Showing posts with label கட்டபொம்மன். Show all posts
Showing posts with label கட்டபொம்மன். Show all posts

Wednesday, 23 October 2024

கயவாளி கட்டபொம்மன் 9

கயவாளி கட்டபொம்மன் - 9
கயவாளி கட்டபொம்மன்

பகுதி - 9 (இறுதிப் பகுதி)

பதிவர்: ஆதி பேரொளி

"கட்டபொம்மனின் முடிவு"

பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை ஆங்கிலேயப் படை முற்றுகையிட்டு இருக்க கட்டபொம்மன் கோட்டையை விட்டு தப்பிவிட்டான்.

மறுநாள் அக்கோட்டை கைப்பற்றப்பட்டதும் கட்டபொம்மன் ஓடிவிட்டது பானர்மேனுக்கு தெரிகிறது.

ஏற்கனவே நடந்ததுபோல கட்டபொம்மன் ஆங்கிலேய தலைமை அலுவலகத்திற்கு போய் உயரதிகாரிகளை காக்கா பிடித்து தப்பிவிடுவான் என்று பானர்மேன் ஊகித்தான்.

உடனே சுற்றியுள்ள பாளையங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பினான்.
கட்டபொம்மனுக்கு ஆதரவளிப்போர் ஆங்கிலேயரின் கோபத்திற்கு ஆளாவார்கள் என்றும் அவனைக் கண்டதும் உயிருடனோ பிணமாகவோ பிடித்து ஆங்கிலப் படையிடம் ஒப்படைக்கும்படி அதில் எழுதியிருந்தது.

எட்டையபுரம் சென்று தமக்கு வழிகாட்ட உள்ளூர் விபரமறிந்த சிலரைப் பெற்றுக்கொண்டான்.

தனது படையில் ஒரு பகுதியை திருச்சி நோக்கியும் மற்றொரு பகுதியை வடக்கு நோக்கியும் போகுமாறு பணித்து
கட்டபொம்மன் திருச்சி அல்லது சென்னை அலுவலகத்தை அடையுமுன் எப்படியாவது துரத்தி பிடிக்கும்படி உத்தரவிட்டான்.

அப்போது லெப்டினண்ட் டல்லாஸ்  தலைமையில் சென்ற படைத்தொகுதி கட்டபொம்மனைத் துரத்திச் சென்று கோல்வார்ப்பட்டியில் கட்டபொம்மன் தங்கியிருந்த இடத்தை கண்டுபிடித்து சுற்றிவளைத்தது.

கட்டபொம்மன் மற்றவர்களை அம்போ என்று விட்டுவிட்டு எப்படியோ தப்பிவிட்டான்.
கட்டபொம்மனுடைய கொள்ளைக் கூட்டணியில் இருந்த பயங்கர கொள்ளையன் 'நாகலாபுரம் சௌந்தரபாண்டிய நாயக்கன்' இதில் பிடிபட்டான்.
கட்டபொம்மனின் தம்பி இருவரும் அமைச்சர் தனாதிபதிப் பிள்ளையும் பிடிபட்டனர்.

கட்டபொம்மனின் குடும்ப பெண்கள் தூத்துக்குடி சென்று கட்டபொம்மனது ஆங்கிலேய நண்பன் டேவிசனிடம் சரண் புகுந்தனர்.
அவனோ தன்னால் எதுவும் செய்யமுடியாதென்று ஆங்கிலேயரிடமே அவர்களை ஒப்படைத்தான்.

கட்டபொம்மன் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டதால் இவர்கள் பற்றிய ஆவணங்கள் கிடைத்துள்ளன.

கட்டபொம்மனை முதல் விடுதலை வீரன் என்று பலரும் கருத ஒரு காரணம் அவனே வெள்ளையரால் தூக்கில் போடப்பட்ட முதல் பாளையக்காரன் என்பதுதான்.
ஆனால் அவனுக்கு முன்பே பானர்மேன் உத்தரவின்பேரில் தனாதிபதிப் பிள்ளை தூக்கில் போடப்பட்டு இறந்தபிறகு தலை வெட்டப்பட்டு பாஞ்சாலங்குறிச்சியில் நட்டுவைக்கப்பட்டது.

அடுத்தது சௌந்தரபாண்டிய நாயக்கன் கோபாலபுரத்தில் தூக்கிலப்பட்டான்.

கட்டபொம்மன் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பகலில் மறைந்தும் இரவில் கால்நடையாகவும் திருச்சி நோக்கி சென்றுகொண்டிருந்தான்.
  சிவகங்கைச் சீமையின் ஆளியூரில் பதுங்கி மறுநாள் கலியபுரம் எனும் ஊரில் பதுங்கியிருந்தான்.

அப்பகுதி புதுக்கோட்டை மன்னன் ஆளுகைக்கு உட்பட்ட திருக்களம்பூர் எனும் பகுதியின் எல்லை.
அங்கே புதுக்கோட்டை அரசின் திருக்களம்பூர் தளபதியாக 'சர்தார் முத்துவைரவ அம்பலக்காரர்' என்பவன் இருந்தான்.

அவன் வெளியாட்கள் நடமாட்டத்தை அறிந்து அங்கே சென்று கட்டபொம்மனைப் பிடித்தான்.
சிறிதுநேரத்தில் ஆங்கிலேயரும் அங்கே வந்தடைந்தனர்.

கட்டபொம்மன் தன்னை பானர்மேன் தவிர வேறு வெள்ளையர் யாரிடமாவது ஒப்படைக்குமாறு அம்பலக்காரர் காலில் விழுந்து கெஞ்சி உயிர்பிச்சை கேட்டான்.

அந்த தளபதியோ மறவன். திருநெல்வேலி மறவர்களுக்கு கெட்டபொம்மு செய்த கொடுமைகளை மனதில் கொண்டு அந்த அம்பலக்காரர் கட்டபொம்மனை தரதரவென இழுத்து வந்து பானர்மேனின் படைமுன்பே கழுத்தைப் பிடித்து தள்ளிவிட்டான்.

(புதுக்கோட்டை அரண்மனை கட்டபொம்மனுக்கு அடைக்கலம் கொடுத்து வைத்திருந்ததாகவும் பிறகு வெள்ளையரிடம் ஒப்படைத்ததாகவும் இந்த சம்பவம் திரித்து எழுதப்படுகிறது)

1799 அக்டோபர் 16 ஆம் தேதி கயத்தாறில் கட்டபொம்மன் விசாரிக்கப்பட்டான்.
அனைத்து பாளையக்காரர்களும் வரவழைக்கபட்டனர்.

அனைவருமே கட்டபொம்மு மீது புகார்களை அடுக்கினர்.
பொதுமக்களும் சாட்சியம் அளித்தனர்.
வெள்ளைய அதிகாரிகளும் குற்றச்சாட்டுகளை அடுக்கினர்.

வேறுவழியில்லாத கட்டபொம்மன் அனைத்தையும் ஒப்புக்கொண்டான்.

இரண்டு வெள்ளையர்கள் சாவிற்கு காரணமான கட்டபொம்மனை மன்னிக்க ஆங்கில விசாரணைக் குழு தயாராக இல்லை.
எனவே கட்டபொம்மனுக்கு மரணதண்டனை அளிக்கப்பட்டது.

ஆங்கிலேயருக்கு மக்கள் ஆதரவும் நம்பிக்கையும் கிடைக்க மக்கள் அதிகம் வெறுக்கும் கட்டபொம்மனை பொதுவெளியில் தூக்கிலிட பானர்மேன் உத்தரவிட்டான்.

உடனடியாக கயத்தாறு முக்கிய சாலையில் ஒரு புளியமரத்தில் தூக்கில் தொங்கவிடப்பட்டு கட்டபொம்மன் கொல்லப்பட்டான்.

அங்கு வந்திருந்த பாளையக்காரர் அனைவரும் திகிலடைந்தனர்.

தமிழகத்தில் நன்கு காலூன்றிவிட்ட ஆங்கிலேயர் இனி யார் ஆதரவும் தேவையில்லை என்ற முடிவுக்கு வந்திருந்தனர்.
பாளையக்காரர், நவாபு, நிஜாம் என ஆதிக்கம் செலுத்தி வந்த அனைவரது அதிகாரங்களையும் பிடுங்கினர்.

இனி பாளையங்கள் செலுத்தும் சிற்றரசு ஆட்சி செல்லாதென்றும்  அனைத்து பாளையக்காரர்களும் தமது கோட்டைகளை இடித்துவிடுமாறும் உத்தரவிட்ட பானர்மேன்
அவர்களது நிலத்தில் வரிவசூல் செய்து ஆங்கிலேயருக்கு வரி கட்டும் நிலக்கிழார்களாக பாளையக்காரர்கள் தொடர்ந்து இருக்கலாம் என்றும் உத்தரவிட்டான்.

கட்டபொம்மன் போன்ற ஒரு கோழை வந்தேறித் தெலுங்கனை தமிழருக்காகப் போராடிய மபொசி ஏன் ஆதரிக்கவேண்டும்?!

அரசியல்தான் காரணம்.

காங்கிரஸ் ஆதரவாளரான மபொசி திராவிடத்தையும் அதில் தெலுங்கர் ஆதிக்கத்தையும் எதிர்த்து வந்தார்.
சென்னையை ஆந்திரர் கேட்டபோது அவர்களை எதிர்த்து கடுமையாகப் போராடினார்.

இதனால் அவர் இனவெறியர் என்றும் தெலுங்கர்-எதிரி என்றும் நடுநிலை வேடமிடும் கயவர்களால் குற்றம்சாட்டப் பட்டார்.

இதைச் சமன்செய்யும் வகையில் அவர் தமிழகத்தின் உட்பகுதித் தெலுங்கு வந்தேறு குடிகளை ஆதரித்தார்.
ஆந்திராவின் அசல் தெலுங்கருக்கும் தமிழக வந்தேறித் தெலுங்கருக்கும் வேறுபாடு இருப்பதாகப் பேசினார்.

அவர்கள் தமிழர்களே என்றும் கூறத் துணிந்தார்.
கருணாநிதி தூய தமிழர் என்று கூறினார்.
ஆனால் கருணாநிதி ஆட்சியில் 'கட்டபொம்மன் கொள்ளைக்காரன்' போல தெலுங்கு வரலாறு தோண்டப்படுவதைத் தடுக்க ஆங்கிலேயர் கால ஆவணங்கள் சேமிக்கப்பட்டிருந்த எழும்பூர் ஆவணக் காப்பகம் எரிக்கப்பட்டு சான்றுகள் அனைத்தும் அழிக்கப்பட்டன.

இதன்பிறகு தெலுங்கரான பந்துலு கட்டபொம்மன் வாழ்க்கையைத் திரைப்படமாக எடுத்தார்.
போலியான வரலாற்றைக் கூறிய இந்த திரைப்படம் வெளியாக உதவிய மபொசி அதை ஈடுகட்டும் வகையில் பந்துலுவை வைத்தே கப்பலோட்டிய தமிழன் என்று வ.உ.சி வாழ்க்கை வரலாற்றையும் திரைப்படமாக்கினார்.

ம.பொ.சி தமிழகத்தில் வாழ்ந்த தெலுங்கரில் ஒரு நாட்டுப்பற்றாளனைத் தேடி கட்டபொம்மனை கையிலெடுத்தார்.

உண்மை தெரிந்தபிறகு கைவிடமுயன்றார்.
ஆனால் மாற்றாக ஒரு வீரமான தமிழகத் தெலுங்கரின் வரலாறு தேவைப்பட்டது.

  ஆனால் அப்படி யாருமே கிடைக்கவில்லை.

06.10.2018

கயவாளி கட்டபொம்மன் 8

கயவாளி கட்டபொம்மன் - 8

கயவாளி கட்டபொம்மன்
பகுதி - 8
பதிவர்: ஆதி பேரொளி

"பாஞ்சாலங்குறிச்சி வீழ்ந்தது"

கட்டபொம்மன் மீண்டும் ஆங்கிலேயருக்கு கிஸ்தி கட்டாமலும் பொதுமக்களைக் கொள்ளையடித்தும் அட்டூழியம் புரிந்துவந்தான்.

இராமநாதபுர பாளையக்காரர் முத்துராமலிங்க சேதுபதி ஆங்கிலேயரை எதிர்த்து புரட்சி செய்ய திட்டமிட்டபோது கள்ளத்தனமாக துப்பாக்கிகளை விற்றான் கட்டபொம்மன்.

புரட்சிக்கு முந்தைய நாள் ஆங்கிலேயருக்கு இக்கலகம் பற்றி தெரிந்துவிட்டது.
இதனால் சேதுபதி நாடு கடத்தப்பட்டு புரட்சி அடக்கப்பட்டது.

எப்போதும் இருதரப்பினர் மோதினால் இடையில் புகுந்து ஒரு புறம் வெளிப்படையான உதவியும் இன்னொரு புறம் மறைமுகமாக உளவுத்தகவலும் கொடுத்து யார் வென்றாலும் ஆதாயம் அடைவது கெட்டுபொம்மு பரம்பரையின் உத்தி.

எனவே வழக்கம்போல இதைச் செய்தது கட்டபொம்மனோ என்ற ஐயம் நமக்குத் தோன்றினாலும் இம்முறை கட்டபொம்மன் போட்டுக்கொடுக்கவில்லை.
வேறு எவனோ முந்திக்கொண்டுவிட்டான்.

சேதுபதிக்கு தூத்துக்குடி டச்சுக்கார வணிகர்கள் மூலம் கள்ளக்கடத்தல் செய்து ஆயுதம் விற்றது கட்டபொம்மன் என்கிற விடயம் பிற்பாடு ஆங்கிலேயருக்கு தெரிந்தபோது அவர்கள் அதிர்ந்துவிட்டனர்.

'நம்ம செல்லப்பிள்ளை கெட்டிபொம்முவா இப்படி?!' என்று மனம் வெதும்பினர்.

இந்நிலையில் தமது பகுதியில் புகுந்து திசைக்காவல் என்ற பெயரில் கட்டபொம்மன் பணம் பிடுங்குவதாக ஆங்கில அதிகாரிகள் கெட்டிபொம்மு மீது புகார் அளித்தனர்.

பிற பாளையங்களை கொள்ளையடித்த கட்டபொம்மன் ஆங்கிலேயப் பகுதிகளிலும் கொள்ளையிடுவதை தாங்கமுடியாத கலெக்டர் லூசிங்டன் கட்டபொம்முவை கிஸ்திபாக்கியைத் தருமாறும் அதற்கு நேரில் வருமாறும் மூன்றுமுறை ஓலை அனுப்பினான்.

உடம்பு சரியில்லை, நாள் நல்லாயில்லை என சாக்குபோக்கு சொல்லி அனுப்பினான் கெட்டிபொம்மு.
அதோடு தன்னை 'ஆங்கிலேய வளர்ப்புப் பிள்ளை' என்று அடையாளப்படுத்தியே பதில் எழுதியிருந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

நான்காவது கடிதம் 'ஒழுங்கு மரியாதையா வந்துரு' என்கிற தொனியில் இருந்தது.

'இது உங்க ஒடம்பு, எப்பவேணா தொவைக்கலாம்' என்கிற ரீதியில் பதில் அனுப்பினான் கெட்டிபொம்மு.
ஏற்கனவே ஜாக்சனை நேருக்கு நேர் பார்த்து மிரண்டு பேண்டு நாறிப்போன கதிக்கு மீண்டும் ஆளாக அவன் விரும்பவில்லை.
எனவே 'வரும்போது என் கூட்டத்தையும் கூட்டிவரலாமா?' என்று அனுமதியும் கேட்டிருந்தான்.

'வீரன் ஒத்தையா போனாலும் நூறுபேர் மாதிரி.
நீ நூறுபேரோட வந்தாலும் ஒத்தையாள்தான்' எனவே 30 பேருக்கு அதிகமாக வரக்கூடாது என்கிற தொனியில் அடுத்த கடிதம் உடனடியாக வந்தது.
அதில் இரண்டு மணிநேரம் கெடு விதித்து இருந்தது.

லூசிங்டனை இதற்குமேல் லூசாக்க முடியாது என்றுணர்ந்த கட்டபொம்மன் மறுநாள் வருவதாக கூறி அனுப்பினான்.
ஆனாலும் அவன் போகவில்லை.
லூசிங்க்டன் மேலிடத்திற்கு எழுதி ராணுவ நடவடிக்கை கோரினான்.

இந்நிலையில் கட்டபொம்மனது தம்பி ஊமைத்துரைக்கு திருமணம் நிச்சயமானது.

கல்யாண சமையல்காரர் லிஸ்ட் ஒன்றைக் கொடுத்தார்.

தேங்காய் - எவன் தோட்டத்திலாவது பறிச்சுக்கலாம்.
காய்கறி - சந்தையில் திருடிக் கொள்ளலாம்.
சர்க்கரை - மளிகை கடை பூட்டியதும் எடுத்துக்கலாம்.
அரிசி - ரேசன் கடையை கொள்ளையடிக்கலாம்.

அப்போ வாங்கறதுனு எதுவுமே இல்லையா?!
கட்டபொம்மனுக்கு எதையும் பறித்துதான் பழக்கம்!

அப்போது வெள்ளையர் வரிவசூலை பொருட்களாகவும் வாங்கினர்.
அவ்வாறு ஆங்கிலேயரது அரிசி குடோன் ஸ்ரீவைகுண்டத்தில் இருந்தது.

இரவில் வியாபாரிகள் போல வேடமிட்டு சென்ற கட்டபொம்மனின் ஆட்கள் குடோன் காவலாளியைக் கொன்றுவிட்டு நெல்லையெல்லாம் கொள்ளையடித்து ஓட்டப்பிடாரத்தில் ஒளித்துவைத்தனர்.

அப்பகுதி அதிகாரி பிர்க்கட்டு என்பவன் மறுநாள் இதுபற்றி விசாரித்தான்.
"கொள்ளைனா! கெட்டிபொம்மு! வேற எந்த... ஒரு பேரும் மைண்ட்ல வரமாட்டன்து" என்று மக்கள் கூறினர்.

