Showing posts with label ஒப்பீடு. Show all posts
Showing posts with label ஒப்பீடு. Show all posts

Saturday, 9 July 2022

தமிழ்தேசியம் மிகவும் கடினமான அரசியல்

தமிழ்தேசியம் மிகவும் கடினமான அரசியல்

 ஜனநாயகத்தில் எந்தவொரு அரசியலும் அதன் வரையறையில் எத்தனை சதவீத மக்கள் வருகின்றனர் என்பதைப் பொருத்து பலம் பெறுகிறது.

 இந்தியா வைப் பொருத்தவரை 

 தலித் அரசியல் என்பது,
தலித் vs தலித் அல்லாதவர்,
அதாவது 17% vs 83%.

 திராவிட அரசியல் என்பது,
தென்னிந்தியர் vs பிற இந்தியர்,
அதாவது 22% vs 78%.
 அல்லது,
பிராமணரல்லாதோர் vs பிராமணர்
அதாவது 96% vs 4%.

 மதவழி சிறுபான்மை அரசியல் என்பது,
இசுலாமியர் vs பிற மதத்தினர்,
அதாவது 15% vs 85%.

 இந்துத்துவ அரசியல் என்பது,
இந்துக்கள் vs பிற மதத்தினர்,
அதாவது 80% vs 20%

 மொழி அரசியல் என்பது,
(அந்தந்த மாநிலங்களின்) 
மண்ணின் மைந்தர் vs பிறமொழியினர்
(தமிழகத்தைப் பொறுத்தவரை)
இது 85% vs 15%.

 சாதி அரசியல் என்பது,
பெரும்பான்மை சாதி vs பிற சாதியினர்
இது 10-20% vs 80-90%.

 தொழிலாளர் அரசியல் என்பது,
தொழிலாளி vs முதலாளி
அதாவது 90-95% vs 5-10%

இலங்கையில் ஈழ அரசியல் என்பது,
தமிழர் vs சிங்களவர்,
அதாவது 25% vs 75%.

 (நான் கூறுவது வரையறை மட்டுமே!
நடைமுறையில் இருதரப்பு மக்களும் முழு ஆதரவு தராமலும் இருக்கலாம் அல்லது எதிர்தரப்பை ஆதரிப்பவர்களும் இருக்கலாம்)

 இங்கே நாம் பேசவேண்டியது இன அரசியல்,
அதாவது தமிழினம் vs பிற இந்திய, இலங்கை இனங்கள்,
இது 6% vs 94%.

 ஆக மிகவும் குறைந்த பலத்தை வைத்துக்கொண்டு மிகப் பெரிய பலத்தை நாம் எதிர்க்கிறோம்.

 தனிநாடு அடையும் போராட்டத்தில் இறுதி கட்டத்தில் உலகமே எதிர்க்கும்.
 அதாவது தமிழினம் vs உலக மக்கள்
இது 0.5% vs 99.5% ஆகும்.

பெரும்பான்மையாக இருந்துகொண்டு சிறுபான்மையை எதிர்ப்பது வீரமில்லை.

 கணிசமான சிறுபான்மையாக இருந்துகொண்டு அரசியல் செய்வதும் பெரிய வீரமில்லை.
 
ஆக இன அரசியல் பேசுபவர்கள் பெருமைக்குரிய அரசியல்வாதிகள்!

 ஒரு தமிழனுக்கு 200 தமிழரல்லாதவர் எதிர்க்கும் அவ்வேளையிலும் நாம் உறுதியாக வெல்வோம்!

 ஏனென்றால் ஈழத்தில் நாம் செய்து பார்த்துள்ளோம்! 

 

 

 

Wednesday, 1 August 2018

அம்பானிக்கு சவால்விடும் கருணாநிதி குடும்பம்

அம்பானிக்கு சவால்விடும் கருணாநிதி குடும்பம்

2011 இல் நேர்மையான அரசியல்வாதியாக அறியப்படும் ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்களின் 'த அதர் சைடு’ (The Other Side) எனும் பத்திரிக்கை "கருணாநிதி குடும்பத்தின்" சொத்து பட்டியலை வெளியிட்டது.

அதை தமிழில் விகடன் வெளியிட்டது.

அது வருமாறு,

(1) 6,124 சதுர அடிகள் பரப்பளவு கொண்ட "கருணாநிதியின்" கோ பாலபுரத்து வீடு - மதிப்பு
5 கோடி.

(2) "முரசொலி மாறனின்" கோபாலபுரத்து வீடு - மதிப்பு
5 கோடி.

(3) 1,200 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட "முரசொலி செல்வத்தின்" கோபாலபுரத்து வீடு - மதிப்பு
2 கோடி.

(4) கோபாலபுரத்தில் "சொர்ணத்தின்" வீடு - மதிப்பு
4 கோடி.

(5) கோபாலபுரத்தில் "மு.க.முத்துவின்" வீடு - மதிப்பு
2 கோடி.

(6) கோபாலபுரம் அமிர்தத்தின் வீடு - மதிப்பு
5 கோடி.

(7) மகள் "செல்வி, எழிலரசியின்" கோபாலபுரம் வீடு - மதிப்பு
2 கோடி.

(8) சி.ஐ.டி காலனியில் 9,494 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட இடத்தில் 3,500 சதுர அடிகளுக்கு கட்டப்பட்டு இருக்கும் கருணாநிதியின் துணைவியார் "ராஜாத்தி அம்மாளின்" வீட்டு மதிப்பு -
12 கோடி.

