Showing posts with label ஜல்லிக்கட்டு. Show all posts
Showing posts with label ஜல்லிக்கட்டு. Show all posts

Thursday, 18 January 2024

திமுகவும் ஜல்லிக்கட்டும்

திமுகவும் ஜல்லிக்கட்டும்

 2017 இல் தமிழர்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து போராடி ஜல்லிக்கட்டு தடையை உடைத்தனர்.
 ஆனால் அப்போது முக்கியமான போராட்டஙகள் செய்தவர்கள் மீது போடப்பட்ட வழக்கு இப்போது வரை நடந்து வருகிறது.
 ஜல்லிக்கட்டுக்கு தடை 2006 இல் போடப்பட்டு சில மாதங்களில் திமுக ஆட்சிக்கு வந்தது.
 அப்போதில் இருந்து 2017 வரை திமுக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குறிப்பிடத் தகுந்த ஆதரவு நடவடிக்கை எதையும் செய்யவில்லை (அப்படி செய்ததாக காட்டிக்கொள்ள கார்த்திகேய சிவசேனாபதி யை விலைக்கு வாங்கியது).
 திமுக ஜூலி போன்றவர்களை அனுப்பி போராட்டத்தில் புகுந்து விளம்பரம் மட்டும் தேடிக் கொண்டனர்.
 தற்போது ஆட்சிக்கு வந்தபிறகும் ஜல்லிக்கட்டில் ஸ்டிக்கர் ஒட்டும் வேலையைச் செய்துவருகின்றனர்.
 உச்சகட்டமாக ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு அதற்காக துரும்பையும் அசைக்காத கருணாநிதி பெயரை வைத்துள்ளது.
 ஆனால் போராடியவர்கள் 1000 பேர் வரை இன்றும் 7 ஆண்டுகளாக நீதிமன்றம் அலைந்துகொண்டு இருக்கின்றனர்.
 (அதிமுக தேர்தலுக்கு முன் சிறுசிறு சிவில் வழக்குகளை வாபஸ் வாங்கிவிட்டது)
 இவர்களில் சிபிசிஐடி வழக்கு உள்ள 150 க்கும் மேற்பட்டோர் அடக்கம். இவர்களுக்கு ஆதரவாக  ‘ஜல்லிக்கட்டு போராட்ட வழக்கு முறியடிப்புக்குழு’ ஒன்றை தன்னார்வ வழக்கறிஞர்கள் உருவாக்கி வழக்கு நடத்தி வருகின்றனர்.
 ஜல்லிக்ககட்டு போராட்டத்திலேயே குறிப்பிடத் தகுந்த போராட்டம் பாலத்தில் ரயிலை மறித்த மாணவர் போராட்டம். இதில் ஒரு மாணவர் உயிரிழந்தார். அதில் முன்னணியில் நின்ற 24 பேர் வழக்கு பாய்ந்தது. அவர்களை இக்குழு 2022 இல் அவர்களுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்தது.
 2023 இல் உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான தமிழக சட்டதிருத்தம் திருத்தம் செல்லும் என்று இறுதி தீர்ப்பு வழங்கிவிட்டது.
 இதைத் தொடர்ந்து சு.வெங்கடேசன் உட்பட பலரும் அரசுக்கு போராட்டக்காரர்கள் மீதான வழக்கை வாபஸ் வாங்க கோரிக்கை வைத்தனர்.
 திமுக அரசு ஒரு நியாயமான அரசு என்றால் தமிழக அரசு போட்ட வழக்குகளை வாபஸ் வாங்கி சிபிசிஐடி வழக்குகளைத் தாமே நடத்தி மேற்கண்ட போராட்டக் காரர்களை விருது வழங்கி கவுரவப்படுத்தி வழக்கு நடத்திய காலத்துக்கு நிவாரணம் வழங்கியிருக்கவும் வேண்டும். ஆனால் ஜல்லிக்கட்டுக்காக இன்னுயிரை ஈந்த சேலம் மாணவர் யோகேஸ்வரனுக்கு கூட இந்த அரசு நிவாரணம் வழங்கவில்லை (ஆனால் ராகவா லாரன்ஸ் வீடு கட்டி கொடுத்தார்). 
 
