Showing posts with label ltte. Show all posts
Showing posts with label ltte. Show all posts

Sunday, 30 April 2017

புலிப் பார்ப்பனர்

புலிப் பார்ப்பனர்

பிரிகேடியர் விதுசா,
மேஜர் பண்டிதர்,
பாடலாசிரியர் கு.வீரா

ஆகியோர் புலிகள் இயக்கத்தில் இருந்த ஈழத்து (தமிழ்ப்) பார்ப்பனர்கள்.

Saturday, 6 February 2016

புலி பறக்குமா?

புலி பறக்குமா?
பறக்கும்.

90களின் நடுப்பகுதியில் நடந்த புலிகளின் விமான சோதனை ஓட்டம்

(புலிகளின் முதல் வெற்றிகரமான பறப்பு
-யூட்யூப்)
(வான்புலிகள் -விக்கிபீடியா)

புலிகளின் விமானங்களை துரத்தும் எந்த விமானமும் அவ்வளவு எளிதில் தாக்கமுடியாது.
காரணம் முன்னே செல்லும் விமானத்தின் வெப்ப வெளியீடை வைத்துதான் குறிவைத்து அடிக்கமுடியும்.
புலிகள் முன்புறம் வெப்பம் கக்குமாறு வடிவமைத்திருந்தனர்.

ஹிந்தியா தனது போர்விமானங்களில் ஒன்றைக்கூட தாமே வடிவமைத்தது இல்லை என்பதை இங்கே கூறுகிறேன்.

https://m.facebook.com/story.php?story_fbid=657450744358582&id=100002809860739&refid=17&_ft_=top_level_post_id.657450744358582%3Atl_objid.657450744358582%3Athid.100002809860739%3A306061129499414%3A54%3A0%3A1456819199%3A-4340819121698688255

