Showing posts with label நாயகன். Show all posts
Showing posts with label நாயகன். Show all posts

Saturday, 18 January 2020

சல்லிக்கட்டு நாயகன் ரஞ்சித் உடன் முகமது பாய்

சல்லிக்கட்டு நாயகன் ரஞ்சித் உடன் முகமது பாய்

பேட்டியாளர்: உங்கள் வெற்றிக்கு யார் காரணம்

ரஞ்சித்: இதோ என் நண்பன் தான்.
இவன் தந்த ஊக்கம்தான் காரணம்

பேட்டியாளர்: பெயரென்ன?

ரஞ்சித்: முகமது பாய்

(காணொளி க்கு நன்றி News7)

https://m.facebook.com/story.php?story_fbid=2118869388216703&id=100002809860739

Sunday, 26 October 2014

பணக்காரத் தீவிரவாதி (1/2)

பணக்காரத் தீவிரவாதி

terrorist,rebellion, smugler,businessman, don,leader, murderer,revolutionist, billioner,gangster, racist, humantarian, god father, politician and
ANY PERSONALITY THAT IS EXTREME

அந்த பரவலான தலைவரை பேட்டிகாண பெருமுயற்சி செய்து இசைவு கிடைத்தது,
தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் அவரைப் பார்க்க அழைத்துச் சென்றார்கள்.
மறைவிடத்தில் இருப்பார் என்றுதான் நினைத்தேன். ஆனால் அவரது வீடு ஒரு நகரத்தின் நடுவில் இருந்தது முதல் வியப்பு.
அந்த வீடைப் பார்க்கவேண்டுமே மிகப்பெரிய வீடு, சுற்றி தோட்டம், ஆயுதம் ஏந்திய காவல், பகட்டின் உச்சம் அதையும் மிஞ்சும் கலைநயம். இந்தவீடு அவர் அவ்வப்போது வந்து போவதாம். இதைவிடப் பத்துமடங்கு பெரிய வீடுகள் பல்வேறு நகரங்களில் இருக்கிறதாம்.
ஒரு அறையில் காத்திருக்கச்.சொன்னார்கள். அங்கே அவரது படங்கள் இருந்தன.
அவரைப் பற்றி பலரும் எச்சரித்தார்கள். அதிலும் நான் ஒரு பெண். இருந்தாலும் துணிந்து சென்றேன். அவர் வரைந்த ஓவியங்களும் இருந்தன. அதெப்படி சாதனை நாயகர்கள் அனைவரிடமும் வரையும் பழக்கம் இருக்கிறது?!
'அவர் வந்துவிட்டார்' என்று உடனிருந்தவர் கூற வாசலைப்பார்த்தேன்.
அவர் ஒரு இருசக்கரவண்டியில் கறுப்புகண்ணாடியைக் கழட்டியவாறு வந்திறங்கினார்.
நான் எழுந்து நிற்க, அவர் என்னைக் கடந்துசெல்லும்போது முறைப்பது போல் கூர்மையாகப் பார்த்துவிட்டு ஒரு அறைக்குள் சென்றார். 'மரியாதைக்காக எழுந்துநிற்பது அவருக்குப் பிடிக்காது' என்றார் உடனிருந்தவர். 'அப்படியா? ஏன்?' 'அது அப்படித்தான். எழுத்து நிற்பது, சல்யூட் அடிப்பது, காலில் விழுவது இதெல்லாம் அவருக்குப் பிடிக்காது. வணக்கம்கூட லேசாக தலையை அசைத்தால் போதும்'.
