Showing posts with label ஏறு தழுவல். Show all posts
Showing posts with label ஏறு தழுவல். Show all posts

Friday, 1 July 2016

மாடு இல்ல கண்ணு, மானம்

மாடு இல்ல கண்ணு, மானம்

(_)(_)(_)(_)(_)(_)(_)
.V  V  V  V  V  V V

" வெறும் மாடு இல்ல கண்ணு!
எங்க பேரு பெரும எல்லாம் அதுதான்.

கொம்புல குத்துவாங்கி செத்த அம்பது பேர நா காட்டுறேன்.
மாடுபிடிக்கறப்போ செத்துபோன ஒரு மாட்ட காட்டு பாப்போம்.

குத்துவாங்குற எங்களுக்கு பயமில்ல.
வேடிக்கபாக்குற ஒனக்கு எங்க குடையுது?!

அதென்னமோ நெதர்லாந்துக்காரன் காளமாடே இல்லாம ஊசி போட்டே கன்னுபோட வைக்கானாமே?!
அவன் ஊசி இந்தியாவுலயே தமிழ்நாட்டுல மட்டும் விக்கலயாமே?!

எப்பிடி விக்கும்?!
எங்க ஜல்லிக்கட்டுகாள ஓங்குதாங்கா வளந்து நிக்கும்போது?

நாளக்கே அவன் ஓசி போட்டு கொழந்த பெத்துக்கலாம்பான்.
சரினு சொல்லிருவியா?!

மாட்டோட சாணியயும் கோமியத்தயும் கலந்து வயல்ல போட்டா பொன்னா வெளஞ்சு கொட்டுமேடா!
இங்லீசு ஒரத்த போட்டு மண்ண வெசமாக்கி மனுசனயே கொல்ல துணிஞ்ச பெரியமனுசங்கதானடா நீங்க
மாட்ட ஒழிக்கறத பத்தி யோசிக்கவா செய்வீங்க?!

படிச்சவன் நாங்கேக்குறேன்,
இங்க தட பண்ணவர்ற பீட்டா வெள்ளக்காரன்,
ஸ்பெயின்ல புல்பைட்டுங்கறான்.
மாட ஓடிவரவிட்டு சிவப்பு துணிக்கு பின்னால மறஞ்சுக்கிறான்.
அது துணிய முட்டவும் வெலகிடுறான்.
கடசில அந்த அப்பாவி ஜீவன முதுகுல பெரிய பெரிய கத்திய குத்தி ரத்தம் பீய்ச்ச பீய்ச்ச ஓடவிடுவான்.
கடசில அத கொல்லுவான்.
கேட்டா பண்பாடும்பான்.
அத நிறுத்திட்டீங்களா?!

கனடாவுல சீல் வேட்டைங்குறான்.
பிஞ்சு சீல்குட்டிங்கள கணக்கில்லாம கொல்றான்.
கேட்டா கலாச்சாரம்பான்.
அத நிறுத்திட்டீங்களா?!

கோர்ட் தடைய மீறி ஆந்திராக்காரன் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ தலைமைல சேவல்சண்ட நடத்துனானுகளே,
என்னபண்ணமுடிஞ்சது ஒங்களால?!

மாட்டுக்கு கொம்பு சீவி விட்டுட்டு வெறும் கையோட அத புடிக்க போறோமே
எங்களயாடா அவனுகளோட சேக்குறீங்க?

மாட்டுக்கு தனியா பண்டிக கொண்டாடுற இனம் வேற ஒண்ணு இந்த ஒலகத்துல உண்டா?

கோயிலுக்கு சீதனமா மாட்ட நேந்துவிட்ட சனம் தம்பி.

மாட்டுக்கு ஜாதகம் எழுதுனவன்லா இந்த ஊருல உண்டு.

குடும்பபோட்டோ எடுத்தா மாட்டயும் சேத்துநிக்கவச்சு போட்டோ எடுத்து பெருமயா நடுவீட்டுல மாட்டுற மக்கள் நாங்க.