தமிழகத்தில் மொழிப்போர் காலத்தில் இருந்து எந்தவொரு போராட்டத்தையும் மக்கள் திரண்டு நடத்துவதும் கடைசியில் திமுக அதன் மீது தன் போர்வ்வையைப் போர்த்தி அமுக்கிக் கொள்வதும் தொட்டர்ச்சியாக நடக்கிறது.
 மொழிப்போர் தியாகிகள் இன்றுவரை கௌரவிக்கப் படவில்லை. சிலைகள் இல்லை. அவர்களது கல்லறைகள் கழிவிடங்கள் போல ஆகிவிட்டன. குமரியை மீட்ட தியாகிகளும் கடைசிவரை நிவாரணம் கேட்டு அலைந்து செத்துப் போயினர். 

 இப்படியான பின்னணி கொண்ட திமுக நம் கண் முன்னே  ஜல்லிக்கட்டு மைதானத்திலும் பரிசுகளிலும் உடைகளிலும் தனது முகரைக் கட்டையை ஒட்டுவது எவ்வளவு அயோக்கியத்தனம்?!  
 நடிகைகளை மட்டும் அடக்கத் தெரிந்த உதயநிதி ஒய்யாரமாக ஜல்லிக்கட்டு பார்ப்பது எவ்வளவு கொடுமை?!
 தமிழர்கள் இனியும் தாமதிக்காமல் ஜல்லிக்கட்டு போராட்டக் காரர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும்.
 

Saturday, 18 January 2020

சல்லிக்கட்டு நாயகன் ரஞ்சித் உடன் முகமது பாய்

சல்லிக்கட்டு நாயகன் ரஞ்சித் உடன் முகமது பாய்

பேட்டியாளர்: உங்கள் வெற்றிக்கு யார் காரணம்

ரஞ்சித்: இதோ என் நண்பன் தான்.
இவன் தந்த ஊக்கம்தான் காரணம்

பேட்டியாளர்: பெயரென்ன?

ரஞ்சித்: முகமது பாய்

(காணொளி க்கு நன்றி News7)

https://m.facebook.com/story.php?story_fbid=2118869388216703&id=100002809860739

Monday, 19 February 2018

அலகுமலையா? அலங்காநல்லூரா?

அலகுமலையா? அலங்காநல்லூரா?

580 காளைகள்
505 மாடுபிடிவீரர்கள்
லட்சக்கணக்கான பார்வையாளர்கள்
என திருப்பூர் அலகுமலையில் நேற்று (18.02.2018) பிரம்மாண்டமான சல்லிக்கட்டு திருவிழா நடத்திக்காட்டினர் கொங்கு மண்டலத் தமிழர்கள்.

(மிகவும் பிரபலமான அலங்காநல்லூரில் இந்த ஆண்டு 520 காளைகளும் 700 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத் தக்கது)

அலகுமலை ஏறுதழுவுதல் முதல் பரிசு விக்னேஷ் என்பவர் தட்டிச்சென்றார்.
மொத்தம் 10 காளைகளைப் பிடித்த இவர், 7 காளைகளை பிடித்தநிலையில் காயம்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டு மீண்டும் வந்து 3 காளைகளைப் பிடித்தது இங்கே குறிப்பிட்டத் தகுந்தது.
இவர் ஒரு எம்.எஸ்.சி பட்டதாரி.
நாட்டு மாடு வகைகள் அழியாமல் இருக்க ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடத்தப்படவேண்டும் என்று இவர் பரிசு வாங்கும்போது பேசினார்.

அலகுமலை - இனி இன்னொரு அலங்காநல்லூர் !