அவர் உடைகளை மாற்றிக்கொண்டு வந்தார்.
இருக்கையில் அமர்ந்தார்.
உயர்தரமான ஆடைகள் ஆனால் நகைகள் எதுவும் அவர் அணிந்திருக்கவில்லை.
ஆனால் அத்தனை மிடுக்கு.
பால் கலக்காத தேநீரை அவரே தயாரித்து எடுத்துவந்திருந்தார்.
'நாங்கள் பால் பயன்படுத்துவது கிடையாது, அது கன்றுக்காக தாய்ப்பசு சுரப்பது, தவிர பாலில் உள்ள லாக்டோஸ் செறிக்கவும் முடியாமல் கழிவாக வெளியேறவும் முடியாமல் உடலிலேயே தங்குகிறது. இது உடல்நலத்துக்குக் கேடு. இன்று பெண்கள் சீக்கிரமே வயதுக்கு வருவதும் மற்ற விலங்குகளை விட மனிதர்களே அதிகம் பாலியல் வல்லுறவு செய்வதற்கும் பாலருந்துவது ஒரு காரணம். ஏனென்றால் கன்றுதான் விரைவில் பருவமடையும்' என்று கூறினார்.
எனக்கு நான் பார்க்கவந்த ஆள் இவர்தானா? என்று ஐயமேற்பட்டது.
'எந்த மொழியில் பேட்டியை வைத்துக்கொள்ளலாம்?' என்று கேட்டார். 'எனக்கு உங்கள் மொழி நன்றாகத் தெரியும், அதிலேயே வைத்துக்கொள்ளலாம்' என்றேன். 'இல்லை எங்கள் தாய்மொழியை வேற்றுஆட்களுடன் நாங்கள் பேசுவதில்லை, தொடர்புமொழியில் வைத்துக்கொள்ளலாம்' என்றார்.
அதன்பிறகு ஆங்கிலத்தில் பேட்டி தொடர்ந்தது.
'உங்கள் செயல்பாடுகள் என்னென்ன?'
"என் செயல்பாடு உயிரை எடுப்பது, அவன் யாரோ அவன் நோக்கம் என்னவோ இருந்துவிட்டுப்
போகட்டும், என்னைப்போன்ற ஒரு மாந்தனை நான்
கொல்கிறேன், இதுதான் நான் செய்வது, பல
உயிர்களை வாழ வழிசெய்ய சில உயிர்களை நான் கொல்கிறேன்,
இதுதான் என் செயல்பாடு".
'உங்களுக்கு அரசாங்கத்தைப் பற்றி கவலையில்லையா?'.
'இல்லை, அரசாங்கத்தை விட நவீனமான ஆயுதங்கள் என்னிடம் இருக்கும்வரை, சொல்லப்போனால் அரசாங்கமே நான் நடத்துவதுதான்'.
'இருசக்கரவண்டியில் சுற்றுகிறீர்களே, பாதுகாப்பு தேவையில்லையா?'.
'இல்லை, நான் போகும் முன்பே என் உளவு ஆட்களும் பாதுகாவலர்களும் அங்கே பாதுகாப்பை உறுதி செய்திருப்பார்கள்'.
'இதுவரை எத்தனைபேரைக் கொன்றிருப்பீர்கள்?'.
'தெரியவில்லை, ஆயிரக்கணக்கில் இருக்கும்'.
'ஏன்?'.
'என் வழியில் குறுக்கே வருபவர்களை, எதிர்ப்பவர்களை, அவர்கள் தலைதூக்கும் முன்பே நான் தீர்த்திருப்பேன்'.
