Showing posts with label காங்கிரஸ். Show all posts
Showing posts with label காங்கிரஸ். Show all posts

Monday, 3 February 2025

அண்ணாதுரைக்கு முன்பே காங்கிரசை வென்ற ஆதித்தனார்

அண்ணாதுரைக்கு முன்பே காங்கிரசை வென்ற ஆதித்தனார்

  அண்ணாதுரைக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பே காங்கிரஸை வென்றவர் ஆதித்தனார்!
 ஆம். 1967 இல் அண்ணாதுரை கூட்டணி அமைத்து காங்கிரசை வீழ்த்தியதை பெரும் சாதனையாகத் திராவிடவாதிகள் கூறுவர்.
 ஆனால் 1952 லேயே காங்கிரஸ் 153 இடங்களில் வென்றது. காங்கிரசை எதிர்த்து கூட்டணி அமைத்து 166 இடங்களில் வென்று காட்டினார் ஆதித்தனார்.
(1937 லிருந்தே தமிழருக்குத் தனிநாடு கோரிவந்தவர் ஆதித்தனார்)
 ஆனால் அன்றைய கவர்னர் ஸ்ரீபிரகாசா கூட்டணியை ஒரே கட்சியாகக் கணக்கில் கொள்ளமுடியாது என்று கூறி காங்கிரஸ் கட்சியை ஆட்சியமைக்க அழைத்தார். 
 (இது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை ஆகும்.
சமீபத்தில் சசிகலா பெரும்பான்மை பலத்துடன் இருக்கும்போது ஆட்சியமைக்க அழைக்காமல் ஜனநாயகப் படுகொலை நடந்தது போல!)

 அப்போது ராஜாஜி ஆதித்தனாரின் 'ஐக்கிய கூட்டணி' யிலிருந்து மாணிக்கவேலர் என்பவரை பதவி ஆசை காட்டி கட்சி மாறச் செய்தார். தான் முதலமைச்சர் ஆகி ஆட்சியும் அமைத்தார்.
 அப்போது அவர் கொண்டுவந்த கல்வித் திட்டம் அன்று பெரும்பான்மை பலத்துடன் இருந்த ஆதித்தனார் கூட்டணியால்தான் தோற்கடிக்கப்பட்டது (இந்த திட்டமே குலக் கல்வித் திட்டம் என்று அவதூறு பரப்பப்பட்டது).

 1957 லும் ஆதித்தனார் கூட்டணி அமைத்து காங்கிரஸ் கட்சியை வீழ்த்த முயன்றார். ஆனால் முடியவில்லை.
 இருந்தாலும் அக்கட்சி பலவீனமடைந்தது.

 1958 இல் சுதந்திரத் தமிழ்நாடு கோரி மிகப்பெரிய மாநாடு ஒன்றை ஆதித்தனார் நடத்தினார். இதில்தான் இந்திய வரைபட எரிப்பு போராட்டம் பற்றி முடிவெடுக்கப்பட்டது. 

 1960 இல் ஈ.வே.ரா வுடன் இணைந்து (தமிழகம் நீங்கலாக) இந்திய வரைடத்தை எதிர்க்கும் போராட்டத்தை ஏற்பாடு செய்தார். ஆனால் போராட்டம் தொடங்கும் முன்பே இரு தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். ஆனாலும் மக்கள் தடையை மீறி மிகப் பெரிய அளவில் வரைபடத்தை எரித்தனர். 4000 பேர் இதற்காகக் கைது செய்யபட்டனர். மும்பை தமிழர்களும் இப்போராட்டத்தை நடத்தினர். அதிலும் சிதம்பரத்தில் வி.கே.சாமித்துரை என்பவர் மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் கைது செய்யப்பட்டது பலருக்கும் அதிர்ச்சி தந்தது. காங்கிரசு பரவலான மக்கள் எதிர்ப்பைப் பெற்றது.

 அதே 1960 இல் ஆகஸ்ட் மாதம் இந்தி திணிப்பை எதிர்த்து குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத்ததுக்கு கறுப்புக் கொடி காட்ட முயன்ற ஆதித்தனார் மற்றும் அவரது 'நாம் தமிழர்' கட்சியினர் 126 பேர் கைது செய்யப்படனர். வெளிவந்த பிறகும் அக்டோபரில் ஆதித்தனார் 'தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்' கீழ் கைது செய்யப்பட்டு தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார். மூன்று மாத சிறைவாசத்தில் 12 கிலோ உடல் எடை குறைந்து வெளிவந்தார். அப்போதும் காங்கிரஸ் மீது இளைஞர்களுக்கு பலத்த அதிருப்தி ஏற்பட்டது.