Thursday, 16 October 2014

புலிகள் சிறைமீட்ட பெண்

புலிகள் சிறைமீட்ட பெண்
---------- ---------------- --------
1983 யூலை 25ல் கறுப்பு யூலையின் உச்சக்கட்ட
கொலை நடந்த நாள்;
வெளியே குடும்ப
அட்டைகளைகு கையில் வைத்துக்கொண்டு சிங்களவர்
தமிழரை வேட்டையாடிக்கொண்டிருக்க
அன்று வெலிக்கடை சிறையில் இருந்த சிங்களக்
கைதிகள் மதிய உணவுக்குப் பிறகு திடலில்
(சிங்கள)சிறையதிகாரிகளால் ஒன்றுகூட்டப்பட்டனர்;
அவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டு தமிழ்க்கைதிகள்
இருந்த கூடம் நோக்கி சென்றனர்;
"சிங்கள மக்கள்
வாழ்க" "புலிகளைக் கொல்லுங்கள்" என்று சிங்களத்தில்
முழக்கமிட்டபடி சிறைக் காவலர்களால்
வழிநடத்தப்பட்டு கதவுகள் திறந்துவிடப்பட்டு அந்த
கொலைக்கூட்டம்,
ஏற்கனவே (மாலை மது அருந்திவிட்டு வரும்)சிறையதிகா
ரிகளால் நாள்தோறும் கொடுமைப்படுத்தப
்பட்டு உடல்நலம் சிதைந்துபோயிருந்த ஆயுதமில்லாத
தமிழ்க்கைதிகளைக் வெட்டியும் குத்தியும் அறுத்தும்
கொன்றனர்;
இதில் குட்டிமணி இறந்தபிறகு தமிழீழத்தைப் பார்ப்பேன்
என்று கண்தானம் செய்திருந்தார், உயிருடனே அவர்
கண்களை நோண்டி பிறகு கொடூரமாகக் கொல்லப்பட்டார்;
மொத்தம் 34பேர் கொல்லப்பட்டு உடல்களும்
துண்டுதுண்டாக வெட்டப்பட்டு அங்கிருந்த புத்தர்
சிலைமுன்பு படையல் போடப்பட்டது;
ஒரு சாண்
அளவு அங்கே குருதி தேங்கியிருந்தது;
நள்ளிரவு வரை இக்கோரதாண்டவம் நடந்தது;
பிறகு சிங்கள அதிகாரி அக்கைதிகளைப்
பாராட்டி உரையாற்றினார்;
பி3,டி3 கூடங்களில்
இருந்த அத்தை தமிழ்க்கைதிகளும் கொல்லப்பட்டுவிட
சி3ஐ நாளை பார்த்துக்கொள்ளலாம்
அதுவரை ஓய்வெடுக்குமாறு கூறினார்;
வெளியிலிருந்து சரக்குந்து(லாரி)
வந்து அத்தனை உடல்களும் அப்புறப்படுத்தப்பட்டன;
துப்புரவுப்பணி முடிந்ததும்
அதிகாலை ஒரு (சிங்கள)நீதிபதி வந்து சி3
தமிழ்க்கைதிகளை விசாரித்தார்; தமிழ்க்கைதிகள்
துணிந்து நடந்ததைக் கூறினர்; பிறகு,
இவ்வாறு இனி நடக்காது என்று கூறிவிட்டுச்
சென்றார்;
27-7-89 அன்று மீண்டும் இதேபோல்
கொலைத்திட்டம் நிறைவேறியது; ஆனால், தமிழ்க்கைதிகள்
எச்சரிக்கையாக இருந்தனர்;
தமது போர்வைகளை சுருட்டி கதவில் கட்டி இறுக்கிப்
பிடித்து திறக்கமுடியாது செய்துகொண்டு,
தீட்டிவைத்திருந்த தட்டு கரண்டி, கழிவறை வாளி,
