Showing posts with label மீத்தேன். Show all posts
Showing posts with label மீத்தேன். Show all posts

Saturday, 17 March 2018

பாலைவனமாகும் 36 விவசாய கிராமங்கள் - இது ஆரம்பம்தான்

பாலைவனமாகும் 36 விவசாய கிராமங்கள் 

- இது ஆரம்பம்தான்


இப்பட்டியலில் உங்கள் ஊர் இருக்கிறதா பாருங்கள்.

 

 அப்படி இருந்தால் குடும்பத்தோடு ஊரை காலி செய்ய தயாராகுங்கள் தமிழர்களே...!

 

 எல்லா அழிக்கப்பட்டு நீரின்றி நோய்வாய்ப்பட்டு கேவலமாக சாவதை விட இப்பொழுதே குடும்பத்துடன் வெளியேறிவிடுங்கள்.


தன் உரிமைக்காக போராடாத ஒரு இனம் அழிந்து போகட்டும்.


 தமிழகத்தில்  ஹைட்டரோ கார்பன் மற்றும் மீத்தேன் எடுக்க அடிமை மாநில அரசால் தாரைவார்க்கப்பட்டு பாலைவனமாக்கப்பட போகும் இடங்கள்!


1). கருவேப்பிலைக்குறிச்சிக்கும் விருத்தாச்சலத்திற்கும் இடையில் உள்ள 

- கண்ணூர்.


2). புவனகிரிக்கும் கீரப்பாளையத்திற்கும் இடையில் உள்ள 

- கிளியனுர்


3). புவனகிரிக்கும் விருத்தாச்சலத்திற்கும் இடையில் உள்ள 

- எரம்பூர்


4). புவனகிரிக்கும் விருத்தாச்சலத்திற்கும் இடையில் உள்ள, மனவெளி அருகிலுள்ள 

- பூதராயன்பேட்டை


5). புவனகிரியில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஊர் பேரு தெரியாத இடம்..


6). சிதம்பரத்திற்கும் காட்டுமன்னார்கோவிலுக்கும் இடையிலுள்ள தாவரத்தாம்பட்டு அருகிலுள்ள 

- மெய்யத்தூர்


7). சிதம்பரத்திற்கும் காட்டுமன்னார்கோவிலுக்கும் இடையிலுள்ள டி.நெடுஞ்சேரி அருகிலுள்ள 

- நெய்வாசல்


8). சிதம்பரத்திற்கும் காட்டுமன்னார்கோவிலுக்கும் இடையிலுள்ள டி.நெடுஞ்சேரி அருகிலுள்ள 

