Showing posts with label முல்லைப் பெரியாறு. Show all posts
Showing posts with label முல்லைப் பெரியாறு. Show all posts

Wednesday, 24 October 2018

இரண்டு புதிய அணைகள் - முல்லைப்பெரியாறு அணை டம்மியாக்கப்பட்டு உடைக்கப்படும்

முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாக மேலும் இரண்டு அணை
- அனுமதி வாங்கியது கேரளா

கடந்த ஆகஸ்ட் மாதம் கேரளாவில் நடந்த வரலாறு காணாத மழை ஏற்படுத்திய சுவடுகள் இன்னும் நினைவை விட்டு நீங்கவில்லை.
அதற்குக் காரணமாக மலையைக் குடைந்து கட்டடங்கள், சாலைகள் எனப் பலவற்றை அமைத்திருந்ததும், கிட்டத்தட்ட 43 அணைகள் கட்டியிருந்ததையும் சுற்றுச் சூழலியலாளர்கள் சுட்டிக் காட்டினர்.
இதனால் பெருமளவில் நிலச்சரிவு ஏற்பட்டதையும், வீடுகள் இடிந்ததையும் சுட்டிக் காட்டினர்.
ஆனால், கேரள அரசோ முல்லைப் பெரியாறு அணையின்மீது குற்றம் சாட்டியது.
இதற்குப் பல எதிர்ப்புகள் எழுந்தபோதும், தனது திசையைத் திருப்பாமல் முல்லைப் பெரியாறு அணையின் கீழே மேலும் ஒரு புதிய அணையைக் கட்ட முடிவெடுத்துள்ளது.

இந்தப் புதிய அணை கேரள மாநிலம், பீர்மேடு தாலுகா, மஞ்சுமலை கிராமத்தில் அமையவிருக்கிறது.
இந்த இடம் வண்டிப் பெரியாரிலிருந்து 8 கி.மீ தொலைவில் இருக்கிறது.

இதற்கான சுற்றுச்சூழல் அறிக்கை தயாரிக்க, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தை நாடி அனுமதியும் வாங்கிவிட்டது கேரளா.

இதனை அவ்வளவு எளிதில் கடந்து போய்விட முடியாது.
2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பை கொஞ்சம் திருப்பிப் பார்க்க வேண்டும்.
"அணை தொடர்பான சிக்கல்களுக்குத் தமிழகமும், கேரளாவும் ஒரு மனதுடன் முடிவெடுத்து நீதிமன்றத்தை அணுகலாம்.
கேரளா தனியாக அணையைக் கட்ட விரும்பினால், தமிழக அரசின் ஒப்புதல் கடிதத்தைப் பெற்று, அதைச் சுற்றுச்சூழல் அனுமதி கடிதத்தோடு இணைக்க வேண்டும்" எனத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், இதற்கு நேர்மாறாக கேரளா தனித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் விண்ணப்பித்து சுற்றுச்சூழல் தாக்கல் அறிக்கையைத் தயார் செய்ய அனுமதி வாங்கியிருக்கிறது கேரளா.

இதுபற்றிப் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பொறியாளர் சுந்தர்ராஜனிடம் பேசினோம்.
"தமிழக அரசு உடனடியாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும்.
முல்லைப் பெரியாறு அணைக்குக் கீழே புதிய அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை செய்ய கேரள ந அரசுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கியிருப்பது மிகப்பெரும் சூழலியல் பேரிடராகும்.

கேரளத்தில் அண்மையில் ஏற்பட்ட மழை பொழிவினால் மிகப்பெரும் சேதம் ஏற்பட்டு ஒட்டுமொத்த மாநிலமே நீரில் மிதந்ததற்கு மேற்குத் தொடர்ச்சி மலைகளை குடைந்து பல சுரங்கங்கள், சாலைகள், ரிசார்ட்டுகள் என அமைத்ததே முக்கியக் காரணமாகும்.

மேலும் தேவையே இல்லாத இடங்களில் மின்சார உற்பத்திக்காக அணைகள் கட்டியதும் இப்பேரழிவுக்கு முக்கியக் காரணமாகும்.
உலக நாடுகள் பலவும் இப்பிரச்னையை உணர்ந்து பல ஆண்டுகளுக்குமுன் கட்டிய அணைகளை இடித்து வருகின்றன.

இதுமட்டுமல்லாமல் அணைகள் கட்டுவதால் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக உள்ளது எனப் (reservoir induced seismicity ) பல ஆய்வுகளும் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் முல்லைப் பெரியாறு போன்ற சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இன்னொரு அணையைக் கட்டுவது அறிவார்ந்த செயல் கிடையாது.

அதுமட்டுமன்றி முல்லைப் பெரியாறு அணை தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய 5 மாவட்டங்களின் 2 லட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்களின் நீர்த்தேவையினையும், பல கோடி மக்களின் குடிநீர்த் தேவையினையும் பூர்த்தி செய்து வருகிறது.
இந்நிலையில் புதிய அணை கட்டினால் தமிழகத்துக்கு ஒரு சொட்டுத் தண்ணீர் கூட கிடைக்காமல் போய்விடும்.

மேலும் 2014-ம் ஆண்டு, முல்லைப் பெரியாறு வழக்கில் ஆர்.எம்.லோதா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பில் 'இரண்டு மாநிலங்களும் ஒருமனதாக புதிய அணை கட்ட முடிவு எடுத்து நீதிமன்றத்தை அணுக வேண்டும் எனவும், கேரள அரசு அணை கட்ட விரும்பினால் தமிழக அரசின் ஒப்புதல் கடிதம் பெற்று அதைச் சுற்றுச்சூழல் அனுமதிக்கான விண்ணப்பத்தோடு இணைத்துத்தான் விண்ணப்பிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
தற்போது மத்திய சுற்றுச்சூழல்துறை வழங்கியிருக்கும் இந்த முதற்கட்ட அனுமதி வெளிப்படையான நீதிமன்ற அவமதிப்பாகும்.
தமிழக மக்களின் நலன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு உடனடியாக மத்திய சுற்றுச்சூழல்துறையின் அனுமதியை எதிர்த்து தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு தொடர வேண்டும் எனப் பூவுலகின் நண்பர்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் தற்போது இருக்கும் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து 1,200 அடி கீழ்த்திசையில் புதிய அணை அமைக்கப்படவுள்ளதால் நிச்சயமாக தமிழகத்துக்கு நீர் கிடைப்பதற்கான வாய்ப்பு இல்லை.