மேசை போன்றவற்றை பயன்படுத்தி தாக்கினர்;
சிறுநீரையும் குழம்பையும் வைத்திருந்தனர்
அதை சிங்களவர்கள் கண்களில் ஊற்றினர்;
மூன்று மூன்று பேராக அடைக்கப்பட்டிருந்த
37கைதிகள் ஆயிரம் சிங்களவரை சமாளித்தனர்;
சில சிங்களக்கைதிகள் தப்பியோட முயற்சிக்க
சிறையதிகாரிகள் கலவரத்தை நிறுத்தமுயன்றனர்;
அதிரடிப்படை வரவழைக்கப்பட்டது; காயம்பட்ட தமிழர்கள் மருத்துவமனையில் சிங்கள
மருத்துவராலும், தாதியராலும் பரிகசிக்கப்பட்டனர்;
இரண்டாம் தாக்குதலில் மொத்தம் 18பேர் இறந்தனர் 19பேர் பிழைத்தனர்;
புலிகளுக்கு அடைக்கலம்
கொடுத்ததற்காக சிறையிடப்பட்ட 'நிர்மலா'
பெண்கைதிகளுடன் இருந்ததால் அவரை கவனிக்கவில்லை;
நிர்மலா என்பவர் மர்மமான முறையில்
படுகொலை செய்யப்பட்ட மனிதவுரிமை செயல்பாட்டாளர்
'ராஜினி' என்பவரின் உடன்பிறந்தவர்; தமிழ்கைதிகள்
மட்டகளப்பு சிறைக்கு மாற்றப்பட்டனர்;
23-9-83
அன்று பல்வேறு இயக்கங்கள்
சேர்த்து முயற்சித்து நிர்மலா தவிர 60தமிழர்கள்
தப்பினர்;
பாதுகாப்பு அதிகரிக்கப்பட்ட
நிர்மலாவை புலிகள் கேணல்.பிரான்சிசு என்பவர்
தலைமையில் பஷிர், சிவம், டேவிட் மற்றும் சிலர்
அடங்கிய அதிரடிக் குழு 15-6-84 அன்று மீட்டனர்;
சிறையின் வெளிக்கதவைத் தட்டி காவல் சீருடையில்
ஒருவர் புதியகைதிகளைக் கொண்டுவந்திருப்பதாக
சிங்களத்தில் கூற கதவு திறக்கப்பட்டது;
அதிரடியாக உள்ளே நுழைந்த புலிகள்
துப்பாக்கி வேட்டுச்சத்தம் கேட்டால் காவலர்கள்
சூழ்ந்துவிடுவார்கள் என்று அடிதடியின்
மூலமே காவலர்களைத்
தாக்கி கதவுகளை உடைத்து நிர்மலாவை அழைத்துக்கொண்டு
வெளியேறினர்;
பிறகு நிர்மலா தமிழகத்துக்கு கொண்டுவரப்பட்டு
திரு.புலமைப்பித்தன் வீட்டில் தங்கவைக்கப்பட்டார்;
இன்று நிர்மலா மனிதவுரிமை மற்றும்
பெண்ணுரிமை செயல்பாட்டாளராகவும் புலிகளையும்
சிறிலங்காவையும் ஒருசேர விமர்சிப்பவராகவும்
ஆகிவிட்டபோதிலும், அன்றைய காலத்தில்
ஒரு தோட்டாவைக்கூட தீர்க்காமல் புலிகள் செய்த இந்த
சாதனை சிங்கள மக்களுக்கு அதிர்ச்சியாகவும்
பதிலடியாகவும் தோன்றியது.
http://thibang.blogspot.in/2010_12_01_archi
ve.html?m=1
http://www.tamilcanadian.com/article/
tamil/599
https://m.facebook.com/photo.php?fbid=414745711962421&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739

