Showing posts with label மண்மீட்பு. Show all posts
Showing posts with label மண்மீட்பு. Show all posts

Thursday, 6 November 2025

வானொலி யில் நிலவிய தெலுங்கு ஆதிக்கம்

வானொலி யில் நிலவிய தெலுங்கு ஆதிக்கம்

ஆந்திரம் பிரிந்து ஒரு மாதம் கடந்து விட்டது.
ஆனால் மழை விட்டும் தூவானம் விடவில்லை என்பது போல் தெலுங்கு மொழி இன்னும் நமது ராஜ்ய ரேடியோ நிலையத்திலிருந்து ஒழியவில்லை.
காலையில் எழுந்து ரேடியோவை திருகினால் நாம் கேட்கும் மொழி தெலுங்காகத்தான் இருக்கிறது.
தமிழில் பாடகர் பாடினாலும் இன்னார் இன்ன ராகம் இன்ன தாளத்தில் பாடுகிறார் என்பதை தெலுங்கில் தான் சொல்லுகிறார்கள்!
பாடகர்களிலும் பெரும்பாலோர் இன்னமும் தெலுங்கில் பாடுவதை விட்டதாக தெரியவில்லை.
ரேடியோ நிலைய அதிகாரிகள் வெறும் தமிழ் மட்டும் பாடுபவர்களை தரக்குறைவாக நடத்துகிறார்களாம்!
தெலுங்கிலும் பாடாவிட்டால் பாட அனுமதிக்க முடியாது என்று மிரட்டுகிறார்களாம்!
ஆந்திரம் பிரியும் முன்னர்  இந்த நிலையில் இருந்த்தை நாம் ஓரளவு சகித்துக் கொள்ள முடிந்தது.
ஆனால் ஆந்திரம் பிரிந்த பின்பும் அதே நிலை தான் என்றால் இப்படி ஒரு ரேடியோ நிலையம் அவசியம் தானா என்ற கேள்வி ஒவ்வொரு தமிழனுடைய உள்ளத்திலும் வேதனையுடன் தலைத் தூக்கி நிற்பது நியாயமே.
ஆந்திரர்களுக்கு விஜயவாடா ரேடியோ நிலையம் தனியாக இருக்கிறது.
செகந்திராபாத் ரேடியோ நிலையமும் முழுக்க ஆந்திர மயமே. அப்படி இருக்க தமிழ் ராஜ்ய ரேடியோ நிலையமும் தெலுங்கு மயமாகத்தான் இருக்க வேண்டுமா?!
விஜயவாடா ரேடியோ நிலையத்தில் தெலுங்கு பாடகர்கள் தமிழ் பாட்டுகளாக பாடிக் கொண்டிருந்தால் ஆந்திரர்கள் சும்மா இருப்பார்களா?!
தமிழர்கள் ஆந்திரர்களைப் போன்று வெறி பிடித்தவர்களாக இருக்க வேண்டாம் ஆனால் தங்கள் தாய்மொழி பற்றை கூடவா விட்டு விட வேண்டும்?!  சென்னை ரேடியோ நிலையத்தில் சினிமா ரிக்கார்டுகள் ஒளிபரப்பும் நேரத்தில் இந்தி ரெக்கார்டு போடுவதைப் போன்று தெலுங்கு ரெக்கார்டுகளையும் போட்டு தொலைத்து விட்டு போகட்டும்!
நாம் அக்கறைப்படவில்லை!
ஆனால் ஒவ்வொரு நிகழ்ச்சியும் முக்கால்வாசிக்கு மேல் தெலுங்கு மயமாக இருப்பதை உணர்ச்சி உள்ள தமிழர்களால் சகித்துக் கொண்டிருக்க முடியவில்லை!
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கவனிக்க வேண்டும் இல்லை என்றால் 'தெலுங்கு ஒளிபரப்பு எதிர்ப்பு இயக்கம்' தமிழர்களால் தொடங்கப்பட நேரும்.
இதற்கு அறிகுறியாக இப்பொழுது தமிழ் ராஜ்யத்தில் ரேடியோ பெட்டி வைத்திருப்போர் தங்கள் தங்களின் அதிருப்தியை ரேடியோ நிலைய அதிகாரிகளுக்கும் மத்திய அரசாங்க மந்திரி அகர்வாலுக்கும் நமது ராஜ்ய மந்திரி சபை பிரச்சார இலக்காவிற்கும் மகஜர் மூலம் தெரியப்படுத்த கேட்டுக்கொள்கிறோம்.
கட்சி பாகுபடற்ற முறையில் தமிழர்கள் ஒன்று கூடி தங்கள் எதிர்ப்பை நேரிய முறையில் ஆட்சியாளருக்கு தெரிவிக்க வேண்டுகிறோம்!
தமிழகத்தில் எந்த கட்சி கூட்டம் நடத்தினாலும் இது பற்றி தீர்மானம் நிறைவேற்றி ஆட்சி பீடத்திற்கு அனுப்பி வைக்க வேண்டுகிறோம்!
தமிழ் ராஜ்யத்திலேயே தமிழர்களின் உரிமை பறிக்கப்படுவதை தமிழர்கள் ஒன்றுபட்டு எதிர்க்க முற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி கூற கடமைப்பட்டு உள்ளோம்.
இசைத்தமிழ் தழைக்க, தமிழர்களின் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தமிழகத் தலைவர்கள் பாதங்களில் இதை சமர்ப்பிக்கிறோம்.

கா.மு.ஷெரீப்
தமிழ் முழக்கம்
01.11.1953

Tuesday, 4 November 2025

சென்னையை காத்த மபொசி பற்றி கா மு ஷெரீப்

சென்னையை காத்த மபொசி பற்றி கா.மு.ஷெரீப்

 'இழைத்தவன் பொண்டாட்டி எல்லாருக்கும் மச்சினி' என்பது கிராமிய பழமொழி.
 ஆந்திரர்கள் சென்னையை இந்த பழமொழிக்கு இலக்காக பார்க்கின்றனர்.
 சென்னையை என்ன, திருமலை நாயக்கர் ஆண்ட மதுரையை கூட தனதாக்கிக் கொள்ளலாம் என்று எண்ணினர் ஆந்திர வெறியர்கள்.
 அதற்கான திட்டத்தையும் நடத்த அவர்கள் தயங்கவில்லை.
பிரகாசம் முதல்மந்திரியாக வந்ததும் ஆந்திராவில் இருந்து ஆட்களை அழைத்து வந்து சென்னையில் பவனி வரச் செய்தார்.
 சும்மா அல்ல 'மதராஸ் மனதே!' என்று கூப்பாடுடன்!
 தட்டி கேட்க ஆளில்லை!
 சென்னை நகரில் ஓடும் பஸ்களில் எல்லாம் கூட தெலுங்கிலும் பெயர் போடச் செய்தார்கள்!
 இத்தனையும் கண்டு பாரா கண்கள் படைத்தவர்களாக தமிழக தலைவர்கள் இருந்தபோதுதான் 'தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்' என்று குரல் கொடுத்தது தமிழரசு கழகம்! 
வெறிபிடித்த ஆந்திரப்படை பின்வாங்கியது!
 அவர்களை துரத்திச் செல்வது போல பின் தொடர்ந்து சென்ற தமிழரசு கழகத்தினர் சித்தூர் பகுதிகளில் முகாமிட்டு திருப்பதி வரை தமிழர்களுடைய நிலம் என்பதை நிலைநாட்டி திரும்பினர்!
 இதன் பிறகு தார் கமிஷன்,  J.V.P ரிப்போர்ட் ஆகிய தீர்ப்புகளின் மூலம் 'சென்னை தமிழருடைய நகரம்',  'எல்லைப் பகுதிகள் ஆராயப்பட வேண்டியது' என்று முடிவு கட்டப்பட்டது.
 இதை அன்று 'அகில இந்திய காங்கிரஸ்' முதல் 'ஆந்திர காங்கிரஸ்' வரையிலும் நேரு முதல் சஞ்சீவ ரெட்டி வரையிலும் ஒப்புக்கொள்ளாதார் இல்லை!
 ஆனால் முன்பு அமைச்சராக இருந்த காலத்தில் தான் ஒப்புக்கொண்டதை மாற்றி 'ஆலோசிக்காமல் அவசரப்பட்டு தமிழர்களுக்கு அதிக சலுகை வழங்கி விட்டோம்! இப்பொழுது ஆலோசித்து சொல்கிறோம்! சென்னையை தமிழர்களுக்கு தர முடியாது!' என்று சஞ்சீவ ரெட்டி கூறுகிறார்.
 இந்த சஞ்சீவி ரெட்டியையும் மிஞ்சிப் போகிறார் பிரகாசம் 'சென்னையில் மட்டுமல்ல திருநெல்வேலி வரையும் கூட ஆந்திரா கேட்டால் அதில் நியாயம் இல்லாமல் இல்லை' என்கிறார்!
 ஆனால் 1947, 48 இல் இருந்தது போல் இன்று தமிழர்கள் அலட்சியமாக இல்லை!
 ஆந்திர படையெடுப்பை முறியடிக்க துணிந்து நிற்கிறார்கள்!
 சண்டித்தனம் பிடிக்கும் சாமியார், சஞ்சீவ ரெட்டி, பிரகாசம் போன்றோரை சென்னை நகரத்தில் அல்ல அவர் வாழும் ஆந்திர பகுதிக்கு சென்று அதட்டி கேட்கும் அளவிற்கு உணர்ச்சி பற்றி நிற்கிறார்கள்!
 1948 இல் நம்மை எதிர்த்த கட்சிகள் எல்லாம் இன்று நாம் சொல்வதை முன்னிறுத்தி தம்மை வளர்க்கப் பார்க்கின்றன.
 தார் கமிஷனிடம் 'தலைநகரம் தமிழனுக்கு போனாள் என்ன ஆந்திரனுக்கு போனால் என்ன இருவரும் திராவிடர்களே' என்று கூறிக் கொண்டிருந்த ஈ.வே.ரா இன்று விடுதலை மூலம் ஆந்திரரின் மண்வெளியை கண்டிக்கின்றார்.
 தமிழரசு கழக கோரிக்கையை புரிந்து கொள்ளாமல் அலட்சியப்படுத்தி வந்த பத்திரிகைகள் எல்லாம் சஞ்சீவ ரெட்டியையும் பிரகாசத்தையும் கண்டித்து தலையங்கம் தீட்டுகின்றன.
 சென்னை ராஜ்ய முதல்மந்திரியே தீர்ப்பு கூறுகிறார் 'சென்னை ஆந்திரர்கள் நினைக்கக் கூடாது' என்பதாக!
இத்தனை தமிழரசு கழகத்தாரின் அரிய சாதனை என்றால் அது மிகையாகாது!
 'மொழிவாரி பைத்தியங்கள்' என்று பழித்துக் கூறிய கம்யூனிஸ்ட் சோசியலிஸ்டுகளை மொழிவாரி மாநில பிரிவினையை ஒப்புக்கொள்ள வைத்தது!
 'ஆந்திரமும் தமிழகமும் ஒன்றே தலைநகரச் சண்டை எங்களுக்கில்லை' என்ற தி.க கூட்டத்தினரின் ஏடான விடுதலையை ஆந்திரர்களைக் கண்டித்து எழுதும்படி திருத்தியது!
 'இது என்ன தமிழ் பாகிஸ்தான்?' என்று கேட்ட தேசிய வட்டாரங்களின் மத்தியில் 'தமிழகம் தனி ராஜ்யம்' என்ற எண்ணத்தை வளர்த்து விட்டது!
  இத்தனை பணிகளையும் ஐந்தே ஆண்டுகளில் தமிழரசு கழகத்தினரால் சாதிக்க முடிந்திருக்கிறது என்றால் ஆந்திரர்கள் யோசிக்க வேண்டும்.
 இனியும் 'சென்னை ஆந்திரர்களுடையது!' என்று கூறினால் தமிழரசு கழகம் அளிக்கும் பதில் "சென்னை என்று நீங்கள் ஜெபித்துக் கொண்டே இருங்கள். சென்னையை நீங்கள் அடைகிறீர்களா?! நாங்கள் பெறுகிறோமா?! என்பதை பிறகு கண்ணால் காணலாம்".
 ஆந்திரர்களே! ஆத்திரப்படாதீர்கள்!
 உங்கள் ஆசைக்கு சாவு மணி அடிக்கும் காலம் நெருங்கி விட்டது!
அதன் ஓசையை நீங்கள் 1953 ஜனவரி 24, 25 சென்னையில் நடைபெறவிருக்கும் தமிழரசு கழக இரண்டாவது மாநில மாநாட்டில் கேட்கலாம்!