அணையின் உயரம் 174.6 அடி, நீளம் 1,214 அடி.
இதற்குத் துணை அணையாக 82 அடியில் இன்னொரு அணையும் கட்டப்படவுள்ளது.
திட்டத்தின் மொத்த மதிப்பீடு 663 கோடியாகும்.
இந்த அணை கட்டுவதால் 0.017 டி.எம்.சி நீரை மட்டுமே அதிகமாக தேக்கி வைக்க முடியும்.
0.502 சதுர கிலோமீட்டர் மட்டுமே நீர்ப்பிடிப்பு பகுதி அதிகரிக்கும்.

ஆனால் முல்லைப் பெரியாறு புலிகள் சரணாலயத்தின் 123 ஏக்கர் வனப்பகுதி நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது.

இந்தச் சிறிய அளவு நன்மைக்காக மிகப்பெரும் சூழலியல் சீர்கேட்டை அனுமதிக்க முடியாது.
புதிய அணை கட்டி முடித்த பின்னர் பழைய அணையானது பகுதி பகுதியாகச் செயலிழக்கம் செய்யப்பட்டு உடைக்கப்படும் எனவும்,
அனைத்து அனுமதிகளும் பெறப்பட்ட 4 ஆண்டுகளில் புதிய அணை கட்டி முடிக்கத் திட்டமிட்டிருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது.
தமிழக அரசு உடனடியாக நீதிமன்றத்தை நாடி இத்திட்டத்தைத் தடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்" என்றார்.

கேரளா, "முல்லைப் பெரியாறு அணையின் வாழ்நாள் முடிந்துவிட்டது,
அண்மைக் காலமாக கேரளாவில் அதிகமான நில அதிர்வுகள் ஏற்படுகின்றன,
அதனால் புதிய அணை தேவைப்படுகிறது,
புதிய அணை கட்டினால் மக்களைப் பாதிப்பிலிருந்து காத்துக் கொள்ள முடியும்" என்று தனது கோரிக்கையை முன் வைத்துள்ளது.

இதற்கு முன்னர் முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்த நிபுணர் குழு அணை முழுப் பலத்தோடு இருக்கிறது என்று அறிக்கை கொடுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

கேரளா, தமிழக அரசோடு ஆலோசிக்காமல் இரண்டு அணைகளைக் கட்ட சுற்றுச்சூழல் தாக்கீடு அறிக்கை தயாரிக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி வாங்கிவிட்டது.

இதில் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து, முல்லைப் பெரியாறு அணையைக் காக்க வேண்டும் என்பதே சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது.

இனி முடிவு தமிழக அரசின் கைகளில்...!

நன்றி: Tamilri.com (TRI)

Thursday, 23 August 2018

142 இனி 139

142 இனி 139

மலையாள பாம்புக்கு ஓடி ஓடி பால்வார்த்த இளிச்சவாய் தமிழர்களே!

இதோ அது கடித்துவிட்டது!

இன்று முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டம் 139 அடியாகக் குறைக்கப்பட உள்ளது.

முன்பே சொன்னேன் இந்த இனவெறியர்களுக்கு உதவி செய்யாதீர்கள் என்று.

இடுக்கி மாவட்டம் 95% தமிழர் வாழும் பகுதி.

முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ள இடுக்கி மாவட்டமே நமக்கு சொந்தமானதுதான்.

அதை மீட்க களம் இறங்குங்கள்!

ஒரு வாரம் கேரளாவுக்கு செல்லும் உணவை தடுத்து நிறுத்துங்கள் போதும்.

Saturday, 18 August 2018

வெள்ளத்திலும் கரையாத மலையாள இனவெறி

வெள்ளத்திலும் கரையாத மலையாள இனவெறி
-----------------------
முல்லைப் பெரியாறுக்கு குறுக்கே சட்டவிரோதமாக 3 அணைகள்!

வெள்ளத்திற்கு காரணம் முல்லைப் பெரியாறு என்ற பொய்ப்பிரச்சாரம் !

  அணை உடையுமென ஊடகங்கள் பயமுறுத்தல் !

தமிழக எல்லைக்குள் அணையை உடைத்து மின்சார ஆலைக்கு தண்ணீர் ஏற்பாடு!

முல்லைப் பெரியாறு தேக்க நீர்மட்டத்தைக் குறைக்க வழக்கு!

வெள்ளத்திலும் கரையாத மலையாள இனவெறி!
--------------
தலைப்பு: மலையாளத்துரோகம் ஓயாதா?!

பதிவர்கள்:
தேனியிலிருந்து ச.அன்வர் மற்றும் எஸ்.ஆர்.சக்கரவர்த்தி

பொறுமையாகத்தான் இருக்கிறோம்...

எதுவும் பேசிவிடக்கூடாது...

அப்பாவிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்...

உயிர்ச்சேதமும் பொருட்சேதமும் அதிக அளவில் இருக்கிறது...

மழையும் நின்றபாடில்லை என்பதால் அளவுகடந்த பொறுமையோடு அமைதிகாக்கிறோம்...

ஆலுவாவையும் எர்ணாகுளத்தையும் தண்ணீர் சூழ முல்லைப்பெரியாறு அணையில் திறந்துவிடப்பட்ட தண்ணீரே காரணம் என்று சகட்டுமேனிக்கு விமர்சிக்கும் மலையாள இனவெறிக் கும்பல்களை கிழித்து தொங்கவிட ரொம்ப நேரமாகாது....

ஆனாலும் நடப்பது என்ன....?

Malayala varthaikal என்கிற மலையாள செய்திச்சேனலில் தொடர்ந்து முல்லைப்பெரியாறு அணை உடையப்போகிறது என செய்தி போட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

Shanis india என்கிற சேனலிலோ பிரபல முன்னறிவிப்பாளர் நாஸ்டர்டாமே 2020 ம் ஆண்டு ஜீலை 6,7,8 ஆகிய தேதிகளில் முல்லைப்பெரியாறு அணை உடையும் என்று சொல்லியிருக்கிறாராம்.

