142 இனி 139
மலையாள பாம்புக்கு ஓடி ஓடி பால்வார்த்த இளிச்சவாய் தமிழர்களே!
இதோ அது கடித்துவிட்டது!
இன்று முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டம் 139 அடியாகக் குறைக்கப்பட உள்ளது.
முன்பே சொன்னேன் இந்த இனவெறியர்களுக்கு உதவி செய்யாதீர்கள் என்று.
இடுக்கி மாவட்டம் 95% தமிழர் வாழும் பகுதி.
முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ள இடுக்கி மாவட்டமே நமக்கு சொந்தமானதுதான்.
அதை மீட்க களம் இறங்குங்கள்!
ஒரு வாரம் கேரளாவுக்கு செல்லும் உணவை தடுத்து நிறுத்துங்கள் போதும்.
Thursday, 23 August 2018
142 இனி 139
Wednesday, 8 November 2017
சென்னை மாகாணத்தை மொழிவழியாகப் பிரிக்கக்கூடாது - ஈ.வே.ரா
சென்னை மாகாணத்தை மொழிவழியாக பிரிக்கக்கூடாது - ஈ.வே.ரா
"சென்னை மாகாணத்தை நான்கு கூறுகளாக ஆக்க வேண்டு மென்பது கண்டிப்பாக அரசியல் வாழ்வையே தங்கள் ஜீவனமாக, வியாபாரமாக, பதவி- பட்டம்- பணம் சேர்த்தல் முதலிய காரியங்களுக்கு வழியாக வைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்தும் சிலர் தங்கள் நலனுக்காக இதை- இந்தப் பிரிவினையை வேண்டுவார்களானால், வலியுறுத்துவார்களானால் அதற்கு இடம் கொடுப்பது திராவிட கலாச்சாரத்துக்கும் திராவிட சமுதாயத்துக்கும், திராவிடத் தலை மொழியாகிய தமிழுக்கும் தேய்வு- அழிவு ஏற்பட்டு விடுமென்று எச்சரிக்க விரும்புகிறேன்"
- ஈ.வே.ரா விடுதலை 01.08.1948
ஈ.வே.ராமசாமி ஏதோ 'தமிழ்நாடு தமிழருக்கே' என்று முழங்கி தமிழர் உரிமைக்காகப் போராடினார் என்றும்
தனித்தமிழ்நாடு கேட்டார் என்றும் திராவிடவாதிகள் கூறுகிறார்கள்.
ஆனால் அது பொய்.
(தேடுக: தமிழ்நாடு தமிழருக்கே எனும் முழக்கம் வேட்டொலி
தேடுக: ஈ.வே.ரா தனித்தமிழ்நாடு கேட்டாரா? மூன்றுமுறை நிறம் மாறிய பச்சோந்தி வேட்டொலி)
தற்போது மேலும் ஒரு சான்று கிடைத்துள்ளது.
2011 ல் முல்லைப்பெரியாறு அணை பிரச்சனை பெரிய அளவில் வெடித்தது.
அது அமைந்துள்ள இடுக்கி மாவட்டமே (தேவிகுளம் - பீர்மேடு) தமிழர் பெரும்பான்மை மாவட்டம் ஆகும்.
தேனி தமிழரும் இடுக்கி தமிழரும் லட்சக்கணக்கில் திரண்டு இடுக்கி தமிழகத்துடன் இணைய பெரிய அளவில் போராட்டம் நடத்தினர்.
அப்போது தமிழ்தேசியப் பேரியக்கம் தலைவர் திரு.மணியரசன் பல்வேறு தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டார்.
அப்பொது அவர் வெளியிட்ட அறிக்கையில் திராவிடம் பேசுவோர் அன்று முதல் இன்றுவரை தமிழர் இனவுணர்வை திசைமாற்றி எப்படியெல்லாம் இரண்டகம் செய்தனர் என்று விரிவாக கூறியுள்ளார்.
(அவற்றில் மேற்கண்ட சான்று மட்டும் இதுவரை எனக்கு காணக்கிடைக்காத ஒன்று.
அதனால் இங்கே பதிகிறேன்.
இது ' ஈ.வே ரா மண்மீட்பில் உதவினாரா? ' என்ற பதிவுடனும் சேர்க்கப்படும்)
Friday, 23 June 2017
தமிழக எல்லைக்கற்களை பிடுங்கி வீசி கேரள எம்.பி அட்டூழியம்
கம்பம்மெட்டில் தொடரும் பதற்றம் தமிழக எல்லைக்கற்களை பிடுங்கி வீசி அட்டூழியம்
கேரள எம்.பி ஆதரவாளர்கள் அத்துமீறல்
இருமாநில குழு சர்வே செய்து போனமாதம் நட்ட 14 எல்லை கற்களை ரகசியமாகப் பார்வையிட்டார் எம்.பி ஜோய்ஸ் ஜார்ஜ்
பிறகு இன்று அந்த 14 கற்களையும் பிடுங்கி எறிந்தனர் எம்.பி ஜோய்ஸ் ஜார்ஜ் ஆதரவாளர்கள்.
செய்தி: தினகரன் 23.06.2017
தேனி மாவட்டத்தை விழுங்க நினைக்கும் மலையாளிகள்,
என்ன செய்யப்போகிறோம் நாம்?