 1965 மொழிப்போரை மாணவர்கள் முன்னெடுத்தபோது ஈ.வே.ரா காங்கிரசுடன் சேர்ந்துகொண்டார். அப்போது மாணவர்களை வழிநடத்தியது அண்ணாதுரையும் ஆதித்தனாரும். அண்ணாதுரை பாதியில் விலகிக் கொள்ள நாம் தமிழர் கட்சி கடைசிவரை உறுதியாக நின்றது.

 1967 இல் அண்ணாதுரை காங்கிரஸை வீழ்த்தி ஆட்சியைப் பிடிக்க ஆதித்தனார் மிக முக்கியமான காரணம். அன்று திருநெல்வேலி காங்கிரஸ் கோட்டையாக இருந்தது. அண்ணாதுரை ஆதித்தனாரிடம் அத்தொகுதிப் பணியை ஒப்படைத்தார். 1962 இல் அதன் 19 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது. 1967 ல் ஆதித்தனார் 14 தொகுதிகளில் தி.மு.க வை வெல்லவைத்தார். 5 தொகுதிகளே காங்கிரசுக்குக் கிடைத்தது. 
தேர்தலுக்குப் பின் காங்கிரஸின் தோல்வியில் கால்வாசி பங்கு தினத்தந்தி க்குரியது என்று கூறினார் ராஜாஜி. 

 அண்ணாதுரைக்கு கிடைக்கும் புகழ் உண்மையில் ஆதித்தனாருக்குக் கிடைக்க வேண்டியது ஆகும்.
 
19.09.2022 அன்றைய பதிவு
அன்றைய தலைப்பு : திராவிடத்திற்கு முன்பே காங்கிரசை வீழ்த்திய தமிழ்தேசியம் 

Monday, 19 September 2022

திராவிடத்திற்கு முன்பே காங்கிரசை வீழ்த்திய தமிழ்தேசியம்

திராவிடத்திற்கு முன்பே காங்கிரசை வீழ்த்திய தமிழ்தேசியம் 

  அண்ணாதுரைக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பே காங்கிரஸை வென்றவர் ஆதித்தனார்!
 ஆம். 1967 இல் அண்ணாதுரை கூட்டணி அமைத்து காங்கிரசை வீழ்த்தியதை பெரும் சாதனையாகத் திராவிடவாதிகள் கூறுவர்.
 ஆனால் 1952 லேயே காங்கிரஸ் 153 இடங்களில் வென்றது. காங்கிரசை எதிர்த்து கூட்டணி அமைத்து 166 இடங்களில் வென்று காட்டினார் ஆதித்தனார்.
(1937 லிருந்தே தமிழருக்குத் தனிநாடு கோரிவந்தவர் ஆதித்தனார்)
 ஆனால் அன்றைய கவர்னர் ஸ்ரீபிரகாசா கூட்டணியை ஒரே கட்சியாகக் கணக்கில் கொள்ளமுடியாது என்று கூறி காங்கிரஸ் கட்சியை ஆட்சியமைக்க அழைத்தார். 
 (இது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை ஆகும்.
சமீபத்தில் சசிகலா பெரும்பான்மை பலத்துடன் இருக்கும்போது ஆட்சியமைக்க அழைக்காமல் ஜனநாயகப் படுகொலை நடந்தது போல!)

 அப்போது ராஜாஜி ஆதித்தனாரின் 'ஐக்கிய கூட்டணி' யிலிருந்து மாணிக்கவேலர் என்பவரை பதவி ஆசை காட்டி கட்சி மாறச் செய்தார். தான் முதலமைச்சர் ஆகி ஆட்சியும் அமைத்தார்.
 அப்போது அவர் கொண்டுவந்த கல்வித் திட்டம் அன்று பெரும்பான்மை பலத்துடன் இருந்த ஆதித்தனார் கூட்டணியால்தான் தோற்கடிக்கப்பட்டது (இந்த திட்டமே குலக் கல்வித் திட்டம் என்று அவதூறு பரப்பப்பட்டது).

