Monday, 3 February 2025
அண்ணாதுரைக்கு முன்பே காங்கிரசை வென்ற ஆதித்தனார்
Monday, 19 September 2022
திராவிடத்திற்கு முன்பே காங்கிரசை வீழ்த்திய தமிழ்தேசியம்
Wednesday, 22 November 2017
இனி ஜட்டி வாங்கினாலும் காட்டிக்கொடுக்கும் ஆதார்!
இனி ஜட்டி வாங்கினாலும் காட்டிக்கொடுக்கும் ஆதார்!
பாதுகாப்பு இருக்கு ஆனா இல்ல!
(மத்திய அரசுக்கு பிடிக்காதோரின் சொத்துகளை பிடுங்க வசதியாக) சொத்துக்களுடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயமாக்கப்பட உள்ளதாக மத்திய வீட்டு வசதித்துறை அமைச்சர் ஹர்தீப் பூரி தெரிவித்துள்ளார் (நேற்றைய பாலிமர் செய்தி).
படம்: தனிநபர் ஆதார் ரகசிய தகவல்கள் 210 அரசு வெப்சைட்டில் வெளியீடு
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தால் பெறப்பட்ட தகவல்.
(ஜியோ சிம் அரசு சார்ந்ததா என்று கேட்கக்கூடாது!)
நீதிமன்றம் ஆதார் திட்டம் தனிநபர் உரிமைக்கு எதிரானது என்று (காலம் கடந்து) அறிவித்ததை இவர்கள் கால்தூசியளவும் மதிக்கவில்லை என்பதையும் பேசக்கூடாது.
"காங்கிரஸ் கொண்டுவந்துள்ள ஆதார் தீவிரவாதிகள் ஊடுருவ வழிவகுக்கும்.
எல்லை மாநிலமான என் குஜராத் முதலில் பாதிக்கப்படும்" என்று மோடி முதலில் எதிர்த்ததையும் மறந்துவிடவேண்டும்.
ஜெய்ஹிந்தி! என்று கூறிக்கொண்டு அடங்கிக்கிடந்தால்
எல்லையில் பத்துநாளுக்கு ஒருவர் வீதம் ராணுவவீரர்கள் சாகிறார்களே அது குறையும்.
Friday, 21 July 2017
மீத்தேனை உள்ளே விட்ட எம்.ஜி.ஆர்
மீத்தேனை உள்ளே விட்ட எம்.ஜி.ஆர்
.ஃ.ஃ.ஃ.ஃ.ஃ.ஃ.ஃ..ஃ.ஃ.ஃ.ஃ.ஃ.ஃ.ஃ.ஃ.ஃ.ஃ.ஃ.ஃ.ஃ.ஃ.
தமிழகத்தில் மீத்தேன் (அதாவது ஹைட்ரோகார்பன்) கண்டறியும் ஆய்வு,
ONGC யால் முதன்முதலாக 1977 ல் எம்.ஜி.ஆர் அனுமதியுடன் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு,
1986 ல் முதன்முதலாக 75% மீத்தேன் கிடைக்கும் Natural gas எடுக்கும் பணி அவரது ஆட்சியிலேயே 1986 நரிமணத்தில் தொடங்கப்பட்டது.
அதே ஆண்டு களப்பாள் பகுதியிலும் தொடங்கப்பட்டது.
(இன்றுவரை நடந்தும் வருகிறது)
1996 ல் மீத்தேன்(CH4) அதாவது ஹைட்ரோகார்பன்(CH) எடுக்க மத்தியில் ஆண்ட காங்கிரஸ் தமிழக அரசுக்கு கட்டளை இடுகிறது.
அப்போதைய தமிழக முதலமைச்சர் கருணாநிதி சம்மதத்துடன்
சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த தி.மு.க கட்சியைச் சேர்ந்த ஆ.ராசா அனுமதி கொடுத்தார்.
அதை நெடுவாசல் அமைந்துள்ள தொகுதியின் அன்றைய நாடாளுமன்ற உறுப்பினரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிதம்பரம் அங்கீகரித்தார்.
இதை அந்த பகுதி எம்.எல்.ஏ வான கம்யூனிஸ்ட் கட்சி ராஜசேகர் எதிர்க்கவில்லை, ஒத்துழைத்தார்.
தற்போது அந்த நாசகார திட்டத்தை மக்கள் எதிர்ப்பையும் மீறி மிக மூர்க்கமாக செயல்படுத்துவது அ.தி.மு.க
அதை இயக்குவது மத்திய பா.ஜ.க மோடி அரசு.
அதற்கு ஆதரவாக செயல்படுகிறது தமிழக பா.ஜ.க.
எதிர்ப்பது போல நடிப்பது தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்.
ஆக
தி.மு.க
அ.தி.மு.க
கம்யூனிஸ்ட்
பா.ஜ.க
காங்கிரஸ்
அனைவரும் இதில் கூட்டாளிகள்.
Saturday, 1 July 2017
ஆதார் - பாகிஸ்தான் ஊடுருவிகளின் அடையாளம்
ஆதார் - பாகிஸ்தான் ஊடுருவிகளின் அடையாளம்
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருச்சியில்,
"கடந்த 2 நாட்களுக்கு முன் உச்சநீதிமன்றம் மிக முக்கிய தீர்ப்பினை கூறியிருக்கிறது.
காங்கிரஸார் நடனமாடிக் கொண்டிருக்கும் ஆதார் அட்டை குறித்த தீர்ப்புதான் அது.
உச்சநீதிமன்றம் கடுமையான விமர்சனம் செய்யும் அளவுக்கு ஆதார் அட்டை சென்றது ஏன் என்பதும் குறித்தும் இதனால் பயன் அடைந்தவர்கள் யார் யார் என்பதும் குறித்தும் மத்திய அரசும், பிரதமரும் விளக்க வேண்டும்.
காரணம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே ஆதார் அட்டை குறித்து நான் கூறிய கருத்தைத்தான் கேட்ட கேள்விகளைத்தான் தற்போது உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
குஜராத், பாகிஸ்தான் எல்லையொட்டி உள்ள மாநிலம்.
இங்கு ஆதார் அட்டை போல் மத்திய அரசு ஒரு அடையாள அட்டை வழங்கினால் ஊடுருவி இருக்கும் நபர்கள் ஆதாயம் அடைவார்கள் என கூறியிருந்தேன்.
மேலும் இது குறித்து அனைத்து முதல்வர்களிடம் பேச வேண்டும் என குறிப்பிட்டேன்.
ஆனால் இதை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளவில்லை.
ஆதார் அட்டை வழங்குவது குறித்து தேசிய பாதுகாப்பு கவுன்சிலை கூட்டி விவாதிக்க வேண்டும் என்கிற எனது கோரிக்கையும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
எனது கருத்தினை பிரதமர் உள்ளிட்டோர் காதில் வாங்கி கொள்ள வில்லை.
தற்போது உச்சநீதிமன்றம் ஆதார் அட்டை குறித்து கருத்து தெரிவித்திருக்கிறது.
இந்த அடையாள அட்டைக்காக ஏழை மக்களின் வயிற்றுக்கு செல்லவேண்டிய பல ஆயிரம் கோடி பணம் வீணடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பிரதமர் விளக்க வேண்டும்"
மேற்கண்ட பேச்சு 27.09.2013 அன்று திருச்சியில் நடந்த பாஜக கூட்டத்தில் அன்றைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி (இதே மோடிதான் வேற ஆள்னு நெனச்சிரப்போறீங்க) பேசிய பேச்சு.
நன்றி: Jose Kissinger
Saturday, 16 January 2016
ஏறுதழுவுதல் தடை -யார் பார்த்த வேலை?
இனி தமிழகத்தில் ஜல்லிக்கட்டே நடக்காது
-சவால் விடும் தெலுங்கச்சி
ஜல்லிக்கட்டுக்கு வழக்கு தொடர்ந்தவர்களில் முக்கியமானவர் கர்நாடக போக்குவரத்து அமைச்சர் ராமலிங்க ரெட்டியின் மகள்
Sunday, 20 July 2014
ஓ டயரைக் கொன்றால் போராளி, ராஜீவைக் கொன்றால் தீவிரவாதியா?
ஓ டயரை கொன்றால் போராளி
ராசீவைக் கொன்றால் குற்றவாளியா?
?????????????
1919 ஜாலியன் வாலா பாக் பஞ்சாபி சீக்கியர்
படுகொலைக்கு பழிவாங்க லண்டன்
சென்று 22ஆண்டுகள் கழித்து ஜெனரல் ஓ
டயரைச் சுட்டுக்கொன்ற உதம் சிங்
(பஞ்சாபி சீக்கியர்) இந்திய
அரசுக்கு போராளி என்றால்
அமைதிப்படை அனுப்பி ஆறாயிரம்
தமிழ்மக்களைக் கொன்று 800 தமிழ்ப்
பெண்களை வல்லுறவுக்கு உட்படுத்திய
ராசீவைக் கொன்ற தனு எங்களுக்கு போராளியே.
நன்றி: சனவரி 14 'நம்வேர்கள்'