Thursday, 2 March 2017
தென் கேரளாவில் தமிழர் பகுதிகள் (வரைபடம்)
தென் கேரளாவில் தமிழர் பகுதிகள் (வரைபடம்)
ஆங்கிலேய ஆட்சியின் கீழிருந்த திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் மார்ஷல் நேசமணி கேட்டபகுதிகள் சிவப்பாக குறிக்கப்பட்டுள்ளன.
நெடுமங்காடு 60% தமிழர்கள் வாழ்ந்த பகுதி இதை புள்ளிவிபரங்களில் குறிப்பிட்ட நேசமணி பெரும்பான்மையாக இருந்தாலும் அதனை விட்டுக்கொடுத்தார்.
இதில் தற்போதைய கன்னியாகுமரி வட்டங்கள் மற்றும் திருநெல்வேலிக்கு உள்ளேயும் ஒட்டியும் இருந்த பகுதிகள் மட்டுமே கிடைத்தன.
முல்லைப் பெரியாறு அமைந்துள்ள இடுக்கி மாவட்டம்.
திருவனந்தபுரம் அமைந்துள்ள நெய்யாற்றின்கரை ஆகியன கிடைக்கவில்லை.
30 தமிழர்களுக்கும் மேல் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
3000 பேர் திருநெல்வேலிக்கு அகதிகளாக விரட்டப்பட்டனர்.
1948 முதல் 1956 வரை நேசமணி தலைமையில் நடந்த தீவிரமான அறப்போராட்டங்கள் மற்றும் அவரது தளபதி அப்துல் ரசாக் தமிழகத்து மக்களின் பேராதரவுடன் இராஜாஜி ஜீவானந்தம் ஆகியோரின் ஒத்துழைப்புடன் விளைவாக எடுத்த முயற்சிகள் விளைவாக நியாயமாக கிடைக்கவேண்டிய நிலத்தில் பாதி பகுதிகளாவது தமிழகத்திற்கு கிடைத்தது.
Thursday, 17 November 2016
இனவெறிக்கு இலக்கணம் வரையும் மலையாளிகள்
இனவெறிக்கு இலக்கணம் வரையும் மலையாளிகள்
"தேவிகுளம் பீர்மேடு பகுதி கி.பி.1889 வரை திருவிதாங்கூர் நாட்டைச் சேர்ந்த பகுதியல்ல.
திருவிதாங்கூர் கொச்சி சட்டமன்றத்தில் திரு.நடராஜபிள்ளை தனது அறிக்கையில் பூஞ்சார் ராஜா பாண்டிய மரபினர் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் திரு-கொச்சியின் வரலாற்று ஆசிரியர்கள் பூஞ்சார் மன்னன் பாண்டிய மரபினன் என்றும், அவன் 'மீனாட்சி சுந்தரம்' என்றே ஒப்பமிடுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
பூஞ்சார் மன்னரின் பற்றுச் சீட்டுகள் அனைத்திலும் 'மதுரை மீனாட்சி துணை' என்ற முத்திரை காணப்படுகிறது.
பாண்டிய மன்னரின் கீழ் மதுரை நாயக்கர் ஆண்ட காலத்தில் அவர்களுடைய ஆட்சிக்குட்பட்ட பகுதியாகவே தேவிகுளம், பீர்மேடு இருந்து வந்துள்ளது.
1889வரை திருவிதாங்கூரின் பகுதியே இல்லை என்பது தெள்ளத் தெளிவாகும்.
கண்ணன் தேவன் மலை விளைபொருள் உற்பத்திக் கம்பெனியாரின் முன்னோடிகள் முதலில் 1879இல் பூஞ்சார் இராஜாவுடன் தான் உடன்படிக்கை செய்தனர்.
1889இல் பெரியாறு நீர்த்தேக்கத் திட்டத்தினைச் செயல்படுத்திய போது இந்திய அரசின் செயலாளர் திருவிதாங்கூர் மன்னருடன் ஒப்பந்தம் மேற்கொண்டார்.
இந்த மாற்றம் 1879 முதல் 1889 வரையிலான இடைப்பட்ட காலத்தில் தான் ஏற்பட்டுள்ளது.
அக்கால கட்டத்தில் பூஞ்சார் இராஜாவிடமிருந்து குத்தகை அடிப்படையில் திருவிதாங்கூர் மன்னர் ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தெரிய வருகிறது.
இவ்வாறிருக்க, 1935ம் ஆண்டு வரை தேவிகுளம் பீர்மேடு பகுதிகளுக்குத் திருவிதாங்கூரிலிருந்து சென்று சேர பாதையே இல்லை.
இவ்விவரம் 1951இன் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தின் வழியாக தேவாரம், குமுளி, போடி நாயக்கனூர், கம்பம் மற்றும் சிறுமலைக் கணவாய் வழியாகத்தான் தேவிகுளம் பீர்மேட்டிற்குச் செல்ல முடியும்.
மாநில எல்லை ஆணைக்குழுவானது அப்பகுதியின் மக்கள் 'குடியேறிவர்கள்' என்றும், 'வந்து சென்று போகக் கூடியவர்கள்' என்றும் ஆதாரமற்ற வகையில் தகவல் கூறப்பட்டுள்ளது"
மார்சல் நேசமணி அவர்களின் நாடாளுமன்ற உரை (1955, டிசம்பர் 14,15,16)
ஆக முல்லைப் பெரியாறு அமைந்துள்ள மாவட்டமே தமிழர் பகுதி ஆகும்.