கா.மு.ஷெரீப்
தமிழ் முழக்கம் 
01.11.1952

Thursday, 18 September 2025

கச்சத்தீவு தாரைவார்ப்பு கருணாநிதி பங்கு

கச்சத்தீவு தாரைவார்ப்பு கருணாநிதி பங்கு

 புனித ஜார்ஜ் கோட்டையில் 19.06.1974 இல் நடந்த ஒரு சந்திப்பு பற்றிய ஆவணம் RTI மூலம் பெறப்பட்டுள்ளது.
 இது அன்றைய வெளியுறவுத்துறை செயலாளர் அளித்த அறிக்கை ஆகும்.
 அன்றைய தினம் வெளியுறவுத்துறை ஏற்பாடு செய்த இந்த கூட்டத்தில் அன்றைய முதலமைச்சர் கருணாநிதி, தலைமை செயலர் பி.சபாநாயகம், உள்துறை செயலர் எஸ்.பி.ஆன்ட்ரூஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
 அப்போது முன்னுரையில் 1973 இலேயே அக்டோபர் 13 மற்றும் 19 தேதிகளில் டெல்லியில் இது தொடர்பாக ஏற்கனவே முதல்வரோடு நடந்த பேச்சுவார்த்தை பற்றி மீள நினைவு படுத்தினார் உள்துறை செயலர்.
 அதில் 1973 அக்டோபர் 13 தமிழ அரசிடம் பேசிய பிறகே 14 தேதி இலங்கையுடன் இந்திய அரசு பேசத் தொடங்கியது. அதன் பிறகு அக்டோபர் 19 தேதி கச்சத்தீவு ஒப்பந்தம் பற்றி முழுமையாக தமிழக அரசுக்கு விளக்கப்பட்டு நன்கு கவனிக்கவும் முழுமையாக விளக்கப்பட்டது என்று தெரிவித்தார்.
 அப்படி நினைவு கூர்ந்த பிறகு தற்போது ஒப்பந்தம் தொடர்பான தமிழக அரசின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் கேட்க இந்த கூட்டம் என்று கூறி பிரதமர் மற்றும் வெளியுறவுத் துறை பிரதிநிதியாக இலங்கை இந்தியா இடைப்பட்ட பாக் நீரிணைப்பு சுமூகமாக பங்கு பிரிக்கப்பட ஒத்துழைக்குமாறு தமிழக முதல்வரைக் கேட்டுக்கொண்டு சந்திப்பை தொடங்கி வைத்தார். 
 இந்த ஒப்பந்த ஏற்பாட்டுக்கு தான் முழுமையாக உடன்படுவதாக முதலமைச்சர் கருணாநிதி உறுதியளிக்கிறார். ஆனால் அரசியல் காரணங்களுக்காக தன்னால் இதை வெளிப்படையாகச் செய்யமுடியாது என்றும் ஆனால் இது பெரிய பிரச்சனையாக மாறாமல் பார்த்துக் கொள்வேன் என்றும் உறுதியளிக்கிறார்.
 இதைப் பாராட்டிய வெளியுறவுத்துறை செயலர் மத்திய அரசுக்கு எதிராக இந்த பிரச்சனை திரும்பக்கூடாது என்று அறிவுறுத்தினார். இதை அறிக்கையாக மத்திய அரசுக்கு அளித்த ஆவணமே தற்போது வெளியிடப்பட்டது.

 அதாவது 1973 லிருந்தே மத்திய அரசு தமிழ்நாடு அரசுடன் கச்சத்தீவு ஒப்பந்தம் பற்றி பேச்சுவார்த்தை நடத்திவந்துள்ளது!
கருணாநிதியிடம் பேசிய பிறகே இலங்கையிடம் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது!
  ஆனால் இதே கட்சிதான் மத்திய அரசை மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் கச்சத்தீவு கொடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டி வருகிறது.
  மத்திய அரசு 1974 இல் கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்த ஒப்பந்தமும் 1976 இல் மீன்பிடி உரிமைகள் பறிக்கப்பட்டதற்கும் கடந்த 20 ஆண்டுகளில் 6184 மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கும் 1175 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டதற்கும் யார் காரணம் என்று இந்த ஆவணத்தின் மூலம் புரிந்துகொள்ளலாம்

 - தற்போதைய வெளியுறவுத்துறை ஜெய்சங்கர் அளித்த பேட்டியிலிருந்து 

Friday, 18 July 2025

தமிழ்நாடு பெயர்மாற்றமும் அண்ணாதுரையும்

தமிழ்நாடு பெயர்மாற்றமும் அண்ணாதுரையும்

*1920 இல் காங்கிரஸ் கட்சி 'அமையவுள்ள தங்களது ஆட்சியில் மொழி உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்போம்' என்று உறுதியளித்து அதற்கு முன்மாதிரியாக கட்சி கட்டமைப்பை மொழிவாரி கிளைகளாக மாற்றி அமைத்தது.
 அப்படி அமைந்ததே 'தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி' எனும் கிளை (அதாவது தமிழ்நாடு என்பதே மக்கள் இயல்பாக பயன்படுத்திய சொல்.
 மக்கள் ஆதரவைப் பெற இதைச் செய்த அதே காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்த பிறகு மொழிவாரி உரிமைகளை தர மறுத்தது).

*  1920 இல் காங்கிரசின் இந்த கொள்கையை ஏற்று தீவிர காந்தி பக்தரான வரதராஜுலு நாயுடு "தமிழ்நாடு" எனும் காங்கிரஸ் ஆதரவுப் பத்திரிக்கையைத் தொடங்கி 1931 வரை நடத்தினார் (1925 இல் தமிழ்நாடு காங்கிரசுக்கு இவர் தலைவரானார்).

*1942 இல் 'தமிழ் ராஜ்யம்' என்ற பெயரில் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனர் நூல் ஒன்று வெளியிட்டார்.
 அதில் இருந்த வரைபடத்தில் அன்றைய மதாராஸ் மாகாண தமிழர் பெரும்பான்மை மாவட்டங்கள், பாண்டிச்சேரி காரைக்கால், திருவனந்தபுரம் உள்ளடக்கிய குமரி, இலங்கையின் வடபகுதி எல்லாம் இருந்தது (பார்க்க: படம்).

* குமரியை தமிழகத்துடன் இணைக்க போராடிய போராளிகளை 'தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில்' சேர்க்க முடியாது என்று காமராஜர் துரத்திவிட்டார்.
 இதையடுத்து 1945 இல் குமரித் தமிழர்கள் சாம் நத்தானியேல் நாடார் தலைமையில் காங்கிரசில் இருந்து பிரிந்து தொடங்கிய கட்சி  1946 இல் 'திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ்' என்று பெயர்மாற்றப்பட்டது. தமிழ்நாடு என்ற பெயரில் இருந்த முதல்  கட்சி இதுவே (தமிழ்நாடு என்பதே இயல்பான பெயராக அப்போதும் விளங்கியது).

* 1947 இல் தமிழர் கழகம் எனும் கட்சி தொடங்கி 'தமிழர் நாடு' எனும் பெயரில் பத்திரிகையும் தொடங்கினார்  'முத்தமிழ் காவலர்' கி.ஆ.பெ.விசுவநாதம் பிள்ளை 

 *1953 இல் மதராஸ் என்ற பெயரை மாற்றுவது குறித்து சட்ட மேலவையில் முதன்முதலாகப் பேசினார் ம.பொ.சி  (ஆனால் 1953 இல் 'ஆந்திர ராஜ்யம்' உருவாகிவிட்டது. 1956 இல் 'ஆந்திர பிரதேசம்' ஆனது).

* 1955 இல் ம.பொ.சி தனது தமிழரசுக் கழக செயற்குழு கூட்டத்தில் தமிழர் மாநிலத்துக்கு 'தமிழ்நாடு' என்ற பெயரை முன்மொழிந்தார்.

 * 1955 இல் சட்டசபையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் "தமிழ் ராஜ்யம்" என்று பெயரிடுமாறு குரல் கொடுத்தார்.
தனது பத்திரிக்கையிலும் தொடர்ந்து எழுதினார்.

* 1956 இல் 'மதராஸ் மாகாணம்' அதே பெயரால் 'மதராஸ் மாநிலம்' ஆனது.
'மதராஸ்' என்ற பெயருக்கு பதிலாக 'தமிழ்நாடு' என்று பெயரிட சங்கரலிங்க நாடார் உண்ணாவிரதம் இருந்தார்.

* காமராசர் பாராமுகமாக இருக்க 74 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து 1956 அக்டோபரில் அவர் இறந்தார்.
அதற்குப் பிறகு 42 நாட்கள் கழித்து சட்டமன்றத்தில் பெயர்மாற்ற தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
ஆனால் காமராசர் அதைத் தள்ளுபடி செய்தார்.

* 1960 இல் ம.பொ.சி தலைமையில் மீண்டும் பெயர்மாற்றத்திற்கான மக்கள் திரள் போராட்டம் நடந்தது.
இதில் அண்ணாதுரை கலந்துகொண்டதோடு சரி.

* 1961 இல் சின்னதுரை கொண்டுவந்த தீர்மானத்தில் மதராஸ் மாகாணம் தமிழில் எழுதும்போது 'தமிழ்நாடு' எனவும் ஆங்கிலத்தில் 'மெட்ராஸ் ஸ்டேட்' என்றும் எழுதப்படும் என்று நிதியமைச்சர் சி.சுப்பிரமணியம் உறுதியளித்தார்.
அந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையை 'தமிழ்நாடடின் நிதிநிலை அறிக்கை' என்ற பெயரிலேயே தாக்கல் செய்து வாசித்தார்.

அதாவது பாதி வெற்றி அடைந்த இந்த நிலையில்தான் அதுவரை வேடிக்கை பார்த்த ('திராவிட நாடு' பத்திரிக்கை நடத்திவந்த) அண்ணாதுரை இதில் நுழைகிறார்.

இதற்குக் காரணம் அண்ணாதுரை 1962 பிப்ரவரியில் நடந்த தேர்தலில் தான் பிறந்த மண்ணான காஞ்சிபுரத்திலேயே மண்ணைக் கவ்வினார்.

அப்போது மக்கள் மத்தியில் 'தமிழ்நாடு' பெயர்மாற்றத்திற்கு இருக்கும் பரவலான ஆதரவை கவனித்து மக்கள் கவனத்தைப் பெற இந்த விடயத்தில் பங்கெடுக்கிறார் அண்ணாதுரை.

* 1962 இல் காமராசர் ஆட்சியில் பெயர்மாற்றத் தீர்மானம் மீண்டும் கொண்டுவரப்பட்டு நிறைவேறாமல் போனது.

* 1963 இல் இந்திய பாராளுமன்றத்தில் அண்ணாதுரை தமிழ்நாடு பெயர்மாற்றத்திற்கு குரல்கொடுத்து தனது வாதத் திறமையால் அனைவரையும் கவர்ந்தார்.
இதுவே இவர் இப்பெயர்மாற்ற போராட்டத்தில் செய்த குறிப்பிடத் தகுந்த பங்களிப்பு ஆகும்.

* பிறகு 1964 இல் பக்தவச்சலம் ஆட்சியில் இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டு மீண்டும் நிறைவேறாமல் போனது.

* அதற்கடுத்த இந்தியெதிர்ப்பு போராட்டத்தில் மத்திய மற்றும் மாநில காங்கிரஸ் அரசுகள் செய்த அடக்குமுறைகள் மக்கள் மனதில் வெறுப்பை ஏற்படுத்தி 1967 ஏப்ரலில் தி.மு.க ஆட்சியைப் பிடிக்க காரணமானது.

(இந்தியெதிர்ப்பு போராட்டமும் இவ்வாறே!
அதாவது சோமசுந்தர பாரதியார் தலைமை ஏற்று நடத்தியதே.
அண்ணாதுரை பங்கு அதிலும் பெரிதாக ஏதுமில்லை.
ஈவேரா ஒரு படி மேலே போய் போராடும் மாணவர்களை சுடச்சொல்லி எழுதிவந்தார்)

* ஆட்சிக்கு வந்து மூன்று மாதம் கழித்து 18.7.1967 அன்று சட்டமன்றத்தில் அண்ணாதுரை பெயர்மாற்றம் செய்ய மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தைக் கொண்டுவந்தார்.
அது ஏகமனதாக நிறைவேறியது.
 அன்று அண்ணாதுரை பேசியதைக் கவனிப்போம்...
"மதிப்பு மிக்க திரு. ம.பொ.சி அவர்கள் இதிலே மிகுந்த மன எழுச்சி பெற்றது இயற்கையானதாகும். அவர்கள் பல ஆண்டுகளாக 'தமிழ் நாடு' என்ற பெயர் இந்த நாட்டுக்கு இடப்படவேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையோடு பாடுபட்டவர்கள்.
திராவிட முன்னேற்றக் கழகத்தோழர்களும், திராவிட முன்னேற்றக் கழகம் என்பதிலே “திராவிட” என்பதை நினைத்துக் கொண்டிருப்பதாலே "தமிழ்நாடு" என்பதிலே அக்கரை இல்லாமல் போய்விடுமோ என்று சிலர் எண்ணிய நேரத்தில் ‘தமிழ்நாடு' என்று பெயரிடுதல் வேண்டுமென்று திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த நாங்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்திக்கொண்டு வந்திருக்கிறோம்."

அதாவது ம.பொ.சி பாடுபட்டார், திமுக வலியுறுத்தியது.
 இதிலிருந்து இது யாருடைய போராட்டம் என்பது தெளிவாகப் புரிகிறது அல்லவா?! 

* ஓராண்டு கழித்து 1968 ஆண்டுக் கடைசியில் பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது.

* 14.01.1969 அன்று முதல் தமிழ்நாடு என்ற பெயர் நடைமுறைக்கு வந்தது.
அடுத்த ஒரு மாதத்தில் அண்ணாதுரை புகையிலைக் குதப்பும் பழக்கத்தால் வந்த புற்றுநோயினால் உயிரிழந்தார்.

ஏதோ அண்ணாதுரை சாகும்வரை போராடி பெயர்மாற்றம் கொண்டுவந்தது போல புனைக்கதைகள் எழுதப்படும் அதே வேளையில்
"தமிழ்நாடு" என்ற பெயருக்காக உயிர்நீத்த சங்கரலிங்க நாடாரை 'பெயர்மாற்ற விழா' அன்று நினைவுகூர்ந்ததோடு சரி அதன்பிறகு இருட்டடிப்பு செய்துவிட்டனர்.

  தமிழ்நாடு என்ற பெயரை முன்மொழிந்து போராட்டம் நடத்தி சாதித்துக் காட்டிய ம.பொ.சி கூட பிற்பாடு மெல்ல மெல்ல இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டார்.

 இன்று தமிழ்நாடு என்ற பெயரை உருவாக்கியதே அண்ணாதுரைதான் என்றும் அவர் இல்லாவிட்டால் நாம் 'மதராசி'களாக இருந்திருப்போம் என்றும் திராவிடவாதிகள் பேசுவதைப் பார்க்கிறோம்.