Tuesday, 30 September 2014

புலிகளின் ஐந்து நாள்ப் பாய்ச்சல்

2 1/2 வருடம் பதுங்கி
5 நாட்களில் பாய்ந்த புலிகள்
iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii
புலிகளின் பல்வேறு சாதனைகளில் மிகமுக்கியமானது
.'ஓயாத அலைகள்-3' ஆகும்; இதை சுருக்கமாக
அறிந்துகொள்வோம்; மேலேயுள்ள படத்தில்
குத்துமதிப்பாக வரைந்துள்ளேன்; எளிமையாக
புரிந்துகொள்ள படங்கள் உதவும்; புலிகள்
யாழ்ப்பாணத்திலிருந்து 1996ல் ஐநூறு ஆயிரம்
(5லட்சம்) மக்களுடன் யாழ்ப்பாணத்தில்
இருந்து தெற்கே வன்னிப்
பகுதிக்கு (கிளிநொச்சி மற்றும்
முல்லைத்தீவு மாவட்டங்கள் சேர்ந்தது) இடம்பெயர்கிறார்
கள்; 1996 ல் 'ஓயாத அலைகள்' என்ற பெயரில்
பெண்புலிகளை அனுப்பி முல்லைத்தீவு படைமுகாமைத்
தாக்கி கைப்பற்றுகின்றனர்; இந்த அவமானத்தைத்
தாங்கமுடியாது சிறிலங்கா 'ஜெயசிக்குறு' (வெற்றி உறுதி)
என்ற பெயரில் வன்னிக்குப் போர்தொடுக்கிறது;
வடக்கே யாழ்ப்பாணம் அரசகட்டுப்பாட்டில்,
நடுவே வன்னி புலிகள் கட்டுப்பாட்டில்
தெற்கே அரசு நடக்கும்பகுதி; இப்படி இருப்பதால்
யாழில் இருக்கும் 30,000 சிங்கள படையினருடன்
கொடுக்கல் வாங்கல் பெரும் சிரமமாக இருப்பதால்
வன்னியின் நட்டநடுவில் யாழில்
இருந்து வவுனியா வரை இருக்கும் கண்டிவீதியை(ஏ9
சாலை) கைப்பற்ற ஜெயசிக்குறு நடவடிக்கை 1997ல்
தொடங்குகிறது; புலிகளின் பலத்த எதிர்ப்புடன்
இது புளியங்குளம்
வரை சென்று பிறகு ஏ9க்கு போகமுடியாமல்
விலகி ஒட்டுசுட்டான் வரை முன்னேறுகிறது;
அதற்குமேல் முடியாமல்
ஜயசிக்குறு கைவிடப்படுகிறது; இந்நிலையில்
கீழே மறுபக்கம் மன்னாரிலிருந்து ரணகோச
நடவடிக்கை தொடங்கப்பட்டு பள்ளமடு வரை முன்னேறுகிறது;
இந்நிலையில் புலிகளின் பகுதி மிகவும்
சுருங்கி நாலாபக்கமும் முற்றுகையிடப்பட
்டுவிட்டது; முல்லைத்தீவோ புதுக்குடியிருப
்போ விரைவில் அரசால் கைப்பற்றப்படும் என்றும்
அதன்பிறகு புலிகள் எழமுடியாது என்றும் பலர்
எதிர்பார்த்தனர்; ஈழமக்களும் நம்பிக்கை இழந்துவந்தனர்;
புலிகள் அப்போது 2,000 பேர்;
சுற்றி நிற்பதோ 45,000 சிங்கள வீரர்கள் படை; சிங்கள
அரசு ஒரு சாலையைக் கைப்பற்றப்போய் இத்தனை பெரிய
வெற்றி கிடைக்கப்போகிறதே என்று கூத்தாடியது;
ஆனால், புலிகளின் கட்டுப்பாட்டுக்கு உள்ளேயிருந்த
மக்கள் நம்பிக்கை இழக்கவில்லை; அவர்கள் தமக்கேயுரிய
வீரத்துடன் புலிகள் அளித்த
பயிற்சிகளை பெற்று படையில் இணைந்தனர்; இந்த
நிலையில் 1998ல் 'ஓயாத அலைகள்2' நடவடிக்கை மூலம்
புலிகள் கிளிநொச்சியைக் கைப்பற்றுகின்றனர்;
சிங்களப் படை பள்ளமடுவிலிருந்து 'வாட்டர் ஷாட்' என்ற
பெயரில் எடுத்த நடவடிக்கைகளும் மேலே பூநகரியில்
படையை இறக்கும் நடவடிக்கையும் புலிகளால்
தடுக்கப்படுகிறது; 1999ல் புலிகளின்
வரலாற்று சிறப்பு மிக்க "ஓயாத அலைகள் -3"
நடவடிக்கை ஒட்டுசுட்டானை நோக்கி தொடங்குகிறது;
புலிகள் அப்போது என்ன மாயம்
செய்தார்களோ தெரியாது இரண்டரை வருடமாக
முக்கி முக்கி முன்னேறிய சிங்களப்படை வெறும்
ஐந்தே நாட்களில் தொடங்கிய இடத்தைவிடவும்
பின்னுக்குத் தள்ளப்பட்டது; புலிகள் மிகக்குறைந்த
இழப்புடன்
அதிகளவு சேதமளித்து கற்பனை செய்யமுடியாத
வேகத்துடன் முன்னேறிவிட்டனர்; பலரால்
இதை நம்பமுடியவில்லை; இந்த அதிர்ச்சி தெளியுமுன்
புலிகள் வடக்கே 30,000 படையினரைக் கொண்ட
இலங்கையிலேயே பெரிய படைமுகாமான
ஆனையிறவை அடித்து நொறுக்கினர்; அதை அடுத்த
பதிவில் பார்ப்போம்.
http://thesakkaatu.com/doc3509.html