(9) மண்ணிவாக்கம் கிராமத்தில் "ராஜாத்தி அம்மாளுக்கும், கனிமொழிக்கும்" இருக்கும் 300 ஏக்கரின் மதிப்பு
4.5 கோடி.

(10) ராயல் ஃபர்னிச்சர் என்ற பெயரில் இருக்கும் "ராஜாத்தி அம்மாளின்" ஷாப்பிங் நிறுவனத்தின் மதிப்பு -
10 கோடி.

(11) 2,687 சதுர அடிகள்கொண்ட நிலப்பரப்பில் 2,917 சதுர அடியில் கட்டப்பட்டு இருக்கும் "மு.க.ஸ்டாலின்" வேளச்சேரி வீட்டு மதிப்பு -
2 கோடி.

(12) நுங்கம்பாக்கத்தில் இருக்கும் "உதயநிதி ஸ்டாலினின்" ஸ்னோ ஃபவுலிங் சென்டரின் சொத்து மதிப்பு -
2 கோடி.

(13) சென்னை போட் கிளப்பில் இருக்கும் "கலாநிதி மாறனின்" 16 கிரவுண்ட் மாளிகையின் நில மதிப்பு மட்டும் -
100 கோடி.

(14) கொட்டிவாக்கத்தில் இருக்கும் "மாறன் சகோதரர்களின்" பண்ணை வீட்டின் மதிப்பு -
10 கோடி.

(15) போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் எம்.எம் இண்டஸ்ட்ரீஸின் மதிப்பு -
2 கோடி.

(16) 6 கிரவுண்ட் பட்டா நிலத்திலும், 1,472 சதுர அடி புறம்போக்கு நிலத்திலும் அமைந்து இருக்கும் கோடம்பாக்கம் 'முரசொலி’ அலுவலகக் கட்டடத்தின் மதிப்பு -
20 கோடி.

(17) மகாலிங்கபுரத்தில் 2 கிரவுண்ட் நிலத்தில், சன் கேபிள் விஷன் சொத்து மற்றும் தொலைக்காட்சி உபகரணங்களின் மதிப்பு -
5 கோடி.

(18) சன் டி.வி-க்கு எம்.ஆர்.சி. நகரில் இருக்கும் 32 கிரவுண்டின் மதிப்பு -
100 கோடி.

(19) கோரமண்டல் சிமென்ட் கம்பெனியில் இருக்கும் 11 சதவிகித பங்குகளின் மதிப்பு -
50 கோடி.

(20) பெங்களூருவில் இருக்கும் "செல்வத்தின்" அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு -
4 கோடி.

(21) பெங்களூரு - மைசூர் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் "செல்வியின்" ஒரு ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு -
80 கோடி

(22) "மாறன் சகோதரர்களின்" 1.84 ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு -
120 கோடி.

(23) பெங்களூருவில் 10 கிரவுண்டில் அமைந்திருக்கும் உதயா டி.வி. சேனலின் நில மதிப்பு -
108 கோடி.

(24) பீட்டர்ஸ் ரோட்டில் இருக்கும் "மு.க.தமிழரசுவின்" 'ரெயின்போ இண்டஸ்ட்ரீஸின்’ மதிப்பு -
48 கோடி.

(25) அந்தியூரில் இருக்கும் "மு.க.தமிழரசுவின்" 13 கிரவுண்ட் பண்ணை வீட்டின் மதிப்பு
30 லட்சம்.

(26) புது டெல்லியில் இருக்கும் சன் டி.வி. அலுவலகத்தின் மதிப்பு
50 கோடி.

(27) எக்ஸ்பிரஸ் எஸ்டேட்டில் இருக்கும் பங்குகளின் மதிப்பு
தெரியவில்லை.

(28) தினகரன் பப்ளிகேஷன்ஸ்  மதிப்பு
தெரியவில்லை.

(29) சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் மதிப்பு
தெரியவில்லை

(30) முரசொலி அறக்கட்டளை மதிப்பு
தெரியவில்லை

(31) ஒரு ஷேர் 48 என்ற கணக்கில் ஸ்பைஸ் ஜெட் ஏர்வேஸில் 37 சதவிகிதப் பங்குகளை கன்ஸாகரா நிறுவனத்திடம் இருந்து அமெரிக்காவின் 'வில்பர் ராஸ் அண்ட் ராயல் ஹோல்டிங்குஸ் சர்வீஸர்’ மூலமாக வாங்கப்பட்டது.
இதை வாங்கிய சமயத்தில் 13,384 கோடிக்கு வாங்கியதாக "கலாநிதி மாறனே" பிரகடனம் செய்திருந்தார்.

(32) மதுரை, மாடக்குளம் கிராமத்தில் "தயாளு அம்மாள்" அறக்கட்டளைக்கு இருக்கும் நிலத்தின் மதிப்பு
தெரியவில்லை.

(33) தஞ்சாவூர் மாவட்டம் அகரத்திருநல்லூர் கிராமத்தில் "கருணாநிதிக்கு" இருக்கும் 21.30 ஏக்கரின் மதிப்பு -
தெரியவில்லை.

(34) திருவள்ளூர் மாவட்டத்தில் "தயாளு அம்மாளுக்கு" இருக்கும் 3.84 ஏக்கரின் மதிப்பு -
1 கோடி.

(35) "துர்கா ஸ்டாலினுக்கு" திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் 3,680 சதுர அடி நிலத்தின் மதிப்பு -
60 லட்சம்

(36) மதுரை வடக்கு தாலுக்கா - உத்தன்குடி கிராமத்தில் இருக்கும் "அழகிரியின்" 2.56 ஏக்கர் நிலத்தின் மதிப்பு
2 கோடி.