அவன் ஆத்திரத்தோடு நேரே பாஞ்சாலங்குறிச்சி போய் கட்டபொம்மனை விசாரித்தான்.

கெட்டுபொம்மு "நீங்க போங்க சார்! யார்னு விசாரிச்சு நானே உரிச்சுவிடறேன்" என்று பதிலளித்தான்.

பிர்க்கட்டு "கட்டபொம்மா ஒனக்கு கட்டம் சரியில்லை.
ஒழுங்கா நீயே ஒத்துக்கோ!
இல்லன்னா பானர்மேன் படையோட வருவான்.
அவன் போட்டுத்தள்ளிட்டு பொணத்துகிட்டதான் என்ன யாதுனு கேப்பான். பாத்துக்கோ!" என்று கூறிவிட்டு கிளம்பிப்போனான்.

அப்போது சிவகிரி பாளையத்தின் அமைச்சன் ஒருவன் கட்டபொம்மனை ஒரு கட்டப்பஞ்சாயத்து விடயமாகப் பார்க்கவந்தான்.

கட்டபொம்மன் அதற்கு கூலியாக பணம் வேண்டாமென்றும் அதற்குப் பதிலாக தன் சார்பில் பானர்மேனைப் பார்த்து தனக்கு பரிந்துபேசுமாறும் கூறினான்.

அவனும் ஒத்துக்கொண்டு பானர்மேனை பார்க்கப்போனான்.
அங்கே போய் "கட்டபொம்மன்.." என்று வாயைத்தான் திறந்தான்.
வாயிலேயே குத்தி விலங்கு மாட்டி சிறையில் தள்ளினான் பானர்மேன்.

கட்டபொம்மன் இச்செய்தி கேட்டு வெலவெலத்துப்போய் ஜுரம் வந்து படுத்துவிட்டான்.

1799 செப்டம்பர் 4 ஆம் தேதி பாளையங்கோட்டை யிலிருந்து சீவலப்பேரி வழியாக பானர்மேனின் படை பாஞ்சாலங்குறிச்சி எல்லையை நள்ளிரவில் வந்தடைந்தது.

இரவே 12 பவுண்ட் பீரங்கிகளும் இரண்டு கும்பினி பட்டாளத் தொகுதியும் வரவழைக்கப்பட்டன.

காலையில் டல்லாஸ் என்பவன் தலைமையில் குதிரைப்படை பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை சுற்றிவளைத்து.

பானர்மேன் மூன்று ஆட்களை அனுப்பி கட்டபொம்மன் தனியாளாக தன்னிடம் வரவேண்டும் என்று உத்தரவிட்டு கோட்டைக்குள் அனுப்பினான்.

கட்டபொம்மன் பயந்து நடுங்கியபடி "என்னை எதுவும் செய்யமாட்டேன்" என்று உறுதி கொடுத்தால் வருகிறேன் என்றான்.

பானர்மேன் அப்படி உறுதிமொழி எதுவும் தரத் தயாராக இல்லை.
அவன் ஒரு முடிவுடன் வந்திருந்தான்.

(திப்பு சுல்தான் இந்த இடத்தில் கட்டபொம்மனிடமிருந்து  மாறுபடுகிறான்.
தன் முடிவு கண்ணுக்குத் தெரிந்ததும் திப்பு உண்மையிலேயே வீரனாக மாறி முடிந்தவரை போராடி வீரமணம் அடைந்தான்.
ஆனால் கெட்டிபொம்முவோ கடைசி வரை கோழையாகவே இருந்தான்.)

கட்டபொம்மு நிபந்தனையற்ற சரணடையாத காரணத்தால் பீரங்கிகள் கோட்டையைத் தாக்கின.
காலின்ஸ் என்பவன் தலைமையில் ஆங்கிலப் படை உள்ளே நுழைய முற்பட்டது.
அப்போது நடந்த மோதலில் காலின்ஸ் கொல்லப்படுகிறான்.
போர் அப்படியே இடைநிறுத்தப்பட்டது.

மறுநாள் விடிந்ததும் கட்டபொம்மன் தூது அனுப்பினான்.
"தங்களைப் பார்த்தாலே பயமாக இருக்கிறது,
நான் ஆங்கிலேய  அரச அதிகாரி எவரிடமாவது சரண்டைகிறேன்.
அதற்கு அனுமதிக்குமாறு கெஞ்சுகிறேன்" என்கிற தொனியில் அனுப்பியிருந்தான்.

பானர்மேன் ஒத்துக்கொள்ளவில்லை.
"என்னிடம்தான் சரண்டையவேண்டும்.
உயிருக்கு உத்தரவாதமும் கிடையாது" என்று கூறி ஒரு நாள் அவகாசம் கொடுத்தான்.

7ம் தேதி சந்தர்ப்பம் பார்த்து இரவு பத்துமணிக்கு ரகசிய வழி மூலம் 50 பேருடன் கோட்டையை விட்டு தப்பி ஓடினான் கட்டபொம்மன்.

எதற்கு?
வேறெதற்கு?! தான் காக்கா பிடித்து வைத்திருந்த திருச்சி ஆங்கிலேய உயரதிகாரிகள் காலில் விழுந்து உயிர்தப்பிக்கத்தான்.

(தொடரும்)

01.10.2018

கயவாளி கட்டபொம்மன் 7

கயவாளி கட்டபொம்மன் - 7
கயவாளி கட்டபொம்மன்
பகுதி - 7
பதிவர்: ஆதி பேரொளி

"ஜாக்சன் துரை"
---------

1797 இல் கடைசிக் கட்டபொம்மன் பதவியேற்று ஏழாண்டுகள் ஆன நிலையில் தென்தமிழகத்துக்கு கலெக்டராக வருகிறான் டபிள்யூ. சி.ஜாக்சன் என்பவன்.

திமிர் பிடித்தவனாகவும் முன்கோப முரடனாகவும் அவன் இருந்தான்.

கலெக்டர் என்ற பதவி வரிகளை கலெக்ட் செய்யும் பதவியே ஆகும்.

வந்தவுடன் அவன் வரிப்பணம் எங்கெங்கு தேங்கி நிற்கிறது என்று பார்த்து அதற்கு காரணம் யார் யார் என்று பட்டியலிட்டான்.

ஆங்கிலேயருக்கு அடங்கிய பாளையக்காரர் பட்டியலில் வரியேய்ப்பில் முதலிடம் பிடித்திருந்தான் கட்டபொம்மன்.

வரி கட்டாமல் சாக்கு போக்கு சொல்லியும் வரிவசூலிக்க வருவோரை தாஜா செய்துமே அவன் காலத்தை ஓட்டி வந்துள்ளான்.
அதுவும் ஆறு ஆண்டுகளாக.
அந்த வரிப் பாக்கி ஆறாயிரம் சக்கரம் அளவு வளர்ந்திருந்தது.

ஜாக்சன் உடனே ஆலன் துரை என்பவனை அனுப்பினான்.
அவனை தடபுடலாக வரவேற்று எல்லா வகையிலும் திருப்தி செய்து வரிப்பணம் கொடுக்காமல் சாக்குபோக்கு சொல்லி திருப்பி அனுப்பினான்.

1798 ஜனவரி 30 அன்று ஆழ்வார்திருநகரியில் திருவிழா ஒன்று நடந்தது.
அப்போது இரவுநேரத்தில் அப்பகுதியைச் சுற்றிவளைத்தது கட்டபொம்மனின் கொள்ளைப்படை.

இத்தனை ஆண்டுகளாக பெரும்பொருள் ஈட்டியிருந்த அவன் நிறைய ஆயுதங்களும் ஆட்களும் சேர்த்துக்கொண்டு ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியிலே புகுந்து ஆயிரக்கணக்கான மக்களை சுற்றிவளைத்து வெளிப்படையாக கொள்ளையடிக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டான்.

அப்பகுதி ஹாமில்டன் என்கிற அதிகாரியின் கட்டளையின் கீழ் இருந்தது.
அந்த அதிகாரியின் விடுதியையும் கட்டபொம்மன் ஆட்களால் சுற்றிவளைத்து கதவுகளைப் பூட்டி அவன் வெளிவராதபடி செய்திருந்தான்.

நள்ளிரவில் மக்களனைவரையும் கொள்ளையிட்டுவிட்டு பாஞ்சாலங்குறிச்சி திரும்பினான்.

கட்டபொம்மன் உண்மையிலேயே விடுதலை வீரன்தானோ என்று ஐயம் எழும் வகையில் இந்நிகழ்வு அமைந்துள்ளது.

இது பற்றி மறுநாள் ஹாமில்டன் ஜாக்சனுக்கு கடிதம் எழுதி புகார் செய்தான்.

இதனால் ஜாக்சன் 03 பிப்ரவரி, 28 ஏப்ரல், 23 மார்ச், 08 ஏப்ரல் ஆகிய தேதிகளில் நான்கு  முறை கடிதம் எழுதியும் ஆளனுப்பியும் எந்த பயனும் இல்லாமல் போனது.

ஒரு ஆளை இவன் அனுப்பினால் கட்டபொம்மன் வந்த ஆளை தடபுடலாக வரவேற்று கழுவிவிடாத குறையாக உபசரித்து சாக்குபோக்கு சொல்லி வெறுங்கையுடன்   திருப்பி அனுப்பினான்.
போனவர்களும் கட்டபொம்மனின் விருந்தோம்பலில் மயங்கி திப்புவுடனான மோதல் நடந்து முடியும்வரையும் அது முடிந்தாலும் சில காலம்வரை படை நடவடிக்கை எதுவுமிருக்காது என்று அரசின் உள்விவகாரங்களை உளறிவிட்டு வந்தனர்.

இறுதியாக 18.08.1798 அன்று தன்னை இராமநாதபுரத்தில் வந்து நேரில் சந்திக்குமாறும் இல்லாவிட்டால் பாளையக்கார பதவி பறிக்கப்படும் என்றும் மிரட்டி ஒரு கடிதம் அனுப்பப்பட்டது.

'இதைப் பார்த்து அவன் பயந்து ஓடிவந்தால் அவன் நமக்கு அடிமை
இல்லன்னா நாம அவனுக்கு அடிமை' என்று ஜாக்சன் மனதில் நினைத்துக் கொண்டான்.

(அக்காலத்தில் எல்லா கடிதங்களும் இரண்டாக எழுதப்பட்டு ஒன்று அனுப்பப்படுவதும் ஒன்று ஆவணமாக சேகரிக்கப்படுவதும் வழக்கமாக இருந்ததால் இக்கடிதங்கள் நமக்கு கிடைத்துள்ளன.)

பதவியைப் பறித்துவிட்டால் கூடிய விரைவில் ஆங்கிலப் படையுடன் மோதல் வரும் என்று உணர்ந்த கட்டபொம்மன் அதற்குமுன்பே முழுதாக தன்னை தயார்படுத்திக் கொண்டு நாலாயிரம் பேர் கொண்ட படைபரிவாரத்துடன் இராமநாதபுரம் நோக்கி "போர்! ஆமாம் போர்!" என்று கத்திக்கொண்டு சென்றான்.

எதற்காக சென்றான் என்றால் வட்டியும் முதலுமாக திருப்பிக் கொடுக்கத்தான்.

எதை? வேறு எதை?! வரி பாக்கியைத்தான்.

ஆறாண்டு வரிப்பணம், வட்டி, அபராதம், பரிசுகள் இதையெல்லாம் ஆங்கிலேயரிடம் கொண்டு சேர்ப்பிக்கத்தான் நாலாயிரம் பேர்!

ஜாக்சன் தனக்கு ஒரு அடிமை சிக்கிவிட்டானென்று வைத்திருந்த வஞ்சத்தையெல்லாம் கொட்டி  அவனை 'வைத்துசெய்ய' முடிவெடுத்தான்.

கெட்டிபொம்மு ராமநாதபுரம் வரவும் கலெக்டர் குற்றாலம் புறப்பட்டு போய்விட்டான்.
கட்டபொம்மன் அங்கேயும் போனான்.
அவனை பார்க்காமல் காக்கவைத்த ஜாக்சன் சொக்கம்பட்டிக்கு கிளம்பினான்.
கட்டபொம்மன் படையும் பின்தொடர்ந்து போனது.

இப்படியே கட்டபொம்மன் கொள்ளையடித்த சொக்கம்பட்டி, சேத்தூர், சிவகிரி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய இடங்களுக்கு அடுத்தடுத்து சென்று முகாமிட்டான் ஜாக்சன்.
கெட்டிபொம்மனை ஊருக்கு வெளியில் காத்துக்கிடக்க வைத்து அவமானப் படுத்தினான்.

அப்பகுதி மக்களெல்லாம் கைகொட்டி சிரித்தனர்.
'கொள்ளைக்கார கெட்டிபொம்மு கும்பினிக் குண்டியைத் தாங்கும் அழகென்ன?' என்று எள்ளி நகையாடினர்.

இப்படி செய்தால் கட்டபொம்மு ரோசம் வந்து தன் பாளையம் போய்விடுவான்.
அவனை மேலிடத்தில் சொல்லி சிதைத்துவிடலாம் என்பது ஜாக்சனின் நோக்கம்.

கெட்டிபொம்முவோ "மானமா? பதவியா? பதவிதான்" என்கிற முடிவில் இருந்தான்.

அடுத்து பேரையூர், பவாலி, பள்ளிமடை, கமுதி என அலைக்கழித்தான் ஜாக்சன்.
கெட்டிபொம்மு நாயினும் கேடாக பின்னாலேயே அலைந்தான்.

ஆகஸ்டு 24 அன்று ஆரம்பித்த இந்த 'சுற்றோ சுற்று பயணம்' செம்டம்பர் 9 அன்று இராமநாதபுரத்தில் முடிந்தது.

அடுத்த நாள் கட்டபொம்மன் அழைக்கப்பட்டான்.
படைகள் கோட்டைக்கு வெளியே நிறுத்தப்பட்டு துணையாட்கள் கீழே நிறுத்தப்பட்டு கட்டபொம்மன்  இரண்டு பேருடன் மாடிக்கு சென்றான்.
தலையைத் தொங்கப்போட்டபடி பெட்டிப்பாம்பாக உள்ளே நுழைந்தான்.

கெட்டிபொம்மு மீது ஏற்கனவே ஏகப்பட்ட புகார்கள் குவிந்திருந்ததால் ஆங்கில மேலிடம் கட்டபொம்மனை விசாரிக்கும்போது அதை அப்படியே பதிவு செய்து ரிப்போர்ட் அனுப்புமாறு சொல்லியிருந்தது.
எனவே அங்கு நடந்தவை அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜாக்சனின் முதல் கேள்வி "உன் கிஸ்தி பாக்கி எங்கே?" என்பது.
சல்லி பாக்கியில்லாமல் கொண்டுவந்துள்ளதாக கூறினான் கட்டபொம்மன்.

ஆனால் கட்டபொம்மன் பக்தர்கள் எப்படி எழுதியுள்ளனர்.
"வானம் பொழிகிறது. பூமி விளைகிறது. உனக்கேன் கொடுப்பது கிஸ்தி?" என்று தூய தமிழில் பேசியதாக கதைவடித்துள்ளனர்.

உண்மையில் "Heavens supplied earth with rain. our cattle ploughed the land. why we should pay?" என்று மதுரை கள்ளர் ஏற்படுத்திய 'தன்னரசு நாடு' எனும் அமைப்பு இவ்வாறு பேசியதாக ஆங்கிலேயர் குறித்துள்ளனர்.
(சான்று: East india magazine by R.Alexander
மற்றும் Edger Thurston)

பணம் கிடைத்துவிடும் என்றதும் சற்று சாந்தமடைந்த ஜாக்சன் தனது கெத்தை விடாமல் அதுவரை தான் எழுதிய கடிதங்களை படித்துக்காட்டச் சொல்லி அதற்கு ஏன் பதிலளிக்கவில்லை என்று கேட்டான்.

கட்டபொம்மன் தான் ஒரு கைநாட்டு என்றும் தனக்கு தமிழே ததிங்கினத்தோம் போடும் என்றும் எல்லாவற்றிற்கும் வாய்வார்த்தையாக பதிலளித்ததாகவும் கூறினான்.

சமாதானமடையாத ஜாக்சன் "இந்த ரிப்போர்ட் சென்னைக்கு போய் பதில் வந்த பிறகுதான் நீ இங்கிருந்து போக முடியும்.
அதுவரை இங்கேயே கிட" என்று மிரட்டினான்.

  ஜாக்சனின் முரட்டு தோற்றத்தையும் கணீரென்ற குரலையும் கண்டு வெலவெலத்துபோன கட்டபொம்மன் இங்கேயே இருந்தால் இவன் கொன்று தின்று விடுவானே என்று நடுநடுங்கினான்.
அப்போது அவன் வயிற்றில் கடமுடா என்று சத்தம் கேட்டது.

அவன் ஜாக்சனிடம் தனக்கு வயிற்றை கலக்குவதாகவும் 'ஆய்' வருவதாகவும் கூறினான்.

ஜாக்சன் 'கொல்லைப்பக்கம் ஓடு' என்று எரிச்சலுடன் கூறினான்.

மாடிப்படி இறங்கிய கட்டபொம்மன் பாதியிலேயே கழிந்துவிட்டான்.
பயத்தில் நாவறண்டு கண்கள் இருட்டிக்கொள்ள கைகால் விறைத்துக் கொள்ள அப்படியே சிலையாக நின்றுவிட்டான்.

கீழே இருந்த அவனது ஆட்கள், பீதியில் பேதியாகி நடுவழியில் நட்டுக்கொண்ட கட்டபொம்மனை விரைந்து சென்று அப்படியே தூக்கிக்கொண்டு தப்பித்தால் போதுமென்று ஓடினர்.