Sunday, 20 July 2014

ஓ டயரைக் கொன்றால் போராளி, ராஜீவைக் கொன்றால் தீவிரவாதியா?

ஓ டயரை கொன்றால் போராளி
ராசீவைக் கொன்றால் குற்றவாளியா?

?????????????

1919 ஜாலியன் வாலா பாக் பஞ்சாபி சீக்கியர்
படுகொலைக்கு பழிவாங்க லண்டன்
சென்று 22ஆண்டுகள் கழித்து ஜெனரல் ஓ
டயரைச் சுட்டுக்கொன்ற உதம் சிங்
(பஞ்சாபி சீக்கியர்) இந்திய
அரசுக்கு போராளி என்றால்
அமைதிப்படை அனுப்பி ஆறாயிரம்
தமிழ்மக்களைக் கொன்று 800 தமிழ்ப்
பெண்களை வல்லுறவுக்கு உட்படுத்திய
ராசீவைக் கொன்ற தனு எங்களுக்கு போராளியே.
நன்றி: சனவரி 14 'நம்வேர்கள்'

Friday, 18 July 2014

SUPERMAN கணேஷ் (புலி)

SUPER MAN கணேஷ்
Super man, Spider man, Bat man, X men, விஜய்,
அஜித், சூர்யா………
இவர்களை உங்களுக்குப் பிடிக்குமா? எனக்கும்
பிடிக்கும், ஒரு காலத்தில்.
கதாநாயகன் என்றாலே மக்களுக்காக சண்டை போடுவது,
ஈகம்(தியாகம்) செய்வது, அள்ளிக் கொடுப்பது, பெண்கள்
மானத்தைக்
காப்பாற்றுவது என்று வரையறை செய்யப்பட்டுள்ளது.
எத்தனைமுறை இது வெவ்வேறு வடிவங்களில்
காட்டப்பட்டாலும் சலிப்பதில்லை.
ஆனால், எனக்கு சலித்துவிட்டது; போலியான
பொருளுக்கு முன் உண்மையான பொருளை வைத்துவிட்டால்
போலியின் ஈர்ப்பு குறைந்துவிடும்தானே?!
என்றைக்கு எனக்கு புலித்தொற்று என்கிற நோய்
வந்துவிட்டதோ அன்றிலிருந்து போலியான கற்பனைக்
கதாநாயகர்கள் சலித்துப்போய்விட்டனர்;
இப்போது கதாநாயகன் கடைசிக்காட்சியில்
அடிவாங்கி கீழே விழுந்து திடீரென்று எழுந்து அடிப்பானே அதைப்
பார்க்கும்போது சிரிப்பாயிருக்கிறது.
ஏனென்றால் அவர்களை விடவும் வீரமான நாயகர்கள்
மெய்வாழ்க்கையில் இருக்கின்றனர்.
அப்படி ஒருவர்தான் 'கணேஷ்'.
பக்கத்துவீட்டு அண்ணன் பெயர்மாதிரி இருக்கிறதா?
சரி இப்போது கதையைக் கேளுங்கள்.
'தங்கநகர் கிளிவெட்டி' என்ற சிற்றூரில் 1984ல்
சிங்களப்படை நுழைந்து அந்த ஊரில் இருந்த மொத்த
இளைஞர்களையும் இழுத்துவந்து முச்சந்தியில்
நிறுத்தி சுட்டுக்கொல்கிறது; இதில் 42 இளைஞர்கள்
கொல்லப்படுகின்றனர்; எஞ்சிய பெண்களும்
முதியவர்களும் அருகில் இருந்த ஏதிலி(அகதி)
முகாமில் தஞ்சமடைகின்றனர்; அக்காலத்தில் சிங்களப்
படையினர் எல்லையோரத் தமிழ்ச்சிற்றூர்களில்
இவ்வாறு கொலைத்தாண்டவம்
ஆடி தமிழர்களை விரட்டிவிட்டு தமது மாமன் மச்சான்
குடும்பங்களை அங்கே குடியேற்றி விளைநிலங்களையும்
தமதாக்கிக்கொள்ள இதுபோலச் செய்துவந்த
ஆயிரக்கணக்கான அட்டூழியங்களில் இதுவும் ஒன்று;
மறுநாள் 'தெகிவத்தை' என்ற சிங்கள
ஊரிலிருந்து 'போலீஸ் கமாண்டா' படைப்பிரிவுச்
சிங்களப்படை மேற்சொன்ன இளைஞர்களே இல்லாத
ஏதிலி முகாமுக்குச் சென்று நல்ல இளம்பெண்களாக 50
தமிழ் யுவதிகளை வலுக்கட்டாயமாக ஒரு வண்டியில்
அள்ளிப்போட்டுக்கொண்டு போகின்றனர்; தமிழச்சிகளுக்கு
மானம்தான் பெரிது, தமிழகத்தைவிட அதிகம்
கண்ணகிக்கு கோயில்கள் ஈழத்தில் இருக்கின்றன; 50
தமிழச்சிகளை வலுகட்டாயமாக இழுத்துச்செல்லவ
ேண்டும் என்றால் அவர்கள் எத்தனைபேர் வந்திருப்பார்கள்
என்று கணக்குபோட்டுக் கொள்ளுங்கள்; தமிழ்மண்ணில்
இருந்தால்தானே புலிகள் வருவார்கள் என்று சிங்கள
சிற்றூரான 'தெகிவத்த'க்கு அழைத்துச்
சென்று ஒரு பாலத்தடியில்
வண்டியை நிறுத்திவிட்டு அந்த ஊர் பொறுக்கிப்பயல்க