அண்ணாதுரைக்குப் பிறகும் இவர்களின் லட்சணம் (செயலழகு) எவ்வாறு என்றால்,

* கால் நூற்றாண்டு கழித்துதான் 1996 இல் மதராஸ் சென்னை ஆனது.

* (பிற மாநிலங்கள் போல அல்லாமல்) தமிழகத்தின் உயர்நீதி மன்றம் தமிழில் "சென்னை உயர்நீதிமன்றம்" ஆங்கிலத்தில் "மதராஸ் ஹைகோர்ட்" என்றே இன்றுவரை உள்ளது.
"தமிழ்நாட்டு உயர்நீதி மன்றம்" என்று இல்லை

* பிற மாநிலங்கள் தமது மாநிலத்தின் பெயரிலேயே தலைமைப் பல்கலைக்கழகம் வைத்துள்ளன.
ஆனால் இன்றுவரை தமிழகத்தின் தலைமைப் பல்கலைக்கழகம் "அண்ணா பல்கலைக்கழகம்" என்றே உள்ளது. 
"தமிழ்நாடு பல்கலைக் கழகம்" என்று இல்லை.
 இதிலும் ஒரு சதி 'அண்ணாமலைப் பல்கலைக்கழகம்' என்பதை சுருக்கி 'அண்ணா பல்கலை' என்று அண்ணாதுரையைக் குறிக்கும் வகையில் திரிக்கின்றனர். 

 அண்ணாதுரையும் தமிழுக்கோ தமிழருக்கோ செய்தது ஏதுமில்லை!  

(23.08.2018 மற்றும் 31.10.2021 பதிவுகள் இணைத்து மேலதிக தரவுகள் சேர்த்தது இப்பதிவு)

Monday, 12 May 2025

முகம் சிதைந்த கண்ணகி சிலை


முகம் சிதைந்த கண்ணகி சிலை
20.12.2015

எச்சரிக்கை:
இப்பதிவைப் படிப்போருக்கு இனவெறி வர வாய்ப்புள்ளது.

சமண மதத்தைச் சேர்ந்த கண்ணகி ,
சோழநாட்டில் பிறந்து
பாண்டிநாட்டில் வழக்காடி
சேரநாட்டில் தெய்வமானாள்.

தமிழ் மூவேந்தர்கள் தங்களுக்குள் அடித்துக்கொண்டார்கள் என்றும் தமிழர் இனவுணர்வு இல்லாமல் பாண்டிநாட்டான்,சோழநாட்டான், சேரநாட்டான் என்ற நாட்டு உணர்வுடன் இருந்தனர் என்றும் சிலர் கூறுகின்றனர்.

தமிழர்கள் என்றும் தமிழர்களாகத்தான் இருந்தனர் என்பதற்கான சான்றுதான் மூவேந்தரும் சமமாகப் போற்றப்பட்டு எழுதப்பட்ட சிலப்பதிகாரமும் இன்றும் தொடரும் கண்ணகி வழிபாடும்.

என்றால் ஈழம் விடுபடுகிறதே?
இல்லை, ஈழத்தான் மட்டும் சளைத்தவனா?
இன்று தமிழகத்தை விட அதிகமான கண்ணகிகோவில்கள் ஈழத்திலே உள்ளன.

கண்டியில் உள்ள புத்தர்கோயிலில் பத்தினி வழிபாடு பத்தினித்தெய்யோ என்ற பெயரில் திருவிழாவாகச் சிங்களவரால்  கொண்டாடப்பட்டு வருகிறது.
இது பத்தினித் தெய்வம் வழிபாட்டின் திரிபேயாகும்.
(இது கண்ணகி வழிபாடு கிடையாது).

சேரன் செங்குட்டுவன் இமயம் சென்று கல் எடுத்துவந்து கண்ணகிக்குக் கோயில் எழுப்பியதும் தமிழ் மன்னர்கள் அனைவரும் அப்பத்தினிக்குக் கோவில்கள் எழுப்பினர்.
ஈழத்திலும் அதேகாலகட்டத்தில் கண்ணகிக்கோவில்கள் கட்டப்பட்டன.
ஆக கண்ணகி வழிபாடு
மதம், நாடு தாண்டிய தமிழ் இன உணர்ச்சியின் அடையாளம் ஆகும்.

கிட்டத்தட்ட 2000 ஆண்டுகள் பழமையானதும் சேரன் கட்டியதுமான அந்தக் கோவில் இன்று மங்கலதேவி கண்ணகிக் கோவில் என்று அழைக்கப்படுகிறது.
மங்கல தேவி என்பது யார் என்ற கேள்விக்கு தமிழ்ப்பார்ப்பனர் உ.வே.சா வின் விளக்கமானது,
கண்ணகிக்கு வஞ்சிக்காண்டம் வரந்தரு காதையில்:
"மங்கலமடந்தை கோட்டத் தாங்கண்
வெங்கோட்டுயர் வரைச் சேனுயர் சிலம்பில்"
என்று குறிப்பு உள்ளது. மங்கல மடந்தை என்பதற்குப் பொருள் மங்கல தேவி என்றும் அது கண்ணகியைக்குறிக்கும் சொல்லாகும்
என்கிறார் தமிழ்த்தாத்தா.

தமிழ் நிலத்தை கிட்டத்தட்ட 1500ச.கி.மீ ஆக்கிரமித்து இன்று 38,863சகீமி பரப்பளவுகொண்ட கேரள மாநிலம் இன்னமும் மண்வெறி பிடித்து அலைகிறது.

தமிழக எல்லைக்குள் உத்தமபாளையம் தாலுகாவில் உள்ள வனப்பகுதியில் 4380 அடி உயர சிகரத்தில் உள்ளது கண்ணகிகோயில்.
1959 வரை கேரள அரசு, கண்ணகி கோவில் எல்லை குறித்து எவ்வித ஆட்சேபனையும் எழுப்பவில்லை.
அதன்பிறகு சிறிய சிறிய பிரச்சனைகளைச் செய்யத்தொடங்கியது.

பிரச்சனையைத் தீர்க்க 1976ல் தமிழ்நாடு கேரள அரசு அதிகாரிகள் கூட்டாக நடத்திய சர்வேயிலும் கண்ணகி கோவில் கேரள எல்லையில் இருந்து 40 அடி தூரம் தள்ளி தமிழகப்பகுதியில் இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இதற்கிடையில், கூடலூரில் சில தமிழார்வலர்கள் 'மங்கலதேவி கண்ணகி கோட்ட சீரமைப்புக்குழு'  என்று ஒன்றைத் தொடங்கி கோவிலைப் புதுப்பிக்க திட்டமிட்டனர்.

1976ல் இந்த சீரமைப்புக்குழு,
அப்போதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதியைச் சந்தித்து உதவி கேட்டது.
கூடலூரைச் சேர்ந்த, கே.பி.கோபால் எம்.எல்.ஏ.,வாக இருந்தபோது கண்ணகி கோவிலுக்கு செல்லப் பாதை அமைக்க வேண்டும் என சட்டசபையில் பேசினார்.
இதனைத் தொடர்ந்து, தமிழகப்பகுதியில் கூடலூர் பனியங்குழி வழியாக 6 கி.மீ சாலையை போடுவதற்காக ரூ.20 லட்சம்நிதி ஒதுக்கப்பட்டது.
இதிலும் மலையாள அரசு எதிர்ப்பு தெரிவித்து பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று முட்டுக்கட்டை போட்டது.
இந்தநிலையில் கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி பதவி நீக்கம் செய்யப்பட்டது.
இதனால் இத்திட்டம் தாமதப்பட்டது.

இந்த நிலையைப் பயன்படுத்திக்கொண்டு 1976ல் கேரள வனப்பகுதி வழியாக, தேக்கடியில் இருந்து கண்ணகி கோவிலுக்கு அவசர அவசரமாக மலையாள அரசு 16 கி.மீ பாதை ஒன்றை அமைத்தது.
இவ்வாறு போடப்பட்ட இந்தப் பாதையின் வழியாக தமிழக பக்தர்கள், கண்ணகி கோயிலுக்கு செல்லத்தொடங்கினர்.
தற்போது இந்த
சாலையை வைத்துக் கேரள
அரசு கண்ணகி கோயில் கேரளாவிற்குச்
சொந்தமானது என்று உரிமை
கொண்டாடுகிறது.

சித்திரை மாதம் வரும் சித்திரை முழுநிலவு தினத்தன்று இந்த மங்கலதேவி கண்ணகி கோயிலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் ஒருவாரம் சிறப்பு வழிபாடுகள் செய்து வந்தனர்.
மலையாளிகள் இதை மூன்று நாட்களாக்குதான் அனுமதிக்கமுடியும் என்று மூன்றுநாளாக்கினர்.
அதன்பிறகு ஒரே ஒருநாள் மட்டும் அனுமதி வழங்கினர்.
அதுவும் இப்போது காலை, 9மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே
என்று ஆக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் இந்தக் கோவில் வழிபாட்டிற்காக தமிழ்நாடு அரசு அதிகாரிகள் மலையாள அதிகாரிகளைச் சந்தித்து கெஞ்சிக்கூத்தாடி அனுமதி வாங்குவதும், மலையாளிகள் அவர்கள் மனம்போன போக்கில் விதிமுறைகளை விதிப்பதும் தொடர்கதை ஆகிவிட்டது.

மற்ற நாட்களில்
தமிழர்கள் இங்கு செல்ல
அனுமதி அளிக்கப்படுவதில்லை.
மலையாள காவல்துறை நடமாட்டம் எப்போதும் உள்ளது.
இதனால் கோயில் பராமரிப்பின்றி பாழடைந்த மண்டபம் போல ஆகிவிட்டது.
கோவிலின் பல பகுதிகள்
சிதைந்து போய்விட்டன.கோவில் சுவற்றின் கற்கள் உடைந்து போய் கிடக்கின்றன.
கல்வெட்டுகள் அழிக்கப்பட்டுள்ளன.
(இரு கல்வெட்டுகள் மிகமுக்கியமானவை.
முதலாம் இராசராச சோழனின் கல்வெட்டு ஒன்றும், பாண்டியன் மாறவர்மன் குலசேகரன் காலத்துக் கல்வெட்டு ஒன்றும் மேலும் பல கல்வெட்டுகளும் இக்கோவிலில் உள்ளன).
இவையும் விரைவில் அழியவுள்ளன.

5-5-82இல் சித்திரை பெளர்ணமி அன்று கண்ணகி கோவிலில் நடைபெறும் திருவிழாவில் கலந்து கொள்ளச்சென்ற தமிழர்களை
கேரள அரசு கைது செய்தது. அதுபற்றி பேசச்சென்ற சட்டமன்ற உறுப்பினர் திரு. ஆர்.டி. கோபாலன், நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கம்பம் நடராசன் ஆகியோரை
மலையாளிகள் மரியாதையின்றி நடத்தினர்.
இதை தமிழக முதலமைச்சரிடம் அவர்கள் முறையிட,  இதைச் சுட்டிக்காட்டி கேரள ஆளுநருக்கு தமிழக முதலமைச்சர் தந்தி அனுப்பினார்.
அதற்குக் கேரள அரசிடமிருந்து எந்தவிதமான பதிலும் இல்லை.

பிறகு அக்கோவில் மலையாளிகளின் துர்கா கோவில் என்று கூறிக்கொண்டு 15.3.1983ம் அன்று கண்ணகி கோவிலுக்குள் துர்க்கா தேவி சிலையை இ.சி. சுகுமாரன் என்பவர் மலையாள தாசில்தார் உதவியுடன் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் மற்றும் கேரள போலீஸ் அதிகாரிகளுடன் வந்து கோவிலுக்குள்  நிறுவினார்.

இதுவாவது பரவாயில்லை.
அதன்பிறகு கண்ணகிசிலையை முகத்தை உடைத்து சிதைத்தனர்.
வேறுவழியின்றி  தற்போது சித்திரை முழுநிலவு நேரத்தில் சந்தனத்தால் கண்ணகி முகம் வடிவமைக்கப்பட்டு வழிபாடு நடக்கிறது.

9மணிக்கு அனுமதிக்கப்படும் தமிழர்கள் வெறும் 8மணிநேரத்திற்குள் விழாவை நடத்திமுடித்து இடத்தைக் காலிசெய்தாகவேண்டும்.
வழிபாட்டு நேரத்தில் அங்கே இருக்கும் மலையாள காவல்துறை தமிழர்களை அடிப்பதும் திட்டுவதும் இஷ்டப்படி விதிமுறைகளை விதிப்பதும் வழிபாட்டில் முடிந்த அளவு இடைஞ்சல் செய்வதும் கண்கூடாகக் காணலாம்.
நான்கரை மணிக்குமேல் அடித்துவிரட்டத் தொடங்கிவிடுவார்கள்.

நம் எல்லைக்குள் நமக்கு தடை விதித்து மண்ணைக் கைப்பற்றிக்கொண்டு ஆண்டுக்கொருமுறை வரும் நம்மை தமது ராணுவமான காவல்துறையை அனுப்பி அப்பாவி மக்கள்மீது இனவெறியைத் தீர்த்துக்கொள்கிறான் மலையாளி.

தமிழ் ஆர்வலர்கள் சிலர் "மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை"என்ற
ஒரு அமைப்பு நிறுவியுள்ளனர்.
இந்த அமைப்பின் சார்பில் சித்திரை முழுநிலவு தினத்தன்று கண்ணகிகோயிலில் வழிபாடுகள் செய்வதுடன் அங்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் உட்பட பல உதவிகள் செய்து வருகிறது.
இந்த அமைப்பு தமிழ்நாட்டின்.கூடலூர் (தேனி) மலைப்பகுதியிலுள்ள பளியங்குடியிலிருந்து கண்ணகி கோயிலுக்குத் தனிப்பாதை அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கையுடன் கண்ணகிகோயில் தமிழ்நாட்டுக்குரியது அதை மீட்க வேண்டும் என்றும் போராடிவருகிறது.

