Sunday 5 April 2020

கொரோனா பாதிப்பில் பிரதமரின் செயல்பாடு


கொரோனா பாதிப்பில் பிரதமரின் செயல்பாடு
இதுவரை வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசின் பங்கு என்ன?!
யோசித்ததுண்டா?!
இதை நீங்கள் யோசித்தால் ஒன்று தெளிவாகப் புரியும்.
நமது தேவைகளை நிறைவேற்றுவது மாநில அரசாங்கம் மட்டுமே!
மத்திய அரசு எதுவுமே செய்வதில்லை.
அது வரி என்கிற பெயரில் மாநிலங்களைக் கொள்ளையடித்துவிட்டு 'அதைச் செய்' 'இதைச் செய்' என்று கட்டளை போடுவதோடு சரி!
தமிழகத்தில் ஒரு குடும்பத்திற்கு 4 பேர் என்று வைத்துக்கொள்வோம்.
தோராயமாக (தலைக்கு 3000 ரூபாய் என) ஒவ்வொரு குடும்பமும் மாதந்தோறும் 12,000 ரூபாய் மத்திய அரசுக்கு வரி கொடுக்கிறோம்.
இத்தனை பணத்தையும் வாங்கிக்கொண்டு மத்திய அரசு நமக்குத் தருவதென்ன?!
ரயில் போக்குவரத்து, தபால் சேவை, ராணுவ பாதுகாப்பு (?), விமான சேவை (திவாலாகிவிட்டது) , ஒன்றிரண்டு மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள்.
அவ்வளவுதான்! அவ்வளவேதான்!
தமிழகம் கட்டும் வரி ஒரு ரூபாய் என்றால் தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கும் நிதி 30 பைசா என்ற அளவில் உள்ளது.
வரியை மட்டும் இங்கே கூறியுள்ளேன்.
அதைப்போல இரண்டு மடங்கு நமது வளங்களைச் சுரண்டுகிறது ஹிந்தியா!
எவ்வளவு இக்கட்டான சூழலிலும் நமக்கு மத்திய அரசு உதவுவது கிடையாது!
நாம் கட்டும் வரி 100 ரூபாய் என்றால் பேரிடர் காலங்களில் நாம் 10 ரூபாய் கேட்பதும் மத்திய அரசு 10 பைசா விட்டெறிவதும் வாடிக்கையாகிவிட்டது.
[இதையெல்லாம் புள்ளிவிபரமாக தமிழ்தேசியப் பேரியக்கம் வெளியிட்டுள்ளது.]
தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பில் மத்திய அரசு செய்தவற்றைப் பார்ப்போம்.
முன்னெச்சரிக்கை :-
ஜனவரி 31 இல் கொரோனா இந்தியாவிற்கு வந்துவிட்டது.
மோடி சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் கூடி பேசியது மார்ச் 4 இல்.
இதற்குப் பத்துநாட்கள் கழித்து கொரோனா ஒரு தேசிய அச்சுறுத்தல் இல்லை என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகிறது.
மார்ச் 16 இல் சார்க் கூட்டமைப்பு நாடுகளுடனான சந்திப்பில் கொரோனா பாதிப்பு விவாதிக்கப்படுகிறது.
மார்ச் 19 இல் பொதுமக்கள் 22ம் தேதி ஊரடங்கைக் கடைபிடிக்க மோடி வேண்டுகோள் விடுக்கிறார்.
மார்ச் 22 இலிருந்து தரையில் ஓடும் சைக்கிள் வரை தடுத்து நிறுத்திய மோடி அரசு மார்ச் 25 இல் தான் (முதல் வேலையாக செய்திருக்கவேண்டிய) விமான சேவை ரத்து என்பதை செயல்படுத்துகிறது.
மருந்து துறை :-
இந்திய மருந்து தயாரிப்பு துறை படுத்து பல ஆண்டுகள் ஆகின்றன.
   1990 களில் தன் சொந்தக் கால்களில் நின்ற இந்திய மருந்து தயாரிப்பு கம்பெனிகள்
இப்போது சீனாவை நம்பி இருக்கின்றன.