கோட்டையைக் கடக்கும்போது கோட்டைக் காவல்படை அதன் அதிகாரி லெப்டினன்ட் க்ளார்க் என்பவன் தலைமையில் கட்டபொம்மன் படையைத் தடுக்கப் பார்த்தது.
இம்மோதலில் இருபுறமும் பலர் உயிரிழந்தனர்.
கட்டபொம்மன் படை பெரிது.
அது கிளார்க்கை கொலை செய்துவிட்டு போட்டது போட்டபடி ஓட்டமெடுத்தது.

கட்டபொம்மனை ஆயோடு ஆயாக அள்ளிக்கொண்டு ஓடிய கதை பட்டிதொட்டியெல்லாம் பரவி மக்களெல்லாம் கைகொட்டி சிரித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த கட்டபொம்மன் பொதுமக்கள் மீது கோபத்தைக் காட்டினான்.
பாஞ்சாலங்குறிச்சி நோக்கி போகும் வழியெல்லாம் அவர்கள் கொள்ளையடித்தபடி சென்றனர்.

பாஞ்சாலங்குறிச்சி வந்ததும் தூத்துக்குடி கள்ளக்கடத்தலில் தனக்கு பழக்கமான ஒரு ஆங்கிலேய உளவாளியை அவன் வரவழைத்தான்.
டேவிசன் என்கிற அவன் யோசனைப்படி திருச்சியில் இருந்த ஆங்கிலேய உயரதிகாரிகளுக்கு ஒரு கடிதம் எழுதினான்.
அதில் ஜாக்சன் தனக்கு செய்த கொடுமைகளை விவரித்து 'இது நியாயமா?' என்று கேட்டு எழுதினான்.

இருவரையும் கும்பினி மேலிடம் 05.10.1798 அன்று திருச்சிக்கு அழைத்து விசாரணை நடத்தியது.

கட்டபொம்மன் ஆறு ஆண்டுகளாக விளைச்சல் சரியில்லை என்றும்
தானும் மக்களும் வைசூரி நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும்
கொள்ளையர் அட்டகாசத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்
அதனாலேயே வரியை கட்டவில்லை என்றும் கூறி திறமையாக நடித்தான்.
தான் உயிருக்கு பயந்தே ஓடியதாகவும் தப்பிக்க நினைக்கவில்லை என்றும் கண்ணீர்விட்டு காலில் விழாத குறையாக கெஞ்சினான்.

ஜாக்சனோ கட்டபொம்மன் தேர்ந்த ஒரு கயவாளி என்றும் இவனை நம்புவது நமக்கு பெருங்கேடாக முடியும் என்றும் வாதிட்டான்.

ஜாக்சனின் முரட்டு சுபாவத்தால் கோபமடைந்த கும்பினி நிர்வாகம் அவனை வேலையை விட்டு தூக்கியது.

இதற்கு அனுபவிப்பீர்கள் என்று கறுவிக்கொண்டு ஜாக்சன் போய்விட்டான்.

கட்டபொம்மன் அனைத்து பாக்கியையும் கட்டியதுடன் ஆங்கிலேயருக்கு அடிமைச் சாசனமும் எழுதிக் கொடுத்ததால் அவனுக்கு மன்னிப்பு வழங்கியதோடு அவனை தம்முடன் சில நாட்கள் தங்கச் செய்து விருந்தளித்தது கும்பினி மேலிடம்.

அவன் புறப்படும் முன்பு ஆறாயிரம் ரூபாய் மதிப்புள்ள முத்துமாலையையும் இருபுறமும் கூர்மையுள்ள ஆங்கிலக்கொடி முத்திரை பதித்த வடிவாள் ஒன்றையும் ஏழு குதிரைகளையும் பரிசாக அளித்து சூடாமணி என்ற பட்டத்தையும் மேலதிகாரிகள் போட்டிபோட்டுக்கொண்டு அளித்தனர்.

கட்டபொம்மு ஆங்கிலேயரோடு 'ஒன்றுக்குள் ஒன்றாக' ஆன இந்த திருச்சி படலம் கட்டபொம்மன் பக்தர்களால் அப்படியே இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.

கட்டபொம்மனைப் புகழ்ந்த அனைத்து புத்தகங்களும் ஜெகவீரபாண்டியன் என்ற தெலுங்கர் எழுதிய "பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டே எழுதப்பட்டன.
அதிலேகூட திருச்சி நிகழ்வுகள் மறைக்கப்படவில்லை.

இவ்வாறு கட்டபொம்மன் முந்தைய குற்றங்கள் அனைத்திலிருந்தும் தப்பித்தான்.
என்னதான் இருந்தாலும் கொல்லப்பட்ட கிளார்க் ஒரு வெள்ளையன்.
எனவே அந்த கொலைவழக்கில் மட்டும் கட்டபொம்மன் பெயருக்கு சேர்க்கப்பட்டு சிறிதுகாலம் அலைக்கழிக்கப்பட்டான்.

"என்னையே தூக்கிக்கொண்டுதான் போனார்கள் நான் எப்படி கொலைசெய்வேன்?!
வேண்டுமானால் கிளார்க் குடும்பத்திற்கு நட்டயீடு தந்துவிடுகிறேன்" என்று கூறி விடுதலையானான்.

இதன்பிறகாவது அவன் ஒழுங்காக இருந்தானா?!
கட்டபொம்மன் என்கிற வேதாளம்  வரிபாக்கி, கொலை, கொள்ளை என மீண்டும் முருங்கை மரம் ஏறியது.

கலெக்டராக இருந்த லூசிங்டன் எடுத்த அலுவலக நடவடிக்கைகள் பயனற்றுப் போயின.

அப்போது கட்டபொம்மனுக்கு முடிவுரை எழுத வந்துசேர்ந்தான் ராணுவ அதிகாரி பானர்மேன்.

(தொடரும்)
26.09.2018 அன்றைய பதிவு

Sunday, 20 October 2024

கயவாளி கட்டபொம்மன் 6



கயவாளி கட்டபொம்மன் - 6

ஏற்கனவே கட்டபொம்மனின் முன்னோர் பற்றி ஐந்து பகுதிகளாக பார்த்துவிட்டோம்.
இதுவரை அன்பெழில் என்பவர் எழுதியது.
இனி அவரது நகைச்சுவை நடையிலேயே தெலுங்கர் தலையில் வைத்து கொண்டாடும் கடைசி கட்டபொம்மனைப் பற்றி நாம் அடுத்த வரும் பகுதிகளில் எழுதுகிறோம்.
--------
பதிவர்: ஆதி பேரொளி

பகுதி - 6
கடைசி கட்டபொம்மன்
---------
கட்டபொம்மன் பரம்பரையில் கடைசி வாரிசு 'வீரபாண்டிய கட்டபொம்மன்' ஆவான்.
இவன் பிறந்த்து 1760.
'விளக்கமாற்றுக்குப் பெயர் பட்டுக்குஞ்சலம்' என்பதுபோல பாண்டியர் பெயரை இவனும் சூடிக்கொண்டு திரிந்தான்.

முப்பது வயதில் 1790இல் தந்தை இறந்ததை அடுத்து இவன் பதவிக்கு வந்தான்.

இவன் தன் முன்னோர்களையும் விட பயங்கரமான கொலைகாரனாக, கொள்ளைக்காரனாக இருந்ததோடு புதிதாக கூலிப்படைத் தலைவன் என்ற அவதாரமும் எடுத்தான்.

இவன் காலத்தில் நடத்திய கொள்ளைகள் பற்றி கும்மி பாடல்கள் உண்டு.
வெள்ளைக்கார துரையிடம் கொடுத்த பிராது மனுக்களும் உண்டு.

அருங்குளத்தில் கம்பஞ்சோலையில் புகுந்து ஆயிரம் கட்டு அறுத்துச் சென்றான்.
வருமாங்குளம் தட்டைப் பயிரில் நெருப்பு வைத்துவிட்டான்.
இரவு நேரங்களில் எல்லை தாண்டி பொதுமக்கள் வீடு புகுந்து கொள்ளையிட்டான்.
காட்டிநாயக்கன்பட்டி எல்லையில் மேய்ந்த முப்பது காளைகள் மற்றும் நாற்பது பசுக்களை ஒட்டிக்கொண்டு போனான்.
பக்கத்து சீமைகளில் ஆடிக்காற்று வீசும் நேரம் வயல்வெளிகளில் நெருப்பு மூட்டிவிட்டான்.
இதிலே பயிர்களுடன் பட்டி போட்டிருந்த ஆடுகள் எரிந்து இறந்தன.
இதெல்லாம் ஒரு சாம்பிளுக்கு சொல்லியவை.

அப்போதைய திருநெல்வேலி கலெக்டர் டோரின் என்பவன்.
அவனிடம் பொதுமக்களின் பிராதுக்கள் குவிந்த வண்ணம் இருந்தன.
இதோடு எட்டயபுரமும் கட்டபொம்மன் தமது எல்லைக்குள் வந்து கொள்ளையடிப்பதாக தொடர்ந்து புகார் அனுப்பி வந்தது.

திப்பு சுல்தானுடன் போர்மூளும் சூழல் இருப்பதால் தெற்கே படை நடவடிக்கை எதுவும் செய்யமுடியாத நிலை எனவே டோரின் கர்னல் மாக்ஸ்வெல் என்பவனை அனுப்பி எல்லைகளை வரையறுக்க சொன்னான்.

இதன்படி தந்தைக் காலத்திலே ஆட்டையைப்போட்ட (எட்டயபுரத்திற்கு சொந்தமான) அருங்குளம் மற்றும் சுப்பலாபுரம் ஆகிய கிராமங்களை கட்டபொம்மன் ஆண்டு அனுபவித்து வருவது தெரிந்தது.

டோரின் ஒரு எல்லைக்கோடு வரைந்து "இதைத்தாண்டி நீயும் வரக்கூடாது அவனும் வரமாட்டான்" என்று கூறிச் சென்றான்.
ஆனால் கட்டபொம்மன் கேட்கவில்லை.
'போடா ஹைகோர்ட்டு' என்று எப்போதும்போல தன் அடாவடியைத் தொடர்ந்தான்.

கட்டபொம்மன் 'ரொம்ப தைரியமான ஆள்' என்று இதற்கு அர்த்தமல்ல.
டோரினின் அல்லக்கை ஒரு கம்பளத்து நாயக்கன்.
அவனை கட்டபொம்மன் கைக்குள் போட்டுக் கொண்டான்.
ஆங்கிலப்படை திப்புவை அடக்குவதில் கவனமாக இருப்பதையும் தெற்கே படை நடவடிக்கை நீண்டகாலத்திற்கு இருக்காது என்றும் அவன் கட்டபொம்மனிடம் 'செப்பி' இருந்தான்.

கட்டபொம்மன் தனது கொள்ளைப்படையை தற்போது கூலிப்படையாகவும் பயன்படுத்தினான்.
ஆட்களை கடத்திவந்து பணயம் கேட்டு பணம்பெற்றுக்கொண்டு விடுவிப்பது, பணத்திற்கு கொலைசெய்வது, கட்டப்பஞ்சாயத்து செய்வது என திருநெல்வேலி ஏரியாவில் பெரிய ரவுடியாக அவன் ஃபார்ம் ஆகிவிட்டான்.

அப்போது சிவகிரி மறவர் பாளையத்தில் பதவியில் இருந்தவர் வயதானவர்.
அவரது மருமகனும் அல்லக்கை ஒருவனும் சேர்ந்து அவரது மகனை பதவியில் அமர்த்த திட்டமிட்டனர்.

சிவகிரி பெரியவரைத் தீர்த்துக்கட்ட கட்டபொம்மனே சரியான ஆள் என்று நினைத்து இம்மூவரும் அவனை நாடினர்.

கட்டபொம்மன் சதித்திட்டம் தீட்டிக் கொடுத்தான்.
அதன்படி ஒரு விழாவில் விருந்தினனாக கட்டபொம்மனை அழைத்தனர்.
அன்றிரவு பெரியவரைக் கொலைசெய்வதாகத் திட்டம்.
ஆனால் கட்டபொம்மனின் 'நல்ல குணத்தை' அறிந்திருந்த பெரியவர் இதை யூகித்து இரவே தப்பி தனது நண்பரான சேத்தூர் பாளையக்காரரிடம் தஞ்சமடைந்தார்.

பிறகு அவரது மகனும் அரியணை ஏறினான்.
அவனது சகாக்களும் பெரிய பதவிகளில் அமர்ந்தனர்.
கட்டபொம்மனுக்கு பெரிய தொகை கிடைத்தது.

ஆனால் சேத்தூர் பாளையக்காரர் கோபத்திற்கு ஆளாக நேரிடுமோ என்றெண்ணி கட்டபொம்மன் தொடைநடுங்கிக் கிடந்த வேளையில் சிவகிரி பெரியவரை சேத்தூரில் இருந்து கடத்தி கொண்டுவரும் ப்ராஜக்ட் அவனிடம் வந்தது.

பணம் என்றவுடன் ரிஸ்க் எடுக்க முடிவுசெய்த கட்டபொம்மன் சேத்தூர் பாளையக்காரருக்கு, சிவகிரியார் தன்னை தவறாகப் புரிந்துகொண்டதாகவும் நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க விரும்புவதாகவும் ஒரு கடிதம் எழுதினான்.

சேத்தூரில் சமாதானக் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
கட்டபொம்மன் நல்லவன் போல திறம்பட நடித்தான்.
ஆனால் சிவகிரியார் மசியவில்லை.
'நீ படம் ஓட்டுனது போதும்' என்று கூறிவிட்டார்.

எனவே சிவகிரி பெரியவர் சேத்தூரிலேயே தங்கிவிடுவது என்றும் அதற்கு சிவகிரி பாளையம் மாதாமாதம் ஒரு தொகை கொடுக்கும் என்று பேசி முடிக்கப்பட்டது.

கட்டபொம்மன் 'நான் ட்ரீட் தருவேன்' என்றான்.
தூத்துக்குடியில் கள்ளக்கடத்தல் செய்யும் டச்சுக்காரர்கள் தன் 'அருமை நண்பா கட்டபொம்மா'வுக்கு பரிசாகத் தந்த 'ஃபாரின் சரக்கு' பாட்டில்களை எல்லார் முன்பும் அடுக்கினான்.

புதுவித சரக்கு என்றதும் எல்லாருக்கும் ஜொள்ளு வடிய 'ஓகே' என்றனர்.
மதுவில் மயக்க மருந்து கலந்திருந்ததால் அனைவரும் சிறிது நேரத்திலேயே மட்டையாகினர். பார்ட்டி முடிந்தது.

அப்போது சிவகிரியாரை ஒரு மூட்டையில் கட்டினான் கட்டபொம்மன்.
அப்போது லேசாக விழிப்பு தட்டிய சேத்தூரார் சத்தம் போடத் தொடங்கினார்.
அவர் தொண்டையில் வாளைப் பாய்ச்சி கொலை செய்தான் கட்டபொம்மன்.
விருந்திட்டவனையே ஊற்றிக்கொடுத்து படுகொலை செய்தான்.

சத்தம் கேட்டு வந்த அவரது மனைவி குழந்தைகளையும் ஈவிரக்கமின்றி வெட்டி கொலைசெய்தான்.

சிவகிரி பெரியவரை கட்டித் தூக்கிக் கொண்டு சிவகிரிக்கு கொண்டுவந்து சிறையில் இட்டு நல்ல கூலி வாங்கிக்கொண்டான்.

ஆம். வீராதி வீரனென்று தலையில் வைத்தாடும் கடைசி கட்டபொம்மன் ஒரு முதியவரைக் கொல்லப்பார்த்தவன்.
ஒரு நிராயுதபாணியையும் ஒரு பெண்ணையும் பச்சிளம் குழந்தைகளையும் கொலை செய்த படுபாவி.
எல்லாம் பணத்துக்காக.

இந்த சதிக்கூட்டணி செய்த ஒரே தவறு சிவகிரியாரை உயிரோடு விட்டது.

சிறையில் கிடந்த அந்த முதியவர் வேறுவழியின்றி நடந்ததை நம்பிக்கையான ஒரு ஆள் மூலம் ஆங்கிலேயருக்கு செய்தி அனுப்பி தன்னைக் காப்பாற்றுமாறு கோரினார்.
இதைச் செய்தால் ஆங்கிலேயருக்கு என்றும் விசுவாசமாக இருப்பதாக வாக்களித்தார்.

ஒரு கூலிப்படைக்கு பதிலடி கொடுக்க இன்னொரு கூலிப்படைதானே வரவேண்டும்?!

ஆகா! சிவகிரியை வளைக்க நல்ல தருணம் என்று படையோடு ஓடோடி வந்தான் கர்னல் மாக்ஸ்வெல்.

'படை எதுவும் வராது' என்று எண்ணியிருந்த கட்டபொம்மன் மாக்ஸ்வெல் வருவது தெரிந்ததும் சிவகிரி சின்னவனை நட்டாற்றில் விட்டுவிட்டு சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப் போய்விட்டான்.

கட்டபொம்மு காணாமல் போய்விட்டான் என்றறிந்த சிவகிரி சின்னவன் 'மாப்பு வச்சிட்டான்டா ஆப்பு' என்று தன் சகாக்களைத் தேட அவர்களும் கம்பிநீட்டிவிட்டது தெரிந்தது.
வேறுவழியின்றி ஆங்கிலேயரிடம் சரணடைந்தான்.

சிவகிரி பெரியவரை மீண்டும் பதவியில் அமர்த்தினான் மாக்ஸ்வெல்.
ஓடிப்போன இருவரையும் தேடும் குற்றவாளியாக அறிவித்தான்.

இந்நிலையில் தலைமறைவான சிவகிரி பாளையத்தின் முன்னாள் அல்லக்கை ஊற்றுமலையில் பிடிபட்டான்.
அவன் தன்னைக் காட்டிக் கொடுத்துவிடுவானோ என்று பீதியடைந்த கட்டபொம்மன் கலெக்டர் டோரினின் அல்லக்கையான தன் சாதிக்காரனைத் தொடர்புகொண்டு இந்த வழக்கில் தன்னை சேர்க்காமல் இருந்தால் கலெக்டருக்கு லஞ்சம் தருவதாக கூறும்படி பேரம்பேச அனுப்பினான்.