மலையாளிகளின் அராஜகத்தைப் பொறுக்கமுடியாமல் தமிழர் ஒருவர் கோயிலுக்குப் போகும்வழியில் தனக்கு சொந்தமான இடத்தில் ஒரு கண்ணகிகோவில் கட்டி அங்கே வழிபாடு நடத்த வழிசெய்துள்ளார்.
கண்ணகி கோயிலில் அவமானப்பட்ட தமிழர்கள் மறுமுறை அங்கே போகமனமில்லாதவர்கள் இங்கே அதேபோல வழிபாடு நடத்துகின்றனர்.

நாதியற்ற தமிழினம் செய்யமுடிந்தவை இவைதான்.

இத்தனை கெடுபிடிகளிலும் தமிழகம் முழுவதிலும் இருந்து மக்கள் இப்போதும் சென்றுவருகின்றனர்.
ஜீப் கட்டணம், குமுளி வருவதற்கும்,.தங்குவதற்கும் என்று, எந்த வசதிகளும் செய்யப்படாத நிலையில் பக்தர்கள் நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கிறது.

கண்ணகியின் மீது கொண்ட ஈடுபாடு குறையாத தமிழக மக்கள் மனக்குமுறலுடன் மலையாள இனவெறியையும் தமிழக வந்தேறி அரசுகளின் பாரமுகத்தையும் சகித்துக்கொண்டு வழிபாட்டைத் தொடர்ந்து நடத்திவருகின்றனர்.
பழமையான, பாரம்பரியமான,  பல்வேறு தமிழ்கல்வெட்டுக்களை கொண்டு, தமிழர் அடையாளமாக திகழும் இந்த கண்ணகி கோவிலை பாதுகாக்கவும், பராமரிக்கவும் நாம் விரைந்து எதாவது செய்யவேண்டும். கோவிலை எப்பாடுபட்டேனும் தமிழர்கள் மீட்டு எடுக்க வேண்டும்.

என்னதான் கேவலப்பட்டாலும் உணவுக்கு தமிழகத்தை நம்பியிருக்கும் வெறும் ஒன்றரை கோடி மலையாளிகள் ஏறிமிதிக்கும் கேவலமான இனமாக நாம் இருப்பது கொஞ்சம்கூட நியாயமே இல்லை

Tuesday, 29 October 2024

தமிழக எல்லைகளை மீட்க தேவர் பேச்சு

 
தமிழக எல்லைகளை மீட்க தேவர் பேச்சு 

 "தமிழரசு காணவும், தமிழகத்தின் எல்லைகளை மீட்கவும் தமிழை அரசு மொழியாக்கவும் சரியான நேரத்தில் தமிழ் அரசு கழகம் முன் வந்திருக்கிறது.
தமிழ்நாடு - தமிழுக்கும் தமிழ்ப் பண்புக்கும் முரண்பட்ட முறையில் ஆங்கிலேய ஆட்சி காலத்திலிருந்தே அலைக்கழிக்கப்பட்டு வருகிறது.
அந்த அலைக்கழிவு, முடிவில் ‘தமிழ் மாகாணம்’ என்று கூட சொல்ல இயலாது ‘எஞ்சிய சென்னை’ என்பதன் முறையிலேயே இழிவான முறையில் தமிழ் மாகாணத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.
 சரித்திர சான்றான திருப்பதியையும் இழந்து நிற்கிறது.
இந்நிலையில், சென்னையை ஒட்டி, ஜனத் தொகையிலும் சர்வமுறையிலும் தமிழ்நாட்டிற்குப் பாத்தியப்பட்ட சித்தூரையும், திருத்தணி போன்ற தேவாலயத்தையும் இழந்து நிற்கிறது.
இதற்கென ஒரு போராட்டம் எழுந்த பின்னரும் காங்கிரஸ் மந்திரிசபை ஆங்கிலேய முறையை பின்பற்றி அடக்குமுறையால் கையாள நினைக்கிறதே தவிர அறிவு வந்ததாக தெரியவில்லை.
எனினும், இந்த வடக்கெல்லைப் போராட்டம் நீடிக்குமானால் இதில் மந்திரிசபை வழக்கம்போல அசட்டுத்தனத்தைக் கையாளுமானால் விபரீத விளைவுகளை எதிர்பார்க்க நேரும்.
அது பல பொட்டி ஸ்ரீராமுலுகளை தமிழ்நாட்டில் தயாரிக்கும் என்று எச்சரித்து தமிழ் எல்லைப் போராட்டத்திற்கு ஆசிகூறுகிறேன்"
- முத்துராமலிங்கத் தேவர்
 7.6.1956 அன்று கன்னியாகுமரி யில் ம.பொ.சி ஏற்பாடு செய்த  கூட்டத்தில் பேசியது

(01.04.2016 அன்று இட்ட "திருத்தணியைத் தமிழகம் மீட்ட வரலாறு" பதிவிலிருந்து)
.
 
 

Saturday, 15 June 2024

தமிழருக்கான பரந்த நிலப்பரப்பு

தமிழருக்கான பரந்த நிலப்பரப்பு

20.06.2013 அன்றைய பதிவு
 நன்றாக ஆராய்ந்து சிந்தித்து தனிநாடு மட்டுமே நிரந்தரத் தீர்வு என்று நான் முடிவு செய்தபோது எழுதிய முதல் பதிவு

**தமிழருக்கான பரந்த நிலப்பரப்பு**
(பின்னூட்டங்கள் வரை முழுமையாகப் படியுங்கள்)

1)ஆக்கிரமிக்கப்பட்ட தமிழகம்:

1956ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிவினையின்  போது தமிழரின் எதிர்ப்பையும் போராட்டத்தையும் மீறி திராவிடத்தின் பேராதரவுடன் தமிழரிடமிருந்து அண்டை மாநிலங்களால் பிடுங்கப்பட்ப் பகுதி.

2)தமிழீழம்:

2009ல் சிங்களத்தால் இந்தியா மற்றும் 32நாடுகளின் படைவலிமையால் அபகரிக்கப்பட்ட பகுதி.

3)தமிழ்நாடு:

1956க்குப் பிறகு பிடுங்கப்பட்ட பகுதிகளில் சிறுபகுதியை மீட்டு இன்று 'தமிழ்நாடு ' என்னும் பெயரால் நீண்டகாலம் தமிழரல்லாதோரால் ஆளப்பட்டுவரும் பகுதி.

4)அந்தமான்-நிகோபர் தீவுகள்:

1947ல் இந்தியப் போலி விடுதலையின்போது பூர்வீகத் தமிழரைவிட அதிக அளவில் வங்காளியரைக் குடியேற்றி இன்று அவர்கள் மூலம் தமிழர் ஒடுக்கப்பட்டுவரும் அந்தமான்-நிகோபர் 532தீவுகள்.

இவையே இன்றைய தமிழர் பெரும்பான்மைப் பூர்வீக நிலப்பகுதி ஆகும்.

இது மிகத்துல்லியமானதென்று கூறிவிடமுடியாது, ஆனால் இதில் மிகச்சிறிய திருத்தங்களே ஏற்படும் என்று உறுதிகொள்ளலாம்.
எடுத்துக்காட்டாக, இதில் திருவனந்தபுரம் சேர்க்கப்படவில்லை; ஆனால், திருவனந்தபுரம் தமிழர் பெரும்பான்மைப் பூர்விக மண்ணே ஆகும்.

தமிழ்க் குடியரசு கோரிக்கை:

தனிநாடு கோரும் அத்தனைத் தகுதியும் நமக்கு உள்ளது.
புரியும்படி கூறினால் தமிழருக்குத் தனிநாடு கோரும் தகுதி இல்லையென்றால் இவ்வுலகில்  எந்த மக்களுக்கும் அத்தகுதி இல்லை.
அத்தகுதிகளாவன,

*வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பு அதில் நீண்ட நெடிய இனவரலாறு மற்றும் வரலாற்றுச் சான்றுகள்.
*தனித்தன்மையான மொழி, கலாச்சாரம், பண்பாடு, வழிபாட்டுமுறைகள்.
*திருமணச் சடங்குகள், ஈமக்கடன்கள், பழமொழிகள்,சொலவடைகள்,செவிவழிக் கதைகள்.
*பண்டைய நிர்வாகமுறை, நகர்க்கட்டமைப்பு, பண்டிகைகள், கேளிக்கைகள்.
*உடற்கூறு,தோற்றம், உறவுமுறைகள்,சமூகக்கட்டமைப்பு.
*தொழில்முறைகள் ஆபரணங்கள் மற்றும் உடையமைப்பு
*தனித்தன்மையுடைய இசை, கலை, நடனம், இலக்கியம், காப்பியங்கள்.
*தற்காப்புக் கலைகள், பாரம்பரிய மருத்துவம், உடல் மற்றும் மனவளக்கலைகள்.
*கணித,வானியல்,அறிவியல், அரசாட்சி, இல்லறம் பற்றிய பண்டைய ஆராய்ச்சி நூல்கள்
*கனிசமான எண்ணிக்கை.
*சுற்றிலும் கலாச்சார, மொழி, தோற்ற ஒற்றுமைகொண்ட வேற்றின மக்கள்

ஈழம்:

ஒரு முன்னோட்டம்;
ஒட்டு மொத்தத் தமிழருக்கும் ஒரு முக்கியமான பாடம்;
ஈழ மக்கள் அடக்குமுறைக்கு அடிபணியாது போராடிவரும் வீரமறவர்கள்.தமிழினத்தின் வீரத்திற்கும் தியாகத்திற்கும் நம் முன்னே வாழும் முன்மாதிரிகள்.
தமிழினம் வேறுபாடுகளை மறந்து ஒன்றுபடுவது, வல்லாதிக்கத்திற்கு எதிரான விடுதலைப் போராட்டம், அழிவுகளைத் தாங்கியபடி முன்னகரும் விடாமுயற்சி, சரியானத் தலைவனைத் தேர்ந்தெடுப்பது அவன் பின்னிற்பது, உலகம் முழுவதும் பரவிய தமது சொந்தங்களை ஒன்று திரட்டுவது,உலகையே வியக்கவைக்கும் சாதனைகள் மற்றும் தாய்மொழித் தமிழ் மீதான பற்று ஆகியவற்றை நமக்குக் கற்றுக்கொடுக்கும் ஆசான்கள்.
ஆயிரம் இன்னல்கள், பிரிவினைகளை மீறி இனவுணர்வுடன் உறுதியாக தாக்குப்பிடித்துக் கொண்டிருக்கும் ஈழமக்களிடம் உலகத் தமிழர் கற்றுக்கொள்ளவேண்டியது ஏராளம் உள்ளது.
ஈழத்தில் நடந்த அத்தனையும் தமிழ்நாட்டிலும் நடந்தே தீரும்.
இது உறுதி. 

மறைக்கப்பட்ட அந்தமான்-நிகோபர் தீவுகள்:

இதுவும் தமிழரிடமிருந்து மறைக்கப்பட்ட பிடுங்கப்பட்ட பூர்வீக மண் ஆகும்;
இத்தீவில் வாழும் தமிழரில் பெரும்பாலானோர் ஆங்கில ஆட்சியிலும் அதன்பிறகும் குடியேறியவர்கள்.ஆனால், அங்கேயே வாழுந்துவரும் தமிழரும் உண்டு, தவிர அத்தீவுகளின் ஆதிவாசிக்குடிகள் மொழி மற்றும்உடற்கூறு ரீதியில் தமிழினத்தவர் என்பது நிறுவப்பட்டுள்ளது.
இன்று தமிழரை விஞ்சுமளவுக்கு வங்காளியர் குடியேற்றப்பட்டு, இந்தி திணிக்கப்பட்டு தமிழும் தமிழரும் கிட்டத் தட்ட அடிமையாக ஆக்கப்பட்டுவிட்டனர்.
ஆனாலும், தம் சுயமுயற்சியால் தமிழையும் தமிழ்மக்களையும் ஒருங்கிணைத்து ஓரளவு பலமான நிலையில் தமிழர் தம் இருப்பைத் தக்கவைத்துள்ளனர்.