இன்னொரு பேப்பயலோ breaking mullaiperiyar in hd என்று அணை உடைந்து போகுமாறு கிராபிக்ஸ் செய்து காட்சிப்படுத்தியிருக்கிறான்.

பீர்மேடு சட்டமன்ற உறுப்பினர் பிஜீமோளும்
தேவிகுளத்து ராஜேந்திரனும்
உடும்பஞ்சோலை எம்.எம்.மணியும் எரிகிற தீயில் எண்ணெய் வார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

இதோ உடையப்போகிறது அணை...
அதோ உடையப்போகிறது என்று இந்த அரைவேக்காடுகள் ஊளையிட ஆரம்பித்து 38 ஆண்டுகள் முடியப்போகிறது.

ஆனால் ஒரு சிறு கீறல்கூட இன்றுவரை விழவில்லை.

இதற்கிடையில் நேற்று முன்தினம் இடுக்கியைச்சேர்ந்த ரசூல் என்கிற அறிவாளி நேராக உச்சநீதிமன்றம் சென்று அணையின் நீர்மட்டத்தை 142 லிருந்து 139 ஆக குறைக்கவேண்டும் என்று மனுப்போட்டு வெற்றியும் பெற்றிருக்கிறார்.

இந்த மனுமீது தீர்ப்பளித்த நீதியரசர் தீபக் மிஸ்ரா மற்றும் இந்து மல்ஹோத்ரா அடங்கிய குழுவின் வழிகாட்டுதல்படி நீர்மட்டத்தை குறைப்பது குறித்து தமிழக-கேரள அரசின் தலைமைச்செயலாளர்களுடன் முல்லைப்பெரியாறின் பேரிடர் மேலாண்மைக்குழு உடனடியாக ஆய்வுசெய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது.

கண்டிப்பாக தீர்ப்பு அவர்களுக்கு சாதகமாகவே வர வாய்ப்புள்ளது.

மலையாளிகளின் வஞ்சகத்திற்கு ஒரு எல்லையே கிடையாதா என மனம் கொதிக்கிறது.

முல்லைப் பெரியாறு அணைக்கு வரக்கூடிய தண்ணீரை மறித்து இடுக்கி அணைக்கு கொண்டு செல்வதற்காக இதே மலையாளிகள் 1971 லிருந்து 1984 வரை மூன்று அணைகளைக்கட்டியதை வசதியாக மறந்துவிட்டார்கள்.

கட்ச் அணை, சபரிகிரி அணை, ப்ளீச்சிங் அணை என்கிற மூன்று அணைகளும் முல்லைப்பெரியாறை மறித்து கட்டிய அணைகளாகும்.

மேற்கண்ட இந்த மூன்று அணைகளும் கடந்த ஜூலை இறுதியிலேயே நிரம்பிவிட்டது.

ஆனால் முல்லைப்பெரியாறு 142 அடியை எட்டியது ஆகஸ்ட் 15 ம் தேதிதான்.
ஜீலையிலேயே மேற்கண்ட மூன்று அணைகளிலிருந்தும் உபரி நீரை திறக்க ஆரம்பித்து விட்டார்கள்.
அதனால்தான் முல்லைப்பெரியாறு அணையில் நீர் திறக்காமலேயே இடுக்கி அணை தன் முழுக்கொள்ளளவை எட்டியது.

ஆகஸ்ட் 15 ல் தான் பெரியாறு அணை திறக்கப்பட்டது.
ஆனால் ஆலுவாவையும் எர்ணாகுளத்தையும் நெடும்பாசேரி விமான நிலையத்தையும் வெள்ளம் சூழ்ந்தது ஆகஸ்ட் 6.
மறக்க வேண்டாம்.

மேற்கண்ட மூன்று அணைகளில் திறக்கப்பட்ட உபரிநீர் வண்டிப்பெரியாறு இரும்புபாலத்தின் கீழே கரைபுரண்டு ஜூலை 20 முதல் கரைபுரண்டு ஓட ஆரம்பித்தது பிஜீமோள் கண்களுக்கு தெரியவில்லையா.

இதற்கெல்லாம் மேலாக ஆனையிறங்கல் அணை நீர், குளமாவு அணை நீர், செருதோணி அணை நீர், கல்லாற்றில் பெருக்கெடுத்து ஓடும் நீர், பாம்பனாறு சுரங்கம் வழியாக செல்லும் நீர், மாட்டுப் பெட்டி மற்றும் குண்டல அணைகளிலிருந்து வெளியேறும் நீர் என கிட்டத்தட்ட எண்பதாயிரம் கனஅடி தண்ணீர் இடுக்கியை முற்றுகையிட்டதாலேயே இடுக்கி அணை நிரம்பியது.

மிகத்தந்திரமாக மலையாள அரசியல்வாதிகள் செய்த இந்த செயல்களே இன்றைக்கு அவர்களுக்கு எதிராக திரும்பியிருக்கிறது.

தமிழக எல்லைக்குள் வாசுதேவநல்லூர் அருகே இருந்த செண்பகவல்லி அம்மன் கோவில் அணைக்கட்டை உடைத்து அதையும் இடுக்கி அணைக்கு கொண்டுவந்து சேர்த்தவர்கள்தான்,
இன்றைக்கு யோக்கியர்கள் போல வேசமிட்டுக்கொண்டு நடிக்கிறார்கள்.

முதல்வர் பினராயி விஜயனின் தடிப்போ திலகனின் நடிப்பைத்தாண்டி உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

முல்லைப்பெரியாறு அணையில் திறக்கப்படும் நீரால் நாற்பது லட்சம் மக்கள் மாண்டுபோவார்கள் என பொய்ப்பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டு களரி ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.

அட முட்டாள்களே...!

முல்லைப்பெரியாறு நீர் பள்ளத்தாக்கில் பாயும் ஒரு ஆறு என்பது ஏன் உங்கள் மண்டைகளுக்கு உறைப்பதில்லை.

பெரியாற்றில் திறந்துவிடப்படும் நீர் புல்மேடு, வல்லக்கடவு, வண்டிப்பெரியாறு, உப்புத்துறை, தேங்காய்க்கல், பசுமலை, நேரிகுளம் வழியாக இடுக்கி அணைக்கு செல்கிறது.

