Showing posts with label பெண்ணுரிமை. Show all posts
Showing posts with label பெண்ணுரிமை. Show all posts

Wednesday, 16 July 2025

பெண்ணுரிமை என்று ஈவேரா உளறியவை

பெண்ணுரிமை என்று ஈவேரா உளறியவை

 ஈ.வே.ரா தன் வாழ்நாளில் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை ஒரு நிலைப்பாட்டில் இருந்து மாறாமல் இருந்தார் என்றால் அது அவரது பெண்களைப் பற்றிய நிலைப்பாடுதான்!

"பெண்கள் விடுதலைக்கு பிள்ளை பெறும் தொல்லை அடியோடு ஒழிந்து போகவேண்டும்.
அது ஒழியாமல் சம்பளம் கொடுத்து புருஷனை நியமித்துக் கொள்வதாயிருந்தாலும் பெண்கள் பொதுவாக உண்மைவிடுதலை அடைந்துவிட முடியாது என்றே சொல்லுவோம்"
- ஈ.வே.ரா (குடி அரசு,12-08-1928)
------------------
"தவிர 'பெண்கள், பிள்ளை பெறுவதை நிறுத்திவிட்டால் உலகம் விர்த்தியாகாது, மானிட வர்க்கம் விர்த்தியாகாது'
என்று தர்ம நியாயம் பேசச் சிலர் வருவார்கள்.
உலகம் விர்த்தியாகாவிட்டால் பெண்களுக்கு என்ன நஷ்டம்?
மானிட வர்க்கம் பெருகாவிட்டால் பெண்களுக்கு என்ன ஆபத்து ஏற்பட்டுவிடக்கூடும்?"
- ஈ.வே.ரா (குடி அரசு,12-08-1928)
-------------------
"பெண்கள் பிள்ளை பெறுவதில்லை என்கின்ற காரியத்தில் ஆண்களுக்கு எவ்விதக் கஷ்டமும் நஷ்டமும் கிடையாது என்பதோடு ஆண்களுக்கு இலாபமும் உண்டு என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
எப்படியெனில் ஒரு மனிதன் தான் பிள்ளைகுட்டிக்காரனாய் இருப்பதினாலேயே யோக்கியமாகவும் சுதந்திரமாகவும் நடந்து கொள்ளப் பெரிதும் முடியாமலிருக்க வேண்டியவனாய் விடுகிறான்.
அன்றியும் அவனுக்கு அனாவசியமான கவலையும் பொறுப்பும் அதிகப்படவும் நேரிடுகின்றது"
- ஈ.வே.ரா (குடி அரசு,12-08-1928)
-----------------
ஆண், பெண் இருவர்களின் சுயேச்சைக்குமே கர்ப்பமாவதும், பிள்ளைகளைப் பெறுவதும் இடையூறான காரியமாகிறது. அதிலும் பெண்கள் சுயேச்சைக்கு, கர்ப்பம் என்பது கொடிய விரோதியாய் இருக்கிறது. அதனால்தான் நாம் கண்டிப்பாய் "பிள்ளை பெறுவதை நிறுத்தியே ஆக வேண்டும்' என்கிறோம்.
- "குடியரசு' (6.4.1930)
---------
"ஆண் இரண்டு வைப்பாட்டிகளை வைத்துக்கொண்டால் பெண்கள் மூன்று ஆசைநாயகர்களை வைத்துக்கொள்ள முற்பட வேண்டும்.
உடனே நிலைமை சரிப்பட்டுப்போகும்.
உண்மையான சமரசம் தோன்றிவிடும்.
பிறகு கஷ்டமே இருக்காது"
- ஈ.வே.ரா (குடி அரசு 8-2-1931)
-----------------
"ஆண்களும், பெண்களும் ஒரே மாதிரியாக வேஷ்டி கட்டவேண்டும்.
ஜிப்பா போடவேண்டும்.
உடைகளில் ஆண், பெண் வித்தியாசம் இருக்கக்கூடாது"
- ஈ.வே.ரா (நூல்: பெரியார் ஒரு வாழ்க்கை நெறி)
--------
"பெற்றோர்கள் தங்கள் பெண்களை பெண் என்றே அழைக்காமல் ஆண் என்றே அழைக்கவேண்டும்.
பெயர்களும் ஆண்கள் பெயர்களையே இடவேண்டும்"
- ஈ.வே.ரா (குடியரசு, 21-09-1946)

---------
"திருமணம் என்பது மனிதத்தன்மைக்காக ஏற்படவில்லை. மனிதன் பெண்களை அடிமைகொள்ளவே ஏற்பட்டது. அது ஆண்களுக்கு நன்மையாகவும் பெண்களுக்குக் கேடாகவும் இருக்கிறது. பெண்ணடிமைக்கு அடிப்படைக் காரணங்கள் திருமணம், கற்பு என்பவைகளேயாகும்.  பெண்களை அடிமையாக வைத்திருப்பது என்பது ஆண்களுக்கு லாபமாக இருக்கிற காரணத்தால், பெண்கள் உரிமைக்கு ஆண்கள், ஒப்புவது இல்லை. இந்த நிலை மாறியாக வேண்டும். நாளைக்கே ஒரு அரசாங்கம் வந்து, திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று சட்டம் செய்து விட்டால் பிரச்சனை இல்லை... எனவே, பெண்ணடிமை ஒழிய திருமண முறை ஒழிந்தாக வேண்டும். அதோடு மட்டுமல்ல. மனிதன் சுதந்திர மனிதனாக இருக்க வேண்டுமென்றாலும், இந்த திருமண முறை ஒழிந்தே ஆக வேண்டும்."
- ஈ.வே.ரா (நூல்: உயர்ந்த எண்ணங்கள்) 
----------------
"உத்தியோகத்துக்குப் போக ஆரம்பித்தால் பிள்ளைபெற வேண்டும் என்ற எண்ணமே பெண்களுக்கு வராது.
உத்தி யோகத்தில் சரிபகுதி பெண்களுக்குக் கொடுக்க வேண்டும்.
அதில் அவர்களை திருப்பி விட்டால் தாங்களாகவே பிள்ளை பெறுவதைத் தடுத்துக்கொள்வார்கள்.
பிள்ளை பெறுவதைத் தொல்லையாக கருதுவார்கள்.”
- ஈ.வே.ரா 17-3-1970
----------
"தாலி என்பது நாய்க்கு நகராண்மைக் கழகம் கட்டும் பட்டை போன்றது.
தாலி பெண்ணை அடக்கி ஆளும் மூர்க்கத் தனத்தின் சின்னம்.
தாலிபற்றிப் புலவர்கள் பேசும்போது காளையை அடக்குதல், புலிவேட்டையாடுதல் போன்ற பொருத்தமற்ற இலக்கிய ஆதாரங்களை அள்ளி வீசுவார்கள்.
பெண்களுக்கு அறிவு வந்தாலொழியத் தாலியை நீக்கமுடியாது"
- ஈ.வே.ரா (நூல்: நாய்க்கு லைசன்ஸ் பெண்ணுக்குத் தாலி)
-----------
"உலகில் ‘கற்பு’, ‘காதல்’ என்பன போன்ற வார்த்தைகளை எப்படி பெண் மக்களை அடிமைப்படுத்தி, அடக்கியாளவென்று ஏற்படுத்தி பயன்படுத்தப்பட்டு வருகின்றனவோ,
அது போலவேதான் ‘ஒழுக்கம்’ என்னும் வார்த்தையும்"
- ஈ.வே.ரா ( நூல்: மெட்டீரியலிசம் அல்லது பிரகிருதிவாதம்)
-----------