தற்போதைய தமிழ்நாடு:

தமிழரின் பூர்வீக நிலப்பரப்பில் ஓரளவுத் தமிழரின் கட்டுப்பாட்டில் 
உள்ள நிலப்பகுதி ஆகும்;
தமிழரல்லாதோர் பற்றித் துல்லியமான விபரங்கள் இல்லை. இதற்குக் காரணம் 400, 500 வருடங்களாக தமிழரோடு தமிழராக வாழ்ந்து வரும் வேற்றினத்தவர் கலந்து வாழ்ந்துவருவதே ஆகும்.இவர்களைத் தமிழராக ஒத்துக்கொள்வது இயலாத ஒன்றாகும்.
இவர்கள் பல வருடங்களாகத் தாய்நிலத்தின் தொடர்பற்றுப் போனதால் தாய்மொழியை வேகமாக மறந்துவருகின்றனர்.  வியாபார நிமித்தமாக இந்தோனேசியா, கம்போடியா தாய்லாந்து போன்ற தெற்காசிய தீவுகளுக்கும் நாடுகளுக்கும், நமீபியா, அங்கோலா, ட்ரினாட் டொபகோ, சூரினாம், கயானா போன்ற ஆப்பிரிக்க தென்னமெரிக்க நாடுகளுக்கும் மற்றும் உலகம் முழுவதும் 1000 வருடங்களுக்குமுன் குடிபெயர்ந்த தமிழர்கள் தாய்நிலத் தொடர்பறுந்துத் தாய்மொழியையே மறந்து தம் இன அடையாளத்தை இழந்து நாடோடிகளாகவும் ஏதிலிகளாவும் அரைகுறை வாழ்வு வாழ்ந்துவரும் நாதியற்றத் தமிழர்களாக உள்ளனர்.
அவர்களையும் தாய்நிலத்தில் குடியேற்றவோ  அல்லது அவர்கள் வாழும் நாட்டில் சமவுரிமை பெற்றுக் கொடுக்கவோ வேண்டிய தலையாயக் கடைமையும் தமிழருக்கு உள்ளது. அவர்கள் எப்படி தமிழர்களாக என்றும் ஏற்கப்படுவார்களோ அதேபோல தமிழ்மண்ணில் வாழும் வேறுமொழியினரைத் தமிழராக ஏற்பது இயலாத ஒன்று.
அதற்காக ஏற்கப்படாததின் பொருள் ஒதுக்கப்படுவது என்று கொள்ளக்கூடாது. பிறமொழி பேசும் மக்களில் பலர் தமிழ்வழிக் கல்வி கற்கின்றனர். தாயிடமும் உறவினரிடமும் தாய்மொழியிலும் தந்தையிடமும் உடன்பிறந்தவரிடமும் தமிழிலும் பேசும் வேற்றினத்தவரும் உள்ளனர்.
அவர்களுக்கு தமிழினம் என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளது.
தமிழராகத் தன்னை முன்னிறுத்தும் இத்தகைய பிறமொழியினருக்கு தமிழருக்குச் சமமான மதிப்பும் உரிமையும் வழங்கும் கடைமை தமிழருக்கு உள்ளது.
தாய்மொழியை மறந்தாலும் சாதிய விழுமியங்கள், கலாச்சாரம், வழிபாட்டுமுறை, இறுதிச் சடங்குகள், திருமணமுறை என தமது அடையாளங்களை அவர்கள் துறந்துவிடவில்லை.
தவிர,தாய்நிலத்தோடு தொடர்பிலுள்ள பிறமொழியினர்  இன்றும்
 தமிழ்மண்ணில் தொடர்ந்து குடிபுகுந்து வருகின்றனர்.
தமிழர்நிலத்தில் உள்ள பிறமொழியினரில் இவர்கள் எண்ணிக்கையே இன்று அதிகமாகும்.தவிர இது கூடிக் கொண்டே போகிறது. 
வேற்றுமொழியினர் ஒருவேளை வேறொரு தமிழர்த் தொடர்பில்லாத நாட்டில் குடியேறினால் இரண்டு தலைமுறைகளுக்குப்பிறகு அவர்கள் தம்மைத் தமிழராக முன்னிறுத்த முடியுமா? 
முடியாதுதானே.
தமிழ்நாட்டில் இருப்பதால் தமிழ் கலாச்சாரத்தின்  தாக்கம் ஏற்பட்டுள்ளது அவ்வளவே. வேற்றினத்தவர் மத்தியில் வாழும் தமிழர் மீது வன்முறையும் கலவரமும் ஏவப்பட்டபோதும் தமிழர் தம்மிடையே வாழும் பிறமொழியினரைத் தமக்கே உரிய மாண்போடு கையாண்டு
 வந்துள்ளனர்.இது அனைவரும் அறிந்த உண்மை.அதேபோல் நாளை அமையப்போகும் தமிழ்க் குடியரசிலும் பிறமொழியினர் சமவுரிமை பெற்று வாழ்வர் என்பது உறுதி. 
ஒரே இனம் மட்டும் உள்ள ஒரு நாடு கிடையாது என்பதே உண்மை.
தமிழகத்தில் எப்படியும் 65% சதவீதத்திற்குக் குறையாமல் தமிழர் உள்ளனர்.
ஆனால், பெரும்பான்மைப் பூர்விக நிலத்திலேயே வேற்றினத்தவரால் ஆளப்பட்டு வருகின்றனர்.

அன்று ஆக்கிரமிக்கப்பட்டத் தமிழகம்:

1956 ல் இழந்த இப்பகுதியில் இன்று தமிழரே தம்மை வந்தேறிகளாகக் கருதும் அளவுக்கு அடிமைப்பட்டுள்ளனர்.
தமிழரின் பெரும்பான்மைப் பூர்விக நிலப்பகுதி அன்றைய தமிழ்மக்களின் அரசியல் அறியாமையால் பிடுங்கொள்ளப்பட்டது.
வளமான இப்பகுதி மற்ற மாநிலங்களால் ஆக்கிரமிக்கப்பட்டபோதே தமிழர் எண்ணிக்கை பெரும்பாலான இடங்களில் 50% இருந்தது. அந்நியர் கைக்குப் போன பிறகு இன்னும் குறைந்துவிட்டது.
எந்த உரிமையும் கிடைக்காமல்  தமது பூர்வீக மண்ணிலேயே சிறுபான்மையாக்கப்பட்டு இனரீதியான பிரச்சனைகளுக்கும் தாக்குதலுக்கும் கலவரங்களுக்கும் முகம் கொடுத்துவருகின்றனர்;
வழக்கம் போல அனைத்துத் தமிழருக்கும் இவர்கள் போய்க் குடியேறியதாகவே காட்டப்பட்டு உள்ளது.
மபொசி , மார்சல் நேசமணி போன்ற தலைவர்களின் அரும்பெரும் முயற்சியாலும் போராட்டங்களினாலும் சென்னை,திருத்தணி, செங்கோட்டை மற்றும் கன்னியாகுமரி உள்ளடக்கிய இன்றைய தமிழகத்தின் 15% பகுதி மீட்கப்பட்டது அல்லது காக்கப்பட்டது;
இன்று ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழகத்தில் தமிழர்கள் சில இடங்களில் நாற்பது சதவீதமும் சில இடங்களில் தொண்ணூறு சதவீதம் வரையிலும் கூட இருக்கின்றனர்; 
( இடுக்கிமாவட்டத்தில் 95% தமிழர் இருக்கின்றனர்.
தமிழ்க் குடியரசின் வடபகுதி அதாவது, இன்று ஆந்திராவுடன் இணைக்கப்பட்டுள்ள நிலப்பரப்பில் தமிழர் 35% முதல் 70% வரை உள்ளனர்)
 அதாவது, தமிழரின் நிலத்தில் வேற்றினத்தவர் குடியேறி குடியேறி தமிழரைவிட அதிகம் பெருகிவிட்டனர்;
ஆனால் இவையனைத்தும் தமிழரின் பூர்வீக மண் என்பதற்கு நிறைய சான்றுகள் உள்ளன;(அதுவும் பல தடைகளை மீறி தமிழார்வலரின் தனிமனித முயற்சியாலும் தியாகத்தாலும்    மட்டுமே பெரும்பாலும் வெளிக்கொணரப்பட்டவை)
எனவே இந்த மண்ணை நாம் கோருவதில்  தவறில்லை;
தடயங்களின் அடிப்படையில் நாம் முழுஇந்தியாவையும் கோரலாம்தான்; ஆனால் தமிழரின் தற்போதைய எண்ணிக்கையை கருத்தில் கொள்வதும் அவசியம் ஆகும்;
அதேபோல எண்ணிக்கைபடி தமிழர்  மியான்மர்(பர்மா), மலேசியா, சிங்கப்பூர், டென்மார்க், இலங்கை மற்றும் பல நாடுகளில் சிலபகுதிகளில் அப்பகுதி பூர்விக குடிகளைவிட அதிகம் வாழ்கின்றனர்;
அவை தமிழரின் பூர்வீக மண் இல்லை; எனவே அவற்றை நாம் கோரவியலாது.
ஆக்கிரமிக்கப்பட்டத் தமிழ்நாடு பற்றி நாம் அறியவேண்டியது நிறைய உள்ளது; 

பல நூறு வருடங்களாக வேற்றினத்தவர் தமிழர் எல்லைப்பகுதியில் தொடர்ந்து குடியேறியதும்;  தமிழர் அவர்களை ஆதரித்ததும், பின் தமது சொந்த மண்ணிலேயே தமிழர் சிறுபான்மையினராகும் அளவுக்கு வேற்றினத்தவர் குடிபுகுந்ததையும்; வேற்றினத்தவர் ஆட்சியில் (விசயநகர மற்றும் திராவிடக் கட்சிகளின் ஆட்சி) இவ்வகைக் குடியேற்றம் தமிழரின் பூர்விக நிலத்தின் மூலைமுடுக்குவரை ஒரு இடம் விடாமல் புகுத்தப்பட்டதும்; தமிழரின் பாரம்பரிய அடையாளங்கள் அழிக்கப்படுவதும் மறைக்கப்படுவதும் திரிக்கப்படுவதும் காலம்காலமாக தொடர்வதும்; வேற்றினத்தவர் ஆட்சியில்(நாய்க்கர் ஆட்சி) தமிழர் கூட்டம் கூட்டமாகத் தமது மண்ணைவிட்டு வெளியேற வேண்டிவந்ததும்(மும்பை மற்றும் தெற்காசிய நாடுகளுக்கு); 
  தமிழர் அடிமைகளாகக் கொண்டுசெல்லப்பட்டதும்(இலங்கை, தென்னாப்பிரிக்கா, மலேசியா போன்ற இடங்களுக்கு வெள்ளையர்களால்) ; உலகம் முழுவதும் பரவியுள்ளத்தமிழரின் பிரச்சனைகள் மற்ற பகுதித் தமிழருக்குத் தெரியாமல் மறைக்கப்படுவதும்(ஈழப்பிரச்சனை, மலேசியத் தமிழர் பிரச்சனை, அந்தமான் நிகோபர் தமிழர் பிரச்சனை, மற்றும் உலகம் முழுவதும் இரண்டாந்தரக் குடிகளாக தமிழர் நடத்தப்படுவது);  தமிழரின் தகவல் தொடர்பு ஊடகங்கள்(தொலைக்காட்சி ,நாளிதழ்) வேற்றினத்தவர் பிடியிலேயே எப்போதும் இருப்பதும்; தமிழுணர்வு எழுச்சி பெறவிடாமல் தமிழரை ஆண்டாண்டு காலமாக வேற்றினத்தவரே(தமிழகத் திராவிட , ஈழத்தில் சிங்கள மற்றும் தீவுகளில் வங்காளிய ஆட்சி)  அடிமைப்படுத்தி வருவதும்; தமிழ்மொழி ஆராய்ச்சிக்குப்(தமிழக, ஈழ நிலம் மற்றும் கடல்  அகழ்வாராய்ச்சி) போதிய முயற்சிகள் எடுக்கப்படாததும், வெளிநாட்டினரால் வெளிக்கொண்டு வரப்பட்ட தமிழரின் வரலாறும் (சிந்து சமவெளி, குமரிக்கண்ட ஆராய்ச்சிகள்) ஆதாரங்களும் மறைக்கப்படுவதும் தடைவிதிக்கப்படுவதும்;  தமிழரின் பாரம்பரியம் ,கலாச்சாரம் ,பண்பாடு மற்றும் நாகரீகம் காணாமல் அடிக்கப்பட்டதும்;  தமிழுடன் பிற மொழிக்கலப்பும் எழுத்துருக்கலப்பும்  பிறமொழிக்கல்வியும் ஊக்குவிக்கப்படுவதும்; தமிழ்ப் பயிற்சிக்கூடங்கள் , பல்கலைக்கழகங்கள் போதிய அளவு இல்லாததும்;
ஆங்கில இந்தி மொழித்திணிப்பும்;
 தமிழ் கலைகள் , மருத்துவம் அறிவியல் தொடர்ந்து தமிழருக்குத் தெரியாமல் பார்த்துக்கொள்ளப்படுவதும்; தமிழ் ஓலைச்சுவடிகள் பொருள் அறிந்து அச்சேற்றுவதில் மந்தப்போக்கும், ஆதித்தமிழ் எழுத்துக்களும் வார்த்தைகளும் எண்களும் கைவிடப்படுவதும்; 
தமிழரின் உரிமைகள் அனைத்தும் தொடர்ந்து மறுக்கப்படுவதும், தமிழர் போராட்டங்கள்
 (1940களில் நேதாசி தலைமையில் விடுதலைப் போராட்டம், 1950களில் மண்மீட்பு, 1960களில் மொழிப் போராட்டம், 1957 முதல் 1978 வரையான ஈழ மலையக அறவழிப் போராட்டம், 1980 களிலிருந்து ஈழ ஆயுதப்போராட்டம், அதே காலத்தில் தமிழக விடுதலைக்கான தமிழரசன் தலைமையிலான ஆயுதப்போராட்டம், 1995க்குப் பிறகான நதிநீர்ப் போராட்டங்கள், 2006க்குப்பின்  மலேசியத் தமிழர் போராட்டம், தற்போதைய அணுவுலைப் போராட்டம், மாணவர்ப் போராட்டம், புலம்பெயர்த் தமிழர் ஈழப் போராட்டங்கள்)
 புறக்கணிக்கப்படுவதும்,ஒடுக்கப்படுவதும், மறக்கடிக்கப் படுவதும்;மறைக்கப்படுவதும்;
தமிழுக்காகவும் தமிழருக்காகவும் தமிழ்மண் மீட்கவும் போராடியத் தலைவர்கள் (மபொசி, பெருஞ்சித்திரனார், மார்சல் நேசமணி, தொண்டமான், தந்தை செல்வா, பொன்னம்பலம், தமிழரசன், வீரப்பன், சீதையின் மைந்தன்) காணாமல் அடிக்கப்பட்டு வேற்றினத் தலைவர்கள் ,மன்னர்கள் முன்னிறுத்தப்படுவதும், தமிழர் உயிர் மிகவும் மலிவாகக் கருதப்படுவதும், தமிழருக்கெதிரானக் கலவரங்கள்(கர்நாடகா, கேரளா,இலங்கை, மலேசியா மற்றும் ஆந்திரா) இனப்படுகொலைகள் ,இனக்கலப்பு(ஈழம், மலையகம், பர்மா, தமிழக மீனவர்) தொடர்கதையாகி வருவதும்,
பேரழிவை ஏற்படுத்தும் அணுவுலைகள் மற்றும் ஆலைகள் தமிழர் தலையில் கட்டப்படுவதும்;
முதலாளித்துவ ஏகாதிபத்திய சுரண்டல்களும்;
திரைப்படம், மது, மட்டைப் பந்து என தேவையே இல்லாத விடயங்கள்  மூளையில் புகுத்தப்பட்டு இளந்தலைமுறையினர் காயடிக்கப்படுவதும்;
 தமிழரை சாதி ரீதியாக மதரீதியாகப் பிரித்து அவர்களுக்குள் மோதல்கள் ஏற்படுவதும்;
சாதியுணர்வு அரசியலும், மறைந்த தலைவர்களுக்கும் தமிழினத் தலைவர்களுக்கு  சாதிரீதியான அடையாளங்கள் கொடுக்கப்படுவதும்; மனிதநேய அடிப்படையிலான உதவிகள் கூடத் தமிழருக்குக் கிடைக்காததும்(ஈழம், மலையகம், வெளிநாட்டுவாழ் தமிழருக்கு இந்தியத் தூதரகம்,தமிழக ஈழ ஏதிலிகள்); உலக மக்கள் தமிழருக்கு எதிராகத் திருப்பப்படுவதும்(இந்தியா உலகநாடுகளை புலிகளைத் தடைசெய்ய வைத்தது, இலங்கை லிபியஅதிபர் மூலம் இசுலாமிய நாடுகளை தமிழருக்கு எதிராகத் திருப்பியது, இந்திய மக்களிடம் தமிழரை மொழிவெறியர்களாகத் தீவிரவாதிகளாகக் காட்டுவது);
தமிழரின் அறிவும் திறமையும் சுரண்டப்படுவதும்; தமிழக நீர், மண்வளங்கள் சுரண்டப்படுவதும் நாம் அறிந்து வைக்கவேண்டிய நினைவில் கொள்ளவேண்டிய  இன்னும் இன்னும் எண்ணிலடங்கா பிரச்சனைகள் தமிழர்மீது திணிக்கப்பட்டுள்ளன.