வழிநெடுகிலும் பெரியாற்று நீரால் எவருக்கும் துளி அளவு பாதிப்பில்லை என்று தெரிந்தும் மலையாள வெறியர்கள் முல்லைப்பெரியாறை குறிவைக்க காரணம் இடுக்கி அணையின் மூலம் வரும் 780 மெகாவாட் மின்சாரமே.

ஆகவே மலையாள வெறியர்களே முல்லைப்பெரியாறு அணையை உடைக்கும் முன்பு கேரள அரசு சட்டவிரோதமாக கட்டியிருக்கும் கட்ச் அணை சபரிகிரி அணை மற்றும் பிளீச்சிங் அணைகளை இடித்து தரைமட்டமாக்குங்கள்.

ஆலுவாவும் எர்ணாகுளமும் தண்ணீரில் மூழ்கக்காரணம் இந்த மூன்று அணைகளிலிருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர்தான்.

அதிலும் இந்த ஏசியாநெட் சேனல்கார பொறுக்கிகளின் அடாவடியும் மலையாள மனோரமா என்கிற மஞ்சள் பத்திரிக்கை நடத்துகின்ற மாமாக்கள் செய்கிற அட்டகாசமும் கொஞ்சநஞ்சமல்ல.

மழை வெள்ள சேதத்திற்கு நிவாரணம் தேடச்சொன்னால் மானங்கெட்டவனுக முல்லைப்பெரியாறை உடைக்கணும்கிறான்.

இனி பொறுப்பதற்கில்லை.
மலையாள துரோகங்களை இனி சகிக்கமுடியாது.
யூடியூபில் முல்லைப்பெரியாறு அணையைப்பற்றி தவறாக பிரச்சாரம் செய்தால் முதலில் செருப்பால் அடிப்போம்.
பின்னர் உச்சநீதிமன்றம் செல்வோம்.

பி. கு-
இதைப் படித்த பிறகும் "ஐயைய்யோ கேரளா முங்குதே" எவனாவது முனங்கினா
அவனுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
-------------

படம்: தமிழகத்திலிருந்து கேரளா நோக்கி செல்லும் பேரியாறு நீரோட்டத்தைத் தடுத்து தமிழகத்திற்கே திருப்பும் முல்லைப்பெரியாறு அணையின் மாதிரி வடிவம்

சாகும்போதும் தமிழனைச் சீரழிப்பான் மலையாளி

சாகும்போதும் தமிழனைச் சீரழிப்பான் மலையாளி

முல்லைப்பெரியாறு அணை பலமாக உள்ளது.
இது 100% உண்மை.

அது பலவீனமாக உள்ளது என்ற பொய்யை மலையாளிகள்,
பிரியங்கா பொண்ணு 'மன்னவன் பேரைச் சொல்லி' என்று பாடியதை விட அதிக தடவை கூறிவிட்டார்கள்.

முதலில் ஆய்வு நடந்து அணை பலமாக உள்ளது உறுதிசெய்யப்பட்டு
பிறகும் தமிழக அரசு பல கோடி செலவழித்து அணையை மேலும் பலப்படுத்தி
மீண்டும் ஆய்வுக்குழு பலத்தை உறுதி செய்து அறிக்கை தந்தும்
அணை நீர்மட்டத்தை 155 க்கு மேலே போக அனுமதி அளிக்கமாட்டோம் என்று ஒற்றைக்காலில் நிற்கிறான் மலையாளி.

40 ஆண்டுகள் உருண்டோடி விட்டன.
மலையாளிகளில் மனிதநேயர் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை.

ஒரு பேச்சுக்கு பூகம்பம் வந்து அணை உடைகிறது என்றே வைத்துக்கொள்வோம்,
சுற்றிலும் மலையாளிகளின் சொகுசு விடுதிகளைத் தவிர எந்த குடியிருப்புப் பகுதியும் கிடையாது.
எனவே எந்த உயிரிழப்பும் ஏற்படாது.

நீர் நேரடியாக இடுக்கி அணைக்கு வரும்.
இடுக்கி அணை மூன்று முல்லைப் பெரியாறு அணைகளுக்கு சமம்.
அவ்வளவு நீரை சேமிக்கலாம்.
அணை உடைந்து இடுக்கிக்கு நீர் வந்து சேருமுன் சரியாகத் திட்டமிட்டால் முல்லைப் பெரியாறு முழு கொள்ளளவையும் சமாளிக்கமுடியும்.

இப்போது மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் கேரளா முழுவதும் பாதிக்கப்பட்டு 200 பேர் வரை இறந்துள்ளனர்.
காசர்கோடு தவிர அத்தனை கேரள மாவட்டங்களிலும் வெள்ள அபாயம் என அறிவிப்பு நடைமுறையில் உள்ளது.

இந்த இக்கட்டான நிலையிலும்
முல்லைப்பெரியாறு அணையின் தேக்கும் மட்டத்தை 142 ஆக குறைக்க வழக்கு போட்டுள்ளான் ஒரு மலையாளி.

அதாவது தான் சாகும் நிலையிலும் தமிழனுக்குக் கேடு செய்வதை மலையாளி கைவிடவில்லை.

தெலுங்கனும் கன்னடனும் தண்ணீரை மறித்து அவனுடைய விவசாயத்திற்கு பயன்படுத்த நினைக்கிறான்.
தன் மக்கள் வயிறுமுட்ட 6 வேளை சாப்பிட தமிழனின் சோற்றைப் பிடுங்குகிறான்.

ஆனால் மலையாளி தண்ணீரை மறுப்பது முழுக்க முழுக்க தனது இனவெறியைத் தீர்த்துக்கொள்ள மட்டுமே!

அணைகள் இருப்பது அனைத்துமே தமிழர்களின் பகுதிகள்.
தமிழ்நாட்டுக்குச் சேரவேண்டிய பகுதிகள்.
அந்த எல்லைப் பகுதியை ஆக்கிரமித்து அங்கே உள்ள அணைகளை மூடி இனவெறி அரிப்பைத் தீர்த்துக் கொள்கிறான்.

முல்லைப்பெரியாறு அணை இல்லையென்றால் தண்ணீரை இடுக்கி அணைக்குக் கொண்டுவந்து அதைக் கடலில் விட்டு அதிலிருந்து கரண்ட் எடுக்கமுடியும்.
இதுதான் உண்மையான காரணம்.

