Tuesday 21 June 2016

முல்லை பெரியாறு - சுருக்கமான வரலாறு


முல்லை பெரியாறு - சுருக்கமானவரலாறு

தேனி நண்பர் செந்தில் ஒரு பத்திரிகையின்விமர்சனத்தில் எழுதியதை இங்கெ தருகிறேன்

கேரளா புதிய அணை கட்டி இதே அளவு தண்ணீர் தருவதாகச் சொல்வதில் இருக்கும் சதி பற்றி விவரமாக அகில இந்தியஅளவில் எடுத்துச் சொல்ல வேண்டும்.

முல்லைப்பெரியாறு அணை கட்டப்பட்டது பிரிட்டிஷ் ஆண்டகாலத்தில் - 1895ல்.
அப்போது இந்த அணை கட்டும்இடம் திருவாங்கூர் சமஸ்தானத்தின்கட்டுப்பாட்டில் இருந்ததாககருதப்பட்டது
(உண்மை அது அல்ல.
தமிழ் நாட்டின்வரையரைக்குள் தான் இருந்தது.
இதனை கண்ணன் தேவன் காபி கம்பெனி போட்ட மற்றொரு ஒப்பந்தத்தை வைத்து நிறுவியுள்ளார் மார்சல் நேசமணி)

எனவே பிரிட்டிஷார்- திருவாங்கூர்மஹாராஜாவுடன் இந்த அணை கட்டப்படும், மற்றும்அதன் நீர்ப்பிடிப்பு பகுதியான சுமார் 8000ஏக்கர் நிலத்தை 999ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்து (ஆண்டுக்கு ரூபாய்40,000/- குத்தகைப் பணம் )
இந்த அணையை 1887ல்கட்ட ஆரம்பித்து 1895ல் கட்டிமுடித்தனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால், இதில்அடிப்படையான பெரியாறு உற்பத்தியாவது தமிழ்நாட்டில் தான்.
அணையும் தமிழ்நாட்டிற்கு சொந்தமானது.
அதை நிர்வகிப்பதும்தமிழ்நாடுதான்.
ஆனால் இடம் மட்டும்கேரளாவிற்கு சொந்தம்.
அதிகாரம்செலுத்துவதும் அவர்களே !

இந்த அணையின் உயரம்- கொள்ளளவு -152 அடி.
இதன் மூலம் பாசனம் பெறும்நிலம் – சுமார் 2,08,000 ஏக்கர்.
மதுரை, தேனி,சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 4மாவட்டங்களைச்சேர்ந்த 10 லட்சம் விவசாயிகள் பாசனத்திற்கும்,
60 லட்சம் மக்கள் குடிநீருக்கும் இந்தஅணையை நம்பி இருக்கிறார்கள்.
இந்தஅணை பறிக்கப்பட்டால் இத்தனை இடங்களும்பாலைவனங்கள் ஆகும்.
இத்தனை ஜனங்களும்பிழைப்பு பறிபோய் பிச்சைக்காரர்கள் ஆவார்கள்.

பிரச்சினை ஆரம்பித்தது எப்படி ?

கேரளா, இதற்கு சுமார் 50 கிலோமீட்டர் கீழே,
இடுக்கியில் 1976ல் ஒரு அணையும் நீர்மின்நிலையமும் கட்டியது.
பின்னர் தான்ஆரம்பித்தன அத்தனை தொல்லைகளும்.

பெரியாறு அணையின் மொத்த கொள்ளளவே 15.66 டிஎம்சி தான்.
அதிலும் சுமார் 10டிஎம்சியை தான் பயன்படுத்த முடியும்.
(104அடி வரை டெட் ஸ்டோரேஜ்) ஆனால் இடுக்கி இதைப்போல் 7 மடங்கு பெரியது.
கொள்ளளவு 70டிஎம்சி.

பெரிய அணையைக்கட்டிவிட்டார்களே தவிர அது நிரம்பும்வழியாகக் காணோம்.
3 வருடங்கள் பொறுத்துப்பார்த்தார்கள்.
பெரியாறு வருடாவருடம்நிரம்பிக் கொண்டு இருந்தது.
ஆனால்இடுக்கி நிரம்பவே இல்லை.

அப்போது போடப்பட்டசதித்திட்டம் தான் -பெரியாறு அணைக்கு ஆபத்து என்கிற குரல் -கூக்குரல்.