மலையாளிகள் அங்கே சென்றுவர பாதையே 1935ல் தான் போடப்பட்டது.
பூஞ்சார் அரசிடமிருந்து திருவிதாங்கூர் அரசின் கைக்கு முல்லைப்பெரியாறு பகுதி எப்படி மாறியது என்பது உறுதியாகத் தெரியவில்லை.
ஆங்கிலேயர் பூஞ்சார் ராஜாவிடம் போகாமல் தவறுதலாக திருவிதாங்கூருடன் ஒப்பந்தம் போட்டதாகவும் ஊகிக்கலாம்.
தற்போது முல்லைப்பெரியாறு அணை கேரள எல்லைக்குள் இருந்தாலும் அணை தமிழகத்திற்கு சொந்தமாக இருக்கிறது.
முல்லைப்பெரியாறு தமிழர்கள் கையில் இருப்பதைக் காணச்சகியாய மலையாளிகள் ஆங்கிலேயர் காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தத்தை புதுப்பித்து கூடுதல் குத்தகைப் பணமும் நிர்ணயித்துக்கொண்டனர்.
1896 முதல் 1970 வரை தமிழகம் கேரள அரசுக்கு ஏக்கருக்கு 5ரூபாய் என 8100 ஏக்கருக்கு ரூ.40500 கொடுத்துவந்துள்ளது.
1970 ல் ஏக்கருக்கு 30 ரூபாயாக உயர்த்திக்கொண்டது.
ஆங்கிலேயர் காலத்தில் போட்ட 999 ஆண்டுக்கான ஒப்பந்தம் இப்போது செல்லாது என்று மழுப்பும் மலையாளிகள் 1970ல் அவ்வொப்பந்தத்தை தாங்கள் புதுப்பித்ததை மறந்துவிட்டனர்.
ஆக 100 வெள்ளையர்கள் உட்பட 422 பேர் உயிரிழந்து பல இன்னல்களைத் தாங்கி பென்னிகுக் தமிழர்களுக்காக தமிழரை வைத்து தமிழ்பகுதியில் கட்டிய அணைக்கு மலையாளிகள் கப்பம் வாங்குகிறார்கள்.
1976ல் இடுக்கியில் அணையின் நீர் ஓட்டத்திலிருந்து மின்சாரம் எடுக்கும் திட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.
அதற்கு போதுமான தண்ணீர் வரவில்லை.
முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தமிழகத்திற்கு போகும் தண்ணீரை தடுத்து கடலில் விட்டு அதிலிருந்து மின்சாரம் எடுக்கலாம் என்று மலையாளிகள் நினைக்கிறார்கள்.
மலையாள மனோரமாவில் 1978 ல் முல்லைப்பெரியாறு அணைப் பகுதியில் நிலநடுக்கம் வந்ததாக பொய்யான செய்தி வெளியிடப்பட்டது.
முல்லைப்பெரியாறு அணை பலவீனமான இருப்பதாகவும் அது உடைந்தால் பல ஊர்கள் அழியும் என்றும் வதந்தியைப் பரப்பினர்.
பிறகு 1979ல் அணையின் தேக்கும் அளவை 152 அடியிலிருந்து 136 அடியாகக் குறைக்கவைத்தனர்.
அங்கே மலையாள போலீசை காவலுக்கு நிறுத்தி அவர்களுக்கு தமிழகமே சம்பளம் கொடுக்குமாறு செய்தனர்.
தமிழக அரசு 18 கோடி செலவளித்து அணையை பலப்படுத்தும் பணியைத் தொடங்கியது.
மலையாளிகளின் பல்வேறு குடைச்சல்களுக்கு மத்தியில் 1994ல் பலப்படுத்தும் பணி முடிவடைந்தது.
அணை பலமாக இருப்பதாக தமிழக அரசு அறிவித்ததும் மீண்டும் மலையாளிகள் தமது பழைய பொய்பிரச்சாரத்தை ஆரம்பித்தனர்.
அணை நீர்மட்டத்தை உயர்த்துவதை எதிர்த்தனர்.
தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.
2000 ம் ஆண்டு உச்சநீதி மன்றம் அணையை ஆராய ஒரு வல்லுநர் குழு அமைத்தது.
வல்லுநர் குழு அணையை நன்கு ஆராய்ந்து அது பலமாக இருப்பதாக கூறியது.
2006ல் அணை பலமாக இருப்பதாகவும் அணை நீர்மட்டத்தை உயர்த்திக் கொள்ளலாம் என்றும் தீர்ப்பு அளித்தது.
அணை உடைந்தாலும் பெரிய பாதிப்பு ஏற்படாது என்பதை உண்மை.
ஏனென்றால் 8 டி.எம்.சி தண்ணீரை தேக்கும் முல்லைப்பெரியாறு அணை உடைந்தால் அந்த நீர் 70 டி.எம்.சி பிடிக்கும் பெரிய இடுக்கி அணைக்கே தண்ணீர் வந்து சேரும்.
இடையில் மக்கள் வாழும் பகுதி எதுவுமே இல்லை.
