Showing posts with label ராஜீவ் காந்தி. Show all posts
Showing posts with label ராஜீவ் காந்தி. Show all posts

Tuesday, 8 January 2019

ராஜீவ் காந்தி மரணம் பற்றி நாஸ்டிரடாமஸ்

ராஜீவ் காந்தி மரணம் பற்றி நாஸ்டிரடாமஸ்

கி.பி. 1555 ஆம் ஆண்டு புகழ்பெற்ற தீர்க்கதரிசி நாஸ்ட்ரடாமஸ் வெளியிட்ட Prophecies என்கிற புத்தகம் உலகில் நடக்கப்போகும் பல விடயங்களைப் பூடகமாகச் சொல்லும் நூலாகும்.

அதில் ஒரு பெண்மணி இரண்டாம் முறை ஆட்சிக்கு வந்து 67 வயதில் சதிகாரர்களால் கொல்லப்படுவார் என்று இந்திரா காந்தி பற்றி கூறியுள்ளார்.

அவர் கூறியவற்றில் தெள்ளத் தெளிவாக உள்ளவை சில மட்டுமே!
அவற்றில் டயானா வுக்கு அடுத்து தெளிவானது ராஜீவ் காந்தி பற்றிய பாடல்.

அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு வருமாறு,

The great pilot shall be sent for by royal mandate
(அரச ஆணையின் மீது ஒரு மாலுமி அல்லது விமானி)

to leave the fleet, and be preferred to a higher place,
(படைப்பிரிவை விட்டு விலகி, தலைமைக்கு உயர்வான்)

seven years after he shall be countermanded
(ஏழாம் ஆண்டில் கட்டளை ரத்தாகி)

a barbarian army shall put venice to fear
(காட்டுமிராண்டி படை வெனிஸ் நகரை பயத்தில் ஆழ்த்தும்)

இதில் கூறப்பட்டுள்ளபடி ராஜீவ் விமானியாக இருந்தார்.
இந்திரா காந்தியின் மரணத்திற்குப் பிறகு அவர் அரசியலுக்கு வந்தார்.

அடுத்த ஏழாவது ஆண்டில் அவர் பதவியை இழந்தார்.

ஈழத்தில் அவர் அனுப்பிய படை செய்த இனப்படுகொலைக்கு பழிவாங்க ஆயுதம் தாங்கிய படை (புலிகள் அல்லது வேறொரு ஈழ ஆயுதக் குழு) அவரைக் கொன்றது.

வெனிஸ் நகரம் என்பது இத்தாலியில்  சோனியா காந்தி பிறந்த (வெனிடோ) மாநிலத்தின் தலைநகரம் ஆகும்.

Saturday, 8 September 2018

பேரறிவாளனும் திராவிடமும்

பேரறிவாளனும் திராவிடமும்

கேள்வி: பெரியாரிய கொள்கைகளைப் பின்பற்றும் பேரறிவாளனின் விடுதலைக்கு திராவிடர் கழகம் செய்த பங்களிப்பு என்ன?

அற்புதம் அம்மாள்: அதுவொரு கொடுமை.
முதல் துரோகமே பெரியார் திடல்லதான் கெடச்சது.
பெரியார் சிலைகிட்ட இருந்துதான் என் மகன சிபிஐ கூட்டிட்டுப் போனாங்க.
ஆனா, அதப்பத்தி விடுதலை பத்திரிக்கைல ஒரு அறிக்கையோ, செய்தியோ வரல.
வந்திருந்தா, சிபிஐ நடவடிக்கை வேறுமாதிரி இருந்திருக்கும்ன்னு நான் இன்னைக்கும் நம்புறேன்.
ஏன்னா அறிவுக்காக குரல் கொடுக்க யாருமே இல்லன்னுதான் அவன் மேல நிறைய குற்றம் சுமத்துனாங்க.

கேள்வி: திமுகவாவது உங்க மகனின் விடுதலைக்கு ஏதாவது செய்ததா?