சுண்ணாம்பு அணை உடைந்து விடும்.
அதிலிருந்து வெளிவரும் நீரால் 35 லட்சம் மக்கள்செத்துப் போவார்கள்.
எனவே உடனடியாக புதியஅணை கட்டுவதே தீர்வு !
புதிய அணையினால்அவர்களுக்கு என்ன லாபம் ?
மேலே இருக்கும்பழைய அணையை இடிப்பதால்,நீர்பிடிப்பு பகுதியிலிருந்து அத்தனை நீரும்நேராக இடுக்கிக்கு வந்து அதை நிரப்பும்.
அவர்கள் அதை வழியவிட்டு மின்சாரம் தயாரிக்கலாம்.

அதான்தமிழ்நாட்டுக்கு இதே அளவு தண்ணீர் தருகிறேன்என்று சொல்கிறார்களே என்று உடனே மக்கள்கேட்கிறார்க்ள்.
அங்கே தான் இருக்கிறது அவர்கள்சாமர்த்தியம்.
பெரியாறு அணை இருப்பது கடல்மட்டத்திலிருந்து 2709 முதல் 2861 அடி உயரம்வரை. இதிலிருந்து மலையைக்குடைந்து குகைப்பாதை வழியாக தண்ணீர் தமிழ்நாட்டை நோக்கி கொண்டுவரப்படுகிறது.
புதியஅணையை கட்டப்போவது 1853 அடி உயரத்தில்.
இந்தஅணை கட்டப்படும் உயரத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீரைத் திருப்பி விடமுடியாது.

நமக்கு பெரியாறு அணையிலிருந்து நீர்எடுத்து வரும் பாதை புதிய அணை அமையவுள்ள இடத்தை விட உயரத்தில்ஆரம்பித்து,
ஒரு கிலோ மீட்டர்பயணத்திற்கு பிறகு 5704 அடி நீளமுள்ளமலையைக் குடைந்த குகை வழியாகதிசை மாறி வந்து பின்னர் கீழே வைகையில்கலக்கிறது.

அணையைக் கட்டிய பிறகு, இவர்கள்உண்மையாகவே விரும்பினாலும் நீரைத் திருப்பமுடியாது.
மேலும் புதியஅணையிலிருந்து ஆண்டு முழுவதும் நீர்மின்சாரம்உற்பத்தி செய்ய நீரை வெளியேற்றிக்கொண்டே இருக்கப்போகிறார்கள்.
எனவே அணை எப்போதுமே முழுவதுமாகநிரம்பி இருக்காது.
தமிழ் நாட்டிற்கு தண்ணீர்நிச்சயமாக கிடைக்காது.
புதிய அணையினால்தமிழ்நாட்டிற்கு பயன் இல்லை.
60 லட்சம் மக்களின் உணவும் தண்ணீரும் பிடுங்கப்பட்ட கேரளாவுக்கு மின்சாரமாக போகவுள்ளது.

ஆனால் பழைய அணை சுண்ணாம்பு அணை -
எப்போது வேண்டுமானாலும் உடைந்து விடும்.
35லட்சம் மக்கள் செத்துவிடுவார்கள்என்கிறார்களே - பயம் உண்மையானது போல் தோன்றுகிறதே ?
அயோக்கியத்தனம்.
வடிகட்டிய
அயோக்கியத்தனம்.

முதலாவதாக -பெரியாறு அணை உடைந்தால் தண்ணீர் - மலைப்பள்ளத்தாக்குகள் வழியாகப்பாய்ந்து - நேராககீழே உள்ள (7மடங்கு பெரிய) இடுக்கி அணையைத் தான் வந்தடையும்.

பெரியாறு அணையிலிருந்து அதன் முழு நீரும்(10 டிஎம்சி) ஒரே நேரத்தில் வெளியேறினாலும்,நேராக அதைப்போல் 7 மடங்கு கொள்ளளவு உடையஇடுக்கி அணையைத் தான் வந்தடையபோகிறது.

இடையில் எந்த நாடு, நகரமும் இல்லை.
35 லட்சம் மக்கள் சாவார்கள் என்பதும் பொய்.