அரசியல் சட்டத்தின் 262ஆம் பிரிவுப்படி, இரு மாநிலங்களுக்கு இடையே ஏற்படும் நதிநீர் பிரச்சினைக்குத் தீர்வுகாண சட்டம் கொண்டுவர மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது.
இந்த அதிகாரத்தையே கேள்விக்குறியாக்கும் வகையில் தமது மாநிலத்திற்கு தனியாக “கேரள பாசன மற்றும் நீர் பாதுகாப்பு (திருத்தச்) சட்டம், 2006”, என்ற சட்டத்தை இயற்றினர்.
டேம்999 என்று திரைப்படம் கூட எடுத்து ஊரே வெள்ளத்தில் போவதுபோலக் காட்டினார்கள்.
இடுக்கி தமிழர்களையும் அங்கே வேலைக்கு வரும் தமிழகப் பெண்களையும் கீழ்த்தரமாக நடத்தினர்.
தமிழ்நாடு வாகனங்கள் தாக்கப்பட்டன.
500 தமிழ்ப் பெண்களை சிறைபிடித்து வைத்துக்கொண்டனர்.
தேனி மக்கள் சாலை மறியல் செய்ததும் 'கட்டப்பன' பகுதி இன்ஸ்பெக்டர் ஜிஜிமோன் தமிழ் பெண்களை கொண்டுவந்து ஒப்படைத்தார்.
கேரள எல்லையில் 2011 டிசம்பரில் அரங்கேறிய அராஜகத்தை நேரில் சென்று விசாரித்துத் திரும்பிய 'எவிடன்ஸ்’ அமைப்பின் தலைவர் கதிர், ''ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், குறிப்பாக பெண்கள் மீது ஒரு பெரிய வன்முறை நடத்தப்பட்டு இருக்கிறது.
உயிர் பயம், அவமானம் தரும் அச்சுறுத்தல் எல்லாவற்றையும் தாண்டி எங்களிடம் 37 பேர் வாக்குமூலம் அளித்து இருக்கிறார்கள். கொள்கைகள், சித்தாந்தம் என்றெல்லாம் பேசும் கம்யூனிஸ்டுகளும் காந்தியம் பேசும் காங்கிரஸ்காரர்களுமே இவ்வளவு அக்கிரமங்களையும் செய்திருக்கிறார்கள்.
கேரளக் காவல் துறையும் தமிழகக் காவல் துறையும் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றிருக்கிறார்கள்" என்று கூறியுள்ளார்.
தாக்கப்பட்ட பெண்கள் தேனிக்கு தஞ்சம் வந்தனர்.
அவர்களை தேவாரம் எனுமிடத்தில் தங்கவைத்தனர் தேனி மக்கள்.
தேனி மாவட்டமே முல்லைப்பெரியாறை நம்பி இருக்கிறது.
5 மாவட்டங்களில் 2 லட்சத்து 8,144 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
30 லட்சம் மக்களின் வாழ்வாதாரம் அந்த ஆறை நம்பி இருக்கிறது.
தமிழரின் பஞ்சம் போக்க தன் சொத்துக்களை விற்று அணை கட்டிய மாமனிதர் பென்னி குக் அவர்களுக்கு மண்டபம் கட்டி விழா எடுக்கும் தேனி மக்கள், தன் பிள்ளைகளுக்கு பென்னிகுக் என்ற பெயரைவைக்கும் தேனி தமிழர்கள்,
கேரள அரசின் நடவடிக்கைகளைப் பொறுக்கமுடியாமல் 2011 டிசம்பரில் ஒன்றரை லட்சம் பேர் திரண்டு கேரளாவில் நுழைந்து பெரிய ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தமிழகம் முழுவதும் மலையாள கட்டிடங்கள் தாக்கப்பட்டன.
தமிழக போலீஸ் ஐ.ஜி ராஜேஸ் தாஸ் மற்றும் தமிழக போலீஸ் துணை தலைமை இயக்குனர் ஜார்ஜ் ஆகிய மலையாளிகள் தமிழ் மக்களை கட்டுப்படுத்த எவ்வளவோ முயன்றனர்.
பல இடங்களில் தடியடி நடத்தி கலைத்தனர்.
4000 தமிழக காவலர்கள் எல்லையில் நிறுத்தப்பட்டு மலையாளிகளைப் பாதுகாத்தனர்.
அங்கே பார்வையிட வந்த ஓ.பன்னீர்செல்வத்தை அடித்து விரட்டினர் மக்கள்.
இடுக்கி தமிழர்களும் பெரிய அளவில் திரண்டு தமிழகத்துடன் இணைய ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மலையாளிகள் 2012 சனவரியில் சபரிமலைக்கு போன சாந்தவேலு என்ற தமிழர்மீது வெந்நீர் ஊற்றிக் கொன்றனர்.
தமிழக அரசு தொடுத்த வழக்கில் 136 அடியில் இருந்து முதல்கட்டமாக 142 அடியாகவும், பின்னர் 152 அடியாகவும் உயர்த்தி கொள்ள தமிழகத்துக்கு சாதகமாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
இதை உம்மன்சாண்டி நடக்கவிடவில்லை.
பிணராய் விஜயன் விடுவேன் என்றார்.
ஆனால் பதவிக்கு வந்ததும் மாற்றிப்பேசுகிறார்.
ஆக மலையாளிகள் நீதிமன்றத்தை மதிப்பதேயில்லை.