தமிழ் மக்களின் வயிற்றில் அடித்து மின்சாரம் எடுப்பது எந்த வகையில் நியாயம் என்று "மலையாள சகோதரர்களுக்கு" உதவச் சொல்லும் "மனிதநேயப் போராளிகள்" சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மனிதநேயம் காட்ட மலையாளிகள் ஒன்றும் மனிதர்கள் இல்லை.

மலையாளிகள் இன்று தனி இனம்.
அவர்களிடம் உள்ள தமிழ் எச்சங்களை வைத்துக்கொண்டு அவர்களை பாதித் தமிழர்களாகப் பார்ப்பது முட்டாள்த்தனம்.

மலையாளிகள் மற்ற எவரையும் விட தமிழர்களுக்கு எதிரானவர்கள்.

கேரளாவிடம் இழந்த பகுதிகளை மீட்பதுடன்,
மலையாளிகளுக்கு உணவு ஏற்றுமதி செய்வதை நிறுத்துவதும் இதற்கான நிரந்தரத் தீர்வு ஆகும்.

Thursday, 2 March 2017

தென் கேரளாவில் தமிழர் பகுதிகள் (வரைபடம்)

தென் கேரளாவில் தமிழர் பகுதிகள் (வரைபடம்)

 ஆங்கிலேய ஆட்சியின் கீழிருந்த திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் மார்ஷல் நேசமணி கேட்டபகுதிகள் சிவப்பாக குறிக்கப்பட்டுள்ளன.

நெடுமங்காடு 60% தமிழர்கள் வாழ்ந்த பகுதி இதை புள்ளிவிபரங்களில் குறிப்பிட்ட நேசமணி பெரும்பான்மையாக இருந்தாலும் அதனை விட்டுக்கொடுத்தார். 

இதில் தற்போதைய கன்னியாகுமரி வட்டங்கள் மற்றும் திருநெல்வேலிக்கு உள்ளேயும் ஒட்டியும் இருந்த பகுதிகள் மட்டுமே கிடைத்தன.

முல்லைப் பெரியாறு அமைந்துள்ள இடுக்கி மாவட்டம்.

திருவனந்தபுரம் அமைந்துள்ள நெய்யாற்றின்கரை ஆகியன கிடைக்கவில்லை.

 30 தமிழர்களுக்கும் மேல் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

3000 பேர் திருநெல்வேலிக்கு அகதிகளாக விரட்டப்பட்டனர்.

1948 முதல் 1956 வரை நேசமணி தலைமையில் நடந்த தீவிரமான அறப்போராட்டங்கள் மற்றும் அவரது தளபதி அப்துல் ரசாக் தமிழகத்து மக்களின் பேராதரவுடன் இராஜாஜி ஜீவானந்தம் ஆகியோரின் ஒத்துழைப்புடன்  விளைவாக எடுத்த முயற்சிகள் விளைவாக நியாயமாக கிடைக்கவேண்டிய நிலத்தில் பாதி பகுதிகளாவது தமிழகத்திற்கு கிடைத்தது.

Thursday, 17 November 2016

இனவெறிக்கு இலக்கணம் வரையும் மலையாளிகள்

இனவெறிக்கு இலக்கணம் வரையும் மலையாளிகள்

"தேவிகுளம் பீர்மேடு பகுதி கி.பி.1889 வரை திருவிதாங்கூர் நாட்டைச் சேர்ந்த பகுதியல்ல.
திருவிதாங்கூர் கொச்சி சட்டமன்றத்தில் திரு.நடராஜபிள்ளை தனது அறிக்கையில் பூஞ்சார் ராஜா பாண்டிய மரபினர் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் திரு-கொச்சியின் வரலாற்று ஆசிரியர்கள் பூஞ்சார் மன்னன் பாண்டிய மரபினன் என்றும், அவன் 'மீனாட்சி சுந்தரம்' என்றே ஒப்பமிடுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
பூஞ்சார் மன்னரின் பற்றுச் சீட்டுகள் அனைத்திலும் 'மதுரை மீனாட்சி துணை' என்ற முத்திரை காணப்படுகிறது.
பாண்டிய மன்னரின் கீழ் மதுரை நாயக்கர் ஆண்ட காலத்தில் அவர்களுடைய ஆட்சிக்குட்பட்ட பகுதியாகவே தேவிகுளம், பீர்மேடு இருந்து வந்துள்ளது.
1889வரை திருவிதாங்கூரின் பகுதியே இல்லை என்பது தெள்ளத் தெளிவாகும்.
கண்ணன் தேவன் மலை விளைபொருள் உற்பத்திக் கம்பெனியாரின் முன்னோடிகள் முதலில் 1879இல் பூஞ்சார் இராஜாவுடன் தான் உடன்படிக்கை செய்தனர்.
1889இல் பெரியாறு நீர்த்தேக்கத் திட்டத்தினைச் செயல்படுத்திய போது இந்திய அரசின் செயலாளர் திருவிதாங்கூர் மன்னருடன் ஒப்பந்தம் மேற்கொண்டார்.
இந்த மாற்றம் 1879 முதல் 1889 வரையிலான இடைப்பட்ட காலத்தில் தான் ஏற்பட்டுள்ளது.
அக்கால கட்டத்தில் பூஞ்சார் இராஜாவிடமிருந்து குத்தகை அடிப்படையில் திருவிதாங்கூர் மன்னர் ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தெரிய வருகிறது.
இவ்வாறிருக்க, 1935ம் ஆண்டு வரை தேவிகுளம் பீர்மேடு பகுதிகளுக்குத் திருவிதாங்கூரிலிருந்து சென்று சேர பாதையே இல்லை.
இவ்விவரம் 1951இன் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தின் வழியாக தேவாரம், குமுளி, போடி நாயக்கனூர், கம்பம் மற்றும் சிறுமலைக் கணவாய் வழியாகத்தான் தேவிகுளம் பீர்மேட்டிற்குச் செல்ல முடியும்.
மாநில எல்லை ஆணைக்குழுவானது அப்பகுதியின் மக்கள் 'குடியேறிவர்கள்' என்றும், 'வந்து சென்று போகக் கூடியவர்கள்' என்றும் ஆதாரமற்ற வகையில் தகவல் கூறப்பட்டுள்ளது"

மார்சல் நேசமணி அவர்களின் நாடாளுமன்ற உரை (1955, டிசம்பர் 14,15,16)

ஆக முல்லைப் பெரியாறு அமைந்துள்ள மாவட்டமே தமிழர் பகுதி ஆகும்.
மலையாளிகள் அங்கே சென்றுவர பாதையே 1935ல் தான் போடப்பட்டது.
பூஞ்சார் அரசிடமிருந்து திருவிதாங்கூர் அரசின் கைக்கு முல்லைப்பெரியாறு பகுதி எப்படி மாறியது என்பது உறுதியாகத் தெரியவில்லை.
ஆங்கிலேயர் பூஞ்சார் ராஜாவிடம் போகாமல் தவறுதலாக திருவிதாங்கூருடன் ஒப்பந்தம் போட்டதாகவும் ஊகிக்கலாம்.