 1957 லும் ஆதித்தனார் கூட்டணி அமைத்து காங்கிரஸ் கட்சியை வீழ்த்த முயன்றார். ஆனால் முடியவில்லை.
 இருந்தாலும் அக்கட்சி பலவீனமடைந்தது.

 1958 இல் சுதந்திரத் தமிழ்நாடு கோரி மிகப்பெரிய மாநாடு ஒன்றை ஆதித்தனார் நடத்தினார். இதில்தான் இந்திய வரைபட எரிப்பு போராட்டம் பற்றி முடிவெடுக்கப்பட்டது. 

 1960 இல் ஈ.வே.ரா வுடன் இணைந்து (தமிழகம் நீங்கலாக) இந்திய வரைடத்தை எதிர்க்கும் போராட்டத்தை ஏற்பாடு செய்தார். ஆனால் போராட்டம் தொடங்கும் முன்பே இரு தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். ஆனாலும் மக்கள் தடையை மீறி மிகப் பெரிய அளவில் வரைபடத்தை எரித்தனர். 4000 பேர் இதற்காகக் கைது செய்யபட்டனர். மும்பை தமிழர்களும் இப்போராட்டத்தை நடத்தினர். அதிலும் சிதம்பரத்தில் வி.கே.சாமித்துரை என்பவர் மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் கைது செய்யப்பட்டது பலருக்கும் அதிர்ச்சி தந்தது. காங்கிரசு பரவலான மக்கள் எதிர்ப்பைப் பெற்றது.

 அதே 1960 இல் ஆகஸ்ட் மாதம் இந்தி திணிப்பை எதிர்த்து குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத்ததுக்கு கறுப்புக் கொடி காட்ட முயன்ற ஆதித்தனார் மற்றும் அவரது 'நாம் தமிழர்' கட்சியினர் 126 பேர் கைது செய்யப்படனர். வெளிவந்த பிறகும் அக்டோபரில் ஆதித்தனார் 'தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்' கீழ் கைது செய்யப்பட்டு தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார். மூன்று மாத சிறைவாசத்தில் 12 கிலோ உடல் எடை குறைந்து வெளிவந்தார். அப்போதும் காங்கிரஸ் மீது இளைஞர்களுக்கு பலத்த அதிருப்தி ஏற்பட்டது.

 1965 மொழிப்போரை மாணவர்கள் முன்னெடுத்தபோது ஈ.வே.ரா காங்கிரசுடன் சேர்ந்துகொண்டார். அப்போது மாணவர்களை வழிநடத்தியது அண்ணாதுரையும் ஆதித்தனாரும். அண்ணாதுரை பாதியில் விலகிக் கொள்ள நாம் தமிழர் கட்சி கடைசிவரை உறுதியாக நின்றது.

 1967 இல் அண்ணாதுரை காங்கிரஸை வீழ்த்தி ஆட்சியைப் பிடிக்க ஆதித்தனார் மிக முக்கியமான காரணம். அன்று திருநெல்வேலி காங்கிரஸ் கோட்டையாக இருந்தது. அண்ணாதுரை ஆதித்தனாரிடம் அத்தொகுதிப் பணியை ஒப்படைத்தார். 1962 இல் அதன் 19 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது. 1967 ல் ஆதித்தனார் 14 தொகுதிகளில் தி.மு.க வை வெல்லவைத்தார். 5 தொகுதிகளே காங்கிரசுக்குக் கிடைத்தது. 
தேர்தலுக்குப் பின் காங்கிரஸின் தோல்வியில் கால்வாசி பங்கு தினத்தந்தி க்குரியது என்று கூறினார் ராஜாஜி. 

 அண்ணாதுரைக்கு கிடைக்கும் புகழ் உண்மையில் ஆதித்தனாருக்குக் கிடைக்க வேண்டியது ஆகும்.
 

Wednesday, 22 November 2017

இனி ஜட்டி  வாங்கினாலும் காட்டிக்கொடுக்கும் ஆதார்!

இனி ஜட்டி  வாங்கினாலும் காட்டிக்கொடுக்கும் ஆதார்!
பாதுகாப்பு இருக்கு ஆனா இல்ல!