'வெளிப்படையாகக் கூறுகிறீர்களே பயமில்லையா?'.
'இல்லை'.
'பேட்டி வெளியானபிறகு அரசாங்கம் படையெடுத்து வரலாம்'.
'தோற்றுப்போவார்கள்'.
'எப்படி?'.
'நான் உருவாக்கியுள்ள கூட்டம் அப்படி, அவர் தங்கள் பெருமையை, திமிரைக் காப்பாற்றவேணும் உயிரை பணயம் வைத்து போராடுவார்கள்'.
'எப்படி இதை உருவாக்கினீர்கள்?'.
'அடுத்தவனுக்காக உழைக்காமல், எவனுக்கும் அடிபணியாமல் ஆயுதம் ஏந்தி கொள்ளைக்காரர்களிடம் கொள்ளையடிக்கிறோம். அந்தப் பணத்தைக்கொண்டு நன்றாக வாழ்கிறோம். இப்படி ஒரு வாழ்க்கைக்கு உயிரையே கொடுக்கலாம் என்று எண்ணுபவர்கள் என் படையினர்'.
'எத்தனைபேர் இருப்பார்கள்?'.
'துல்லியமாகத் தெரியவில்லை, ஆயிரக்கணக்கில் இருப்பார்கள்'.
'எங்கிருந்து இது தொடங்கியது?'.
'நான் உலகத்தின் புரட்சியாளர்களைப் படித்து புரட்சிகரமாக எதையாவது செய்யவேண்டும் என்று செயல்பட்டு குற்றவாளியானேன். ஆனால், பெரிய அளவில்  குற்றம்புரிபவர்கள் வாழ்வாங்கு வாழ்வதைப் பார்த்தேன். பணக்கார முதலாளிகள்தான் போரையும், வெற்றி தோல்வியையும், பேச்சுவாழ்த்தையையும், தீர்ப்புகளையும்,ஒப்பந்தங்களையும், புரட்சிகளையும், ஆட்சிகளையும், வாழ்வையும், சாவையும் தீர்மானிக்கிறார்கள். அவர்களில் ஒருவனாக மாற நினைத்தேன். வழி அவர்கள் வழிதான். உயிரைப் பற்றி கவலைப்படாமல், எதற்கும் துணிந்த கூட்டாளிகளை சேர்த்துக்கொண்டு, ஆயுதங்களை பயன்படுத்தி பணத்தை பறிப்பது, அவர்களுக்கே எதிராக அதைப் பயன்படுத்துகிறேன். அவர்கள் சராசரி மக்களைக் கொள்ளையடித்து சேர்த்துவைந்திருப்பதை நான் பிடுங்கிக்கொள்கிறேன். இன்று உலகத் தீவிரவாத அமைப்புகளில் பணக்காரக் குழு நாங்கள்தான்'.
'இதற்கு தலைவனாக எப்படி ஆனீர்கள்?'
'முதலில் நான்தான் சில நண்பர்களுடன் தொடங்கினேன். தப்பான வழியில் பணம் சேர்ப்பவர்களை கொள்ளையடித்து, கடத்தி, மிரட்டி, கொன்று பணத்தை எடுத்துக்கொள்வோம். இது பெரும்பாலான இளைஞர்களை ஈர்க்கவே குழு பெரிதானது.எங்கள் குழுவிலேயே சிலர் மக்களைத் துன்புறுத்தத் தொடங்க அவர்களை நான் தீர்த்துக்கட்டிவிட்டேன். பிறகு சிலர் தனியே பிரிந்து குழு தொடங்கினர். அவர்களையும் ஒழித்துக்கட்டியபிறகு வேறுவழியில்லாமல் என்னையே தலைவனாக்கிவிட்டனர்'.
'நீங்கள் மக்களுக்கு நடக்கும் கொடுமைகளைத் தட்டிக்கேட்கிறீர்களா?.