(37) மதுரை வடக்கு தாலுக்கா காலாத்திரி கிராமத்தில் "அழகிரிக்கு" இருக்கும் 7.53 ஏக்கரின் மதிப்பு -
2 கோடி.

(38) மதுரை தல்லாகுளத்தில் "அழகிரிக்கு" இருக்கும் 1.5 ஏக்கரின் மதிப்பு -
5 கோடி.

(39) மதுரை வடக்கு தாலுக்காவில் சின்னப்பட்டி கிராமத்தில் "அழகிரிக்கு" இருக்கும் 1.54 ஏக்கரின் மதிப்பு -
40 லட்சம்.

(40) மதுரை திருப்பரங்குன்றத்தில் "அழகிரிக்கு" இருக்கும் 12 சென்ட் நிலத்தின் மதிப்பு -
50 லட்சம்.

(41) மதுரை தெற்கு தாலுக்காவில் மாடக்குளம் கிராமத்தில் "அழகிரிக்கு" இருக்கும் 36 சென்ட் நிலத்தின் மதிப்பு -
1 கோடி.

(42) மதுரை தெற்கு பொன்மேனி கிராமத்தில் "அழகிரிக்கு" இருக்கும் 18,535 சதுர அடி நிலத்தின் மதிப்பு
2 கோடி.

(43) மதுரை சத்திய சாய் நகரில் 21 சென்டில் உள்ள "அழகிரி" வீட்டின் மதிப்பு -
2 கோடி.

(44) மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுக்காவில் தொகரை கிராமத்தில் "காந்தி அழகிரிக்கு" இருக்கும் 21.6 சென்ட் நிலத்தின் மதிப்பு -
60 லட்சம்.

(45) மதுரை மாவட்டம் (நாகமலைப் புதுக்கோட்டை) உலியம்குளம் கிராமத்தில் "காந்தி அழகிரிக்கு" இருக்கும் 5.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு -
20 லட்சம்.

(46) மதுரை மாவட்டம் மேலமாத்தூர் கிராமத்தில் "தயாநிதி அழகிரிக்கு" இருக்கும் 12.01 ஏக்கர் நிலத்தின் மதிப்பு -
50 லட்சம்.

(47) மதுரை, திருமங்கலம் டி.புதுப்பட்டி கிராமத்தில் "காந்தி அழகிரிக்கு" இருக்கும் 21.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு -
50 லட்சம்.

(48) கொடைக்கானல் மலையில் 82.3 சென்ட் சூழ இருக்கும் "காந்தி அழகிரியின்" பண்ணை வீட்டு மதிப்பு -
5 கோடி.

(49) மாடக்குளம் கிராமத்தில் "தயாநிதி அழகிரிக்கு" இருக்கும் 18.5 சென்ட் நிலத்தின் மதிப்பு -
50 லட்சம்.

(50) சென்னைக்கு அருகில் சோழிங்​கநல்லூரில் "தயாநிதி அழகிரிக்கு" இருக்கும் 4,200 சதுர அடியின் மதிப்பு -
2.5 கோடி.

(51) சென்னை திருவான்மியூரில் "தயாநிதி அழகிரிக்கு" சொந்தமான 3,912 சதுர அடி நிலத்தின் மதிப்பு -
3 கோடி.

(52) மதுரை சத்ய சாய்நகரில் "தயாநிதி அழகிரிக்கு" சொந்தமான 4,378 சதுர அடிகொண்ட கல்யாண மண்டபத்தின் மதிப்பு -
3 கோடி.

(53) சென்னை, மாதவரம் பால் பண்ணைக்கு அருகில் உள்ள ஆர்.சி.மேத்தா நகரில் இருக்கும் "தயாநிதி அழகிரியின்" அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு -
1 கோடி.

(54) சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கும் "தயாநிதி அழகிரிக்கு" சொந்தமான 50 சென்ட் நிலத்தின் மதிப்பு -
2 கோடி.

(55) மதுரை சிவரக்கோட்டையில் இருக்கும் "அழகிரிக்கு" சொந்தமான தயா இன்ஜினீயரிங் காலேஜ் மதிப்பு -
தெரியவில்லை.

(56) மதுரையில் 5 கிரவுண்டில் இருக்கும் "தயாநிதி அழகிரியின்" 8 மாடிகள்கொண்ட 'தயா சைபர் பார்க்’ மதிப்பு -
தெரியவில்லை.

(57) மதுரை பேருந்து நிலையத்துக்கு அருகில் இருக்கும் 'தயா டெக்னாலஜிஸ்’ என்ற நகர்ப்புற சொத்தின் மதிப்பு -
1 கோடி.

(58) சென்னை அண்ணா சாலையில் இருக்கும் வணிக வளாகம் (கதவு இலக்க எண்: 271- ஏ) மதிப்பு -
5 கோடி.
இது "கனிமொழிக்குச்" சொந்தமானது.

(59) 'வெஸ்ட் கேட் லாஜிஸ்ட்டிக்ஸ்’ என்ற கம்பெனியில் "கனிமொழிக்கு" இருக்கும் பங்கின் மதிப்பு -
20 கோடி.

(60) கலைஞர் டி.வி-யில் கனிமொழிக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு -
30 கோடி.

(61) ஊட்டியில், வின்ட்ஸர் எஸ்டேட்டில் இருக்கும் 525 ஏக்கர் தேயிலை தோட்டத்தின் மதிப்பு -
50 கோடி. இது கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது.

(62) கலைஞர் டி.வி-யில் "தயாளு அம்மாளுக்கு" இருக்கும் பங்குகளின் மதிப்பு -
90 கோடி.