(மத்திய அரசுக்கு பிடிக்காதோரின் சொத்துகளை பிடுங்க வசதியாக)   சொத்துக்களுடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயமாக்கப்பட உள்ளதாக மத்திய வீட்டு வசதித்துறை அமைச்சர் ஹர்தீப் பூரி தெரிவித்துள்ளார் (நேற்றைய பாலிமர் செய்தி).

படம்: தனிநபர் ஆதார் ரகசிய தகவல்கள் 210 அரசு வெப்சைட்டில் வெளியீடு
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தால் பெறப்பட்ட தகவல்.
(ஜியோ சிம் அரசு சார்ந்ததா என்று கேட்கக்கூடாது!)

நீதிமன்றம் ஆதார் திட்டம் தனிநபர் உரிமைக்கு எதிரானது என்று (காலம் கடந்து) அறிவித்ததை இவர்கள் கால்தூசியளவும் மதிக்கவில்லை என்பதையும் பேசக்கூடாது.

"காங்கிரஸ் கொண்டுவந்துள்ள ஆதார் தீவிரவாதிகள் ஊடுருவ வழிவகுக்கும்.
எல்லை மாநிலமான என் குஜராத் முதலில் பாதிக்கப்படும்" என்று மோடி முதலில் எதிர்த்ததையும் மறந்துவிடவேண்டும்.

ஜெய்ஹிந்தி! என்று கூறிக்கொண்டு அடங்கிக்கிடந்தால்
எல்லையில் பத்துநாளுக்கு ஒருவர் வீதம் ராணுவவீரர்கள் சாகிறார்களே அது குறையும்.

Friday, 21 July 2017

மீத்தேனை உள்ளே விட்ட எம்.ஜி.ஆர்

மீத்தேனை உள்ளே விட்ட எம்.ஜி.ஆர்
.ஃ.ஃ.ஃ.ஃ.ஃ.ஃ.ஃ..ஃ.ஃ.ஃ.ஃ.ஃ.ஃ.ஃ.ஃ.ஃ.ஃ.ஃ.ஃ.ஃ.ஃ.

தமிழகத்தில் மீத்தேன் (அதாவது ஹைட்ரோகார்பன்) கண்டறியும் ஆய்வு,
ONGC யால் முதன்முதலாக 1977 ல் எம்.ஜி.ஆர் அனுமதியுடன்  தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு,

1986 ல் முதன்முதலாக 75% மீத்தேன் கிடைக்கும் Natural gas எடுக்கும் பணி அவரது ஆட்சியிலேயே 1986 நரிமணத்தில் தொடங்கப்பட்டது.
அதே ஆண்டு களப்பாள் பகுதியிலும் தொடங்கப்பட்டது.
(இன்றுவரை நடந்தும் வருகிறது)

1996 ல் மீத்தேன்(CH4) அதாவது ஹைட்ரோகார்பன்(CH) எடுக்க மத்தியில் ஆண்ட காங்கிரஸ் தமிழக அரசுக்கு கட்டளை இடுகிறது.

அப்போதைய தமிழக முதலமைச்சர் கருணாநிதி சம்மதத்துடன்
சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த தி.மு.க கட்சியைச் சேர்ந்த ஆ.ராசா அனுமதி கொடுத்தார்.

  அதை நெடுவாசல் அமைந்துள்ள தொகுதியின் அன்றைய நாடாளுமன்ற உறுப்பினரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிதம்பரம் அங்கீகரித்தார்.

இதை அந்த பகுதி எம்.எல்.ஏ வான கம்யூனிஸ்ட் கட்சி ராஜசேகர் எதிர்க்கவில்லை, ஒத்துழைத்தார்.

தற்போது அந்த நாசகார திட்டத்தை மக்கள் எதிர்ப்பையும் மீறி மிக மூர்க்கமாக செயல்படுத்துவது அ.தி.மு.க
அதை இயக்குவது மத்திய பா.ஜ.க மோடி அரசு.
அதற்கு ஆதரவாக செயல்படுகிறது தமிழக பா.ஜ.க.
எதிர்ப்பது போல நடிப்பது தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்.

ஆக
தி.மு.க
அ.தி.மு.க
கம்யூனிஸ்ட்
பா.ஜ.க
காங்கிரஸ்

அனைவரும் இதில் கூட்டாளிகள்.