அற்புதமம்மாள்: கலைஞர் கருணாநிதி முதலமைச்சரா இருந்தப்ப நெடுமாறன் ஐயா தலைமைல ஆயிரக்கணக்கான பேர் திரண்டு ஒரு கோரிக்கை மனு வச்சோம்.
அப்ப நாலு பேருக்கு மரண தண்டனை இருந்தது. குழந்தைகள், பெண்கள்ன்னு எல்லா அமைப்புகளும் திரண்டு போனோம்.
தண்டனைக் குறைப்பு வழங்குங்க. உங்களுக்கு அதிகாரம் இருக்குன்னு கோரிக்கை மனு கொடுத்தோம்.
நளினிக்கு தண்டனைக் குறைப்பு செஞ்சாரு.
அறிவுக்கு பண்ணுவாருன்னுதான் நெடுமாறன் ஐயா உட்பட எல்லாரும் எதிர்பார்த்தோம்.
ஆனா, செய்யல.
நளினிக்கும் தண்டனைக்குறைப்பு செஞ்சாங்களே ஒழிய விடுதலை செய்யல.
அவரது ஆட்சியில செம்மொழி மாநாடு, அண்ணா பிறந்த நாள்ன்னு எத்தனையோ பேர விடுதலை செஞ்சாங்க.
அப்பகூட நளினிய விடுதலை செய்யல.

நன்றி: சீனி. மாணிக்கவாசகம்
(முகநூல் பதிவு, 31.05.16)
தீ இதழ் (மே 2016)

----------------------

கேள்வி: ஏன் அரசியல் கட்சிகள் பகிர்ந்துகொள்ளவில்லையா?

அற்புதம் அம்மாள்:
சில விஷயங்களை எல்லாம் பேச வேணாம்னு நெனைக்கிறேன்பா.
அவ்வளவு துரோகங்கள் இருக்கு அறிவு கதையில.
ரெண்டு உதாரணங்களை மட்டும் சொல்றேன்.
எந்த இயக்கத்தை எங்க உயிரா நெனைச்சோமோ, அந்தத் தி.க. என்ன பண்ணுச்சு தெரியுமா?
அறிவு கைதுசெய்யப்பட்ட உடனே, இயக்கத்துக்கும் அறிவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லைனு அறிவிச்சுச்சு.
சீக்கிரமே, பகுத்தறிவுக் கழக மாவட்டப் பொறுப்பாளரா இருந்த என்னோட கணவர் குயில்தாசனையும் ஒதுக்குச்சு.
அவசர நிலைக் காலகட்டத்துல, கலைஞர் அரசு கவிழ்க்கப்பட்டப்போ, எதிர்த்துப் போராட நிதி வசூலிச்சுக்கிட்டு, ஊரையே திரட்டிக்கிட்டுப்போய்,
“தலைவா! நாங்க இருக்கோம் உன்கூட”னு நின்ன குடும்பம் எங்களோடது.
ஆனா, அறிவு கைதுசெய்யப்பட்ட பின்னாடி இந்த 23 வருஷத்துல ஒருமுறைகூட அவரைச் சந்திக்க முடியலை.
இதையெல்லாம் குற்றச்சாட்டா சொல்லலை.
வேதனையாதான் சொல்றேன்.
இப்படி எவ்வளவோ கதைகளைச் சொல்லலாம்.
ஆனாலும், நெடுமாறன், நல்லகண்ணு, தியாகு, வைகோ, சீமான் இவங்கல்லாம் பெரிய ஆதரவைத் தந்திருக்காங்க.
எல்லாத்துக்கும் மேல இப்போ முதல்வர் அம்மா என் பிள்ளையை மீட்டுத்தர்றேன்னு சொல்லிட்டாங்களே…

தி ஹிந்து (26.02.2014)

Monday, 28 August 2017

புலிகள் ஆதரவு! தனித் தமிழ்நாடு! ராஜீவ் கொலைக்குப் பாராட்டு! - 1992ல் இராமதாசு ஐயா முன்னெடுத்த தமிழ்தேசியம்

உயர்திரு. இராமதாசு அவர்கள்,

ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதைப் பாராட்டியும்
புலிகளுக்கான ஆதரவு தெரிவித்தும்
தனித் தமிழ்நாடு பற்றியும்

இனப்பற்றுடன் வெளிப்படையாகப் பேசியபோது அதைக் கண்டித்து எழுதப்பட்ட கட்டுரை

ஏடு: செங்கோல்
நாள்: 20.09.1992
தலைப்பு:-
ராஜீவைக் கொன்றவன் என் தோழன்
தமிழகப் பிரிவினையும் கோருவோம்
பா.ம.க தலைவரின் தேசத் துரோகம்

நன்றி: சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் (முகநூல்)

Saturday, 11 June 2016

அப்பாவிகள் தண்டிக்கப்படாமல் இருக்க

அப்பாவிகள் தண்டிக்கப்படாமல் இருக்க என்ன செய்யவேண்டும்???

ஒரே வழி, அவர்கள் உண்மையிலேயே குற்றவாளிகளாக இருக்கவேண்டும்.

  ஹிந்தியா மட்டுமன்றி ஒட்டுமொத்த உலகத்தின் விதிமுறை இதுதான்.

குற்றவாளியை விட அப்பாவிதான் தண்டிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது.