(63) அந்தமான் தீவுகளில் இருக்கும் 400 ஏக்கர் கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது -மதிப்பு
தெரியவில்லை

(64) கூர்க் (குடகு மலை) காபி தோட்டம், கலைஞர் குடும்பத்துக்குச் சொந்தமானது -மதிப்பு
தெரியவில்லை.

(65) தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெரிய நகரத்திலும் மல்டிப்ளெக்ஸ் கட்ட கலைஞர் குடும்பத்துக்குத் திட்டம் உள்ளது.

(66) எஸ்.டி. கூரியர் என்ற கம்பெனிக்கு சொந்த​மான இரண்டு விமானங்கள் "மாறன் சகோதரர்​கள்" உடையதே.

(67) தமிழ்நாடு ஹாஸ்பிடல்ஸுக்குப் பின்னால் இருக்கும் 'சன் மெடிக்கல் காலேஜ் மற்றும் மருத்துவமனை’ - "மாறனின் மகள் அன்புக்கரசிக்கு" சொந்தமானது.

(68) சாய்பாபாவுக்கும் கருணாநிதியின் குடும்பத்​துக்கும் ஏற்பட்ட ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை அடுத்து, ஆபட்ஸ்பரி வளாகத்தில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தை "மாறன் சகோதரர்கள்" கட்ட இருக்கும் மருத்துவமனைக்காக ஒப்படைக்க உள்ளார்கள்.

(69) கோவை (புரூக் பாண்ட் சாலையில் இருக்கும் புரூக் ஃபில்ட்ஸ் வளாகத்தின் ஒரு பகுதியை) ஆர்.எம்.கே.வி. கடை அமைந்திருக்கும் ஒரு சொத்து "கனிமொழிக்கு" சொந்தமானது என்று பொதுமக்கள் நம்புகிறார்கள்

- இவ்வாறு அந்தப் பட்டியல் உள்ளது.

நன்றி: விகடன் (10.08.2011)

இது 2011 ல் உள்ள நிலைதான்.
அதுவும் கணக்கில் வரும் சொத்துக்கள்.
மதிப்பு 'தெரியவில்லை' என்று உள்ள சொத்துக்களுக்கு 1 கோடி மதிப்பிட்டாலும் 14,300 கோடி வரை வருகிறது.

கணக்கில் வராத கறுப்புப் பணம் எப்படியும் பத்துமடங்கு வரை இருக்கலாம்.
அதாவது 1.4 லட்சம் கோடி.

(2008 ல் நடந்த 2ஜி ஊழல் இதில் சேர்க்கப்படவில்லை.
2010 ல் நீரா ராடியா ஒலிநாடா வெளியான பிறகே அது கவனம் பெற்றது.
அதையும் சேர்த்தால் ஒன்னேமுக்கால் லட்சம் கோடி சேர்த்து 1.6 லட்சம் கோடி வரும்)

இதே ஆண்டு 'உலகின் பணக்கார இந்தியன்' என்று முகேஷ் அம்பானி அறியப்பட்டார்.
அப்போது அவரது சொத்துமதிப்பு 1.2 லட்சம் கோடி கூட இல்லை.



Sunday, 8 July 2018

தமிழகத்தின் வளர்ச்சி யாரால்?

தமிழகத்தின் வளர்ச்சி யாரால்?

காலத்தை பின்னோக்கி நகர்த்துவோம்.
1952 இல் பொட்டி ஸ்ரீராமுலு 10% கூட தெலுங்கர் வாழாத சென்னையை ஆந்திராவுடன் சேர்க்கக் கோரி சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கிறார்.

  ம.பொ.சி அவரிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

அப்போது ராமுலு "உங்கள் மாவட்டத் தலைநகரங்கள் கூட மாநிலத் தலைநகருக்கு இணையாக வளர்ந்து நிற்கின்றன.
ஈரோடு போல ஒரு நகரத்தை ஆந்திரா முழுவதும் சுற்றினாலும் பார்க்கமுடியாது.
எனவே பின்தங்கியுள்ள எங்களுக்கு சென்னையை மட்டும் விட்டுத்தாருங்கள்.
உங்களுக்கு புண்ணியமாகப் போகும்" என்று கெஞ்சுகிறார்.

அதாவது தமிழகம் அப்போதே ஒரு முன்னேறிய மாநிலம் என்பதை இதிலிருந்து அறிந்துகொள்ளலாம்.
 
(இதற்கு 1920ல் ஆட்சிக்கு வந்த முதல் திராவிடக் கட்சியான நீதிக்கட்சியின் 13 ஆண்டுகால ஆட்சிதான் சிலர் சப்பைக்கட்டு கட்டாலம்.
நீதிக்கட்சி சில சீர்திருத்தங்களைச் செய்ததே தவிர பொருளாதார திட்டம் எதையும் செயல்படுத்தவில்லை)

இன்று இந்தியாவிலேயே தமிழகமும் கேரளாவும் எந்தவொரு மாநிலத்தையும் விட முன்னேறிய மாநிலங்கள்.

அதிலும் தமிழகம் மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் சீரான வளர்ச்சி கொண்ட மாநிலம்.

இந்தியாவின் 6% மக்கட்தொகை மட்டுமே கொண்ட 11வது பெரிய மாநிலமான தமிழகம், இந்தியாவின் இரண்டாவது பணக்கார மாநிலம்.
இந்திய பொருளாதாரத்தில் மூன்றில் ஒரு பங்கை தமிழகம் தன்வசம் வைத்துள்ளது.

இதற்கு காரணம் திராவிடக் கட்சிகளா என்று கேட்டால் நிச்சயம் இல்லை.