தற்போது முல்லைப்பெரியாறு அணை கேரள எல்லைக்குள் இருந்தாலும் அணை தமிழகத்திற்கு சொந்தமாக இருக்கிறது.

முல்லைப்பெரியாறு தமிழர்கள் கையில் இருப்பதைக் காணச்சகியாய மலையாளிகள் ஆங்கிலேயர் காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தத்தை புதுப்பித்து கூடுதல் குத்தகைப் பணமும் நிர்ணயித்துக்கொண்டனர்.
1896 முதல் 1970 வரை தமிழகம் கேரள அரசுக்கு ஏக்கருக்கு 5ரூபாய் என 8100 ஏக்கருக்கு ரூ.40500 கொடுத்துவந்துள்ளது.
1970 ல் ஏக்கருக்கு 30 ரூபாயாக உயர்த்திக்கொண்டது.
ஆங்கிலேயர் காலத்தில் போட்ட 999 ஆண்டுக்கான ஒப்பந்தம் இப்போது செல்லாது என்று மழுப்பும் மலையாளிகள் 1970ல் அவ்வொப்பந்தத்தை தாங்கள் புதுப்பித்ததை மறந்துவிட்டனர்.

ஆக 100 வெள்ளையர்கள் உட்பட 422 பேர் உயிரிழந்து பல இன்னல்களைத் தாங்கி பென்னிகுக் தமிழர்களுக்காக தமிழரை வைத்து தமிழ்பகுதியில் கட்டிய அணைக்கு மலையாளிகள் கப்பம் வாங்குகிறார்கள்.

1976ல் இடுக்கியில் அணையின் நீர் ஓட்டத்திலிருந்து மின்சாரம் எடுக்கும் திட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.
அதற்கு போதுமான தண்ணீர் வரவில்லை.
முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தமிழகத்திற்கு போகும் தண்ணீரை தடுத்து கடலில் விட்டு அதிலிருந்து மின்சாரம் எடுக்கலாம் என்று மலையாளிகள் நினைக்கிறார்கள்.

மலையாள மனோரமாவில்  1978 ல் முல்லைப்பெரியாறு அணைப் பகுதியில் நிலநடுக்கம் வந்ததாக பொய்யான செய்தி வெளியிடப்பட்டது.
முல்லைப்பெரியாறு அணை பலவீனமான இருப்பதாகவும் அது உடைந்தால் பல ஊர்கள் அழியும் என்றும் வதந்தியைப் பரப்பினர்.
பிறகு 1979ல் அணையின் தேக்கும் அளவை 152 அடியிலிருந்து 136 அடியாகக் குறைக்கவைத்தனர்.
அங்கே மலையாள போலீசை காவலுக்கு நிறுத்தி அவர்களுக்கு தமிழகமே சம்பளம் கொடுக்குமாறு செய்தனர்.

தமிழக அரசு 18 கோடி செலவளித்து அணையை பலப்படுத்தும் பணியைத் தொடங்கியது.
மலையாளிகளின் பல்வேறு குடைச்சல்களுக்கு மத்தியில் 1994ல் பலப்படுத்தும் பணி முடிவடைந்தது.

அணை பலமாக இருப்பதாக தமிழக அரசு அறிவித்ததும் மீண்டும் மலையாளிகள் தமது பழைய பொய்பிரச்சாரத்தை ஆரம்பித்தனர்.
அணை நீர்மட்டத்தை உயர்த்துவதை எதிர்த்தனர்.
தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.
2000 ம் ஆண்டு உச்சநீதி மன்றம் அணையை ஆராய ஒரு வல்லுநர் குழு அமைத்தது.
வல்லுநர் குழு அணையை நன்கு ஆராய்ந்து அது பலமாக இருப்பதாக கூறியது.
2006ல் அணை பலமாக இருப்பதாகவும் அணை நீர்மட்டத்தை உயர்த்திக் கொள்ளலாம் என்றும் தீர்ப்பு அளித்தது.

அணை உடைந்தாலும் பெரிய பாதிப்பு ஏற்படாது என்பதை உண்மை.
ஏனென்றால் 8 டி.எம்.சி தண்ணீரை தேக்கும் முல்லைப்பெரியாறு அணை உடைந்தால் அந்த நீர் 70 டி.எம்.சி பிடிக்கும் பெரிய இடுக்கி அணைக்கே தண்ணீர் வந்து சேரும்.
இடையில் மக்கள் வாழும் பகுதி எதுவுமே இல்லை.

அரசியல் சட்டத்தின் 262ஆம் பிரிவுப்படி, இரு மாநிலங்களுக்கு இடையே ஏற்படும் நதிநீர் பிரச்சினைக்குத் தீர்வுகாண சட்டம் கொண்டுவர மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது.
இந்த அதிகாரத்தையே கேள்விக்குறியாக்கும் வகையில் தமது மாநிலத்திற்கு தனியாக “கேரள பாசன மற்றும் நீர் பாதுகாப்பு (திருத்தச்) சட்டம், 2006”, என்ற சட்டத்தை இயற்றினர்.

டேம்999 என்று திரைப்படம் கூட எடுத்து ஊரே வெள்ளத்தில் போவதுபோலக் காட்டினார்கள்.

இடுக்கி தமிழர்களையும் அங்கே வேலைக்கு வரும் தமிழகப் பெண்களையும் கீழ்த்தரமாக நடத்தினர்.
தமிழ்நாடு வாகனங்கள் தாக்கப்பட்டன.
500 தமிழ்ப் பெண்களை சிறைபிடித்து வைத்துக்கொண்டனர்.
தேனி மக்கள் சாலை மறியல் செய்ததும் 'கட்டப்பன' பகுதி இன்ஸ்பெக்டர் ஜிஜிமோன் தமிழ் பெண்களை கொண்டுவந்து  ஒப்படைத்தார்.

