Saturday, 12 November 2022
பெண்கள் பெரியார் பட்டம் வழங்கவில்லை
Thursday, 30 January 2020
இங்கு திராவிடம் விற்கப்படும்
இங்கு திராவிடம் விற்கப்படும்
தமிழகத்தின் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தி.மு.க விடம் பணம் பெற்ற தகவல்கள் வெளியானது நினைவிருக்கலாம்.
இதற்கு முன்னோடியும் ஈ.வே.ரா தான்.
திராவிட கட்சி இரண்டாகி அதன் ஒரு பிரிவை ஜெயலலிதா கைப்பற்றி 1991 இல் ஆட்சியமைக்கிறார்.
தி.மு.க வை சமாளிக்க திராவிட கூடாரத்தில் இருந்து யாரையாவது தன் பக்கம் இழுக்க முடியுமா என்று பார்க்கிறார்.
பணம் தருவதற்கும் தயாராக இருந்தார்.
அதெப்படி நடக்கும்?
கேவலம் பணத்துக்காக இத்தனைக் காலம் யாரை எதிர்த்தார்களோ அவர்களுடனே வந்து ஒட்டிக் கொள்வார்கள்?
அந்த அளவுக்கு மானம் கெட்ட யாரும் உண்டா?
என்று அனைவரும் நினைத்தபோது வீரமணி போய் ஜெயலலிதாவுடன் சேர்ந்துகொண்டார். வெளிப்படையாக 5 லட்சம் ரூபாய் பணமும் வாங்கிக் கொண்டார்.
இது பற்றி கேள்வி எழுந்தபோது விடுதலை (03.10.1991) இதழில்
அது எனக்காக வாங்கவில்லை,
"சுயமரியாதை இயக்க பிரச்சார நிறுவனத்தின்" வளர்ச்சிக்காக வாங்கிய நிதி என்று விளக்கமளித்தார்.
(நிறுவனத்தின் பெயரைக் கவனத்தீர்களா ராமகிருஷ்ண சந்திரபோஸ் மாதிரி)
அதோடு நில்லாமல் பெரியாரும் பார்ப்பன முதலாளிகளிடம் பணம் பெற்றுள்ளார் என்பதையும் அதனால் கொள்கை தவறிவிட்டதாக அர்த்தமில்லை என்றும் தெளிவாக விளக்கமளித்துள்ளார்.
(அன்று தமிழ்தேசியத்தின் குரலாக ஒலித்த அறிஞர் குணா அவர்களை கருத்தியல் ரீதியில் எதிர்கொள்ள இயலாமல் ஜெயலலிதாவிடம் சொல்லி தடா வில் உள்ளே தள்ளியதும் வீரமணிதான்)
Tuesday, 21 January 2020
கற்பு கூடாது என இந்து மத எதிர்ப்பு ஊர்வலத்தில் கூறிய ஈ.வே.ரா
செங்கோட்டை ஸ்ரீராம்்
Wednesday, 3 October 2018
வந்தேறிகளும் ஒழுக்கமும்
வந்தேறிகளும் ஒழுக்கமும்
திராவிடியாப் பயல்கள் பார்ப்பனர் மீது போட்ட பழியெல்லாம் வந்தேறிகள் செய்து வந்தவை!
இதற்கு சிறந்த உதாரணம் ஈ.வே.ரா மணியம்மை திருமணம்.
1928இல் வயது பொருந்தாத திருமணம் கூடாது என ஈ.வே.ரா கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார்,
மணமக்கள் விஷயத்தில் போதிய வயது முதலிய பொருத்தமில்லாததும்,
பெண்களின் சம்மதமோ அல்லது ஆணின் சம்மதமோ இல்லாமல் பெற்றோர் தீர்மானம் செய்துவிட்டார்களாதலால் கட்டுப்பட்டுத்தான் தீரவேண்டும் என்கின்ற நிர்பந்த முறையில் நடப்பது சுயமரியாதையற்ற மணங்கள் என்றே சொல்லலாம்
(குடியரசு 03-06-1928)
1940 இல் அண்ணாதுரை எழுதிய "தாத்தா கட்ட இருந்த தாலி" எனும் கதை வயது பொருத்தமில்லாத திருமணம் பற்றியது.
அதில் ஒரு வயதான பார்ப்பனர் இளம் கன்னியைத் திருமணம் செய்வதுபோல எழுதியிருப்பார்.
ஆனால் அதன்பிறகு ஈ.வே.ரா 72 வயதில் 26 வயதான மணியம்மையை அதாவது வளர்ப்பு மகளையே திருமணம் செய்தார்.
இதை எதிர்த்து அண்ணாதுரை கட்சியை விட்டு வெளியேறினார்.
ஈ.வே.ராமசாமியை விமர்சித்து கீழ்க்கண்டவாறு எழுதினார்.