Tuesday, 11 July 2017

உயிரைக் கேட்டாலும் தருவான்

இனத்திற்கு ஒன்றென்றால்
இறங்கி நிற்கும் முதலாள்
.
.
உறவுமுறை சொல்லி அழைப்பான்
உணவு சமைத்து அளிப்பான்
உயிரைக் கேட்டாலும் கொடுப்பான்
.
.
சக தமிழன் எவனுக்கும்
சளைக்காத மனமிருக்கும்
.
இவனிருக்க கவலை ஏது?
இது என்னினம் பெற்ற பேறு!
.
.
வருக கதிராமங்கலம்!
எழுக தமிழ்மா நிலம்!

Saturday, 8 July 2017

தமிழ்நாடு தனிநாடு பதாகைகள்

இந்த பொண்ணுக்கு இருக்கும் துணிச்சல் தமிழ் இளைஞர்களிடம் இல்லாமலா இருக்கும்?

இனி தமிழ்தேசியத்தின் காலம்...

(கைக்குழந்தையுடன் ஜனவரி 26 தமிழ்நாடு தனிநாடு எனும் பதாகை பிடித்திருக்கும் பெண் மற்றும்
தமிழ்நாடு இனி தனிநாடு என்ற மேல்சட்டையை கையில் பிடித்திருக்கும் பெண்குழந்தை படங்கள்
ஏறுதழுவுதல் போராட்டத்தின் போது எடுப்பட்டவை)

Sunday, 22 January 2017

சென்னை இன்னொரு அலங்காநல்லூர் ஆகட்டும்

சென்னை இன்னொரு அலங்காநல்லூர் ஆகட்டும்

அலங்காநல்லூர் மக்கள் முதல்வரை உள்ளே விடவில்லை.

சாலைகள் அனைத்தையும் தடை ஏற்படுத்தி அடைத்துவிட்டனர்.

போராட்டத்திற்கு ஆதரவானவர் இருசக்கர வாகனத்தில் மட்டுமே உள்ளே செல்லமுடியும்.

காவல் அதிகாரிகள், அரசு அழைத்து வந்த மாடுபிடிவீரர்கள் மாடுகள் என யாரையும் அவர்கள் உள்ளே விடவில்லை.

முதல்வர் அறிவித்தபடி அவரால் வாடிவாசலில் சல்லிக்கட்டு நடத்த விடவில்லை.

நிரந்தர தீர்வுடன் வந்தால் மட்டுமே உள்ளே விடுவோம் என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டனர்.

இதையே சென்னையில் இருப்போர் செய்யலாம்.

சென்னையை சுற்றி பத்து சாலைகளை அடைக்கவேண்டும்.

இப்போதிருக்கும் கூட்டத்தை விட குறைவான கூட்டமே போதும்.

ஒரு சாலைக்கு 10,000 முதல் 20,000 பேர் வரை போதும்.
வாகனங்களை குறுக்காக நிறுத்தி தரையில் அமர்ந்துகொள்ளுங்கள்.

விமான நிலையத்தையும் சுற்றி முற்றுகை போட்டுவிட்டால் சென்னை முழுக்க முழுக்க நமது கட்டுப்பாட்டில் வந்துவிடும்.

அதன்பிறகு மோடி வந்து காத்துகிடக்கவேண்டிய சூழல் உருவாகும்.

வெற்றிக்கு மிக மிக அருகில் வந்துவிட்டோம்.

ஜனவரி 26 க்குள் ஹிந்தியா நமக்கு பணிந்துதான் ஆகவேண்டும்.
இல்லையென்றால் குடியரசு தினம் நடக்காதுபோய் அவமானப்படவேண்டி இருக்கும்.

ஆக மூன்றே நாட்கள் எப்படியாவது தாக்குப்பிடியுங்கள்.

இதோ வரைபடம்
19 ஜனவரி, 11:23 மணிக்கு ஏற்கனவே போட்ட அதே வரைபடம்தான்.
அதில் விமான நிலையத்தையும் குறித்துள்ளேன்.