திராவிடக் கட்சிகளும் இயக்கங்களும் முன்னேற்றத்திற்கு தடையாகவே என்றும் இருந்துள்ளன.

நமது உரிமைகள், பொருளாதாரம், வளங்கள் என அனைத்தையும் திராவிட ஆட்சியாளர்களான வந்தேறிகள் மத்திய அரசும் சுரண்டவிட்டு தானும் சுரண்டிக் கொளுத்தனரேயன்றி தமிழகத்தின் வளர்ச்சிக்கு எதையுமே செய்யவில்லை என்பதுதான் உண்மை.

அதாவது ஆட்சியாளர்கள் சாதிக்கவேண்டிய அத்தனை சந்தர்ப்பங்களிலும் கோட்டை விட்டனர்.

ஆனால், மக்கள் சாதிக்கவேண்டிய அத்தனை சந்தர்ப்பங்களிலும் சாதித்தே வந்துள்ளனர்.

எந்தவொரு உருப்படியான தலைவனும் இல்லாமல் பொதுமக்களின் இயல்பான தனிமனித ஒழுக்கமும் திறமையும் மட்டுமே நமது இந்த வளர்ச்சிக்குக் காரணம்.

இப்போதும் நாம் முன்னேறிய மாநிலம் போன்ற ஒரு போலியான தோற்றம்தான் இன்று உள்ளது.
அதற்குக் காரணம் பிற மாநிலங்கள் நம்மை விட பின்தங்கிய நிலையில் உள்ளன.
வடக்கே செல்லச் செல்ல மிகமோசமான நிலை உள்ளது.

அவர்களோடு நம்மை ஒப்பிட்டு முன்னேறிய மாநிலம் என்பது மடைமை.

நாம் ஒரு தனிநாட்டு இனம்.
இயல்பிலேயே வல்லரசு.
நம்மால் ஐரோப்பியருடன் போட்டிபோட முடியும்.

தமிழ்நாடு தனிநாடாக இருக்கும் பட்சத்தில் முன்னேறிய நாடுகளுடன் போட்டி போடும் வல்லமை கொண்டது என தனது 'An Uncertain Glory: India and its Contradictions' என்ற நூலில் பொருளாதார மேதை அமர்த்தியா சென் தெரிவித்துள்ளார் (இவர் 1998ல் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றவராவார்).

நம்முடைய வளர்ச்சியில் சோம்பேறி இனங்களுக்குப் பங்குகொடுத்தே நாம் நாசமாய்ப் போனோம்.

ஆண்டுக்கு சுமார் "ஒரு லட்சம் கோடி" மத்திய அரசுக்கு கப்பம் கட்டி எல்லா மாநிலத்தானும் அனுபவித்துபோக மீதி நிதியை நாம் பெறுகிறோம்.

ஒரு ரூபாய் வரி கட்டி 30 பைசா திரும்பப் பெறுகிறோம்.

பேரிடர் காலத்திலும் வெறும் 500 கோடி கூட நிவாரணம் கேட்டுக் கிடைக்காமல் அல்லாடுகிறோம்.

ஆங்கிலேயர் வரும்வரை நாம் தனியரசு.
1947 லேயே நாம் தனிநாடு ஆகியிருக்கவேண்டும்.

நமக்கான உரிமைகள் மறுக்கப்பட்டபோதே நாம் இந்திய ஒன்றியத்தில் இருந்து விலகியிருக்க வேண்டும்.

நம்முடைய அடிப்படைத் தேவைகளுக்குக் கூட போராடவேண்டிய நிலை வந்தபோதாவது வெளியேறியிருக்க வேண்டும்.

இன்று நம் இனத்தையும் மண்ணையும் அழிக்கும் நிலைப்பாட்டிற்கு ஹிந்தியமும் திராவிடமும் வந்தபின்னும் நாம் சும்மாயிருக்கிறோம்.

தேசபக்தியின் பெயரால் நம் மண்ணையும் உயிரையும் கேட்கிறது ஹிந்தியம்.

இனியும் பொறுக்கக்கூடாது!

நாம் தனிநாடாவோம்!

ஆகாவிட்டால் சாவோம் என்பது உறுதி.

ஆகிவிட்டால் வல்லரசாவோம் என்பதும் உறுதி.

படம்: வீரப்பனார் மற்றும் தனித்தமிழ்நாடு ஆயுதக் குழுக்கள் வெளியிட்ட "பெரிய தமிழ்நாடு" வரைபடம்

Saturday, 26 August 2017

தமிழின பார்ப்பனரும் இசுலாமியரும் ஒதுக்கப்படலாமா?

தமிழின பார்ப்பனரும் இசுலாமியரும் ஒதுக்கப்படலாமா?

* பார்ப்பனர் ஏன் தமிழில் தொழுவதில்லை?
அவர்களது புனிதநூல் ஏன் தமிழில் இல்லை?

* பார்ப்பனர் திருமண முறை ஏன் வேறுபட்டதாக உள்ளது?

* பார்ப்பனர் முடிவெட்டிக்கொள்ளும் முறை  ஏன் விசித்திரமாக உள்ளது?

* பார்ப்பனர் உடையணிவது ஏன் வேறுமாதிரி உள்ளது?

* பார்ப்பனர் வணக்கம், வாழ்த்து சொல்வது ஏன் தமிழல் இல்லை?

* பார்ப்பனர் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் சொற்கள், உறவுமுறை கூறி அழைப்பது போன்றவை வேறு மொழியில் ஏன் உள்ளன?

* பார்ப்பனர் ஏன் குலதெய்வ வழிபாடு செய்வதில்லை?