( இது மிகைப்படுத்தப்பட்ட பதிவு அல்ல)

Sunday, 10 April 2016

அமைதிப்படையில் தமிழத்து வீரர்கள்

அமைதிப்படையில் தமிழத்து வீரர்கள்

♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧

இந்தியராணுவம் சம்பந்தமான என் அனுபவத்தில் ஓர் சிறிய ஆறுதலான சம்பவமும் இருக்கத்தான் செய்தது.

இந்திய அமைதிப்படையில் (?) தமிழ்நாட்டை சேர்ந்தவரும் ஒருவர் இருந்தார்.
என்ன இது தமிழ் பெண்களையும் வீதியில் கைதிகள் போல் உட்கார்த்தி வைத்திருக்கிறார்களே என்ற ஓர் ஆதங்கம் அல்லது
இந்தியராணுவத்தின் பெயர் கெடப்போகிறதே என்ற கவலை
எதுவோ ஒன்று அவரை எங்களுக்கு தன்னாலான உதவியை செய்யவேண்டும் என்று தூண்டியிருக்கலாம்.

ஒருநாள் வழக்கம் போல் வீதியில் மற்றவர்களுடன் உட்கார்த்தி வைக்கப்பட்டிருந்தேன்.
நாங்கள் மட்டுமே பெண்கள்.
இவர் தமிழர் என்று தெரிந்ததும் நான் இவரிடம் கெஞ்சுவது போல் கேட்டேன்.
எங்களை தயவு செய்து விட்டுவிடுங்கள் என்று.

இந்த தமிழ்நாட்டை சேர்ந்த சகோதரர் தலை மீது சீக்கிய சமூகத்தை சேர்ந்தவர்கள் போல் (சீக்கியரோ?) தலைப்பாகை கட்டிய, சீருடையில் ஏதோ பட்டைகள் உள்ள ஓர் அதிகாரியிடம் சென்று அவருக்கு தெரிந்த ஹிந்தி அல்லது பஞ்சாபி மொழியில் ஏதோ உரையாடிக்கொண்டிருந்தார்.

இவர் பதுங்கிப் பதுங்கிப் பேசுவதும், அவர் கண்கள் சிவக்க, உரத்த குரலில் கடித்துக் குதறுவது போல் பதில் சொல்வதும் எனக்கு ஏனோ ஓர் தர்மசங்கடத்தை இவருக்கு உண்டாகி விட்டோமோ என்று தோன்றியது.
அந்த அதிகாரியின் பேச்சும், அவர் நின்ற தோரணையும் அவ்வளவு பயத்தைக் கொடுத்தது எனக்கு.

ஒருவாறாக திரும்பி வந்தவர் சொன்னார்  “சரிம்மா, என்னோட வாங்க உங்களை உங்க வீட்ல விடுறேன்” என்றார்.

நான் ஏதோ பெரிய மேதாவி போல் முந்திக்கொண்டு “உங்களுக்கு எதுக்கு சிரமம். நாங்களே போய்க்கறோம்” என்றேன்.

அவர் திரும்பி என்னை பார்த்து சிரித்துவிட்டு சொன்னார்,
“நீங்கள் தனியே போவதை இவர்கள் பார்த்தால் மறுபடியும் பிடித்து உட்கார்த்தி வைப்பார்கள் அதனால் தான் சொல்கிறேன் என்னோடு வாருங்கள் என்று”.

அவர் சொல்வது சரியென்று தோன்றவே அவரோடு நடந்தோம்.
ஒரு இரண்டு நிமிட நடை என் வீட்டிற்கு.
அப்படி தான் ஓர் நாள் என் மனதில் தோன்றியதை இவரிடம் கேட்டேன்.
“நீங்கள் எப்படி இந்த ராணுவத்தில்….” என்று.
ஏனென்றால் என் கண்களுக்கு அவர் மிக நல்லவராகவே தோன்றினார்.
அவர் பதில் ஏதும் சொல்லவில்லை.
ஆனால், திரும்பி என்னை ஒருகணம் பார்த்துவிட்டு மறுபடியும் முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டார்.

ஐயோ அந்த முகத்தில் தெரிந்த வலியை விவரிக்க எனக்கு வார்த்தைகள் தெரியவில்லை.
அந்த முகத்தில் ஈழத்தமிழர்கள் பற்றிய ஒட்டுமொத்ததமிழ்நாட்டின் வலியைப் பார்த்தேன், உணர்ந்தேன்.