Friday, 18 July 2014

பொல்லாதத் தமிழர்கள்

பொல்லாத தமிழர்கள்
LLLLLLLLLLLLLLLLLLL
உலகை உலுக்கிய மனிதர்களை என்றுமே மக்கள்
மறப்பதில்லை
அப்படி ஆட்டிப்படைத்த தமிழர்களும்
இருக்கவே செய்தனர்;
அவர்கள் பற்றி ஒரு பதிவு.
மஸ்தான் மிர்ஸா
--------------------------
1970களிலும் 1980களிலும் மும்பையைக் கலக்கிய
நிலழுலக பெருந்தலை (underworld don); 1926ல்
இராமநாதபுரத்தில் பனைக்குளம் என்ற சிற்றூரில்
பிறந்தவர்; மள்ளராக இருந்து இசுலாமியராக மாறிய
குடும்பம்; 1955ல் தமது 17வயதில் சுமைதூக்கும்
கூலியாக பம்பாயில் தமது வாழ்க்கைத் தொடங்கினார்;
பத்தே வருடங்களில் கடத்தல் தொழிலில்
ஈடுபட்டு இந்தி திரைப்படங்களைத் தயாரிக்கும்
அளவு உயர்ந்தார்; 1975
நெருக்கடி காலத்தின்போது சிறையிலடைக்கப்பட்டார்;
சிறையில்தான் இவர் இந்தி (பம்பாய் வந்து 20ஆண்டுகள்
கழித்து) பேசக் கற்றார்; இவருக்கு தமிழ்
மட்டுமே எழுதப் படிக்கத் தெரியும்; விமானம் மூலம்
சென்னையிலிருந்து நாளிதழ்கள் வரவைத்துப்
படித்துக்கொள்வார்; இவர் 1980களில்
மும்பையிலேயே முதல் பெரியமனிதராக இருந்தார்;
அப்போது இவரது மாதவருமானம் நூறுகோடிக்கும் மேல்
என்கிறார்கள்; கடத்தலிலும் இவர் மின்னணு சாதனங்கள்,
தங்கம், வெள்ளி போன்றவற்றையே கடத்தியுள்ளார்;
நிழலுக வாழ்க்கையில் இவர் எவ்வளவு நன்மை செய்தார்
எவ்வளவு தீமை செய்தார் என்பது தெளிவாகத்
தெரியவில்லை; இந்தியில் இவரது வாழ்க்கையைத்
தழுவி பல படங்கள் வந்துள்ளன; தமிழில் 'தீ' என்ற படம்
இவர் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்டது.
வரதராசமுதலியார்
---------------------------
1926ல் வேலூரில் பிறந்தார்; கூலிவேலை செய்ய
பம்பாய் சென்று 1980களின் பிற்பகுதியில்
பம்பாயை ஆட்டிப்படைத்தவர்; இவரும் மஸ்தான் மிர்ஸாவும்
நண்பர்கள்; கடத்தலில் ஈடுபட்ட இவரும் நிலழுலகப்
பெருந்தலை; எனக்குத் தெரிந்து ஒரே துறையில்
இருதமிழர்கள் கொடிகட்டிப் பறந்தும் தங்களுக்குள்
மோதிக்கொள்ளாதது இவர்கள் காலத்தில்
மட்டுமே நடந்துள்ளது; 1982ல் இவரது மாதவருமானம்
80கோடிக்கு மேல் என்கின்றனர்; இவர் 1990ல்
சென்னையில்
மரணமடைந்தபோது இவரது பூதவுடலை மஸ்தான்