* பார்ப்பனர் வெளியிலிருந்து வந்த இனம் என்று சில கட்சிகள் பிரச்சாரம் செய்கிறார்களே?

* பார்ப்பனரின் மூதாதையர்கள் ஆட்சி செய்தபோது மக்களை கொடுமைப்படுத்தியதாக கூறுகிறார்களே?

* பார்ப்பனர் வீட்டிற்குள் வேறுமொழி பேசுவதாக கூறுகிறார்களே?

* பார்ப்பனர் ஏன் தமிழில் பெயர்வைப்பதில்லை?

* பார்ப்பனர் என்றால் நிறமாகத்தான் இருப்பார்கள்.

* பார்ப்பனர்கள் அனைவருமே மதவெறி பிடித்தவர்கள் என்று கூறப்படுகிறதே?

* பார்ப்பனர்கள் இன உணர்வு இல்லாதவராக உள்ளனரே?

* பார்ப்பனர்கள் வேறு ஒரு மொழியை படிப்பதை ஊக்குவிக்கும் வகையில் பள்ளி, கல்லூரி, பயிற்சி மையங்கள் நடத்துகின்றனரே?

* பார்ப்பனர் தமது புனித தலங்களாக தமிழகத்திலிருந்து வெகுதூரத்தில் உள்ள இடங்களைச் சொல்கிறார்களே?

மேற்கண்ட அனைத்திலும் பார்ப்பனர் என்று வரும் இடத்தில் இசுலாமியர் என்று போட்டு ஒரு முறை படிக்கவும்.

விளையாட்டில்லை ஒருமுறை படியுங்கள்.

தமிழினத்து இசுலாமியர் எப்படி தமிழரோ அப்படியே பார்ப்பனரும் தமிழரே!

பிற இனத்து பிராமணரை தமிழினத்து பார்ப்பனருடன் குழப்புவதென்பது
உருது முஸ்லீம்களை தமிழினத்து இசுலாமியருடன் குழப்புவது போன்றது.

பார்ப்பனரை ஆரியருடன் தொடர்பு படுத்துவதென்பது
இசுலாமியரை அராபியருடனும்
கிறித்தவரை ஐரோப்பியருடனும் தொடர்புபடுத்துவது போன்றது.

மேலும் அறிய,

தேடுக: பார்ப்பனீயம் பிராமணீயம் வேறுபாடு வேட்டொலி

தேடுக: பார்ப்பனர் பிராமணர் வேறுபாடு வேட்டொலி

Saturday, 8 November 2014

பூலித் தமிழனும் கெட்டி வடுகனும்

பூலித் தமிழனும்
கெட்டி வடுகனும்

கட்டபொம்மன் ஆன கெட்டிபொம்மு நாய்க்கென்:

கெட்டிபொம்மு நாய்க்கெனின் முப்பாட்டன் ஜெகவீர கெட்டிபொம்மு நாய்க்கென் என்ற தெலுங்கன் பெல்லாரி என்ற இடத்திலிருந்து வந்தவன். இவன் குறுக்குவழியில் பாஞ்சாலங்குறிச்சி அரசைக் கைப்பற்றினான்.
வந்தேறிகள் அப்போது தமிழர்களை வரைமுறையில்லாமல் சுரண்டிக்கொண்டிருந்த காலம்.
ஆங்கிலேயரை எதிர்த்து முதன்முதலாக வீரப்போரைத் தொடங்கிய பூலித்தேவன் மற்றும் பெரிய காலாடி, சின்னக்காலாடி, வாண்டாயத்தேவன் கூட்டணிக்கு எதிராக கெட்டிபொம்முவின் தாத்தா (அவர் பெயரும் கெட்டிபொம்மு) ஆங்கிலேயருடன் இணைந்து போர்நடத்தினார்.
பூலித்தேவன் வீரமரணமடைந்து (1767) இருபத்தி மூன்று ஆண்டுகள் கழித்துதான் 1790ல் கட்டபொம்மன் என்றழைக்கப்படும் கெட்டிபொம்மு ஆட்சிக்கு வருகிறான். தாத்தா காலத்திலிருந்து வெள்ளையனுக்கு ஆதரவாக இருந்தவன் அடாவடியாக வரிகொடுக்க மறுக்கிறான்.
கலெக்டர் ஆலன்துரை கெட்டிபொம்மு மீது படையெடுக்கிறான். ஆனால், கெட்டிபொம்முவைத் தோற்கடிக்கமுடியவில்லை. பொம்மு தன் ஆட்சியின் கீழுள்ள மக்களைக் கொடுமைப்படுத்தி கொடுங்கோலாட்சி புரிகிறான்.பக்கத்து பாளையமான எட்டயபுரத்தைப் பலமுறைக் கொள்ளையடிக்கிறான். இதுகுறித்து எட்டையபுர மன்னர் ஆங்கிலேயரிடம் முறையிடுகிறார். அப்போது புதிதாக வந்த மாவட்ட கலெக்டர் ஜாக்சன்  கெட்டிபொம்முவை எச்சரிக்கிறான். வரியோடு வந்து தன்னை நேரில் சந்திக்குமாறு உத்தரவிடுகிறான்.
வரியோடு வந்த கெட்டிபொம்முவுக்கு பாடம் கற்பிக்கும்வகையில் 23நாட்கள் அவனை ஒவ்வொரு இடமாக அலைக்கழித்து இராமநாதபுரம் வரை வரவைக்கிறான். இந்த சந்திப்பின்போது ஜாக்சனுக்கும் கெட்டிபொம்முவுக்கு வாக்குவாதம் வந்து அங்கிருந்தவர்களைத் தாக்கிவிட்டு கெட்டிபொம்மு தப்பிவிடுகிறான். உடனே பானர்மேன் தலைமையில் ஆங்கிலேயர்கள் கெட்டிபொம்முவை தோற்கடித்து, தப்பியோடிய அவனை புதுக்கோட்டை மன்னன் உதவியுடன் சிறைபிடித்து தூக்கிலிடுகின்றனர்.
இதற்கெல்லாம் கெட்டிபொம்மு மீது எட்டையபுர மன்னர் அளித்த புகார்கள் இன்றும் சான்றாக உள்ளன. எட்டப்பன் கெட்டிபொம்முவைக் காட்டிக்கொடுத்ததாக எந்த சான்றும் இதுவரை இல்லை.
கெட்டிபொம்முவால் மக்களுக்கு நன்மை நடந்ததாக எந்த செய்தியும் இல்லை. ஆங்கிலேயருக்கும் நாயக்கர்களுக்கும்  மக்களைச் சுரண்டுவதில் ஏற்பட்ட போட்டியே இது.
ஆனால், இவனை வெள்ளையரை முதன்முதலாக எதிர்த்தவன் என்று திரிக்கின்றனர்.