கேரள எல்லையில்  2011 டிசம்பரில் அரங்கேறிய அராஜகத்தை நேரில் சென்று விசாரித்துத் திரும்பிய 'எவிடன்ஸ்’ அமைப்பின் தலைவர் கதிர், ''ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், குறிப்பாக பெண்கள் மீது ஒரு பெரிய வன்முறை நடத்தப்பட்டு இருக்கிறது.
உயிர் பயம், அவமானம் தரும் அச்சுறுத்தல் எல்லாவற்றையும் தாண்டி எங்களிடம் 37 பேர் வாக்குமூலம் அளித்து இருக்கிறார்கள். கொள்கைகள், சித்தாந்தம் என்றெல்லாம் பேசும் கம்யூனிஸ்டுகளும் காந்தியம் பேசும் காங்கிரஸ்காரர்களுமே இவ்வளவு அக்கிரமங்களையும் செய்திருக்கிறார்கள்.
கேரளக் காவல் துறையும் தமிழகக் காவல் துறையும் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றிருக்கிறார்கள்" என்று கூறியுள்ளார்.

தாக்கப்பட்ட பெண்கள் தேனிக்கு தஞ்சம் வந்தனர்.
அவர்களை தேவாரம் எனுமிடத்தில் தங்கவைத்தனர் தேனி மக்கள்.

தேனி மாவட்டமே முல்லைப்பெரியாறை நம்பி இருக்கிறது.
5 மாவட்டங்களில் 2 லட்சத்து 8,144 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
30 லட்சம் மக்களின் வாழ்வாதாரம் அந்த ஆறை நம்பி இருக்கிறது.

தமிழரின் பஞ்சம் போக்க தன் சொத்துக்களை விற்று அணை கட்டிய மாமனிதர் பென்னி குக் அவர்களுக்கு மண்டபம் கட்டி விழா எடுக்கும் தேனி மக்கள், தன் பிள்ளைகளுக்கு பென்னிகுக் என்ற பெயரைவைக்கும் தேனி தமிழர்கள்,
கேரள அரசின் நடவடிக்கைகளைப் பொறுக்கமுடியாமல் 2011 டிசம்பரில் ஒன்றரை லட்சம் பேர் திரண்டு கேரளாவில் நுழைந்து பெரிய ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தமிழகம் முழுவதும் மலையாள கட்டிடங்கள் தாக்கப்பட்டன.

தமிழக போலீஸ் ஐ.ஜி ராஜேஸ் தாஸ் மற்றும் தமிழக போலீஸ் துணை தலைமை இயக்குனர் ஜார்ஜ் ஆகிய மலையாளிகள் தமிழ் மக்களை கட்டுப்படுத்த எவ்வளவோ முயன்றனர்.
பல இடங்களில் தடியடி நடத்தி கலைத்தனர்.
4000 தமிழக காவலர்கள் எல்லையில் நிறுத்தப்பட்டு மலையாளிகளைப் பாதுகாத்தனர்.
அங்கே பார்வையிட வந்த ஓ.பன்னீர்செல்வத்தை அடித்து விரட்டினர் மக்கள்.
இடுக்கி தமிழர்களும் பெரிய அளவில் திரண்டு தமிழகத்துடன் இணைய ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மலையாளிகள் 2012 சனவரியில் சபரிமலைக்கு போன சாந்தவேலு என்ற தமிழர்மீது வெந்நீர் ஊற்றிக் கொன்றனர்.

தமிழக அரசு தொடுத்த வழக்கில் 136 அடியில் இருந்து முதல்கட்டமாக 142 அடியாகவும், பின்னர் 152 அடியாகவும் உயர்த்தி கொள்ள தமிழகத்துக்கு சாதகமாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
இதை உம்மன்சாண்டி நடக்கவிடவில்லை.
பிணராய் விஜயன் விடுவேன் என்றார்.
ஆனால் பதவிக்கு வந்ததும் மாற்றிப்பேசுகிறார்.
ஆக மலையாளிகள் நீதிமன்றத்தை மதிப்பதேயில்லை.

முல்லைப்பெரியாறின் கதை இவ்வாறிருக்க 1981ல் தமிழகத்தின் எல்லைக்குள் புகுந்து செண்பகவல்லி அணையை உடைத்துவிட்டுச் சென்றது மலையாள வனத்துறை.

சிவகிரி விவசாயிகள் சங்கம் தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டு 8 வார காலத்திற்குள் அணைகட்டித் தர 03.08.2006 அன்று உத்தரவிடப்பட்டது.
பத்து ஆண்டுகளாக அந்த தீர்ப்பை மதிக்கவில்லை மலையாள
அரசு.
உச்சநீதிமன்றமும் ஒன்றும் செய்யவில்லை.
தமிழக திராவிட அரசுகள் என்ன செய்தன தெரியுமா?

செண்பகவல்லி அணை 1773ல் சிவகிரி ஜமீனால் கட்டப்பட்ட அணை ஆகும்.
  கேரள வனத்துறை தமிழக எல்லைக்குள் வந்து அணையை உடைத்துவிட்டு போனபோது அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் இதைத் தட்டிக்கேட்கவில்லை.
எப்படி கேட்பார்?

அவர் ஒரு மலையாளி.
முல்லைப் பெரியாறு பிரச்சனையிலேயே அவர் கேரளாவுக்கு சாதகமாகத்தான் நடந்துகொண்டார்.

25.11.1979ல் முல்லைப் பெரியாறு பிரச்சனையைப் பேச தமிழகத்திலிருந்து 47 பேரும் கேரளாவிலிருந்து 47 பேரும் சென்றனர்.
இதில் தமிழகக் குழுவில் 46 மலையாளிகளும் 1 தமிழரும் இடம்பெற்றிருந்தனர்.
அந்த தமிழர் பொதுப்பணித்துறை அமைச்சர் ராஜா முகமது.
அவர் அணை மட்டத்தைக் குறைப்பதை கடுமையாக எதிர்த்துவிட்டு வெளிநடப்பு செய்தார்.
94ல் 93பேர் ஆதரவுடன் முல்லைப்பெரியாறு அணையின் மட்டம் குறைக்கப்பட்டது.
அது அதன்பிறகு உயர்த்தப்படவில்லை.