தனி 'இந்தியன் ஏர்லைன்ஸ்' விமானம் மூலம் பம்பாய்
கொண்டுவந்து தமிழர் பகுதிகளில் அஞ்சலிக்காக
எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்தார்;
இவரது வாழ்க்கையைத் தழுவியும் பல படங்கள்
வந்துள்ளன; தமிழில் 'நாயகன்' படம் வந்துள்ளது.
பேங்டாங் காளி
---------------------
1961ல் மலேசியாவில் 'பேங்டாங்'ல் பிறந்தார்;
1990களில் நிழலுகப் பெருந்தலையாக
உருவெடுத்தார்; இவரைப்பற்றி தகவல்
தருவோருக்கு ரூபாய் மதிப்பில் 10,40,000
அறிவிக்கப்பட்டிருந்தது; 200பேர் கொண்ட
தனிப்படை அமைக்கம்பட்டிருந்தது; 1993ல்
காவல்படையினருடன் துப்பாக்கி மோதலில்
கொல்லப்பட்டார்; இவரைப் பற்றி வேறு தகவல்கள் இல்லை;
தற்போதும் மலேசியாவில் அறிவிக்கப்பட்ட
பெருந்தலைகள் பலரும் தமிழர்கள்; (பில்லா படம்)
மலேசிய எல்லைக்கருகே தாய்லாந்து நாட்டுக்குள்
'பென்டாங்' 'டன்னோக்' போன்ற பகுதிகளில் பெருந்தலைகள்
(பெரும்பாலும் தமிழர்கள்) ஆதிக்கம் கொடிகட்டிப்
பறப்பதாகக் கூறுகின்றனர்.
மலையூர் மம்பட்டியான்
----------------------------------
1959லிருந்து ஐந்து ஆண்டுகள்
காவல்துறைக்கு சிம்மசொப்பனமாக விளங்கியவர்;
நெடுஞ்சாலைத் துறையில் கூலிவேலை செய்துவந்தவர்;
பிற்காலத்தில் காட்டுக் கொள்ளைக் காரனாகவும்
வேட்டைக்காரனாவும் மாறினார்; தமது காலத்தில் பல
வீரசாகசங்களைச் செய்தவர்; கொள்ளைக்காரனாக
இருந்து பிற்காலத்தில் தமிழினப் போராளியாக
மாறிய வீரப்பனாருக்கு இவர்தான் முன்மாதிரி; கென்னத்
ஆன்டர்சன் என்ற ஆங்கிலேயர் காடுகளில்
மம்பட்டியானுடன் தங்கியிருந்த
தமது அனுபவங்களை தமது நூல்களில் குறிப்பிடட்டுள்
ளார்; 1964உடன் பழகிய ஒருவராலேயே சுட்டுக்
கொல்லப்பட்டார்.
இவரது வாழ்க்கையைத் தழுவி 'மலையூர் மம்பட்டியான்'
படம் வெளிவந்தது.
இவர்களை முன்மாதிரியாகக் கொள்ளமுடியாதுதான்;
இவர்கள் வாழ்க்கையும் பெரும்பாலும்
வெளிப்படையானதாக இல்லாததால்
இவர்களை எடைபோடுவதும் கடினம்; இருந்தாலும்
வெளியிடங்களுக்குச் சென்று அங்கே வல்லவர்களாகத்
திகழ்ந்தவர்கள் என்பதால் தெரிந்துவைத்துக்கொள்ளுங்கள்
https://m.facebook.com/photo.php?fbid=425989110838081&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739