ளுக்கு ஏற்கனவே கூறியிருந்தபடி 'தமிழச்சி விருந்து'
வைக்கப்போவதை கூறி அழைத்துவர சிலர் சென்றனர்;
இந்த நிலையில் முகாம் மக்கள் காட்டுக்குள்
ஓடிச்சென்று மறைந்திருந்த புலிகளிடம்
சொல்கின்றனர்; புலிகள் அப்போது மிகவும் குறைவு;
ஒரு மாவட்டத்திற்கு 50பேர்கூட கிடையாது;
புலிகளிடம் ஆயுதங்களும் குறைவு; பெரிய பெரிய
ஆயுதங்கள் கிடையாது; சீருடை கிடையாது;
அவ்வளவு ஏன் காடுமேடுகளில் நடமாட சப்பாத்துகள்(பூ
ட்ஸ்)கூட கிடையாது;
அப்போது அங்கே இருந்தவர்தான் 'கணேஷ்';
அவரோடு இருந்தது வெறும் ஐந்துபுலிகள்;
எது இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன
புலி புலிதானே; உடனே ஒரு வாகனத்தை கடன்
வாங்கிக்கொண்டு விரைந்தனர் புலிகள்;
சிங்கள மண்ணான தெகிவத்தையில் கொழுப்பெடுத்த
காலிப்பயல்களும் படையினரும் அந்த
தமிழ்ப்பெண்களை சீரழிக்கும் முன் சரியான நேரத்தில்
அங்கே புலிகளின் வேட்டுச்சத்தங்கள் முழங்க
ஆரம்பித்தன; சற்றும் இதை எதிர்பார்க்காத சிங்களவர்கள்
அங்கிருந்து ஓடிவிட்டனர்; பிடிபட்ட சில
காலிப்பயல்களை புலிகள்
நையப்புடைத்து எச்சரித்து உயிருடன்
விட்டுவிட்டனர்; அந்த 50பெண்களையும்
முகாமுக்கு அழைத்துவந்து விட்டனர்;
இதைக் கேள்விப்பட்ட சிங்கள (ராணுவ)படை மறுநாள்
பெரும் எண்ணிக்கையில் அந்த முகாம் மீது தாக்குதல்
தொடுக்க வருகின்றனர்; ஆயத்த நிலையில் இருந்த
புலிகள் கணேஷ் தலைமையில் அந்த பெரும்படையுடன்
போரிட்டு விரட்டினர்; இதில் 9சிங்களப் படையினர்
கொல்லப்பட்டனர்.
இது மட்டுமல்ல 1982-1986 என நான்கு ஆண்டுகளில்
கணேஷ் அவர்கள் செய்த தாக்குதல் பட்டியல்
கீழ்க்கண்டவாறு நீள்கிறது,
1) நெல்லியடியில் சுற்றுக்காவல்படையினர்
வழிமறித்துக் கொலை
2) சாவகச்சேரி காவல்நிலையத் தாக்குதல்
3) உமையாள்புரம் படைவண்டிகள் மீதான அதிரடி
4) 13 சிங்கள படையினரை முதன்முறை பலிகொண்ட
திருநெல்வேலி வரலாற்றுப்போர்
5)களுவாஞ்சிக்குடி காவல்நிலையத் தாக்குதல் ,
6) திருக்கோவில் என்ற இடத்தில் வைத்து இரண்டகன்
(துரோகி) ஒருவன்மீதான துப்பாக்கச் சூடு
7) ஈச்சலம்பத்தை முற்றுகை தகர்ப்பு
8) கட்டைப்பறிச்சான் கண்ணிவெடித் தாக்குதல்
9) பாலம்பட்டாறு படையினருடன் மோதல்
10) புலிகளின் வரலாற்றின் முதன்முதல் L .M .G
வகைத் துப்பாக்கியை படையினரிடமிருந்
து கைப்பற்றிய பட்டித்திடல் கவசவண்டித் தகர்ப்பு
11) இறால்குழி சுற்றிவளைப்புமீறல்போர் ,
12) 3ஆம் கொலனி படையினருடன் நேரடிமோதல்
13) வாகரை கண்ணிவெடி அதிரடித்தாக்குதல்
14) தெகிவத்தை போலிஸ்கொமாண்டோக்கள்
கடத்திச்சென்று கற்பழிக்க முயன்ற தமிழ் பெண்களை
மீட்டெடுத்த தீரப்போர்
15) விடுதலை வரலாற்றில் முதல்தடவை சிங்கள
விமானப்படையின் கெலிகொப்டர் சுட்டு வீழ்த்திய
கூனித்தீவு முற்றுகையுடைப்பு,
16) சம்பூர் யுத்தம்,
17)வெருகல் விடுதலைப்புலிகளின் முகாம்
வளைப்பு முயற்ச்சி முறியடிப்பு
18) கலவரத் தடுப்பு குழுவை கூலிப்படையினர்
கைது செய்தபோது போராடி அவர்களை மீட்ட களப்போர்
இறுதியாக ,
மேஜர்.கணேஷ் வீரமரணம் அடைந்த பெரியபாலம் என்ற
இடத்தில் 05.11.1986 அன்று 4 மணியளவில் நிகழ்ந்த
சிங்களப்படை சுற்றிவளைப்பு மோதல்.
https://m.facebook.com/photo.php?fbid=427113664058959&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739

