Saturday, 19 July 2025
வெட்டி முண்டம்
Friday, 28 February 2025
அப்டா
Wednesday, 23 October 2024
கயவாளி கட்டபொம்மன் 8
கயவாளி கட்டபொம்மன் - 8
கயவாளி கட்டபொம்மன்
பகுதி - 8
பதிவர்: ஆதி பேரொளி
"பாஞ்சாலங்குறிச்சி வீழ்ந்தது"
கட்டபொம்மன் மீண்டும் ஆங்கிலேயருக்கு கிஸ்தி கட்டாமலும் பொதுமக்களைக் கொள்ளையடித்தும் அட்டூழியம் புரிந்துவந்தான்.
இராமநாதபுர பாளையக்காரர் முத்துராமலிங்க சேதுபதி ஆங்கிலேயரை எதிர்த்து புரட்சி செய்ய திட்டமிட்டபோது கள்ளத்தனமாக துப்பாக்கிகளை விற்றான் கட்டபொம்மன்.
புரட்சிக்கு முந்தைய நாள் ஆங்கிலேயருக்கு இக்கலகம் பற்றி தெரிந்துவிட்டது.
இதனால் சேதுபதி நாடு கடத்தப்பட்டு புரட்சி அடக்கப்பட்டது.
எப்போதும் இருதரப்பினர் மோதினால் இடையில் புகுந்து ஒரு புறம் வெளிப்படையான உதவியும் இன்னொரு புறம் மறைமுகமாக உளவுத்தகவலும் கொடுத்து யார் வென்றாலும் ஆதாயம் அடைவது கெட்டுபொம்மு பரம்பரையின் உத்தி.
எனவே வழக்கம்போல இதைச் செய்தது கட்டபொம்மனோ என்ற ஐயம் நமக்குத் தோன்றினாலும் இம்முறை கட்டபொம்மன் போட்டுக்கொடுக்கவில்லை.
வேறு எவனோ முந்திக்கொண்டுவிட்டான்.
சேதுபதிக்கு தூத்துக்குடி டச்சுக்கார வணிகர்கள் மூலம் கள்ளக்கடத்தல் செய்து ஆயுதம் விற்றது கட்டபொம்மன் என்கிற விடயம் பிற்பாடு ஆங்கிலேயருக்கு தெரிந்தபோது அவர்கள் அதிர்ந்துவிட்டனர்.
'நம்ம செல்லப்பிள்ளை கெட்டிபொம்முவா இப்படி?!' என்று மனம் வெதும்பினர்.
இந்நிலையில் தமது பகுதியில் புகுந்து திசைக்காவல் என்ற பெயரில் கட்டபொம்மன் பணம் பிடுங்குவதாக ஆங்கில அதிகாரிகள் கெட்டிபொம்மு மீது புகார் அளித்தனர்.
பிற பாளையங்களை கொள்ளையடித்த கட்டபொம்மன் ஆங்கிலேயப் பகுதிகளிலும் கொள்ளையிடுவதை தாங்கமுடியாத கலெக்டர் லூசிங்டன் கட்டபொம்முவை கிஸ்திபாக்கியைத் தருமாறும் அதற்கு நேரில் வருமாறும் மூன்றுமுறை ஓலை அனுப்பினான்.
உடம்பு சரியில்லை, நாள் நல்லாயில்லை என சாக்குபோக்கு சொல்லி அனுப்பினான் கெட்டிபொம்மு.
அதோடு தன்னை 'ஆங்கிலேய வளர்ப்புப் பிள்ளை' என்று அடையாளப்படுத்தியே பதில் எழுதியிருந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
நான்காவது கடிதம் 'ஒழுங்கு மரியாதையா வந்துரு' என்கிற தொனியில் இருந்தது.
'இது உங்க ஒடம்பு, எப்பவேணா தொவைக்கலாம்' என்கிற ரீதியில் பதில் அனுப்பினான் கெட்டிபொம்மு.
ஏற்கனவே ஜாக்சனை நேருக்கு நேர் பார்த்து மிரண்டு பேண்டு நாறிப்போன கதிக்கு மீண்டும் ஆளாக அவன் விரும்பவில்லை.
எனவே 'வரும்போது என் கூட்டத்தையும் கூட்டிவரலாமா?' என்று அனுமதியும் கேட்டிருந்தான்.
'வீரன் ஒத்தையா போனாலும் நூறுபேர் மாதிரி.
நீ நூறுபேரோட வந்தாலும் ஒத்தையாள்தான்' எனவே 30 பேருக்கு அதிகமாக வரக்கூடாது என்கிற தொனியில் அடுத்த கடிதம் உடனடியாக வந்தது.
அதில் இரண்டு மணிநேரம் கெடு விதித்து இருந்தது.
லூசிங்டனை இதற்குமேல் லூசாக்க முடியாது என்றுணர்ந்த கட்டபொம்மன் மறுநாள் வருவதாக கூறி அனுப்பினான்.
ஆனாலும் அவன் போகவில்லை.
லூசிங்க்டன் மேலிடத்திற்கு எழுதி ராணுவ நடவடிக்கை கோரினான்.
இந்நிலையில் கட்டபொம்மனது தம்பி ஊமைத்துரைக்கு திருமணம் நிச்சயமானது.
கல்யாண சமையல்காரர் லிஸ்ட் ஒன்றைக் கொடுத்தார்.
தேங்காய் - எவன் தோட்டத்திலாவது பறிச்சுக்கலாம்.
காய்கறி - சந்தையில் திருடிக் கொள்ளலாம்.
சர்க்கரை - மளிகை கடை பூட்டியதும் எடுத்துக்கலாம்.
அரிசி - ரேசன் கடையை கொள்ளையடிக்கலாம்.
அப்போ வாங்கறதுனு எதுவுமே இல்லையா?!
கட்டபொம்மனுக்கு எதையும் பறித்துதான் பழக்கம்!
அப்போது வெள்ளையர் வரிவசூலை பொருட்களாகவும் வாங்கினர்.
அவ்வாறு ஆங்கிலேயரது அரிசி குடோன் ஸ்ரீவைகுண்டத்தில் இருந்தது.
இரவில் வியாபாரிகள் போல வேடமிட்டு சென்ற கட்டபொம்மனின் ஆட்கள் குடோன் காவலாளியைக் கொன்றுவிட்டு நெல்லையெல்லாம் கொள்ளையடித்து ஓட்டப்பிடாரத்தில் ஒளித்துவைத்தனர்.
அப்பகுதி அதிகாரி பிர்க்கட்டு என்பவன் மறுநாள் இதுபற்றி விசாரித்தான்.
"கொள்ளைனா! கெட்டிபொம்மு! வேற எந்த... ஒரு பேரும் மைண்ட்ல வரமாட்டன்து" என்று மக்கள் கூறினர்.
அவன் ஆத்திரத்தோடு நேரே பாஞ்சாலங்குறிச்சி போய் கட்டபொம்மனை விசாரித்தான்.
கெட்டுபொம்மு "நீங்க போங்க சார்! யார்னு விசாரிச்சு நானே உரிச்சுவிடறேன்" என்று பதிலளித்தான்.
பிர்க்கட்டு "கட்டபொம்மா ஒனக்கு கட்டம் சரியில்லை.
ஒழுங்கா நீயே ஒத்துக்கோ!
இல்லன்னா பானர்மேன் படையோட வருவான்.