'பெண்களே உங்களுடைய கர்ப்பப் பைகளை வெட்டி எறியுங்கள்'

‘பெண் விடுதலைக்கு ஆண்மை அழிய வேண்டும்’ (தலைப்பு)

‘ஆண்கள் முயற்சியால் செய்யப்படும் எவ்வித விடுதலை இயக்கமும் எவ்வழியிலும் பெண்களுக்கு உண்மையான விடுதலையை அளிக்க முடியாது’

(நூல்: பெண் ஏன் அடிமையானாள்)
----------------
ஈவேரா சொன்னவற்றை சுருக்கமாகச் சொன்னால்
 "ஒரு பெண் திருமணம் செய்யாமல் குழந்தை பெறாமல் வாழவேண்டும் அதுதான் பெண் சுதந்திரம்" 

06.09.2017 அன்றைய முகநூல் பதிவை மேம்படுத்திய பதிவு 

Sunday, 2 June 2024

அறிவுத் திருட்டு அல்லது பெண் ஏன் அடிமையானாள்

அறிவுத் திருட்டு அல்லது பெண் ஏன் அடிமையானாள் 

பதிவின் சுருக்கம்:-
 ஈவேரா எழுதிய பெண்ணுரிமைப் புத்தகம் நோபல் பரிசு பெற்ற புத்தகத்தின் அப்பட்டமான காப்பி.
 
 பொதுவுடைமை கருத்தியல் உலகம் முழுவதும் பரவத் தொடங்குகிறது. அதில் முக்கியமாகப் பெண்களின் பங்கு இருக்கிறது.
 அன்று காலனியவாத நாடுகள் இதை எதிர்கொள்ள இந்த வர்க்கப் போராட்டத்தை பாலினப் போராட்டமாகக் குழப்ப பெண் விடுதலை என்று ஆரம்பித்தார்கள்.
George Orwell, Bertrand Russell, Denis Healey, Stephen Spender, Guy Burgess போன்ற எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், தத்துவ மேதைகள் என சமூகத்தில் பிரபலமானவர்களை விலைக்கு வாங்கி பெண்களைத் தூண்டிவிட்டு ஆண்களுக்கு எதிராக தனித்து தற்குறித்தனமாக இயங்கவைக்கும் கருத்துகளைப் பரப்பினர்.
 இதை எவ்வாறு செய்தோம் என்று பிரிட்டன் உளவுத்துறை (MI6) காலம்கடந்து விட்டதாக எண்ணி தற்போது வெளியிட்டுள்ளது.
 இதில் Bertrand Russell என்பவர் புரட்சிகர சிந்தனையாளராக தம்மைக் காட்டிக்கொண்டு எழுதிய புத்தகம் Marriage and Morals. இது எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தியதால் ஏகாதிபத்திய அரசுகள் இதற்கு நோபல் கிடைக்க வழிசெய்தன.
 இதை அப்படியே நகலெடுத்து 'பெண் ஏன் அடிமையானாள்' என்று ஈவேரா எழுதியுள்ளார்.
 இரண்டு நூல்களிலும் இருக்கும் தலைப்புக்கள் கூட ஒத்துப் போகின்றன.
1)கற்பு - Sexual ethic 
2)காதல் - Romantic Love 
3)விபச்சாரம் - Prostituition 
4) கல்யாண விடுதலை - Divorce 
5) ஆண்மை அழிய வேண்டும் - Fatherhood dominion and Fatherhood Unknown.
 மேலும் Eugenics, Psychology தொடர்பான அறிவியல் தலைப்புக்களை மொழிபெயர்க்க இயலாமல் அவற்றை தவிர்த்துவிட்டார்.
 அரிஸ்ட்டாட்டில், பிளாட்டோ  என வரும் இடங்களில் வள்ளுவரையும், குறளையும் திணித்து இருக்கிறார்.
 இன்னமும் வேடிக்கை என்னவென்றால் வீரமணி இந்த நூலுக்கு எழுதியுள்ள முன்னுரையில் ஈவேரா சிந்தனைகள் ரஸ்ஸல் சிந்தனையுடன் ஒத்துப்போவதாக எழுதியிருப்பது தான்.

Кришна Кумар (முனைவர். கிருஷ்ணா) அவர்களின் முழுமையான பதிவு:-

'பெண் ஏன் அடிமையானாள்' எனும் முழு 'யுனெஸ்கோ' பித்தலாட்டம். 