'அப்பா! அப்பா!' என்று அம்மை மனம் குளிர, வாய் குளிர,
கேட்போர் காது குளிரக் கூறவும்;
'அம்மா! அம்மா!' என்று கேட்போர் பெருமையும் பூரிப்பும் அடையும் விதமாக, பெரியார் அந்த அம்மையாரை அழைக்கவும்;
இக்காட்சியைக் கண்டு பெரியாரின் வளர்ப்புப் பெண் இந்த மணியம்மை எனப் பல்லாயிரவர் எண்ணி மகிழவுமான நிலை இருந்தது.
அந்த வளர்ப்புப் பெண்தான், இன்று பெரியாரின் மனைவியாக இருக்கிறார்.
(திராவிட நாடு 03.07.1949)
இதைவைத்து அண்ணாதுரை ஒழுக்கமானவர் மானமுள்ளவர் என்ற முடிவுக்கு வரவேண்டாம்.
அண்ணாதுரை இதைவிடவும் கேவலமான பின்னணி கொண்டவர்.
அண்ணாதுரை பற்றி பாரதிதாசன் எழுதியது வருமாறு,
அண்ணாத்துரையின் தமக்கையார் மகளை காஞ்சியில் செல்வந்தராயிருக்கும் பொன்னப்பாவிடம் இரவில் அழைத்துச் செல்வதும் இன்ப விளையாட்டு முடியும்வரைக்கும் வெளியில் காத்துக் கொண்டிருப்பதும் அண்ணாத்துரையின் வேலை.
அன்னையோ சென்னையில் ஐயரோடு!
(குயில் 30.09.1958)
காஞ்சிபுரம் வாராகி தெரு என்பது தேவதாசிகள் வரும் தெரு ஆகும்.
அங்கே நய்யாண்டி ஐயர் என்பவரது வைப்பாட்டி பங்காரு அம்மாள் என்கிற தேவதாசிக்கு பிறந்தவரே அண்ணதுரை.
அண்ணாதுரை பிரிந்து சென்றபோது ஈவேரா அளித்த விளக்கத்தில் பிரிந்துபோனவர்கள் ஒரே சாதி என்றும் குற்றம்சாட்டினார்.
("ஈ.வெ.ரா. சிந்தனைகள்", தொகுதி 1, பக்கம் 249-250)
ஆம். தேவதாசி சாதிகளான மேளக்கார (பிற்காலத்தில் இசைவேளாளர் என்று மாற்றிக்கொண்டனர்) சாதியைச் சேர்ந்த அண்ணாதுரை, மூவலூர் ராமாமிர்தம், கருணாநிதி ஆகியோர் பிரிந்து தொடங்கியதே தி.மு.க.
ஆக பிராமண ஆதிக்கத், உயர்சாதி வெறி, நிலவுடைமை ஆதிக்கம், விபச்சாரம், பெண்ணடிமை, ஒழுக்கமின்மை, தமிழர் வெறுப்பு என வந்தேறிகள் தாம் செய்து வந்த அனைத்தையும் பார்ப்பனத் தமிழர் மீது போட்டு அதை இவர்கள் எதிர்ப்பது போல நடித்து வந்தனர்.
Tuesday, 10 July 2018
ஈ.வே.ராவும் முத்துப் பல்லக்கும்
ஈ.வே.ராவும் முத்துப் பல்லக்கும்
13.08.1972 அன்று ஈ.வே.ரா உயிரோடு இருக்கும்போதே தமிழக முதல்வர் கருணாநிதி கையினால் தனக்குத்தானே சிலை திறந்த விழாவில் நடந்தவை...
//13.8.1972இல் கடலூர் மஞ்சை நகர் மைதானத்தில் தந்தை பெரியார் திருவருவச் சிலை திறப்பு விழா மேலவைத் தலைவர் சி.பி. சிற்றரசு அவர்கள் தலைமையில் நடந்தது. தமிழக முதல்வர் மு. கருணாநிதி அவர்கள் அய்யா சிலையைத் திறந்து வைத்தார்கள்//
//மாலை 6.45 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட **முத்துப் பல்லக்கில்** திருப்பாதிரிப்புலியூரிலிருந்து இலட்சக் கணக்கான தமிழ் மறவர்கள் சூழ அய்யா அவர்கள், மேளவாத்தியம் கொட்டு முழக்கத்துடன் முடி சூடாமன்னராகப் பவனி வந்தார்கள்//
-----------------------
ஈ.வே.ரா வுக்கு நடக்க முடியாது அதனால் கார் வேண்டும் என்று பொதுமக்களிடம் நிதி திரட்டி ஏ.சி பொருத்தப்பட்ட வேன் வாங்கி அதை அவரிடம் ஒப்படைக்கும் விழாவில் நடந்தவை
//19-8-73 தஞ்சை மாநகரில் கோலாகலமாகக் குதூகலப் பெருநாள் திருநாள்!
ஆம் அது என்ன விழா? தந்தை பெரியாருக்கு பிரச்சார பயணம் மேற்கொள்ள வேன் வழங்கும் விழா.
