Saturday 11 April 2020

நிவாரணம் - கேட்டதும் பெற்றதும் ஒரு ஒப்பீடு

நிவாரணம் - கேட்டதும் பெற்றதும் ஒரு ஒப்பீடு

தமிழகம் சராசரியாக ஒரு லட்சங்கோடி நிதியை மத்திய அரசுக்கு கப்பம் கட்டுவதும்
பிறகு பேரிடர் காலங்களில் மத்திய அரசிடம் நிதி கேட்டு குறிப்பிட்ட தொகை கேட்பதும்
அத்தொகையில் பத்தில் ஒரு பங்கு கூட மத்திய அரசு தராமல் புறக்கணிப்பதும் வழக்கமாகிவிட்டது.

ஆனால் வரலாற்றிலேயே இப்போதுதான் கேட்டதில் 17% தந்திருக்கிறார்கள்.
இதுவும் தமிழகம் மிக மோசமாக பாதிக்கப்பட்டதால் கிடைத்துள்ளது.

கடந்த பத்து ஆண்டுகளில் நிவாரணம் தேவைப்படும்போது மத்திய அரசிடம் கேட்டதும் கிடைத்ததும் வருமாறு,

2011 தானே புயல் :-

கேட்டது 5249 கோடி
பெற்றது 500 கோடி
(அதாவது 9.5%)

2015 வெள்ளம் :-

கேட்டது 25912 கோடி
பெற்றது 2195 கோடி
(அதாவது 8.47%)

2016 வர்தா புயல் :-

கேட்டது 22573 கோடி
பெற்றது 264 கோடி
(அதாவது 1.16% மட்டுமே!)

2017 வறட்சி :-

கேட்டது 39564 கோடி
பெற்றது 1748 கோடி
(அதாவது 4.4%)

2018 ஒக்கி புயல் :-

கேட்டது 5255 கோடி
பெற்றது 413 கோடி
(அதாவது 7.9%)

2018 கஜா புயல் :-

கேட்டது 15000 கோடி
பெற்றது 1146 கோடி
(அதாவது 7.64%)

2019 வறட்சி :-

கேட்டது 39565 கோடி
பெற்றது 1748 கோடி
(அதாவது 4.4%)

2020 கொரோனா பாதிப்பு :-

கேட்டது 3000 கோடி
பெற்றது 510 கோடி
(அதாவது 17%)

[நன்றி: விகடன்]

ஆனால் தமிழகத்துக்கு வழக்கமாக மத்திய அரசு தரவேண்டிய நிநி ஏறத்தாழ 4500 கோடி ரூபாய் ஓராண்டாக நிலுவையில் உள்ளது.

கஜா புயலுக்கு அறிவித்த நிதியை சாவகாசமாக மூன்று மாதம் கழித்துதான் கொடுத்தார்கள்.

தற்போது அறிவித்த நிதி கைக்கு வருவதற்குள் கொரோனா அதுவே குணமாகிவிடும்.

No comments:

Post a Comment