காலனிய கைக்கூலிகளின் எதிர்ப்புரட்சி -வழமையான வரலாறு. கடந்த நாற்பது, ஐம்பது ஆண்டுகளாக தமிழர்களுக்கு பெண் உரிமை, பெண் விடுதலை, பெண்ணியம் குறித்தான விழிப்புணர்வை திரு ஈ வெ ராமசாமி அவர்கள் தான் ஏற்படுத்தியதாக, தொடர்ந்து ஊடகங்கள்,  அரசியல்வாதிகள், அரசு செய்திக் குறிப்புகள், பள்ளிக் குழந்தைகளின் பாட புத்தகங்கள் மற்றும் அரசு பாட நூல் நிறுவனங்கள் வழியாக மக்கள் மனதில் தொடரந்து திணிப்பதை உணரலாம். பல்லாயிரம் கோடி நிதியுடன் இயங்கும் திராவிட அரசியல் நிறுவனங்களும், திராவிட அரசியல் கட்சிகளும் ஆண்டு தோறும் 'பெண்ணிய போராளி விருது, பெண் சாதனையாளர் விருது' என்றெல்லாம் திரு ஈ வெ ராமசாமி பெயரிலும், சர்ச்சைக்குரிய அவரது கடைசி மனைவி மணியம்மை பெயரிலும் வழங்குவதையும் அறியலாம்.
குறிப்பாக, திராவிட அரசியல் கட்சிகளின்,  நிறுவனங்களின், அக்கட்சி தலைவர்களின் குடும்பங்களின் ஊது குழல்களாக இருக்கும் பல பெண்களும் ஆண்டு தோறும் இவ்விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு கவுரவிக்கப் படுகின்றனர்.
மேலும் அவர்கள் அதற்கு முன்னரும், அதற்கு பின்னர் மிக வீரியமாகவும் மேற்சொன்ன அரசியலுக்கும், அவர்கள் குடும்பங்களுக்கும் விசுவாசமாக இருப்பதோடு, பெண்மை, பெண் விடுதலை, பெண்ணியம் போன்றவற்றை உலகுக்கு கண்டுபிடித்து உணர்த்தியதே திரு ஈ வெ ராமசாமி அவர்கள்தான் என்பார்கள்.
மிக குறிப்பாக, இப்படியான விருதுகளை பெற்றவர்கள் திராவிடத்தாரின் ஆங்கிலத்தில் வரும் lapdog எனும் பதம் போல, செல்ல வளர்ப்பு நாய்களாக மாறி திராவிட அரசியலுக்கு எதிரான தமிழர்களை பிராண்டி குதறுவதும் உண்டு. தமிழகத்தில் பெண்ணிய அரிதாரம் பூசி, அவதாரம் எடுத்து பவனி வரும் இப்படிப்பட்ட பெண்களை கணக்கில் எடுத்து பார்த்தால் திரு ஈவெ ராமசாமி அவர்களின் 'பெண் ஏன் அடிமையானாள்' என்கிற நூல்தான் தங்களுக்கு அறிவூட்டி, செறிவூட்டி தங்களை பெண்கள் என்றே உணர வைத்ததாக பக்கம் பக்கமாக பேசியும் எழுதியும் வருவார்கள். அப்படிப்பட்ட திரு ஈவெ ராமசாமி அவர்களின் 'பெண் ஏன் அடிமையானாள்' நூல் குறித்து இளந்தலைமுறை தமிழர்கள் அறிந்து கொள்வது மிக அவசியம்.
நிற்க. முதல் உலகப்போருக்கு பிந்தைய காலத்தில் ஆப்பிரிக்காவிலும், ஆசியாவின் பல பகுதிகளிலும் ஐரோப்பியர்களின் காலனிய ஆதிக்கத்திற்கு எதிராக பூர்வ குடிகளின் கிளர்ச்சி வலுப்பெற்ற அதே சமகாலத்தில், (மறுபுறம்) புரட்சிகர இடதுசாரி தத்துவம் உலகெங்கும் வலுப்பெற துவங்கியது. பல நிலப்பரப்புக்களில் காலனிய ஆதிக்கத்திற்கு எதிரான உள்ளூர் இளைஞர்களின் சிந்தனையை தூண்டியதே இடதுசாரி தத்துவமாகத்தான் இருந்தது. அதே காலத்தில் ரஷ்யாவிலும், மற்றும் உலகெங்கும் புரட்சிகர செங்கொடி ஓங்கி உயரே பறக்க துவங்கியது. சோவியத் பள்ளியின் அரசியல் தாக்கமும் உலகை துளைத்து, காலனிய எதிர்ப்பு சிந்தனையை செறிவூட்டியது. அந்த 'புதிய அரசியல் சமநிலையின்மையை' சரிகட்ட காலனியவாதம் தனது ஆட்களை, தனது காலனியம் பரவியிருந்த பல்வேறு நிலப்பரப்புக்களில் இறக்கி, முடுக்கிவிட்டது. காலனிய வல்லாதிக்க நிறவெறி ஆங்கிலேயே அரசின் ரகசிய உளவு அமைப்பான MI6ம், அதன் வெளியுறவுத்துறை propaganda நிறுவனமான Information Research Department (IRD)ம் பல பிரபலங்களை ரகசியமாக பணியில் அமர்த்தி செங்கொடிக்கும், சோவியத்தை மையமாக வைத்து தூசி கிளப்பி பூமியின் நாற்புறத்தையும் சூறாவளியாய் தாக்கிய அதன் புரட்சிகர சித்தாந்தத்திற்கும் எதிரான வேலைப்பாடுகளை துவங்கியது. George Orwell, Bertrand Russell, Denis Healey, Stephen Spender, Guy Burgess போன்ற எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், தத்துவ மேதைகள் என சமூகத்தில் பிரபலமாக பவனிவந்த பலரும் ஆங்கிலேய காலனிய நிறவெறி அரசின் Payroll'க்குள் வந்தார்கள். இந்த ரகசியங்களை காலாவதியான கோப்புக்கள் என்கிற முறையில் பிரித்தானிய உளவு நிறுவனமே சமீபத்தில் வெளியிட்டு இருந்தது அவர்கள் வெறும் பணத்திற்கு வீழ்ந்தார்களா அல்லது தங்களுக்குள் ஒளிந்திருந்த காலனிய ஆதிக்கவாத நிறவெறியை வாழவைக்க இணங்கினார்களா என்பதை விவாதிப்பதல்ல இக்கட்டுரையின் நோக்கம். இந்த லிஸ்டில் George Orwell'ம், Bertrand Russell'ம் மிக முக்கியமானவர்கள். இருவரும் தங்களை இடதுசாரிகளாக அறிமுகப்படுத்திக் கொண்டு, முழுநேரமும் இடதுசாரிகளை வீழ்த்தும் எதிர்ப்புரட்சி வேலையை செய்தவர்கள். இதில் George Orwellன் 'Animal Farm' பற்றி பலரும் அறிவீர்கள். சோசலிஸ்ட் வேடமிட்டு, உளவுபார்த்து சோவியத்துகளுடன் நெருக்கமாக இருந்த முக்கியமான தலைவர்கள் 38 பேரின் பெயர்களை MI6க்கு அவர் வழங்கியது 'Orwell's List' என்று இப்போதும் இழிவாக நையாண்டி செய்யப்படுகிறது அடுத்து, இந்த கட்டுரைக்கு மிக முக்கியமான நபரான 'Bertrand Russell'. இவரும் காலனிய நிறவெறி அரசின் மிக முக்கியமான உளவாளி. ஆசிய தொடர்பான அஜெண்டாவில் வேலை செய்தவர். இந்திய யூனியனின் விடுதலைக்கு முன்னர் இங்கே இருந்த பல தலைவர்களுடன் மிக நெருக்கமான நட்பு பாராட்டியவர். இந்திய யூனியன் உருவாக்கத்திற்கு பிறகும் ஆங்கிலேயே காலனிய அரசின் தாக்கம் இந்திய யூனியனில் இருக்குமாறு விடுதலை ஏற்பாட்டை செய்தவர். அவர் எழுதிய நூல் 'Marriage and Morals'. தன்னை ஒரு சோஷலிஸ்ட்டாக அடையாளப்படுத்திக்கொண்டு இடதுசாரி தத்துவத்தை வீழ்த்த Russell எடுத்த வழிதான் பெண் விடுதலை. அடிப்படையில், ஐரோப்பா உள்ளிட்ட மேற்கத்திய உலகில் பெண்களுக்கு ஓட்டுரிமை கூட இல்லாத காலத்திலேயே, சமூகத்தின் சரி பாதியான பெண்களை மானுட சமூகத்தின் மேம்பாட்டிற்கு பயன்படுத்தாது அவர்களை வீட்டிற்குள் முடக்கி வைப்பது, மானுட சமூகத்தின் பாய்ச்சலை சரிபாதியாக குறைக்கிறது என்று சொல்லி லெனின் அவர்களை உற்பத்தியிலும், சமூக மற்றும் சோவியத் உருவாக்கத்திலும் பயன்படுத்த துவங்கிய காலம் அது. இப்போதும் ரஷ்ய தெருக்களில் லெனின் தவிர்த்து எங்கெல்லாம் தலைவர்கள் சிலைகள் இருக்கிறதோ அங்கெல்லாம் சமமாக பெண்களின் சிலைகளும் இருக்கும். இங்கே சில படங்கள் கமெண்டில். போருக்கு செல்லும் இளைஞன் கைகளில் துப்பாக்கி இருப்பதைப்போல, பெண்களின் தோள்களில் ராக்கெட் லாஞ்சர்கள் இருக்கும்; போருக்கு செல்ல அழைப்பு வந்திருக்கிறது என்பதை காதலிக்கு சொல்ல செல்லும் காதலனிடம் தனக்கும் வேறு ஒரு எல்லைக்கு செல்ல அழைப்பு வந்திருப்பதாக காட்டும் காதலி சிலைகள் ரஷ்ய பூங்காக்கள் தோறும் ஏராளம். இதுதான் கம்யூனிஸ்டுகளின் உண்மையான பெண் விடுதலை. ஆனால் அப்படிப்பட்ட இடதுசாரி தத்துவ எழுச்சியை தடுக்க, பெண்ணிய குதர்க்கவாதம் பேசி, அதை பிளவுபடுத்த முதலாளித்துவ காலனிய வல்லாதிக்கம் Bertrand Russellகளை பயன்படுத்தியது. அதற்கு கூலியாக ஐரோப்பிய காலனிய வல்லாதிக்கம் அவரின் இந்த நூலுக்கு நோபல் பரிசு கொடுத்து கவுரவித்தது. ஆணும் பெண்ணும் ஒன்றுபட்டு சமூக, வர்க்க, மற்றும் மானுட விடுதலை அடைவதை தடுக்க பெண் விடுதலை எனும் பெயரில் அவர்களை பிரித்து தடுத்து எதிர்ப்புரட்சி செய்தது காலனியவாதம். பெண்ணியம் எனும் பெயரில் பெண்களை நுகர்வோர் கலாச்சாரத்தின் பண்டமாக மாற்றி, அவர்களை வெறும் நுகர்வோர்களாக திரித்து, விளம்பர போதை ஏற்றி, சுதந்திரம் என்கிற பெயரில் முதலாளித்துவத்திற்கு அடிமையாக்கியது இப்படியான நூல்கள். காலனிய உளவாளி Bertrand Russell எழுதிய அந்த 'Marriage and Morals' என்கிற நூலின் அச்சு அசல் பிசகாத மொழிமாற்ற நூல்தான் 'பெண் ஏன் அடிமையானாள்' என்கிற ஈவெ ராமசாமியின் நூல். பொருளடக்கம், உள்ளடக்கம் என யாவற்றையும் 'பெண் ஏன் அடிமையானாள்' என்கிற அந்த நூலில் 100% மொழிமாற்றம் செய்திருக்கிறார்கள். இப்படியாக, Bertrand Russell என்கிற காலனிய உளவாளி எழுதிய நூலை ஈவெரா எழுதியதாக கிட்டத்தட்ட 50 ஆண்டுகாலம் தமிழ் நாட்டில் விளம்பரம் செய்திருப்பது வழக்கமான திராவிட பித்தலாட்டம்தான்.