Wednesday, 16 July 2014

புலிகள்-இயக்கத்தில் தமிழக-இளைஞர்கள்.

புலிகள்-இயக்கத்தில் தமிழக-இளைஞர்கள்
+___+___+___+___+___+___+___+___+___+
பின்மண்டையில் முரசுகள் ஒலிக்க,
"ஒரு மார்தட்டும் பதிவு"
ஏறக்குறைய 30,000 போராளிகள் இருந்த விடுதலைப்
புலிகள் இயக்கத்தில் சற்றேறக்குறைய 200 தமிழக
போராளிகள் இருந்தனர்;
அவர்களைப்பற்றிய முழுமையான தகவல்கள்
கிடைக்கவில்லை; எனக்குக் கிடைத்தவரை சில தகவல்கள்
தருகிறேன்.
வீரமரணம் அடைந்தோருக்கு புலிகள் வழங்கும் 'மாவீரர்'
பட்டம் பெற்ற தமிழகத் தமிழர்களில்
ஒரு கரும்புலி இரண்டு பெண்போராளிகள் உட்பட
14பேரின் விபரங்கள்,
பிரிவு: கரும்புலி
நிலை: லெப்டினன்ட்
இயக்கப் பெயர்:செங்கண்ணன்
இயற்பெயர்: தனுஸ்கோடி செந்தூர்
ஊர்: சாத்தூர், சிவகாசி(தமிழகம்)
வீரப்பிறப்பு: 25.01.1975
வீரச்சாவு: 11.11.1993
நிகழ்வு: யாழ்ப்பாணம் பலாலி படைத்தளத்தினுள்
ஊடுருவி மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போ
து வீரச்சாவு
துயிலுமில்லம்: உடுத்துறை மாவீரர் துயிலும்
இல்லத்தில் இம்மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ள
து.
________________
நிலை: மேஜர்
இயக்கப் பெயர்: உமா
இயற்பெயர்: வேலுச்சாமி இந்துமதி
ஊர்: தமிழகம்
வீரப்பிறப்பு: 27.05.1972
வீரச்சாவு: 11.12.1999
நிகழ்வு: கிளிநொச்சி பரந்தன் பகுதியில் “ஓயாத
அலைகள் 03“ நடவடிக்கையின்போது வீரச்சாவு
துயிலுமில்லம்: விசுவமடு மாவீரர் துயிலும்
இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள
்ளது.
_____________
நிலை: வீரவேங்கை
இயக்கப் பெயர்: மணியரசி
இயற்பெயர்: செல்லத்துரை கமலாதேவி
ஊர்: தமிழகம்.
வீரப்பிறப்பு: 02.02.1977
வீரச்சாவு: 19.04.1996
நிகழ்வு: யாழ்ப்பாணம் தென்மராட்சி கோட்டத்தை கைப்பற்ற
மேற்கொள்ளப்பட்ட சூரியகதிர்-2
நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவு
துயிலுமில்லம்: ஈச்சங்குளம் மாவீரர் துயிலும்
இல்லத்தில் இம்மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ள
து.
______________
நிலை: வீரவேங்கை
இயக்கப் பெயர்: பத்மநாபன்
இயற்பெயர்: பி.பத்மநாபன்
ஊர்: திருச்சி, தமிழகம்.
வீரப்பிறப்பு: 27.07.1963
வீரச்சாவு: 16.03.1988
நிகழ்வு: தமிழகத்தின் திருச்சியில் எதிர்பாராத
விதமாக ஏற்பட்ட விபத்தின்போது வீரச்சாவு
________________
நிலை: வீரவேங்கை
இயக்கப் பெயர்: சுனில்
இயற்பெயர்: கதிரவன்
ஊர்: தமிழகம்.
வீரச்சாவு: 11.04.1988
நிகழ்வு: முல்லைத்தீவு ஒட்டங்குளத்தில்
இந்தியப்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு
________________
நிலை: லெப்டினன்ட்
இயக்கப் பெயர்: இனியன்(றஸ்கின்)
இயற்பெயர்: முத்தையா இராமசாமி
ஊர்: தூத்துக்குடி, கன்னியாகுமாரி, தமிழ்நாடு.
வீரப்பிறப்பு: 23.07.1962
வீரச்சாவு: 11.12.1991
நிகழ்வு: மன்னார் மருதமடு வேப்பங்குளம் பகுதியில்
சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவு
துயிலுமில்லம்: ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும்
இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள
்ளது.
______________
நிலை: 2ம் லெப்டினன்ட்
இயக்கப் பெயர்: உதயசந்திரன்
இயற்பெயர்: சேதுபாணடித்தேவர்