எம்.ஜி.ஆருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த தெலுங்கரான கருணாநிதி 1987-1991 வரை மலையாளிகளை கெஞ்சிக்கொண்டிருந்தார்.
உடைத்த செண்பகவல்லி அணையை நீங்களே கட்டித்தாருங்கள் என்று.

அதன்பிறகு ஆட்சிக்கு வந்த கன்னடவரான ஜெயலலிதா 5,50,000 ரூபாய் பணம் கொடுத்து கெஞ்சினார்.
பணத்தையும் வாங்கிக்கொண்டு செண்பகவல்லி அணையைக் கட்டித்தரவும் இல்லை மலையாள அரசு.
வாசுதேவநல்லூர் பகுதியில் 15 குளங்கள், சிவகிரி பகுதியில் 33 குளங்கள் நிரம்ப நீராதாரமாகவும்,
சங்கரன்கோயில் வட்டத்தில் 11,000 ஏக்கர் நிலப்பரப்புக்கு பாசன நீரையும், அப்பகுதிக்கு மக்களுக்கு குடிநீரையும் வழங்கி வந்த செண்பகவல்லி தடுப்பணை இன்று இல்லை.
2016 மே மாதம் அணையின் மீதமிருந்த தடுப்புச் சுவரையும் இடித்தது மலையாள அரசு.

இதே போல நெய்யாறு பிரச்சனையும்.
நெய்யாறு தண்ணீரைத் திறந்துவிடவேண்டுமானால் பணம் தரவேண்டும் என்று கேட்டது கேரளா.
1999ல் நெய்யாறு கேரளாவுக்கு மட்டுமானது இருமாநிலத்திற்கும் சொந்தமானது அல்ல என்று அறிக்கவித்தது.
மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட இப்பிரச்சனையில் மத்திய அரசு பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ளுமாறும் தேவைப்பட்டால் மத்திய நீர் ஆணையத்திடம் உதவி கோருமாறும் கூறி 2003ல் நழுவிக்கொண்டது.

2004 லிருந்து ஒரு சொட்டு தண்ணீரை கூட கேரளா திறந்துவிடவில்லை.

2007 ல் கேரளா மீண்டும் பணம் தந்தால் திறந்துவிடுவதாக கூறியது.
நெய்யாற்றின் நீர்பிடிப்புப் பகுதிகளில் 12.90 சதுர கி.மீ தமிழகத்தில் இருக்கிறது.
எனவே இது இருமாநில நதிதான் என்று வாதிட்ட தமிழக அரசு ஒரு புதிய ஒப்பந்தத்தை தயாரித்து 19.05.2009 அன்று  கேரள அரசுக்கு அனுப்பியது.
  கேரள அரசு பணம் கேட்டு 11.01.2010 அன்று வேறு ஓர் ஒப்பந்தத்தை தயாரித்து தமிழகத்துக்கு அனுப்பியது.
தமிழக அரசு அதை நிராகரித்தது.
பிறகு இருமாநில அதிகாரிகளும் 06.05.2011அன்று திருவனந்தபுரத்தில் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினர்.
கேரளா பணம் தராமல் தண்ணீர் தரமுடியாது என்று மறுத்துவிட்டது.
தமிழக அரசு 30.05.2012 அன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரந்தது.
இன்றுவரை இழுபறி தொடர்கிறது.
அபரிமிதமான நெய்யாற்றுத் தண்ணீர் திருவனந்தபுரத்தை அடுத்த பூவாறு எனும் ஊரில் அரபிக் கடலில் வீணாகக் கலக்கிறது என்பதுதான் வேதனையான உண்மை.

மலையாளிகளின் இனவெறிப்போக்கு இதோடு முடியவில்லை.
கோவை மற்றும் திருப்பூர் மக்களின் குடிநீர் ஆதாரம் மற்றும் பாசனம் பரம்பிக்குளம்- ஆழியாறு திட்டத்தின் (பி.ஆர்.பி) மூலம் வரும் நீரை நம்பியுள்ளது.
இந்த திட்டம் வீணாகக் கடலில் கலக்கும் நீரை தமிழகத்திற்கு திருப்பிவிட 1958ல் போடப்பட்டது.
இத்திட்டத்தில் உள்ள பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம், தூணக்கடவு ஆகிய அணைகள் கேரளாவுக்குள் உள்ளன.
(இவ்வணைகள் இருக்கும் பகுதி அனைத்தும் தமிழகம் இழந்த எல்லைப் பகுதி ஆகும்)
இவ்வணைகளைக் கட்டியது தமிழக அரசே ஆகும்.
இதனை பராமரிக்கும் பொறுப்பு தமிழக அரசிடம் உள்ளது.
  தமிழகத்தின் கட்டுப்பாட்டில் கேரளாவிற்குள் இருக்கும் பரம்பிக்குளம் அணைக்கு பராமரிப்பு பணிக்காகச் செல்லும் தமிழக ஊழியர்களை அவமானப்படுத்துவது சிறைபிடித்து வைப்பது திருப்பியனுப்புவது என கேரள அரசு செய்யும் அட்டூழியம் சொல்லிமாளாது.


40 ஆறுகள் ஓடும் கேரளாவில் பஞ்சமோ தண்ணீர் பற்றாக்குறையோ இல்லை.
8% தண்ணீர் மட்டுமே மலையாள மக்களால் பயன்படுத்தப்படுகிறது.

உச்சநீதி மன்றத்தை மதிக்காத,  அப்பாவி தமிழ் மக்களின் உணவையும் தண்ணீரையும்
பிடுங்கும் மலையாள அரசு,  இதன் மூலம் தமிழர்கள் மீது கொண்டுள்ள இனப்பகையைத்தான் காட்டுகிறது.

  மலையாளிகளின் உணவுத்தேவை 90% தமிழகத்தை நம்பி உள்ளது.
ஒரு வாரம் உணவு செல்வதைத் தடுத்தால் கேரளா பணிந்துவிடும்.

தமிழக முதல்வர் நினைத்தால் இது முடியும்.
ஆனால் தமிழகத்தை தமிழர் ஒருவர் ஆளவே முடிவதில்லையே!