தங்களை பெண் விடுதலை சேம்பியன்கள் என சுயதம்பட்டம் அடித்துக்கொள்ளும் அறிவீலிகளுக்கு அது ஒரு மொழிமாற்ற என்கிற அடிப்படை அறிவு கூட கிடையாது. அந்த அடிப்படை அறிவு கூட இல்லாத இப்படியான சமூக கழிசடைகளை தமிழக இளையோர் பின்தொடர்ந்து சமூக விடுதலைக்கு துரோகம் இழைக்க கூடாது. அடுத்தவனின் சிந்தனையை திருடி அதில் தன் பெயரை எழுதும் கேவலத்தையும் தாண்டி.. அதற்கெல்லாம் முத்தாய்ப்பாக 'பெண் ஏன் அடிமையானாள்' என்கிற நூலில் ஒரு மிக இழிவான வேலையை செய்திருக்கிறார்கள். அந்த நூலின் முன்னுரையில் திரு வீரமணி அவர்கள் உலகின் முக்கியமான ஆளுமைகள் ஒரேபோல சிந்திப்பார்கள் என்பார்கள். அதைப்போல ஈவெராவும் பெட்ராண்ட் ரசலும் ஒரேபோல சிந்தித்து இருக்கிறார்கள் என்று எழுதி் இருக்கிறார். (படம் கமெண்ட்டில்) ஒரு நூலின் அத்துணை வரியையும் ஒரேபோல சிந்திப்பது உலக அதிசயமல்லவா? 'யுனெஸ்கோ விருது' பெற்றது போல் இந்த அதிசயத்திற்குமல்லவா 'கின்னஸ் விருது' பெற்றிருக்க வேண்டும்? இரண்டு நூல்களிலும் இருக்கும் தலைப்புக்களை பாருங்கள்: 1)கற்பு Vs Sexual ethic 2)காதல் Vs Romantic Love 3)விபச்சாரம் Vs Prostituition 4) கல்யாண விடுதலை Vs Divorce 5) ஆண்மை அழிய வேண்டும் Vs Fatherhood dominion and Fatherhood Unknown 6)கர்ப்பத்தடை Vs The Liberation of Women. மொத்தமாக 'பெண் ஏன் அடிமையானாள்'இல் 10 தலைப்புக்களும் அதன் கருத்துக்களும் மொழிமாற்றம் செய்யப்பட்டவை. Marriage and Moralsஇல் Eugenics, Psychology தொடர்பான அறிவியல் தலைப்புக்கள் வருகின்றன, அறிவியலை மொழிமாற்றம் செய்ய அறிவற்ற திராவிட அறிவிலிகள் அத்தலைப்புக்களை தவிர்த்து விட்டார்கள். இந்த நூலில் அரிஸ்ட்டாட்டில், பிளாட்டோ, கிறிஸ்டியன் பிலாசபி என வரும் இடங்களில் வள்ளுவரையும், குறளையும் திணித்து இருக்கிறார்கள். உலகில் இவ்வளவு கேவலமான, இழிவான வேலையை இவர்களை விட வேறு எவராலும் முடியாது. ஒரு நோபல் பரிசு பெற்ற நூலையே திருடி, அதில் தங்கள் பெயரை எழுதிக் கொள்கிறார்கள் என்றால் இவர்கள் எவ்வளவு இழிவானவர்கள் என்பது விளங்கும். அது மட்டுமல்ல, இவர்களின் செயலை பகுப்பாய்வு செய்யும்போது 'இழிவு' என்கிற வார்த்தையே எவ்வளவு வீரியமற்றதாக இருக்கிறது என்பதை உணரலாம். தமிழர் இனம் ஈன்றெடுத்த சமரசமற்ற போராளி 'தோழர் ஜீவா'. அவர் தனது நூலான 'ஈரோட்டுப்பாதை சரியா' என ஈவெ ராமசாமியின் சித்தாந்தங்கள், குதர்க்கவாதங்கள் குறித்து எழுதி இருப்பார். அந்த நூலின் அட்டைக்கு ஒரு மிகச் சிறந்த வர்ணத்தை தேர்ந்தெடுத்து இருப்பார். அது காலனியவாத ஆங்கிலேய அரசின் கொடியான 'யூனியன் ஜாக்' ஆகும். தோழர் ஜீவா எவ்வளவு நேர்த்தியாக திரு ஈவெ ராமசாமியை 'காலனியவாத கிழக்கிந்திய கம்பெனியின் கைக்கூலி' என்று சொல்லிவிட்டு சென்றிருக்கிறார். ஆனால் அவர் உருவாக்கிவிட்டு சென்ற கம்யூனிச இயக்கங்களில் உடல் வளர்க்கும் சாதிய-இனவெறி போலிகள் இன்று அதே 'பெண் ஏன் அடிமையானாளுக்கு' செங்கொடி பாதுகாப்பு தருகிறார்கள். இந்த குறிப்பிட்ட நூல் திருட்டு குறித்து பல பக்கங்கள் ஆதாரங்களுடன் விளக்கலாம். ஆனால் மேலும் ஒரே ஒரு சுவாரசியமான தகவலை மட்டும் இங்கே பகிர வேண்டும். காலனிய வல்லாதிக்கத்தின் கைக்கூலிகளான ஆர்வெல் குறித்தும், ரபெட்ராண்ட் ரஸ்ஸல் குறித்தும் பத்தாண்டுகளுக்கு முன்பே பிராமணிய மருதையனின் 'வினவு' கட்டுரை வரைந்திருக்கிறது. ஆனால் அதை திருடி தனது பெயரில் வெளியிட்டுக்கொண்ட ஈவெரா குறித்து தெரிந்தும் மருதையன் வாய் திறக்கவில்லை. அதைத்தான் தென்னிந்திய பிராமணர்கள்தான் திராவிடர்கள் என்கிறது மனுஸ்மிரிதி. இனப்பற்று!