டோரின் லஞ்சம் பெற்றுக்கொண்டு கட்டபொம்மன் சம்பந்தப்பட்ட சேத்தூர் கொலை வழக்கு ஆவணங்களைத் தீவைத்து கொளுத்தினான்.

இந்த டீலிங் கர்னல் மாக்ஸ்வெல்லுக்கு தெரிந்துவிட்டது.
அவன் கலெக்டர் டோரினையும் சேர்த்து மேலிடத்தில் போட்டுக்கொடுத்தான்.

டோரின் ராஜினாமா செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டான்.
அவனது அல்லக்கையான கம்பளத்தானைப் பிடித்து உள்ளே தள்ளி நொங்கைப் பிதுக்கிவிட்டனர்.

ஆவணங்கள் எரிந்துவிட்டதாலும் அல்லக்கை கம்பளத்தான் தன் இனத்தானைக் காட்டிக்கொடுக்காமல் இனப்பற்று காட்டியதாலும் கட்டபொம்மன் கொலைப்பழியில் இருந்து தப்பினான்.

கலெக்டர்கள் லஞ்சம் ஊழலில் ஈடுபடுவதைத் தடுக்க ஆங்கிலேய மேலிடம் கலெக்டர்களது சம்பளத்தை 250 வராகனாக உயர்த்தி அத்தோடு வசூலிக்கும் தொகையில் 1.5% கமிஷனும் தரப்படும் என்று உத்தரவிட்டனர்.

கொலைவழக்கிலிருந்து தப்பிய கட்டபொம்மனது அட்டகாசம் இன்னும் அதிகமானது.
எல்லைதாண்டி ஆழ்வார்திருநகரி, திருவைகுண்டம் வரை சென்று இரவு நேரங்களில் கொள்ளையடித்தான்.
ஏழை எளிய பெண்களின் சிறிய கம்மலையும் காதோடு அறுத்ததால் 'காதறுத்தான் கட்டபொம்மன்' என்று பெயர்பெற்றான்.
கொஞ்சம் வசதியானவர்களைத் தூக்கிவந்து பணயத்தொகை பெற்றுக்கொண்டு விடுதலை செய்தான்.
(இதை கட்டபொம்மன் பற்றி நூலெழுதியோரில் ம.பொ.சி தவிர அனைவரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
கால்டுவெல் கூட தனது திருநெல்வேலி வரலாறு எனும் நூலிலும் கட்டபொம்மனின் கொள்ளைகளைப் பற்றிக் கூறியுள்ளார்)

கெட்டிபொம்முவை அடியொற்றி பல கொள்ளைக்கூட்டங்கள் முளைத்தன.
அவற்றில் சில கட்டபொம்மன் படையில் சேர்ந்தன.

இந்நிலையில் ஆங்கிலேயர் எதிர்பார்த்தபடி திப்பு சுல்தானோடு போர் மூண்டது.
சொல்லப்போனால் திப்பு சுல்தான் அந்த நாட்டு கட்டபொம்மன்.
குறுக்குவழியில் மைசூர் அரியணையில் அமர்ந்த ஹைதர் அலியின் மகன்.
பிரெஞ்சு ஆதரவுடன் தெற்குநோக்கி படையெடுத்த இவனை அடக்க கல்கத்தாவில் இருந்து காரன்வாலீசு வரவழைக்கப்பட்டான்.
வந்த சூட்டோடு அவன் திப்புவின் படைகளை திருச்சியிருந்து பெங்களூர் வரை அடித்து துவைத்து விரட்டி விரட்டி துவம்சம் செய்தான்.
கடைசி கட்டத்தில் பாதி ராஜ்யத்தையும் பெருமளவு பணத்தையும் பிணையாக தன் இரு மகன்களையும் அளித்து 'சமாதான' ஒப்பந்தம் போட்டுக்கொண்டான் திப்பு.
இது நடந்தது 1792 இல்.

இந்நிலையில் ஆற்காடு நவாபு வரிவசூல் செய்ய தெற்கே ஒரு தாசில்தாரை அனுப்பினான்.
கம்பளத்து பாளையங்கள் அவனுக்கு முறைவாசல் செய்து அனுப்பின.
அதே குதூகலத்துடன் மேற்கே மறவர் பாளையங்களுக்கு போன அவனை கழுத்தறுத்து போட்டுவிட்டார்கள்.

நவாபும் மறவர் மீது ஆங்கிலேயரிடம் புகார் செய்தான்.

ஊற்றுமலையும் தலைவன்கோட்டையும் தமது எல்லையிலும் கட்டபொம்மன் கொள்ளையடிப்பதாக முறையிட்டனர்.

1793 க்கு பிறகு தெற்கில் நிலவிய இந்த குழப்பமான சூழலை கவனிக்க ஆங்கிலேய மேலிடம் முடிவெடுத்தது.
அப்போது வரிவசூலிலும் குழப்பம் இருந்தது.
இதனால் ஆங்கிலேயர் நவாபுகளின் அனைத்து அதிகாரங்களையும் பிடுங்கினர்.

இப்போது ஆங்கிலப் படை ப்ரீ ஆகிவிட்டது.
வரிவசூலும் ஆங்கிலேயர் பொறுப்பு.
போட்டியாக இருந்த புதுச்சேரி பிரெஞ்சுக்காரர் களையும் மற்றும் தூத்துக்குடி டச்சுக்காரர்களையும் ஆங்கிலேயர் தோற்கடித்து அடக்கினர்.

தன் பாளையத்து நெசவாளர்களிடம் துணிவாங்கி தூத்துக்குடி வழியாக இங்கிலாந்து அனுப்பும் கான்ட்ராக்ட் கட்டபொம்மனுக்கு கிடைத்தது.
அந்த அப்பாவி நெசவாளருக்கு ஆங்கில கம்பெனி அளித்த சொற்ப பணத்தையும் இடையில் குத்தவைத்த கட்டபொம்மன் அமுக்கிக்கொண்டான்.

இதனால் அப்பகுதி நெசவுத்தொழில் நலிந்தது, ஆங்கிலேய வணிகர்கள் இது பற்றி கம்பெனிக்கு புகார் எழுதினார்கள்.

பிளாக்மெயில், கிட்நாப்பிங், அசாசினேசன், கான்ட்ராக்ட் என பல படிகள் முன்னேறிவிட்ட கட்டபொம்மு ரவுடியில் இருந்து தாதாவாக பதவி உயர்வு அடைந்திருந்தான்.

இப்போது தூத்துக்குடியில் எஞ்சியிருந்த டச்சு வணிகர்களிடம் துப்பாக்கி வெடிமருந்து என ஆயுதங்கள் வாங்க ஆரம்பித்தான்.

இப்படியாக கெட்டிபொம்மு ஆட்சிக்கு வந்த ஏழாண்டுகள் ஏறுமுகமாக இருந்தது.

டான் ஆகும் முயற்சியில் ஆங்கிலேயருக்கு தெரியாமல் மிகவும் ரகசியமாக இந்த ஆயுத கொள்வனவை நடத்தினான்.

இது உளவுத்துறை மூலம் ஆங்கிலேயர் காதுக்கும் போனது.

அப்போதுதான் 1797 இல் திருநெல்வேலி கலெக்டராக வந்தான் 'இரும்புத் தலையன்' என்றழைக்கப்பட்ட முரட்டு ஜாக்சன் துரை.

(தொடரும்)
24.09.2018 அன்றைய பதிவு 

Friday, 18 October 2024

கயவாளி கட்டபொம்மன் - 5



கயவாளி கட்டபொம்மன் 5
- நகைச்சுவை நடையில் கட்டபொம்மன் முன்னோரின் வரலாறு

பதிவர்: அன்பெழில் (anpezhil)

பகுதி - 5
இரண்டாம் ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன்
-----------
பொல்லாப் பாண்டிய கட்டபொம்மன் இறந்தபிறகு பட்டத்திற்கு வந்தான் அவன் மகன் (இரண்டாம்) ஜெகவீரபாண்டிய கட்டப்பொம்மன்.
அதாவது, நமது சிவாசிக்கனேசன் நடித்துக்காட்டிய வீரபாண்டியக் கட்டப்பொம்மனின் தகப்பன்!

இவனும் தன் தாத்தன், அப்பன் வழியைப் பின்பற்றி ‘பாண்டிய’ எனும் பின்னொட்டை தன் பெயரோடு இணைத்துக் கொண்டான்.
எந்தப் பாண்டிய மன்னன் இவர்களுக்கு அப்பனாக இருந்தான் என்பது அவர்களுக்கே வெளிச்சம்!

இடைப்பட்ட காலத்தில், கம்மந்தான் கான்சாகிப்பாக மதம் மாறியிருந்த மருதநாயகம் பிள்ளை வசம் மதுரை மற்றும் திருநெல்வேலிச் சீமைகளை ஆங்கிலேயர் குத்தகைக்கு விட்டிருந்தனர்.
மருதநாயகம் பிள்ளை வீழ்த்தப்பட்ட பிறகு திருநெல்வேலியானது தளவாய் அழகப்ப முதலியார் என்பவர் வசம் சிறிது காலம் குத்தகைக்கு விடப் பட்டிருந்தது.
பிறகு 1765ல் ராஜாஹகுமத்ராவ் என்பவன் வசம் குத்தகைக்கு விடப்பட்டது.

இந்தக்காலங்களில் தெற்கத்திச் சீமைகளில் பெரும் சச்சரவு எழுந்தது. பாளையங்களுக்கிடையே அடிக்கடி கொள்ளைகளும், போர்களும் நிகழ்ந்துவகொண்டிருந்ததால் குடிமக்கள் பயிர்த்தொழில் மறந்தனர்.
ஆங்கிலேயருக்கு வரிப்பணம் வசூலாகவில்லை.
பாளையக்காரர்களை வழிக்குக் கொண்டு வர முடிவெடுத்தனர்.

மேற்குப் பாளையங்களின் தலைவன் பூழித்தேவர், கிழக்குப் பாளையங்களின் தலைவன் ஜெகவீரபாண்டியன் இருவரையும் வீழ்த்தினால் மற்ற பாளையங்கள் தாமாக வழிக்கு வரும் என்ற பழைய திட்டத்தையே தேர்ந்தெடுத்தனர்.

மேஜர் பிளிண்ட் என்பவன் தலைமையில் ஒரு பெரும் படை பாஞ்சாலங்குறிச்சிக்குப் படையெடுத்தது.
ஜெகவீரபாண்டிய கட்டப்பொம்மனை பெரிய அடியக்காரனாக நினைத்து படைதிரட்டி வந்த பிளின்ட்க்கு செம பல்ப் கிடைத்தது.
சமாதனமாகப் போவதற்கு ஜெகவீர பாண்டியனிடமிருந்து தூது வந்தது.
அவனின் தில்லாலங்கடி வேலைகளை ஏற்கனவே நன்கு அறிந்திருந்த பிளின்ட் சமாதானம் செய்ய வந்த ஜெகவீர பாண்டியனின் கோரிக்கையை நிராகரித்து அவனைக் கைது செய்வதில் உறுதியாக இருந்தான்.
ஜெகவீரபாண்டியன் சரணடைய தயாராக இல்லை.
தாக்கிப்பிடிக்க உத்தரவிட்டான் பிளின்ட்.

ஜெகவீரபாண்டியன் இரவோடிரவாக கோட்டையைவிட்டு தப்பியோடி தூத்துக்குடியிலிருந்த டச்சுக்காரர்களிடம் அடைக்கலமானான்.
ஜெகவீரபாண்டியன் ஓடி ஒளிந்த பின் கிழக்குப் பாளையங்கள் தாமாக மண்டியிட்டன.
பிறகு ஆங்கிலேயரின் கவனம் மேற்குப் பாளையங்களின் தலைவன் பூழித்தேவர் பக்கம் திரும்பியது!

1767மே 13ல் கர்னல் டொனால்டு கேம்பல் என்பவன் தலைமையில் ஒரு பெரும் பீரங்கிப்படை பூலித்தேவரின் வாசுதேவநல்லூர்க் கோட்டையை தாக்கின.
பீரங்கிக் குண்டுகள் தாக்கி ஏற்பட்ட விரிசரல்களை பூழியின் வீரர்கள் பனைநாரும் பச்சை மண்ணும் கொண்டு அப்போதைக்கப்போது அடைத்தனர்.
பனைநாரும் பச்சை மண்ணும் தீர்ந்த பிறகு மறத்தமிழர்கள் தங்கள் உடல்களாலேயே மறைத்து நின்று வீர மரனம் அடைந்தனர்.
தமிழன்னை பெற்றெடுத்த ய இந்திய சுதந்திரப் போரின் முதல் மாவீரன் பூலித்தேவன் அந்த மண்ணிலே வீரகாவியமானான்.

தூத்துக்குடியில் டச்சுக்காரர்களிடம் அடைக்கலமாகி இருந்த ஜெகவீர பாண்டியனுக்கு இயற்கை வேறு விதத்தில் ஆப்பு வைத்தது.
டச்சுக்காரர்களும் ஆங்கிலேயரும் தங்கள் பகையை மறந்து தற்காலிகமாக ஒன்றுசேர முடிவெடுத்தனர்.
பீதியான ஜெகவீர பாண்டியன் தூத்துக்குடியை விட்டு ஓடி ராமநாதபுர சேதுபதியிடம் தஞ்சமடைந்தான்.

ஜெகவீர பாண்டியன் திருநெல்வேலிக்குள் நுழைந்தால் அவனைக் கைது செய்து ஆங்கிலேயரிடம் ஒப்படைக்க ஹகுமத்ராவ் உத்தரவிட்டிருந்தான்.
திருநெல்வேலி இருந்த பக்கம் தலைவைத்து உறங்குவதைக் கூட மறந்தான் ஜெகவீர பாண்டியன்.

இதையடுத்து திருநெல்வேலியை குத்தகைக்கு எடுத்திருந்த ராஜா ஹகுமத்ராவ் ஜெகவீர பாண்டியனின் உறவினன் ஒருவனைப் பிடித்து பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தின் தலைவனாக்கினான்.
சிறிது காலத்தில் ஆங்கிலேயர் ராஜா ஹகுமத்ராவை குத்தகையில் இருந்து நீக்கி விட்டு சையது முகமதுகான் என்பவனிடம் குத்தகையை ஒப்படைத்தது.
மேலும் இச்சமயத்தில் மைசூரிலும், வடநாட்டிலும் ஏற்பட்ட கலகங்களை சரிக்கட்ட ஆங்கில நிர்வாகம் விரும்பியது.
இன்னும் சிறிது காலத்திற்கு அவர்கள் திருநெல்வேலிப் பக்கம் திரும்பிப் பார்க்க மாட்டார்கள் என்பதை உணர்ந்த ஜெகவீரபாண்டியனுக்கு புதுத்தெம்பு பிறந்தது.

தன்னுடன் மிச்சமிருந்த தெலுங்குப் படைகளுடன் பாஞ்சாலங்குறிச்சி புறப்பட்டான்.
அங்கு பதவியிலிருந்த தன் உறவினனை போட்டுத்தள்ளி விட்டு அரியனை ஏறினான்.
அதே வேளை வேறொரு காரியமும் செய்தான்.
திருநெல்வேலியை குத்தகைக்கு எடுத்திருந்த சையது முகமதுகான் காலில் விழுந்தான்.
வேன்டிய வெகுமதிகளை அளித்து அவனைக் குளிர்வித்தான்.
தான் இனிமேல் என்றென்றும் ஆங்கிலேயருக்கு விசுவாசமாக இருப்பதாக வாக்களித்தான்.

ஆனால் பரம்பரை குரங்குப்புத்தி போகவில்லை.
ஆங்கிலேயரை வீழ்த்த உதவுவதாக வாக்குக்கொடுத்து டச்சுக்காரர்களிடம் ரகசிய தொடர்பு கொண்டான்.
அவர்கள் கொடுத்த பணத்தைக் கொண்டு பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை வலுமிக்கதாக கட்டிக் கொண்டான்.
படைபலத்தைப் பெருக்கினான்.
அந்த மமதையில் பக்கத்துப் பாளையங்களிடம் காவல் பணம் கேட்கத் துவங்கினான்.
மறுத்த பாளையங்களை துணிந்து கொள்ளையடித்தான்.

ஜெகவீர பாண்டியன் டச்சுக்காரர்களிடம் நெருக்கமான விடயம் ஆங்கிலேயர் காதுக்குப் போனது.
கடுப்பான அவர்கள் ஜெகவீர பாண்டியனை பிதுக்கி எடுக்க முடிவெடுத்தனர்.
கர்னல் புல்லாட்டான் என்பவன் தலைமையில் பாஞ்சாலங்குறிச்சியை தரை மட்டமாக்க ஒரு பெரும் ராணுவம் முற்றுகையிட்டது.

இதையறியாத ஜெகவீர பாண்டியன் அந்த நேரத்தில் சொக்கம்பட்டி எனும் ஒரு தமிழர் பாளையத்தைக் கொள்ளையடிக்கும் அரும்பெரும் பணிக்காக சென்றிருந்தான்.
தலைவன் இல்லாத பாஞ்சாலங்குறிச்சியின் வீரர்கள் கோட்டைக் கதவை இறுகச் சாத்திக் கொண்டனர்.
புல்லர்ட்டன் தாக்க உத்தரவிட்டான்.

தொடக்கத்தில் வடக்கு மூலையிலிருந்த கொத்தளத்தை பீரங்கியால் தாக்கினான்.
பிறகு பின்பக்கம் இருந்த சுரங்கத்தையும் தாக்கினான்.
பாஞ்சாலங்குறிச்சி கோட்டையைச் சுற்றி அகழி எதுவும் கிடையாது.
இலந்தை முள்ளைத்தான் வேலியாகப் பரப்பி வைத்திருந்தனர்.
இலந்தை முள்வேலி நெருப்புக்கு இரையானது.
ஆங்கிலேயர் கோட்டையை நெருங்கித் தாக்கினர்.