அவன் போட்டுத்தள்ளிட்டு பொணத்துகிட்டதான் என்ன யாதுனு கேப்பான். பாத்துக்கோ!" என்று கூறிவிட்டு கிளம்பிப்போனான்.
அப்போது சிவகிரி பாளையத்தின் அமைச்சன் ஒருவன் கட்டபொம்மனை ஒரு கட்டப்பஞ்சாயத்து விடயமாகப் பார்க்கவந்தான்.
கட்டபொம்மன் அதற்கு கூலியாக பணம் வேண்டாமென்றும் அதற்குப் பதிலாக தன் சார்பில் பானர்மேனைப் பார்த்து தனக்கு பரிந்துபேசுமாறும் கூறினான்.
அவனும் ஒத்துக்கொண்டு பானர்மேனை பார்க்கப்போனான்.
அங்கே போய் "கட்டபொம்மன்.." என்று வாயைத்தான் திறந்தான்.
வாயிலேயே குத்தி விலங்கு மாட்டி சிறையில் தள்ளினான் பானர்மேன்.
கட்டபொம்மன் இச்செய்தி கேட்டு வெலவெலத்துப்போய் ஜுரம் வந்து படுத்துவிட்டான்.
1799 செப்டம்பர் 4 ஆம் தேதி பாளையங்கோட்டை யிலிருந்து சீவலப்பேரி வழியாக பானர்மேனின் படை பாஞ்சாலங்குறிச்சி எல்லையை நள்ளிரவில் வந்தடைந்தது.
இரவே 12 பவுண்ட் பீரங்கிகளும் இரண்டு கும்பினி பட்டாளத் தொகுதியும் வரவழைக்கப்பட்டன.
காலையில் டல்லாஸ் என்பவன் தலைமையில் குதிரைப்படை பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை சுற்றிவளைத்து.
பானர்மேன் மூன்று ஆட்களை அனுப்பி கட்டபொம்மன் தனியாளாக தன்னிடம் வரவேண்டும் என்று உத்தரவிட்டு கோட்டைக்குள் அனுப்பினான்.
கட்டபொம்மன் பயந்து நடுங்கியபடி "என்னை எதுவும் செய்யமாட்டேன்" என்று உறுதி கொடுத்தால் வருகிறேன் என்றான்.
பானர்மேன் அப்படி உறுதிமொழி எதுவும் தரத் தயாராக இல்லை.
அவன் ஒரு முடிவுடன் வந்திருந்தான்.
(திப்பு சுல்தான் இந்த இடத்தில் கட்டபொம்மனிடமிருந்து மாறுபடுகிறான்.
தன் முடிவு கண்ணுக்குத் தெரிந்ததும் திப்பு உண்மையிலேயே வீரனாக மாறி முடிந்தவரை போராடி வீரமணம் அடைந்தான்.
ஆனால் கெட்டிபொம்முவோ கடைசி வரை கோழையாகவே இருந்தான்.)
கட்டபொம்மு நிபந்தனையற்ற சரணடையாத காரணத்தால் பீரங்கிகள் கோட்டையைத் தாக்கின.
காலின்ஸ் என்பவன் தலைமையில் ஆங்கிலப் படை உள்ளே நுழைய முற்பட்டது.
அப்போது நடந்த மோதலில் காலின்ஸ் கொல்லப்படுகிறான்.
போர் அப்படியே இடைநிறுத்தப்பட்டது.
மறுநாள் விடிந்ததும் கட்டபொம்மன் தூது அனுப்பினான்.
"தங்களைப் பார்த்தாலே பயமாக இருக்கிறது,
நான் ஆங்கிலேய அரச அதிகாரி எவரிடமாவது சரண்டைகிறேன்.
அதற்கு அனுமதிக்குமாறு கெஞ்சுகிறேன்" என்கிற தொனியில் அனுப்பியிருந்தான்.
பானர்மேன் ஒத்துக்கொள்ளவில்லை.
"என்னிடம்தான் சரண்டையவேண்டும்.
உயிருக்கு உத்தரவாதமும் கிடையாது" என்று கூறி ஒரு நாள் அவகாசம் கொடுத்தான்.
7ம் தேதி சந்தர்ப்பம் பார்த்து இரவு பத்துமணிக்கு ரகசிய வழி மூலம் 50 பேருடன் கோட்டையை விட்டு தப்பி ஓடினான் கட்டபொம்மன்.
எதற்கு?
வேறெதற்கு?! தான் காக்கா பிடித்து வைத்திருந்த திருச்சி ஆங்கிலேய உயரதிகாரிகள் காலில் விழுந்து உயிர்தப்பிக்கத்தான்.
(தொடரும்)
Thursday, 17 October 2024
கயவாளி கட்டபொம்மன் 3
கயவாளி கட்டபொம்மன் - 3
கயவாளி கட்டபொம்மன் தொடர்
- நகைச்சுவை நடையில் கட்டபொம்மன் முன்னோரின் வரலாறு
பதிவர்: அன்பெழில் (anpezhil)
பகுதி-3
கட்டபிரமையா என்கிற ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன்
---------------------
காட்ர கட்டப் பிரமையாவின் மகன் (வெறும்) கட்டப் பிரமையா.
இவனே முதலில் கட்டபொம்மன் பட்டத்தை தன் பெயருக்குப் பின்னால் போட்டுக்கொண்டவன்.
தந்தையை விட சூழ்ச்சிக்காரன். நேரடியாகப் போரிடாமல் மறைந்திருந்து தாக்குவதில் பெத்த கெட்டிக்காரன்.
(வழிப்பறி கொள்ளையடிக்கிறப்போ நேரடியா மோதினா மொகரைய பேத்துருவாய்ங்கெல்ல..)
இந்த கெட்டிக்காரன் என்பதைத்தான் அவன்சார்ந்த கம்பளத்தார் தெலுங்கு வழக்கில் கெட்டிப்பொம்மு என அழைத்தனர்.
அது மருவி கட்டப்பொம்மன் ஆனது.
இவன் படத்தில் நாம் பார்த்த கட்டப் பொம்மனின் கொள்ளுப்பாட்டன்.
கட்டப்பொம்மன் சரி. அதென்ன வீரபாண்டிய கட்டப்பொம்மன்?
இளம் பஞ்சபாண்டியர்கள் தந்தை காலத்திலிருந்து பகைவர்களாக இல்லாவிடினும் அவர்கள் தமிழினம் என்பது ஒருபக்கம் உறுத்திக் கொண்டிருந்தது.
இன்றைக்கில்லை என்றாலும் என்றாவது ‘எம்மண்ணில் உனக்கென்ன வேலை? போடா கொல்டி’ என உதைத்து விரட்டினால் என்ன செய்வது?
தயங்கவே இல்லை. நாயக்கப் பேரரசிடம் போட்டுக் கொடுத்தான்.
வஞ்சனையால் காட்டிக்கொடுக்கப்பட்டு அம்மாவீரர்கள் அம்மண்ணில் வீழ்த்தப்பட்டார்கள்.
வீழ்த்தப்பட்ட இடம் கட்டப்பொம்மனுக்கே கிடைத்தது.
அந்த இடத்தைச் சுற்றிலும் தன் கம்பளத்து இனத்தவரை குடியேற்றினான்.
பாளையம் உருவாயிற்று.