Tuesday, 21 January 2020

கற்பு கூடாது என இந்து மத எதிர்ப்பு ஊர்வலத்தில் கூறிய ஈ.வே.ரா












கற்பு கூடாது - இந்து மத எதிர்ப்பு ஊர்வலத்தில் ஈ.வே.ரா
24.01.1971 தினமணி செய்தி படத்தில் உள்ளது.
அதில் "மத உணர்வை அவமதிக்கும் விதத்தில் தி.க ஊர்வலம்" என்ற தலைப்பில் சேலத்தில் ஈ.வே.ரா தலைமையில் நடந்த "மூடநம்பிக்கைகள் ஒழிப்பு மாநாடு" பற்றிய தகவல்கள் உள்ளன.
அதில் முருகர் பிறப்பு பற்றி ஆபாசமாக வரைந்து எடுத்துவந்தது பற்றியும் ராமர் சிலையை செருப்பால் அடித்தது பற்றியும் உள்ளது.
இதற்கு கருணாநிதி அரசாங்கம் முழு போலீஸ் பாதுகாப்பு வழங்கியுள்ளது.
அந்த மாநாட்டில் போடப்பட்ட தீர்மானம்தான் முத்தாய்ப்பு!
பிறன் மனைவியை அபகரிப்பது இந்தியன் பீனல் கோட்டின் கீழ் ஒரு குற்றமல்ல வென்று விதிப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு சர்க்காரை கேட்டுக்கொள்வதாக தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.
புகைப்படத்திற்கு நன்றி:
செங்கோட்டை ஸ்ரீராம்்
(dhinasari .com)

Wednesday, 31 July 2019

ஈ.வே.ரா. ஆதரவில் முத்துலெட்சுமி ரெட்டி சத்தியமூர்த்தி ஐயரை எதிர்த்ததாக கட்டுக்கதை

ஈ.வே.ரா. ஆதரவில் முத்துலெட்சுமி ரெட்டி சத்தியமூர்த்தி ஐயரை எதிர்த்ததாக கட்டுக்கதை
--------------------------

"பெண்ணுரிமைப் போராளி" முத்துலெட்சுமி அம்மையார் பிறந்த நாள்

30.7.1886

முத்துலெட்சுமி எழுதிய
சுயசரிதையில்
சொல்லப்படாத இருவர்...

1.சத்திய மூர்த்தி ஐயர்
2.ஈ.வெ.ராமசாமி
-------
தேவதாசிமுறை ஒழிப்புக்காக பாடுபட்டவர் முத்துலெட்சுமி அம்மையார். இவர் 1927இல் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் சட்டமன்ற உறுப்பினருமாவர்.

இவர் தேவதாசி ஒழிப்புக்காக சட்ட முன்வரைவை கொண்டு வந்த போது கடுமையாக எதிர்த்தவர் என்று கூறப்படுபவர் சத்திய மூர்த்தி ஐயர்.

இவர் "இறைவனுக்கு ஆற்றும் பணியை தடுக்கக்கூடாது" என்று சொன்னதாகவும்,
அதற்குப் பதிலடியாக முத்துலெட்சுமி அம்மையார் "உங்கள் ஆத்துப் பெண்களை இறைப்பணி செய்ய அனுப்புங்களேன்" என்று கூறி அவரின் வாயடைத்தார் என்றும் பலரும் சொல்லி வருகின்றனர்.

குறிப்பாக, ஈ.வெ.ராமசாமிதான் முத்துலெட்சுமியை தூண்டிவிட்டு கேட்கச் சொன்னதாக தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது.

இது பற்றி ஆராய்வோம்!

முத்துலெட்சுமி அம்மையார் 1964ஆம் ஆண்டு ஆங்கிலத்தில்  சுயசரிதை நூல் எழுதியுள்ளார்.
அந்நூல் தமிழாக்கம் செய்யப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வந்துள்ளது.

அந்நூலிலே, முத்துலெட்சுமி அம்மையார் சத்திய மூர்த்தி ஐயரிடம் இப்படியொரு விவாதம் நடத்தப்பட்டதை எங்கும் குறிப்பிடவே இல்லை,
(ஓரிடத்தில் தன்னுடைய வகுப்புத் தோழர் அரசியல்வாதியான சத்திய மூர்த்தி என்று மட்டும் குறித்துள்ளார் ).

அதுபோல் முத்துலெட்சுமிக்கு ஆதரவாக "குடியரசு" ஏட்டில் எழுதி தொடர்ந்து குரல் கொடுத்ததாக கூறப்படும் ஈ.வெ.ரா. குறித்து ஒரு வார்த்தை கூட இல்லை.
---------
ஆம்.

முதலில் அவரைத் தூண்டியதாக அவர் கூறும் இருவரும் பார்ப்பனர்!

லேடி சதாசிவ ஐயரின் தலைமையில் அகில இந்திய மாதர் சங்கத்தை துவக்கியதாகவும்,
பெண்களுக்கு இல்லம் அமைப்பதற்கு ஶ்ரீனிவாச சாஸ்திரியார் முன்னெடுத்ததை அறிந்த பிறகே தாம் செயல்படத் தொடங்கியதாக குறிப்பிடுகிறார்.
--------
அவர் வழிகாட்டியாக சுட்டுவது காந்தியை!

அவர் சட்டமன்றத்தில், பெண்கள், குழந்தைகள் ஆகியோரின் முன்னேற்றத்திற்காக தீர்மானங்கள் கொண்டுவர முயன்ற போது கடும் எதிர்ப்பைச் சந்தித்ததாகவும்,
அச்சமயத்தில் காந்தியிடமிருந்தே ஆதரவைப் பெற்றதாகவும் குறிப்பிடுகிறார்.

பெண்ணுரிமைக்குப் போராடும் வலுவான போராளி என்று  புகழாரம் அனைத்தையும் காந்தியாருக்கே சூட்டி மகிழ்கிறார்.
'யங் இந்தியா' ஏட்டில் தமக்கு ஆதரவாக காந்தியார் எழுதியதையும் விரிவாகக் கூறுகிறார்.
--------

முன்னோடிகளாக அவர் சுட்டியோர் திராவிடவாதிகள் அல்லர்!

1946இல் சென்னையில் இந்தி பிரச்சார சபை வெள்ளி விழா கூட்டத்திற்கு காந்தியார் வருகை தந்த கூட்டத்தில், முத்து லெட்சுமி அம்மையார் பெண்விடுதலைக்குப் பாடுபட்ட தலைவர்களாக இராஜராம் மோகன்ராய், பண்டிட் வித்யாசாகர், சுவாமி தயானந்த சரசுவதி ஆகியோரையே குறிப்பிட்டு பேசுகிறார்.
-------
ஈ.வே.ரா பற்றி பத்தோடு பதினொன்றாக கூட குறிப்பிடவில்லை!

  திராவிடவாதிகளில் நீதிக்கட்சி தலைவர் பனகல் அரசர் தமக்கு ஆதரவாக செயல்பட்டதை ஓரிடத்தில் நினைவு கூர்ந்துள்ளார்.

அதே நேரத்தில் மற்றொரு திராவிடவாதியான நீதிக்கட்சியைச் சார்ந்த கிருஷ்ணன் நாயர் முத்துலெட்சுமி அம்மையார் தமது மசோதாவை தாமதப்படுத்த முயல்வதாகவும் குற்றம் சாட்டுகிறார்.

காங்கிரசு கட்சி சட்டமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டதால் தமக்கு ஆதரவளித்த வெங்கையா, ஏ.பி.ஷெட்டி,.ஆர். நாகன் கெளடா, நடேச முதலியார், ஏ.ரங்கநாத முதலியார், கே.உப்பி சாஹிப் ஆகியோரை நன்றியோடு நினைவு கூறுகிறார்.