வெறும் மாடுன்றானுக, மாடு இல்ல தம்பி
எங்க மானம்.

குறுக்கு வழில மாட்ட புடிச்சான்னு சொந்த தங்கச்சி மவன் கைய வெட்டுவன் எங்கப்பன்.

இந்தா நிக்கி பாரு எ காள.
எனக்கு வெவரம் தெரிஞ்சப்ப சுழிபாத்து எங்க ஐயன்  கூட்டிவந்தது.
கொம்பு மொளைக்குறதுக்கு முன்னாடில இருந்தே என்னயும் எங்க ஐயனயும்தா முட்டி பழகுச்சு.
பேரு வாங்குன காள.
பால்காரனெல்லாம் வந்து வந்து தவமா கெடப்பான்.

அஞ்சு வருசம் முந்தி அலங்காநல்லூர்ல புடிபட்டு போச்சு.

மூணுநாளு எங்கபோச்சுனே தெரில.
மனுசனா இருந்திருந்தா நாண்டுட்டு செத்துருக்கும்.
சோறு தண்ணி இல்லாம கண்காணாத எடத்துக்கு போயிடுச்சி.

தேடி திரிஞ்சு கண்டுபிடிச்சு,
தோல்வி வீரனுக்கு சகஜம்டானு புரியவச்சு வீட்டுக்கு கூட்டிட்டு வர்றதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு.

  அப்பறமும் அது மனசு கேக்கலயே.
இத புடிச்ச அந்த வீராதிவீரனுக்கு எங்க வீட்டு குத்துவிளக்க கொடுத்து எங்க குடும்பத்துல ஒருத்தனாக்குன பெறகுதான் சமாதானமாச்சு.

இப்பமும் எ மச்சான் வந்தா மூஞ்ச திருப்பிட்டு போகுமே!

இது முன்னாடி என்ன கைநீட்டி ஒரு வார்த்த பேசிரு பாப்போம்!

நா வளத்த மாட்டுக்கே இம்புட்டு ரோசமிருக்கும்போது

எனக்கு எம்ம்ம்ம்ம்புட்டு ரோசமிருக்கும்?

ஊரு எதுத்து நின்னாலும் சரி.
ஏன் ஒலகமே எதுத்து நின்னாலும்
நா பணிஞ்சு போவமாட்டேன்.

தனி ஆளா எதுத்து நிப்பேன்.

எனக்கு எ காள இருக்கு

எ காள எம்பின்னால நிக்கும்"

Wednesday, 3 February 2016

கெயில் தீர்ப்பும் அரசு வக்கீல்களின் திமிரும் மெத்தனமும்

கெயில் தீர்ப்பும்
அரசு வக்கீல்களின் திமிரும் மெத்தனமும்

கெயில் வழக்கு - தலைமை நீதிபதியை கோபமடையச் செய்த தமிழக அரசு வக்கீல்கள்..!

இயற்கை எரிவாயு வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று தொடங்கியபோதே தமிழக அரசின் வழக்கறிஞர் பாலாஜி ஆஜராகி மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி (என்ன அழகான தமிழ்ப் பெயர்) இன்னும் வரவில்லை என்று கூறினார்.

பிறகு கெயில் நிறுவனத்தின் வாதத்தை கேட்கத் தொடங்கினர் நீதிபதிகள்.

பின்னர் அரை மணி நேரம் சென்ற பின் தமிழகத்தின் கருத்தை அறிய நீதிபதிகள் பாலாஜியிடம் திரும்பினர்.
அப்போது அவர் மூத்த வழக்கறிஞர் இன்னும் வரவில்லை வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்றார்.

இதனை கேட்டு கோபம் அடைந்த தலைமை நீதிபதி தாகூர்,

"இறுதி விசாரணைக்காக முக்கியத்துவம் கொடுத்து முதல் வழக்காக இன்று பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கிறது.
அப்படியும் உங்கள் வக்கீல் வரவில்லை என்றால் என்ன அர்த்தம்...?
இன்னும் அரைமணி நேரத்தில் வரவில்லை என்றால் வழக்கை தள்ளுபடி செய்து விடுவோம்.."
என்று கோபமாக கூறினார்.

