Showing posts with label சோனியா காந்தி. Show all posts
Showing posts with label சோனியா காந்தி. Show all posts

Tuesday, 8 January 2019

ராஜீவ் காந்தி மரணம் பற்றி நாஸ்டிரடாமஸ்

ராஜீவ் காந்தி மரணம் பற்றி நாஸ்டிரடாமஸ்

கி.பி. 1555 ஆம் ஆண்டு புகழ்பெற்ற தீர்க்கதரிசி நாஸ்ட்ரடாமஸ் வெளியிட்ட Prophecies என்கிற புத்தகம் உலகில் நடக்கப்போகும் பல விடயங்களைப் பூடகமாகச் சொல்லும் நூலாகும்.

அதில் ஒரு பெண்மணி இரண்டாம் முறை ஆட்சிக்கு வந்து 67 வயதில் சதிகாரர்களால் கொல்லப்படுவார் என்று இந்திரா காந்தி பற்றி கூறியுள்ளார்.

அவர் கூறியவற்றில் தெள்ளத் தெளிவாக உள்ளவை சில மட்டுமே!
அவற்றில் டயானா வுக்கு அடுத்து தெளிவானது ராஜீவ் காந்தி பற்றிய பாடல்.

அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு வருமாறு,

The great pilot shall be sent for by royal mandate
(அரச ஆணையின் மீது ஒரு மாலுமி அல்லது விமானி)

to leave the fleet, and be preferred to a higher place,
(படைப்பிரிவை விட்டு விலகி, தலைமைக்கு உயர்வான்)

seven years after he shall be countermanded
(ஏழாம் ஆண்டில் கட்டளை ரத்தாகி)

a barbarian army shall put venice to fear
(காட்டுமிராண்டி படை வெனிஸ் நகரை பயத்தில் ஆழ்த்தும்)

இதில் கூறப்பட்டுள்ளபடி ராஜீவ் விமானியாக இருந்தார்.
இந்திரா காந்தியின் மரணத்திற்குப் பிறகு அவர் அரசியலுக்கு வந்தார்.

அடுத்த ஏழாவது ஆண்டில் அவர் பதவியை இழந்தார்.

ஈழத்தில் அவர் அனுப்பிய படை செய்த இனப்படுகொலைக்கு பழிவாங்க ஆயுதம் தாங்கிய படை (புலிகள் அல்லது வேறொரு ஈழ ஆயுதக் குழு) அவரைக் கொன்றது.

வெனிஸ் நகரம் என்பது இத்தாலியில்  சோனியா காந்தி பிறந்த (வெனிடோ) மாநிலத்தின் தலைநகரம் ஆகும்.

Monday, 14 November 2016

என்னாங்கடா மோடி சாதனை?!

என்னாங்கடா மோடி சாதனை?!

நானெல்லாம் பணமே இல்லாத நாடா தமிழர்நாடு இருக்கணும்னு கனவு கண்டவன்.

அத்தியாவசியக் கொலைகள்
vaettoli.blogspot.co.id/2015/11/blog-post_86.html?m=1

பணமில்லாத நாடு
vaettoli.blogspot.co.id/2015/10/blog-post_27.html?m=1

மோடி மண்டையன் உண்மையிலேயே கறுப்பு பணத்த ஒழிக்கணும்னு நெனச்சா ஒரே நாள்ல முடியும்.

1 - Sonia Gandhi (568000)​
2 - A Raja(7800)​
3 - Rahul Gandhi (158000)​
4 - Sharad Pawar (82000)
5 - P. Chidambaram (15040)​
6 - Digvijay Singh (28900)
7 - Ahmed Patel (9000)
8 - Jay Lalita (15000)​
9 - Harish Rawat (75000)
10 - Kapil Sibbal (28000)

விக்கிலீக்ஸ் வெளியிட்ட இந்த பத்துபேர புடிச்சு உண்மை கண்டறியும் சோதனை நடத்தி இவங்க சுவிஸ் வங்கில பணம் வச்சிருக்குறது உண்மையானு கண்டுபிடிக்கணும்.

இருக்குனா அந்த பணத்த அவங்களால மட்டும்தான் எடுக்கமுடியும்.

அதனால "ஐயா ராசா அந்த பணத்த எடுத்து நாட்டுக்கு குடுத்துருமா" னு கெஞ்சணும்.

அதுக்கு மாட்டேன்னு சொன்னா அவங்களுக்கு உள்நாட்டுல இருக்குற சொத்துகளையாவது கையகப்படுத்தணும்.
இதுல எதாவது ஒருத்தர் பணத்த நாட்டுக்கு கொடுத்தா கூட பெரிய மாற்றம் ஏற்படும்.

இதுக்கு முன்னால RBI கவன்னரா இருந்த தமிழன் ரகுராம் ராஜன் பணமுதலைகளுக்கு எதிரா உருப்படியான நடவடிக்கை எத்தனை எடுத்தான்?
அவன கழுத்த பிடிச்சு வெளிய தள்ளிட்டு இப்ப என்னடா படம் ஓட்டுறீங்க?

அத விட்டுட்டு 500, 1000 பணத்தாள ஒழிக்கிறானாம்.

எந்த பணக்காரன் பணத்தாளா கறுப்பு வைச்சிருக்கான்.

பணமா வைச்சிருந்தா மறைக்கிறது பெரும்பாடு.
வைரமாவோ, தங்கமாவோ மாத்தி வச்சிக்குவானுக.
கைச்செலவுக்கு கொஞ்சம் பணம் வச்சிருப்பான்.
அது வேணா வெளிய வரும்.

அதயும் சொந்தக்காரன் தெரிஞ்சவனுக்கு ஒரு ஒரு லட்சமா கடன் மாதிரி கொடுத்து பத்திரத்துல கையெழுத்து வாங்கிட்டு மாத்திதர சொல்லிருவான்.
அவனுகளும் கொஞ்சம் கமிசன் எடுத்துகிட்டு மாத்தி கொடுத்துருவான்.

ஆக பாதிக்கப்படப் போறது சராசரி மக்கள்தான்.

கள்ளப் பணத்தாள் அதிகம் புழங்குது.
அத தடுக்க துப்பில்லாம வேற வழியில்லாம இந்த நடவடிக்கை.

கறுப்பு பணத்துக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்னுதா புரியல.