காத்தப்ப பூலித்தேவனார்:

1755ல் மாபூஸ்கான்(ஆற்காடு நவாப் பரம்பரை) கர்னல் ஹீரான்(ஆங்கிலேயர்) கான்சாகிப் (மருதநாயகம்) ஆகியோர் கூட்டணி அமைத்து பாளையங்களாகச் சிதறிக்கிடந்த தமிழகத்தை கைப்பற்றத் தொடங்கினார்கள். பல பாளையங்கள் அடிபணிந்தன. முதன்முதலாக அந்த பெரிய நவீனமான படையை எதிர்த்து போர்புரிந்தவர் பூலித்தேவனே ஆவார்.
பக்கத்தில் இருந்த பாளையங்களுடன் கூட்டணி அமைத்து ஆங்கிலேயர் படையை 1755ல் தோற்கடிக்கிறார். 12மாதங்கள் கழித்து1756ல் மீண்டும் பெரிய படையோடு வந்தவர்களை திருநெல்வேலியில் மீண்டும் தோற்கடிக்கிறார்.
1759ல் மீண்டும் கான்சாகிப் தலைமையில் நாகப்பட்டினத்தில் இருந்து படை, திருச்சியில் இருந்து படை, தூத்துக்குடியில் இருந்து படை, பாளையங்கோட்டையில் இருந்து படை, மதுரையில் இருந்து படை, திருவனந்தபுரத்தில் இருந்து படை என பெரிய படையைத் திரட்டிக்கொண்டுவந்து போரிட்டனர்.
ஆனால், பூலித்தேவரிடம் எதுவும் பலிக்கவில்லை, போரில் பூலித்தேவர் மாபெரும் வெற்றிபெற்றார்.
ஆற்காடு நவாப் மாபூஸ்கான் உட்பட பலர் பூலித்தேவர் வீரத்தைப் பார்த்து வியந்து அவருடன் சேர்ந்துகொள்கின்றனர்.
1760ல் மீண்டும் கான்சாகிப் படையெடுத்துவந்தான். இம்முறையும் நான்காவது முறையாகப் பூலித்தேவனார் அவனைத் தோற்கடித்தார்.
1761ல் மீண்டும் பெரிய படையுடன் கான்சாகிப் ஆங்கிலேயர் ஆதரவுடனும் போரிட்டான். இம்முறை பூலியார் தோற்றுவிட்டார்.
(தோற்கடித்த கான்சாகிப் அதாவது மருதநாயகம் ஒரு தமிழன் என்பதை நினைவில் கொள்க. இவனே வெள்ளையருக்கு பெரும்சவாலாக விளங்கிய ஹைதர் அலியையும் தோற்கடித்தவன், பிற்காலத்தில் ஆங்கிலேயருடன் முரண்பட்டு மதுரையைத் தன்கட்டுப்பாட்டில் கொண்டுவந்தான். ஆங்கிலேயர் சூழ்ச்சிசெய்து தொழுகையின்போது இவனைக் கைது செய்து பின் தூக்கிலிட்டனர்)

பூலியார் நற்செயல்கள்:

சங்கரன்கோவில் கோவிலுக்கு சபாபதி மண்டபம் கட்டியுள்ளார், தெப்பக்குளமும் வெட்டியுள்ளார்.
கரிவலம் வந்தநல்லூர் பால்வண்ணநாதர் ஆலயத்துக்கு முன்மண்டபம் கட்டியுள்ளார், ஆலயத்துக்குத் திருத்தேரும் வெள்ளி ஆசனங்களும் செய்தளித்துள்ளார்.
மதுரை மீனாட்சி அம்மனுக்கு தங்க நகைகள், வைரஅட்டிகைகள் செய்துதந்துள்ளார்.
தாருகாபுரத்தில் 16 கால் மண்டபத்தைக் கட்டி அன்னதானம் செய்தவந்தார். அதுமட்டுமல்ல, சீவலப்பேரி மருகால்தலையில் பூலுடையார் கோவில் மண்டபம் கட்டியவரும் அவரே.
நெல்லையில் வாகையம்மன் கோவிலை கட்டியவர் பூலித்தேவரே.