தன் முன்னோரில் ஒருவனான பாஞ்சாலன் என்பவனின் நினைவாக அந்தப் பாளையத்திற்கு பாஞ்சாலங்குறிச்சி எனப் பெயரிட்டான்.
பாளையத்திற்கு தலைநகர் ஒன்று வேண்டுமல்லவா?
இளம்பஞ்ச பாண்டியர்கள் வீழ்த்தப்பட்ட அந்த இடம் ஜெகவீரபாண்டியபுரம் என அழைக்கப்பட்டது.
அதையே தன் தலைநகராக்கினான்.
தன் பெயரையும் ஜெகவீரபாண்டிய கட்டப் பொம்மன் என வைத்துக் கொண்டான் கட்டபிரமையா.
அக்காலத்தில் போரில் வெற்றி கொண்ட வீரனொருவன் வெல்லப்பட்ட வீரனின் பெயரை சூட்டிக் கொள்வது மரபு.
இங்கே காட்டிக்கொடுத்த முதலாம் கட்டப்பொம்மனுக்கு தமிழின வரலாற்றின் மேன்மை மிகுந்த பாண்டியர்களின் பட்டம் போய்ச்சேர்ந்தது.
இது தமிழின வரலாற்றின் மிகப்பெரும் சாபக்கேடு!
ஜெகவீர பாண்டிய கட்டபொம்மன் என பெயரை மாற்றி வைத்துக்கொண்ட கட்ட பிரமையா 1709முதல் 1736வரை பாஞ்சாலங்குறிச்சிக்கு பாளையக்காரனாக இருந்தான்.
(அதாவது படத்தில் நாம் பார்த்த கட்டபொம்மனின் கொள்ளுப் பாட்டன்!)
இவன்காலத்தில் நாயக்கப் பேரரசு வலுவிழக்கத் துவங்கியது.
தட்டிக்கேட்க யாருமில்லா தைரியத்தில் தன் கம்பளத்தார்களைக் கொண்டு பெரும்படை நிறுவிக் கொண்டான்.
பெரும்படையுடன் பக்கத்துப் பாளையங்களில் புகுந்து கொள்ளையடிக்கத் துவங்கினான்.
மற்ற பாளையங்கள் திருப்பித் தாக்குவதில் இருந்து தப்பிக்க ஆங்காங்கே கோட்டை கொத்தளங்களை நிறுவிக் கொண்டான்.
அந்த நாளில் தென்பாண்டி நாட்டில் இருந்த தெலுங்குப் பாளையங்களுக்கு எல்லாம் எட்டையபுர பாளையமே தலைமை தாங்கி நின்றது.
பரம்பரை எதிரியான கட்டப் பொம்மனுக்கு அது பெருத்த அவமானமாகவே இருந்து வந்தது.
அதற்கும் ஒரு வேலை செய்தான்.
அனைத்து தெலுங்குப் பாளையத்தில் இருக்கும் கம்பளத்தாரின் குலதெய்வம் ஜக்கம்மா.
ஜக்கம்மாவுக்கு பாஞ்சாலங்குறிச்சியில் ஒரு மிகப் பெரிய கோவில் எடுத்தான்.
அந்தக் கோவிலுக்கு தலைமைப் பூசாரியாகவும் தானே ஆகினான்.
ஜக்கம்மாவை வணங்க வருபவர்கள் பூசாரியின் காலிலும் விழுந்து வணங்கலாகினர்.
தெலுங்குப் பாளையங்களின் தலைமையும் தானாக கட்டப்பொம்மனுக்கு வந்து சேர்ந்தது.
அடித்த கொள்ளை, செய்த ஃப்ராடுத்தனம் அத்தனையையும் அந்த ஜக்கம்மா கோவிலால் மறைந்து நின்றது.
திருமலை நாயக்கன் பரம்பரை நாங்கள்..
வீரபாண்டிய கட்டபொம்மன் பரம்பரை நாங்கள்..
தெலுங்கு வெண்ணைவெட்டிகள் பக்கங்களில் பார்த்தீர்களானால் இதே ரீதியில்தான் ஆண்ட பரம்பரை பேன்ட பரம்பரை வசனங்களால் நிரப்பப் பட்டிருக்கும்.
சரி. அப்பேர்ப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மனின் பரம்பரை பெருமை எத்தகையது?
நாயக்க மன்னர்கள் வலுவற்று இருந்ததை அறிந்த பல பாளையங்கள் வரி செலுத்தாமல் தவணை சொல்லி தட்டிக்கழித்து வந்தன.
தென்பாண்டி நாட்டு மறவர் பாளையங்கள் ஒரு படி மேலே போய் "போடா வெண்ணை" என நாயக்க மேலாண்மையை உதறித் தள்ளிவிட்டு சுதந்திரமாக ஆட்சி நடத்தினர்.
இந்த நிலையில் ஆற்காடு நவாபின் ஆதிக்கம் துவங்கியது. ஆற்காடு நவாபின் பிரதிநிதியாக வரி வசூலிக்க வந்த சாதிக் கானுக்கு கப்பம் தர தென்பகுதி பாளையக்காரர்கள் மறுத்து விட்டனர்.
இந்நிலையில் ஆற்காடு நவாபின் பிரதிநிதி சாதிக்கானுக்கு அபயகரம் நீட்டிய ‘தன்மானச்சிங்கம்’ யார் தெரியுமா?
பேண்ட பரம்பரையின் முன்னோடி ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன்தான்!
பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரனான முதலாம் ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன் தன் படைகளைக் கொண்டே மற்ற பாளையக்காரர்களிடம் வரி வசூலித்து சாதிக்கானுக்கு அளித்தான்.
இந்த மாமா வேலைக்கு பரிசாக கட்டபொம்மனுக்கு சாதிக்கான் அளித்த வெகுமதி என்ன தெரியுமா?
“இனிமேல் வசூலாகும் கப்பத்தொகையில் ஆறில் ஒரு பங்கை நீயே வைத்துக்கொண்டு மீதி ஐந்து பங்கை இரண்டு தவணைகளில் அனுப்பி வா!”
என்று கூறி ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன் கழுத்தில் சாதிக் கான் ஒரு விலை உயர்ந்த மணிமாலையை அணிவித்தானாம்.
அத்துடன் அவனுக்கு 'தென்னாட்டின் சின்ன நவாபு' என்ற பட்டத்தையும் அளித்தானாம்!
இவைகள் எல்லாம் தெலுங்கர்களின் எதிர்ப்பாளர்கள் எழுதிய கட்டுக்கதைகள் அல்ல.
கட்டபொம்மனைப் புகழ்ந்து காவியமாக படைக்கப்பட்ட ‘வீரபாண்டியம்‘ எனும் நூலில் உள்ளவை!
---------------
அடுத்த பகுதி
'பொல்லாப் பாண்டிய கட்டபொம்மன்'
11.09.2018 அன்றைய பதிவு
கயவாளி கட்டபொம்மன் 2
கயவாளி கட்டபொம்மன் 2
கயவாளி கட்டபொம்மன்
- நகைச்சுவை நடையில் கட்டபொம்மன் முன்னோரின் வரலாறு
பதிவர்: அன்பெழில் (anpezhil)
பகுதி-2
காட்ர கட்டபிரமையா
----------------
கட்டபொம்மன் பரம்பரைத் தொடக்கத்தில் ஒரு மாமன்னனைத் தேடிப்பார்த்தால் எட்டயபுர பாளையக்காரனுக்கு வெற்றிலை பாக்கு மடித்துக் கொடுத்து எச்சில் துப்ப சொம்பு தூக்கித் திரிந்த ‘காட்ர கட்டபிரமையா’ எனும் மாமா மன்னன்தான் அகப்படுகிறான்!
இவன்தான் கட்டப்பொம்மன் பரம்பரையின் முதல் கட்டப்பொம்மன்.
சொம்பு தூக்கி எப்படி மன்னனான்?
கட்டப்பொம்மன் பரம்பரையிலேயே வரலாற்றின் கண்ணுக்குப் புலப்படுகிறவன் காட்ர கட்டப் பிரமையாதான்.
இவன் 18ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில்தான் எட்டயபுர பாளையக்காரன் எட்டப்ப நாயக்கனுக்கு அடப்பக்காரனாக இருந்தவன்.
அடப்பக்காரர்களின் தலையாய பணி எதுவெனில் பாளையக்காரருக்கு வெற்றிலை மடித்துக் கொடுப்பது, மென்ற வெற்றிலைச் சாற்றினை ‘புளிச்’ எனத் துப்பும் போது சிந்தாமல் ஒரு சொம்பில் பிடித்துக்கொள்வது,
மன்னவருக்கு அலுப்பாக இருக்கும் வேளைகளில் கைகால் அமுக்கி விடுவது போன்ற ராஜபணிகள்!
கட்டப்பொம்மனின் பரம்பரையினர் கம்பளத்தார் வகுப்பைச் சேர்ந்தவர்கள்.
கம்பளத்தாரில் கொல்லவார், சில்லவார், தோகலவார் என ஒன்பது பிரிவு.
தோகலவார் என்றால் பசுமாடுகளை ஊர்ஊராக ஓட்டிச் சென்று மேய்க்கும் நாடோடிகள் எனப் பொருள்.
கெட்டிப்பொம்முவின் ஆண்ட(!) பரம்பரை மூதாதையர்கள் இந்த தோகலவார் வகுப்பைச் சேர்ந்தவர்கள்தான்.
சில்லவார் பிரிவு கம்பளத்தாரான எட்டப்ப நாயக்கருக்கு அடப்பக்காரனாக அரும்பணியாற்றும் பேறுபெற்றவுடன் காட்ரகட்டபிரமையா ஆடுமாடு மேய்க்கும் குலத்தொழிலை புறந்தள்ளி எட்டயபுரத்தில் விளக்கி வைத்த சொம்புகளுடன் ஐக்கியமானான்.
காட்ர கட்டப் பிரமையாவால் தோற்றுவிக்கப்பட்ட கட்டப்பொம்மன் பரம்பரை ஐந்தே தலைமுறையோடு கயத்தாறின் புளியமரத்தில் முடிவுக்கு வருகிறது.
1) காட்ர கட்டபிரமையா
2) கட்டப்பிரமையா என்கிற முதலாம் ஜெகவீர பாண்டியன் (1709-1736).
3) பொல்லாப்பாண்டிய கட்டப்பொம்மன் (1736-1706).
4) இரண்டாம் ஜெகவீர பாண்டிய கட்டப் பொம்மன் (1760-1790).
5) வீரபாண்டியக் கட்டப்பொம்மன் (1790-1799).
இதில் ஐந்தாவதாக வருபவன்தான் பி.ஆர். பந்துலு நாயக்கன் தயாரிப்பில் நாம் பார்த்த ‘வானம் பொழிகிறது பூமி விழைகிறது’ சிவாசிக்கணேச கட்டப்பொம்மன்!
அது சரி, எட்டப்ப நாயக்கனுக்கு வெற்றிலை மடித்துக் கொடுத்து சொம்பு தூக்கித் திரிந்த காட்ர கட்டப் பிரமையா எப்படி அரியணை ஏறினான்?!
பாஞ்சாலங்குறிச்சி பாளையம் அமைந்ததற்கு வழக்கமா ஒரு முயல் நாயை விரட்டின கதையைச் சொல்லி நமது காதில் பூந்தோட்டத்தைச் சுத்துவாங்கெ.
ஆனால், பாஞ்சாலங்குறிச்சி பாளையம் தோன்றிய கதையைத் தோண்டிப்பார்த்தால் வடுகர்களின் பிறவி இரட்டைவேடக் குணம்தான் தன் அவுசப் பல்லை காட்டி இளிக்கிறது.
எட்டையபுரம் பாளையத்தை அடுத்து செக்காரப்பட்டி எனும் ஊர் இருந்தது.
அந்த ஊரில் வசித்த தமிழ் வேளாளர்கள் அந்தப் பூமியை தங்கள் உழைப்பால் வளம் மிகுந்ததாக மாற்றியிருந்தனர்.
எட்டப்பனுக்கு செக்காரப்பட்டி மீது ஒரு இது..!
எப்படியாவது அதை அபகரித்து தன் பாளையத்தோடு இணைத்து விட மையல் கொண்டிருந்தான்.
எட்டப்பனின் இந்த ஆசையை மடித்துக் கொடுத்த வெற்றிலையோடு ஆதியும் அந்தமுமாக தூபம் போட்டு வளர்த்தெடுத்தவன் அடப்பக்கார காட்ர கட்டபிரமையா!
திட்டம் உருவானது.
அதன்படி, செக்காரப்பட்டியை உளவு பார்க்கவும், தாக்க தக்க தருனம் பார்த்து தகவல் அனுப்பவும் காட்ர கட்டப் பிரமையா செக்காரப்பட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டான்.
வஞ்சகமறியா செக்காரப்பட்டி வேளாளர்களும் வேலை கேட்டு வந்த காட்ர கட்டப்பிரமையாவை காலியாக இருந்த ஊர்க்காவலாளி வேலையில் அமர்த்தினர்.
காட்ர கட்டப்பிரமையாவோ மிதிவண்டி இடைவெளியில் வடுகரயிலை விட ஆரம்பித்தான்.
ஆங்காங்கே சிதறிக் கிடந்த தன் கம்பளத்து உறவினர்களை செக்காரப்பட்டியில் சிறுகச் சிறுக குடியேற்றினான்.
வந்தாரை வாழவைத்தே பழக்கப்பட்ட தமிழினத்தில் பிறந்த அவ்வூர் வேளாளர்களும் வஞ்சகமறியாமல் அதை அனுமதித்தனர்.
எட்டப்பனோ செக்காரப்பட்டிக்கு படையனுப்ப காட்ர கட்டப்பிரமையாவின் செய்திக்காக வழிமேல் விழிவைத்துக் காத்திருந்தான்.
ஆனால், அடப்பக்காரனோ எட்டப்பனுக்கும் சேர்த்து ஆப்பு ஒன்று சீவிக்கொண்டிருந்தான்.
உண்மையில் காட்ர கட்டப்பிரமையாவுக்கு செக்காரபட்டியை எட்டையபுரத்தானுக்கு பிடித்துக் கொடுக்கும் எண்ணமெல்லாம் சிறிதும் இல்லை.
தானே கைப்பற்றுவதுதான் திட்டம்.
அதற்காகவே தன் கம்பளத்து உறவுகளை அங்கே குடியமர்த்தினான்.
ஆனாலும், எட்டப்பனின் படைவலிமைக்கு முன்னால் இவர்கள் வெறும் தூசி.
பிறகு என்னதான் செய்வது?!
நாயக்கர்களின் வருகைக்குப் பின்பு வீழ்ச்சி அடைந்த பாண்டியர்களின் வம்சாவளியில் கடைசியாக எதிர்த்து நின்ற பஞ்சபாண்டியர்களின் வழிவந்த இளம்பஞ்ச பாண்டியர்கள் பொதிகை மலையில் வசித்து வந்தனர்.
அவ்வப்போது புரட்சிப் படைகளோடு ஆங்காங்கே நாயக்க பாளையங்களைத் தாக்கியும் வந்தனர்.
அவர்களைத்தான் தேடிப்போய்ச் சந்தித்தான் காட்ர கட்டப்பிரமையா.
எட்டப்பன் செக்காரப்பட்டியின் மீது திடீரென படையெடுக்கத் திட்டமிட்டிருக்கிறான்.
நான் அவன் சாதிக்காரனாக இருந்தாலும் இதற்கு என் மனம் ஒப்பவில்லை.
நீங்கள்தான் அவர்களை விரட்டியடிக்க வேண்டும் என காலில் விழுந்தான்.
இளம்பஞ்ச பாண்டியர்களும் உடனே தன் படையைத் திரட்டிக்கொண்டு செக்காரபட்டி வந்து சேர்ந்தனர்.
எட்டப்பன் வெற்றி பெற்றால் அவனோடு சேர்ந்து எட்டயபுர பாளையத்தில் மேலும் உயர்ந்து விடலாம்.
பாண்டியர்கள் வெற்றி பெற்றால் அவர்களோடு இணைந்து இங்கேயே இருந்து விடலாம்.
காட்ர கட்டப்பிரமையாவுக்கு இரு கல்லிலும் ஒரே மாங்காய்.
'உடனே படையை அனுப்பவும்' என எட்டப்பனுக்குச் செய்தியனுப்பினான் காட்ர கட்டப் பிரமையா.
வெற்றி நிச்சயம் என்ற மிதப்பில் இரவோடு இரவாக எட்டையபுர படைகள் செக்கார பட்டிக்குள் புகுந்தன.
அளவில் பெரியதாய் இருந்தாலும் முன் தயாரிப்புடன் காத்திருந்து தாக்கிய இளம்பஞ்ச பாண்டியர்களின் படைக்கு முன் எட்டையபுர படைகள் மண்ணைக் கவ்வியது.
காத்திருந்த காட்ர கட்டப் பிரமையா பஞ்ச பாண்டியர்களின் சார்பில் வெற்றிவிழா கொண்டாடினான்.
அவனது வஞ்சகத்தை அறியாத இளம் பஞ்ச பாண்டியர்களும் அவனை தன் படையில் ஒரு தளபதியாக நியமித்தனர்.
அப்போதுதான் எட்டப்பனுக்கு காட்ரகட்ட பிரமையா வைத்த ஆப்பு பற்றி விளங்கியது.
கொதித்தான். குமுறினான். எப்படியாவது அவனைப் பழிவாங்கியே தீருவது என முடிவெடுத்தான்.
ஆனாலும் அது அவன் காலத்தில் முடியவில்லை.
அந்த வஞ்சினமே பரம்பரை பரம்பரையாக இருபக்கமும் வளர்ந்து எட்டப்பனின் வழித்தோன்றலாக வந்த வேறொரு எட்டப்பனால் காட்ர கட்டப்பிரமையாவின் பரம்பரையில் வந்த கட்டப்பொம்மனை காட்டிக் கொடுத்து கயத்தாறு புளிய மரத்தில் கணக்குத் தீர்த்தது!
சரி! தெலுங்கின கம்பளத்து காட்ர கட்ட பிரமையாவின் வம்சம் வீரபாண்டியனானது எப்படி?!
-------------
அடுத்த பகுதி
கட்டபிரமையா என்கிற ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன்
11.09.2018 அன்றைய பதிவு
Tuesday, 3 January 2023
கயவாளி கட்டபொம்மன் தொடர் தொகுப்பு
Thursday, 28 February 2019
ஈழத்தமிழர் போண்டா மணி
ஈழத்தமிழர் போண்டா மணி
என் இயற்பெயர் கேதீஸ்வரன்.
அம்மா கடல்பயணத்தில் குண்டுபோட்டபோது தவறிவிட்டார்கள்.
இப்போது அவர் இருக்கிறாரா இல்லையா என்று தெரியவில்லை.
தமிழ்நாட்டில் சேலம் அகதி முகாமில் தஞ்சமடைந்தேன்.
எடப்பாடியில் இப்போதும் நண்பர்கள் இருக்கிறார்கள்.
இலங்கையில் வசதியாக வாழ்ந்தவன்.
இப்போது அப்படியிருக்க முடியவில்லையே என்கிற கவலையை தமிழக மக்கள் போக்கிவிட்டார்கள்.
என்னை வளர்த்துவிட்ட மண்ணுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.
1985இல் அப்பாவை தமிழகம் அழைத்துவந்து கோவில்களை சுற்றிக் காட்டியபோது சிதம்பரம் பஸ் நிலையத்தில் டீ வாங்கித் தரமுடியாத நிலையில் என் மடியில் அப்பாவின் உயிர் பிரிந்தது.
பசியைப் போக்க போன்டா சாப்பிட்டு வந்ததால் அதுவே பெயராகிவிட்டது.
'ஒண்ணா இருக்க கத்துக்கணும்' (1992) என் முதல் படம்.
முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தாலும் வடிவேலு அண்ணனுடன் நடிக்க ஆரம்பித்த பிறகே பிரபலம் ஆனேன்.
வடிவேலு அண்ணன் சொல்லித்தான் எனக்கு பெண்கொடுத்தனர்.
சிங்கமுத்து அண்ணன் நிறைய உதவிகள் செய்திருக்கிறார்.
என் திருமணத்தை தன் செலவில் நடத்திவைத்தவர் அவர்தான்.
நான் வாய்ப்பு தேடிய காலங்களில் மன்சூர் அலிகான் அண்ணன்தான் தங்க இடம் கொடுத்து மளிகை சாமான்கள் வாங்கித் தந்தவர்.
நல்ல தமிழ் பற்றாளர்.
ஒரு முறை ரஜினி சாரிடம் வாய்ப்பு கேட்டேன்.
'இயக்குனர் கையில்தான் எல்லாமே இருக்கிறது' என்று சொல்லிவிட்டார்.
சினிமாவில் நிறைய ஆண்டுகள் இருந்தாலும் சொந்தமாக வீடு, வாசல் அமைத்துக் கொள்ளவில்லை.
ரசிகர்கள்தான் என் சொத்து.
தற்போதும் 15 படங்கள் கைவசம் உள்ளன.
நன்றி: தினமலர் 24.02.2019
------------------
எங்கெங்கோ அலைஞ்சு திரிஞ்சு உயிர் தப்பிச்சு, குண்டு பட்ட காயங்களோட 90-ம் வருஷம் நான் வந்து சேர்ந்த இடம் எடப்பாடி முகாம்.
படுகாயத்தோட வந்த என்னை வீரப்பன் என்கிற அண்ணன்தான் ஆஸ்பத்திரியில சேர்த்து உசிரைக் காப்பாத்தினார்.
அப்புறம் டீக் கடையில வேலை பார்த்தேன்.
எடப்பாடி மக்கள் என்கிட்ட சொந்தக்காரங்க மாதிரி பழகுவாங்க.
எப்பவுமே பிரிச்சுப் பார்த்ததே இல்லை.
உதாரணத்துக்கு என் குழந்தைகள் படிக்க வசதி இல்லாம இருந்தாங்க.
சம்பத் அண்ணன், மகாலிங்கம் அண்ணன் உட்பட ஊர்ப் பெரிய மனுஷங்க சேர்ந்து உள்ளூர் அரசுப் பள்ளியில எங்க முகாம் குழந்தைகளைச் சேர்த்து படிப்புக்கு ஏற்பாடு செஞ்சாங்க.
இன்னொரு விஷயம் தெரியுமா?
சேலம் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து எடப்பாடிக்குப் போக நிறைய டவுன் பஸ்கள் வரும்.
நாங்கசேலத்துக்குப் போகும்போது பஸ் நடத்துனர்கள் யாருமே எங்ககிட்ட காசு வாங்க மாட்டாங்க.
இந்தப் பகுதியில மில்கள் அதிகம்.
அப்பப்ப முகாம் பக்கம் எட்டிப் பார்க்கிற மில் முதலாளிங்க அரிசி மூட்டை, பருப்பு மூட்டைனு கொடுத்துட்டுப் போவாங்க.
மனசு விட்டு சொல்றேங்க.
இலங்கையில வயித்துக்குச் சாப்பாடு இல்லாம பலநேரம் கொலைப்பட்டினி கிடந்து இருக்கேன்.
ஆனா, இங்க வந்தபின்னாடி நானும் சரி, என்னை சேர்ந்த மக்களும் சரி, ஒருவேளைகூடப் பட்டினி கிடந்தது கிடையாதுங்க.
டீக்கடை பாலு அண்ணன், முகாமில் இருந்து வெளியே கூலி வேலைக்குப் போறவங்களுக்குத் தினமும் காலையில 25 போண்டா இலவசமா கொடுப்பார்.
ஒருமுறை என் அண்ணன் இலங்கையில குண்டடிபட்டு ராமேஸ்வரம் கடற்கரைப் பக்கமா ஒதுங்கி இருக்கிறதாத் தகவல் கிடைச்சுது.
கையில காசு இல்லாம தவிச்சப்ப, நடுராத்திரி எடப்பாடியில் உள்ள அன்புமதி அண்ணன் செலவுக்குப் பணம் கொடுத்து, கூடவே ராமேஸ்வரம் வரைக்கும் வந்தார்.
நாங்க போறதுக்குள்ள அண்ணன் உசிரு போயிடுச்சு.
எடப் பாடிக்குத் தகவல் கொடுத்து, ஊர்க்காரங்களை வரவழைச்சு, இறுதிச் சடங்கைச் செஞ்சாங்க.
நன்றி: விகடன் 01.05.2012@
---------------
போண்டாமணி தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகராவார்.
நூற்றி எழுபத்தியைந்து திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ளார்.
இவருடைய இயற்பெயர் கேதீஸ்வரன் என்பதாகும்.
இவருடன் உடன் பிறந்த 16 நபர்களில் 8 நபர்கள் இலங்கை இனக்கலவரத்தில் இறந்துவிட்டார்கள்.
எம்.மாரிமுத்து செட்டியார் - மகேஷ்வரி தம்பதியரின் மகனாக போண்டாமணி 15 செப்டம்பர் 1963ல் பிறந்தார்.
இவருடைய தாயகம் இலங்கையில் உள்ள மன்னார் பகுதியாகும்.
நன்றி: Wikipedia
-------------------
Wednesday, 21 February 2018
அய்.நாவும் உன்னய் அழய்க்கும்?!
அய்.நாவும் உன்னய் அழய்க்கும்?!
கவர்ச்சி நடிகய் 'டூபீஸ் ஸ்ருதி'யய் பெற்றுப்போட்ட தகப்பன்,
வடயிந்திய நடிகய் சரிகாவின் கள்ள புருசன்,
தெலுங்கு நடிகய் கவுதமியின் வய்ப்பாட்டன்,
கர்நாடகத்தின் ஹாசன் மாவட்ட மண்ணின் மய்ந்தன்,
உள்நாட்டு உலகநாயகன்,
திரய்ப்பட நடிகர் கமலஹாசனய் தலய்மய்யாகக் கொண்டு
மதுரய் மாநகரில் "மக்கள் நீதி மய்யம்" என்று திராவிடியாத்தனமான பெயரில் மரண மொக்கய்யான கொடியுடன் கட்சி ஒன்று அமெரிக்க அடிமய்களால் நேற்று தொடங்கப்பட்டது.
இதற்கு தமிழக வந்தேறிகள் ஏகோபித்த ஆதரவய்யும்
வடநாட்டு கார்ப்பரேட் கொத்தடிமய்கள் முழுமய்யான ஆசீர்வாதத்தய்யும் வாரிவழங்கினர்.
நாம்தமிழர் கட்சி சீமானும் கேணய்த்தனமாக தானே போய் சந்தித்து பல்லய் இளித்தார்.
பி.கு: இன்று கொள்கய்கள் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
Monday, 1 January 2018
Wednesday, 15 November 2017
ஈ.வே.ராமசாயின் அக்காமாலா(குடி அரசு) மற்றும் கப்சி(விடுதலை)
ஈ.வே.ராமசாயின் அக்காமாலா(குடி அரசு) மற்றும் கப்சி(விடுதலை)
திராவிடியா மகன்: எங்க பெரியார் மட்டும்தான் நல்ல தமிழில் பெயர்வைத்து பத்திரிக்கை நடத்தினார்
தமிழன்: நடத்தி...
'தமிழ் காட்டுமிராண்டி மொழி', 'தமிழ்த்தாய் பாலைக் கரந்து சத்து இருக்கிறதா என்று ஆராயவேண்டும்', 'வேலைக்காரியோடு ஆங்கிலம் பேசுங்கள்' அப்டினு தமிழுக்கு எதிராகத்தானே எழுதுனாரு?!
"தமிழ்பேசும் பார்ப்பனர் பெரிய தலைவலியாக இருக்கின்றனர்.
இந்து-முஸ்லீம் பிரிவினை வேறு தெற்கே எடுபடவில்லை.
எனவே பிராமணர்-பிராமணரல்லாதார் என தனியாக பிரித்து பிராமணன் இடத்தில் நீங்கள் அமர்ந்துகொள்ளுங்கள்"
அப்டினு வெள்ளைக்காரன் போட்டுக்கொடுத்த ஸ்கெட்ச்தானே உங்க திராவிடம்.
கடைசிவர அவனுக்கு விசுவாசமாத்தானே இருந்தீங்க?!
உள்ளே ஆங்கில பூர்வீகமே இருக்க, தலைப்பு மட்டும் தமிழில் வைத்துவிட்டால் போதுமா?
Saturday, 4 November 2017
பிரிவினையைத் தூண்டும் திராவிடியா
தமிழன்:-
என்னடி திராவிடியா!
எப்பவும் எதாவது உளறி வாயக்குடுத்து அடிவாங்கி எங்கள பிசியாவே வெச்சிருப்ப?!
இப்ப என்ன சத்தத்தையே காணோம்?!
வேட்டி ஆபாச உடைனு சொல்லி மூத்திரசந்துல குத்து வாங்குனதோட சரி?!
ஆம்பளைக்கு தாலி கட்றது,
கழுதைக்கு பாட கட்றது,
சுடிதாருக்கு பேன்ட் அவசியமானு பட்டிமன்றம் போடுறது இப்டி எதாவது பண்ணுங்க.
டைம் பாஸ் ஆகமாட்டிக்குதுல!
திராவிடியா:-
அது வந்துங்க, எங்க வடதமிழ்நாடு ப்ராஜக்ட் போயக்கிட்டு இருக்குதுல?!
கடைசியாதான் எறக்கலாம்னு வச்சிருந்தோம், ஆனா கடைசி சீக்கிரமே வந்திருச்சு.
இப்ப எதாவது டிஸ்டப் பண்ணா எங்க காவி முதலாளி கோவிச்சுக்குவாரு.
தமிழன்:-
ஓ அந்த வடைதமிழ்நாடு பொரியலியக்கம் உங்க ஏற்பாடுதானா?!
நாப்பது பேர் கூட வரலயாமே?!
அவங்களும் மழைக்கு ஒதுங்குன கூட்டமாமே?!
இதுக்கு முன்னாடியே
சிங்களவன் ஈழத்தமிழர் மத்தில இததான பண்ணாங்க?!
இசுலாமியத் தமிழன் vs பிற தமிழன்
புலம்பெயர் தமிழன் vs தாயகத் தமிழன்
வடக்கு தமிழன் vs கிழக்கு தமிழன்
யாழ் வெள்ளாளர் vs வன்னி மக்கள்
இப்படி பல ப்ராஜக்ட்டுகள் போட்டாங்களே?!
அத பாத்து காப்பியடிச்சு திராவிடியாக்களும்
தேவர், வன்னியர், கவுண்டர் vs பிற சாதிகள்
நாம்தமிழர் vs தனித்தமிழ்நாடு
நாம்தமிழர் vs பா.ம.க
தமிழ்தேசிய கிறித்துவர் vs இந்து தமிழர்கள்
சீமான் vs நாயக்கர்
வன்னியர் vs நாடார்
நாம்தமிழர் vs விசிக
தமிழ்தேசியம் vs பறையர்
தமிழ்தேசியம் vs தலித்தியம்
இது மாதிரி போட்ட பல ப்ராஜக்ட்டுகளும் ஆரம்பிச்ச ஒடனே முடிஞ்சு போச்சே?!
திராவிடியா:-
என்னங்க நீங்க?
பார்ப்பனர் vs பார்ப்பனரல்லாதார்
வன்னியர் vs பறையர்
மறவர் vs பள்ளர்
இந்த ப்ராஜக்ட்லாம் சக்ஸஸ் ஆகி இன்னும் ஓடிகிட்டு இருக்கே!
சிங்களவனுக்கு மத பிரிவினை சக்ஸஸ் ஆனமாதிரி எங்களுக்கும் எதாவது ஒண்ணு சக்ஸஸ் ஆகும்.
அத வச்சு இன்னும் 30 வருசம் வண்டிய ஓட்டுவோம்.
அதுவர ட்ரை பண்ணிட்டே இருப்போம்.
எவ்வளவு அடிவாங்கினாலும் கடைசி வர உங்கள ஒண்ணுசேர விடவேமாட்டோம்.
தமிழன்:-
பாப்போம்டி! எத்தன நாளைக்குன்னு!
Saturday, 16 September 2017
முகநூல் இந்திரா சௌந்திரராஜன்கள்
முகநூல் இந்திரா சௌந்திரராஜன்கள்
நல்லவேளை குழப்பவாதிகள் ஈழத்தில் பிறந்திருந்தால்
"ஈழம் என்பதே வெள்ளாளர் தேசியம்.
பிரபாகரன் உட்பட அனைவரும் ரகசிய அமைப்பை சேர்ந்தவர்கள்.
உலகம் முழுவதும் பணக்காரர்களாக இருக்கிறார்கள்.
கோட்டை, கப்பல் எல்லாம் வைத்திருந்தார்கள்.
எனவே இவர்களை ஒழித்துவிட்டு தமிழ் வம்சாவழி சிங்கள சாதிகளான கரவ, துரவ, ,சாலகாம, வேட போன்றவர்களுடன் கைகோர்த்து தனிநாடு கேட்டால் அடுத்த நொடி ஈழம் கிடைத்துவிடும்.
நம்பமுடியவில்லையா இதோ பிடி சான்று"
என்று இந்திரா சௌந்திரராஜன் மாதிரி அமானுஷ்யமாக பத்து புத்தகங்கள் போட்டிருப்பார்கள்.
நண்டு சிண்டுகள், அம்புலி மாமா ரசிகர்கள், மூடநம்பிக்கையில் ஊறிப்போனவர்கள் பலரும் வாங்கி படித்து ஆகா ஓகோ என்று 100, 120 கடிதம் எழுதியிருப்பார்கள்.
சிங்களவர் தலையில் தூக்கிவைத்து ஆடியிருப்பர்.
நல்லவேளையாக அப்படி எதுவும் நடக்கவில்லை.
ஒருவேளை இத்தகைய குழப்பவாதிகள் இருந்திருக்கலாம்.
அவர்கள் குரல்வளை சத்தமேயில்லாமல் புலிகளால் நெரிக்கப்பட்டு காணாமலடிக்கப் பட்டிருக்கலாம்.
யாருக்கு தெரியும்?
Sunday, 6 August 2017
சீரியஸா ஒரு காமெடி கதை
சீரியஸா ஒரு காமெடி கதை
கீற்று இணையத்தில் ஒரு கட்டுரை உள்ளது.
"சோபா சக்தி! உன் அம்மணத்துக்கு அசிங்கம் என்று பேர் வை" என்ற தலைப்பில்.
( தலைப்பே தலைசுத்துமே !
அம்மணமாம் அது அசிங்கமில்லையாம்
அதனால் அதற்கு அசிங்கம் என்று பேர் வைக்கணுமாம்.
கவனிக்க.
'பெயர்' இல்லை 'பேர்' )
இக்கட்டுரை இலக்கியப் பிரிவின் கீழ் உள்ளது.
(இதுல என்ன எலக்கியம்?!
எழவு!)
கீற்று வந்தேறிகளுக்கே வெளிச்சம்.
அதாவது இரண்டு முரட்டு ஈ.வே.ராமசாமி பக்தர்கள் வெளிநாட்டில் அடித்துக்கொண்ட கதை
இந்த ஈ.வே.ராமசாமி யார் தெரியுமா?
"பெண் என்று யாரும் தனியாக இருக்கக்கூடாது,
பெண் ஆண்களைப் போல பெயர் வைத்துக்கொண்டு லுங்கி கட்டிக்கொண்டு ஆண்போலவே முடிவெட்டிக்கொண்டு அலையவேண்டும்.
குழந்தை பெறக்கூடாது அதனால் கருப்பையை அகற்றிவிட்டு இரண்டு மூன்று வைப்பாட்டன்களை வைத்துக்கொள்ள வேண்டும்"
என்று அறிவாளித்தனமான(?) கருத்துக்களை 40 பக்க நோட் அளவுக்கு பெரிய்ய்ய்ய்ய(?) புத்தகம் ஒன்று போட்டவர்.
(புத்தகத்தில் புரட்சி வடை சுட்டதோடு சரி,
தன் வாழ்க்கையில் தன் வீட்டுப்பெண்களிடம் அதையெல்லாம் கடைபிடிக்கச் சொன்னதில்லை.)
இவர் பேச்சை நம்பி தாலி அடிமைத்தனத்தின் சின்னம் என்று அதை மறுத்து மத சடங்குகள் ஏதும் இல்லாமல் சட்டப்படி செல்லாத 'சுயமரியாதை திருமணம்' செய்துகொண்டு பல சட்ட சிக்கல்களை அவரது பக்தர்கள் சந்தித்துக்கொண்டிருக்க,
சாகப்போகிற 72 வயதில் 24 வயது பெண்ணை சட்டப்படி செல்லுமாறு முறைப்படி திருமணம் செய்து பக்தர்களுக்கே கம்பி நீட்டிய புண்ணியவான்தான் இந்த ஈ.வே.ராமசாமி.
இவர் பெண்ணுரிமைக்காக(?) 40 பக்கத்தில் எப்படியெல்லாம் குட்டிக்கரணம் அடித்தார் என்று 400 பக்க புத்தகம் போட அந்த இரண்டு முரட்டு திராவிட பக்தர்கள் விவாதித்தனர்.
(அதெப்படி நாற்பதை நானூறாக்க முடியும்?
அவர் குளிக்காததை தலித் ஆதரவென்றும்
லுங்கி கட்டியபடியே அலைந்ததை இசுலாமிய ஆதரவென்றும்
பீஃப் பிரியாணி உள்ளே தள்ளியதை இந்துத்துவ எதிர்ப்பென்றும் விரிவாக எழுதி அதை இன்னும் விரிவாக எழுதி என பல நூறு தலகாணி சைஸ் புத்தகங்கள் வந்துள்ளனவே அது போலத்தான்)
மேற்கண்ட கதையில் சம்பந்தப்பட்ட முரட்டு பக்தர்கள் இருவரில் ஒருவர் புலிகளை எதிர்த்து கதைகதையாக எழுதித்தள்ளும் ஆண்,
இன்னொருவர் குழந்தை பெற்றுக்கொண்டு ஈ.வே.ரா கருத்துகளுக்கு துரோகம் செய்துவிட்ட பெண்.
பெண் பக்தர் 'ஈவேரா ஸ்ட்ரெய்ட்டா சம்மர்சால்ட் அடித்தார்' என்று சொல்ல,
ஆண் பக்தர் 'இல்லை அவர் தலைகீழாகத்தான் குதித்தார்' என்று கூற,
அவர்கள் மத்தியில் கருத்து முரண்பாடு.
கடைசியில் ஆண் பக்தர் ஈவேரா காட்டிய வழியில் தண்ணியைப் போட்டுவிட்டு 'வாம்மா படுத்துக்கொண்டே பெண்ணுரிமை பேசுவோம்' என்று திராவிட முற்போக்கு புத்தியைக் காட்டியிருக்கிறார்.
கடுப்பான பெண்பக்தர் ஆண்பக்தரை நடுரோட்டில் போட்டு அடிவெளுக்க,
ஆண்பக்தர் அவளை ஓட்டலுக்கு கூப்பிட்டு துண்டை அவுத்துக்காட்ட,
ஒரே திராவிட புரட்சிதான் போங்கள்.
இந்த காமெடியை எல்லாம் அந்த பெண்மணி மிக மிக சீரியசாக கட்டுரை எழுதியுள்ளார்.
நோய்விட்டுப் போக ஒரு முறை படித்துவிடவும்.
Tuesday, 20 June 2017
பாதபூசை
தமிழ்தேசியம் என்பது... சரி விடுங்க...
இன்று வேறு எதாவது எழுதுவோம்.
ஒரு பத்தண்டுகள் முன்பு,
நான் என் பெரியப்பா வீட்டிற்கு போயிருந்தேன்.
அங்கே ஒரு கோவில் உண்டு.
அந்த கோவில் தெய்வம் தங்களது குலதெய்வம்தான் என்று இரண்டு வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் உரிமை கொண்டாடினார்கள்.
அதனால் கொடைவிழா கோவிலில் நடத்த தடையிருந்தது.
இருபிரிவினரும் உருவம் எடுத்து தத்தமது பகுதிகளில் கொடை நடத்துவார்கள்.
உருவம் என்றால் வாழைத்தண்டை மானிட உருவம் போலச் செய்து அதில் சதைபோல சந்தனத்தை அப்பி கண், காது, மீசை, நகை, உடை போன்றவற்றை பல நிறம் கொண்ட தாள்களால் செய்து ஒட்டி அதையே சாமியாக நினைத்து விழா எடுப்பார்கள்.
எங்கள் பெரியப்பா தெருவில் உருவம் வைக்கப்பட்டிருந்தது.
(எதிர்தரப்பு குடும்பங்களும் விட்டுக்கொடுக்காமல் வந்து அந்த தெருவிலேயே ஒரு பக்கமாக தங்கியிருந்து நடப்பதை பார்த்துக்கொண்டிருந்தனர்)
கொடையும் கோலாகலமாக நடந்தது.
நான் போயிருந்தபோது என் அக்காவுக்கு திருமணமான புதிது.
அக்காவும் அத்தானும் வந்திருந்தனர்.
அத்தான் ஒரு வழிசல் பேர்வழி.
வில்லிசை நடந்துகொண்டிருந்தது.
எங்கள் குடும்பத்தினர் அனைவரும் அலிக்கதவு போட்ட தார்சாவில் (திண்ணையில்) அமர்ந்து அளவளாவிக்கொண்டு இருந்தனர்.
எனக்கு வில்லுப்பாட்டு கேட்பது மிகவும் பிடிக்கும்.
நான் மட்டும் அதைக் கேட்பதில் கவனமாக இருந்தேன்.
பலமுறை கேட்ட சுடலைமாடன் கதைதான்.
சிவன் உலக உயிர்களுக்கெல்லாம் படியளக்க போனார்.
பார்வதி ஒரு சிமிலுக்குள் இரண்டு எறும்புகளை அடைத்து வைத்துக்கொண்டு சிவனை சோதனை செய்ய முடிவெடுத்தாள்.
சிவன் படியளந்துவிட்டு வந்தார்.
பார்வதி பாதபூசை செய்கிறாள்.
பச்சைநிறப் பட்டுடுத்தி வெற்றிலைபோட்டுச் சிவந்த வாயுடன் வில்லுப்பாட்டு பாடும் பெண்மணி "ஏண்ணே! உங்களுக்கு ஒங்க பொண்டாட்டி பாதபூச பண்ணுமா?"
ஆணா பெண்ணா என்று கண்டறியமுடியாத தனது கணீரென்ற குரலால் ஆமாம் போடுபவரைப் பார்த்துக் கேட்டார்.
"ஆ.. அதுவா.. காலைல அஞ்சுமணிக்கு என்ன எழுப்பிட்டு அவா தூங்கிருவா.
நா போய் காப்பி வாங்கிட்டு வருவேன்.
ஏட்டி எந்திட்டினு எழுப்புவேன்.
நெட்டிட்டு நெஞ்சுல ஒரு மிதி மிதிப்பா அதுதா பாதபூச"
பக்கத்தில் அத்தான்வேறு அமர்ந்திருந்தார்.
அடக்கமுடியாமல் நான் மட்டும் விழுந்து விழுந்து சிரித்தேன்.
'இவன் என்னைக்கி மிதிவாங்கப் போறானோ?!'