ஒருபக்கத்துச் சுவர் முதலில் விழுந்தது.
சிறிது நேரத்தில் மறுபுறமும் விழுந்தது.
ஆங்கிலேயர்கள் உள்ளே புகுந்தனர்.
கிலியடைந்த பாஞ்சாலங்குறிச்சி ‘வீரர்கள்’ கோட்டையின் கிழக்கு வாசல் வழியாக ஓடினர்.
திரும்பி வரும் வழியில் தகவலறிந்த ஜெகவீரபாண்டியன் வந்த வழியே ஓடினான். செவல.. தாவுடா.. தாவு!

கோட்டை சோதனையிடப் பட்டது.
கோட்டைக்குள்ளே டச்சுக்காரர்களிடம் இருந்து பெறப்பட்ட ஏராளமான ஆயுதங்களும், பீரங்கிகளும் கைப்பற்ற பட்டன.
கஜானாவிலிருந்து நாற்பதனாயிரம் டச்சு வராகன்கள் சிக்கின.
கோட்டைக்குள் அகப்பட்ட அத்தனை பேரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களுள் ஜெகவீரபாண்டிய கட்டப்பொம்மனின் மகளும் ஒருத்தி!
அடேய் ஓடுகாலிப் பொம்மா..
பெத்த பிள்ளையையும் விட்டுவிட்டா ஓடினாய்? பிரமாதம்.

எல்லாவற்றிற்கும் மேலாக டச்சுக்காரர்களும் ஜெகவீரபாண்டிய கட்டப்பொம்மனும் செய்துகொண்ட உடன்படிக்கையின் மூலப்பத்திரம் சிக்கியது.
அதன் பிரதி எழும்பூர் ஆவணக்காப்பகத்தில் இன்றும் உள்ளது.

சொக்கம்பட்டி ‘வேட்டை’க்குப் போன நேரத்தில் பாஞ்சாலங்குறிச்சி கோட்டைக்குள் ஓட்டையைப் போட்டு புல்லார்ட்டன் ஆட்டையைப் போட்டதை அடுத்து ஜெகவீர பாண்டிய கட்டப்பொம்மன் எடுத்த ஓட்டம் சிவகிரிப் பாளையத்தில்தான் வந்து நின்றது.

சிவகிரிப்பாளையத்திற்கு அதிகாரியாக ஆங்கிலேயர்களால் நியமிக்கப் பட்டிருந்த கேப்டன் கிரகாம்பெல் என்பவன் படுகொலை செய்யப்பட்டிருந்தான்.
எனவே சிவகிரிக்கும் ஆங்கிலேயருக்கும் ஆகாது.
‘எதிரியின் எதிரி நன்பன்’ எனும் சித்தாந்தத்திற்கு ஏற்ப டச்சுக்காரர்கள் சிவகிரிப் பாளையத்திற்கு நிறைய அளவில் ஆயுதங்கள், வெடிமருந்துகள் முதலிய உதவிகளை அளித்திருந்தனர்.
அந்தச் சிவகிரிப் பாளையத்தில்தான் ஜெகவீரபாண்டியன் அடைக்கலமாகி இருந்தான்.

ஜெகவீர பாண்டிய கட்டப்பொம்மன் மீது அப்படி என்ன பாசமோ புல்லார்டானுக்கு.
சிவகிரிப் பாளையத்தையும் முற்றுகை இட்டான்.
பூவோடு சேர்ந்த நாரும் நாறிய கதையாக ஜெகவீர பாண்டியனுடன் சேர்ந்து சிவகிரிப் பாளையக்காரர்களும் சிவகிரியை கைவிட்டு விட்டு ஓடி கோம்பை வந்தனர்.

கோம்பையில் ஒரு பெரிய காடு.
காட்டைச் சுற்றி முள்வேலி.
புல்லார்ட்டன் விடவில்லை. அங்கும் முற்றுகையிட்டான்.
பாளையக்காரர்கள் முதலில் சமாதானமாகப் போவதற்கு முயற்சி எடுத்தனர்.
சமாதானப் புறாக்களை நெய்போட்டு பொன்னிறமாக நன்கு வறுத்துச் சாப்பிட்டான் புல்லார்ட்டன். போர் வெடித்தது.

கடுமையான தாக்குதலுக்குப் பிறகு காட்டின் பெரும்பகுதி புல்லார்ட்டன் வசமானது.
அந்தச் சமயத்தில் சற்றும் எதிர்பாராமல் ஒரு தகவல் வந்தது.
திடீரென தின்டுக்கல் பகுதியில் நிகழ்ந்த மைசூர் மன்னனின் படையெடுப்பை சமாளிக்க வேண்டியிருப்பதால் உடனே திரும்பி வருமாறு ஆங்கிலேயர் உத்தரவு அனுப்பியிருந்தனர்.

கதைமுடிக்கும் நேரத்திலா இப்படி ஒரு உத்தரவு வரவேண்டும்?
கம்பெனியின் உத்தரவை மீற முடியாது.
வேறு வழியில்லை.
சிவகிரியானையும் ஜெகவீரபாண்டியனையும் நேரில் அழைத்தான். “நீங்கள் இருவரும் உடனே பணிந்து கப்பத்தொகை முழுவதையும் கட்ட வேண்டும்.
அப்படிக் கட்டாவிட்டால் நீங்கள் எங்கிருந்தாலும் தேடிப்பிடித்து அழிப்பேன் ” என்றான். இருவருக்கும் அந்த டீலிங் பிடித்திருந்தது.

ஒவ்வொருவரும் தத்தமது கப்பப் பாக்கியாக முப்பதாயிரம் சக்கரங்களை செலுத்தினர்.
பதினைந்தாயிரம் வராகன்களைக் கொடுத்து பழைய கோட்டைகளைத் திரும்பப் பெற்றனர்.
பாஞ்சாலங்குறிச்சி கோட்டையில் கைது செய்து வைக்கப் பட்டிருந்த ஜெகவீர பாண்டியனின் மகளும் உறவினரும் விடுவிக்கப் பட்டனர்.

அன்றுமுதல் ஆங்கிலேயரின் பெட்டிப்பாம்பாக அடங்கிப் போனான் ஜெகவீர பாண்டிய கட்டப்பொம்மன்.
அவ்வப்போது அவர்கள் காலால் இட்ட வேலைகளை தன் தலையால் செய்து காட்டி விசுவாசத்தை மெருகேற்றிக் கொண்டான்.
டச்சுக்காரனை நம்பி யார் தெருத்தெருவாக ஓடி ஒளிவது?
போதுமடா சாமி!

அதாவது, அவனின் விசுவாசம் எத்தகையது தெரியுமா?
மீண்டும் ஒருமுறை சிவகிரிப் பாளையத்திற்கும் ஆங்கிலேயருக்கும் தகராறு ஏற்பட்டது.
ஆங்கிலேயர் சிவகிரி மீது படையெடுத்தனர்.
ஜெகவீர பாண்டியனும் சேர்ந்து கொண்டு சிவகிரி மீது படையெடுத்தான்.
சிவகிரி பாளையம் ஜெகவீர பாண்டியனுக்கு எத்தகைய உதவிகளை செய்து வந்தது என்பதை ஏற்கனவே அறிவோம்.
இத்தகைய செய் நன்றி மறவா பேராண்மை கொண்ட பேராளனை வரலாற்றில் எங்கும் காண இயலாது!

ஜெகவீர பாண்டிய கட்டப் பொம்மனின் அலும்பு நாளுக்கு நாள் கூடியது.
ஆங்கிலேயரை எதிர்க்கும் பாளையங்களை எல்லாம் தாமே முன்னின்று எதிர்ப்பதாகக் கூறி, மிதிவண்டி இடைவெளியில் பக்கத்துப் பாளையங்களைக் கொள்ளையடிக்கத் துவங்கினான்.

அவனின் இத்தகைய கொள்ளைச் சம்பவங்களில் குறிப்பிடத்தக்க சம்பவம் அருங்குளம், சுப்லாபுரக் கொலை, கொள்ளை!
இரண்டு கிராமங்களையும் சூரையாடி தன் வசப்படுத்திக் கொண்டான்.
இந்த இரண்டு கிராமங்களும் எட்டயபுரத்துக்குச் சொந்தமானது.

எட்டயபுரத்தான் ஆங்கிலேயரிடம் முறையிட்டுப் பார்த்தான்.
ஆங்கிலேயரின் அல்லக்கையாக மாறியிருந்த ஜெகவீர பாண்டியனை அவர்கள் கண்டிக்க முன்வரவில்லை.
கப்பத்தை ஒழுங்காகச் செலுத்திக் கொண்டிருக்கிறான்.
தவிர கப்பத்தொகை தராத பாளையங்களிடம் இருந்து அவனே வசூலித்துக் கொடுக்கிறான்.
வீணாக கண்டித்து ஏன் அவன் உற்சாகத்தைக் குறைக்க வேண்டும்?
தவிர, நாம் வந்தது வரிவசூலுக்காக.
நீதி நேர்மையை நெட்டி நிமிர்த்த அல்ல. நோக்கம்தான் பெரிது.

1790 பிப்ரவரி 2ல் ஜெகவீரபாண்டியன் காலமானான்.
அப்போது ஆங்கிலேய அரசு ஒரு அனுதாபச் செய்தி வெளியிட்டது.
அது என்ன தெரியுமா?

“ஆங்கில ஆட்சி ஒரு விசுவாசமுள்ள ஊழியரை இழந்து நிற்கிறது!”.
இதுதான் அந்தச் செய்தி!

11.09.2018 அன்றைய பதிவு

கயவாளி கட்டபொம்மன் 4

கயவாளி கட்டபொம்மன் - 4
கயவாளி கட்டபொம்மன்
- நகைச்சுவை நடையில் கட்டபொம்மன் முன்னோரின் வரலாறு

பதிவர்: அன்பெழில் (anpezhil)

பகுதி -4
பொல்லாப் பாண்டிய கட்டபொம்மன்
---------------
(வெறும்) கட்டப்பிரமையா 1736ம் ஆண்டு மாண்டான்.
அவனுக்குப் பிறகு அவன் மகன் 'பொல்லாப் பாண்டிய கட்டப் பொம்மன்' பட்டத்திற்கு வந்தான்.

அதென்ன பொல்லாப் பாண்டிய?!
முதலாம் ஜெகவீரபாண்டியனாக பெயர் மாற்றி வைத்துக் கொண்டிருந்த கட்டப்பிரமையாவிற்குப் பிறகு அவன் வம்சத்தில் பட்டத்திற்கு வந்த அனைவரும் ‘வீரபாண்டிய’ எனும் பின்னொட்டை பல்கலைக் கழகத்தில் படித்து வாங்கிய பட்டத்தைப் போல் வைத்துக் கொண்டனர்.

சமீபகாலம் வரை கூட தெலுங்கர்கள் தமிழக அரசியலில் தங்களுக்குச் சம்மந்தமே இல்லாத தமிழ்ப்பெயரை வைத்துக் கொண்டு குறளி வித்தை காட்டும் வடுகர்களின் உருமாறி பச்சோந்தித் தனம் கட்டப்பிரமையா காலத்திலேயே துவங்கியிருக்கிறது போலும்.

படத்தில் நாம் பார்த்த கட்டப்பொம்மனின் தாத்தாவான இந்த பொல்லாப் பாண்டிய கட்டப்பொம்மன் காலத்தில் மராட்டியர்களின் படையெடுப்பு நிகழ்ந்தது.
ஒரு புறம் நவாபுகள் வீழ்ச்சியடைய மறுபுறம் மராட்டியர்கள் வெற்றிக் கொடி நாட்டி வந்தனர்.

தர்ம சங்கடம் பொல்லாப் பாண்டியனுக்கு..
தன் பரம்பரைக்கு சின்ன நவாபு பட்டம் வழங்கி சிறப்பித்த ஆற்காடு நவாபுகள் பக்கம் சாய்வதா? இல்லை வெற்றி முரசு கொட்டி வரும் மராட்டியர்கள் பக்கம் சாய்வதா?
தான் சார்ந்த பக்கம் தோற்று விட்டால் அதன் பின்பு தன் பதவி?
சிவலோகப் பதவிதான்!

குழம்பவில்லை. பிராடுத்தனம் மரபணு வழியே கடத்தப்பட்டு அவன் ரத்தத்தில் ஊறி இருந்தது.
எளிமையாக ஒரு முடிவெடுத்தான்.
ஆற்காடு பிரதிநிதி சாதிக்கானுக்கு ஒரு சிறிய படைப்பிரிவை உதவிக்கு அனுப்பினான்.
மறுபுறம், மராட்டிய தளபதி முராரிராவுடன் இரகசியமாகத் தொடர்பு கொண்டு சாதிக்கானின் படைபலத்தையும் போர்த்திட்டங்களையும் போட்டுக் கொடுத்தான்.
எவன் வென்றாலும் நமக்கு ஆபத்தில்லை.
செய்த உதவியைக் காரணம் காட்டி தப்பித்துக் கொள்ளலாம். ராசதந்திரம்!

போரில் சாதிக் கான் தோற்றான்.
சாதிக்கானின் அண்ணன் சந்தாசாகிப் திருச்சிராப்பள்ளி கோட்டைக்குள்ளிருந்து போரிட்டுக் கொண்டிருந்தான்.
மராட்டியர்கள் எவ்வளவோ முயன்றும் அவனை வெளியில் இழுக்க முடியவில்லை.
போரில் தோற்ற சாதிக்கானின் தலையை வெட்டி கோட்டைக்குள்ளிருந்த சந்தாசாகிப்பிற்கு அனுப்பி வைத்தான் முராரி ராவ்.
சந்தா சாகிப் எதிர்பார்த்த படியே வெளியில் வந்து போரிட்டு தோல்வியடைந்தான்.
சந்தாசாகிப் ஆண்ட அனைத்து நிலப்பகுதியும் மராட்டியர் வசமானது.

அந்த நிலப்பகுதிகளில் வரிவசூலிக்க மராட்டிய பிரதிநிதியாக திருநெல்வேலிச் சீமைக்கு வந்து சேர்ந்தவன் அப்பாஜிராவ்.
மராட்டியர் ஆட்சி இன்னும் உறுதியாக நிலைபெறாததால் தென்பாண்டி நாட்டுப் பாளையங்கள் கப்பம் கட்ட மறுதளித்தன.
இரண்டொரு தெலுங்குப் பாளையங்கள் கூட வரி கொடுக்க இசையவில்லை.

ஆனால், இதனைப் போன்று கப்பம் வசூலிக்க வருபவர்களுக்கு உதவுவதற்கென்றே ஒரு 'வனங்காமுடிப்' பரம்பரை பாஞ்சாலங்குறிச்சியில் இருந்தது.
அப்பாஜிராவைச் சந்தித்து முராரிராவுக்கு செய்த உதவிகளைக் காரணம்காட்டி அப்பாஜிராவின் அல்லக்கையானான் பொல்லாப் பாண்டிய கட்டப்பொம்மன்.
மற்ற பாளையங்களில் வரி வசூலித்து அதில் ஒரு பகுதி தரகுப் பணத்தை தான் வைத்துக் கொண்டு மீதியை மராட்டியர்களுக்குச் செலுத்தும் ‘கமிஷன் ஏஜென்ட்’ அதிகாரத்தை பொல்லாப் பாண்டியனுக்கு மராட்டியர்கள் அளித்தனர்.

மராட்டியர்களின் சார்பாக கப்பம் வசூலிக்க மேல்படாகை தமிழர் பாளையங்களுக்குள் ஆவலுடன் நுழைந்த பொல்லாப் பாண்டியனின் படைகளுக்கு மூக்கை உடைத்து அனுப்பின தமிழர் பாளையங்கள்.
அவமானமடைந்த பொல்லாப்பாண்டியன் ஒரு பெரும்படையை அனுப்பி வைக்குமாறு திருச்சியிலிருந்த முராரிராவுக்கு, அப்பாஜிராவ் மூலம் கடிதம் எழுதினான்.
ஆனால், இயற்கை வேறு விதமாக இருந்தது.

இந்த நேரத்தில் இரண்டு லட்சம் போர் வீரர்களும்,என்பதனாயிரம் குதிரை வீரர்களுடனும் நிஜாம் உல்முகின் தென்னாட்டின் மீது படையெடுத்தான்.
மராட்டியர்கள் விழிபிதுங்கி நின்றனர்.
இந்த லட்சனத்தில் பொல்லாப் பாண்டியனுக்கு எங்கிருந்து படையனுப்புவது?
சாமியே சைக்கிளில் போகும் போது பூசாரிக்குப் புல்லட்டா?

உல்முகின் படையெடுப்பை தாக்குப்பிடிக்க முடியாத மராட்டியர் கிடைத்ததைச் சுருட்டிக் கொண்டு ஓடினர்.
மீண்டும் தென்னகம் ஆர்காடு நவாப் வசமாகியது.
முகமதலி திருச்சிக் கோட்டையில் அமர்ந்தான்.
அன்வர்கான் என்பவனை திருநெல்வேலிச்சீமைக்கு வரி வசூலிக்க அனுப்பி வைத்தான் முகமதலி.
இந்த நேரத்திலும் அன்வர்கனின் முதல் அடிமையாக உருமாறி வரிவசூலிக்க உதவி நின்ற ஆபத்பாந்தவன் அதே பொல்லாப் பாண்டிய கட்டப் பொம்மன்தான்.
வித்தியாசமான பிறவிதான்!

