யோசிக்கவா செய்வீங்க?!
படிச்சவன் நாங்கேக்குறேன்,
இங்க தட பண்ணவர்ற பீட்டா வெள்ளக்காரன்,
ஸ்பெயின்ல புல்பைட்டுங்கறான்.
மாட ஓடிவரவிட்டு சிவப்பு துணிக்கு பின்னால மறஞ்சுக்கிறான்.
அது துணிய முட்டவும் வெலகிடுறான்.
கடசில அந்த அப்பாவி ஜீவன முதுகுல பெரிய பெரிய கத்திய குத்தி ரத்தம் பீய்ச்ச பீய்ச்ச ஓடவிடுவான்.
கடசில அத கொல்லுவான்.
கேட்டா பண்பாடும்பான்.
அத நிறுத்திட்டீங்களா?!
கனடாவுல சீல் வேட்டைங்குறான்.
பிஞ்சு சீல்குட்டிங்கள கணக்கில்லாம கொல்றான்.
கேட்டா கலாச்சாரம்பான்.
அத நிறுத்திட்டீங்களா?!
கோர்ட் தடைய மீறி ஆந்திராக்காரன் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ தலைமைல சேவல்சண்ட நடத்துனானுகளே,
என்னபண்ணமுடிஞ்சது ஒங்களால?!
மாட்டுக்கு கொம்பு சீவி விட்டுட்டு வெறும் கையோட அத புடிக்க போறோமே
எங்களயாடா அவனுகளோட சேக்குறீங்க?
மாட்டுக்கு தனியா பண்டிக கொண்டாடுற இனம் வேற ஒண்ணு இந்த ஒலகத்துல உண்டா?
கோயிலுக்கு சீதனமா மாட்ட நேந்துவிட்ட சனம் தம்பி.
மாட்டுக்கு ஜாதகம் எழுதுனவன்லா இந்த ஊருல உண்டு.
குடும்பபோட்டோ எடுத்தா மாட்டயும் சேத்துநிக்கவச்சு போட்டோ எடுத்து பெருமயா நடுவீட்டுல மாட்டுற மக்கள் நாங்க.
வெறும் மாடுன்றானுக, மாடு இல்ல தம்பி
எங்க மானம்.
குறுக்கு வழில மாட்ட புடிச்சான்னு சொந்த தங்கச்சி மவன் கைய வெட்டுவன் எங்கப்பன்.
இந்தா நிக்கி பாரு எ காள.
எனக்கு வெவரம் தெரிஞ்சப்ப சுழிபாத்து எங்க ஐயன் கூட்டிவந்தது.
கொம்பு மொளைக்குறதுக்கு முன்னாடில இருந்தே என்னயும் எங்க ஐயனயும்தா முட்டி பழகுச்சு.
பேரு வாங்குன காள.
பால்காரனெல்லாம் வந்து வந்து தவமா கெடப்பான்.
அஞ்சு வருசம் முந்தி அலங்காநல்லூர்ல புடிபட்டு போச்சு.
மூணுநாளு எங்கபோச்சுனே தெரில.
மனுசனா இருந்திருந்தா நாண்டுட்டு செத்துருக்கும்.
சோறு தண்ணி இல்லாம கண்காணாத எடத்துக்கு போயிடுச்சி.
தேடி திரிஞ்சு கண்டுபிடிச்சு,
தோல்வி வீரனுக்கு சகஜம்டானு புரியவச்சு வீட்டுக்கு கூட்டிட்டு வர்றதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு.
அப்பறமும் அது மனசு கேக்கலயே.
இத புடிச்ச அந்த வீராதிவீரனுக்கு எங்க வீட்டு குத்துவிளக்க கொடுத்து எங்க குடும்பத்துல ஒருத்தனாக்குன பெறகுதான் சமாதானமாச்சு.
இப்பமும் எ மச்சான் வந்தா மூஞ்ச திருப்பிட்டு போகுமே!
இது முன்னாடி என்ன கைநீட்டி ஒரு வார்த்த பேசிரு பாப்போம்!
நா வளத்த மாட்டுக்கே இம்புட்டு ரோசமிருக்கும்போது
எனக்கு எம்ம்ம்ம்ம்புட்டு ரோசமிருக்கும்?
ஊரு எதுத்து நின்னாலும் சரி.
ஏன் ஒலகமே எதுத்து நின்னாலும்
நா பணிஞ்சு போவமாட்டேன்.
தனி ஆளா எதுத்து நிப்பேன்.
எனக்கு எ காள இருக்கு
எ காள எம்பின்னால நிக்கும்"