சென்ற ஆண்டு சீனாவிலிருந்து இறக்குமதியான மருந்துப் பொருள் மட்டுமே நாட்டின் மொத்த மூலப் பொருள் இறக்குமதியில் 68%  என்கிறது எக்கனாமிக் டைம்ஸ்.
இப்போது சீனாவே படுத்துவிட்டது.
மருந்து எப்படி இருக்கும்?!
மலேரியாவுக்கு பயன்படும் மருந்தை பயன்படுத்தலாம் என்று தெரிந்தவுடன் அதன் ஏற்றுமதிக்குத் தடை விதித்தனர். அது ஒன்றுதான் குறிப்பிடும் அளவான செயல்பாடு.
மருத்துவத் துறை :-
இந்தியாவில் 10,000 பேருக்கு ஒரு டாக்டர் என்ற அளவில்தான் மருத்துவ வளர்ச்சி இருக்கிறது.
(இந்தியாவிலேயே தமிழகம்தான் இதில் முதலிடம் 260 பேருக்கு ஒரு டாக்டர்!
இதிலும் நீட் என்ற மண்ணைப் போட்டுவிட்டனர்).
41 பேருக்கு ஒரு மருத்துவர் இருந்த இத்தாலியே கொரோனாவிடம் மண்டியிட்டுவிட்டது என்றால் இந்தியா எவ்வளவு தீவிரமாக செயல்படவேண்டும் என்பதை யூகிக்கவும்.
ஆராய்ச்சித் துறை :-
கிருமிகள் ஆராய்ச்சியில் இதுவரை இந்தியா துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை.
மற்ற நாடுகள் மருந்து கண்டுபிடிக்க தனியாக நிதி ஒதுக்கி தீவிரமாக இயங்கிவருகின்றன.
பல நாடுகளில் இந்த ஆராய்ச்சி செய்யும் வல்லுநர்கள் பலர் தமிழர்களாக இருக்கின்றனர்
அதாவது அறிவாளிகள் அத்தனைபேரும் ஏற்கனவே நாட்டைவிட்டு வெளியாயிற்று.
உயிரியியல் தொடர்பான பரிசோதனைக் கூடங்கள் நாட்டில் மொத்தமே 40 தான் இருக்கின்றன.
அவைகளும் பல பல்கலைக் கழகங்களில் கல்விக்குத்தான் பயன்படுகின்றன.
அவசரகால உற்பத்தி :-
மருத்துவ சாதனங்கள் தயாரிப்பு மற்றும் தற்காப்பு உபகரணங்கள் தயாரிப்பு என்றாவது கவனம் செலுத்தவேண்டும்.
இங்கே மருத்துவர், செவிலியர், காவலர் என எவரிடமும் போதுமான மூச்சு கவசமோ, கையுறைகளோ, கிருமிநாசினி நீர்மங்களோ இல்லை.
(இருக்கின்றவையும் மாநில அரசுகள் கொடுத்தவை)
இது தொடர்பாக மார்ச் 18 இல் ஆபரேசன் செய்யப்படும்போது அணியப்படும் மூச்சுக் கவசங்களைத் தயாரிக்கும் அரசு நிறுவனமான HLL மற்றும் நெசவுத்துறை அதிகாரிகள் கூடிப் பேசினர்.
தயாரிப்பை அதிகரிப்பது பற்றியும் 75 லட்சம் மூச்சு கவசங்கள் உருவாக்கத் தேவை இருப்பது பற்றியும் HLL இரண்டு மாதங்களாக வலியுறுத்தி வந்ததை அந்த சந்திப்பிற்கு பிறகும்கூட நிறைவேற்றவில்லை.
இப்போது வரை HLL க்குத் தேவையான துணி சப்ளை செய்யப்படவில்லை.
பல உள்ளூர் நிறுவனங்கள் உற்பத்திக்கு அனுமதி கேட்டும் இதுவரை தரப்படவில்லை.
பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் "10 லட்சம் N-95 மூச்சுக் கவசங்கள் கேட்டோம். கிடைத்ததோ வெறும் 50,000 தான்" என்று வேதனை தெரிவித்துள்ளார்.
பண உதவி:-
மார்ச் 24 இல் சுகாதாரத் துறை மேம்பாட்டுக்கு 1500 கோடி அளித்ததோடு சரி.
(பட்டேல் சிலை செலவு 3,000 கோடி என்பதை நினைவில் கொள்க)
பிரதமர் நிவாரண வைப்பு 3000 கோடி,
மாநிலங்களுக்கான நிவாரண வைப்பு 20,000 கோடி,
தேசிய பேரிடர் நிவாரண வைப்பு 25,000 கோடி என எல்லாப் பணத்தையும் மத்திய அரசு வைத்திருக்கிறது.
உள்நாட்டிலும் ல நடிகர்களும் தொழிலதிபர்களும் நன்கொடை அளித்து வருகிறார்கள்.
(இந்த திட்டத்திற்கு பெயர் என்ன தெரியுமா?! "PM cares")
இப்படியாக தனியே 6500 கோடி வரை கிடைத்துள்ளது.
ஆனால் இதுவரை மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யவில்லை.
கேரள வெள்ளத்தின் போது வெளிநாட்டு வாழ் மலையாளிகளிடம் நன்கொடை வாங்கக்கூடாது என்று கூறிய மத்திய அரசு தற்போது வெளிநாட்டுவாழ் இந்தியர்களிடம் நன்கொடை பெற்றுவருகிறது.
என்றால் கொரோனா ஒரு தேசியப் பேரிடர்தானே?!
என்றால் மாநிலங்களுக்கு மேற்கண்ட நிதியை சிறிதுசிறிதாக ஒதுக்கலாம்தானே?!
ஆனால் மோடி இந்த நிலையிலும் பெருமை பீத்த கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள சார்க் நாடுகள் கூட்டாக செயல்பட அழைப்பு விடுத்து அதற்கான கூட்டு நிதிக்கு 75 கோடியை கொடுத்துவிட்டு வந்துள்ளார்.
[படம்: பிரதமர் நிவாரண நிதியில்  வருமானம் மற்றும் செலவு ஒப்பீடு.
இதிலேயே தெரியும் மத்திய அரசு மாநிலங்களுக்கு உதவும் லட்சணம்]
ஆள் உதவி :-
இத்தனை பெரிய நாட்டில் போலீஸ் பலம் மிகவும் குறைவு.
இதனால் மக்களைக் கட்டுப்படுத்த காவல்துறை திணறி வருகிறது.
எப்படியும் பாகிஸ்தான் படையெடுக்கப் போவதில்லை ராணுவத்தை அனுப்பாவிட்டாலும் துணைராணுவத்தையாவது அனுப்பியிருக்கலாம்.
மத்திய மருத்துவ நிறுவனங்களில் முக்கிய டாக்டர்கள் கேரளா பாதிக்கப்பட்ட போது அங்கே வந்த உதவியது உண்மைதான்.
ஆனால் அதன் பிறகு எங்குமே மத்திய அரசு சார்பில் வழிநடத்த திறமையான மருத்துவ மேதை ஒருவர் கூட எந்த மாநிலத்திற்கும் அனுப்பப்படவில்லை.
மனவலிமை ஊட்டுதல் :-
அறிவிப்புகளை மோடி அறிவிக்கிறார்.
மக்களிடம் மேல்வலியாமல் எதையாவது செய்யச் சொல்கிறார்.
அவ்வளவுதான்.
இதுவரை நிலை என்ன?
இதை சமாளிக்க என்ன திட்டம் வைத்துள்ளோம்?
பிற நாடுகள் இதற்கு என்ன செய்கின்றன? என அறிவுப் பூர்வமாக எதையும் பேசுவதில்லை.
உணர்வுப் பூர்வமாக பேசுகிறார் அவ்வளவே!