பெரியதோர் ஊர்வலத்தில், யானை முன் செல்ல கருஞ்சட்டையினர் அணிவகுத்து முழக்கமிட்டுப் பின்தொடர,
அழகு ஒளி உமிழத் தஞ்சையின் தனிச் சிறப்புப் புகழ் வாய்ந்த **முத்துப் பல்லக்கில்** பெரியாரும், கி.வீரமணியும் அமர்ந்து வந்த பவனி,
பின்னர் திலகர் திடலில் மக்கள் வெள்ளத்தினிடையே மகத்தான பொதுக்கூட்டம்.
அமைச்சர் எஸ் இராமச்சந்திரன் கூட்டத் தலைமை ஏற்றார்.
தஞ்சை மாவட்டக் கூட்டமெனினும், மாநிலச் சிறப்புப் பொருந்தியதாகையால், கி.வீரமணி வரவேற்கட்டும் எனத் தோலி சுப்ரமணியம் உரைத்திட, வரவேற்புரை நிகழ்த்தினார் விடுதலை ஆசிரியரும், கார் நிதி அமைப்பாளருமான கி.வீரமணி.
அவர் கேட்டதோ ஒரு லட்சம், ஆனால் திரண்டதோ ஒன்றரை லட்சத்திற்கும் மேல் மீதியில் 50 ஆயிரம் ரூபாய் பெரியாரிடம் நிதியாக வழங்கப்பட்டது.
10 ஆயிரம் பெரியார் அறக்கட்டளைச் சொற்பொழிவுக்காகத் தரப்பட்டது.
பெரியார்பால் கரிசனமிக்க மருத்துவ நிபுணர்களான டாக்டர்கள் கே. ராமச்சந்திரா. பட். ஜான்சன், ஆகியோருக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
(ஆட்டோமாட்டிக்) தானியங்கிக் கடிகாரம் ஒன்றை விழாக்குழு சார்பில் அமைச்சர் மன்னை நாராயணசாமி பெரியாரிடம் தந்தார்.
ஒரு டேப் ரிக்கார்டர், தங்கத்தாலான கார் சாவி ஆகியவற்றைப் பெரியாரிடம் தந்து, பொன்னாடையும் போர்த்தினார் முதல்வர் கலைஞர்.
ஏர்கண்டிஷன் செய்யப்பட்டு, வேனிலிருந்தவாறே பேசுவதற்கு ஏற்ற முறையில் இந்த வேனை அமைத்தவர்கள் எல்.ஜி.பாலகிருஷ்ணன் கம்பெனியார்.
விழாவில் கி.வீரமணிக்கு மோதிரமும், ஓவியர் கருணாவுக்கு நல்லாடையும் பெரியாரால் அணிவிக்கப்பட்டன.//
நூல்: தமிழர் தலைவர்
ஆசிரியர்: கே.பி.நீலமணி
பக்கம்: 813
இச்செய்தி கி.வீரமணி அவர்களின் இணையதளமான kveeramani.காம் இலும் உள்ளது.
அதன் சுட்டி http://kveeramani. com/dravidar-ta. php
-----------------------------
வீரமணி இதனை "உண்மை" இதழில் நினைவுகூர்ந்தும் உள்ளார்.
//சிம்மாசனம் போல் அலங்கரிக்கப்பட்ட ஒரு முத்துப் பல்லக்கில் தமிழர் தலைவர் தந்தை பெரியார் அவர்களும், அய்யா அவர்களுடன் நானும் அமர்ந்து வந்தோம்.
வழி நெடுக மலர்மாலைகள் அளித்து, தாய்மார்களும், தமிழ் மக்களும் கைகூப்பி, அய்யாவைக் கண்டு உவகை பூத்த காட்சி மெய்சிலிர்க்கக்கூடியதாக இருந்தது.//
சுட்டி: http://www.unmaionline.com/index.php/2011-magazine/17-apr-16-30/184-அய்யாவின்-அடிச்சுவட்டில்.html
---------------------
தஞ்சாவூர் முத்துப் பல்லக்கு அந்நாட்களில் மிகவும் பிரபலமானதும் ஆடம்பரமானதும் ஆகத் திகழ்ந்தது.
தெய்வச்சிலைகளையும் அர்ச்சகர்களையும் மட்டுமே முத்துப் பல்லக்கில் சுமக்கும் நடைமுறை இருந்தது.
இதையெல்லாம் மறைத்துவிட்டு கட்டுக்கதை ஒன்று எழுதி பரப்பிவிட்டுள்ளனர் வந்தேறிகள்.
அதாவது காஞ்சியில் சங்கராச்சாரி பல்லக்கில் போனாராம் அப்போது "துறவிக்கு ஏன் பல்லக்கு சுகம்? மனிதனை மனிதன் சுமக்கலாமா?" என்று ஒரு குரல் கேட்டதாம்.
பார்த்தால் அது பெரியாராம்.
உடனே பல்லக்கையே துறந்துவிட்டு அன்றுமுதல் நடந்து செல்வதை பின்பற்றினாராம் சங்கராச்சாரியார்.