அதன் பின்னரும் ராகேஷ் திவேதி வரவில்லை.

பின்னர் மற்றொரு தமிழக அரசு வழக்கறிஞரான சுப்ரமணிய பிரசாத் வந்தார்.
அவருடைய வாதத்தை கேட்டபிறகு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

(அதாவது தமிழக அரசு வாதிட வக்கில்லாததால் கெயில் நிறுவனம் வென்றது)

இதுவே ஜெயலலிதா சிக்கியபோது
வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்பதற்காக கடந்த வெள்ளிக்கிழமை மூத்த வழக்கறிஞர்கள் 5 பேர் உள்பட 25 வழக்கறிஞர்கள் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று சசிகலா வழக்குக்காக 10ற்கும் மேற்பட்டவர்கள் நீதிமன்றத்தில் நின்றனர்.

இன்று இந்த வழக்குக்காக எப்போதும் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர் ஏன் வரவில்லை என்பது மர்மமாகவே உள்ளது.

ஜல்லிக்கட்டு வழக்கின் போது தமிழக அரசு வழக்கறிஜர் ஒருவர் கூட வராமல் இருந்தது கடந்த மாத சம்பவம்.

தகவலுக்கு நன்றி:-
Mugil Bharathi
Ragu Nathan Jeevithan.

Thursday, 14 January 2016

தடையைமீறி சல்லிக்கட்டு

மைதீன்கானும்
ஆரோக்கியதாஸும்
செண்பகமூர்த்தியும்

சேர்ந்து நடத்தும் சல்லிக்கட்டு

தடுத்துபாருங்கடா

( முகநூல் காணொளி
https://m.facebook.com/story.php?story_fbid=649498241820499&id=100002809860739&refid=17&_ft_=top_level_post_id.649498241820499%3Atl_objid.649498241820499%3Athid.100002809860739%3A306061129499414%3A54%3A0%3A1454313599%3A1621698031608833239 )

Wednesday, 13 January 2016

Saturday, 19 December 2015

பாகிஸ்தான் வரை நீளும் தமிழ் வரலாறு

பாகிஸ்தான் வரை நீளும் தமிழ் வரலாறு

ஃடஃடஃடஃடஃடஃடஃடஃடஃடஃடஃடஃடஃடஃ

ஆகம விதிப்படிதான்
'பெரியகோவிலை'க் கட்டினான்
அரசர்க்கரசன் (இராஜராஜன்)

அவன் பயன்படுத்திய அளவீடு  முழம் என்பது
(24 muzham =33 inch).
இது அப்படியே சிந்துசமவெளி கட்டட அளவுகளுடன் ஒத்துப்போகிறது.

சிந்து சமவெளியில் ஏறுதழுவுதலும் முருகனின் உருவமும் கிடைத்துள்ளது.

சிந்து சமவெளிப்பகுதியான Pehowa ல் இன்றும் ஒரு கார்த்திகேயன் கோவில் இருக்கிறது.

அதையும் தாண்டி பாகிஸ்தானில் சிந்து ஆற்றுப்படுகையில் காவிரி, கொற்கை, குமரி போன்ற 20க்கும் மேற்பட்ட ஊர்கள் தமிழ்ப் பெயர்களுடன் உள்ளன.

ஆந்திராவில் இருக்கும் தமிழர்மண்ணான சித்தூரிலும் ஏறுதழுவுதல் நடக்கிறது.

இன்று தமிழ்மண்ணில் மட்டுமே காணக்கிடைக்கும்
ஆகமமும் ஏறுதழுவுதலும் முருகனும்
பாகிஸ்தான் வரை தமிழர் வாழ்ந்ததை உறுதி செய்வன.