இந்தியாவிற்கு முன்மாதிரியாக நீதிக்கட்சிதான்  தேவதாசிமுறையை ஒழித்ததாக திராவிட இயக்கத்தவர் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
ஆனால் முத்துலெட்சுமி அம்மையாரோ தேவதாசிமுறையை முதன்முதலாக ஒழித்தது 1909இல் மைசூர் சமஸ்தானமே என்று பாராட்டு தெரிவிக்கிறார்.

1930களில் கொச்சி சமசுதானத்தில் அடியோடு தேவதாசிமுறை ஒழிக்கப்படும் போது, அதுபோல ஆங்கிலேயரால் ஏன் சாதிக்க முடியவில்லையே? என கேள்வி எழுப்புகிறார்.

ஒருவேளை யாரையும் விமர்சிக்க மனமில்லாமல் சத்தியமூர்த்தி ஐயரை விட்டிருக்கலாமோ என்று நினைத்தால் அதுவும் இல்லை.

அவர் குற்றம் சாட்டும் ஒரே நபர் இராசாசி.
1937இல் முதல்வராக இராசாசி பதவி வகித்த போது தேவதாசி ஒழிப்புமுறை சட்டத்தை தடுத்ததாகவும், பெண்கள் சீர்திருத்தத்திற்கு எதிரானவர் இராசாசி என்றும் கடுமையாகச் சாடுகிறார்.

பின்னர், 1947இல் ஓமந்தூர் இராமசாமி முதல்வராக இருந்த போதுதான் தேவதாசி சட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட்டு பெண்கள் தேவதாசி முறையிலிருந்து விடுபட்டதாகவும் மகிழ்ச்சி பொங்க குறிப்பிடுகிறார்.

ஈ.வெ.ரா எந்த இடத்திலும் அம்மையாரின் நினைவுக்கு வரவில்லை.

  என்றால் ஈ.வெ.ரா குரல்கொடுக்கவே இல்லையா?!
அல்லது முத்துலட்சுமி அம்மையார் குறிப்பிடும் அளவுக்கு அது வலுவாக இல்லையா?!

இது போன்ற கேள்விகள் முத்துலெட்சுமி அம்மையார் எழுதிய சுயசரிதை நூலைப் படிக்கும் போது எழுகின்றன.

"பெரியாரின் ஆலோசனையின்படியே, சத்திய மூர்த்தி ஐயரின் குடும்பத்தை நோக்கி, முத்துலெட்சுமி அம்மையார் கேள்விகள் கேட்டார்" என்று பலரும் கூறி வருகின்றனர்.
முத்துலெட்சுமி அம்மையாரின் எழுத்திலும், பேச்சிலும் நாகரிக வார்த்தைகளே இந்நூலில் கொட்டிக் கிடக்கின்றன.
சத்திய மூர்த்தி ஐயரையே விமர்சிக்கத் தயங்குபவர் "உங்க ஆத்துப் பெண்கள் இத்தொழிலை செய்யட்டும்" என்று கூறியிருப்பாரா? என்ற ஐயம் எழுகிறது.

இந்தத் தகவலை பிராமண எதிர்ப்புக்காக தீவிரமாகப் பரப்பி வரும் திராவிட இயக்கத்தினர் மூலச் சான்றுகளோடு விளக்கம் அளித்தால் நல்லது!

(டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி சுயசரிதை, எஸ். இராஜலெட்சுமி (தமிழில்), அவ்வை இல்லம், ராஜ லெட்சுமி சீனிவாசன் நினைவு அறக்கட்டளை)

தகவல்களுக்கு நன்றி:-
Tamilthesiyan.wordpress.com

Friday, 14 September 2018

இனக்காப்பு

இனக்காப்பு

அந்த குளிர்மண்டல நாட்டின் ஒரு பெருநகரத்தில் 5 விண்மீன் விடுதியில் வெதுப்பூட்டப்பட்ட பெரிய அறையில் அந்த நாட்டுக்கு தொடர்பில்லாத ஒரு இனத்து மக்கள் கூடியிருந்தனர்.

அந்த நாட்டு இனத்தைச் சேர்ந்த சிலரும் அங்கே இருந்தனர்.

அது ஒரு திருமண விழாவின் மாலைநேர வரவேற்பு நிகழ்ச்சி.

பெண்கள் பலரும் தமது பண்பாட்டு உடையில் இருந்தனர்.
பல வண்ணங்கள் மின்னும் அவர்களது உடையும் அவர்கள் அணிந்திருந்த பெரிய பெரிய நகைகளும் கண்களைப் பறிக்கும் வண்ணம் இருந்தன.

சில பெண்மணிகள் மணப்பெண்ணை விஞ்சும் அளவுக்கு தங்கம் அணிந்திருந்தனர்.
பல பெண்மணிகள் குறைவாக அணிந்திருந்தனர்.
தங்கம் அணியாத பெண்மணி யாரும் காணப்படவில்லை.

ஆண்கள் பலரும் இந்நாட்டு உயர்தர உடையில் இருந்தனர்.
சிலர் பண்பாட்டு உடையிலும் இருந்தனர்.
ஆண்கள் அனைவரும் பெயருக்கு நகை அணிந்திருந்தனர்.
சிலர் அணியவில்லை.

மணமக்கள் அதிகம் பேசிக்கொள்ளாததில் இருந்து அவர்கள் முன்பே ஒருவருக்கொருவர் அதிக அறிமுகமில்லாதவர் என்பது தெரிந்தது.
ஆனாலும் மகிழ்ச்சியாகவே காணப்பட்டனர்.
மணமகன் இந்நாட்டிலேயே பிறந்து வளர்ந்தவர்.
மணமகளோ தாய்நிலத்தவர்.
அறிமுகமில்லாதவரை பெற்றோர் ஏற்பாட்டில் இத்தனை வேறுபாடுகளை மீறி எப்படித்தான் திருமணம் செய்துகொள்கின்றரோ தெரியவில்லை.

மணப்பெண் வீட்டார் அனைவரையும் விழுந்து விழுந்து வரவேற்றனர்.
மணமகன் வீட்டார் அனைவரையும் அதிகாரம் செலுத்தியபடி இருந்தனர்.
மணமகள் வீட்டாருக்கு இந்நாட்டு மொழியும் புரியவில்லை.
அதிக ஆட்களும் இல்லை.
அதனால் அவர்கள் அங்குமிங்கும் அல்லாடிக்கொண்டு இருந்தனர்.

பாட்டுக் கச்சேரி குழுவும் அவ்வினத்து மொழியில் அவ்வினத்து இசையில் பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தனர்.

என்னைப் பற்றி கூற மறந்துவிட்டேன்.
நான் பக்கத்து நாட்டைச் சேர்ந்தவன்.
கல்லூரியில் பட்டம் பெறுவதற்காக இந்த இனத்து மக்களை ஆய்வு செய்து ஒரு அறிக்கை அர்ப்பணிக்கவுள்ளேன்.

இந்த இனத்தில் எனக்கொரு நண்பர் உள்ளார்.
அவர் நெடுநாள் பழக்கம்.
அவரை நம்பியே இந்த ஆய்வில் இறங்கியுள்ளேன்.
அவர்தான் இங்கே அழைத்துவந்தார்.

நான் இவ்வினத்து இளம்பெண்களை நோட்டமிட்டபடி இருந்தேன்.
அதோ அங்கே ஒருத்தி இருக்கிறாள்.
அந்த கூடத்தில் ஏறத்தாழ அனைவரது கவனமும் அவள்மீது இருந்தது.