இது முழுக்க முழுக்க பொய்.
ஈ.வே.ரா இறப்பதற்கு சில மாதங்கள் முன்புவரைகூட பல்லக்கு சவாரி செய்துள்ளார் என்பதே உண்மை.
Friday, 6 July 2018
யாரெல்லாம் திராவிடர்? -ஈ.வே.ரா விளக்கம்
யாரெல்லாம் திராவிடர்?
எத்தனைமுறை விளக்கம் அளித்தாலும் திராவிடவாதிகள் திரும்பத் திரும்ப கேட்கும் கேள்வி "யார் தமிழர்?" என்பது.
சரி "யார் திராவிடர்?" என்பதற்கு சரியான விளக்கம் உண்டா?
ஈ.வே.ரா இதுபற்றிக் கூறியதைப் பார்ப்போம்,
"தமிழர்களாகிய நாம், ‘திராவிட நாடு திராவிடருக்கே’ ஆக வேண்டுமென்பதில் முனைந்திருப்போம்.
சில நாட்களில் ஒரிசாக்காரன் தன்னையும் திராவிடன் என்றுணர்ந்து நம்முடன் சேர்வதாக இருந்தால் சேர்ந்து கொள்ளட்டும்;
இல்லையேல், மலையாளி தன் இனம் திராவிட இனமல்ல என்பதாக அறிந்து, நம்முடைய கூட்டிலிருந்து விலகிவிட விரும்பினால் ஒதுங்கிப் போகட்டும்’.
-- ஈ.வே.ரா (குடிஅரசு, 03.06.1944)
அதாவது தமிழர்கள் திராவிடர்களாக இருக்கவேண்டும்.
ஒரிசாக்காரரும் மலையாளிகளும் விரும்பினால் திராவிடர் இல்லையென்றால் இல்லை.
அதாவது தமிழர் மட்டும் திராவித்தின் பெயரால் யார்வந்தாலும் தமது நாட்டை பங்குபோட்டுக்கொள்ள வேண்டும்.
ஆனால் மற்றவர் என்று வரும்போது அவரவர் விருப்பம்.
என்னவொரு அநியாயம்...?
Wednesday, 15 November 2017
ஈ.வே.ராமசாயின் அக்காமாலா(குடி அரசு) மற்றும் கப்சி(விடுதலை)
ஈ.வே.ராமசாயின் அக்காமாலா(குடி அரசு) மற்றும் கப்சி(விடுதலை)
திராவிடியா மகன்: எங்க பெரியார் மட்டும்தான் நல்ல தமிழில் பெயர்வைத்து பத்திரிக்கை நடத்தினார்
தமிழன்: நடத்தி...
'தமிழ் காட்டுமிராண்டி மொழி', 'தமிழ்த்தாய் பாலைக் கரந்து சத்து இருக்கிறதா என்று ஆராயவேண்டும்', 'வேலைக்காரியோடு ஆங்கிலம் பேசுங்கள்' அப்டினு தமிழுக்கு எதிராகத்தானே எழுதுனாரு?!
"தமிழ்பேசும் பார்ப்பனர் பெரிய தலைவலியாக இருக்கின்றனர்.
இந்து-முஸ்லீம் பிரிவினை வேறு தெற்கே எடுபடவில்லை.
எனவே பிராமணர்-பிராமணரல்லாதார் என தனியாக பிரித்து பிராமணன் இடத்தில் நீங்கள் அமர்ந்துகொள்ளுங்கள்"
அப்டினு வெள்ளைக்காரன் போட்டுக்கொடுத்த ஸ்கெட்ச்தானே உங்க திராவிடம்.
கடைசிவர அவனுக்கு விசுவாசமாத்தானே இருந்தீங்க?!
உள்ளே ஆங்கில பூர்வீகமே இருக்க, தலைப்பு மட்டும் தமிழில் வைத்துவிட்டால் போதுமா?
Wednesday, 8 November 2017
சென்னை மாகாணத்தை மொழிவழியாகப் பிரிக்கக்கூடாது - ஈ.வே.ரா
சென்னை மாகாணத்தை மொழிவழியாக பிரிக்கக்கூடாது - ஈ.வே.ரா
"சென்னை மாகாணத்தை நான்கு கூறுகளாக ஆக்க வேண்டு மென்பது கண்டிப்பாக அரசியல் வாழ்வையே தங்கள் ஜீவனமாக, வியாபாரமாக, பதவி- பட்டம்- பணம் சேர்த்தல் முதலிய காரியங்களுக்கு வழியாக வைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்தும் சிலர் தங்கள் நலனுக்காக இதை- இந்தப் பிரிவினையை வேண்டுவார்களானால், வலியுறுத்துவார்களானால் அதற்கு இடம் கொடுப்பது திராவிட கலாச்சாரத்துக்கும் திராவிட சமுதாயத்துக்கும், திராவிடத் தலை மொழியாகிய தமிழுக்கும் தேய்வு- அழிவு ஏற்பட்டு விடுமென்று எச்சரிக்க விரும்புகிறேன்"
- ஈ.வே.ரா விடுதலை 01.08.1948
ஈ.வே.ராமசாமி ஏதோ 'தமிழ்நாடு தமிழருக்கே' என்று முழங்கி தமிழர் உரிமைக்காகப் போராடினார் என்றும்
தனித்தமிழ்நாடு கேட்டார் என்றும் திராவிடவாதிகள் கூறுகிறார்கள்.