வாதத்திற்காகஇடுக்கி அணை ஏற்கெனவே நிரம்பி இருந்தாலும் வெளியேறும் நீர்பெரியாறு அணையிலிருந்து இடுக்கி வந்து சேர4 மணி நேரம் ஆகும். அதற்குள்ளாகஇடுக்கியிலிருந்து தேவையானநீரை வெளியேற்றி விட முடியும் !

எனவே வெள்ளத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்கிற பேச்சே அபத்தமானது.

இரண்டாவதாக 1976ல் இடுக்கி அணையை கட்டினார்கள்.
1979ல்பெரியாறு அணை உடையப்போகிறது என்று குரல்எழுப்பினார்கள்.
பயத்தைக் கிளப்பினார்கள்.
சுப்ரீம் கோர்ட் வரை போனார்கள்.
2000ஆவது ஆண்டு சுப்ரீம் கோர்ட் நிபுணர்குழுவை அமைத்தது.
நிபுணர் குழுவின்ஆலோசனைப்படி அணை அனைத்து விதங்களிலும்பலப்படுத்தப்பட்டது.

கேரளா சொல்வது போல்இது வெறும் சுண்ணாம்பு அணை அல்ல.
ஏற்கெனவேயே முதல் தடவையாக 1933ல் 40 டன்சிமெண்ட் கலவை சுவரில்துளையிட்டு உள்ளே செலுத்தப்பட்டது.
மீண்டும்1960ல் 500 டன் சிமெண்ட் உள் செலுத்தப்பட்டது.
2000ஆவது ஆண்டு சுப்ரீம் கோர்ட் சென்ற பிறகு -நிபுணர் குழுவின் ஆலோசனைப்படி - லேடஸ்ட்தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி, கேபிள்ஆன்கரிங் முறையில் அணையுள் கான்க்ரீட்கலவை செலுத்தப்பட்டது.

வெளிப்புறமாக ஒரு கவசம் போல்,
கிட்டத்தட்ட புது அணையே போல், கான்க்ரீட் போடப்பட்டு, ஒரு புத்தம்புதியகான்க்ரீட் அணையே உருவாக்கப்பட்டு விட்டது.

கீழே உள்ள வரைபடத்தைப் பார்த்தால் நன்றாகப்புரியும்.
இதன் பிறகு தான், 27/02/2006 அன்று, சுப்ரீம் கோர்ட், இனி அணைக்கு எந்தஆபத்தும் இல்லை என்பதை நிபுணர் குழுவின் மூலம் உறுதி செய்துகொண்டு - 156 அடிவரை தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம்என்று அனுமதியே கொடுத்தது.

விட்டார்களா நமது மலையாளிகள்?
மீண்டும்சதி.
ஒரு மாதத்திற்குள்ளாக, கேரளசட்டமன்றத்தில் புதிய சட்டம் இயற்றி, சுப்ரீம்கோர்ட் உத்திரவையே செல்லாது என்று அறிவித்துவிட்டார்கள்.
வழக்கம் போல் தமிழன் இளிச்சவாயன் ஆகி விட்டான்.
மீண்டும் கோர்ட் பின்னால் அலைகிறோம்.

இப்போது,இன்னும் வழக்கு சுப்ரீம் கோர்ட்டின் பரிசீலனையில்இருக்கும்போதே தீர்ப்பு அவர்களுக்கு பாதகமாகஇருக்குமோ என்கிற தவிப்பில் மீண்டும் நாடகம்ஆடுகிறார்கள்.
அணைக்கு ஆபத்து புதியஅணை கட்ட வேண்டும் என்று.

பாராளுமன்றத்தில்குரல் கொடுக்கிறார்கள்.
பிரதமரை போய்ப்பார்க்கிறார்கள்.
உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.
பந்த் நடத்துகிறார்கள்.
இப்போதைக்கு அவர்கள்குரல் தான் பலமாகக் கேட்கிறது.
வெளிமக்கள்அவர்கள் பக்கம் நியாயம்இருக்கிறது என்று நினைக்கத்தொடங்கி விட்டார்கள். தமிழ்நாடு ஏமாந்தது போதும்.
உடனடித் தேவை பலமானபதில் தாக்குதல்.
தமிழகம் முழுவதும்சேர்ந்து
பதிலடி கொடுக்க வேண்டும்.
(18 ஆகஸ்ட் 2012)

No comments:

Post a Comment