அவர் தன் திருவாயை அசைத்ததைத் தவிர வேறு என்ன செயல்பாட்டைச் செய்தார் என்று கேட்டால் விரல்களை அசைத்து ட்வீட் போட்டதைச் சொல்லலாம்.
மற்றபடி கொரோனா அமைத்துள்ள போர்க்களத்தில் அவர் கால்வைக்கவே இல்லை.
மத்திய அரசின் செயல்பாடுகள் எப்படி என்றால்
முதலில் லொக்கு லொக்கு என்று இருமிவிட்டு கச்சாமுச்சா என்று பிணாத்தும் ஒரு ரிங்டோனை அனைவருக்கும் வைத்தனர்.
அதனால் யாருக்கு என்ன புரிந்தது என்பது கொரோனாவுக்கே வெளிச்சம்.
மோடியும் எப்போதும் கெக்கரா பெக்கரா என்று இந்தியில்தான்  பிணாத்துகிறார்.
மக்களுக்கு புரியும்படி பேசமுடியாவிட்டால் கீழே சப் டைட்டிலாவது போடலாமே?!
அப்படி என்ன திமிர் என்று நினைக்கத் தோன்றுகிறது.
மக்களுக்கு ஓடோடி உழைப்பது மாநில அரசும் அதில் பங்குவகிக்கும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும்தான்.
மத்திய மந்திரிகளில் மோடி தவிர எவரும் வாயை அசைக்கும் வேலையைக் கூட செய்வது இல்லை.
பொருள் உதவி :-
கொரோனா இருக்கிறதா இல்லையா என்று கண்டறியும் பரிசோதனை கிட் வாங்கவோ தயாரிக்கவோ எந்த முயற்சியும் இதுவரை செய்யப்படவில்லை.
கொரோனா பாதிப்பு சோதனை செய்வதில் இந்தியா மிகவும் பின்னே இருக்கிறது என்று பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
Mylab எனும் ஒரு நிறுவனம் தயாரித்த பரிசோதனை கிட் மார்ச் 24 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஒரு சோதனைக்கு 2000 ரூபாய் செலவாகும் அதுவும் அந்த ஒரே நிறுவனத்தை நம்பியிருக்கும் நிலை.
இது யானைப்பசிக்கு சோளப்பொறி போன்றது!
சீனா கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள ஒரே நாளில் பிரம்மாண்ட மருத்துவமனை கட்டியது ஆனால் மத்திய அரசு அப்படி எதுவும் செய்யவில்லை.
மாநிலங்களில் இருக்கும் மத்திய அரசின் கட்டிடங்களை பயன்படுத்த அளிக்கலாம்.
மத்திய அரசு நடத்தும் நடத்தும் மருத்துவமனைகளில் ஒன்றை இதற்கு தனியாக அர்ப்பணிக்கலாம்.
இப்படி எதையும் செய்யவில்லை.
மலேரியா மருந்து மற்றும் பரிசோதனை கிட் தயாரிப்பை ஊக்கப்படுத்தி வரிகளைத் தளர்த்தி அனைவருக்கும் கிடைக்க எந்த ஒரு முயற்சியும் செய்யவில்லை.
திட்டமிடுதல் :-
வீட்டிலேயே இருங்கள் என்று கூறியதைத் தவிர கொரோனாவைக் கட்டுப்படுத்த எந்த திட்டமும் இல்லாதபோதே நமக்குப் புரிகிறது இதனால் ஏற்படும் பொருளாதார சரிவை ஈடுகட்ட எந்த திட்டமும் இருக்காது என்று.
தொழில்துறை மீண்டுவர எத்தனை நாள் ஆகும் அதற்கு முன்னெச்சரிக்கையாக என்ன செய்யவேண்டும் என்று தற்போது கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வரும் நாடுகளைப் பார்த்து நமக்கு ஏற்றதுபோல ஒரு திட்டத்தை தயாரிப்பதும் அவசியம்
.
அனேகமாக மோடியின் அடுத்த திட்டம் "மொட்டைமாடியில் நடனம் ஆடுவதாக" இருக்கலாம்.


No comments:

Post a Comment