முல்லைப்பெரியாறின் கதை இவ்வாறிருக்க 1981ல் தமிழகத்தின் எல்லைக்குள் புகுந்து செண்பகவல்லி அணையை உடைத்துவிட்டுச் சென்றது மலையாள வனத்துறை.
சிவகிரி விவசாயிகள் சங்கம் தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டு 8 வார காலத்திற்குள் அணைகட்டித் தர 03.08.2006 அன்று உத்தரவிடப்பட்டது.
பத்து ஆண்டுகளாக அந்த தீர்ப்பை மதிக்கவில்லை மலையாள
அரசு.
உச்சநீதிமன்றமும் ஒன்றும் செய்யவில்லை.
தமிழக திராவிட அரசுகள் என்ன செய்தன தெரியுமா?
செண்பகவல்லி அணை 1773ல் சிவகிரி ஜமீனால் கட்டப்பட்ட அணை ஆகும்.
கேரள வனத்துறை தமிழக எல்லைக்குள் வந்து அணையை உடைத்துவிட்டு போனபோது அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் இதைத் தட்டிக்கேட்கவில்லை.
எப்படி கேட்பார்?
அவர் ஒரு மலையாளி.
முல்லைப் பெரியாறு பிரச்சனையிலேயே அவர் கேரளாவுக்கு சாதகமாகத்தான் நடந்துகொண்டார்.
25.11.1979ல் முல்லைப் பெரியாறு பிரச்சனையைப் பேச தமிழகத்திலிருந்து 47 பேரும் கேரளாவிலிருந்து 47 பேரும் சென்றனர்.
இதில் தமிழகக் குழுவில் 46 மலையாளிகளும் 1 தமிழரும் இடம்பெற்றிருந்தனர்.
அந்த தமிழர் பொதுப்பணித்துறை அமைச்சர் ராஜா முகமது.
அவர் அணை மட்டத்தைக் குறைப்பதை கடுமையாக எதிர்த்துவிட்டு வெளிநடப்பு செய்தார்.
94ல் 93பேர் ஆதரவுடன் முல்லைப்பெரியாறு அணையின் மட்டம் குறைக்கப்பட்டது.
அது அதன்பிறகு உயர்த்தப்படவில்லை.
எம்.ஜி.ஆருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த தெலுங்கரான கருணாநிதி 1987-1991 வரை மலையாளிகளை கெஞ்சிக்கொண்டிருந்தார்.
உடைத்த செண்பகவல்லி அணையை நீங்களே கட்டித்தாருங்கள் என்று.
அதன்பிறகு ஆட்சிக்கு வந்த கன்னடவரான ஜெயலலிதா 5,50,000 ரூபாய் பணம் கொடுத்து கெஞ்சினார்.
பணத்தையும் வாங்கிக்கொண்டு செண்பகவல்லி அணையைக் கட்டித்தரவும் இல்லை மலையாள அரசு.
வாசுதேவநல்லூர் பகுதியில் 15 குளங்கள், சிவகிரி பகுதியில் 33 குளங்கள் நிரம்ப நீராதாரமாகவும்,
சங்கரன்கோயில் வட்டத்தில் 11,000 ஏக்கர் நிலப்பரப்புக்கு பாசன நீரையும், அப்பகுதிக்கு மக்களுக்கு குடிநீரையும் வழங்கி வந்த செண்பகவல்லி தடுப்பணை இன்று இல்லை.
2016 மே மாதம் அணையின் மீதமிருந்த தடுப்புச் சுவரையும் இடித்தது மலையாள அரசு.
இதே போல நெய்யாறு பிரச்சனையும்.
நெய்யாறு தண்ணீரைத் திறந்துவிடவேண்டுமானால் பணம் தரவேண்டும் என்று கேட்டது கேரளா.
1999ல் நெய்யாறு கேரளாவுக்கு மட்டுமானது இருமாநிலத்திற்கும் சொந்தமானது அல்ல என்று அறிக்கவித்தது.
மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட இப்பிரச்சனையில் மத்திய அரசு பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ளுமாறும் தேவைப்பட்டால் மத்திய நீர் ஆணையத்திடம் உதவி கோருமாறும் கூறி 2003ல் நழுவிக்கொண்டது.
2004 லிருந்து ஒரு சொட்டு தண்ணீரை கூட கேரளா திறந்துவிடவில்லை.
2007 ல் கேரளா மீண்டும் பணம் தந்தால் திறந்துவிடுவதாக கூறியது.
நெய்யாற்றின் நீர்பிடிப்புப் பகுதிகளில் 12.90 சதுர கி.மீ தமிழகத்தில் இருக்கிறது.
எனவே இது இருமாநில நதிதான் என்று வாதிட்ட தமிழக அரசு ஒரு புதிய ஒப்பந்தத்தை தயாரித்து 19.05.2009 அன்று கேரள அரசுக்கு அனுப்பியது.
கேரள அரசு பணம் கேட்டு 11.01.2010 அன்று வேறு ஓர் ஒப்பந்தத்தை தயாரித்து தமிழகத்துக்கு அனுப்பியது.
தமிழக அரசு அதை நிராகரித்தது.
பிறகு இருமாநில அதிகாரிகளும் 06.05.2011அன்று திருவனந்தபுரத்தில் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினர்.