இவை அனைத்திலும் பெரும்பாலான பிரச்சனைகள் இனரீதியாகத் திணிக்கப்படுவது.
நம்மைச் சுற்றி வாழும் மக்களை விட நமது பிரச்னைகள் வேறுவிதமானவை.
இவற்றிற்கான தீர்வு தனிநாடு அமைவதே ஆகும்.
இந்தத் தீர்வு நாம் விரும்பும் ஒன்று இல்லை நம்மீது திணிக்கப்பட்ட ஒன்று.
நமக்கென்றொரு நாடும் வலிமையான படையும் இருந்தாலொழிய நாம் தப்பிப்பிழைப்பது நடவாத ஒன்று;
நாம் ஒரு முடிவிற்கு வராவிட்டால், நமது பிள்ளைகள் இன்னும் ஐந்தே தலைமுறைகளில் பிச்சைக்காரர்களாகவும்,கூலிகளாகவும், வேசிகளாகவும், நோஞ்சான்களாகவும், தெருவில் வாழ்க்கை நடத்தும் இழிநிலை மக்களாக இருப்பர்.
இருபது தலைமுறைக்குப் பிறகு அருங்காட்சியத்தில் நம் இனம் வாழ்ந்த தடையங்கள் மட்டும் கிடைக்கும். அழிந்த இனங்களின் பட்டியலில் நம் பெயர் இருக்கும்.

இதற்கு விடுதலை அடைந்த பல நாடுகளும் விடுதலைக்காக முழுமையாகப் போராடாமல் மடிந்த இனங்களும் உதாரணம்.
ஐந்துகோடி தமிழரின் குடிநீரை மறுக்கும் கொடுமை, தொடர்ச்சியான கொலைகள், கலவரங்கள், இனப்படுகொலை, அரசியல் அடக்குமுறை, மொழியுரிமை மறுப்பு போன்ற தலையாயப் பிரச்சனைகளில்கூடத் தமிழருக்கு மனிதநேய அடிப்படையில்கூட உதவாத இந்தியா உட்பட சுயநல சர்வதேச நாடுகள் நம்பிப் பலனில்லை இனி.
ஏற்கனவே நமது நிலத்தையும் விடுதலையையும் பெரும்பாலும் இழந்துவிட்ட நாம் வாழ்வின் கடைசிக் கட்டத்தில் நம் முன்னோர்களால் தள்ளபட்டுள்ளோம்;
இப்போதும் போராடவில்லை என்றால் வரலாற்றில் அழிந்த இனமாகக் கூட நம் பெயர்வராமல் மறைக்கப்படலாம்.
தமிழரே ! 
நம் சந்ததியின் எதிர்காலம் நம் கையில்.
நம்மைக் காக்க நம்மைத் தவிர இவ்வுலகில் யாருமில்லை.
ஈழமக்களைப் போலப் போராடி, குருதி சிந்தி, சாதனைகள் புரிந்து , இனவுணர்வுடன் நமக்கென்று தனிநாடு அமைக்கும் கட்டாயத்தில் இருக்கிறோம்.
தமிழினத்தின் வீரத்தையும் பெருமையையும் அறியுங்கள்.
ஆனால், அந்த வீரமும் பெருமையும் இல்லாத இனமாகவே நாம் இருந்தாலும் இப்போது போராடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

"நமது பிரச்சனைகளை மற்றொரு தமிழரிடம் மட்டும் கூறுங்கள்"

தமிழரை மட்டும் ஒன்றிணையுங்கள்;
தமிழராக இணையுங்கள்;
தமிழினத்திற்குள் எந்த  வேறுபாடும் இருக்கவேகூடாது.
நல்லவர்களாக இருப்போமோ இல்லையோ வல்லவர்களாக இருப்போம்;
நமக்கென்று ஒரு நிலப்பரப்பு;
அதில் மலை,கடல், கனிமம், எண்ணெய், வேளாண்மை, வனங்கள், தீவுகள் என அத்தனை வளங்களும் உள்ளன.
உலகமே சுற்றிவளைத்துத் தனிமைப்படுத்தினாலும் நாம் தனித்தியங்க முடியும்;
நமக்கு வலிமையான வீரம் செறிந்த படையிருக்கும், நமக்குள் எந்த பாகுபாடும் இருக்காது;
சாதி,மதம் என அனைத்து பிரிவினைகளும் கலையப்பட்டிருக்கும்;
தமிழன்னைக்கு வான்முட்டும் கோவில்கள்;
இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் பண்டையகாலத் தமிழர் வழிபாட்டுமுறை நாத்திகத்திற்கும் முன்னோடியாக பின்பற்றப்படும்;
ஏற்கனவே இருக்கும் வேற்றினத்தவரும் இனி குடியேறும் வேற்றினத்தவரும் தமக்கான உரிமைகள் பெற்றுப் பெருமையுடன் வாழ்வர்;
வேற்றினத்தவர் எவர் எங்கு அடக்குமுறைக்கு உட்பட்டாலும் அங்கே தமிழ்க் குடியரசின் குரல் ஓங்கி ஒலிக்கும்;
வேற்றின விடுதலைப் போராட்டங்கள் ஒடுக்கப்பட்டால் தமிழ்க்குடியரசின் வேட்டுச் சத்தங்கள் அங்கே ஓங்கி ஒலிக்கும்;
வேற்றினத்தவருக்கே அப்படியென்றால் உலகின் ஒரு மூலையில் ஒரு தமிழனைச் சீண்டினால் என்ன நடக்கும் என்று சொல்லவும் வேண்டுமா?
தமிழர் உரிமைக்குக் குறுக்கே நிற்கும் அத்தனை ஆற்றல்களும் வேரோடு கலைந்தெறியப்படும்;
தமிழர் அனைவரும் நிமிர்ந்து நடக்கும் காலம் வரும்;
இன்று நம்மை எதிர்க்கும் அத்தனைபேரும் நாளை வல்லரசாக இருக்கும் நமது நாட்டுக்கு வந்து சம்பாதிக்கத் துடிப்பார்கள்;
உலக மக்கள் தமிழனாகப் பிறக்கவில்லையே என்று ஏங்குவார்கள்;

2009 ல் இந்த உலகமே தமது கண்களை விரித்து பார்த்திருக்க, உலகமாந்தர் அனைவரையும் சுற்றி பார்வையாளர்களாக அமர்ந்திருக்க, அவர்கள் மத்தியில் சிங்களவெறியர் தமிழினத்தை சீரழித்த பிறகும் நாம் மற்றவரை நம்புவோமானால் நம்மைப்போன்ற மடையர்கள் யாரும் இருக்கமுடியாது.

வாருங்கள். 
இவ்வுலகின் எத்தனை பெரிய சாலை என்றாலும் என்றோ ஒரு மனிதன் தனது கால்களால் அடியெடுத்து வைத்துத் துவக்கிய ஒற்றையடிப் பாதைதான்.
நமது சந்ததிக்கான முதல் அடியாக இதைப் பகிருங்கள்.
தனிநாடு ஒன்றே நம் வருங்காலத் தமிழ்ப்பிள்ளைகளுக்கு நாம் சேர்த்துவைக்கும் விலைமதிப்பில்லா சொத்து.
அதற்கான பயணத்தைத் தொடங்கி வையுங்கள்

Monday, 19 June 2023

1978 இல் தமிழகத்தில் வெளியான ஈழ வரைபடம்

1978 இல் தமிழகத்தில் வெளியான ஈழ வரைபடம் 

 1977 ஆகஸ்ட் இல் சிங்களப் பகுதிகளில் தமிழர்கள் மீது கலவரம் நடந்தது. 300 தமிழர்கள் கொல்லப்பட்டனர். 50,000 தமிழர்கள் அகதிகளாக தமிழர் பகுதிகளுக்கு சென்றனர்.
 கொழும்பு மற்றும் மலையகத் தமிழர்கள் இதில் கடுமையாகப் பாதிப்பட்டனர்.
 இதன் அதிர்வலை தமிழகம் வரை பரவியது.
தமிழகத்தில் சிலர் கூடி "தமிழக ஈழ நட்புறவுக் கழகம்" எனும் அமைப்பு தொடங்கப்பட்டு 1978 இல் சென்னையில் கூட்டம் நடத்தப்பட்டு "இலங்கையில் ஈழம்" எனும் நூல் வெளியிடப்பட்டது.
 அதில் 1978 வரையான இலங்கை வரலாறு விளக்கப்பட்டுள்ளது.
சிறப்பாக மலையகத் தமிழருக்கும் ஈழத் தமிழருக்குமான வேறுபாடு தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
 இதில் தொடக்கத்திலேயே ஈழ வரைபடம் இடம்பெற்றுள்ளது.
அதில் 'இலங்கையின் வடக்கு, கிழக்கு, மலையகத்தின் ஒரு பகுதி அதாவது திரு. வன்னிய சிங்கம் கூறிய தமிழ்ப்பகுதியே. பருத்தித்துறை முதல் பதுளை வரை மன்னார் முதல் மட்டக்களப்பு வரை பொத்துவிலும் உள்ளடக்கிய பகுதியே இங்கு ஈழம் என்று குறிக்கப்படுகிறது' என்கிற விளக்கமும் உள்ளது.
 தமிழகத்திற்கு ஈழம் பற்றி எதுவும் தெரியாது என்கிற கருத்தை இந்நூல் பொய்யாக்குகிறது. 
 1980 இல் மதுரையில் ஈழ விடுதலைக்கு ஆதரவாக மாநாடு நடந்துள்ளதும் இங்கே குறிப்பிடத் தகுந்தது.
 
இந்நூலைப் பாதுகாத்து வைத்துள்ள படிப்பகம் (padippakam) இணையத்திற்கு நன்றி! 

மீண்டும் தனித் தமிழர்நாடு

மீண்டும் தனித் தமிழர்நாடு

"தனித் தமிழர்நாடு" புத்தகம் இரண்டாம் பதிப்பு வெளிவருகிறது
தனித் தமிழர்நாடு இரண்டாம் பதிப்பில் புதியதாக சேர்க்கப்படவுள்ள 13 தலைப்புகள்,
1) தமிழர் பேரரசுகள் 
(தமிழர் ஆண்ட பேரரசுகள் பற்றியது)

2) அசோக சக்கரம் சொல்லும் உண்மை
(அசோகர் ஆட்சியில் தமிழகம் இல்லாதது பற்றியது)

3) பெங்களூர் மைய நகரம் முழுக்க தமிழர்கள்
(பெங்களூர் நகரம் பற்றியது)

4) ஜமீன்களின் அட்டூழியம்
(கீழ வெண்மணி, குறிஞ்சாக்குளம் போன்றவை)

5) மொழி வரைபடம் 1822
(முதல் மொழி வரைபடம்)

6) தமிழகம் இழந்த நிலம் தற்கால நிலை

7) இரண்டாவது பெரும்பான்மை மொழிகள்
(தென்னிந்திய மாநிலங்களில் இரண்டாவது பெரும்பான்மை கொண்டு விளங்கும் மொழிகளின் மாவட்ட வரைபடம்)

8) 1978 இல் தமிழகத்தில் வெளியான ஈழ வரைபடம்

9) தமிழ்ப் பெருஞ்சுவர்
(சீனப் பெருஞ்சுவர் போல தடுப்பு சுவர் பற்றியது)

10) கண்டியில் தெலுங்கர் குடியேற்றம்
(கண்டி நாயக்கர் பற்றியது)

11) புலிகள் ஆண்ட ஈழம்
(புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதி பற்றிய வரைபடம்)

12) தேசிய தனியரசும் பழங்குடி துணையரசும்
(தமிழர்நாட்டில் பழங்குடி மக்களின் நில உரிமை பற்றியது)

13) இழந்தது தேவிகுளம் பீர்மேடு மட்டும்தானா?
(2011 இல் புதிய தலைமுறை இதழில் வந்த மண்மீட்பு கட்டுரை)

14) வேலைவாய்ப்பு இனத்தின் உரிமை
(வேலைவாய்ப்பில் மண்ணின் மைந்தர்கள் புறக்கணிக்கப் படுவது பற்றியது)

* சான்றுகள் குறைவாக உள்ளதால் நீக்கப்பட்டது
1) தாலியறுத்தான் சந்தை

* மொத்தம் 300 பக்கங்கள்
* 120 க்கும் மேற்பட்ட படங்கள் (55 வண்ணப்படங்கள்)
* முன்பை விட பக்கங்கள் குறைக்கப்பட்டு நான்கு பாகங்களாக பிரிக்கப்பட்டு வெளிவருகிறது.