SUPERMAN கணேஷ் (புலி)

SUPER MAN கணேஷ்
Super man, Spider man, Bat man, X men, விஜய்,
அஜித், சூர்யா………
இவர்களை உங்களுக்குப் பிடிக்குமா? எனக்கும்
பிடிக்கும், ஒரு காலத்தில்.
கதாநாயகன் என்றாலே மக்களுக்காக சண்டை போடுவது,
ஈகம்(தியாகம்) செய்வது, அள்ளிக் கொடுப்பது, பெண்கள்
மானத்தைக்
காப்பாற்றுவது என்று வரையறை செய்யப்பட்டுள்ளது.
எத்தனைமுறை இது வெவ்வேறு வடிவங்களில்
காட்டப்பட்டாலும் சலிப்பதில்லை.
ஆனால், எனக்கு சலித்துவிட்டது; போலியான
பொருளுக்கு முன் உண்மையான பொருளை வைத்துவிட்டால்
போலியின் ஈர்ப்பு குறைந்துவிடும்தானே?!
என்றைக்கு எனக்கு புலித்தொற்று என்கிற நோய்
வந்துவிட்டதோ அன்றிலிருந்து போலியான கற்பனைக்
கதாநாயகர்கள் சலித்துப்போய்விட்டனர்;
இப்போது கதாநாயகன் கடைசிக்காட்சியில்
அடிவாங்கி கீழே விழுந்து திடீரென்று எழுந்து அடிப்பானே அதைப்
பார்க்கும்போது சிரிப்பாயிருக்கிறது.
ஏனென்றால் அவர்களை விடவும் வீரமான நாயகர்கள்
மெய்வாழ்க்கையில் இருக்கின்றனர்.
அப்படி ஒருவர்தான் 'கணேஷ்'.
பக்கத்துவீட்டு அண்ணன் பெயர்மாதிரி இருக்கிறதா?
சரி இப்போது கதையைக் கேளுங்கள்.
'தங்கநகர் கிளிவெட்டி' என்ற சிற்றூரில் 1984ல்
சிங்களப்படை நுழைந்து அந்த ஊரில் இருந்த மொத்த
இளைஞர்களையும் இழுத்துவந்து முச்சந்தியில்
நிறுத்தி சுட்டுக்கொல்கிறது; இதில் 42 இளைஞர்கள்
கொல்லப்படுகின்றனர்; எஞ்சிய பெண்களும்
முதியவர்களும் அருகில் இருந்த ஏதிலி(அகதி)
முகாமில் தஞ்சமடைகின்றனர்; அக்காலத்தில் சிங்களப்
படையினர் எல்லையோரத் தமிழ்ச்சிற்றூர்களில்
இவ்வாறு கொலைத்தாண்டவம்
ஆடி தமிழர்களை விரட்டிவிட்டு தமது மாமன் மச்சான்
குடும்பங்களை அங்கே குடியேற்றி விளைநிலங்களையும்
தமதாக்கிக்கொள்ள இதுபோலச் செய்துவந்த
ஆயிரக்கணக்கான அட்டூழியங்களில் இதுவும் ஒன்று;
மறுநாள் 'தெகிவத்தை' என்ற சிங்கள
ஊரிலிருந்து 'போலீஸ் கமாண்டா' படைப்பிரிவுச்
சிங்களப்படை மேற்சொன்ன இளைஞர்களே இல்லாத
ஏதிலி முகாமுக்குச் சென்று நல்ல இளம்பெண்களாக 50
தமிழ் யுவதிகளை வலுக்கட்டாயமாக ஒரு வண்டியில்
அள்ளிப்போட்டுக்கொண்டு போகின்றனர்; தமிழச்சிகளுக்கு
மானம்தான் பெரிது, தமிழகத்தைவிட அதிகம்
கண்ணகிக்கு கோயில்கள் ஈழத்தில் இருக்கின்றன; 50
தமிழச்சிகளை வலுகட்டாயமாக இழுத்துச்செல்லவ
ேண்டும் என்றால் அவர்கள் எத்தனைபேர் வந்திருப்பார்கள்
என்று கணக்குபோட்டுக் கொள்ளுங்கள்; தமிழ்மண்ணில்
இருந்தால்தானே புலிகள் வருவார்கள் என்று சிங்கள
சிற்றூரான 'தெகிவத்த'க்கு அழைத்துச்
சென்று ஒரு பாலத்தடியில்
வண்டியை நிறுத்திவிட்டு அந்த ஊர் பொறுக்கிப்பயல்க
ளுக்கு ஏற்கனவே கூறியிருந்தபடி 'தமிழச்சி விருந்து'
வைக்கப்போவதை கூறி அழைத்துவர சிலர் சென்றனர்;
இந்த நிலையில் முகாம் மக்கள் காட்டுக்குள்
ஓடிச்சென்று மறைந்திருந்த புலிகளிடம்
சொல்கின்றனர்; புலிகள் அப்போது மிகவும் குறைவு;
ஒரு மாவட்டத்திற்கு 50பேர்கூட கிடையாது;