- பூர்த்தங்குடி


9). கருவேப்பிலைக்குறிச்சிக்கும் விருத்தாச்சலத்திற்கும் இடையில் உள்ள 

- வடக்குபாளையம்


10). கருவேப்பிலைக்குறிச்சிக்கும் விருத்தாச்சலத்திற்கும் இடையில் உள்ள 

- பாளையம்கோட்டை


11). ஆண்டிமடம் காடுவெட்டி இடையில் உள்ள

- கோவில்வழக்கை


12). ஆண்டிமடம் அருகிலுள்ள

- கூவத்தூர், அக்னீஷபுரம்


13). ஜெயங்கொண்டம் ஆண்டிமடம் இடையிலுள்ள 

- கீழக்குடியிருப்பு


14). ஜெயங்கொண்டம் சிறுகொளத்தூர் இடையிலுள்ள 

- தேவனூர்


15). ஜெயங்கொண்டம் உடையார்பாளையம் இடையில் உள்ள 

- சூரியமணல்


16). மயிலாடுதுறை சேந்தன்குடி இடையிலுள்ள 

- மண்ணம்பந்தல்


17). மயிலாடுதுறை நெய்வாசல் இடையிலுள்ள 

- பண்டூர், மகாராஜபுரம்


18). கும்பகோணம் நெடுங்கொல்லை அருகிலுள்ள 

- கடமங்குடி, பரவனூர்


19). திருப்பனந்தாள் திருமங்கலக்குடி இடையிலுள்ள

- சூரியமூலை


20). கதிரமங்கலம் பந்தநல்லூர் இடையிலுள்ள 

- முள்ளுக்குடி


21). மயிலாடுதுறை குத்தாலம் அருகிலுள்ள 

- அரையபுரம், கோமல்


22). மயிலாடுதுறை மண்டாரவாடை மாப்படுகை அருகிலுள்ள 

- பொன்னுர்


23). மயிலாடுதுறை ஆனதாண்டவபுரம் அருகிலுள்ள 

- சேந்தன்குடி


24). தரங்கம்பாடி பொறையார் திருக்களாச்சேரி அருகிலுள்ள

- ஈச்சங்குடி, நரசிங்கநாதம்


25). கும்பகோணம் காரைக்கால் இடையிலுள்ள 

- எழுமகளூர், எ.கிளியனூர்


26). மயிலாடுதுறை திருவாரூர் இடையிலுள்ள 

- தேவூர், கீரனூர்


27). திருப்பனந்தாள் அருகிலுள்ள

- திருலோக்கி


28). சேத்தியாத்தோப்பு சோழதரம் அருகிலுள்ள 

- நந்தீஸ்வரமங்கலம்


29). குறிஞ்சிப்பாடி நெல்லிக்குப்பம் அருகிலுள்ள 

- பச்சாரபாளயம்


30). புவனகிரி, நெடுஞ்சேரி அருகிலுள்ள - கீழநத்தம்


31). காட்டுமன்னார்குடி அய்யன்குடி அருகிலுள்ள 

- குச்சூர்


32). காட்டுமன்னார்குடி முத்தம் அருகிலுள்ள 

- ஆச்சாள்புரம்


33). கங்கைகொண்டசோழபுரம் பாப்பாக்குடி இடையில் 

- ஊருபேரு தெரியாத இடம்


34). ஆடுதுறை மங்கநல்லூர் இடையிலுள 

- கஞ்சுவோய், மாம்புலி


35). மயிலாடுதுறை குத்தாலம் அருகிலுள்ள 

- சென்னியநல்லூர்


36). கும்பகோணம் திருமங்கலக்குடி அருகிலுள்ள 

- வேப்பத்தூர்...


(பட்டியலுக்கு நன்றி: Veera VK)


மேற்கண்ட அனைத்தும் விவசாய கிராமங்கள்.

 இங்கே கூறப்பட்டது காவிரி டெல்டா மட்டும்தான்.

 இதற்கு வடக்கே மரக்காணம் முதல் வேளாங்கண்ணி வரை ஐட்ரோ கார்பன் எடுக்க ஒற்றை உரிமை அடிப்படையில் அனுமதி தரப்பட்டுவிட்டது.


 இனி மீத்தேன், ஹைட்ரோகார்பன், ஷேல் எண்ணெய், ஷேல் எரிவாயு உள்ளிட்ட எவற்றையும் எடுப்பதற்கு ஒரே ஒரு முறை அனுமதி வாங்கினால் போதுமானது. 

 அதுவும் பத்தே நாளில் கிடைத்துவிடும்.


 மாசுக் கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதிகூட தேவையில்லை.


இந்த திட்டத்திற்கு பேர்தான் # ஹெல்ப் # HELP


 100 விழுக்காடு நேரடி அந்நிய முதலீட்டில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளால் அரங்கேற இருக்கும் இத்திட்டத்தில்

 முதன்முதலாக வெளிநாட்டு நிறுவனங்கள் உள்நாட்டு கான்டராக்ட் தரகர்கள் இன்றி நேரடியாக நம் தாய் நிலத்தில் கால் பதிக்கும் வகையில் மத்திய அரசு தாரை வார்த்து விட்டது.


அதாவது முற்றாக அழிக்கப்படவுள்ள காவிரிப் படுகை.


 பல ஆயிரம் ஆண்டுகள் நமக்கு சோறுபோட்ட பூமி.

 பூமித்தாயின் பாலூட்டும் மார்பு.

அதை அறுத்து ரத்தத்தை உறிஞ்சப் போகிறார்கள்.


என்ன செய்யப்போகிறோம் நாம்?



Thursday, 2 November 2017

சாகர்மாலா எனும் சவமாலை

சாகர்மாலா எனும் சவமாலை

சாகர்மாலா திட்டம் அதாவது கடல்மாலைத் திட்டம் எனும் நாசகார திட்டம் இந்திய ஒன்றித்திலேயே மிகப்பெரிய செலவில் வரவுள்ள திட்டமாகும்.
அதூவது 8 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
(அதாவது ஒவ்வொரு இந்தியக் குடிமகனிடம் இருந்தும் ரூ.6400 இந்த திட்டத்திற்கு போகிறது).

இது 2003 ல் வாஜ்பாய் பா.ஜ.க அரசால் பெரிதாக வெளியே தெரியாமல் தொடங்கப்பட்டு மன்மோகன் காங்கிரஸ் அரசால் மறைமுகமாக நடைமுறைப்படுத்தப்பட்டு இன்று பா.ஜ.க அரசால் முக்கிய கட்டத்திற்கு வந்துள்ளது.
இத்திட்டத்திற்கு மேற்கண்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்திருந்த அத்தனை கட்சிகளும் உடந்தை.

- - - - - - -
சுருக்கமாக:-

இந்திய ஒன்றியத்தின் கடற்கரை ஒட்டி பல வளங்கள் உள்ளன.
*அவற்றை தொழிற்சாலை அமைத்து சுரண்டுவார்கள்.

*வெளிநாட்டிற்கு விற்க வசதியாக கடற்கரை வரை சாலைபோடுவார்கள்

*கப்பலேற்ற வசதியாக புதிய துறைமுகங்கள் கட்டுவார்கள்

*அந்த துறைமுகங்களுக்கு மக்களிடமிருந்து பாதுகாப்பு கொடுக்க வசதியாக ராணுவ முகாம்கள் ஏற்படுத்தி அம்முகாம்களை அகலமான கடற்கரை சாலைகள் அமைத்து இணைப்பர் மற்றும் தீவுகளில் ராணுவ தளங்களை அமைப்பார்கள்.

(இவ்வாறு அனைத்து வளங்களையும் கப்பலேற்றி அனுப்பவுள்ளனர்.
ஆனால் கூறுவதோ இந்தியாவின் பழைமையான கடல்வணிகத்தை மறுபடி கொண்டுவருகிறோம் என்று.
அதாவது தமிழர்களின் கடல்வழி வணிகத்தை இவர்கள் இந்தியாவின் பெயரில் போட்டுக் கொள்கின்றனர்.

மேற்கண்ட எல்லாமே மத்திய அரசு பணத்தை கார்ப்பரேட் முதலாளிகளிடம் கொடுக்க அவர்கள் கான்ட்ராக்டர்கள் மூலம் செய்வார்கள்.
இதனால் வரும் லாபம் மொத்தமும் அவர்களுக்கே!
மக்களுக்கு நட்டம் மட்டுமே!)

* 12 பிரம்மாண்ட துறைமுகங்களும் 200 சிறிய துறைமுகங்களும் கட்டவுள்ளனர்.

* 1208 தீவுகளை தனியாரிடம் ஒப்படைக்க உள்ளனர்

* 7500 கி.மீ நீளமுள்ள கடற்கரை சாலை போடவுள்ளனர்

* 1450 கடல்வழி பாதைகளும் 76 ரயில்வழி பாதைகளும் 101 ஆற்றுவழி பாதைகளும் போடவுள்ளனர்

* 12 ஸ்மார்ட் சிட்டிகள் அமைக்கவுள்ளனர்.
(அதாவது பூர்வகுடிகளை வெளியேற்றிவிட்டு வடயிந்தியரை அனைத்து வசதிகளுடன் குடியேற்றுதல்)

- - - - - - - - -
இந்த திட்டம் 4 தலைப்புகளில் பிரிக்கப்பட்டுள்ளது.

1) துறைமுக நவீனப்படுத்தல் :-

இந்திய கடற்கரை 14 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டும்.
அதில் 3 தமிழக கடற்கரையை முற்றாக விழுங்கியபடி உள்ளன.
முதலில் இந்த பகுதி மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு மாற்றப்படும்.
அதில் தமிழக அரசு எந்த தலையீடும் செய்யமுடியாது.
(ஏற்கனவே எல்லைப் பகுதிகளை மலையாளி, தெலுங்கர், கன்னடர் விழுங்கிவிட்டனர்.
தற்போது கடற்கரையை ஹிந்தியர் விழுங்கவுள்ளனர்)

பிறகு இந்த நிலங்கள் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கொடுக்கப்படும்.
(இங்கே புரோக்கர் வேலையை மட்டுமே அரசாங்கம் செய்கிறது)

பிறகு மீனவ மக்களின் குடியிருப்புகளைக் காலிசெய்து  அவர்களை வெளியேற்றுவர்.
(ஏற்கனவே 30 கிராமங்களை வெளியேற்றிவிட்டனர்)

பிறகு துறைமுகம் கட்டுதல், சாலை போடுதல், கடலை ஆழமாக்கல், திட்டத் தொழிலாளர் குடியிருப்பு அமைத்தல் போன்றவை நடக்கும்.
- - - - - - - -

2) துறைமுக இணைப்பு :-

துறைமுகங்களுக்கு சுரண்டிய வளங்களை கொண்டுவர வசதியாக ரயில், சாலை, ஆறு, பைப்லைன் ஆகியன போடப்படும்.

கடற்கரையை ஒட்டி 60 முதல் 200 மீட்டர் அகலமுள்ள சாலைகள் போடப்படும்.
இது சாதாரண சாலைகளாக இருக்காது.
இராணுவ டாங்கிகள் நகர்வதற்கென்றே உறுதியான அகலமான சாலைகள் போடப்படும்.  இதுபோக ஆங்காங்கே ராணுவ விமானங்கள் இறங்கும் தளங்களும் அமைக்கப்படும்.
இதற்கான அனுமதியை முதலில் முந்திக்கொண்டு கொடுத்துவிட்டது தமிழக அரசு.
(இங்கே செக்யூரிட்டி வேலை மட்டுமே அரசு பார்க்கிறது)
- - - - - - -

3) துறைமுகங்களை தொழிற்சாலை மயமாக்கல்

ஏற்கனவே இருக்கும் துறைமுகங்களை நன்கு நவீனப்படுத்தி விரிவாக்குவர்.
அதில் தொழிற்சாலைகளும் கட்டுவர்.

இதன்மூலம் அதானி உள்ளிட்ட பணமுதலைகள் ஆஸ்திரேலியாவில் தோண்டி எடுக்கும் நிலக்கரியை சிரமமில்லாமல் இறக்குமதி செய்யும்.
( இதிலும் ஒரு கொடுமையான நகைச்சுவை உண்டு.
ஒரு டன் நிலக்கரியை ஆஸ்திரேலியாவிடம் அரச நிறுவனமான கோல் இந்தியா  ரூ.25,000 கொடுத்து வாங்கி அதை ரூ.2,500 க்கு கார்ப்பரேட்களுக்கு கொடுக்கும்.
இத்தனைக்கும் ஆஸ்திரேலியாவிடம் பணம் வாங்கிக்கொண்டு நிலக்கரியை வெட்டி எடுத்து அனுப்புவது இதே கார்ப்பரேட்கள்தான்.
அதாவது அரசாங்கம் இங்கே டிரைவர் வேலை மட்டும் பார்க்கிறது.
இந்த வெட்டியெடுக்கும் கான்ட்ராக்ட்டை  ஆஸ்திரேலியாவிடம் பேசி அதானிக்கு வாங்கித்தரத்தான் மோடி ஆஸ்திரேலியாவே போனார்.
இதற்கே வாய்பிளந்தால் எப்படி?
ஏற்கனவே 'நிலக்கரி மூலம் மின் உற்பத்தி செய்து தாருங்கள்' என பத்தாண்டுகள் முன்பே டாடா மற்றும் அம்பானிக்கு 45,000 கோடி சென்ட்ரல் வங்கியில் கடன் வாங்கி கொடுத்துள்ளது மத்திய அரசு.
அவர்கள் 'நிலக்கரி தாருங்கள் ஆரம்பிக்கிறோம்' என்று இன்றுவரை வேலையைத் தொடங்கவில்லை)

இப்போதே அதானியிடம் 11 பெரிய துறைமுகங்கள் உள்ளன.
இத்திட்டம் மேலும் 6 துறைமுகங்களை வழங்கும்
(இதில் ஒன்று தமிழகத்தில் வரும்)

இறக்குமதி அதானி என்றால் ஏற்றுமதி கார்ப்பரேட் சாமியாரான பாபா ராம்தேவ்.
ஒரு சைக்கிளில் வாழ்க்கையை ஆரம்பித்த சாமியார் ஹிந்துத்வா சக்தி மூலம் இன்று இந்திய ஒன்றியத்தின் மூன்றில் ஒரு பங்கு உணவுச் சந்தையை கட்டுப்படுத்தும் அளவு வளர்ந்துவிட்டார்.
இவர் முக்கியமாக உணவுப் பொருள் மற்றும் சித்த மருத்துவ பொருட்களை ஏற்றுமதி செய்து இன்னொரு அதானி  ஆகவுள்ளார்.

தமிழகத்தில் முதலில் விவசாய நிலங்களை அழித்து மீத்தேன் அதாவது ஹைட்ரோகார்பன் எடுத்து விற்பார்கள்.
இந்த மீத்தேன்தானே அதற்கு கீழே இருக்கும் நிலக்கரியை எடுக்க தடையாக இருக்கிறது?
எனவே வேகவேகமாக மீத்தேன் எடுத்தபிறகு மண்ணையெல்லாம் தோண்டி நிலக்கரி, பெட்ரோல் என எல்லாவற்றையும் எடுத்து விற்பார்கள்.
இதுபோக மலைகளை வெட்டி கிரானைட், மணலை அள்ளி தாது,  பாலாற்றை நாசமாக்கிய தோல் தொழிற்சாலை உற்பத்தி, நொய்யல் ஆற்றை நாசமாக்கிய துணி உற்பத்தி, சிமெண்ட் உற்பத்தி, மற்றும் இறைச்சி மீன்வகைகளை பதப்படுத்தி உற்பத்தி என தமிழகத்தையே மொட்டையடிக்க உள்ளனர்.
- - - - - -

4) கடலோர சமூக மேம்பாடு :-

பெரும்பாலும் கடல்சார் தொழிலைச் செய்யும் கடலோர மக்களை தொழில்செய்யவிடாமல் கெடுத்து படிப்படியாக இவர்களை காலி செய்து அகதியாக அலையவிட்டுவிட்டு அந்த இடத்தில் இந்த திட்டத்தோடு தொடர்புடையோர் குடியமர்த்தப்படுவர்.
அதாவது ராணுவ முகாம், ராணுவ குடியிருப்பு, எஞ்சினியர் மற்றும் பணியாளர்களுக்கான குடியிருப்பு.
இவைகளே ஸ்மார்ட் சிட்டி என்று வசதியான குடியேற்றம்.
இதுபோக லேபர் காலணி, அதற்கான கடைகள், கட்டடங்கள், விடுதிகள் என கடற்கரை முழுக்க பல இனங்களைச் சேர்ந்த கார்ப்பரேட் சமூகம் குடியேற்றப்படும்.
இதுதான் இவர்கள் கூறும் டெவலப்மெண்ட்.

அதாவது இந்திய கடற்கரையை ஒட்டி மீனவ கிராமங்களுடன் ஏறத்தாழ 3600 ஊர்கள் மற்றும் நகரங்கள் உள்ளன.
கடலோரம் 25 கோடி மக்கள் வாழ்கின்றனர்.
இவர்களை ஒழித்துவிட்டு
1 கோடி பேருக்கு வேலை தருவார்களாம்.
அதிலும் 10% வரையான வேலைவாய்ப்பு நிரந்தர வேலையாக இருக்கலாம்.
மற்றபடி அனைத்து வேலைகளும் கான்ட்ராக்ட் முறைப்படிதான்.
அதிலும் பெரும்பாலும் எடுபிடி வேலைகள்.
இதுதான் இவர்கள் கூறும் வேலை வாய்ப்பு.

ஏற்கனவே 30 கிராமங்களை காலி செய்துவிட்டனர்.
நல்லதண்ணி குப்பம் சமீபத்தில் போலீசை விட்டு அடித்து நொறுக்கப்பட்டு காலிசெய்யப்பட்டது.
மாற்றுநிலம் மாற்றுத்தொழில் என எதுவும் வழங்கப்படவில்லை.

200 வீடுகள், பள்ளி, கோவில், வாக்குச்சாவடி கொண்ட தனுஷ்கோடி வாழத்தகுதியற்ற இடம் என்று அறிவித்தது இதனால்தான்.

கடற்கரை அருகே பழமையான ஒரு கோவிலைக்கூட இடித்துள்ளனர்.
தமிழரது பழமைக்கான அகழ்வாராய்ச்சி தளங்கள் கடற்கரையை ஒட்டி உள்ளன.
அவை அனைத்தும் அழிக்கப்படும்.

தீவுகள் தனியாருக்கு சொந்தமாகும்.
தனியாருக்கு பாதுகாப்பாக கடற்படை ராணுவ தளங்களும் அமைக்கப்படும்.
(இங்கே ஒரு ரவுடியின் வேலையை மட்டும் அரசாங்கம் செய்கிறது)

- - - - - -

சாகர் மாலா எனும் இந்த திட்டம் மக்களை மண்ணோடு சேர்த்து அழிக்க போடப்படும் ஒரு சவமாலை.

இந்தியாவில் தனி ஹெலிகாப்டர் வைத்திருக்கும் சில கார்ப்பரேட் முதலாளிகள், பத்து தலைமுறை ஆனாலும் செலவு செய்யமுடியாத பணமாக பூட்டிவைக்கப்பட உள்ளது இந்த அத்தனை கொடூரங்களின் லாபமும்.

இந்த தாய்த் திட்டத்தின் கீழ் 126 துணைத் திட்டங்கள் உள்ளன.
அவையே கதிராமங்கலம், நெடுவாசல் ஆகிய திட்டங்கள்.

இந்த திட்டம் சுற்றுசூழலுக்கு முற்றிலும் எதிரான திட்டம்.
எந்த திட்டமாக இருந்தாலும் சுற்றுசூழல் மாசடையாமல் எப்படி கையாள்வது என்று தலைப்பு பெயருக்காவது இருக்கும்.
இதில் சுற்றுசூழல் எனும் வார்த்தையே வரவில்லை.
இத்திட்டத்திற்கு எந்த சுற்றுசூழல் அனுமதியும் வாங்கப்படவில்லை.
வாங்கவும் படாது.

மோடி நியமித்த சுற்றுச்சூழல் அமைச்சர் பதவியேற்றவுடன் செய்த முதல்வேலை 'தொழிற்துறை வளர்ச்சிக்கு சுற்றுச்சூழல் துறை தடையாக இருக்காது' என்றும்
'தொழில் வளர்ச்சிக்கு விரைவாக சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்படும்' என்றும் அறிவித்து
எந்த திட்டத்திற்கும் முதல் அவசியமான சுற்றுச்சூழல் மதிப்பீடு ஆய்வு தேவையில்லாயல் ஆக்கப்பட்டதுதான்.
சாகர்மாலா காற்றை மாசாக்கும், விளைநிலத்தை சாக்கடையாக்கும், நிலத்தை சுடுகாடாக்கும், மழையைத் தடுக்கும், கடலை மாசாக்கும், நிலத்தடி நீரை கெடுக்கும், உணவு உற்பத்தியை பாதிக்கும், இனப்படுகொலை நடத்தும், மழைப்பொழிவைத் தடுக்கும், பஞ்சம் வரவைக்கும்
கடைசியாக மனிதர் மட்டுமன்றி பல லட்சம் உயிர்களைக் கொல்லும்.
பூமியில் ஒரு பகுதியையே நாசமாக்கும்.

எண்ணூர் பக்கம் கடலில் எண்ணெய் கொட்டியபோதே வாளியால் அள்ளிக்கொண்டிருந்த லட்சணத்தில் எதை நம்பி நாம் சாகர்மாலா போன்ற நாசகார திட்டங்களுக்கு இடம் கொடுப்பது?

இதை நாம் வருமுன் தடுக்கவேண்டும்.
வரும்பொழுது தடுக்கலாம் என்று நினைக்கவேண்டாம்.
ஆரம்பகட்ட வேலைகள் தொடங்கிவிட்டன.
இன்னும் கொஞ்சநாட்களில் ஹிந்தியாவின் இராணுவ டாங்கிகள் வர ஆரம்பிக்கும்.
அதன்பிறகு நாம் ஒன்றும் செய்யமுடியாது.

பூமித்தாய்க்கு எதிரான இந்த திட்டத்திற்கு நாம் உடன்பட்டால் நம்மைப் போன்ற ஒரு துரோகி யாருமில்லை.

முடிந்த அளவு ஊடகங்களால் மறைக்கப்பட்டு மெல்ல மெல்ல நடந்துவரும் இந்த திட்டம் பற்றி வேறு எந்த இனத்தவருக்கும் விழிப்புணர்வு இல்லை.

தமிழர்களுக்கு மட்டுமே ஓரளவு விழிப்புணர்வு உள்ளது.
இதை தடுக்க நாம்தான் களத்தில் இறங்கவேண்டும்.
தலைமை ஏற்கவேண்டும்.

தகவல்களுக்கு நன்றி:
திரு. இங்கர்சால் (Tamil research institute)
__________________________________

எதாவது செய்யுங்கள் தமிழர்களே!

புலிகள் வழியில் ஆயுதம் தாங்கி பல ஆயிரம் பேரைக் கொன்றேனும் இந்த திட்டத்தை நிறுத்தினால் அந்த படுகொலை கூட நியாயமாகவே கருதப்படும்.

ஏனென்றால் ஆயுதப் போராட்டத்தை முன்கூட்டியே கணித்து ராணுவ மயமாக்கப்பட்ட திட்டமாகவே இது வரவுள்ளது.

ஜனநாயக வழிகள் ஹிந்தியாவில் உதவாது என்பது கண்கூடான வரலாறு!

Sunday, 22 October 2017

கேட்காமலே விடுதலை கிடைக்கும்

கேட்காமலே விடுதலை கிடைக்கும்

மண்ணழிப்புக்கு அடுத்த அடி எடுத்துவைத்தது மத்திய கார்ப்பரேட் அரசு.

கல்வியைத் தொடர்ந்து விவசாயம் மத்திய அரசு கட்டுப்பாட்டுக்கு போகிறது.

மாநில அரசின் மிச்ச சொச்ச உரிமையும் பறிபோகவுள்ளது.

இனி விவசாய தற்கொலைகள் கூடும்.
விளைவதை எல்லாம் தேசப்பற்று என்ற பெயரில் ஹிந்தியன் அள்ளிக்கொண்டு போய்விடுவான்,
அதாவது ஹைட்ரோகார்பன் நம் வயல்களை அழிக்கும்வரை.

30 ஆண்டுகளில் தமிழகம் பஞ்சத்தில் சிக்கும்.

இதை எழுதிவைத்துக் கொள்ளுங்கள்.

அதன்பிறகு நாம் இன்னொரு சோமாலியா ஆவோம்.

நாமே கேட்காவிட்டாலும் நமக்கு விடுதலை கொடுத்து வெளியே துரத்திவிடுவார்கள்.

முகநூலில் தமிழ்தேசியவாதிகள் நாங்கள் கதறும் இந்த கடைசி தருணத்திலாவது விழியுங்கள் தமிழர்களே!

நாம் வலுவாய் இருக்கும் இந்த நேரத்தில் ஆயுதம் தூக்கி விடுதலைக்காப் போராடாவிட்டால் பிழைக்கமாட்டோம்.

Saturday, 22 July 2017

ஆம்பளை யாரும் உண்டா?

அடுத்த மீத்தேன் கிணறு வரவுள்ள ஊர் குருவாலப்பர்கோயில் அதுவும் சோழன் வெட்டிய ஏரிக்கு மிக அருகே!
விவசாய நிலத்தில் நட்டநடுவிலே!

இந்த ஊரிலாவது ஒரு அப்பனுக்கு பிறந்த ஆம்பளை எவனாவது இருக்கிறானா பார்ப்போம்.

இராமேஸ்வரம், கதிராமங்கலம், நெடுவாசல் எல்லாம் பொட்டைகளும் அழுமூஞ்சிகளும் வாயால் கோசம்போட்டே வடைசுடும் கோழைகளும் மட்டுமே நிரம்பியுள்ளனர்.

Friday, 21 July 2017

மீத்தேனை உள்ளே விட்ட எம்.ஜி.ஆர்

மீத்தேனை உள்ளே விட்ட எம்.ஜி.ஆர்
.ஃ.ஃ.ஃ.ஃ.ஃ.ஃ.ஃ..ஃ.ஃ.ஃ.ஃ.ஃ.ஃ.ஃ.ஃ.ஃ.ஃ.ஃ.ஃ.ஃ.ஃ.

தமிழகத்தில் மீத்தேன் (அதாவது ஹைட்ரோகார்பன்) கண்டறியும் ஆய்வு,
ONGC யால் முதன்முதலாக 1977 ல் எம்.ஜி.ஆர் அனுமதியுடன்  தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு,

1986 ல் முதன்முதலாக 75% மீத்தேன் கிடைக்கும் Natural gas எடுக்கும் பணி அவரது ஆட்சியிலேயே 1986 நரிமணத்தில் தொடங்கப்பட்டது.
அதே ஆண்டு களப்பாள் பகுதியிலும் தொடங்கப்பட்டது.
(இன்றுவரை நடந்தும் வருகிறது)

1996 ல் மீத்தேன்(CH4) அதாவது ஹைட்ரோகார்பன்(CH) எடுக்க மத்தியில் ஆண்ட காங்கிரஸ் தமிழக அரசுக்கு கட்டளை இடுகிறது.

அப்போதைய தமிழக முதலமைச்சர் கருணாநிதி சம்மதத்துடன்
சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த தி.மு.க கட்சியைச் சேர்ந்த ஆ.ராசா அனுமதி கொடுத்தார்.

  அதை நெடுவாசல் அமைந்துள்ள தொகுதியின் அன்றைய நாடாளுமன்ற உறுப்பினரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிதம்பரம் அங்கீகரித்தார்.

இதை அந்த பகுதி எம்.எல்.ஏ வான கம்யூனிஸ்ட் கட்சி ராஜசேகர் எதிர்க்கவில்லை, ஒத்துழைத்தார்.

தற்போது அந்த நாசகார திட்டத்தை மக்கள் எதிர்ப்பையும் மீறி மிக மூர்க்கமாக செயல்படுத்துவது அ.தி.மு.க
அதை இயக்குவது மத்திய பா.ஜ.க மோடி அரசு.
அதற்கு ஆதரவாக செயல்படுகிறது தமிழக பா.ஜ.க.
எதிர்ப்பது போல நடிப்பது தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்.

ஆக
தி.மு.க
அ.தி.மு.க
கம்யூனிஸ்ட்
பா.ஜ.க
காங்கிரஸ்

அனைவரும் இதில் கூட்டாளிகள்.

Monday, 17 July 2017

எது தீர்வு தரும்?

எது தீர்வு தரும்?

தமிழக பொதுமக்களே!

ஓட்டுப்போட்டார்கள் ஓட்டுப்போட்டார்கள் என்று மக்களையே குற்றம் சாட்டாதீர்கள்.

இந்தியாவில் எது நேர்மையாக நடக்கிறது?!

நீங்கள் தேர்தல் முடிவுகளை எதைவைத்து நம்புகிறீர்கள்?!

உலகில் முன்னேறிய நாடுகள் அனைத்தும் வாக்குச்சீட்டு முறையைப் பயன்படுத்தும்போது

50% பள்ளிகளுக்கு கழிவறை வசதி கூட செய்யமுடியாத வறுமைநாடு ஏன் இயந்திரத்தை வைத்துள்ளது?

நீங்கள் போடும் ஓட்டு அப்படியே பதிவாவதில்லை.

பாஜக வுக்கு தமிழகத்தில் ஆதரவில்லை என்பது கண்கூடு.
அதனால் அது தேர்தலில் வென்றதாகக் காட்டினால் குட்டு உடைந்துவிடும்.
மக்கள் மனநிலையை ஆராய்ந்து அதைப்பொறுத்து குறிப்பிட்ட சதவீதம் ஓட்டை மாற்றுவார்கள்.

நீங்கள் எப்படி மாற்றி வாக்களித்தாலும் 90% மக்கள் ஒரு கட்சிக்கு ஆதரவான மனநிலைக்கு வரும்வரை அந்த கட்சிக்கு 30% வாக்கு கிடைக்காது.

எனவே தேர்தலோ சட்டமோ போராட்டமோ எதுவும் உங்களுக்கு உதவாது.

கதிராமங்கலம் மக்களே!

நீங்கள் போராட்டம் என்று நடத்துவதெல்லாம் உங்களுக்கேதான் நஸ்டமாக முடியும்

அது கடையடைப்போ, மறியலோ, வழக்கோ, உண்ணாவிரதமோ எதுவானாலும் சரி.
பொதுமக்களின் அன்றாட வாழாக்கைதான் பாதிக்கப்படும்.

நீங்கள் அமைதிவழியில் போராடினாலும் தீவிரவாதி, நக்சலைட் என்றுதான் முத்திரை குத்தப்படுவீர்கள்.

ஒரு ஆயுதப் போராளியை எப்படி நடத்துவார்களோ அப்படிதான் உங்களை நடத்துவார்கள்.

இந்த அரசு வேற்றின அரசு என்பதுடன் இந்த அரசு மக்களுக்கான அரசும் கிடையாது!

நீங்கள் திருப்பியடிக்காத வரை யாரும் உங்களை புழு அளவு கூட மதிக்கமாட்டார்கள்.

நீங்கள் கையை ஓங்காதவரை உங்களுக்கு அடி விழத்தான் செய்யும்

திருப்பி அடியுங்கள்!

கதிராமங்கலம் இளைஞர்களே சட்டத்தைக் கையிலெடுங்கள்!

வன்முறையைக் தொடங்குங்கள்!

வன்முறைக்கு பதில் வன்முறைதான்!

வன்முறை மட்டுமே புரட்சியாகாது
ஆனால் வன்முறையின்றி புரட்சி இல்லை!

சோமாலியா போல பஞ்சம் பட்டினி வந்தபிறகு துப்பாக்கி தூக்கி எந்த பலனும் இல்லை.

இப்போதே ஆயுதம் தூக்குங்கள்!

அரசியல் கட்சிகள் உங்களை கூட்டமாகக் கூட்டிவைத்து அரசியல்தான் செய்வார்கள்!

அவர்களால் உங்களுக்கு எந்த தீர்வையும் வழங்கமுடியாது!

அறவழி அறவழி என்று ஆட்டுமந்தைகளாக அடிவாங்கி ஓடாதீர்கள்!

மனநலம் பாதிக்கப்பட்ட காவல்துறை குண்டர்களிடம் மிதிபட்டு சாகாதீர்கள்!

புலிகள் வழியில் போராடுங்கள்!

மக்கள் வலிமைக்கு முன்பு காவல்துறையும் ராணுவமும் முடிக்கு சமமானது என்று உலகிற்கு புரியவையுங்கள்!

தமிழகத்தைக் காப்பாற்றுங்கள் கதிராமங்கல இளைஞர்களே!

தமிழக மக்களின் உணவையும் தண்ணீரையும் தட்டிப்பறிக்க விடாதீர்கள்!

வருங்கால தமிழ் குழந்தைகள் தாய்ப்பாலோடு எண்ணெயை உறிஞ்சும் நிலையை இன்றே தடுத்து நிறுத்துங்கள்!

புரட்சிக்கான முதல் அடியை எடுத்துவையுங்கள்!

தமிழகம் உங்களைக் கைவிட்டுவிடாது!

நீங்கள் இறந்தாலும் தமிழர்களின் குலதெய்வம் ஆவீர்கள்!

முடிவெடுங்கள் இன்றே!

Sunday, 2 July 2017

மாணவர்களுக்கு அழைப்பு

கதிராமங்கலம், நெடுவாசல், தஞ்சாவூர் போராட்டங்கள்
ஏன் பெரும்போராட்டமாக பரவ முடியவில்லை என்றால்,

அதற்கு முக்கிய காரணம்  கல்லூரிகளில் தேர்வு நடந்ததும் தற்போது விடுமுறை நடப்பதும்தான்.

கதிராமங்கலம் அருகாமையில் உள்ள கல்லூரி மாணவர்கள் எப்படியும் வாட்சப் குழு வைத்திருப்பீர்கள்.
அதாவது மயிலாடுதுறை, கும்பகோணம் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள்
கல்லூரியைத் தவிர வேறொரு இடத்தில் ஒன்றுகூடி மாநில நெடுஞ்சாலையை சில மணிநேரமேனும் மறித்து போராட்டம் ஒன்று நடத்தி
அதில் பிற தமிழக இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்து முழக்கமிட்டு
அதை வீடியோ எடுத்து சமூக வலைகளில் போடுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கும்பகோணத்தில் இருக்கும் அரசு ஆண்கள் கல்லூரி, அரசு மகளிர் கல்லூரி, அரசு கலைக் கல்லூரி

மயிலாடுதுறையில் இருக்கும் டிஜி அரசு கல்லூரி, தர்மபுரம் ஆதீனம் கல்லூரி போன்ற கல்லூரி மாணவர்கள் இதைச் செய்யலாம்

கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரியில் படிக்கும் கதிராமங்கலத்தைச் சேர்ந்த மாணவர்கள் மேற்கண்ட கல்லூரிகளை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

பாதிக்கப்படுவது கதிராமங்கலம் மட்டுமில்லை அதைச் சுற்றி இருக்கும் வீடுகளும் கல்லூரிகளும் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களும்தான்.

அரசியல்வாதிகளை நம்பாமல் மண்ணையும் மக்களையும் நேசிக்கும் மாணவர்கள் பேதங்களைக் கடந்து களத்தில் இறங்குமாறு கோரப்படுகிறார்கள்.

நன்றி

(முடிந்த அளவு பரப்புங்கள்)