ஐரோப்பியர் ஆட்சிக்கு முந்தைய ஈழம் வரைபடமாக

ஐரோப்பியர் ஆட்சிக்கு முந்தைய ஈழம் வரைபடமாக

 ஐரோப்பியர் காலத்து தமிழர் தாய்நில வரைபடம் இந்நூலில் தரப்பட்டுள்ளது.
 அது மட்டுமல்லாது இந்நூலில் அகழ்வாராய்ச்சி சான்றுகள் முதல் 1990 ஆம் ஆண்டு வரை நடந்த குடியேற்றம் வரை நமது தாய்நிலம் சுருங்கியது வரைபடமாகத் தரப்பட்டுள்ளது.
 தேவையான சான்றுகள் அனைத்தும் விரிவாக தரப்பட்டு உள்ளன.
சிறப்பான நூல்.
 

நூல்: தமிழீழம் நாடும் அரசும்
ஆசிரியர்: சு. இராசரத்தினம்

Monday, 23 January 2023

திருப்பதியில் தமிழைக் கண்டேன்

திருப்பதியில் தமிழைக் கண்டேன்

 திருப்பதி கருவறை சுற்றுச் சுவர்களில் முழுக்க தமிழ் வட்டெழுத்து மட்டுமே நிறைந்துள்ளது.
 அழிக்க முடியாத அளவுக்கு அழுத்தமாக பாமரனுக்கும் அது தமிழ் என்று புரியும் வகையில் வெட்டப்பட்டுள்ளது. 
 கல் சுமந்து மலையேறி கோவில் கட்டியது தமிழர்கள்!
 தமிழின ஆழ்வார்கள் உயிரைக் கொடுத்து வைணவம் வளர்த்தனர்!
 எல்லாம் எதற்கு தெலுங்கர் வளம்பெறவா?!
 வாசலில் பெரிதாக கிருஷ்ணதேவராயன் சிலையும் வைத்துள்ளனர். அடுத்தவன் பெற்ற பிள்ளைக்கு தன் பெயரை வைத்துக்கொள்ள கூச்சமே இல்லை! 
 
 எங்கும் ஒரே தெலுங்கு மயம்!

 மிகச் சமீபத்தில் தென்கலை நாமத்தை ஸ்டைலக வடகலை நாமமாக மாற்றியுள்ளனர்!
 
 உலகப் புகழ் பெற்ற திருப்பதி கோவிலை தமிழகத்திடம் ஒப்படைக்க வழக்கு தொடர்ந்தால் ஆந்திரா ஒப்படைத்துதான் ஆக வேண்டும்.

 ஆனால் அதற்கு நம்மிடம் வலுவான மாநில அரசும் நியாயமான நீதிமன்றங்களும் வேண்டுமே?! 

 அவையும் திராவிடத்திடமும் இந்தியத்திடமும் உள்ளனவே!

Sunday, 25 December 2022

மைசூர் தாண்டியும் தமிழ்க் கல்வெட்டுகள்

மைசூர் தாண்டியும் தமிழ்க் கல்வெட்டுகள்

 கர்நாடகா மாநிலத்தின் ஏறத்தாழ மையத்தில் சித்ரதுர்கா அருகே தமட்டக்கல் (thamatakal) எனும் இடத்தில் தமிழி வட்டெழுத்துகளால் ஆன கி.பி. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் ஒன்று உள்ளது. இதே காலகட்டத்தைச் சேர்ந்த பழைய கன்னட நடுகல்லும் இதனுடன் உள்ளது. அதில் 'ஏழூர் சாத்தன்' எனும் பெயர் காணப்படுகிறது.

 மைசூரிலிருந்து தென்கிழக்காக 50 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது 'தலக்காடு' என்னும் ஊர் இராஜராஜ சோழன் கங்கபாடியைக் கைக்கொண்டு "முடி கொண்ட சோழ மண்டலம்" பெயரிட்டு தலைநகரான தலவனபுராத்தை "தழைக்காடான இராஜராஜபுரம்" என்ற தன் பெயரை சூட்டினார். இவ்வாறு 120 ஆண்டுகள் இங்கு சோழர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர் பின்னர் ஹொய்சாள மரபினன் விஷ்ணு வர்த்தன் என்ற அரசன் கர்நாடக முழுமைக்குமான ஒரு பேரரசை கட்டியெழுப்ப துணிந்து தன் கி.பி. 1117ல் தலைக்காடு போரில் சோழப்பிரதியாக கங்கநாட்டில் ஆட்சி நிர்வாகம் புரிந்து வந்த அதியமானைக் கொன்று தலைக்காட்டை கைப்பற்றினார். மேலும் இவ்வெற்றியின் நினைவாக தலக்காட்டில் கீர்த்தி நாராயணன் என்ற கோயிலை எடுப்பித்தார். இக்கோவிலில் உள்ள அவ்வரசனது கல்வெட்டு தமிழில் உள்ளது. இதன்மூலம் அப்பகுதியில் வாழ்ந்த பொதுமக்கள் தமிழர் என்று அறியலாம்.
கல்வெட்டு வரிகள் வருமாறு,
"ஸ்வஸ்திஸ்ரீ விஷ்ணு வர்த்ன போய்சாள
தேவர் ஹேவிளம்பி- சம்வரத்து மார்கழி
மாசத்து பூர்வ பக்ஷத்து வெள்ளிக்கிழமை யும் பெற்ற
விசாகத்து நாள் அதியமானை
நிர்மூலித்து தலைக்காடு- கொண்டு ஸ்ரீகீர்த்தி
நாராயணப்பெருமானை திருப்ரதிஷ்டை பண்ணி -
இந்நாயனார்க்கு அமுதுபடிக்கும் சாத்துப்
படிக்கும் நித்தபோகத்துக்கும் ஆக விட்ட
திருவிடையாட்ட ஊர்கள் இவ்வூர் நகரம் குக்கூர்-
சிறுவிண்ணகர் ஓடப்பட்டி,வாகியூர் இவ்வூர்
ஆவனித்திரையும் ஏரிக்கீழ் கமுகம், வளமும் இத்தனையும் ஸ்ரீ விஷ்ணுவர்தன போய்சாள தேவன்
சர்வபரிகாரமாக அச்சந்திராற்கஸ்தாயி நடப்பதாக விட்டான் இதுக்கு அழிவு நினைத்தான் ஸ்வதத்த ப்ரதத்தம்...."

சான்று: https://www.newindianexpress .com/states/
karnataka/2021/sep/15/karnataka-6th-century-hero-stone-tamil-inscription-restored-in-tamatakallu-2359027.html

நன்றி: John Peter

 (தனித் தமிழர்நாடு புத்தகம் இரண்டாம் பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது)

தமிழ்க் கங்கர்

 தமிழ்க் கங்கர்

கோலார் நகரத்தின் பழைய பெயர் குவலாளபுரம் ஆகும். இது கங்கர்களின் தலைநகரம் ஆகும். இலக்கியத்தில் கங்கன் என்றொரு சிற்றரசன் பெயர் வருகிறது (அகநானூறு 44). ஏழு மன்னர்கள் கூட்டணி அமைத்து சோழன் பெரும்பூட் சென்னியுடன் போரிட்டபோது அந்த கூட்டணியில் கங்கன் இருந்தான். கங்கர்கள் கி.பி.350 முதல் 550 வரை தனியரசு செலுத்தி பின் பல்வேறு பேரரசுகளுக்கு அடங்கி சிற்றரசர்களாக ஆட்சி செய்தனர் (இவர்களின் ஒரு பிரிவினர் இன்றைய ஒரிசா மற்றும் ஆந்திர எல்லைப் பகுதியையும் ஆட்சி செய்துள்ளனர்). இவர்களின் கடைசி மன்னனும் சோழர்களுக்கு அடங்கிய சிற்றரசர்களாகவே இருந்தனர். இவர்களில் குறிப்பிடத்தக்கவன் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தைச் (பனிரெண்டாம் நூற்றாண்டு) சேர்ந்த அமராபரணன் சீயகங்கன். பவணந்தி அடிகள் நன்னூல் இயற்றியது இவனது அரசவையில்தான்.
நன்னூல் கூறுவது போல (பொன்மதிற் சனகைச் சன்மதி முனியருள் பன்னருஞ் சிறப்பின் பவணந்தி) இப்புலவர் பிறந்த சனகை என்பது மைசூர் மாவட்டம் திருமுக்கூடல் நரசிபுரம் தாலுகாவிலுள்ள சனாகாதபுரம் என்று சோழர் சரித்திரம் இரண்டாம் பாகத்தில் சதாசிவ பண்டாரத்தார் குறிப்பிட்டுள்ளார். நன்னூல் "குணகடல் குமரி குடகம் வேங்கடம் எனுநான் கெல்லையின் இருந்தமிழ்க் கடல்" என்று தமிழக எல்லைகளைக் குறிக்கிறது.
 இதன்படி வடக்கே குடகு மலை முதல் வேங்கடம் வரை தமிழ்நிலம் என்றாகிறது. இதனுள் மைசூரும் பெங்களூரும் அடங்கும். இந்த அமராபரணன் சீயகங்கனின் இயற்பெயர் "திருவேகம்பமுடையான்" என்பதாகும். இவன் மனைவி பெயர் "அரியபிள்ளை". இவனது மகனின் பெயர் "அருங்குன்றைப் பிள்ளையாரான செயகங்கன்". ஒரு மகளும் உண்டு அவள் பெயர் "வடவாயில் செல்வியாரான சந்திரகுல மாதேவியார்" என்பதாகும்.  கோலார் தமிழர் பகுதியே!

(தனித் தமிழர்நாடு புத்தகம் இரண்டாம் பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது)

Saturday, 17 December 2022

மீண்டும் தனித் தமிழர்நாடு

மீண்டும் தனித் தமிழர்நாடு

"தனித் தமிழர்நாடு" புத்தகம் இரண்டாம் பதிப்பு வெளிவருகிறது

தனித் தமிழர்நாடு இரண்டாம் பதிப்பில் புதியதாக சேர்க்கப்படவுள்ள 13 தலைப்புகள்,

1) தமிழர் பேரரசுகள் (தமிழர் ஆண்ட பேரரசுகள் பற்றியது)

2) அசோக சக்கரம் சொல்லும் உண்மை (அசோகர் ஆட்சியில் தமிழகம் இல்லாதது பற்றியது)

3) பெங்களூர் மைய நகரம் முழுக்க தமிழர்கள்
(பெங்களூர் நகரம் பற்றியது)

4) ஜமீன்களின் அட்டூழியம்
(கீழ வெண்மணி, குறிஞ்சாக்குளம் போன்றவை)

5) மொழி வரைபடம் 1822
(முதல் மொழி வரைபடம்)

6) தமிழகம் இழந்த நிலம் தற்கால நிலை

7) இரண்டாவது பெரும்பான்மை மொழிகள்
(தென்னிந்திய மாநிலங்களில் இரண்டாவது பெரும்பான்மை கொண்டு விளங்கும் மொழிகளின் மாவட்ட வரைபடம்)

8) 1978 இல் தமிழகத்தில் வெளியான ஈழ வரைபடம் 

9) தமிழ்ப் பெருஞ்சுவர்
(சீனப் பெருஞ்சுவர் போல தடுப்பு சுவர் பற்றியது)

10) கண்டியில் தெலுங்கர் குடியேற்றம்
(கண்டி நாயக்கர் பற்றியது)

11) புலிகள் ஆண்ட ஈழம் 
(புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதி பற்றிய வரைபடம்)

12) தேசிய தனியரசும் பழங்குடி துணையரசும்
(தமிழர்நாட்டில் பழங்குடி மக்களின் நில உரிமை பற்றியது)

13) இழந்தது தேவிகுளம் பீர்மேடு மட்டும்தானா?
(2011 இல் புதிய தலைமுறை இதழில் வந்த மண்மீட்பு கட்டுரை)

14) வேலைவாய்ப்பு இனத்தின் உரிமை (வேலைவாய்ப்பில் மண்ணின் மைந்தர்கள் புறக்கணிக்கப் படுவது பற்றியது)

* சான்றுகள் குறைவாக உள்ளதால் நீக்கப்பட்டது
1) தாலியறுத்தான் சந்தை 

* மொத்தம் 300 பக்கங்கள்
 * 120 க்கும் மேற்பட்ட படங்கள் (55 வண்ணப்படங்கள்) 
* முன்பை விட பக்கங்கள் குறைக்கப்பட்டு நான்கு பாகங்களாக பிரிக்கப்பட்டு வெளிவருகிறது.

  

Friday, 17 April 2020

இலக்கியத்தில் வடமேற்கு மலைகள்

இலக்கியத்தில் வடமேற்கு மலைகள்

  ஒரு குறிப்பிட்ட பகுதியை ஒரு குறிப்பிட்ட மொழியினர் உரிமை கோர முதன்மையான தேவை இலக்கியச் சான்று ஆகும்.