புலிகளிடம் ஆயுதங்களும் குறைவு; பெரிய பெரிய
ஆயுதங்கள் கிடையாது; சீருடை கிடையாது;
அவ்வளவு ஏன் காடுமேடுகளில் நடமாட சப்பாத்துகள்(பூ
ட்ஸ்)கூட கிடையாது;
அப்போது அங்கே இருந்தவர்தான் 'கணேஷ்';
அவரோடு இருந்தது வெறும் ஐந்துபுலிகள்;
எது இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன
புலி புலிதானே; உடனே ஒரு வாகனத்தை கடன்
வாங்கிக்கொண்டு விரைந்தனர் புலிகள்;
சிங்கள மண்ணான தெகிவத்தையில் கொழுப்பெடுத்த
காலிப்பயல்களும் படையினரும் அந்த
தமிழ்ப்பெண்களை சீரழிக்கும் முன் சரியான நேரத்தில்
அங்கே புலிகளின் வேட்டுச்சத்தங்கள் முழங்க
ஆரம்பித்தன; சற்றும் இதை எதிர்பார்க்காத சிங்களவர்கள்
அங்கிருந்து ஓடிவிட்டனர்; பிடிபட்ட சில
காலிப்பயல்களை புலிகள்
நையப்புடைத்து எச்சரித்து உயிருடன்
விட்டுவிட்டனர்; அந்த 50பெண்களையும்
முகாமுக்கு அழைத்துவந்து விட்டனர்;
இதைக் கேள்விப்பட்ட சிங்கள (ராணுவ)படை மறுநாள்
பெரும் எண்ணிக்கையில் அந்த முகாம் மீது தாக்குதல்
தொடுக்க வருகின்றனர்; ஆயத்த நிலையில் இருந்த
புலிகள் கணேஷ் தலைமையில் அந்த பெரும்படையுடன்
போரிட்டு விரட்டினர்; இதில் 9சிங்களப் படையினர்
கொல்லப்பட்டனர்.
இது மட்டுமல்ல 1982-1986 என நான்கு ஆண்டுகளில்
கணேஷ் அவர்கள் செய்த தாக்குதல் பட்டியல்
கீழ்க்கண்டவாறு நீள்கிறது,
1) நெல்லியடியில் சுற்றுக்காவல்படையினர்
வழிமறித்துக் கொலை
2) சாவகச்சேரி காவல்நிலையத் தாக்குதல்
3) உமையாள்புரம் படைவண்டிகள் மீதான அதிரடி
4) 13 சிங்கள படையினரை முதன்முறை பலிகொண்ட
திருநெல்வேலி வரலாற்றுப்போர்
5)களுவாஞ்சிக்குடி காவல்நிலையத் தாக்குதல் ,
6) திருக்கோவில் என்ற இடத்தில் வைத்து இரண்டகன்
(துரோகி) ஒருவன்மீதான துப்பாக்கச் சூடு
7) ஈச்சலம்பத்தை முற்றுகை தகர்ப்பு
8) கட்டைப்பறிச்சான் கண்ணிவெடித் தாக்குதல்
9) பாலம்பட்டாறு படையினருடன் மோதல்
10) புலிகளின் வரலாற்றின் முதன்முதல் L .M .G
வகைத் துப்பாக்கியை படையினரிடமிருந்
து கைப்பற்றிய பட்டித்திடல் கவசவண்டித் தகர்ப்பு
11) இறால்குழி சுற்றிவளைப்புமீறல்போர் ,
12) 3ஆம் கொலனி படையினருடன் நேரடிமோதல்
13) வாகரை கண்ணிவெடி அதிரடித்தாக்குதல்
14) தெகிவத்தை போலிஸ்கொமாண்டோக்கள்
கடத்திச்சென்று கற்பழிக்க முயன்ற தமிழ் பெண்களை
மீட்டெடுத்த தீரப்போர்
15) விடுதலை வரலாற்றில் முதல்தடவை சிங்கள
விமானப்படையின் கெலிகொப்டர் சுட்டு வீழ்த்திய
கூனித்தீவு முற்றுகையுடைப்பு,
16) சம்பூர் யுத்தம்,
17)வெருகல் விடுதலைப்புலிகளின் முகாம்
வளைப்பு முயற்ச்சி முறியடிப்பு
18) கலவரத் தடுப்பு குழுவை கூலிப்படையினர்
கைது செய்தபோது போராடி அவர்களை மீட்ட களப்போர்
இறுதியாக ,
மேஜர்.கணேஷ் வீரமரணம் அடைந்த பெரியபாலம் என்ற
இடத்தில் 05.11.1986 அன்று 4 மணியளவில் நிகழ்ந்த
சிங்களப்படை சுற்றிவளைப்பு மோதல்.
https://m.facebook.com/photo.php?fbid=427113664058959&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739