Friday, 20 January 2017

சல்லிக்கட்டு போராட்டத்தில் இசுலாமியப்பெண் குழந்தையுடன்

சல்லிக்கட்டு போராட்டத்தில் இசுலாமியர்
பர்தா அணிந்த பெண் குழந்தையுடன் பதாகை ஏந்தி
புகைப்படம்

சல்லிக்கட்டு போராட்டத்தில் தமிழ் இசுலாமியர்

சல்லிக்கட்டு போராட்டத்தில் பதாகையுடன் தமிழ் இசுலாமியர்
புகைப்படம்

ஏறுதழுவுதல் போராட்டம் சின்னஞ்சிறு சிறுமி

ஏறுதழுவுதல் போராட்டம்
சின்னஞ்சிறு சிறுமி
புகைப்படம்

வேற்றுகிரகத்தில் ஹிந்தியா

வேற்றுகிரகத்தில் ஹிந்தியா

ஹிந்தியாவில் வசிக்கும் நான் சொல்கிறேன்.

*இங்கே நாய் கூட நம்மை மதிக்கவில்லை*

நமது இத்தனை பெரிய போராட்டம் இங்கே யாருக்கும் தெரியவில்லை.

(ஆனால் உலகத் தமிழர்கள், சர்வதேச ஊடகங்கள் என பலருக்கும் தெரிந்துள்ளது)

இன்று காலை உடன் வேலை செய்யும் ஒரே ஒருவர்தான் இதுபற்றி கேட்டார்.
(அதுவும் ஏன் இந்த தேவையில்லாத வேலை என்றவாறு)

எப்படி தெரியும்? என்று கேட்டேன்.

அவர் மகன் சென்னையில் படிக்கிறானாம்.

ஆக வடயிந்திய ஊடகங்களோ போராளிகளோ நமது மாபெரும் போராட்டத்தைக் கண்டுகொள்ளவில்லை.

தமிழக மக்கள் என்னவென்றால் 'இந்தியாவில் தமிழ்நாடு இருக்கவேண்டுமா?' என்று இப்போதுதான் சிந்திக்கவே தொடங்கியுள்ளனர்.

(ஆங்காங்கே ஒன்றிரண்டு செய்திகள் வந்தன,
அதுவும் முடிந்த அளவு நமக்கு எதிரான கருத்துகளையே வைத்தன)

இதேபோலத்தான் பச்சிளம் பாலச்சந்திரன் மார்பில் பெரிய பெரிய ஓட்டைகளுடன் இறந்து கிடந்த புகைப்படம் வெளிவந்தபோது ஒரு கோடி அளவில் திரண்ட மாணவர் போராட்டம் நடந்தபோதும் ஹிந்தியன் எவனும் மதிக்கவில்லை.

ஆக வடயிந்தியன் தும்மினாலும் நமக்கு அதிர்கிறது.

ஆனால் நாம் உயிரைவிட்டாலும் வடயிந்தியனுக்கு அது பற்றிய சிறு சலனமும் இல்லை.

ஜல்லிக்கட்டு பற்றி முறையான விழிப்புணர்வு ஏற்பட மூல காரணம் கார்த்திகேய சிவசேனாதிபதி ஐயா.

அவர் கென்யாவில் நடந்த சர்வதேச கூட்டத்திற்கு சென்றபோது அங்கே நாட்டுப்புற கால்நடை வளர்ப்பை நவீனப்படுத்த வைக்கப்பட்ட தீர்மானத்தை எதிர்த்தபோது
ஆப்பிரிக்க பழங்குடி பிரதிநிதிகளும்
ஒரு ஜெர்மானியரும்
ஒரு குறும்பர் பிரதிநிதியும் மட்டுமே கூட்டு சேர்ந்து எதிர்த்ததாகவும்
வடயிந்திய பிரதிநிதிகள் பேசாமல் இருந்ததையும் கூறியுள்ளார்.

ஆக உலகின் எந்த ஒரு மூலையையும் விட ஹிந்தியாவே நமக்கு அதிக தொலைவில் இருக்கிறது.

*தெளிவாகக் கூறினால் தமிழனைப் பொறுத்தவரை ஹிந்தியா
வேற்றுகிரகத்தில் இருக்கிறது*

ஹிந்தியா என்று நான் இங்கே கூறுவது தமிழ்நாடு தவிர்த்த அனைத்து மாநிலங்களையும் சேர்த்துதான்.

சல்லிக்கட்டு - தீர்வும் நிரந்தரத் தீர்வும்

நிரந்தரத் தீர்வு

●/  
/▌
/ \

உண்மையான இலக்கு வாடிவாசலைத் திறப்பது இல்லை.
காளையை (காட்சிப்படுத்தக்கூடாத) வனவிலங்கு பட்டியலில் முட்டாள்த்தனமாக சேர்த்துள்ளனர்.
அதில் இருந்து காளையை நீக்கும் சட்ட திருத்தமே.

இதுபோன்ற நமது எல்லா பிரச்சனைக்கும் நிரத்தர தீர்வு தனிநாடு.

ஹிந்தியாவிடமிருந்து தமிழர்நாடு பிரிந்து விடுதலை அடைவது.

எங்கள் நாடு!
தமிழர்நாடு!

நேற்று, 07:16 AM ·

சீமான் சல்லிக்கட்டு களத்தில் இருந்து வெளியே போகவேண்டுமா?

சீமான் வெளியே போகவேண்டுமா?

இன்று இருக்கும் விழிப்புணர்வு ஒரே நாளில் வந்ததல்ல.

ஜல்லிக்கட்டு பற்றி இன்று தெளிவாகப் பேசுகிற எவரையும் விட

ஒன்றரை ஆண்டு முன்பே மிகத் தெளிவாக எளிமையாக சீமான் பேசியுள்ளார்.

கட்சி சார்பற்ற போராட்ட களத்திலிருந்து சீமான் அண்ணனை வெளியே போகச்சொல்கிற சிலர்

அவர் 17-07-2014 அன்று ஜல்லிக்கட்டு போராட்ட அமைப்புகள் கூட்டிய கூட்டத்தில் காரைக்குடியில் பேசிய பேச்சினை (தமிழன் தொலைக்காட்சி ஒளிபரப்பியது)
ஒருமுறை கேளுங்கள்.

மாட்டுக்காக மகனையே கொன்ற மனுநீதிச்சோழனில் பேச்சைத் தொடங்குகிறார்.

கலாச்சார ஒழிப்பு
விவசாய ஒழிப்பு
தற்காப்பு கலைகள் ஒழிப்பு
இவற்றின் மூலம்
இன அழிப்பு என மிக அழகாக தமிழினத்தின் அத்தனை பிரச்சனைகளையும் விளக்குகிறார்.

(யூட்யூபில் இருந்தது ஆனால் தற்போது காணவில்லை.
ஆனால் dailymotion ல் உள்ளது.)

Seeman 20140717 Speech at karaikudi என்று தேடுங்கள்.

அதன்பிறகு ஒவ்வொரு மேடையிலும் சீமான் அண்ணன் சல்லிக்கட்டு பற்றி பேசாமல் இருந்ததில்லை என்றே சொல்லலாம்.

சல்லிகட்டுக்காக குரல்கொடுத்துவரும் ஒரே கட்சி நாம்தமிழர் என்பதை இங்கே கூறித்தான் ஆகவேண்டும்.

18 ஜனவரி, 08:08 AM ·

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இணையவழிப் போராளிகள்

வெளிநாட்டில் அதாவது வடயிந்தியாவில் உட்கார்ந்து கொண்டு,
களத்தில் போராடுவோருக்கு
அதைச் செய்யுங்கள் இதைச் செய்யுங்கள் என்று அறிவுரை வழங்கவோ

அப்படி நடக்கும் இப்படி நடக்கும் என்று சோதிடம் சொல்லவோ நான் முகநூலில் செயலாற்றவில்லை.

ஏனென்றால் நான் முகநூல் மூலம் என்னால் எது முடியுமோ அதை ஏற்கனவே செய்துவிட்டேன்.

இப்போது நடப்பதை மகிழ்ச்சியோடு வேடிக்கை பார்க்கிறேன்.

தமிழனுக்கு இனப்பற்றே கிடையாது ஒற்றுமையே கிடையாது
பதிவுபோட்டே புரட்சி பண்ணமுடியாது
அப்படியெல்லாம் தமிழரைத் திட்டி திட்டி பதிவு போட்டவர் மத்தியில் தமிழன் எழுவான்
தமிழினம் எழும்
இனப்பற்று மொழிப்பற்று ஒற்றுமை எல்லாம் இருக்கிறது என்று தொடர்ச்சியாக பதிவு போட்டவன் என்ற வகையில்
நான் சொன்ன சோதிடம் தான் பலித்தது.

பாலச்சந்திரனுக்கும்
சென்னை வெள்ளத்துக்கும்
இளைஞர்களைக் களத்தில் இறக்கியவர்கள்
என்னைப் போன்ற ஆயிரமாயிரம் இணையவழி போராளிகள்தான்.

இது ஆரம்பம்தான்.

தொடர்ந்து போராடுவோம்.

17 ஜனவரி, 07:12 PM

Thursday, 12 January 2017

ஏறுதழுவுதல் இந்து பண்டிகையா?

ஏறுதழுவுதல் இந்து பண்டிகையா?

ஐனவரி, 16, 2014 அன்று சல்லிக்கட்டு நடந்தபோது (அதன்பிறகு தடை வந்துவிட்டது) காயமடைந்தோர் பெயர்களை உற்றுநோக்கினால் உண்மை விளங்கும்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் காயமடைந்து மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாடுபிடிவீரர்கள்:-

தேனூர் அல்லாபிச்சை,
வாடிப்பட்டி பாண்டி,
மதுரை சந்தனம்,
தண்டலை கணேஷ் பாண்டி,
அலங்காநல்லூர் மணிகண்டன்,
முனிச்சாமி,
தேவன்குளம் ஜெயமூர்த்தி, 

அதே நாளில் நத்தம் (திண்டுக்கல் மாவட்டம்) ஜல்லிக்கட்டில் காயமடைந்த மாடுபிடிவீரர்கள்:-

கொசவபட்டி ஜான்,
வேலாம்பட்டி பீட்டர்ஜான்,
கொசவபட்டி சேவியர்,
வெள்ளோடு வீரபாண்டி,
நத்தமாடிபட்டி கருப்பையா,
கோணப்பட்டி விஜயராஜ்,
பில்லமநாயக்கன்பட்டி ராக்கி,
சிலுவத்தூர் தினேஷ்,
நத்தமாடிபட்டி திருப்பதி,
புகையிலைப்பட்டி ரஞ்சித்,
தவசிமடை சுரேஷ்,
மேட்டுப்பட்டி சேகர்

செய்தி:-
https:// theekkathir. in/2014/01/17/ அலங்காநல்லூர்-ஜல்லிக்க-4/

Monday, 9 January 2017

சல்லிக்கட்டுக்காக கைதான நிஜாமுதீன், அத்தவுல்லா

தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த முயன்ற
நிஜாமுதீன், அத்தவுல்லா உட்பட 23 பேர் கைது

நாகூர் முன்னாள் எம்.எல்.ஏ (தேசிய லீக் கட்சி)

சல்லிக்கட்டுக்காக கைதான நிஜாமுதீன், அத்தவுல்லா

தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த முயன்ற
நிஜாமுதீன், அத்தவுல்லா உட்பட 23 பேர் கைது

நாகூர் முன்னாள் எம்.எல்.ஏ (தேசிய லீக் கட்சி)