 அப்படி இலக்கிய அடிப்படையில் தற்போதைய கேரளா மட்டுமல்லாது அதையும் தாண்டி கர்நாடகாவின் மைசூர், கூர்க் ஆகியவற்றுடன் சிக்கமகளூர் வரை நமக்குச் சொந்தமானது என்றாகிறது.

 மைசூர் எனும் எருமைநாடு பற்றி ஏற்கனவே பார்த்தோம்.
 தற்போது மலைகள் பற்றி பார்ப்போம்.

நளிமலை :-

 நீலகிரி மாவட்டத்தில் ஒருபக்கத்தில் இருந்து கன்னடரும் இன்னொரு பக்கத்திலிருந்து மலையாளிகளும்  குடியேறி இன்று தமிழரை விட அதிகமாகிவிட்டனர்.
 இப்பகுதி அரசியல் தலைமைகளும் வேற்றினத்தவர் கைகளுக்குச் சென்றுவிட்டது.

 நீலகிரி சங்ககாலத்தில் நளிமலை என்று அழைக்கப்பட்டது.
 நளி என்றால் குளிர்ச்சி என்று பொருள்.
 தமிழர் நிலத்திலேயே மிகவும் குளிர்ச்சியான இடம் இதுவே!

 குளிர்ந்த நளிமலை பற்றியும் அதை ஆண்ட வேட்டுவ குலத்தைச் சேர்ந்த நள்ளி (முழுப் பெயர்:  கண்டீரக் கோப்பெருநள்ளி இவன் கடையேழு வள்ளல்களில் ஒருவன்) எனும் காட்டு அரசன் பற்றியும் புறநானூறு (148 - 150) கூறுகிறது.

 சிலப்பதிகாரம் கால்கோட் காதையில் சேரன் செங்குட்டுவன் 'நீலகிரி' வந்து தங்கியிருந்தது பற்றியும்
அப்போது மிக்கரிய நிறமுடைய 'கொங்கணக் கூத்தர்' மற்றும் 'கருநாடர்' ஆகியோர் தமக்கே உரிய தனிப்பட்ட கலாச்சாரத் தோற்றத்துடன் வந்து 'மாதர்ப் பாணி' எனும் காதல்கலந்த பாடலைப் பாடி ஆடினர் என்று குறிப்பு உள்ளது
(இதை கன்னடர் தமது சான்றாக முன்வைக்கலாம்).
 இதேபோல குடகர்களும் ஓவர்களும் வந்து ஆடிப்பாடி சேரனை மகிழ்வித்து பரிசு பெற்றுச் சென்றனர்.

 --------------

கண்டீரமலை :-

  நீலகிரி மலைகளில் ஒன்று கண்டல் மலை.
இதுவே சங்ககாலத்து கண்டீரமலை ஆகும் (ஈரம் துண்டுதுண்டாக அதாவது பனிக் கண்டுகள் கிடக்கும் மலை என்று பொருள்).
 புறநானூறு 151 இல் நள்ளியின் தம்பி கண்டீரக்கோன் பற்றி உள்ளது.
---------

தோட்டிமலை :-

 தொட்டபெட்டா சிகரம் தோட்டி என்று இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 தோட்டி என்பது யானையை செலுத்த பாகன் பயன்படுத்தும் கோலைக் குறிக்கும்.
 அதைப்போன்ற கூரிய வளைந்த தோற்றம் உடைய மலைச் சிகரம் என்கிற பொருள்படும்படி தோட்டிமலை என்று அழைக்கப்பட்டது.

 இந்த தோட்டி மலையை ஆயர் தலைவன் 'கழுவுள்' என்பவன் சேரனிடம் போரில் இழந்தான் என்று பதிற்றுப்பத்து (8 - 71) கூறுகிறது.

 பரிபாடல் (5-86) இம்மலையை இருந்தோட்டி என்று குறிப்பிடுகிறது.
------------

 குதிரைமலை :-

தற்போதைய சிக்கமகலூரு மாவட்டத்தில் உள்ள Kudremukh எனும் குதிரைமுக மலை பற்றி இலக்கியங்களில் பல குறிப்புகள் உள்ளன.
 குதிரை முகம் போன்ற அமைப்புடைய உயர்ந்த மலையை ஒட்டி போக்குவரத்துக்கான ஒரு கணவாய் இருந்துள்ளது.
  அது பற்றியும் அம்மலையை ஆண்ட பிட்டன் பற்றியும் அகநானூறு (143) கூறுகிறது.

 பிட்டனின் மகன் பிட்டங்கொற்றன் பற்றி புறநானூறு (168) கூறுகிறது.
 அதில் ஊராக் குதிரை என்று குறிப்பிடப்படுகிறது குதிரைமலை. அங்கு வாழ்ந்த குறவர் பற்றியும் விலங்குகள் பற்றியும் தாவரங்கள் பற்றியும் விரிவாகக் கூறுகிறது.

 நீண்ட பாதையைக் கொண்ட குதிரைமலையை ஆண்ட அஞ்சி என்ற அரசன் பற்றி அகநானூறு (372) கூறுகிறது.

 உயர்ந்த குதிரைமலையை ஆண்ட எழினி பற்றி புறநானூறு (158) கூறுகிறது.

 குதிரைமலையின் மக்கள் மழவர் ஆவர்.
 ஆறு மலைமுகடுகளை உடைய யானை போன்ற மலையான  பொதினி (பழனி) மலையின் அரசன் முருகனிடம் தோற்றனர் என்று அகநானூறு (1) கூறுகிறது.

 Kutremukh என்பதற்கு கன்னடத்திலும் குதிரை முகம் என்றே பொருள்.
 அதன் பெயர் குதிரைமுகம் போன்ற தோற்றத்தினால் ஏற்பட்டது என 1908 இல் வெளிவந்த Imperial Gazetteerof Mysore & coorg ல் பக்கம் 233 மற்றும் 109 ல் பதிவாகியுள்ளது.
---------

ஏழில்மலை :-

 ஏழு மலைமுகடுகளைக் கொண்ட மலை என்பதால் ஏழில் மலை என்றழைக்கப்பட்டது.
 இதனூடாகவும் ஒரு மலைப்பாதை இருந்துள்ளது.
 சமஸ்கிருதத்தில் இது சப்தகிரி என்று அழைஐக்கப்பட்டது.
 பத்தாம் நூற்றாண்டிலிருந்து எலிமலை என்று மாறிவிட்டது.
 பிற்கால ஐரோப்பியர் குறிப்பிலும் எலி எனும் பெயராலேயே குறிக்கப்பட்டுள்ளது.
 (ஆனால் மலையாளத்தில் ezhi அதாவது எழி என்றே எழுதுகின்றனர்).

 இதை ஏழில்குன்றம் என்று குறிப்பிடும் நற்றிணை (391),
 கொங்காண அரசன் நன்னன் வளமான இம்மலையை ஆண்டு வந்தான் என்றும் கூறுகிறது.

[கொங்காண நாடு என்பது கொங்குநாட்டின் வடக்கே இருந்த நாடு.
 கொள் விளையும் காட்டுப் பகுதி என்று பொருள்.
 இன்றைய கர்நாடகத்தின் தென்மேற்கு பகுதியே இது.
 இங்கே எருமைகள் மிகுதி.
 கோவா மற்றும் அதைச் சுற்றி பேசப்படும் மொழி கொங்கணி ஆகும்.
 இவர்கள் கொங்கணர் என்கிற வேற்றினத்தவராக இலக்கியத்தில் குறிக்கப்பெற்றுள்ளனர்.
 இரண்டையும் குழப்பிக்கொள்ள வேண்டாம்.
 கொங்காணத்தை ஆண்ட நன்னன் தமிழரான வேளிர் குலத்தவனே!
 இதற்குச் சான்றாக நன்னனை "வேண்மான்" என்று அகநானூறு (97) கூறுகிறது.
 "நன்னன் உதியன்" என்பவன் தொன்மையான வேளிர் குலத்தின் செல்வங்களை தன் பாழி நகரில் வைத்து பாதுகாத்தான் என்று அகநானூறு (258) கூறுகிறது]

 ஏழில் குன்றத்து கணவாய் பற்றியும் அங்கிருக்கும் யானைகள் பற்றியும் அகநானூறு (349) கூறுகிறது.

 யானைகளைப் பரிசாக அளிக்கும் வழக்கமுடைய நன்னனின் நாட்டில் மயில்கள் நிறைந்த ஏழில்மலை உள்ளதென்று அகநானூறு (152) கூறுகிறது.

 ஏழில்குன்றத்து பெண்கள் வேங்கைப் பூவைப்பிண்ணி இடையில் அணிவர் என்று அகநானூறு (345) கூறுகிறது.
--------

முதுமலை:-

 சங்ககாலத்தில் முதிரம் என்று அழைக்கப்பட்டது.
 மூங்கில்களும் பலாமரங்களும் குரங்குகளும் காய்கனிகளும் நிறைந்த இம்மலையை வள்ளலான குமணன் ஆண்டான் என்று புறநானூறு (158, 163) கூறுகிறது.
-----------

 குடகு மலை:-

 குடகு மலை தற்போது கொடகு என்றும் (ஆங்கிலத்தில் coorg அங்கே வாழும் இனத்தவர் கொடவா என்றும் அழைக்கப்படுகின்றனர்.

 குடகுமலையை குடமலை என்று குறிப்பிட்டு அங்கே காவிரி பிறக்கிறது என்று மலைபடுகடாம் (527) கூறுகிறது.

 குடமலையில் சந்தனமும் அகிலும் கிடைக்கும் என்று பட்டினப்பாலை (188) குறிக்கிறது.

 குடகுமலை உச்சியை (குடகக் கவடு) பிளந்து சோழன் காவிரியைக் கொண்டு வந்ததாக விக்கிரமசோழன் உலா (24) கூறுகிறது.

 காவிரி குடமலையில் பிறந்து கடலில் கலப்பதை சிலப்பதிகாரம் (10: 106) பாடுகிறது.

 குடமலையில் உள்ள மாங்காடு எனும் ஊரில் வாழ்ந்த அந்தணர் பற்றி சிலப்பதிகாரம் (11) கூறுகிறது.

 குடகுமலையை 'மேற்கில் இருக்கும் பொன்பதித்த மலை' எனுமாறு 'குடாஅது பொன்படு நெடுவரை' என்றழைத்து அங்கே காவிரி பிறப்பதாக புறநானூறு (166) கூறுகிறது.

 ஏற்கனவே கூறியதுபோல குடகர் சேரன் முன்பு நடனமாடி பரிசு பெற்ற செய்தி சிலப்பதிகாரத்தில் வருகிறது.
 ஆனால் அதில் கொங்கணரும் கருநாடரும் தனித்த தோற்றத்துடன் இருந்ததைக் குறிப்பிட்ட இளங்கோவடிகள்,
 ஓவர் (ஓவியர்) மற்றும் குடகர் தனித்த தோற்றம் உடையவரென எதுவும் கூறவில்லை.
 என்றால் இவ்விருவரும் தமிழரில் ஒரு அங்கமாக இருந்திருக்க வேண்டும்.

 அதாவது சேரன் இமயமலைக்குச் செல்ல படையுடன் தனது தலைநகரிலிருந்து புறப்பட்டு நாட்டின் எல்லையான நீலகிரிக்கு வருகிறான்.
 அப்போது அருகாமை இனத்தவரான கருநாடரும் கொங்கணரும் சேரநாட்டுக்குள் வந்து கலைநிகழ்ச்சி நடத்தியுள்ளனர்.
 சேரநாட்டின் எல்லைப்புறத்து மக்களான குடகரும் ஓவியரும் கலைநிகழ்ச்சிகள் நடத்தியுள்ளனர்.

 இதன்பிறகு சேரனின் நட்புநாட்டவரான "நூற்றுவ கன்னர்" (சாதவாகனர்) மிக அதிகளவு பரிசுகளுடன் நூற்றுக்கணக்கான கூத்தாடிகளையும் சஞ்சயன் எனும் தூதுவன் தலைமையில் அனுப்பி
"ஒரு கல்லுக்காக ஏன் இமயம் போகிறீர்கள் நாங்களே எடுத்துக்கொண்டுவந்து தருகிறோம்" என்று செய்தி சொல்ல வைக்கின்றனர்.
 இது எதைக் காட்டுகிறது என்றால் சேரன் இன்னும் தனது எல்லையைவிட்டு படையுடன் வெளியேறவில்லை என்பதைத்தான் காட்டுகிறது.

 கன்னடர் மற்றும் மலையாளிகள் நாம் காட்டிய இலக்கியச் சான்றினை விட பழமையான தமது மொழியின் இலக்கியச் சான்றினைக் காட்டினாலொழிய நாம் மேற்கண்ட மலைகளை விட்டுக்கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை.

Tuesday, 7 April 2020

இலக்கியத்தில் எருமையூர்


இலக்கியத்தில் எருமையூர்
 
புராணங்களின் படி மகிஷாசுரனை மகிஷாசுரமர்த்தினி வதம் செய்த இடம் என்று கருதப்பட்டு மைசூருக்கு மகிஷாசுரமர்த்தினிபுரம் என்ற பெயர் இருந்ததாகவும் பிறகு சுருங்கி மகிஷபுரம் என்றாகி பிற்பாடு மைசூர் என்றானதாகவும் சிலர் கூறுகின்றனர்.
இது பொருத்தமான வாதமாகத் தோன்றவில்லை.
உண்மையில் மகிஷாசுரமர்த்தினி பற்றி வட இந்தியாவிலேயே கி.பி 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புராணங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
கர்நாடகத்தில் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சான்றே காணப்படுகிறது.
மைசூர் என்பது உண்மையில் எருமையூர் ