Showing posts with label நடுவணரசு. Show all posts
Showing posts with label நடுவணரசு. Show all posts

Saturday, 11 April 2020

நிவாரணம் - கேட்டதும் பெற்றதும் ஒரு ஒப்பீடு

நிவாரணம் - கேட்டதும் பெற்றதும் ஒரு ஒப்பீடு

தமிழகம் சராசரியாக ஒரு லட்சங்கோடி நிதியை மத்திய அரசுக்கு கப்பம் கட்டுவதும்
பிறகு பேரிடர் காலங்களில் மத்திய அரசிடம் நிதி கேட்டு குறிப்பிட்ட தொகை கேட்பதும்
அத்தொகையில் பத்தில் ஒரு பங்கு கூட மத்திய அரசு தராமல் புறக்கணிப்பதும் வழக்கமாகிவிட்டது.

ஆனால் வரலாற்றிலேயே இப்போதுதான் கேட்டதில் 17% தந்திருக்கிறார்கள்.
இதுவும் தமிழகம் மிக மோசமாக பாதிக்கப்பட்டதால் கிடைத்துள்ளது.

கடந்த பத்து ஆண்டுகளில் நிவாரணம் தேவைப்படும்போது மத்திய அரசிடம் கேட்டதும் கிடைத்ததும் வருமாறு,

2011 தானே புயல் :-

கேட்டது 5249 கோடி
பெற்றது 500 கோடி
(அதாவது 9.5%)

2015 வெள்ளம் :-

கேட்டது 25912 கோடி
பெற்றது 2195 கோடி
(அதாவது 8.47%)

2016 வர்தா புயல் :-

கேட்டது 22573 கோடி
பெற்றது 264 கோடி
(அதாவது 1.16% மட்டுமே!)

2017 வறட்சி :-

கேட்டது 39564 கோடி
பெற்றது 1748 கோடி
(அதாவது 4.4%)

2018 ஒக்கி புயல் :-

கேட்டது 5255 கோடி
பெற்றது 413 கோடி
(அதாவது 7.9%)

2018 கஜா புயல் :-

கேட்டது 15000 கோடி
பெற்றது 1146 கோடி
(அதாவது 7.64%)

2019 வறட்சி :-

கேட்டது 39565 கோடி
பெற்றது 1748 கோடி
(அதாவது 4.4%)

2020 கொரோனா பாதிப்பு :-

கேட்டது 3000 கோடி
பெற்றது 510 கோடி
(அதாவது 17%)

[நன்றி: விகடன்]

ஆனால் தமிழகத்துக்கு வழக்கமாக மத்திய அரசு தரவேண்டிய நிநி ஏறத்தாழ 4500 கோடி ரூபாய் ஓராண்டாக நிலுவையில் உள்ளது.

கஜா புயலுக்கு அறிவித்த நிதியை சாவகாசமாக மூன்று மாதம் கழித்துதான் கொடுத்தார்கள்.

தற்போது அறிவித்த நிதி கைக்கு வருவதற்குள் கொரோனா அதுவே குணமாகிவிடும்.

Sunday, 5 April 2020

கொரோனா பாதிப்பில் பிரதமரின் செயல்பாடு


கொரோனா பாதிப்பில் பிரதமரின் செயல்பாடு
இதுவரை வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசின் பங்கு என்ன?!
யோசித்ததுண்டா?!
இதை நீங்கள் யோசித்தால் ஒன்று தெளிவாகப் புரியும்.
நமது தேவைகளை நிறைவேற்றுவது மாநில அரசாங்கம் மட்டுமே!
மத்திய அரசு எதுவுமே செய்வதில்லை.
அது வரி என்கிற பெயரில் மாநிலங்களைக் கொள்ளையடித்துவிட்டு 'அதைச் செய்' 'இதைச் செய்' என்று கட்டளை போடுவதோடு சரி!
தமிழகத்தில் ஒரு குடும்பத்திற்கு 4 பேர் என்று வைத்துக்கொள்வோம்.
தோராயமாக (தலைக்கு 3000 ரூபாய் என) ஒவ்வொரு குடும்பமும் மாதந்தோறும் 12,000 ரூபாய் மத்திய அரசுக்கு வரி கொடுக்கிறோம்.
இத்தனை பணத்தையும் வாங்கிக்கொண்டு மத்திய அரசு நமக்குத் தருவதென்ன?!
ரயில் போக்குவரத்து, தபால் சேவை, ராணுவ பாதுகாப்பு (?), விமான சேவை (திவாலாகிவிட்டது) , ஒன்றிரண்டு மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள்.
அவ்வளவுதான்! அவ்வளவேதான்!
தமிழகம் கட்டும் வரி ஒரு ரூபாய் என்றால் தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கும் நிதி 30 பைசா என்ற அளவில் உள்ளது.
வரியை மட்டும் இங்கே கூறியுள்ளேன்.
அதைப்போல இரண்டு மடங்கு நமது வளங்களைச் சுரண்டுகிறது ஹிந்தியா!
எவ்வளவு இக்கட்டான சூழலிலும் நமக்கு மத்திய அரசு உதவுவது கிடையாது!
நாம் கட்டும் வரி 100 ரூபாய் என்றால் பேரிடர் காலங்களில் நாம் 10 ரூபாய் கேட்பதும் மத்திய அரசு 10 பைசா விட்டெறிவதும் வாடிக்கையாகிவிட்டது.
[இதையெல்லாம் புள்ளிவிபரமாக தமிழ்தேசியப் பேரியக்கம் வெளியிட்டுள்ளது.]
தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பில் மத்திய அரசு செய்தவற்றைப் பார்ப்போம்.
முன்னெச்சரிக்கை :-
ஜனவரி 31 இல் கொரோனா இந்தியாவிற்கு வந்துவிட்டது.
மோடி சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் கூடி பேசியது மார்ச் 4 இல்.
இதற்குப் பத்துநாட்கள் கழித்து கொரோனா ஒரு தேசிய அச்சுறுத்தல் இல்லை என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகிறது.
மார்ச் 16 இல் சார்க் கூட்டமைப்பு நாடுகளுடனான சந்திப்பில் கொரோனா பாதிப்பு விவாதிக்கப்படுகிறது.
மார்ச் 19 இல் பொதுமக்கள் 22ம் தேதி ஊரடங்கைக் கடைபிடிக்க மோடி வேண்டுகோள் விடுக்கிறார்.
மார்ச் 22 இலிருந்து தரையில் ஓடும் சைக்கிள் வரை தடுத்து நிறுத்திய மோடி அரசு மார்ச் 25 இல் தான் (முதல் வேலையாக செய்திருக்கவேண்டிய) விமான சேவை ரத்து என்பதை செயல்படுத்துகிறது.
மருந்து துறை :-
இந்திய மருந்து தயாரிப்பு துறை படுத்து பல ஆண்டுகள் ஆகின்றன.
   1990 களில் தன் சொந்தக் கால்களில் நின்ற இந்திய மருந்து தயாரிப்பு கம்பெனிகள்
இப்போது சீனாவை நம்பி இருக்கின்றன.
சென்ற ஆண்டு சீனாவிலிருந்து இறக்குமதியான மருந்துப் பொருள் மட்டுமே நாட்டின் மொத்த மூலப் பொருள் இறக்குமதியில் 68%  என்கிறது எக்கனாமிக் டைம்ஸ்.
இப்போது சீனாவே படுத்துவிட்டது.
மருந்து எப்படி இருக்கும்?!
மலேரியாவுக்கு பயன்படும் மருந்தை பயன்படுத்தலாம் என்று தெரிந்தவுடன் அதன் ஏற்றுமதிக்குத் தடை விதித்தனர். அது ஒன்றுதான் குறிப்பிடும் அளவான செயல்பாடு.
மருத்துவத் துறை :-
இந்தியாவில் 10,000 பேருக்கு ஒரு டாக்டர் என்ற அளவில்தான் மருத்துவ வளர்ச்சி இருக்கிறது.
(இந்தியாவிலேயே தமிழகம்தான் இதில் முதலிடம் 260 பேருக்கு ஒரு டாக்டர்!
இதிலும் நீட் என்ற மண்ணைப் போட்டுவிட்டனர்).
41 பேருக்கு ஒரு மருத்துவர் இருந்த இத்தாலியே கொரோனாவிடம் மண்டியிட்டுவிட்டது என்றால் இந்தியா எவ்வளவு தீவிரமாக செயல்படவேண்டும் என்பதை யூகிக்கவும்.
ஆராய்ச்சித் துறை :-
கிருமிகள் ஆராய்ச்சியில் இதுவரை இந்தியா துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை.
மற்ற நாடுகள் மருந்து கண்டுபிடிக்க தனியாக நிதி ஒதுக்கி தீவிரமாக இயங்கிவருகின்றன.
பல நாடுகளில் இந்த ஆராய்ச்சி செய்யும் வல்லுநர்கள் பலர் தமிழர்களாக இருக்கின்றனர்
அதாவது அறிவாளிகள் அத்தனைபேரும் ஏற்கனவே நாட்டைவிட்டு வெளியாயிற்று.
உயிரியியல் தொடர்பான பரிசோதனைக் கூடங்கள் நாட்டில் மொத்தமே 40 தான் இருக்கின்றன.
அவைகளும் பல பல்கலைக் கழகங்களில் கல்விக்குத்தான் பயன்படுகின்றன.
அவசரகால உற்பத்தி :-
மருத்துவ சாதனங்கள் தயாரிப்பு மற்றும் தற்காப்பு உபகரணங்கள் தயாரிப்பு என்றாவது கவனம் செலுத்தவேண்டும்.
இங்கே மருத்துவர், செவிலியர், காவலர் என எவரிடமும் போதுமான மூச்சு கவசமோ, கையுறைகளோ, கிருமிநாசினி நீர்மங்களோ இல்லை.
(இருக்கின்றவையும் மாநில அரசுகள் கொடுத்தவை)
இது தொடர்பாக மார்ச் 18 இல் ஆபரேசன் செய்யப்படும்போது அணியப்படும் மூச்சுக் கவசங்களைத் தயாரிக்கும் அரசு நிறுவனமான HLL மற்றும் நெசவுத்துறை அதிகாரிகள் கூடிப் பேசினர்.
தயாரிப்பை அதிகரிப்பது பற்றியும் 75 லட்சம் மூச்சு கவசங்கள் உருவாக்கத் தேவை இருப்பது பற்றியும் HLL இரண்டு மாதங்களாக வலியுறுத்தி வந்ததை அந்த சந்திப்பிற்கு பிறகும்கூட நிறைவேற்றவில்லை.
இப்போது வரை HLL க்குத் தேவையான துணி சப்ளை செய்யப்படவில்லை.
பல உள்ளூர் நிறுவனங்கள் உற்பத்திக்கு அனுமதி கேட்டும் இதுவரை தரப்படவில்லை.
பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் "10 லட்சம் N-95 மூச்சுக் கவசங்கள் கேட்டோம். கிடைத்ததோ வெறும் 50,000 தான்" என்று வேதனை தெரிவித்துள்ளார்.
பண உதவி:-
மார்ச் 24 இல் சுகாதாரத் துறை மேம்பாட்டுக்கு 1500 கோடி அளித்ததோடு சரி.
(பட்டேல் சிலை செலவு 3,000 கோடி என்பதை நினைவில் கொள்க)
பிரதமர் நிவாரண வைப்பு 3000 கோடி,
மாநிலங்களுக்கான நிவாரண வைப்பு 20,000 கோடி,
தேசிய பேரிடர் நிவாரண வைப்பு 25,000 கோடி என எல்லாப் பணத்தையும் மத்திய அரசு வைத்திருக்கிறது.
உள்நாட்டிலும் ல நடிகர்களும் தொழிலதிபர்களும் நன்கொடை அளித்து வருகிறார்கள்.
(இந்த திட்டத்திற்கு பெயர் என்ன தெரியுமா?! "PM cares")
இப்படியாக தனியே 6500 கோடி வரை கிடைத்துள்ளது.
ஆனால் இதுவரை மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யவில்லை.
கேரள வெள்ளத்தின் போது வெளிநாட்டு வாழ் மலையாளிகளிடம் நன்கொடை வாங்கக்கூடாது என்று கூறிய மத்திய அரசு தற்போது வெளிநாட்டுவாழ் இந்தியர்களிடம் நன்கொடை பெற்றுவருகிறது.
என்றால் கொரோனா ஒரு தேசியப் பேரிடர்தானே?!
என்றால் மாநிலங்களுக்கு மேற்கண்ட நிதியை சிறிதுசிறிதாக ஒதுக்கலாம்தானே?!
ஆனால் மோடி இந்த நிலையிலும் பெருமை பீத்த கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள சார்க் நாடுகள் கூட்டாக செயல்பட அழைப்பு விடுத்து அதற்கான கூட்டு நிதிக்கு 75 கோடியை கொடுத்துவிட்டு வந்துள்ளார்.
[படம்: பிரதமர் நிவாரண நிதியில்  வருமானம் மற்றும் செலவு ஒப்பீடு.
இதிலேயே தெரியும் மத்திய அரசு மாநிலங்களுக்கு உதவும் லட்சணம்]
ஆள் உதவி :-
இத்தனை பெரிய நாட்டில் போலீஸ் பலம் மிகவும் குறைவு.
இதனால் மக்களைக் கட்டுப்படுத்த காவல்துறை திணறி வருகிறது.
எப்படியும் பாகிஸ்தான் படையெடுக்கப் போவதில்லை ராணுவத்தை அனுப்பாவிட்டாலும் துணைராணுவத்தையாவது அனுப்பியிருக்கலாம்.
மத்திய மருத்துவ நிறுவனங்களில் முக்கிய டாக்டர்கள் கேரளா பாதிக்கப்பட்ட போது அங்கே வந்த உதவியது உண்மைதான்.
ஆனால் அதன் பிறகு எங்குமே மத்திய அரசு சார்பில் வழிநடத்த திறமையான மருத்துவ மேதை ஒருவர் கூட எந்த மாநிலத்திற்கும் அனுப்பப்படவில்லை.
மனவலிமை ஊட்டுதல் :-
அறிவிப்புகளை மோடி அறிவிக்கிறார்.
மக்களிடம் மேல்வலியாமல் எதையாவது செய்யச் சொல்கிறார்.
அவ்வளவுதான்.
இதுவரை நிலை என்ன?
இதை சமாளிக்க என்ன திட்டம் வைத்துள்ளோம்?
பிற நாடுகள் இதற்கு என்ன செய்கின்றன? என அறிவுப் பூர்வமாக எதையும் பேசுவதில்லை.
உணர்வுப் பூர்வமாக பேசுகிறார் அவ்வளவே!
அவர் தன் திருவாயை அசைத்ததைத் தவிர வேறு என்ன செயல்பாட்டைச் செய்தார் என்று கேட்டால் விரல்களை அசைத்து ட்வீட் போட்டதைச் சொல்லலாம்.
மற்றபடி கொரோனா அமைத்துள்ள போர்க்களத்தில் அவர் கால்வைக்கவே இல்லை.
மத்திய அரசின் செயல்பாடுகள் எப்படி என்றால்
முதலில் லொக்கு லொக்கு என்று இருமிவிட்டு கச்சாமுச்சா என்று பிணாத்தும் ஒரு ரிங்டோனை அனைவருக்கும் வைத்தனர்.
அதனால் யாருக்கு என்ன புரிந்தது என்பது கொரோனாவுக்கே வெளிச்சம்.
மோடியும் எப்போதும் கெக்கரா பெக்கரா என்று இந்தியில்தான்  பிணாத்துகிறார்.
மக்களுக்கு புரியும்படி பேசமுடியாவிட்டால் கீழே சப் டைட்டிலாவது போடலாமே?!
அப்படி என்ன திமிர் என்று நினைக்கத் தோன்றுகிறது.
மக்களுக்கு ஓடோடி உழைப்பது மாநில அரசும் அதில் பங்குவகிக்கும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும்தான்.
மத்திய மந்திரிகளில் மோடி தவிர எவரும் வாயை அசைக்கும் வேலையைக் கூட செய்வது இல்லை.
பொருள் உதவி :-
கொரோனா இருக்கிறதா இல்லையா என்று கண்டறியும் பரிசோதனை கிட் வாங்கவோ தயாரிக்கவோ எந்த முயற்சியும் இதுவரை செய்யப்படவில்லை.
கொரோனா பாதிப்பு சோதனை செய்வதில் இந்தியா மிகவும் பின்னே இருக்கிறது என்று பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
Mylab எனும் ஒரு நிறுவனம் தயாரித்த பரிசோதனை கிட் மார்ச் 24 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஒரு சோதனைக்கு 2000 ரூபாய் செலவாகும் அதுவும் அந்த ஒரே நிறுவனத்தை நம்பியிருக்கும் நிலை.
இது யானைப்பசிக்கு சோளப்பொறி போன்றது!
சீனா கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள ஒரே நாளில் பிரம்மாண்ட மருத்துவமனை கட்டியது ஆனால் மத்திய அரசு அப்படி எதுவும் செய்யவில்லை.
மாநிலங்களில் இருக்கும் மத்திய அரசின் கட்டிடங்களை பயன்படுத்த அளிக்கலாம்.
மத்திய அரசு நடத்தும் நடத்தும் மருத்துவமனைகளில் ஒன்றை இதற்கு தனியாக அர்ப்பணிக்கலாம்.
இப்படி எதையும் செய்யவில்லை.
மலேரியா மருந்து மற்றும் பரிசோதனை கிட் தயாரிப்பை ஊக்கப்படுத்தி வரிகளைத் தளர்த்தி அனைவருக்கும் கிடைக்க எந்த ஒரு முயற்சியும் செய்யவில்லை.
திட்டமிடுதல் :-
வீட்டிலேயே இருங்கள் என்று கூறியதைத் தவிர கொரோனாவைக் கட்டுப்படுத்த எந்த திட்டமும் இல்லாதபோதே நமக்குப் புரிகிறது இதனால் ஏற்படும் பொருளாதார சரிவை ஈடுகட்ட எந்த திட்டமும் இருக்காது என்று.
தொழில்துறை மீண்டுவர எத்தனை நாள் ஆகும் அதற்கு முன்னெச்சரிக்கையாக என்ன செய்யவேண்டும் என்று தற்போது கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வரும் நாடுகளைப் பார்த்து நமக்கு ஏற்றதுபோல ஒரு திட்டத்தை தயாரிப்பதும் அவசியம்
.
அனேகமாக மோடியின் அடுத்த திட்டம் "மொட்டைமாடியில் நடனம் ஆடுவதாக" இருக்கலாம்.


Friday, 30 November 2018

புயல் பாதுகாப்பு கட்டிடங்கள் - தமிழகம் முற்றிலும் புறக்கணிப்பு

புயல் பாதுகாப்பு கட்டிடங்கள் - தமிழகம் முற்றிலும் புறக்கணிப்பு

  மத்திய அரசு இதுவரை கட்டியுள்ள மொத்த
"புயல் பாதுகாப்பு கட்டிடங்கள்" = 567

இதில் தமிழகத்தில் கட்டப்பட்டவை = 0

ஆம். இது உண்மை.

ஒரிசா = 312
ஆந்திரா = 218
குஜராத் = 22
மேற்கு வங்கம் = 15

என பிற மாநிலங்களில் கட்டப்பட்டவையுடன் ஒப்பிடும்போது தமிழகத்தைத் திட்டமிட்டு புறக்கணித்திருப்பது புரிகிறது.

இதுமட்டுமல்ல.
இரண்டாம் கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள கட்டிடங்கள் 353.

மாநில வாரியாக கீழ் வருமாறு,

மேற்கு வங்கம் = 150
குஜராத் = 112
கோவா = 40
கேரளா = 27
கர்நாடகா = 11
மகாராஷ்டிரா = 13
தமிழகம் = 0

தகவல்களுக்கு நன்றி:
விகடன் செய்தி
02.12.2018
---------
மேற்கண்ட இரு பட்டியல்களில் புயலையே பார்க்காத மாநிலங்கள் கூட  உண்டு.

பிற மாநிலங்களை விட வரி என்கிற பெயரில் அதிகம் கொள்ளை போவது தமிழக பொருளாதாரம்.
(தேடுக: தமிழகத்தை ஒட்டச் சுரண்டும் ஹிந்தியா)

ஆனால் தமிழகத்தை மட்டும் தவிர்த்துவிட்டு நடுவணரசு உலக வங்கியின் நிதியுதவியுடன் பாதுகாப்பு கட்டிடங்கள் கட்டி அதற்கு சாலைகளும் போட்டு தருகிறது.

நீலம், வர்தா, ஒகி, கஜா என வரிசையாக புயல் தாக்குவதோ தமிழகத்தை.
ஆனால் பாதுகாப்பாக இருப்பது மற்ற மாநிலங்கள்.

தமிழர்களின் உயிருக்கே இங்கு மதிப்பில்லை.
இது இனப்படுகொலை அன்றி வேறென்ன?!

Tuesday, 27 November 2018

தமிழகத்தை ஒட்டச் சுரண்டும் ஹிந்தியா

தமிழகத்தை ஒட்டச் சுரண்டும் ஹிந்தியா

தமிழகத்தைப் புயல் தாக்குகிறது.
தமிழகக் குழு ஆய்வு செய்கிறது. இவ்வளவு சேதம் என்று கணக்கிட்டு மத்திய அரசிடம் நிவாரணம் கேட்கிறது.

இப்போது நியாயமாக நடுவணரசு என்ன செய்யவேண்டும்?

தமிழக அரசு கூறுவதை நம்பி நிவாரணம் அளிக்கவேண்டும்.

ஆனால் மத்திய அரசு வழக்கமாக  என்ன செய்கிறது தெரியுமா?

தனியே ஒரு மத்திய குழுவை அனுப்பி அந்த குழு திமிராகவும் எகத்தாளமாகவும் மேம்போக்காக ஆய்வு செய்து சாவகாசமாக "சேதமெல்லாம் ஒன்றுமில்லை" என்பது போல அறிக்கை அனுப்பி  தமிழக அரசு கோரியதில் கால்வாசியோ அல்லது அதற்கும் குறைவாகவோ பிச்சை போடும்.

இத்தனைக்கும் தமிழக அரசு வரி என்கிற பெயரில் மத்திக்கு கட்டும் மலை மலையான பணத்திற்கு முன் இந்த "பிச்சை" உண்மையிலேயே "பிச்சை" என்று கூடக் கூறமுடியாது அதற்கும் கீழ்.

உதாரணத்திற்கு 2012 ஆண்டு தமிழக அரசு மத்திக்கு கட்டிய 'வருமான வரி' மட்டும் 28000 கோடி (பிற வரிகளைச் சேர்க்கவில்லை).

ஆனால் 2011 இல் தானே புயல் தாக்கியபோது தமிழகம் கேட்டது வெறும் 5200 கோடி.

ஆனால் மத்திய அரசு போட்ட பிச்சை 500 கோடி.

அதாவது ஒரு நபர் இன்னொரு நபரிடம் 280 ரூபாயை கொடுத்துவைத்து அதில் அவசரத் தேவைக்காக 50 ரூபாயை  கேட்கும்போது வெறும் 5 ரூபாயை அவர் முகத்தில் விட்டெறிந்தது போல.

இது மட்டுமில்லை மத்திக்கு நாம் கட்டும் கப்பம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது.
2012 இல் 28000 வருமான வரி கட்டியதாக கூறினேன் அல்லவா?!
2016 இல் அது 67000 கோடியாக உயர்ந்துவிட்டது.

இதேபோல 2016 "வர்தா" புயல் பாதிப்பு ஏற்பட்டது.
தமிழக அரசு கோரியது 22000 கோடி.
மத்திய அரசு போட்ட பிச்சை வெறும் 266 கோடி.

அடுத்த ஆண்டு 2017 ஒக்கி புயலின்போது,
தமிழ்நாடு கேட்டது 13000.
இந்திய அரசு பிச்சையிட்டதோ வெறும் 280 கோடி.

இப்போது புதிதாக GST போட்டு ஆறே மாதங்களில் 51000 கோடிக்கு மேல் வசூலித்துவிட்டனர்.
(01.07.2018 அன்று GST ஆணையர் அறிவிப்பு)

ஆக இந்த நிதி ஆண்டு 1 லட்சம் கோடிக்கு மேல் GST வரி கட்ட உள்ளோம்.

பிற வரிகளையும் சேர்த்தால் ஏறத்தாழ தற்போதைய நிலைப்படி ஓராண்டுக்கு 3 லட்சம் கோடிக்கு மேல் மத்திக்கு கப்பம் செல்கிறது.

தமிழகத்தின் மொத்த கடனே அவ்வளவுதான்!

இது பகல்கொள்ளை அன்றி வேறில்லை!

விளைவு, தமிழகத்தின் ஒவ்வொரு குடிமகனும் 40,000 ரூபாய் கடனாளி.

ஆனால் நாம் பெற்றது என்ன?!

ஆற அமர வந்து பிணங்களை பொறுக்கி தரும் "மத்திய பேரிடர் மீட்பு" நடவடிக்கை மட்டும்தான்.

நிவாரண நிதியை விடுங்கள், தற்போதைய மோடி அரசு நமக்கு ஒதுக்கிய வழக்கமான நிதியைக்கூட இன்னும் தரவில்லை.

கடந்த 08.10.2018 அன்று, புதுதில்லி சென்று இந்தியத் தலைமையமைச்சரை நேரில் சந்தித்து வந்த தமிழ்நாடு முதலமைச்சர்,
"தமிழ்நாட்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கும்,
தமிழ்நாட்டின் இதர திட்டங்களுக்கும்
ஒதுக்கப்பட்டு இதுவரை வராத 19000 கோடி ரூபாய் நிதி பாக்கியைத் தாருங்கள்"
என கோரிக்கை வைத்துவிட்டு வந்தார்.
(இந்த பாக்கி தற்போது 21000 கோடியைத் தாண்டிவிட்டது)

தமிழகத்திற்கு உள்ளே ஒரு ஆண்டுக்கு ஆகும் செலவு அதாவது மாநில அரசின் மொத்த செலவே 15000 கோடிதான்.

ஒரு தொழிலாளிக்கு ஒரு மாத ஊழியம் தராமல் ஏமாற்றுவது போலத்தான் இதுவும்!

சென்னைப் பல்கலைக்கழகப் பொருளியல் துறைத் தலைவர் பேராசிரியர் ஜோதி சிவஞானம்.
இவர் 'டைம்ஸ் ஆப் இந்தியா' நாளிதழில் எழுதிய கட்டுரையில் "ஓர் ஆண்டில் இந்திய அரசின் மொத்த வரி வருவாயில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 31% என்றும்
அதேவேளை இந்திய அரசிடமிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் தொகை வெறும் 3% என்று குறிப்பிட்டிருந்தார்"
(சான்று Times of India, 05.09.2018).

"நல்ல வாயன் சம்பாதிப்பதை நாறவாயன் தின்கிறான்" என்கிற பழமொழியை இனி  "தமிழகம் சம்பாதிப்பதை ஹிந்தியா தின்கிறது" என்று மாற்றிக் கொள்ளலாம்.

மக்கள் என்னதான் நிவாரணம் அனுப்பினாலும் ஒரு அரசு அளவுக்கு வராது.

கஜா புயல் பாதிப்புக்கு நிவாரணமாக நாம் கேட்பது 15000 கோடி.

ஆனால் வழக்கம் போல மத்திய அரசு "விளைவித்தவன் வாழைப்பழத்தை பிடுங்கித் தின்றுவிட்டு தோலை தூக்கி  முகத்தில் அடிக்கும்" ரவுடி போல எதையாவது வீசியெறிய உள்ளது.

சுரண்டலை நோக்கமாகக் கொண்ட ஆங்கிலேய பேரரசுக்கும் ஹிந்திய நடுவணரசுக்கும் எதாவது வேறுபாடு உள்ளதா?!

தமிழர்கள் சிந்திப்பீர்!
-----------------

தகவல்களுக்கு நன்றி:
தோழர் க. அருணபாரதி
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

கட்டுரை தலைப்பு:
“கசா” பேரழிவுச் சூழலிலும்
தமிழ்நாட்டை வஞ்சிக்கும் இந்திய அரசு!

Thursday, 22 November 2018

தென்மாவட்டங்களில் வருகிறது 4வழிச்சாலை அதுவும் 1863 ஏக்கரை அழித்து - நேரம் பார்த்து அடிக்கும் அரசு

தென்மாவட்டங்களில் வருகிறது 4வழிச்சாலை அதுவும் 1863 ஏக்கரை அழித்து
- நேரம் பார்த்து அடிக்கும் அரசு

மதுரை, விருதுநகர், நெல்லை ஆகிய 3 மாவட்டங்களில் 1,863 ஏக்கர் விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட நடவடிக்கை!

நில உரிமையாளர்களுக்கு முன்னறிவிப்பு எதுவும் இன்றி நன்செய் வயல்களில் அடையாள குறியீட்டு கற்கள் நடப்பட்டன!
---------

செங்கோட்டை திருமங்கலம் நான்கு வழிச்சாலை பணிக்கு புளியரை பகுதியில் நாற்று நடப்பட்ட வயல்களில் அளவு கல் நடும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இதனால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.

தமிழகத்தில் சாலை வழி சரக்கு போக்குவரத்தை மேம்படுத்தவும், பயண நேரத்தை குறைக்கவும் "பாரத் மாலா பரியோஜனா" மற்றும் தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதிதாக நான்கு வழிச்சாலைகள் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு துவங்கியுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் செங்கோட்டை முதல் திருமங்கலம் வரையிலான 147 கிமீ தூரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்க மதுரை, விருதுநகர், நெல்லை ஆகிய 3 மாவட்டங்களில் 1,863 ஏக்கர் விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் 818.113 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன.
விளைநிலங்கள், குடியிருப்புகள், நீர்நிலைகள் மற்றும் வனத்தையொட்டிய பகுதிகள் வழியாக அமைக்கப்படும் இந்த நான்கு வழிச்சாலை பணிகளை முதற்கட்டமாக ராஜபாளையம் சத்திரப்பட்டியில் இருந்து செங்கோட்டை வரையிலான 69 கி.மீ. தொலைவிற்கு அரசு துரிதப்படுத்தி உள்ளது.
இந்த திட்டப்பணிகளுக்காக நேற்று முன்தினம் நெடுஞ்சாலை துறை சார்பில் புளியரையில் தொடங்கி தாட்கோ நகர், லாலா குடியிருப்பு வழியாக நாற்றுகள் நடப்பட்ட வயல்களில் குறியீட்டு அளவுகல் நடப்பட்டன.

இன்று (21ம் தேதி) நில எடுப்பு தாசில்தார் தலைமையில் இதற்கான பணிகள் துவங்கப்பட உள்ளது.

செங்கோட்டை திருமங்கலம் இடையேயான நான்கு வழிச்சாலை பணிக்கு விளைநிலங்களை கையகப்படுத்த விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு ராஜபாளையம் சத்திரப்பட்டியில் தொடங்கி மீனாட்சிபுரம், இனாம் கோவில்பட்டி, விஸ்வநாதப்பேரி, சிவகிரி, உள்ளார், வாசுதேவநல்லூர் பகுதிகளில் நில உரிமையாளர்களுக்கு முன்னறிவிப்பு எதுவும் இன்றி நன்செய் வயல்களில் அடையாள குறியீட்டு கற்கள் நடப்பட்டன.

தகவலறிந்து திரண்ட விவசாயிகள், அளவுகல் நட்ட ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து கண்டன சுவரொட்டிகளும் ஒட்டினர்.

கடந்த 24ம் தேதி சிவகிரி தாலுகாவை சேர்ந்த சிறு குறு விவசாயிகள், நிலம் கையகப்படுத்தும் பணிக்கான மாவட்ட சிறப்பு அலுவலருக்கு தங்களது ஆட்சேபனையை பதிவு தபாலில் அனுப்பினர்.

அளவு குறியீட்டு கற்களை பிடுங்கி எறிந்து கறுப்புக்கொடிகளை நட்டனர்.

மேலும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திலும் நான்கு வழிச்சாலை பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தனர்.

இந்நிலையில் விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி புளியரை பகுதியில் நாற்று நடப்பட்ட வயல்களில் அளவு குறியீட்டுக் கற்கள் பதிக்கப்பட்டதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

நன்றி: தினகரன்

Wednesday, 21 November 2018

தென்மாவட்டங்களில் வருகிறது 4வழிச்சாலை அதுவும் 1863 ஏக்கரை அழித்து - நேரம் பார்த்து அடிக்கும் அரசு

தென்மாவட்டங்களில் வருகிறது 4வழிச்சாலை அதுவும் 1863 ஏக்கரை அழித்து
- நேரம் பார்த்து அடிக்கும் அரசு

மதுரை, விருதுநகர், நெல்லை ஆகிய 3 மாவட்டங்களில் 1,863 ஏக்கர் விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட நடவடிக்கை!

நில உரிமையாளர்களுக்கு முன்னறிவிப்பு எதுவும் இன்றி நன்செய் வயல்களில் அடையாள குறியீட்டு கற்கள் நடப்பட்டன!
---------

செங்கோட்டை திருமங்கலம் நான்கு வழிச்சாலை பணிக்கு புளியரை பகுதியில் நாற்று நடப்பட்ட வயல்களில் அளவு கல் நடும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இதனால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.

தமிழகத்தில் சாலை வழி சரக்கு போக்குவரத்தை மேம்படுத்தவும், பயண நேரத்தை குறைக்கவும் "பாரத் மாலா பரியோஜனா" மற்றும் தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதிதாக நான்கு வழிச்சாலைகள் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு துவங்கியுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் செங்கோட்டை முதல் திருமங்கலம் வரையிலான 147 கிமீ தூரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்க மதுரை, விருதுநகர், நெல்லை ஆகிய 3 மாவட்டங்களில் 1,863 ஏக்கர் விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் 818.113 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன.
விளைநிலங்கள், குடியிருப்புகள், நீர்நிலைகள் மற்றும் வனத்தையொட்டிய பகுதிகள் வழியாக அமைக்கப்படும் இந்த நான்கு வழிச்சாலை பணிகளை முதற்கட்டமாக ராஜபாளையம் சத்திரப்பட்டியில் இருந்து செங்கோட்டை வரையிலான 69 கி.மீ. தொலைவிற்கு அரசு துரிதப்படுத்தி உள்ளது.
இந்த திட்டப்பணிகளுக்காக நேற்று முன்தினம் நெடுஞ்சாலை துறை சார்பில் புளியரையில் தொடங்கி தாட்கோ நகர், லாலா குடியிருப்பு வழியாக நாற்றுகள் நடப்பட்ட வயல்களில் குறியீட்டு அளவுகல் நடப்பட்டன.

இன்று (21ம் தேதி) நில எடுப்பு தாசில்தார் தலைமையில் இதற்கான பணிகள் துவங்கப்பட உள்ளது.

செங்கோட்டை திருமங்கலம் இடையேயான நான்கு வழிச்சாலை பணிக்கு விளைநிலங்களை கையகப்படுத்த விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு ராஜபாளையம் சத்திரப்பட்டியில் தொடங்கி மீனாட்சிபுரம், இனாம் கோவில்பட்டி, விஸ்வநாதப்பேரி, சிவகிரி, உள்ளார், வாசுதேவநல்லூர் பகுதிகளில் நில உரிமையாளர்களுக்கு முன்னறிவிப்பு எதுவும் இன்றி நன்செய் வயல்களில் அடையாள குறியீட்டு கற்கள் நடப்பட்டன.

தகவலறிந்து திரண்ட விவசாயிகள், அளவுகல் நட்ட ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து கண்டன சுவரொட்டிகளும் ஒட்டினர்.

கடந்த 24ம் தேதி சிவகிரி தாலுகாவை சேர்ந்த சிறு குறு விவசாயிகள், நிலம் கையகப்படுத்தும் பணிக்கான மாவட்ட சிறப்பு அலுவலருக்கு தங்களது ஆட்சேபனையை பதிவு தபாலில் அனுப்பினர்.

அளவு குறியீட்டு கற்களை பிடுங்கி எறிந்து கறுப்புக்கொடிகளை நட்டனர்.

மேலும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திலும் நான்கு வழிச்சாலை பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தனர்.

இந்நிலையில் விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி புளியரை பகுதியில் நாற்று நடப்பட்ட வயல்களில் அளவு குறியீட்டுக் கற்கள் பதிக்கப்பட்டதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

நன்றி: தினகரன்

Monday, 29 October 2018

வருமான வரித்துறை 95 சதவீதம் வடயிந்தியர்

வருமான வரித்துறை 95℅ வடயிந்தியர்

  கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த "வருமான வரித்துறை அதிகாரி" மற்றும் "உதவி வருமான வரித்துறை அதிகாரி" ஆகிய பதவிகளுக்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

அதில் சென்னை மண்டலத்திற்கு தேர்வான "வருமான வரித்துறை அதிகாரிகள்" 92 பேர்.

இதில் 5 பேர் மட்டுமே தமிழர்கள்.

அதேபோல சென்னை மண்டலத்திற்கு தேர்வான "உதவி வருமான வரித்துறை அதிகாரிகள்" 233 பேர்.

இதில் 17 பேர் மட்டுமே தமிழர்கள்.

தகவல்களுக்கு நன்றி: Sun News

எந்த மாநிலத்தை எடுத்தாலும் மத்திய அரசு பதவிகள் அனைத்திலும் ஹிந்தி பேசுவோரே நிறைந்து வழிகின்றனர்.

அத்தனைபேரும் குறுக்குவழியில் நுழைந்த திறமையற்ற நபர்கள்.

Thursday, 9 August 2018

ஈழ ஆதரவினால் ஆட்சியை இழந்தவரா கருணாநிதி?!

ஈழ ஆதரவினால் ஆட்சியை இழந்தவரா கருணாநிதி?!

கருணாநிதி ஈழ ஆதரவினால் ஆட்சியை இழந்ததாகக் கூறுவது பொய்.

  1991 இல் லஞ்சம், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் (திராவிடநாடு) பிரிவினை ஆகிய காரணங்களுக்காகவே அவரது ஆட்சி கலைக்கப்பட்டது.

இதோ சான்று படம்

[ மக்கள் குரல் (பத்திரிக்கை) தலையங்கம்

லஞ்சம் - அதிகார துஷ்பிரயோகம் - பிரிவினை
கருணாநிதி மந்திரிசபை டிஸ்மிஸ்
ஜனாதிபதி ஆட்சி அமுல் ]

(நன்றி: வடிவேலன் கலியபெருமாள் )

இதுபோக,
கருணாநிதியின் ஈழ வெறுப்பு மனநிலைக்கு ஏகப்பட்ட சான்றுகள் உண்டு.

1989 இல் திமுக வில் இருந்த வைகோ (இந்திய உளவுத்துறை உதவியுடன்) ஈழத்திற்கு பயணம் செய்கிறார்.

[ சான்று படம்:
இந்திய உளவாளி வைகோ
http://vaettoli.blogspot.com/2018/05/blog-post_1.html ]

வைகோவின் இந்த செயலைக் கடுமையாக விமர்சித்தார் கருணாநிதி.
வைகோ சென்றதுக்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அறிவித்தார்.

இதற்குப் பிறகு விடுதலைப் புலிகள் வைகோ மூலம் தன்னைக் கொல்ல முயற்சிப்பதாக தொடர்ந்து குற்றம் சுமத்திவந்தார் கருணாநிதி.

வைகோ தனக்கு புலிகளுடன் எந்த தொடர்பும் இல்லை என்று பலமுறை விளக்கமளித்தார்.

[ சான்று படம்:
எனக்கு புலிகளுடன் தொடர்பு இல்லை - வைகோ
http://vaettoli.blogspot.com/2018/05/blog-post_77.html ]

ஆயினும் அவரைக் கட்சியை விட்டே நீக்கினார் கருணாநிதி.
இதனால் 1993 இல் வைகோ புதுக் கட்சி தொடங்கினார் வைகோ.

அப்போதும் அவர் புலிகளின் கையாள் என்று குற்றம் சுமத்தினார் கருணாநிதி.
புலிகளுடன் தொடர்புடையோர் ம.தி.மு.க வை விட்டு விலகுமாறு வைகோ அறிவித்தார்.

[ சான்று படம்:
புலிகளுடன் தொடர்புடையோருக்கு ம.தி.மு.க.வில் இடமில்லை - வைகோ
http://vaettoli.blogspot.com/2018/05/blog-post_10.html ]

1997 ல் இனத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் பழ.நெடுமாறன் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் கருணாநிதி புலிகளின் 50 லட்ச ரூபாய் வரையான பணத்தையும் மருந்தையும் அதை வாங்க வந்த போராளிகளையும் பிடித்துவைத்துள்ளதாக எழுதியுள்ளார்.

[ சான்று:
பழ.நெடுமாறன் எழுதிய "பிரபாகரன் - தமிழர் எழுச்சி வடிவம்" என்ற நூல்
படம்:
http://vaettoli.blogspot.com/2018/07/blog-post_55.html ]

கருணாநிதி ஆட்சியைக் கலைக்க கூறப்பட்ட பல காரணங்களில் ஒன்று அவர் தமிழ்த் தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர் என்பதும் ஒன்று.

அதை வைத்துக்கொண்டு தி.மு.க வினர் பொய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

அதை யாரும் நம்பவேண்டாம்.

Sunday, 8 July 2018

தமிழகத்தின் வளர்ச்சி யாரால்?

தமிழகத்தின் வளர்ச்சி யாரால்?

காலத்தை பின்னோக்கி நகர்த்துவோம்.
1952 இல் பொட்டி ஸ்ரீராமுலு 10% கூட தெலுங்கர் வாழாத சென்னையை ஆந்திராவுடன் சேர்க்கக் கோரி சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கிறார்.

  ம.பொ.சி அவரிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

அப்போது ராமுலு "உங்கள் மாவட்டத் தலைநகரங்கள் கூட மாநிலத் தலைநகருக்கு இணையாக வளர்ந்து நிற்கின்றன.
ஈரோடு போல ஒரு நகரத்தை ஆந்திரா முழுவதும் சுற்றினாலும் பார்க்கமுடியாது.
எனவே பின்தங்கியுள்ள எங்களுக்கு சென்னையை மட்டும் விட்டுத்தாருங்கள்.
உங்களுக்கு புண்ணியமாகப் போகும்" என்று கெஞ்சுகிறார்.

அதாவது தமிழகம் அப்போதே ஒரு முன்னேறிய மாநிலம் என்பதை இதிலிருந்து அறிந்துகொள்ளலாம்.
 
(இதற்கு 1920ல் ஆட்சிக்கு வந்த முதல் திராவிடக் கட்சியான நீதிக்கட்சியின் 13 ஆண்டுகால ஆட்சிதான் சிலர் சப்பைக்கட்டு கட்டாலம்.
நீதிக்கட்சி சில சீர்திருத்தங்களைச் செய்ததே தவிர பொருளாதார திட்டம் எதையும் செயல்படுத்தவில்லை)

இன்று இந்தியாவிலேயே தமிழகமும் கேரளாவும் எந்தவொரு மாநிலத்தையும் விட முன்னேறிய மாநிலங்கள்.

அதிலும் தமிழகம் மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் சீரான வளர்ச்சி கொண்ட மாநிலம்.

இந்தியாவின் 6% மக்கட்தொகை மட்டுமே கொண்ட 11வது பெரிய மாநிலமான தமிழகம், இந்தியாவின் இரண்டாவது பணக்கார மாநிலம்.
இந்திய பொருளாதாரத்தில் மூன்றில் ஒரு பங்கை தமிழகம் தன்வசம் வைத்துள்ளது.

இதற்கு காரணம் திராவிடக் கட்சிகளா என்று கேட்டால் நிச்சயம் இல்லை.

திராவிடக் கட்சிகளும் இயக்கங்களும் முன்னேற்றத்திற்கு தடையாகவே என்றும் இருந்துள்ளன.

நமது உரிமைகள், பொருளாதாரம், வளங்கள் என அனைத்தையும் திராவிட ஆட்சியாளர்களான வந்தேறிகள் மத்திய அரசும் சுரண்டவிட்டு தானும் சுரண்டிக் கொளுத்தனரேயன்றி தமிழகத்தின் வளர்ச்சிக்கு எதையுமே செய்யவில்லை என்பதுதான் உண்மை.

அதாவது ஆட்சியாளர்கள் சாதிக்கவேண்டிய அத்தனை சந்தர்ப்பங்களிலும் கோட்டை விட்டனர்.

ஆனால், மக்கள் சாதிக்கவேண்டிய அத்தனை சந்தர்ப்பங்களிலும் சாதித்தே வந்துள்ளனர்.

எந்தவொரு உருப்படியான தலைவனும் இல்லாமல் பொதுமக்களின் இயல்பான தனிமனித ஒழுக்கமும் திறமையும் மட்டுமே நமது இந்த வளர்ச்சிக்குக் காரணம்.

இப்போதும் நாம் முன்னேறிய மாநிலம் போன்ற ஒரு போலியான தோற்றம்தான் இன்று உள்ளது.
அதற்குக் காரணம் பிற மாநிலங்கள் நம்மை விட பின்தங்கிய நிலையில் உள்ளன.
வடக்கே செல்லச் செல்ல மிகமோசமான நிலை உள்ளது.

அவர்களோடு நம்மை ஒப்பிட்டு முன்னேறிய மாநிலம் என்பது மடைமை.

நாம் ஒரு தனிநாட்டு இனம்.
இயல்பிலேயே வல்லரசு.
நம்மால் ஐரோப்பியருடன் போட்டிபோட முடியும்.

தமிழ்நாடு தனிநாடாக இருக்கும் பட்சத்தில் முன்னேறிய நாடுகளுடன் போட்டி போடும் வல்லமை கொண்டது என தனது 'An Uncertain Glory: India and its Contradictions' என்ற நூலில் பொருளாதார மேதை அமர்த்தியா சென் தெரிவித்துள்ளார் (இவர் 1998ல் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றவராவார்).

நம்முடைய வளர்ச்சியில் சோம்பேறி இனங்களுக்குப் பங்குகொடுத்தே நாம் நாசமாய்ப் போனோம்.

ஆண்டுக்கு சுமார் "ஒரு லட்சம் கோடி" மத்திய அரசுக்கு கப்பம் கட்டி எல்லா மாநிலத்தானும் அனுபவித்துபோக மீதி நிதியை நாம் பெறுகிறோம்.

ஒரு ரூபாய் வரி கட்டி 30 பைசா திரும்பப் பெறுகிறோம்.

பேரிடர் காலத்திலும் வெறும் 500 கோடி கூட நிவாரணம் கேட்டுக் கிடைக்காமல் அல்லாடுகிறோம்.

ஆங்கிலேயர் வரும்வரை நாம் தனியரசு.
1947 லேயே நாம் தனிநாடு ஆகியிருக்கவேண்டும்.

நமக்கான உரிமைகள் மறுக்கப்பட்டபோதே நாம் இந்திய ஒன்றியத்தில் இருந்து விலகியிருக்க வேண்டும்.

நம்முடைய அடிப்படைத் தேவைகளுக்குக் கூட போராடவேண்டிய நிலை வந்தபோதாவது வெளியேறியிருக்க வேண்டும்.

இன்று நம் இனத்தையும் மண்ணையும் அழிக்கும் நிலைப்பாட்டிற்கு ஹிந்தியமும் திராவிடமும் வந்தபின்னும் நாம் சும்மாயிருக்கிறோம்.

தேசபக்தியின் பெயரால் நம் மண்ணையும் உயிரையும் கேட்கிறது ஹிந்தியம்.

இனியும் பொறுக்கக்கூடாது!

நாம் தனிநாடாவோம்!

ஆகாவிட்டால் சாவோம் என்பது உறுதி.

ஆகிவிட்டால் வல்லரசாவோம் என்பதும் உறுதி.

படம்: வீரப்பனார் மற்றும் தனித்தமிழ்நாடு ஆயுதக் குழுக்கள் வெளியிட்ட "பெரிய தமிழ்நாடு" வரைபடம்