உண்மையில் ஈழத்தில் அமைதிதான் காக்கப்போகிறோம்,
ஈழத்தமிழர்களுக்கு உதவப்போகிறோம் என்று நம்பி வந்திருப்பார் போலும்.
ஆனால் நடந்தது தலைகீழாய் இருக்க,
அந்த வலி அவர் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.

பேச்சை திசை திருப்ப “உங்க பேர் என்ன”? என்றேன்.
நான் இப்படித்தான் சிலசமயம் மனதில் படுவதை படக்கென்று யாரிடமாவது கேட்டுவிடும் பழக்கம் உள்ளவள்.
அவர் பெயர் சொல்லவில்லை.
சரி எந்த ஊர் என்றாவது சொல்லுங்கள் என்றேன்.
தான் மானாமதுரையை சேர்ந்தவர் என்றார்.
ஒரு சில சமயங்களில் என் தங்கையையும் கைதியாக்கிய சந்தர்ப்பங்களில் இவர் தான் அவள் சிறுமி என்பதால் என் வீட்டிற்கு முன்னாலுள்ள சிறிய தாயார் வீட்டிற்கு போகச்சொல்லுவார்.

நானும் போகலாமா என்றால், உங்களை போக விடமாட்டார்கள் என்றார்.
சரி, எவ்வளவு தான் அவர் எனக்கு உதவ முடியும் என்று நினைத்துக்கொண்டேன்.

அந்த சகோதரர்தான் சில விடயங்களை கற்றுத்தந்தார்.
ராணுவம் வருவது தெரிந்தால் வீட்டிற்குள் இருக்காதீர்கள்.
தெருவில் வந்து நில்லுங்கள்.
வீட்டின் கதவுகளை மூடி வைத்தால் சந்தேகப்படுவார்கள் அதனால் திறந்தே வைத்திருங்கள்,
ராணுவம் ரோந்து வரும் போது முடியுமான வரைக்கும் அதிகாரியின் அருகிலேயே நில்லுங்கள் அப்படி என்றால் அவர்கள் உங்களுடன் தகாத முறையில் நடக்க பயப்படுவார்கள் என்று.

ஆனால், அவருக்கு என்ன நடந்ததோ தெரியவில்லை.
அவரை சிறிது காலத்திற்கு பின் நான் ரோந்து வந்த ராணுவத்துடன் பார்க்கவில்லை.
இந்தியராணுவம் பற்றிய நினைவு வரும்போதெல்லாம் இவரின் நினைவும் மறக்காமல் வரும் எனக்கு.
நன்றிகள் சகோதரரே.

நன்றி: www.vinavu. com/2009/12/04/eelam-rathi-8-ipkf/
_________________________
முதற்கட்டமாக ஈழத்திற்குச் சென்ற ஹிந்தியக் கொலைப்படையில் தமிழகத் தமிழர்கள் சொற்ப எண்ணிக்கையில் இருந்தனர்.
அவர்கள் ஈழத்தமிழர்களுக்கு முடிந்த அளவு உதவியதால் கோபமடைந்த ஹிந்திய தளபதிகள் தமிழர்களை திருப்பியனுப்பிவிட்டனர்.

Thursday, 10 March 2016

தனு அக்காவைப் புகழ்ந்த பாவலேறு

தனு (தாணு) அக்கா
இராஜீவைக் கொன்றதாக அறிந்தவுடன்

"ஆகுமோ உலகு அவள் அழிவிலாப் புகழுக்கே"
என்று தொடங்கும் பாடலை
'தென்மொழி' இதழில் பாவலேறு பெருஞ்சித்திரனார் எழுதினார்.

அதன் முழு வடிவம் கிடைத்தால் தந்து உதவவும்.

நன்றி.

Sunday, 20 July 2014

ஓ டயரைக் கொன்றால் போராளி, ராஜீவைக் கொன்றால் தீவிரவாதியா?

ஓ டயரை கொன்றால் போராளி
ராசீவைக் கொன்றால் குற்றவாளியா?

?????????????

1919 ஜாலியன் வாலா பாக் பஞ்சாபி சீக்கியர்
படுகொலைக்கு பழிவாங்க லண்டன்
சென்று 22ஆண்டுகள் கழித்து ஜெனரல் ஓ
டயரைச் சுட்டுக்கொன்ற உதம் சிங்
(பஞ்சாபி சீக்கியர்) இந்திய
அரசுக்கு போராளி என்றால்
அமைதிப்படை அனுப்பி ஆறாயிரம்
தமிழ்மக்களைக் கொன்று 800 தமிழ்ப்
பெண்களை வல்லுறவுக்கு உட்படுத்திய
ராசீவைக் கொன்ற தனு எங்களுக்கு போராளியே.
நன்றி: சனவரி 14 'நம்வேர்கள்'