கேரளா பணம் தராமல் தண்ணீர் தரமுடியாது என்று மறுத்துவிட்டது.
தமிழக அரசு 30.05.2012 அன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரந்தது.
இன்றுவரை இழுபறி தொடர்கிறது.
அபரிமிதமான நெய்யாற்றுத் தண்ணீர் திருவனந்தபுரத்தை அடுத்த பூவாறு எனும் ஊரில் அரபிக் கடலில் வீணாகக் கலக்கிறது என்பதுதான் வேதனையான உண்மை.
மலையாளிகளின் இனவெறிப்போக்கு இதோடு முடியவில்லை.
கோவை மற்றும் திருப்பூர் மக்களின் குடிநீர் ஆதாரம் மற்றும் பாசனம் பரம்பிக்குளம்- ஆழியாறு திட்டத்தின் (பி.ஆர்.பி) மூலம் வரும் நீரை நம்பியுள்ளது.
இந்த திட்டம் வீணாகக் கடலில் கலக்கும் நீரை தமிழகத்திற்கு திருப்பிவிட 1958ல் போடப்பட்டது.
இத்திட்டத்தில் உள்ள பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம், தூணக்கடவு ஆகிய அணைகள் கேரளாவுக்குள் உள்ளன.
(இவ்வணைகள் இருக்கும் பகுதி அனைத்தும் தமிழகம் இழந்த எல்லைப் பகுதி ஆகும்)
இவ்வணைகளைக் கட்டியது தமிழக அரசே ஆகும்.
இதனை பராமரிக்கும் பொறுப்பு தமிழக அரசிடம் உள்ளது.
தமிழகத்தின் கட்டுப்பாட்டில் கேரளாவிற்குள் இருக்கும் பரம்பிக்குளம் அணைக்கு பராமரிப்பு பணிக்காகச் செல்லும் தமிழக ஊழியர்களை அவமானப்படுத்துவது சிறைபிடித்து வைப்பது திருப்பியனுப்புவது என கேரள அரசு செய்யும் அட்டூழியம் சொல்லிமாளாது.
40 ஆறுகள் ஓடும் கேரளாவில் பஞ்சமோ தண்ணீர் பற்றாக்குறையோ இல்லை.
8% தண்ணீர் மட்டுமே மலையாள மக்களால் பயன்படுத்தப்படுகிறது.
உச்சநீதி மன்றத்தை மதிக்காத, அப்பாவி தமிழ் மக்களின் உணவையும் தண்ணீரையும்
பிடுங்கும் மலையாள அரசு, இதன் மூலம் தமிழர்கள் மீது கொண்டுள்ள இனப்பகையைத்தான் காட்டுகிறது.
மலையாளிகளின் உணவுத்தேவை 90% தமிழகத்தை நம்பி உள்ளது.
ஒரு வாரம் உணவு செல்வதைத் தடுத்தால் கேரளா பணிந்துவிடும்.
தமிழக முதல்வர் நினைத்தால் இது முடியும்.
ஆனால் தமிழகத்தை தமிழர் ஒருவர் ஆளவே முடிவதில்லையே!
Tuesday, 21 June 2016
முல்லை பெரியாறு - சுருக்கமான வரலாறு
முல்லை பெரியாறு - சுருக்கமானவரலாறு
தேனி நண்பர் செந்தில் ஒரு பத்திரிகையின்விமர்சனத்தில் எழுதியதை இங்கெ தருகிறேன்
கேரளா புதிய அணை கட்டி இதே அளவு தண்ணீர் தருவதாகச் சொல்வதில் இருக்கும் சதி பற்றி விவரமாக அகில இந்தியஅளவில் எடுத்துச் சொல்ல வேண்டும்.
முல்லைப்பெரியாறு அணை கட்டப்பட்டது பிரிட்டிஷ் ஆண்டகாலத்தில் - 1895ல்.
அப்போது இந்த அணை கட்டும்இடம் திருவாங்கூர் சமஸ்தானத்தின்கட்டுப்பாட்டில் இருந்ததாககருதப்பட்டது
(உண்மை அது அல்ல.
தமிழ் நாட்டின்வரையரைக்குள் தான் இருந்தது.
இதனை கண்ணன் தேவன் காபி கம்பெனி போட்ட மற்றொரு ஒப்பந்தத்தை வைத்து நிறுவியுள்ளார் மார்சல் நேசமணி)
எனவே பிரிட்டிஷார்- திருவாங்கூர்மஹாராஜாவுடன் இந்த அணை கட்டப்படும், மற்றும்அதன் நீர்ப்பிடிப்பு பகுதியான சுமார் 8000ஏக்கர் நிலத்தை 999ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்து (ஆண்டுக்கு ரூபாய்40,000/- குத்தகைப் பணம் )
இந்த அணையை 1887ல்கட்ட ஆரம்பித்து 1895ல் கட்டிமுடித்தனர்.
இதில் வேடிக்கை என்னவென்றால், இதில்அடிப்படையான பெரியாறு உற்பத்தியாவது தமிழ்நாட்டில் தான்.
அணையும் தமிழ்நாட்டிற்கு சொந்தமானது.
அதை நிர்வகிப்பதும்தமிழ்நாடுதான்.
ஆனால் இடம் மட்டும்கேரளாவிற்கு சொந்தம்.
அதிகாரம்செலுத்துவதும் அவர்களே !
இந்த அணையின் உயரம்- கொள்ளளவு -152 அடி.
இதன் மூலம் பாசனம் பெறும்நிலம் – சுமார் 2,08,000 ஏக்கர்.
மதுரை, தேனி,சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 4மாவட்டங்களைச்சேர்ந்த 10 லட்சம் விவசாயிகள் பாசனத்திற்கும்,
60 லட்சம் மக்கள் குடிநீருக்கும் இந்தஅணையை நம்பி இருக்கிறார்கள்.
இந்தஅணை பறிக்கப்பட்டால் இத்தனை இடங்களும்பாலைவனங்கள் ஆகும்.
இத்தனை ஜனங்களும்பிழைப்பு பறிபோய் பிச்சைக்காரர்கள் ஆவார்கள்.
பிரச்சினை ஆரம்பித்தது எப்படி ?
கேரளா, இதற்கு சுமார் 50 கிலோமீட்டர் கீழே,
இடுக்கியில் 1976ல் ஒரு அணையும் நீர்மின்நிலையமும் கட்டியது.
பின்னர் தான்ஆரம்பித்தன அத்தனை தொல்லைகளும்.
பெரியாறு அணையின் மொத்த கொள்ளளவே 15.66 டிஎம்சி தான்.
அதிலும் சுமார் 10டிஎம்சியை தான் பயன்படுத்த முடியும்.
(104அடி வரை டெட் ஸ்டோரேஜ்) ஆனால் இடுக்கி இதைப்போல் 7 மடங்கு பெரியது.
கொள்ளளவு 70டிஎம்சி.
பெரிய அணையைக்கட்டிவிட்டார்களே தவிர அது நிரம்பும்வழியாகக் காணோம்.
3 வருடங்கள் பொறுத்துப்பார்த்தார்கள்.
பெரியாறு வருடாவருடம்நிரம்பிக் கொண்டு இருந்தது.
ஆனால்இடுக்கி நிரம்பவே இல்லை.
அப்போது போடப்பட்டசதித்திட்டம் தான் -பெரியாறு அணைக்கு ஆபத்து என்கிற குரல் -கூக்குரல்.
சுண்ணாம்பு அணை உடைந்து விடும்.
அதிலிருந்து வெளிவரும் நீரால் 35 லட்சம் மக்கள்செத்துப் போவார்கள்.
எனவே உடனடியாக புதியஅணை கட்டுவதே தீர்வு !
புதிய அணையினால்அவர்களுக்கு என்ன லாபம் ?
மேலே இருக்கும்பழைய அணையை இடிப்பதால்,நீர்பிடிப்பு பகுதியிலிருந்து அத்தனை நீரும்நேராக இடுக்கிக்கு வந்து அதை நிரப்பும்.
அவர்கள் அதை வழியவிட்டு மின்சாரம் தயாரிக்கலாம்.
அதான்தமிழ்நாட்டுக்கு இதே அளவு தண்ணீர் தருகிறேன்என்று சொல்கிறார்களே என்று உடனே மக்கள்கேட்கிறார்க்ள்.
அங்கே தான் இருக்கிறது அவர்கள்சாமர்த்தியம்.
பெரியாறு அணை இருப்பது கடல்மட்டத்திலிருந்து 2709 முதல் 2861 அடி உயரம்வரை. இதிலிருந்து மலையைக்குடைந்து குகைப்பாதை வழியாக தண்ணீர் தமிழ்நாட்டை நோக்கி கொண்டுவரப்படுகிறது.
புதியஅணையை கட்டப்போவது 1853 அடி உயரத்தில்.
இந்தஅணை கட்டப்படும் உயரத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீரைத் திருப்பி விடமுடியாது.
நமக்கு பெரியாறு அணையிலிருந்து நீர்எடுத்து வரும் பாதை புதிய அணை அமையவுள்ள இடத்தை விட உயரத்தில்ஆரம்பித்து,
ஒரு கிலோ மீட்டர்பயணத்திற்கு பிறகு 5704 அடி நீளமுள்ளமலையைக் குடைந்த குகை வழியாகதிசை மாறி வந்து பின்னர் கீழே வைகையில்கலக்கிறது.
அணையைக் கட்டிய பிறகு, இவர்கள்உண்மையாகவே விரும்பினாலும் நீரைத் திருப்பமுடியாது.
மேலும் புதியஅணையிலிருந்து ஆண்டு முழுவதும் நீர்மின்சாரம்உற்பத்தி செய்ய நீரை வெளியேற்றிக்கொண்டே இருக்கப்போகிறார்கள்.
எனவே அணை எப்போதுமே முழுவதுமாகநிரம்பி இருக்காது.
தமிழ் நாட்டிற்கு தண்ணீர்நிச்சயமாக கிடைக்காது.
புதிய அணையினால்தமிழ்நாட்டிற்கு பயன் இல்லை.
60 லட்சம் மக்களின் உணவும் தண்ணீரும் பிடுங்கப்பட்ட கேரளாவுக்கு மின்சாரமாக போகவுள்ளது.
ஆனால் பழைய அணை சுண்ணாம்பு அணை -
எப்போது வேண்டுமானாலும் உடைந்து விடும்.
35லட்சம் மக்கள் செத்துவிடுவார்கள்என்கிறார்களே - பயம் உண்மையானது போல் தோன்றுகிறதே ?