பூலித்தேவனார் கெட்டிபொம்மு ஒப்பீடு:

புலித்தேவன் படையில் காலாடிப்பள்ளர்கள் இருந்தது போல கெட்டிபொம்முவின் (கொள்ளையடிக்கும்)படையில குடும்பப்பள்ளர்கள் இருந்ததையும் ஒப்பிட்டு இருவரும் ஒரே சிந்தனையைக் கொண்டவர்களாகப் பொய்யுரைக்கிறார்கள்.
'ஆப்பநாட்டு கொண்டயங்கோட்டை மறவனான' புலித்தேவன் தன் நண்பன் காலாடிக்கு நடுகல் நட்டு பெருமைப்படுத்தினான். புலித்தேவன் சிந்தில் காலாடி, ஒண்டிவீரன் உட்பட அனைவரைப் பற்றிய பாடல்களும் உண்டு.
கெட்டிபொம்மு குடும்பப் பள்ளருக்கு நடுகல் நட்டானா? சிந்து பாட வைத்தானா? இல்லை புலித்தேவன் காலாடிப் பள்ளன் வீரமரணம் அடைந்தபோது தன் மடியில் கிடத்தி ஊர்கூட்டி ஒப்பாரி வைத்தது போல் குடும்பனை மடியில் கிடத்தி ஒப்பாரி வைத்தானா?
பூலித்தேவனார் வீரம்கண்டு வியந்த மிடேமியா என்ற இசுலாமியர் ஆற்காட்டு நவாபிடமிருந்து வெளியேறி பூலியாருடன் சேர்ந்தவர்களில் ஒருவர். அவர் மார்பில் குண்டுவாங்கி பூலியார் மடியில் உயிர்விட்டவர். அவருக்கும்கூட நடுகல் நட்டுள்ளார் பூலித்தேவனார்.
வாசுதேவநல்லூரில்
அல்லா தெரு என்று ஒரு தெரு இருக்கிறது. இங்கேதான்  மாபூஸ்கானும் அவரது இசுலாமிய வீரர்களும் தங்கவைக்கப்பட்டிருந்தனர். பூலியார் அவர்களுக்கு பள்ளிவாசலும் கட்டிக்கொடுத்தார். அவர்களுக்கு முன்பே பூலியார் படையில் பீர்முகமது சாயபு என்ற இசுலாமியத் தளபதி இருந்துள்ளார்.
கெட்டிபொம்மு எப்படி இவருக்கு ஈடாவான்?

இன்று:
வந்தேறிகள் ஆட்சியில் 'வீரபாண்டிய கட்டபொம்மன்' என்ற படமானது தெலுங்கரான பந்துலு என்பவரால் பணம்போட்டு இயக்கி வெளியிடப்பட்டு தமிழக மக்களை முட்டாளாக்கிவைத்துள்ளது.
பூலியார் பற்றிய ஒரு குறும்படம் கூட இல்லை.
கெட்டிபொம்முவின் இடிந்த கோட்டை, கொத்தளம், கொலுமண்டபம், ஜக்கம்மா தேவி ஆலயம் அனைத்தும் மீண்டும் கட்டப்பட்டுள்ளது.
நினைவுக் கோட்டையை உள்ளடக்கிய 6 ஏக்கர் பரப்பினைச் சுற்றி மதில் சுவர் எழுப்பப்பட்டு உள்ளே தொல்பொருள்(?!)ஆய்வுமையமும் உள்ளது.
இக்கோட்டை 1977 முதல் சுற்றுலாத் துறையின் பராமரிப்பில் இயங்கிவருகிறது.
தற்போது 35 ஏக்கர் பரப்பிற்கு மேல் உள்ள பழைய கோட்டையின் அடிப்பகுதிக் கட்டிடங்கள் தொல்பொருள் ஆய்வுத் துறையின் பராமரிப்பின் கீழ் உள்ளன.
அவன் தூக்கிலிடப்பட்ட கயத்தாறில் நினைவிடமும், நினைவுத்தூணும், கல்வெட்டும், உருவச்சிலையும் நிறுவப்பட்டுள்ளன.
பூலித்தேவனுக்கு நெற்கட்டும்செவலில் ஒரேயொரு நினைவு மண்டபமும் அவரது பெயரில் திருமண(?!)மண்டபமும் உள்ளது. அதன்வாசலில் ஒரேயொரு உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.
கெட்டபொம்முபயன்படுத்திய ஆயுதங்கள், அவன் காலத்து மக்கள் பயன்படுத்திய பல்வேறு பொருட்கள், அணிகலன்கள் நாணயங்கள் போன்றவை தொல்பொருள் ஆய்வுத் துறையினரால் கண்டெடுக்கப்பட்டு சென்னையில் தமிழ்நாடு 'அரசு அருங்காட்சியகத்தில்' பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
அவனுக்கு அஞ்சல் தலைகூட வெளிவந்துள்ளது.
பூலித்தேவன் காலத்து நினைவுச் சின்னங்கள் மற்றும் ஆயுதங்கள் பொதுமக்கள் பார்வைக்கு அவரது நினைவுமண்படத்திலேயே வைக்கப்பட்டுள்ளது.
அவை எந்த அரசுத்துறையின்கீழும் இல்லை. ஆய்வுகள் எதுவும் நடைபெறவும் இல்லை.

வந்தேறிகள் வரலாற்றையே வளைத்துவிட்டனர். செந்தில், கருணாஸ், அருண்பாண்டியன், கார்த்திக் போன்ற நடிகர்களை அழைத்துவந்து ஒரு சாதிக்கூட்டம் பூலியாருக்கு விழா எடுக்கிறது.
புலியாரும் பூலியாரும் வரலாற்றின் சில பக்கங்களை பிச்சைகேட்டு நிற்கும் நிலை இனியும் தொடருமா?

https://m.facebook.com/photo.php?fbid=511482995622025&id=100002809860739