அவள் அந்த இனத்தவள்தான்.
பதினாறு அகவை இருக்கலாம்.
பொதுவாக கதைகளில் வரும் பெண்கள் அழகாக இருப்பார்கள்.
இந்த கதையிலும் அப்படித்தான்.
ஏனென்றால் அழகான பெண்களைப் பற்றித்தான் பெரும்பாலான கதை, கவிதை, காவியமெல்லாம் எழுதப்படுகிறது.

அவள் இயல்பினாலும் பருவத்தினாலும் அதியழகாய் இருந்தாள்.
ஆனால் அந்த இனத்தாரைப் போலில்லாமல் இந்த நாட்டு கவர்ச்சியான உடையில் இருந்தாள்.
ஒப்பனையும் சற்று தூக்கலாகவே இருந்தது ஆனாலும் அது அவளது அழகைப் பாதிக்கவில்லை.
நிறைய இளைஞர்கள் அவளைச் சுற்றிவந்தனர்.
அவளும் அவர்களைப் புறக்கணிப்பதாய் இல்லை.

அவள் தன்னினத்தாருடன் பேசும் மொழியில் இந்நாட்டு மொழியில் வார்த்தைகள் அதிகம் கலந்திருந்தன.
இளந்தலைமுறைப் பதுமையான அவள் மணமகனின் தங்கையாம்.
இவர்கள் இங்கே குடியேறி நான்கு தலைமுறைகள் ஆகிவிட்டதாகக் கூறினர்.
அப்படிப் பார்த்தால் இந்த தாக்கம் சற்று குறைவாகவே பட்டது.

திடீரென்று அனைவரும் விழுந்தடித்து வாசலுக்கு ஓடினர்.
ஒரு விலையுயர்ந்த மகிழுந்து வந்து நின்றது.
அதிலிருந்து ஒரு பெண் இறங்கினாள்.
அவள் எளிமையான உடையிலும் நகைகள் எதுவும் அணியாமலும் இருந்தாள்.
அவரைப் பின்தொடர்ந்து மெய்க்காவலுக்கு இரண்டு ஆண்கள் நடந்தனர்.

மாப்பிள்ளை வீட்டார் உட்பட அனைவரும் அவர்களை மிகுந்த மரியாதையுடன் வரவேற்று பணிவுடன் விருந்தோம்பல் செய்தனர்.

ஆனால் அந்த மூவரும் ஒருவித இறுக்கத்துடனே நடந்துகொண்டனர்.

என் நண்பரிடம் அவர்கள் யாரென்று கேட்டேன்.
அவர்கள்தான் அந்த இனத்திற்காக நாடுகேட்டுப் போராடிய தீவிரவாதக் குழு. இப்போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட குடியாட்சி நடக்கிறது.
ஆனால் இவர்கள் இன்னும் இயங்குகிறார்கள்.
இவர்கள் தமது நாட்டின் மக்கள்வாழாப் பகுதிகளிலும் புலம்பெயர் மக்கள் மத்தியிலும் தனியே ஒரு நிழல் அரசாங்கமே நடத்துகிறார்கள்.
பிற நாடுகளில் இம்மக்களுக்கு எந்த இடர்ப்பாடு என்றாலும் இவர்கள் சரிசெய்து கொடுப்பார்கள்.
இந்த நாட்டில் குடியேறிய மக்களுக்கு இந்த பெண்தான் பொறுப்பு.
இவர் தீவிரவாதப்படையின் முக்கிய தளபதியும் ஆவார்.

இப்போது பாட்டு நின்றது.
அனைவரும் இந்த கதையின் நாயகியைப் பார்த்தனர்.
அவள் மேடைக்கு சென்று ஒலிவாங்கியப் பிடித்து தொண்டையைச் செருமிக்கொண்டாள்.

மாறுபட்ட இசை ஒலிக்கத் தொடங்கியது.
அவள் தனது இனிமையான காந்தக் குரலில் பாடத் தொடங்கினாள்.
அனைவரது முகத்திலும் வியப்புடன் கலந்த மகிழ்ச்சியை என்னால் பார்க்கமுடிந்தது.

அதிலும் குறிப்பாக அந்த மூன்றுபேர் முகத்திலும் ஒரு இன்ப அதிர்ச்சி தெரிந்தது.

அங்க அசைவுகளுடன் சுதி ஏற்றியிறக்கி மெல்ல நடனமாடியபடி அவள் பாடி முடித்ததும் அனைவரும் சத்தமாக நெடுநேரம் கைகளைத் தட்டினார்கள்.

அப்படியென்ன பாடிவிட்டாள் என்று என் நண்பனிடம் கேட்டேன்.

அவள் முப்பது ஆண்டுகள் பழமையான ஒரு பாடலைப் பாடியுள்ளாள்.
அது ஒரு திரைப்படப் பாடல்.
அதில் ஒரு கன்னிப்பெண் இரவில் தனிமையில் தன் காதலனை நினைத்து ஏக்கத்துடன் பாடும் பாடல்.
நாட்டுப்புற நடையில் இருந்த அந்த பாடலை இந்த புலம்பெயர்ப் பதுமை மிக நேர்த்தியாகப் பாடியுள்ளாள் என்பதே இந்த கைதட்டலுக்குக் காரணம்.

ஆம். அவள் என் கண்களுக்கு முன்னே உண்மையிலேயே அந்த 'ஏங்கும் பெண்ணாகவே' மாறிவிட்டிருந்தாள்.

இப்போது அந்த தீவிரவாதப் பெண் எழுந்துசென்று அந்த இளம்பெண்ணை கட்டிப்பிடித்து பாராட்டி தோளில் தட்டிக்கொடுத்தார்.

பிறகு விடைபெற்றுக்கொண்டு கிளம்பிவிட்டார்.
போகும்போது ஒரு ஆவணத்தில் கையெழுத்திட்டு கொடுத்துவிட்டுப் போயினர்.

இப்போது ஒவ்வொருவராக அனைவரும் மேடை நோக்கி விரைந்தனர்.
அவள் வாழ்த்துமழையில் நனைந்தபடி மேடையை விட்டு இறங்கினாள்.

நானும் அவளைப் பாராட்டும் சாக்கில் அவளை நோக்கி சென்றேன்.
அருகில் நின்று அவளது முகத்தைப் பார்த்தேன்.

அந்த தீவிரவாதத் தலைவியின் முகச்சாயலே அதில் தெரிந்தது.