ஆனால் அது பொய்.
(தேடுக: தமிழ்நாடு தமிழருக்கே எனும் முழக்கம் வேட்டொலி
தேடுக: ஈ.வே.ரா தனித்தமிழ்நாடு கேட்டாரா? மூன்றுமுறை நிறம் மாறிய பச்சோந்தி வேட்டொலி)
தற்போது மேலும் ஒரு சான்று கிடைத்துள்ளது.
2011 ல் முல்லைப்பெரியாறு அணை பிரச்சனை பெரிய அளவில் வெடித்தது.
அது அமைந்துள்ள இடுக்கி மாவட்டமே (தேவிகுளம் - பீர்மேடு) தமிழர் பெரும்பான்மை மாவட்டம் ஆகும்.
தேனி தமிழரும் இடுக்கி தமிழரும் லட்சக்கணக்கில் திரண்டு இடுக்கி தமிழகத்துடன் இணைய பெரிய அளவில் போராட்டம் நடத்தினர்.
அப்போது தமிழ்தேசியப் பேரியக்கம் தலைவர் திரு.மணியரசன் பல்வேறு தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டார்.
அப்பொது அவர் வெளியிட்ட அறிக்கையில் திராவிடம் பேசுவோர் அன்று முதல் இன்றுவரை தமிழர் இனவுணர்வை திசைமாற்றி எப்படியெல்லாம் இரண்டகம் செய்தனர் என்று விரிவாக கூறியுள்ளார்.
(அவற்றில் மேற்கண்ட சான்று மட்டும் இதுவரை எனக்கு காணக்கிடைக்காத ஒன்று.
அதனால் இங்கே பதிகிறேன்.
இது ' ஈ.வே ரா மண்மீட்பில் உதவினாரா? ' என்ற பதிவுடனும் சேர்க்கப்படும்)
Monday, 30 October 2017
முதுகுளத்தூர் கலவரம் - மறைக்கப்பட்ட உண்மைகள்
முதுகுளத்தூர் கலவரம்
- மறைக்கப்பட்ட உண்மைகள்
இமானுவேல் சேகரனார்
படுகொலை செய்யப்படும்வரை 90% பள்ளர்களுக்கு அவர் யார் என்றே தெரியாது.
இமானுவேல் சேகரனார் பற்றி வந்த ஆகச்சிறந்த புத்தகத்தில் அவர் வரலாறு வெறும் பத்து பக்கத்தைத் தாண்டவில்லை.
அவர் எப்படி பள்ளர்களின் தலைவர் ஆவார்?
1957ல் முதுகுளத்தூர் கலவரத்திற்கு முன்பே இரண்டு பள்ளர்களை தேர்தலில் நிற்கவைத்தவர் தேவர்.
(ஒருவர் வென்றார், ஒருவர் தோற்றார்)
சமாதான கூட்டத்தில் தேவர் இமானுவேலார் சாதியைக் காரணம் காட்டி கையெழுத்திட மறுத்ததாகக் கூறுவதில் துளியளவும் உண்மை கிடையாது.
அந்த தொகுதி எம்.எல்.ஏ தான் கையெழுத்திடவேண்டும் என்று கூறினார்.
காரணம் பள்ளர்களுக்கு யாரென்றே தெரியாத ஒரு இளைஞரை விட ஒரு பள்ளரான அப்பகுதி எம்.எல்.ஏ கையெழுத்திட்டால் சரியாக இருக்கும் என்பது அவர் வாதம்.
தேவர் கையெழுத்து போடாததால் சமாதானம் முயற்சி தோல்வியடைந்தது என்பது முழுப்பொய்.
தேவர் முதலில் மறுத்தாலும் பிறகு இமானுவேலாரை பிரதிநிதியாக ஏற்று கையெழுத்தும் போட்டுவிட்டார்.
( முத்துராமலிங்கத்தேவர் என்பதுதான் அவர் பெயர்.
கையெழுத்தும் அவ்வாறே போடுவார் ).
அந்த சமாதான அறிக்கை மறுநாள் வெளிவர இருந்தது.
அது வெளிவரக்கூடாது என்பதற்காக நேருவின் உளவுத்துறை அன்றே இரவில் மின்சாரத்தை துண்டித்து இமானுவேலாரைக் கொலை செய்து பழியை தேவர் மீது போட்டது.
தேவரை சிறைக்குள் அடைத்து ஸ்லோ பாய்சன் கொடுத்து வெளியேவிட்டது.