அடுத்த சில ஆண்டுகளில் தென்னாட்டு அரசியலில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து பிரஞ்சுக்காரர்களுக்கும் ஆங்கிலேயருக்கும் இடையேயான நேரடி யுத்தம் வரை வந்து நின்றது.
இரு நாடுகளும் போருக்கு ஆகும் செலவை இங்கேயே வரியாக ஈட்டிக் கொள்ள முடிவெடுத்தன.
பிரஞ்சுக்காரர்களுக்கு வரிவசூலிக்க திருநெல்வேலிக்கு வந்து சேர்ந்தவன் கனகராய முதலியார்.
அவனை பாஞ்சாலங்குறிச்சிக்கே அழைத்துச் சென்று விருந்தளித்து குளிர்வித்தான் பொல்லாப்பாண்டிய கட்டப்பொம்மன்.

கனகராயமுதலியார் அங்கிருந்தபடியே பிரஞ்சுத்தளபதி டூப்ளேக்கு ஒரு கடிதம் எழுதினான்.
அக்கடிதத்தில் “தென்பாண்டி நாட்டில் பிரஞ்சுப்பேரரசை வளர்த்து பிரஞ்சுக் கொடியைப் பறக்க விடுவதற்கு மிகவும் உதவ பாஞ்சாலங்குறிச்சிப் பாளையக்காரர் பொல்லாப்பாண்டிய கட்டப்பொம்மன் காத்திருக்கிறார்.
முகமதலியையும், ஆங்கிலேயரையும் வென்று திருச்சிக் கோட்டையைக் கைப்பற்றும் வரை அந்த உதவிகள் மிகவும் இரகசியமாக இருக்க வேண்டுமென கட்டப்பொம்ம நாயக்கர் கேட்டுக் கொள்கிறார்” என குறிப்பிட்டு இருக்கிறார்.

கனகராய முதலியார் எழுதிய அந்தக் கடிதம் இன்றைக்கும் எழும்பூர் ஆவணக் காப்பகத்தில் இருப்பதாக தமிழ்வாணன் குறிப்பிட்டிருக்கிறார்!

ஆங்கிலேயர் 1751ல்தான் முதன்முதலாக இந்திய மன்னர்களிடம் வரிவசூலிக்கத் துவங்கினர்.
லெப்டினன்ட் இன்னிஸ் என்பவன்தான் முதன் முதலில் தென்பாண்டி நாட்டுக்கு வரி வசூலிக்கச் சென்றவன்.
இன்னிஸ் ஒரு பெரும்படையோடு வந்திருப்பதை அறிந்ததும் பிரஞ்சுக் காரர்களுக்காக வரி வசூலிக்க வந்திருந்த கனகராய முதலியார் இரவோடிரவாக பாண்டிச்சேரிக்கு ஓடிவிட்டான்.

ஏற்கனவே பிரஞ்சுக்காரர்களுக்காய் பாய்விரித்துக் காத்திருந்த பொல்லாப் பாண்டியக் கட்டப் பொம்மனுக்கு இச்செய்தி பேதியைப் புடுங்கியது.

என்னது..? ஓடிவிட்டானா..?! ஐயகோ..! மோசம் போனோமா!?

வேறுவழியில்லை. வழக்கம் போல் மீன்டும் ஒரு அந்தர் பல்டி அடித்தான்.
ஆங்கிலத் தளபதி இன்னிஸ் காலடியில் முட்டி தேயும் வண்ணம் மண்டியிட்டான்.

அந்நேரத்தில் கிழக்குப் பாளையங்கள் எனப்படும் கம்பளத்து பாளையங்கள் எல்லாம் பொல்லாப் பாண்டியன் தலைமையில் அனிவகுத்து நின்றன.
தலைவனே ஆங்கிலேயனுக்கு அன்னக்காவடி ஆகிவிட்ட பிறகு அவர்கள் மட்டும் என்ன செய்வது?
தலைவன் எவ்வழியோ அவனை நம்பிய பாளையங்களும் அவ்வழியே சரணடைந்தன.

அதே நேரத்தில் மேற்குப் பாளையங்கள் எனப்படும் தமிழர் பாளையங்கள் நெற்கட்டுஞ் செவ்வல் பாளையக்காரரான பூழித்தேவர் தலைமையில் அணி வகுத்திருந்தன.
உடனடியாக இன்னிஸ் திருநெல்வேலியை விட்டு வெளியேற வேண்டும்.
இல்லையெனில் அவன் துரத்தியடிக்கப் படுவான் என அறைகூவல் விடுத்தன.
இந்தியா என்னும் நாடாக இன்று உருப்பெற்றிருக்கும் அன்றைய மாபெரும் நிலப்பரப்பிலேயே ஆங்கிலேயரை எதிர்த்து ஆண்மை மிக்க முதல் முழக்கம் நெற்கட்டுஞ் செவ்வலில் இருந்துதான் எழுந்தது.
அதேநேரத்தில் இன்னிஸ் திருச்சிக்கு திரும்பி வருமாறு கேப்டன் சான்டர்சிடம் இருந்து உத்தரவு வந்தது.
இன்னிஸ் தாமாக திருச்சிக்குத் திரும்பினான்.

பின்பு 1755பிப்ரவரியில் திருச்சியிலிருந்து கர்னல் கெரான் என்பவன் தலைமையில் ஒரு பெரும் படை வரிவசூலுக்காக புறப்பட்டது.
மார்ச்சில் திருநெல்வேலி வந்து சேர்ந்தது.
எல்லாப் பாளையங்களுடனும் போரிட்டு நேரத்தை விரயமாக்குவதை விட அவற்றிற்கு தலைமைதாங்கும் பாளையங்களை வீழ்த்தினால் மற்றவை தானாக வீழும் எனக் கணக்கிட்ட கெரான், தன் படையிலிருந்த மகபூஸ்கான் என்பவன் தலைமையில் ஒரு படையை நெற்கட்டுஞ் செவ்வலுக்கு அனுப்பினான்.
மீதிப்படைகளுடன் அவன் பாஞ்சாலங்குறிச்சி நோக்கிப் புறப்பட்டான்.

கர்னல் கெரானின் படைகளை எல்லை நாயக்கன் பட்டி எனும் இடத்தில் தடுத்து நிறுத்தினான் பொல்லாப் பாண்டியன்.
எப்படித் தெரியுமா?
இருபத்தி மூன்றாம் புலிகேசி படத்தில் வடிவேல் வெள்ளைக்கொடியுடன் வெளிவந்து போரை நிறுத்துவார் அல்லவா?
அதே தொழில்நுட்பம்!

ஆனால் கர்னல் கெரானிடம் வெள்ளைக் கொடியெல்லாம் வேலை செய்யவில்லை.
மரியாதையாக முதலில் உன் கப்பத்தொகை எல்லாவற்றையும் கட்டிவிட்டு பிறகு பேசு என்றான்.
பொல்லாப் பாண்டியன் கெஞ்சினான். கதறிப்பார்த்தான்.
என் பாஞ்சாலங்குறிச்சிப் பாளையத்தில் இந்தப் பருவத்தில் மழையில்லை.
எங்கும் பஞ்சம்.
கையில் பணமில்லை. தயவுசெய்து ஒரு தவனை கொடுங்கள்.
தவனைப்படி கட்டி விடுகிறேன் ஆண்டே!

கெரான் இதற்கெல்லாம் மசியவில்லை.
இறுதியில் வேறு வழியின்றி கப்பத்தொகையில் ஒரு பகுதியை செலுத்தி விட்டு மீதிக்கு தவனை கேட்டு நின்றான்.
அதற்கும் அசையாத கெரான், நீ பாக்கித்தொகையைக் கட்டும் வரை இவர்கள் என்னிடமே இருக்கட்டும் எனக்கூறி பொல்லாப்பாண்டியனின் இரண்டாவது மகன் சின்னப் பொம்முவையும், பொல்லாப் பாண்டியன் தம்பியையும் பிணையாளாகப் பிடித்துக்கொண்டான்.

பெற்ற மகனையும் உடன்பிறந்த தம்பியையும் கப்பத்தொகைக்கு பிணையாக விட்டுச் சென்ற இவர்களைத்தான் வீரப்பரம்பரையாகப் புளகாங்கிதப்பட்டுக் கொள்கின்றனர்.

பொல்லாப் பாண்டியன் வகுத்த வழியைப் பின்பற்றி எட்டயபுர பாளையமும் ஒருபகுதி கப்பத்தைக் கட்டி விட்டு மீதிக்கு பிணையாளை விட்டுச் சென்றன!

இதற்கிடையில் மகபூஸ்கான் தலைமையில் நெற்கட்டுஞ் செவ்வலுக்கு வரி வசூலிக்கச் சென்ற படைகளுக்கு வழியை மறித்து பூழித்தேவர் படைகளால் பூசை கொடுக்கப் பட்டது!
ஆங்கிலேயப் படைகள் தங்கள் துப்பாக்கிகள், வெடிமருந்துகள், பீரங்கிகள் என எல்லாவற்றையும் அப்படி அப்படியே போட்டு விட்டு தலைதப்பினால் போதும் என ஓட்டம் பிடித்தன.
இந்திய விடுதலைப்போர் வரலாற்றில் ஆங்கிலேயரை எதிர்த்து முதல்குரல் எழுப்பியது மட்டுமல்ல.
முதல் வெற்றியும் பதிவு செய்யப்பட்டது ஒரு தமிழனால்தான்!

தமிழர்களுக்குச் செய்ய வேண்டிய துரோகம், அடிக்க வேண்டிய கொள்ளை, அடிக்க வேண்டிய பல்டிகளை எல்லாம் தன் ஆட்சிக்காலத்தில் அடித்து விட்டு கடைசியாக 1760ம் ஆண்டு மாண்டான் பொல்லாப் பாண்டிய கட்டப்பொம்மன்

Thursday, 17 October 2024

கயவாளி கட்டபொம்மன் 3

கயவாளி கட்டபொம்மன் - 3


கயவாளி கட்டபொம்மன் தொடர்
- நகைச்சுவை நடையில் கட்டபொம்மன் முன்னோரின் வரலாறு

பதிவர்: அன்பெழில் (anpezhil)

பகுதி-3
கட்டபிரமையா என்கிற ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன்
---------------------
காட்ர கட்டப் பிரமையாவின் மகன் (வெறும்) கட்டப் பிரமையா.
இவனே முதலில் கட்டபொம்மன் பட்டத்தை தன் பெயருக்குப் பின்னால் போட்டுக்கொண்டவன்.

தந்தையை விட சூழ்ச்சிக்காரன். நேரடியாகப் போரிடாமல் மறைந்திருந்து தாக்குவதில் பெத்த கெட்டிக்காரன்.
(வழிப்பறி  கொள்ளையடிக்கிறப்போ நேரடியா மோதினா மொகரைய பேத்துருவாய்ங்கெல்ல..)

இந்த கெட்டிக்காரன் என்பதைத்தான் அவன்சார்ந்த கம்பளத்தார் தெலுங்கு வழக்கில் கெட்டிப்பொம்மு என அழைத்தனர்.
அது மருவி கட்டப்பொம்மன் ஆனது.
இவன் படத்தில் நாம் பார்த்த கட்டப் பொம்மனின் கொள்ளுப்பாட்டன்.

கட்டப்பொம்மன் சரி. அதென்ன வீரபாண்டிய கட்டப்பொம்மன்?

இளம் பஞ்சபாண்டியர்கள் தந்தை காலத்திலிருந்து பகைவர்களாக இல்லாவிடினும் அவர்கள் தமிழினம் என்பது ஒருபக்கம் உறுத்திக் கொண்டிருந்தது.
இன்றைக்கில்லை என்றாலும் என்றாவது ‘எம்மண்ணில் உனக்கென்ன வேலை? போடா கொல்டி’ என உதைத்து விரட்டினால் என்ன செய்வது?

தயங்கவே இல்லை. நாயக்கப் பேரரசிடம் போட்டுக் கொடுத்தான்.
வஞ்சனையால் காட்டிக்கொடுக்கப்பட்டு அம்மாவீரர்கள் அம்மண்ணில் வீழ்த்தப்பட்டார்கள்.
வீழ்த்தப்பட்ட இடம் கட்டப்பொம்மனுக்கே கிடைத்தது.
அந்த இடத்தைச் சுற்றிலும் தன் கம்பளத்து இனத்தவரை குடியேற்றினான்.
பாளையம் உருவாயிற்று.
தன் முன்னோரில் ஒருவனான பாஞ்சாலன் என்பவனின் நினைவாக அந்தப் பாளையத்திற்கு பாஞ்சாலங்குறிச்சி எனப் பெயரிட்டான்.

பாளையத்திற்கு தலைநகர் ஒன்று வேண்டுமல்லவா?
இளம்பஞ்ச பாண்டியர்கள் வீழ்த்தப்பட்ட அந்த இடம் ஜெகவீரபாண்டியபுரம் என அழைக்கப்பட்டது.
அதையே தன் தலைநகராக்கினான்.
தன் பெயரையும் ஜெகவீரபாண்டிய கட்டப் பொம்மன் என வைத்துக் கொண்டான் கட்டபிரமையா.

அக்காலத்தில் போரில் வெற்றி கொண்ட வீரனொருவன் வெல்லப்பட்ட வீரனின் பெயரை சூட்டிக் கொள்வது மரபு.
இங்கே காட்டிக்கொடுத்த முதலாம் கட்டப்பொம்மனுக்கு தமிழின வரலாற்றின் மேன்மை மிகுந்த பாண்டியர்களின் பட்டம் போய்ச்சேர்ந்தது.
இது தமிழின வரலாற்றின் மிகப்பெரும் சாபக்கேடு!

ஜெகவீர பாண்டிய கட்டபொம்மன் என பெயரை மாற்றி வைத்துக்கொண்ட கட்ட பிரமையா 1709முதல் 1736வரை பாஞ்சாலங்குறிச்சிக்கு பாளையக்காரனாக இருந்தான்.
(அதாவது படத்தில் நாம் பார்த்த கட்டபொம்மனின் கொள்ளுப் பாட்டன்!)

இவன்காலத்தில் நாயக்கப் பேரரசு வலுவிழக்கத் துவங்கியது.
தட்டிக்கேட்க யாருமில்லா தைரியத்தில் தன் கம்பளத்தார்களைக் கொண்டு பெரும்படை நிறுவிக் கொண்டான்.
பெரும்படையுடன் பக்கத்துப் பாளையங்களில் புகுந்து கொள்ளையடிக்கத் துவங்கினான்.
மற்ற பாளையங்கள் திருப்பித் தாக்குவதில் இருந்து தப்பிக்க ஆங்காங்கே கோட்டை கொத்தளங்களை நிறுவிக் கொண்டான்.

அந்த நாளில் தென்பாண்டி நாட்டில் இருந்த தெலுங்குப் பாளையங்களுக்கு எல்லாம் எட்டையபுர பாளையமே தலைமை தாங்கி நின்றது.
பரம்பரை எதிரியான கட்டப் பொம்மனுக்கு அது பெருத்த அவமானமாகவே இருந்து வந்தது.
அதற்கும் ஒரு வேலை செய்தான்.

அனைத்து தெலுங்குப் பாளையத்தில் இருக்கும் கம்பளத்தாரின் குலதெய்வம் ஜக்கம்மா.
ஜக்கம்மாவுக்கு பாஞ்சாலங்குறிச்சியில் ஒரு மிகப் பெரிய கோவில் எடுத்தான்.
அந்தக் கோவிலுக்கு தலைமைப் பூசாரியாகவும் தானே ஆகினான்.
ஜக்கம்மாவை வணங்க வருபவர்கள் பூசாரியின் காலிலும் விழுந்து வணங்கலாகினர்.
தெலுங்குப் பாளையங்களின் தலைமையும் தானாக கட்டப்பொம்மனுக்கு வந்து சேர்ந்தது.

அடித்த கொள்ளை, செய்த ஃப்ராடுத்தனம் அத்தனையையும் அந்த ஜக்கம்மா கோவிலால் மறைந்து நின்றது.

திருமலை நாயக்கன் பரம்பரை நாங்கள்..
வீரபாண்டிய கட்டபொம்மன் பரம்பரை நாங்கள்..
தெலுங்கு வெண்ணைவெட்டிகள் பக்கங்களில் பார்த்தீர்களானால் இதே ரீதியில்தான் ஆண்ட பரம்பரை பேன்ட பரம்பரை வசனங்களால் நிரப்பப் பட்டிருக்கும்.
சரி. அப்பேர்ப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மனின் பரம்பரை பெருமை எத்தகையது?

நாயக்க மன்னர்கள் வலுவற்று இருந்ததை அறிந்த பல பாளையங்கள் வரி செலுத்தாமல் தவணை சொல்லி தட்டிக்கழித்து வந்தன.
தென்பாண்டி நாட்டு மறவர் பாளையங்கள் ஒரு படி மேலே  போய் "போடா வெண்ணை" என நாயக்க மேலாண்மையை உதறித் தள்ளிவிட்டு சுதந்திரமாக ஆட்சி நடத்தினர்.

இந்த நிலையில் ஆற்காடு நவாபின் ஆதிக்கம் துவங்கியது. ஆற்காடு நவாபின் பிரதிநிதியாக வரி வசூலிக்க வந்த சாதிக் கானுக்கு கப்பம் தர தென்பகுதி பாளையக்காரர்கள் மறுத்து விட்டனர்.

இந்நிலையில் ஆற்காடு நவாபின் பிரதிநிதி சாதிக்கானுக்கு அபயகரம் நீட்டிய ‘தன்மானச்சிங்கம்’ யார் தெரியுமா?
பேண்ட பரம்பரையின் முன்னோடி ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன்தான்!

பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரனான முதலாம் ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன் தன் படைகளைக் கொண்டே மற்ற பாளையக்காரர்களிடம் வரி வசூலித்து சாதிக்கானுக்கு அளித்தான்.

இந்த மாமா வேலைக்கு பரிசாக கட்டபொம்மனுக்கு சாதிக்கான் அளித்த வெகுமதி என்ன தெரியுமா?

“இனிமேல் வசூலாகும் கப்பத்தொகையில் ஆறில் ஒரு பங்கை நீயே வைத்துக்கொண்டு மீதி ஐந்து பங்கை இரண்டு தவணைகளில் அனுப்பி வா!”
என்று கூறி ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன் கழுத்தில் சாதிக் கான் ஒரு விலை உயர்ந்த மணிமாலையை அணிவித்தானாம்.
அத்துடன் அவனுக்கு 'தென்னாட்டின் சின்ன நவாபு' என்ற பட்டத்தையும் அளித்தானாம்!

இவைகள் எல்லாம் தெலுங்கர்களின் எதிர்ப்பாளர்கள் எழுதிய கட்டுக்கதைகள் அல்ல.
கட்டபொம்மனைப் புகழ்ந்து காவியமாக படைக்கப்பட்ட ‘வீரபாண்டியம்‘ எனும் நூலில் உள்ளவை!
---------------
அடுத்த பகுதி
'பொல்லாப் பாண்டிய கட்டபொம்மன்'

11.09.2018 அன்றைய பதிவு 

கயவாளி கட்டபொம்மன் 2

கயவாளி கட்டபொம்மன்  2

கயவாளி கட்டபொம்மன்
- நகைச்சுவை நடையில் கட்டபொம்மன் முன்னோரின் வரலாறு
பதிவர்: அன்பெழில் (anpezhil)
பகுதி-2
காட்ர கட்டபிரமையா
----------------
கட்டபொம்மன் பரம்பரைத் தொடக்கத்தில் ஒரு மாமன்னனைத் தேடிப்பார்த்தால் எட்டயபுர பாளையக்காரனுக்கு வெற்றிலை பாக்கு மடித்துக் கொடுத்து எச்சில் துப்ப சொம்பு தூக்கித் திரிந்த ‘காட்ர கட்டபிரமையா’ எனும் மாமா மன்னன்தான் அகப்படுகிறான்!
இவன்தான் கட்டப்பொம்மன் பரம்பரையின் முதல் கட்டப்பொம்மன்.

சொம்பு தூக்கி எப்படி மன்னனான்?

கட்டப்பொம்மன் பரம்பரையிலேயே வரலாற்றின் கண்ணுக்குப் புலப்படுகிறவன் காட்ர கட்டப் பிரமையாதான்.
இவன் 18ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில்தான் எட்டயபுர பாளையக்காரன் எட்டப்ப நாயக்கனுக்கு அடப்பக்காரனாக இருந்தவன்.

அடப்பக்காரர்களின் தலையாய பணி எதுவெனில் பாளையக்காரருக்கு வெற்றிலை மடித்துக் கொடுப்பது, மென்ற வெற்றிலைச் சாற்றினை ‘புளிச்’ எனத் துப்பும் போது சிந்தாமல் ஒரு சொம்பில் பிடித்துக்கொள்வது,
மன்னவருக்கு அலுப்பாக இருக்கும் வேளைகளில் கைகால் அமுக்கி விடுவது போன்ற ராஜபணிகள்!

கட்டப்பொம்மனின் பரம்பரையினர் கம்பளத்தார் வகுப்பைச் சேர்ந்தவர்கள்.
கம்பளத்தாரில் கொல்லவார், சில்லவார், தோகலவார் என ஒன்பது பிரிவு.
தோகலவார் என்றால் பசுமாடுகளை ஊர்ஊராக ஓட்டிச் சென்று மேய்க்கும் நாடோடிகள் எனப் பொருள்.
கெட்டிப்பொம்முவின் ஆண்ட(!) பரம்பரை மூதாதையர்கள் இந்த தோகலவார் வகுப்பைச் சேர்ந்தவர்கள்தான்.
சில்லவார் பிரிவு கம்பளத்தாரான எட்டப்ப நாயக்கருக்கு அடப்பக்காரனாக அரும்பணியாற்றும் பேறுபெற்றவுடன் காட்ரகட்டபிரமையா ஆடுமாடு மேய்க்கும் குலத்தொழிலை புறந்தள்ளி எட்டயபுரத்தில் விளக்கி வைத்த சொம்புகளுடன் ஐக்கியமானான்.

காட்ர கட்டப் பிரமையாவால் தோற்றுவிக்கப்பட்ட கட்டப்பொம்மன் பரம்பரை ஐந்தே தலைமுறையோடு கயத்தாறின் புளியமரத்தில் முடிவுக்கு வருகிறது.

1) காட்ர கட்டபிரமையா

2) கட்டப்பிரமையா என்கிற முதலாம் ஜெகவீர பாண்டியன் (1709-1736).

3) பொல்லாப்பாண்டிய கட்டப்பொம்மன் (1736-1706).

4) இரண்டாம் ஜெகவீர பாண்டிய கட்டப் பொம்மன் (1760-1790).

5) வீரபாண்டியக் கட்டப்பொம்மன் (1790-1799).

இதில் ஐந்தாவதாக வருபவன்தான் பி.ஆர். பந்துலு நாயக்கன் தயாரிப்பில் நாம் பார்த்த ‘வானம் பொழிகிறது பூமி விழைகிறது’ சிவாசிக்கணேச கட்டப்பொம்மன்!

அது சரி, எட்டப்ப நாயக்கனுக்கு வெற்றிலை மடித்துக் கொடுத்து சொம்பு தூக்கித் திரிந்த காட்ர கட்டப் பிரமையா எப்படி அரியணை ஏறினான்?!

பாஞ்சாலங்குறிச்சி பாளையம் அமைந்ததற்கு வழக்கமா ஒரு முயல் நாயை விரட்டின கதையைச் சொல்லி நமது காதில் பூந்தோட்டத்தைச் சுத்துவாங்கெ.
ஆனால், பாஞ்சாலங்குறிச்சி பாளையம் தோன்றிய கதையைத் தோண்டிப்பார்த்தால் வடுகர்களின் பிறவி இரட்டைவேடக் குணம்தான் தன் அவுசப் பல்லை காட்டி இளிக்கிறது.

எட்டையபுரம் பாளையத்தை அடுத்து செக்காரப்பட்டி எனும் ஊர் இருந்தது.
அந்த ஊரில் வசித்த தமிழ் வேளாளர்கள் அந்தப் பூமியை தங்கள் உழைப்பால் வளம் மிகுந்ததாக மாற்றியிருந்தனர்.
எட்டப்பனுக்கு செக்காரப்பட்டி மீது ஒரு இது..!

எப்படியாவது அதை அபகரித்து தன் பாளையத்தோடு இணைத்து விட மையல் கொண்டிருந்தான்.
எட்டப்பனின் இந்த ஆசையை மடித்துக் கொடுத்த வெற்றிலையோடு ஆதியும் அந்தமுமாக தூபம் போட்டு வளர்த்தெடுத்தவன் அடப்பக்கார காட்ர கட்டபிரமையா!

திட்டம் உருவானது.
அதன்படி, செக்காரப்பட்டியை உளவு பார்க்கவும், தாக்க தக்க தருனம் பார்த்து தகவல் அனுப்பவும் காட்ர கட்டப் பிரமையா செக்காரப்பட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டான்.
வஞ்சகமறியா செக்காரப்பட்டி வேளாளர்களும் வேலை கேட்டு வந்த காட்ர கட்டப்பிரமையாவை காலியாக இருந்த ஊர்க்காவலாளி வேலையில் அமர்த்தினர்.

காட்ர கட்டப்பிரமையாவோ மிதிவண்டி இடைவெளியில் வடுகரயிலை விட ஆரம்பித்தான்.
ஆங்காங்கே சிதறிக் கிடந்த தன் கம்பளத்து உறவினர்களை செக்காரப்பட்டியில் சிறுகச் சிறுக குடியேற்றினான்.
வந்தாரை வாழவைத்தே பழக்கப்பட்ட தமிழினத்தில் பிறந்த அவ்வூர் வேளாளர்களும் வஞ்சகமறியாமல் அதை அனுமதித்தனர்.

எட்டப்பனோ செக்காரப்பட்டிக்கு படையனுப்ப காட்ர கட்டப்பிரமையாவின் செய்திக்காக வழிமேல் விழிவைத்துக் காத்திருந்தான்.
ஆனால், அடப்பக்காரனோ எட்டப்பனுக்கும் சேர்த்து ஆப்பு ஒன்று சீவிக்கொண்டிருந்தான்.

உண்மையில் காட்ர கட்டப்பிரமையாவுக்கு செக்காரபட்டியை எட்டையபுரத்தானுக்கு பிடித்துக் கொடுக்கும் எண்ணமெல்லாம் சிறிதும் இல்லை.
தானே கைப்பற்றுவதுதான் திட்டம்.
அதற்காகவே தன் கம்பளத்து உறவுகளை அங்கே குடியமர்த்தினான்.
ஆனாலும், எட்டப்பனின் படைவலிமைக்கு முன்னால் இவர்கள் வெறும் தூசி.
பிறகு என்னதான் செய்வது?!

நாயக்கர்களின் வருகைக்குப் பின்பு வீழ்ச்சி அடைந்த பாண்டியர்களின் வம்சாவளியில் கடைசியாக எதிர்த்து நின்ற பஞ்சபாண்டியர்களின் வழிவந்த இளம்பஞ்ச பாண்டியர்கள் பொதிகை மலையில் வசித்து வந்தனர்.
அவ்வப்போது புரட்சிப் படைகளோடு ஆங்காங்கே நாயக்க பாளையங்களைத் தாக்கியும் வந்தனர்.
அவர்களைத்தான் தேடிப்போய்ச் சந்தித்தான் காட்ர கட்டப்பிரமையா.

எட்டப்பன் செக்காரப்பட்டியின் மீது திடீரென படையெடுக்கத் திட்டமிட்டிருக்கிறான்.
நான் அவன் சாதிக்காரனாக இருந்தாலும் இதற்கு என் மனம் ஒப்பவில்லை.
நீங்கள்தான் அவர்களை விரட்டியடிக்க வேண்டும் என காலில் விழுந்தான்.
இளம்பஞ்ச பாண்டியர்களும் உடனே தன் படையைத் திரட்டிக்கொண்டு செக்காரபட்டி வந்து சேர்ந்தனர்.

எட்டப்பன் வெற்றி பெற்றால் அவனோடு சேர்ந்து எட்டயபுர பாளையத்தில் மேலும் உயர்ந்து விடலாம்.
பாண்டியர்கள் வெற்றி பெற்றால் அவர்களோடு இணைந்து இங்கேயே இருந்து விடலாம்.
காட்ர கட்டப்பிரமையாவுக்கு இரு கல்லிலும் ஒரே மாங்காய்.

'உடனே படையை அனுப்பவும்' என எட்டப்பனுக்குச் செய்தியனுப்பினான் காட்ர கட்டப் பிரமையா.
வெற்றி நிச்சயம் என்ற மிதப்பில் இரவோடு இரவாக எட்டையபுர படைகள் செக்கார பட்டிக்குள் புகுந்தன.
அளவில் பெரியதாய் இருந்தாலும் முன் தயாரிப்புடன் காத்திருந்து தாக்கிய இளம்பஞ்ச பாண்டியர்களின் படைக்கு முன் எட்டையபுர படைகள் மண்ணைக் கவ்வியது.

காத்திருந்த காட்ர கட்டப் பிரமையா பஞ்ச பாண்டியர்களின் சார்பில் வெற்றிவிழா கொண்டாடினான்.
அவனது வஞ்சகத்தை அறியாத இளம் பஞ்ச பாண்டியர்களும் அவனை தன் படையில் ஒரு தளபதியாக நியமித்தனர்.

அப்போதுதான் எட்டப்பனுக்கு காட்ரகட்ட பிரமையா வைத்த ஆப்பு பற்றி விளங்கியது.
கொதித்தான். குமுறினான். எப்படியாவது அவனைப் பழிவாங்கியே தீருவது என முடிவெடுத்தான்.
ஆனாலும் அது அவன் காலத்தில் முடியவில்லை.

அந்த வஞ்சினமே பரம்பரை பரம்பரையாக இருபக்கமும் வளர்ந்து எட்டப்பனின் வழித்தோன்றலாக வந்த வேறொரு எட்டப்பனால் காட்ர கட்டப்பிரமையாவின் பரம்பரையில் வந்த கட்டப்பொம்மனை காட்டிக் கொடுத்து கயத்தாறு புளிய மரத்தில் கணக்குத் தீர்த்தது!

சரி! தெலுங்கின கம்பளத்து காட்ர கட்ட பிரமையாவின் வம்சம் வீரபாண்டியனானது எப்படி?!
-------------
அடுத்த பகுதி
கட்டபிரமையா என்கிற ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன்

11.09.2018 அன்றைய பதிவு

Wednesday, 16 October 2024

கயவாளி கட்டபொம்மன் 1

கயவாளி கட்டபொம்மன்
- நகைச்சுவை நடையில் கட்டபொம்மன் பரம்பரையின் வரலாறு

பகுதி -1

தெலுங்கர் நுழைவு
------------
கட்டபொம்மன் கொள்ளைக்காரன் என்ற தலைப்பில் தமிழ்வாணன் அவர்கள் எழுதிய நூல் ஆளும் தெலுங்கு வந்தேறிகளால் மறுபதிப்பு வராமல் இருட்டடிப்பு செய்யப்பட்டுவிட்டது.

அந்நூல் காட்டிய ஆங்கிலேயர் காலச் சான்றுகள் வைக்கப்பட்டிருந்த எழும்பூர் ஆவணக் காப்பகம் கருணாநிதி அரசால்  கொளுத்தப்பட்டு சாம்பலாக்கப்பட்டுவிட்டது.

தற்போது கம்பளத்தார் சமூகத்தால் தமிழ்வாணனின் மகனுடன் சமரசம் பேசப்பட்டு அந்நூல் நிறுத்தப்பட்டுவிட்டதாக அறிவிப்பு வந்துள்ளது.

கட்டபொம்மன் என்கிற கெட்டிபொம்மு பற்றிய உண்மைகளை மீள ஆவணப்படுத்துவது அவசியமாகும்.
------------------
பதிவர்: அன்பெழில் (anpezhil)

தமிழர் வரலாற்றில் தெலுங்கர்கள் செய்த தகிடுதத்தங்கள் சொல்லி மாளாது.
வரலாற்றை மாற்றி, தங்கள் சுய அடையாளம் மறைத்து தமிழராக உருமாறி அவர்கள் காட்டிய, காட்டும் குரளிவித்தைகளை சமீபகாலம் வரை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

அவர்களில் முக்கியமானவன் நமக்கெல்லாம் வீரபாண்டியக் கட்டப்பொம்மனாக பி.ஆர்.பந்துலு நாயக்கனால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட கெட்டிப்பொம்மு நாயக்கன்.
பால்வாடி பொடிசுகளின் மேடைநாடகங்களிலும், பல்லுப்போன பெரிசுகள் டீக்கடைகளில் சிலாகித்து ஆத்தும் சிறப்புறைகளிலும் “வானம் பொழிகிறது, பூமி விளைகிறது” புகழ் வீரபாண்டியக் கட்டப் பொம்மனாக சித்தரிக்கப்பட்ட கட்டப்பொம்முவின் கதை உண்மையென்றே நம்பியவர்களுள் அடியேனும் ஒருவன்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு முறை திராவிட ஆதிக்கம் தொடர்பான கட்டுரைகளை இணையத்தில் தேடித் தேடி வாசித்துக் கொண்டிருந்தேன்.
தேடலின் முடிவில் அது தெலுங்கர்களின் வரலாற்றில் போய் நின்றது.
தெலுங்கர்களின் வரலாற்றை அவர்களின் பக்கங்களில் தேடியபோது கட்டப்பொம்மனைப் பற்றிய அவர்களின் பெருமை பீத்தக்கலய உரைகளை வாசிக்க நேரிட்டே விட்டது.
அன்று துவங்கிய பொம்முநாயக்கன் பற்றிய தேடல் இன்றும் முடிவுறவில்லை.
ஒன்று மட்டும் உறுதி.
அவன் பாண்டிய மன்னன் இல்லை.
பாண்டிய மன்னன் எவனும் அவனுக்கு அப்பனாக இருந்ததும் இல்லை.
எனினும் அவன் ஒரு சுத்தத் தெலுங்கன் என்பதையும், வெள்ளையருக்கு அஞ்சி பணிந்தவன் என்பதையும், ஊர்புகுந்து திருடிய கொள்ளைக்காரன் என்பதை நிரூபிக்கும் சான்றுகள் வரையுமாவது கிடைத்து விட்டது.

அனைத்தையும் புத்தகமாக்கும் முன்பு அவற்றை சுருக்கி மக்கள் மன்றத்தில் வைக்கின்றேன்.
தெலுங்கு நாயக்கர்கள் புளகாங்கிதப்பட்டு போற்றிப் புகழும் கட்டப்பொம்மன் ஒரு சுதந்திரப் போராட்ட வீரனா அல்லது டவுசரை ஈரமாக்கிக் கொள்ளும் தொடைநடுங்கி ஓடுகாலியா என்பதை வரும் அத்தியாயங்களைப் படித்தபின்பு முடிவெடுங்கள்.

தமிழகத்திற்கு வந்து சேர்ந்த தெலுங்கர்களை குறைந்தது மூன்று வகைப்படுத்தலாம்.
முகமதியர்களின் காட்டுத்தனமான ஆக்கிரமிப்பிற்கு அஞ்சி பெண்டு பிள்ளைகளோடு கூட்டம் கூட்டமாய் வந்தேறியவர்கள்.
வேட்டையாடும் சாக்கில் காட்டுநாய்களோடு மருதநிலத்தை ஆக்கிரமித்து வந்தேறியவர்கள்.
விஜயநகர பேரரசின் பெயரால் வெளிப்படையான ஆக்கிரமிப்பில் வந்தேறியவர்கள்.

பாண்டிய அரசில் ஏற்பட்ட குழப்பத்தைப் பயன்படுத்தி வந்தேறிய தெலுங்கு நாயக்கர்களின் முதல் பிதாமகன் விசுவநாத நாயக்கன்.
பாண்டியநாட்டை முதலில் ராமநாதபுரம் துவங்கி மணியாச்சி வரை பதினாறு பாளையங்களாகப் பிரித்தான்.
இந்தப் பாளையங்கள் பெரும்பாலும் மறவர் பாளையங்களாக இருந்தது அவனுக்குப் பெரும் தலைவலியாக இருந்தது.
பிறகு அதற்கும் வடுகர்கள் பாணியில் ஒரு திட்டம் தீட்டினான்.

படைவீரர்களாகவும், அரசப் பிரதிநிதிகளாகவும், வேட்டையாடவும், ஆடுமாடு மேய்க்கவும், பஞ்சத்தாலும், குறிசொல்லி பிழைக்கவும், முகமதியர்களின் அச்சுருத்தலுக்குப் பயந்தும் லக்கண்ணா, மாடண்ணா காலந்தொட்டே ஏராளமான தெலுங்கர்கள் தமிழகத்தில் குடியேறி இருந்தனர்.

அவர்களைத் தேடியெடுத்து நிலபுலன்களை வழங்கி மறவர் பாளையங்களைச் சுற்றி குடியேற்றினான்.
பின்பு பதினாறு பாளையங்களை பிரித்து 72 பாளையங்களாக்கினான்.
ஒவ்வொரு மறவர் பாளையங்களைச் சுற்றியும் குடியேறிய தெலுங்கர்களுக்கு பாளையங்கள் பிரித்து அமைக்கப்பட்டது.
இந்த தெலுங்கு பாளையங்கள் கம்பளத்தார் பாளையம் எனப்பட்டது.
இந்த 72பாளையங்களில் தேடிப்பார்த்தாலும் ‘பாஞ்சாலங்குறிச்சி’ எனும் பெயர் லேது!

பாண்டிய மன்னர்களின் காலத்தில் பாண்டியநாடு ஐம்பத்தியிரண்டு கூற்றங்களாகப் பிரித்து நிர்வகிக்கப்பட்டது.
இந்த ஐம்பத்தியிரண்டு கூற்றங்களிலும் லென்ஸ் வைத்துத் தேடிப் பார்த்தாலும் பாஞ்சாலங்குறிச்சி என்ற பெயரையே கானவில்லை!

அப்போ, வீரபாண்டிய கட்டப்பொம்மனின் 47வது பரம்பரை, 600ஆண்டுகால ஆட்சி என பொம்முநாயக்கனின் ரசிக குஞ்சுகள் பீலா விடுவது?!

முதலில் இந்த பாளையப்பட்டு முறை என்றால் என்ன?
கிட்டத்தட்ட குறுநில மன்னர்கள். வரி வசூல், நீதி வழங்குதல், படை வைத்துக் கொள்வது, பாதுகாவல் புரிவது இவையெல்லாம் பாளையக்காரர் பொறுப்பு.
வரும் வருவாயில் ஒரு பங்கு பாளையத்தின் நிர்வாகத்திற்கு.
மற்றொரு பங்கு நாயக்கப் பேரரசுக்கு.
இன்னொரு பங்கு பாளையக்காரருக்கு.

பாளையத்து மக்களின் உழைப்பை வரியாக வசூலித்து மூன்றில் ஒருபங்கை நெய்போட்டுச் சாப்பிட்டுத்தான் சைடுக்கொண்டை வந்தேறிகளுக்கு வயிறு ஜோதிகா போல் ஆனது போலும்!

ஆந்திரர்கள் தமிழ் மண்ணில் உல்லாசமாக வாழ்வதற்காக ஏற்படுத்தப்பட்ட பாளையப்பட்டு முறை சீரும் சிறப்புமாக செயல்பட்டு, மேலும் பல புதிய கம்பளத்துப் பாளையங்கள் தோன்றி தமிழகம் மொட்டையடிக்கப்பட்டது.
அவை பற்றிய விபரங்கள் இணையத்திலேயே ஏராளமாக கிடைக்கிறது.

கட்டப்பொம்மன் பரம்பரையினர் 12ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்திலேயே பாஞ்சாலங்குறிச்சிக்கு அதிபதிகளாய் இருந்தனர் என கட்டப்பொம்மனின் தொண்டரடிப் பொடியாழ்வார்கள் எழுதிய நூல்களில் பெருமை பீற்றியிருக்கின்றனர்.
எனினும் வரலாற்றில் தேடிப்பார்த்தால் 18ம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை பாஞ்சாலங்குறிச்சி என்ற பெயரே கிடையாது.
கட்டப்பொம்மன் வம்சம் எனும் பேச்சே கிடையாது.

அப்படியானால் தெலுங்கர்களால் போற்றிப் புகழப்படும் மாமன்னன் கட்டப்பொம்மனின் வீரம் மிகுந்த வம்சம் வரலாற்றில் எங்கு ஒளிந்திருந்தது?

- தொடரும்
--------------
அடுத்த பகுதி
'காட்ர கட்டபிரமையா'

11.09.2018 அன்றைய பதிவு

Tuesday, 3 January 2023

கயவாளி கட்டபொம்மன் தொடர் தொகுப்பு

கயவாளி கட்டபொம்மன் தொடர்

வரலாற்று நகைச்சுவைத் தொகுப்பு
படித்து சிரித்து மகிழுங்கள்

கயவாளி கட்டபொம்மன் - 1
(தெலுங்கர் நுழைவு)
http://vaettoli.blogspot.com/2018/09/1.html

கயவாளி கட்டபொம்மன் - 2
(காட்ர கட்டபிரமையா)
http://vaettoli.blogspot.com/2018/09/blog-post_11.html


கயவாளி கட்டபொம்மன் - 3
(கட்டபிரமையா என்கிற ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன்)
http://vaettoli.blogspot.com/2018/09/3.html

கயவாளி கட்டபொம்மன் - 4
(பொல்லாப் பாண்டிய கட்டபொம்மன்)
http://vaettoli.blogspot.com/2018/09/4.html

கயவாளி கட்டபொம்மன் - 5
(இரண்டாம் ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன்)
http://vaettoli.blogspot.com/2018/09/blog-post_14.html

கயவாளி கட்டபொம்மன் - 6
(கடைசி கட்டபொம்மன்)
http://vaettoli.blogspot.com/2018/09/6.html

கயவாளி கட்டபொம்மன் - 7
(ஜாக்சன் துரை)
http://vaettoli.blogspot.com/2018/09/7.html

கயவாளி கட்டபொம்மன் - 8
(பாஞ்சாலங்குறிச்சி வீழ்ந்தது)
http://vaettoli.blogspot.com/2018/10/8_1.html

கயவாளி கட்டபொம்மன் - 9
(கட்டபொம்மனின் முடிவு)
http://vaettoli.blogspot.com/2018/10/9.html






Saturday, 6 October 2018

கயவாளி கட்டபொம்மன் - 9

கயவாளி கட்டபொம்மன்

பகுதி - 9 (இறுதிப் பகுதி)

பதிவர்: ஆதி பேரொளி

"கட்டபொம்மனின் முடிவு"

பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை ஆங்கிலேயப் படை முற்றுகையிட்டு இருக்க கட்டபொம்மன் கோட்டையை விட்டு தப்பிவிட்டான்.

மறுநாள் அக்கோட்டை கைப்பற்றப்பட்டதும் கட்டபொம்மன் ஓடிவிட்டது பானர்மேனுக்கு தெரிகிறது.

ஏற்கனவே நடந்ததுபோல கட்டபொம்மன் ஆங்கிலேய தலைமை அலுவலகத்திற்கு போய் உயரதிகாரிகளை காக்கா பிடித்து தப்பிவிடுவான் என்று பானர்மேன் ஊகித்தான்.

உடனே சுற்றியுள்ள பாளையங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பினான்.
கட்டபொம்மனுக்கு ஆதரவளிப்போர் ஆங்கிலேயரின் கோபத்திற்கு ஆளாவார்கள் என்றும் அவனைக் கண்டதும் உயிருடனோ பிணமாகவோ பிடித்து ஆங்கிலப் படையிடம் ஒப்படைக்கும்படி அதில் எழுதியிருந்தது.

எட்டையபுரம் சென்று தமக்கு வழிகாட்ட உள்ளூர் விபரமறிந்த சிலரைப் பெற்றுக்கொண்டான்.

தனது படையில் ஒரு பகுதியை திருச்சி நோக்கியும் மற்றொரு பகுதியை வடக்கு நோக்கியும் போகுமாறு பணித்து
கட்டபொம்மன் திருச்சி அல்லது சென்னை அலுவலகத்தை அடையுமுன் எப்படியாவது துரத்தி பிடிக்கும்படி உத்தரவிட்டான்.

அப்போது லெப்டினண்ட் டல்லாஸ்  தலைமையில் சென்ற படைத்தொகுதி கட்டபொம்மனைத் துரத்திச் சென்று கோல்வார்ப்பட்டியில் கட்டபொம்மன் தங்கியிருந்த இடத்தை கண்டுபிடித்து சுற்றிவளைத்தது.

கட்டபொம்மன் மற்றவர்களை அம்போ என்று விட்டுவிட்டு எப்படியோ தப்பிவிட்டான்.
கட்டபொம்மனுடைய கொள்ளைக் கூட்டணியில் இருந்த பயங்கர கொள்ளையன் 'நாகலாபுரம் சௌந்தரபாண்டிய நாயக்கன்' இதில் பிடிபட்டான்.
கட்டபொம்மனின் தம்பி இருவரும் அமைச்சர் தனாதிபதிப் பிள்ளையும் பிடிபட்டனர்.

கட்டபொம்மனின் குடும்ப பெண்கள் தூத்துக்குடி சென்று கட்டபொம்மனது ஆங்கிலேய நண்பன் டேவிசனிடம் சரண் புகுந்தனர்.
அவனோ தன்னால் எதுவும் செய்யமுடியாதென்று ஆங்கிலேயரிடமே அவர்களை ஒப்படைத்தான்.

கட்டபொம்மன் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டதால் இவர்கள் பற்றிய ஆவணங்கள் கிடைத்துள்ளன.

கட்டபொம்மனை முதல் விடுதலை வீரன் என்று பலரும் கருத ஒரு காரணம் அவனே வெள்ளையரால் தூக்கில் போடப்பட்ட முதல் பாளையக்காரன் என்பதுதான்.
ஆனால் அவனுக்கு முன்பே பானர்மேன் உத்தரவின்பேரில் தனாதிபதிப் பிள்ளை தூக்கில் போடப்பட்டு இறந்தபிறகு தலை வெட்டப்பட்டு பாஞ்சாலங்குறிச்சியில் நட்டுவைக்கப்பட்டது.

அடுத்தது சௌந்தரபாண்டிய நாயக்கன் கோபாலபுரத்தில் தூக்கிலப்பட்டான்.

கட்டபொம்மன் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பகலில் மறைந்தும் இரவில் கால்நடையாகவும் திருச்சி நோக்கி சென்றுகொண்டிருந்தான்.
  சிவகங்கைச் சீமையின் ஆளியூரில் பதுங்கி மறுநாள் கலியபுரம் எனும் ஊரில் பதுங்கியிருந்தான்.

அப்பகுதி புதுக்கோட்டை மன்னன் ஆளுகைக்கு உட்பட்ட திருக்களம்பூர் எனும் பகுதியின் எல்லை.
அங்கே புதுக்கோட்டை அரசின் திருக்களம்பூர் தளபதியாக 'சர்தார் முத்துவைரவ அம்பலக்காரர்' என்பவன் இருந்தான்.

அவன் வெளியாட்கள் நடமாட்டத்தை அறிந்து அங்கே சென்று கட்டபொம்மனைப் பிடித்தான்.
சிறிதுநேரத்தில் ஆங்கிலேயரும் அங்கே வந்தடைந்தனர்.

கட்டபொம்மன் தன்னை பானர்மேன் தவிர வேறு வெள்ளையர் யாரிடமாவது ஒப்படைக்குமாறு அம்பலக்காரர் காலில் விழுந்து கெஞ்சி உயிர்பிச்சை கேட்டான்.

அந்த தளபதியோ மறவன். திருநெல்வேலி மறவர்களுக்கு கெட்டபொம்மு செய்த கொடுமைகளை மனதில் கொண்டு அந்த அம்பலக்காரர் கட்டபொம்மனை தரதரவென இழுத்து வந்து பானர்மேனின் படைமுன்பே கழுத்தைப் பிடித்து தள்ளிவிட்டான்.

(புதுக்கோட்டை அரண்மனை கட்டபொம்மனுக்கு அடைக்கலம் கொடுத்து வைத்திருந்ததாகவும் பிறகு வெள்ளையரிடம் ஒப்படைத்ததாகவும் இந்த சம்பவம் திரித்து எழுதப்படுகிறது)

1799 அக்டோபர் 16 ஆம் தேதி கயத்தாறில் கட்டபொம்மன் விசாரிக்கப்பட்டான்.
அனைத்து பாளையக்காரர்களும் வரவழைக்கபட்டனர்.

அனைவருமே கட்டபொம்மு மீது புகார்களை அடுக்கினர்.
பொதுமக்களும் சாட்சியம் அளித்தனர்.
வெள்ளைய அதிகாரிகளும் குற்றச்சாட்டுகளை அடுக்கினர்.

வேறுவழியில்லாத கட்டபொம்மன் அனைத்தையும் ஒப்புக்கொண்டான்.

இரண்டு வெள்ளையர்கள் சாவிற்கு காரணமான கட்டபொம்மனை மன்னிக்க ஆங்கில விசாரணைக் குழு தயாராக இல்லை.
எனவே கட்டபொம்மனுக்கு மரணதண்டனை அளிக்கப்பட்டது.

ஆங்கிலேயருக்கு மக்கள் ஆதரவும் நம்பிக்கையும் கிடைக்க மக்கள் அதிகம் வெறுக்கும் கட்டபொம்மனை பொதுவெளியில் தூக்கிலிட பானர்மேன் உத்தரவிட்டான்.

உடனடியாக கயத்தாறு முக்கிய சாலையில் ஒரு புளியமரத்தில் தூக்கில் தொங்கவிடப்பட்டு கட்டபொம்மன் கொல்லப்பட்டான்.

அங்கு வந்திருந்த பாளையக்காரர் அனைவரும் திகிலடைந்தனர்.

தமிழகத்தில் நன்கு காலூன்றிவிட்ட ஆங்கிலேயர் இனி யார் ஆதரவும் தேவையில்லை என்ற முடிவுக்கு வந்திருந்தனர்.
பாளையக்காரர், நவாபு, நிஜாம் என ஆதிக்கம் செலுத்தி வந்த அனைவரது அதிகாரங்களையும் பிடுங்கினர்.

இனி பாளையங்கள் செலுத்தும் சிற்றரசு ஆட்சி செல்லாதென்றும்  அனைத்து பாளையக்காரர்களும் தமது கோட்டைகளை இடித்துவிடுமாறும் உத்தரவிட்ட பானர்மேன்
அவர்களது நிலத்தில் வரிவசூல் செய்து ஆங்கிலேயருக்கு வரி கட்டும் நிலக்கிழார்களாக பாளையக்காரர்கள் தொடர்ந்து இருக்கலாம் என்றும் உத்தரவிட்டான்.

கட்டபொம்மன் போன்ற ஒரு கோழை வந்தேறித் தெலுங்கனை தமிழருக்காகப் போராடிய மபொசி ஏன் ஆதரிக்கவேண்டும்?!

அரசியல்தான் காரணம்.

காங்கிரஸ் ஆதரவாளரான மபொசி திராவிடத்தையும் அதில் தெலுங்கர் ஆதிக்கத்தையும் எதிர்த்து வந்தார்.
சென்னையை ஆந்திரர் கேட்டபோது அவர்களை எதிர்த்து கடுமையாகப் போராடினார்.

இதனால் அவர் இனவெறியர் என்றும் தெலுங்கர்-எதிரி என்றும் நடுநிலை வேடமிடும் கயவர்களால் குற்றம்சாட்டப் பட்டார்.

இதைச் சமன்செய்யும் வகையில் அவர் தமிழகத்தின் உட்பகுதித் தெலுங்கு வந்தேறு குடிகளை ஆதரித்தார்.
ஆந்திராவின் அசல் தெலுங்கருக்கும் தமிழக வந்தேறித் தெலுங்கருக்கும் வேறுபாடு இருப்பதாகப் பேசினார்.

அவர்கள் தமிழர்களே என்றும் கூறத் துணிந்தார்.
கருணாநிதி தூய தமிழர் என்று கூறினார்.
ஆனால் கருணாநிதி ஆட்சியில் 'கட்டபொம்மன் கொள்ளைக்காரன்' போல தெலுங்கு வரலாறு தோண்டப்படுவதைத் தடுக்க ஆங்கிலேயர் கால ஆவணங்கள் சேமிக்கப்பட்டிருந்த எழும்பூர் ஆவணக் காப்பகம் எரிக்கப்பட்டு சான்றுகள் அனைத்தும் அழிக்கப்பட்டன.

இதன்பிறகு தெலுங்கரான பந்துலு கட்டபொம்மன் வாழ்க்கையைத் திரைப்படமாக எடுத்தார்.
போலியான வரலாற்றைக் கூறிய இந்த திரைப்படம் வெளியாக உதவிய மபொசி அதை ஈடுகட்டும் வகையில் பந்துலுவை வைத்தே கப்பலோட்டிய தமிழன் என்று வ.உ.சி வாழ்க்கை வரலாற்றையும் திரைப்படமாக்கினார்.

ம.பொ.சி தமிழகத்தில் வாழ்ந்த தெலுங்கரில் ஒரு நாட்டுப்பற்றாளனைத் தேடி கட்டபொம்மனை கையிலெடுத்தார்.

உண்மை தெரிந்தபிறகு கைவிடமுயன்றார்.
ஆனால் மாற்றாக ஒரு வீரமான தமிழகத் தெலுங்கரின் வரலாறு தேவைப்பட்டது.

  ஆனால் அப்படி யாருமே கிடைக்கவில்லை.