ராமமணி சேகரன்மகாதேவர்
ஊர்: திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு.
வீரப்பிறப்பு: 05.05.1969
வீரச்சாவு: 09.06.1992
நிகழ்வு: மன்னார் சிறுநாவற்குளத்தில்
சிறிலங்கா படையினர்
மீதான அதிரடி தாக்குதலின் போது வீரச்சாவு
__________________
பிரிவு: கடற்புலி
நிலை: கப்டன்
இயக்கப் பெயர்: ஈழவேந்தன்
இயற்பெயர்: துரைராசன் குமரேசன்
ஊர்: தமிழ்நாடு.
வீரப்பிறப்பு: 25.05.1969
வீரச்சாவு: 20.11.1992
நிகழ்வு: தமிழீழக் கடற்பரப்பில் வீரச்சாவு
துயிலுமில்லம்: எள்ளங்குளம் மாவீரர் துயிலும்
இல்லத்தில் இம்மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ள
து.
_____________
நிலை: லெப்டினன்ட்
இயக்கப் பெயர்: சச்சு
இயற்பெயர்: அன்ரனி சிறிகாந்த்
ஊர்: பியர், இந்தியா.
வீரப்பிறப்பு: 04.09.1975
வீரச்சாவு: 20.12.1992
நிகழ்வு: மன்னார் நானாட்டன் மாதிரிக்கிராமம்
படை முகாம்களுக்கிடையில் அமைந்துள்ள காவலரண்கள்
மீதான தாக்குதலின்போது வீரச்சாவு
துயிலுமில்லம்: பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும்
இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள
்ளது.
______________
நிலை: கப்டன்
இயக்கப் பெயர்: குணதேவன்(லக்ஸ்மணன்)
இயற்பெயர்: அம்மனாரி தென்னரசு
ஊர்: தமிழகம்
வீரப்பிறப்பு: 01.01.1966
வீரச்சாவு: 13.05.1996
நிகழ்வு: அம்பாறை 11ம்கொலனியில் அமைந்திருந்த
காவல்துறை நிலையம் மீதான தாக்குதலின்போது
வீரச்சாவு
_____________
நிலை: கப்டன்
இயக்கப் பெயர்: பெரியதம்பி(விஸ்ணு)
இயற்பெயர்: சிவானந்தம் முகேஸ்
ஊர்: தமிழகம்
வீரப்பிறப்பு: 31.05.1975
வீரச்சாவு: 19.05.1996
நிகழ்வு: திருகோணமலை கீலக்கடவெல படைமுகாம் மீதான
தாக்குதலில் வீரச்சாவு
துயிலுமில்லம்: மாவீரர் துயிலும் இல்லத்தில்
இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.
_____________
நிலை: கப்டன்
இயக்கப் பெயர்: குற்றாளன்
இயற்பெயர்: கந்தையா கலைச்செல்வன்
ஊர்: தமிழகம்
வீரப்பிறப்பு: 08.08.1969
வீரச்சாவு: 16.07.1996
நிகழ்வு: மன்னார் பள்ளிமுனைப்பகுதியில்
படையினரின் சுற்றிவளைப்பின் போது சயனைட்
உட்கொண்டு வீரச்சாவு
_________________
நிலை: வீரவேங்கை
இயக்கப் பெயர்: சுதா
இயற்பெயர்: வீரப்பன் இலட்சுமணன்
ஊர்: தஞ்சாவூர், தமிழ்நாடு
வீரப்பிறப்பு: 28.10.1980
வீரச்சாவு: 05.07.1999
நிகழ்வு: மன்னார் பள்ளமடு பகுதியில்
சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடிமோதலில்
வீரச்சாவு
துயிலுமில்லம்: கனகபுரம் மாவீரர் துயிலும்
இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள
்ளது.
_____________
நிலை: மேஜர்
இயக்கப் பெயர்: குருசங்கர்
இயற்பெயர்: பழனியாண்டி மகேந்திரன்
ஊர்: தமிழகம்
வீரப்பிறப்பு: 18.04.1973
வீரச்சாவு: 25.07.1996
நிகழ்வு: முல்லைத்தீவு படைத்தளம் மீதான ஓயாத அலைகள்
நடவடிக்கையின்போது விழுப்புண்ணடைந்து பண்டுவம்
பெறும்போது வீரச்சாவு
துயிலுமில்லம்: பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும்
இல்லத்தில் இம்
மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.
___________
நடிகனுக்குப் பாலூற்றும் இளைஞரைப்பற்றிப் பேசிக்
களைப்படைந்தோர் இனி இவர்களைப்பற்றிப் பேசுங்கள்.