ஏறுதழுவதல் மற்றும் குதிரை பயன்பாடு கற்காலத் தமிழர் ஓவியம்

கற்காலம் முதலேயே மஞ்சு விரட்டும் பரியேற்றமும் தமிழர்கள் செய்து வந்தது தான். இதற்கான சான்றுகள் தமிழகத்தில் 5000 ஆண்டுகள் முன்னரேயே இருந்து வந்துள்ளன.
பீட்டா, ஆரிய, திராவிட, தலித்தியக்கதைகள் என்ன சொல்லும்னா ஏறுதழுவல் ஒரு சாதிக்கூறியதுன்னும் அது அனைத்து தமிழர்களும் விளையாட்டில்லைன்னும் அதனால் அது தமிழர் விளையாட்டில்லைன்னும் சொல்லும்.
ஆரியன் தான் தமிழ்நாட்டுக்கு குதிரையையே கொண்டுவந்தான்னும் அதுக்கு முன்னாடி தமிழருக்கு பரியேற்றமே தெரியாதுன்னும் கண்டபடி கதை விட்டுக்கொ(ல்லு
)ள்ளும்.
குதிரை இந்திய விலங்கே கிடையாதுன்னும் அதை ஆரியர்கள் வட இந்தியாக்கு கி.மு. 1500 அளவில் குடிபுகுந்த போது கொண்டுவந்தனர்னு உச்சபச்ச நகைச்சுவை காமெடிகளை அவிழ்த்துவிடும்.

தமிழ்நாட்டில் பரி வரையபட்டதற்கான சான்றுகள் 5000 ஆண்டுகள் முன்னரயே கிடைக்கின்றனவே என கீழுள்ள ஓவியங்களை வைத்து கேட்டுப்பாருங்கள்.
அது உடனே வேற்றுக்கிகவாசிகள் கொண்டுவந்ததுனு கதைவிட ஆரம்பிச்சுருவாங்க.
ஏற்கனவே கூர்ங்கோட்டவர் பக்கத்தில் வேற்றுக்கிரகவாசிகள் கதையை அமெரிக்க வந்தேறிகள் தென்னமெரிக்க மண்ணின் மைந்தர்களின் பழைய சான்றுகளை எல்லாம் வேற்றுக்கிரகவாச
ிகளுடையதுன்னு கதைவிட்டதையும் இந்தியத்தொல்லியல் துறையும் கூட பழங்குடிகளின் வரைபடத்தை வேற்றுக்கிரகவாசிகளா என அறிய நாசாவுக்கு அனுப்பிய அவலத்தையும் பதிவு செய்திருந்தேன்.
அந்த பதிவு இந்த இணைப்பில்
வேற்றுக்கிரகவாசி கதைகளை கட்டுவதன் மூலம் மண்ணின் மைந்தர்களின் சான்றுகளை எல்லாம் வஞ்சகமாக திரிப்பதற்கு மிகப்பெரிய உலக சதிகள் அரங்கேறி வருகின்றன.
இதனால் மண்ணின் மைந்தர்கள் கூட அந்த இடத்துக்கு இடம்பெயர்ந்தவர்கள் என கதை கட்டி இன தேசியம் எழவிடாமல் பார்த்துக்கொள்வது உலக வந்தேறிகளின் வழக்கம்.
அதாவது தமிழர்கள் தமிழ்நாட்டுக்கு திராவிடர்களாக கி.மு. 1500 அப்போதே வந்தனர் என்பது போன்ற கதைகளும் தென்னமெரிக்க பழங்குடிகளுக்கு அறிவை கற்றுத்தந்ததே தற்போதைய வேற்றுக்கிரகவாசிகளான அம்மண்ணின் முன்னால் பூர்விக மக்கள்னும் அந்த வேற்றுக்கிரகத்துக்கு போன முன்னால் பூர்விக மக்களிடம் தற்கால செவ்விந்தியர் குடியேறி பிச்சை எடுத்து அனைத்து கதைகளையும் கற்றது போலவும் என்பது போன்ற கதைகளும் இந்த இரகம்.

இன்னும் தமிழர்கள் விலங்குகள் மூலம் வழிபாடு, மெய்யியல், போர் கலை போன்றவற்றை எப்டிக்கற்றனர் என்பதுலாம் தொகுத்து எழுதினால் பெரிய நூலே வெளியிடலாம்.
இது ஏறுதழுவல் காலம் என்பதால் மஞ்சுவிரட்டு, குதிரையேற்றம் தொடர்பாக தமிழகத்தில் 5000 ஆண்டுகள் முன்னரேயே இருக்கும் இரண்டு வரலாற்றுப்பதிவுகள் பற்றி மட்டும் தற்போது படமாக கீழே தந்திருக்கிறேன்.
- தென்காசி சுப்பிரமணியன்

Wednesday, 4 January 2017

சாமியாடி குடும்பர் - மாடுபிடி வீரர்

"தாய்க்கு பின் தாரம்"னு ஒரு படம்,

1956-ல எம்.ஜி.ஆர் நடிச்சது,

சாண்டோ
சின்னப்பா தேவர் தயாரித்தது,

படத்தோட இறுதியில ஒரு சல்லிக்கட்டு காட்சி
வரும்,

அந்த சல்லிக்கட்டு காட்சியில் எம்.ஜி.ஆர்-க்கு டூப் போட்டவர் பெயர் சாமியாடி குடும்பர்,
அந்த காலத்துல பிரபலமான மாடுபிடி வீரர்.

தகவலுக்கு நன்றி: Anbe Selva

தலித்தியவாதிகள் கூறுவது போல ஆதிக்கசாதி விளையாட்டு என்றால்  ஒரு பள்ளர் எப்படி பிரபலமான மாடுபிடி வீரராக இருந்திருக்க முடியும்?

மறவர் பள்ளர் சமூகங்களும் கூட ஒற்றுமையாகவே இருந்துள்ளனரே?

தலித்தியத்தின் பொய்ப் பிரச்சாரத்தை இனியும் நம்பலாமா?!

Sunday, 1 January 2017

சல்லிக்கட்டு சாதிய விளையாட்டா?

"நானூறு ஆண்டுகால வரலாறு கொண்ட ஜல்லிக்கட்டு விளையாட்டு சாதி-மத பேதங்களுக்கு அப்பாற்பட்டு மக்களிடையே ஒற்றுமை உணர்வை ஊக்குவித்து வருகிறது"

1909 ல் வெளிவந்த  நூலில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது.

எட்கர் தர்ஸ்டன் (Edger Thurston) எனும் ஆங்கில கலெக்டர் தென்னிந்திய சாதிகளை விரிவாக ஆராய்ந்து எழுதிய Castes and Tribes of Southern India புத்தகத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.

சல்லிக்கட்டு 400 ஆண்டுகள் இல்லை அதைவிட பலநூறாண்டுகள் பழமையான இலக்கியங்களில் குறிக்கப்பட்டுள்ளது  என அந்த ஆங்கிலேயருக்குத் தெரியவெல்லை.

ஆனால் சாதிகளை ஆராய்ந்த ஆங்கிலேயரே சல்லிக்கட்டில் சாதியம் இல்லை என்று கூறிவிட்டார்.

சிலர் தலித்தியவாதிகள் கூறுகிறார்கள் தலித்துகளை ஜல்லிக்கட்டில் அனுமதிக்காததால் அவர்களே தனியாக தமக்குள் சல்லிக்கட்டு 20 ஆண்டுகளுக்கு முன்புதான் நடத்த ஆரம்பித்தார்களாம்.

தமிழ்மண்ணில் தலித் என்று யாரும் கிடையாது.
தலித்தியம் இங்கே தேவையில்லை என்பதை மீண்டும் ஒருமுறை உறுதியாகக் கூறுகிறேன்.