Saturday, 1 July 2017

ஆதார் - பாகிஸ்தான் ஊடுருவிகளின் அடையாளம்

ஆதார் - பாகிஸ்தான் ஊடுருவிகளின் அடையாளம்

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருச்சியில்,

"கடந்த 2 நாட்களுக்கு முன் உச்சநீதிமன்றம் மிக முக்கிய தீர்ப்பினை கூறியிருக்கிறது.
காங்கிரஸார் நடனமாடிக் கொண்டிருக்கும் ஆதார் அட்டை குறித்த தீர்ப்புதான் அது.

உச்சநீதிமன்றம் கடுமையான விமர்சனம் செய்யும் அளவுக்கு ஆதார் அட்டை சென்றது ஏன் என்பதும் குறித்தும் இதனால் பயன் அடைந்தவர்கள் யார் யார் என்பதும் குறித்தும் மத்திய அரசும், பிரதமரும் விளக்க வேண்டும்.

காரணம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே ஆதார் அட்டை குறித்து நான் கூறிய கருத்தைத்தான் கேட்ட கேள்விகளைத்தான் தற்போது உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

குஜராத், பாகிஸ்தான் எல்லையொட்டி உள்ள மாநிலம்.
இங்கு ஆதார் அட்டை போல் மத்திய அரசு ஒரு அடையாள அட்டை வழங்கினால் ஊடுருவி இருக்கும் நபர்கள் ஆதாயம் அடைவார்கள் என கூறியிருந்தேன்.
மேலும் இது குறித்து அனைத்து முதல்வர்களிடம் பேச வேண்டும் என குறிப்பிட்டேன்.
ஆனால் இதை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளவில்லை.

ஆதார் அட்டை வழங்குவது குறித்து தேசிய பாதுகாப்பு கவுன்சிலை கூட்டி விவாதிக்க வேண்டும் என்கிற எனது கோரிக்கையும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

எனது கருத்தினை பிரதமர் உள்ளிட்டோர் காதில் வாங்கி கொள்ள வில்லை.
தற்போது உச்சநீதிமன்றம் ஆதார் அட்டை குறித்து கருத்து தெரிவித்திருக்கிறது.
இந்த அடையாள அட்டைக்காக ஏழை மக்களின் வயிற்றுக்கு செல்லவேண்டிய பல ஆயிரம் கோடி பணம் வீணடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பிரதமர் விளக்க வேண்டும்"

மேற்கண்ட பேச்சு 27.09.2013 அன்று திருச்சியில் நடந்த பாஜக கூட்டத்தில் அன்றைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி (இதே மோடிதான் வேற ஆள்னு நெனச்சிரப்போறீங்க) பேசிய பேச்சு.

நன்றி: Jose Kissinger

Saturday, 16 January 2016

ஏறுதழுவுதல் தடை -யார் பார்த்த வேலை?

இனி தமிழகத்தில் ஜல்லிக்கட்டே நடக்காது
-சவால் விடும் தெலுங்கச்சி

ஜல்லிக்கட்டுக்கு வழக்கு தொடர்ந்தவர்களில் முக்கியமானவர் கர்நாடக போக்குவரத்து அமைச்சர் ராமலிங்க ரெட்டியின் மகள்

Sunday, 20 July 2014

ஓ டயரைக் கொன்றால் போராளி, ராஜீவைக் கொன்றால் தீவிரவாதியா?

ஓ டயரை கொன்றால் போராளி
ராசீவைக் கொன்றால் குற்றவாளியா?

?????????????

1919 ஜாலியன் வாலா பாக் பஞ்சாபி சீக்கியர்
படுகொலைக்கு பழிவாங்க லண்டன்
சென்று 22ஆண்டுகள் கழித்து ஜெனரல் ஓ
டயரைச் சுட்டுக்கொன்ற உதம் சிங்
(பஞ்சாபி சீக்கியர்) இந்திய
அரசுக்கு போராளி என்றால்
அமைதிப்படை அனுப்பி ஆறாயிரம்
தமிழ்மக்களைக் கொன்று 800 தமிழ்ப்
பெண்களை வல்லுறவுக்கு உட்படுத்திய
ராசீவைக் கொன்ற தனு எங்களுக்கு போராளியே.
நன்றி: சனவரி 14 'நம்வேர்கள்'