அயோக்கியத்தனம்.
வடிகட்டிய
அயோக்கியத்தனம்.
முதலாவதாக -பெரியாறு அணை உடைந்தால் தண்ணீர் - மலைப்பள்ளத்தாக்குகள் வழியாகப்பாய்ந்து - நேராககீழே உள்ள (7மடங்கு பெரிய) இடுக்கி அணையைத் தான் வந்தடையும்.
பெரியாறு அணையிலிருந்து அதன் முழு நீரும்(10 டிஎம்சி) ஒரே நேரத்தில் வெளியேறினாலும்,நேராக அதைப்போல் 7 மடங்கு கொள்ளளவு உடையஇடுக்கி அணையைத் தான் வந்தடையபோகிறது.
இடையில் எந்த நாடு, நகரமும் இல்லை.
35 லட்சம் மக்கள் சாவார்கள் என்பதும் பொய்.
வாதத்திற்காகஇடுக்கி அணை ஏற்கெனவே நிரம்பி இருந்தாலும் வெளியேறும் நீர்பெரியாறு அணையிலிருந்து இடுக்கி வந்து சேர4 மணி நேரம் ஆகும். அதற்குள்ளாகஇடுக்கியிலிருந்து தேவையானநீரை வெளியேற்றி விட முடியும் !
எனவே வெள்ளத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்கிற பேச்சே அபத்தமானது.
இரண்டாவதாக 1976ல் இடுக்கி அணையை கட்டினார்கள்.
1979ல்பெரியாறு அணை உடையப்போகிறது என்று குரல்எழுப்பினார்கள்.
பயத்தைக் கிளப்பினார்கள்.
சுப்ரீம் கோர்ட் வரை போனார்கள்.
2000ஆவது ஆண்டு சுப்ரீம் கோர்ட் நிபுணர்குழுவை அமைத்தது.
நிபுணர் குழுவின்ஆலோசனைப்படி அணை அனைத்து விதங்களிலும்பலப்படுத்தப்பட்டது.
கேரளா சொல்வது போல்இது வெறும் சுண்ணாம்பு அணை அல்ல.
ஏற்கெனவேயே முதல் தடவையாக 1933ல் 40 டன்சிமெண்ட் கலவை சுவரில்துளையிட்டு உள்ளே செலுத்தப்பட்டது.
மீண்டும்1960ல் 500 டன் சிமெண்ட் உள் செலுத்தப்பட்டது.
2000ஆவது ஆண்டு சுப்ரீம் கோர்ட் சென்ற பிறகு -நிபுணர் குழுவின் ஆலோசனைப்படி - லேடஸ்ட்தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி, கேபிள்ஆன்கரிங் முறையில் அணையுள் கான்க்ரீட்கலவை செலுத்தப்பட்டது.
வெளிப்புறமாக ஒரு கவசம் போல்,
கிட்டத்தட்ட புது அணையே போல், கான்க்ரீட் போடப்பட்டு, ஒரு புத்தம்புதியகான்க்ரீட் அணையே உருவாக்கப்பட்டு விட்டது.
கீழே உள்ள வரைபடத்தைப் பார்த்தால் நன்றாகப்புரியும்.
இதன் பிறகு தான், 27/02/2006 அன்று, சுப்ரீம் கோர்ட், இனி அணைக்கு எந்தஆபத்தும் இல்லை என்பதை நிபுணர் குழுவின் மூலம் உறுதி செய்துகொண்டு - 156 அடிவரை தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம்என்று அனுமதியே கொடுத்தது.
விட்டார்களா நமது மலையாளிகள்?
மீண்டும்சதி.
ஒரு மாதத்திற்குள்ளாக, கேரளசட்டமன்றத்தில் புதிய சட்டம் இயற்றி, சுப்ரீம்கோர்ட் உத்திரவையே செல்லாது என்று அறிவித்துவிட்டார்கள்.
வழக்கம் போல் தமிழன் இளிச்சவாயன் ஆகி விட்டான்.
மீண்டும் கோர்ட் பின்னால் அலைகிறோம்.
இப்போது,இன்னும் வழக்கு சுப்ரீம் கோர்ட்டின் பரிசீலனையில்இருக்கும்போதே தீர்ப்பு அவர்களுக்கு பாதகமாகஇருக்குமோ என்கிற தவிப்பில் மீண்டும் நாடகம்ஆடுகிறார்கள்.
அணைக்கு ஆபத்து புதியஅணை கட்ட வேண்டும் என்று.
பாராளுமன்றத்தில்குரல் கொடுக்கிறார்கள்.
பிரதமரை போய்ப்பார்க்கிறார்கள்.
உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.
பந்த் நடத்துகிறார்கள்.
இப்போதைக்கு அவர்கள்குரல் தான் பலமாகக் கேட்கிறது.
வெளிமக்கள்அவர்கள் பக்கம் நியாயம்இருக்கிறது என்று நினைக்கத்தொடங்கி விட்டார்கள். தமிழ்நாடு ஏமாந்தது போதும்.
உடனடித் தேவை பலமானபதில் தாக்குதல்.
தமிழகம் முழுவதும்சேர்ந்து
பதிலடி கொடுக்க வேண்டும்.
(18 ஆகஸ்ட் 2012)