(ஜெயலலிதாவை இவ்வாறுதான் மத்திய அரசு கொன்றது).
இதனால் ஆரோக்கியமாக கம்பீரமாக இருந்த தேவரையா விரைவாக உடல்நலம் குன்றி இளம் வயதிலேயே மரணமடைந்தார்.
நேருவை இயக்குவது இஸ்ரேல் என்று உண்மையை போட்டுடைத்த,
நேதாஜி உயிரோடு இருக்கிறார் என்று கூறிவந்த,
காந்தியை கொன்ற சவார்க்கருக்கு பாராட்டும் ரூ.5000 பொன்முடிப்பும் வழங்கிய,
காங்கிரசுக்கு எதிரான அத்தனை சக்திகளையும் ஒன்றுதிரட்டிய
மிகப்பெரிய ஆளுமையான தேவர் ஒழிந்ததால் நேரு நிம்மதி அடைந்தார்.
இதற்காக அவர் பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல.
சமாதான கூட்டத்தில் 'ஒரு பள்ளப்பய எனக்கு சமமா! அவன் நாளைக்கு இருக்கக்கூடாது' என்று தேவர் கூறியதாக பள்ளர் மத்தியில் உளவுத்துறையால் வதந்தி பரப்பப்பட்டது.
(இத்தனைக்கும் தேவரோடு வந்த 2பேரில் ஒருவர் பள்ளரான வேலு குடும்பன் ஆவார்).
தேவர் நுழைந்தபோது இமானுவேலார் கால்மேல்கால் போட்டபடி மரியாதை இல்லாமல் சிகரெட் பிடித்துக்கொண்டு உட்கார்ந்தே இருந்ததாகவும்,
பேச்சுவார்த்தை முடிந்ததும் தேவரிடம் ஒரு தாம்பலத்தில் வெற்றிலை பாக்கு வைத்து நீட்டி மறவர் பெண்ணை தனக்கு இரண்டாம் தாரமாக திருமணம் செய்து தருமாறு கேட்டதாகவும் மறவர் மத்தியில் வதந்தி பரப்பட்டது.
(இமானுவேலார் அப்படியெல்லாம் செய்யவில்லை.
எம்.எல்.ஏ வரமுடியாத சூழல் என்று மரியாதையுடன் எடுத்துக்கூறினார்.
தொலைபேசியில் பேசவைத்ததாகவும் கூறுகின்றனர்)
நேருவின் உத்தரவின்பேரில் மறவர் கிராமமான கீழத்தூவலில் ரே எனும் வடயிந்தியர் தலைமையிலான போலீஸ்படை நுழைந்து ஐந்து இளைஞர்களை அழைத்துப்போய் கண்மாய் கரையில் வைத்து கண், கை, கால்களை கட்டி சுட்டுக்கொன்றது.
இது சுதந்திர இந்தியாவில் தமிழகத்தில் நடந்த முதல் படுகொலை ஆகும்.
இது காமராசர் போலீசை அனுப்பி மறவர்களைக் கொன்றதாகக் காட்டி மறவருக்கு எதிராக நாடார்களையும் கலவரத்தில் இறக்க எடுத்த முயற்சி ஆகும்.
இந்த யோசனைகளை நேருவுக்கு வழங்கியது அண்ணாதுரை.
உளவுத்துறைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கியது தி.மு.க வந்தேறிகள்.
காரணம் தெலுங்கு சின்னமேளம் எனும் தேவதாசி சாதியைச் சேர்ந்த அண்ணாதுரை தனது குலத்தொழிலான விபச்சாரத் தொழிலை செய்துவந்ததை தேவர் மதுரையில் ஒரு பொது இடத்தில் அவரை வைத்துக்கொண்டே அம்பலப்படுத்தினார்.
தேவருடன் இணைந்து காங்கிரசை எதிர்த்த ஈ.வே.ராமசாமியும் ராஜாஜி பதவி விலகி காமராசர் வென்றதும் அவருடன் போய் சேர்ந்துகொண்டு தேவருக்கு எதிராக காமராசரை தூண்டியபடி இருந்தார்.
(ராஜாஜி தேவருடன் போய் இணைந்தார்.
ஆதித்தனாரும் தேவருடன் இணைந்தார்)
எவ்வளவோ முயற்சிகளுக்குப் பிறகும் இரண்டு ஆண்டுகள் கழித்து இமானுவேலார் கொலையில் தேவருக்கு பங்கில்லை என்று அவர் 1959ல் விடுதலை செய்யப்பட்டார்.
கலவரமும் கொலையும் நடந்தபிறகும் கூட, தேவரையா ஐந்து ஆண்டுகள் கழித்து 1962 தேர்தலில் ஒரு பள்ளரை நிறுத்தி வெல்லவைத்தார்.
தொகுதிக்கே போகாமல் தானும் வெற்றிபெற்றார்.
சாகும்போது தனது சொத்துகளை மக்களுக்கு எழுதிவைத்தார்.