Sunday, 6 August 2017

பெண்ணுரிமை என்ற பெயரில் ஈ.வே.ரா உளறியவை

பெண்ணுரிமை என்ற பெயரில் ஈ.வே.ரா உளறியவை

"பெண்கள் விடுதலைக்கு பிள்ளை பெறும் தொல்லை அடியோடு ஒழிந்து போகவேண்டும்.
அது ஒழியாமல் சம்பளம் கொடுத்து புருஷனை நியமித்துக் கொள்வதாயிருந்தாலும் பெண்கள் பொதுவாக உண்மைவிடுதலை அடைந்துவிட முடியாது என்றே சொல்லுவோம்"
- ஈ.வே.ரா (குடி அரசு,12-08-1928)
------------------
"தவிர 'பெண்கள், பிள்ளை பெறுவதை நிறுத்திவிட்டால் உலகம் விர்த்தியாகாது, மானிட வர்க்கம் விர்த்தியாகாது'
என்று தர்ம நியாயம் பேசச் சிலர் வருவார்கள்.
உலகம் விர்த்தியாகாவிட்டால் பெண்களுக்கு என்ன நஷ்டம்?
மானிட வர்க்கம் பெருகாவிட்டால் பெண்களுக்கு என்ன ஆபத்து ஏற்பட்டுவிடக்கூடும்?"
- ஈ.வே.ரா (குடி அரசு,12-08-1928)
-------------------
"பெண்கள் பிள்ளை பெறுவதில்லை என்கின்ற காரியத்தில் ஆண்களுக்கு எவ்விதக் கஷ்டமும் நஷ்டமும் கிடையாது என்பதோடு ஆண்களுக்கு இலாபமும் உண்டு என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
எப்படியெனில் ஒரு மனிதன் தான் பிள்ளைகுட்டிக்காரனாய் இருப்பதினாலேயே யோக்கியமாகவும் சுதந்திரமாகவும் நடந்து கொள்ளப் பெரிதும் முடியாமலிருக்க வேண்டியவனாய் விடுகிறான்.
அன்றியும் அவனுக்கு அனாவசியமான கவலையும் பொறுப்பும் அதிகப்படவும் நேரிடுகின்றது"
- ஈ.வே.ரா (குடி அரசு,12-08-1928)
-----------------
"ஆண்களும், பெண்களும் ஒரே மாதிரியாக வேஷ்டி கட்டவேண்டும்.
ஜிப்பா போடவேண்டும்.
உடைகளில் ஆண், பெண் வித்தியாசம் இருக்கக்கூடாது.
நம் நாட்டுப் பெண்களின் முன்னேற்றத்தை வேகமாகத் தடுத்து வருவது அவர்களது புடவை, நகை, துணி அலங்கார வேஷங்கள் என்பதை அவர்கள் உணரவேண்டும்.
பெண்கள் எல்லாம் ஆறடி, ஏழடி என்று கூந்தலை வளர்த்துக் கொள்வது அநாகரிகமாகும் – தேவையற்ற தொல்லையுமாகும்.
ஆண்களைப் போலவே பெண்களும் கிராப் வைத்துக் கொள்ளவேண்டும்"
- ஈ.வே.ரா (நூல்: பெரியார் ஒரு வாழ்க்கை நெறி)
--------
"பெண்களுக்கு நேரம் மீதியாக வேண்டுமானால் என்ன செய்யவேண்டும்?

தலைமயிரை வெட்டிவிட்டால் அதிகநேரம் மீதியாகும்.

பெண்கள் கைக்கு ஓய்வு கொடுக்கவேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?
அவர்களுக்கு ஒரு குப்பாயம்(மேல்சட்டை) போட்டுவிட்டால் கைக்கு ஓய்வுகிடைத்துவிடும்.
(இல்லாவிட்டால் அடிக்கடி மார்பு சீலையை இழுத்துப் போடுவதே வேலையாகும்)"
- ஈ.வே.ரா (குடியரசு, 16-11-1930)
--------
"பெற்றோர்கள் தங்கள் பெண்களை பெண் என்றே அழைக்காமல் ஆண் என்றே அழைக்கவேண்டும்.
பெயர்களும் ஆண்கள் பெயர்களையே இடவேண்டும்"
- ஈ.வே.ரா (குடியரசு, 21-09-1946)
--------
"100-க்கு 90 விகிதம் உள்ள இந்நாட்டுப் பெருவாரி சமுதாய பெண்கள் நாற்று களை பிடிங்கி, ரோட்டில் கல் உடைத்து, வீதியில் மக்கள் நடக்க மண் சுமந்து கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால் 100-க்கு 6- விகிதம் உள்ள முஸ்லிம் பெண்கள் உடலுமைப்பு வேலைகள் எதுவும் செய்யாமல்,
பிச்சை எடுப்பவன் வீட்டுப் பெண்கள் உள்பட கோஷா முறையில் உழைப்பில்லாமல் வாழும் முறையை இந்த நாட்டில் சொகுசாக அனுபவிக்கிறார்கள்"
- ஈவெரா (விடுதலை 6.3.1962)
---------
"ஆண் இரண்டு வைப்பாட்டிகளை வைத்துக்கொண்டால் பெண்கள் மூன்று ஆசைநாயகர்களை வைத்துக்கொள்ள முற்பட வேண்டும்.
உடனே நிலைமை சரிப்பட்டுப்போகும்.
உண்மையான சமரசம் தோன்றிவிடும்.
பிறகு கஷ்டமே இருக்காது"
- ஈ.வே.ரா (குடி அரசு 8-2-1931)
---------
"திருமணம் என்பது மனிதத்தன்மைக்காக ஏற்படவில்லை. மனிதன் பெண்களை அடிமைகொள்ளவே ஏற்பட்டது. அது ஆண்களுக்கு நன்மையாகவும் பெண்களுக்குக் கேடாகவும் இருக்கிறது’’
--------
"உத்தியோகத்துக்குப் போக ஆரம்பித்தால் பிள்ளைபெற வேண்டும் என்ற எண்ணமே பெண்களுக்கு வராது.
உத்தி யோகத்தில் சரிபகுதி பெண்களுக்குக் கொடுக்க வேண்டும்.
அதில் அவர்களை திருப்பி விட்டால் தாங்களாகவே பிள்ளை பெறுவதைத் தடுத்துக்கொள்வார்கள்.
பிள்ளை பெறுவதைத் தொல்லையாக கருதுவார்கள்.”
- ஈ.வே.ரா 17-3-1970
----------
"தாலி என்பது நாய்க்கு நகராண்மைக்கழகம் கட்டும் பட்டை போன்றது.
தாலி பெண்ணை அடக்கி ஆளும் மூர்க்கத் தனத்தின் சின்னம்.
தாலிபற்றிப் புலவர்கள் பேசும்போது காளையை அடக்குதல், புலிவேட்டையாடுதல் போன்ற பொருத்தமற்ற இலக்கிய ஆதாரங்களை அள்ளி வீசுவார்கள்.
பெண்களுக்கு அறிவு வந்தாலொழியத் தாலியை நீக்கமுடியாது"
- ஈ.வே.ரா (நூல்: நாய்க்கு லைசன்ஸ் பெண்ணுக்குத் தாலி)
-----------
"உலகில் ‘கற்பு’, ‘காதல்’ என்பன போன்ற வார்த்தைகளை எப்படி பெண் மக்களை அடிமைப்படுத்தி, அடக்கியாளவென்று ஏற்படுத்தி பயன்படுத்தப்பட்டு வருகின்றனவோ,
அது போலவேதான் ‘ஒழுக்கம்’ என்னும் வார்த்தையும்"
- ஈ.வே.ரா ( நூல்: மெட்டீரியலிசம் அல்லது பிரகிருதிவாதம்)
-----------

'பெண்களே உங்களுடைய கர்ப்பப் பைகளை வெட்டி எறியுங்கள்'

‘பெண் விடுதலைக்கு ஆண்மை அழிய வேண்டும்’ (தலைப்பு)

‘ஆண்கள் முயற்சியால் செய்யப்படும் எவ்வித விடுதலை இயக்கமும் எவ்வழியிலும் பெண்களுக்கு உண்மையான விடுதலையை அளிக்க முடியாது’

(நூல்: பெண் ஏன் அடிமையானாள்)
----------------
சுருக்கமாக,
உலகத்தில் ஆண்கள் இருக்கக்கூடாது.
ஆண்கள் போல பெண்கள் மாறி அவர்கள் செய்வதை விட கூடுதலாக அட்டூழியம் செய்யவேண்டும்.
யாரும் குழந்தையும் பெறக்கூடாது.
திருமணம் செய்யாமல் ஒழுக்கமின்றி வாழவேண்டும்.

இதுதான் ஈ.வே.ரா முன்வைக்கும் பெண்விடுதலை.