அதில் 1/3 பங்கு பள்ளர்களுக்கு கிடைத்தது.
இறுதிவரை தேர்தலில் தோல்வியே காணாத தேவர் பள்ளர்கள் கணிசமாக வாழ்ந்த தொகுதியில்தான் மாபெரும் வெற்றிகளை பெற்றார்.
ஒருவேளை பள்ளர் வாக்குகளைக் கவர பிற்காலத்தில் இப்படி மாறியிருக்கலாம் என்கிறார்கள் சிலர்.
ஆனால் இருபது ஆண்டுக்கு முன்பே 1939லேயே மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் வைத்தியநாத ஐயர் மற்றும் (பறையரான) கக்கனுடன் இணைந்து பல பட்டியல் சாதிகளைச் சேர்ந்த மக்களைத் திரட்டி ஆலயநுழைவு நடத்தியவர் தேவர்.
3 அல்லது 4 இடங்களில் மட்டுமே போட்டிபோடும் தேவர் கட்சி அதில் பல சாதியினரையும் நிற்கவைத்தது வரலாறு.
இத்தகைய வரலாறு கொண்ட தேவர் எப்படி சாதிவெறியர் ஆவார்?
தேவரை நாடார்களுக்கு எதிரானவராக சிலர் திரிக்கிறார்கள்.
காமராசரை முதலமைச்சர் ஆவதற்கு தேவர் உடன்படாத காரணம் அவர் படிக்காதவர், இனப்பற்று இல்லாதவர், நேரு குடும்பத்திற்கு விசுவாசமானவர் என்பதால்தான்.
மற்றபடி காமராசர் வளர்ச்சியில் தேவருக்கு குறிப்பிட்ட பங்குண்டு.
காமராசரை முக்குலத்தின் எதிரியாக சிலர் திரிக்கின்றனர்.
தேவர் காலத்தில் காமராசருடன் காங்கிரசில் அவருக்கு பக்கபலமாக பல முக்குலத்தோர் இருந்தனர்.
வணங்காமுடி வைரவத்தேவர், கோபால்சாமி தென்கொண்டார், புதுக்கோட்டை தொண்டைமான், வேதாரண்யம் வேதாசலத்தேவர், திருச்சி அருணாசலத்தேவர், ஆர்.வி.சாமிநாதன், உடையப்பா சிவசுப்பிரமணியத்தேவர், மதுரை சின்னக்கருப்பத்தேவர், என்.எஸ்.வீரபத்திர தேவர், இராமநாதபுரம் சண்முகராஜேசுவர சேதுபதி, அருப்புக்கோட்டை துரைசிங்கத்தேவர், முன்னாள் சபாநாயகர் செல்லப்பாண்டியன், சங்குமுத்து தேவர், டி.என்.அனந்தநாயகி, சாண்டோ சின்னப்பத்தேவர், நடிகர் சிவாஜிகணேசன் போன்றவர்கள் காமராஜருக்கு ஆதரவான முக்குலத்தோர் ஆவர்.
ஆக அன்று நடந்தது இரண்டு கட்சிகளுக்கு இடையேயான மோதல்தான்.
சாதி மோதல் கிடையாது.
அன்று தேவர் சரி.
ஆனால் இன்று மறவர்கள் சரி இல்லை.
தேவர் படத்தை வைத்துக்கொண்டு பள்ளர்களுக்கு எதிராக வெறிபிடித்து அலைவோர் தேவருக்கே களங்கம் கற்பிக்கும் துரோகிகள்.
திராவிடத்தின் சாதிய அரசியலுக்கு பலியாகி இன்று மறவர்களே தேவருடைய கொள்கைகளுக்கு மற்ற எவரையும் விட எதிராக செயல்படுகின்றனர்.
தேவர் தனக்கு குருபூசை கேட்டதும் இல்லை.
தேவர் எளிமையானவர். புகழ்ச்சியை விரும்பாதவர்.
அவரை கடவுள் போல பெரிதாக விழா எடுத்து கொண்டாடவேண்டிய அவசியமும் இல்லை.
தேவர் இறந்து பல ஆண்டு கழித்து தேவருக்கு சிலை நிறுவியதும் குருபூஜை நடத்தவைத்ததும் திராவிட வந்தேறிகள் தமிழர்களை மோதவிட்டு சாதிய அரசியல் செய்யத்தான்.
தேவர் ஒரு மனிதர்.
மாமனிதர். கடவுள் இல்லை.
ஒரு தலைவருக்கு என்ன மரியாதை உண்டோ அதைச் செய்வதில் தவறில்லை.
தேவர் குருபூசை அதற்கு போட்டியாக இமானுவேல் சேகரன் குருபூசை என்று குருபூசைகளின் பெயர்களில் இன்று நடக்கும் கூத்தும் அட்டூழியமும் அலப்பறையும் சாதிவெறியின் வெளிப்பாடு என்பது கண்கூடு.
இன்று குருபூசையில் தேவர் படத்தை சட்டையில் போட்டுக்கொண்டு மூக்குமுட்ட குடித்துவிட்டு நடுரோட்டில் போக்குவரத்தை மறித்து அரிவாள்களுடன் கூட்டமாக கும்மாளம் போடும் இளைஞர்களுக்கு தேவருடைய வாழ்க்கை வரலாறு பற்றி கடுகளவாவது தெரியுமா?
தேவரின் முகம் ஒன்றும் சாதிவெறியின் சின்னம் இல்லை.
ஆனால் இன்று நடைமுறை என்ன?
பள்ளர்கள் பெரிய தகுதி இல்லாத இமானுவேல் சேகரனாரை தூக்கிப்பிடிப்பதையும் அவருக்கு குருபூஜை நடத்துவதையும் கைவிடவேண்டும்.
தேவரையே தலைவராக ஏற்கவும் வேண்டும்.
இதைச் செய்யாத பள்ளர்கள் நன்றிகெட்டவர்கள்.
முக்குலத்தோர் தேவருக்கு குருபூஜை நடத்துவதைக் கைவிடவேண்டும்.
அமைதியான முறையில் அவரவர் ஊர்களில் பலசாதி மக்களுக்கும் தேவர் பற்றி எடுத்துக்கூறி பொதுவான விழாவாக சிறிய அளவில் கொண்டாடவேண்டும்.
தேவர்தான் மேற்கண்ட இரு சமூகத்துக்கும் தலைவர்.
ஏன் தமிழர் அனைவருக்கும் தலைவர்.
ஏன் இந்தியா முழுவதுக்குமான தலைவர்.
இந்தியன் மறந்துவிட்டான்.
தமிழர்கள் மறக்கவில்லை.
மறக்கும்படி செய்யாதீர்கள்.
குருபூசை எனும் பெயரில் நடிகர்களையும் கட்டப்பஞ்சாயத்து ரவுடிகளையும் திராவிட கட்சிகளின் அல்லக்கைகளையும் கூட்டி பெரிய அலப்பறை கொடுத்து பிற தமிழர்கள் தேவரை வெறுக்கும்படி செய்யாதீர்கள்.
தமிழர்களே! தமிழகம் முழுவதும் கிராமம் தோறும் சாதி வேறுபாடு இன்றி தேவர் புகைப்படத்தை வைத்து அவரது பிறந்தநாளைக் கொண்டாடுவோம்.
தேவர் நடத்திய பத்திரிக்கைக்கு கண்ணகி என்றுதான் பெயர்வைத்தார்.
சிந்துசமவெளி நாகரிகம் தமிழருடையது என்றும் தமிழின் சிறப்புகள் பற்றியும் எழுதியுள்ளார்.
தன் வாழ்நாளில் வள்ளலார் வழியை கடைபிடித்துவந்தார்.
உடல்நிலை முடியாத நிலையிலும் ம.பொ.சி நடத்திய எல்லை போராட்டத்தில் கலந்துகொண்டு பேசியும் உள்ளார்.
பர்மா போய் தமிழர்களைச் சந்திக்கும்போது அந்நாட்டு அதிபருக்கு திருக்குறள் நூலை பரிசாக அளித்தார்.
மலையகத் தமிழரை சந்தித்துவிட்டு தமிழகம் வந்தபோது இலங்கை தமிழர்கள் விரைவில் சுதந்திரத்திற்காகப் போராடுவார்கள் என்று அன்றே கூறியுள்ளார்.
ஆக தேவர் ஒரு இனப்பற்றுள்ள தமிழர். அதனால் பெருந்தமிழர் என்ற பட்டத்திற்கு தகுதியானவர்.
வைக்கம் ஆலயநுழைவு போராட்டத்தில் கட்சி பணத்தில் பத்தோடு பதினொன்றாக போய்விட்டு வந்து வைக்கம் வீரர் பட்டம் போட்டுக்கொண்ட,
கீழ்வெண்மணி படுகொலை கூலி உயர்வு கேட்டதால்தான் நடந்தது என்று அறிக்கைவிட்ட,
பறையரை கேவலமாக தொடர்ந்து பேசிவந்த,
ஆங்கிலேயருக்கு கடைசிவரை விசுவாசமாக இருந்த
கன்னட வந்தேறி ஈ.வே.ரா நமக்கு தலைவராம்.
ஆனால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் தொழிலாளருக்கும் முழு இந்திய மக்களுக்கும் இறுதிமூச்சுவரை நன்மை செய்துவந்த நாட்டுப்பற்றாளர், இனப்பற்றாளர், கொடைவள்ளல், தியாகி முத்துராமலிங்கனார் சாதிவெறியராம்.
ஆக ஈ.வே.ராமசாமியை தூக்கி எரிந்துவிட்டு அந்த இடத்தில் முத்துராமலிங்கத் தேவனாரை வைத்துக் கொண்டாடுவது தமிழர் நம் அனைவரின் கடமை ஆகும்.
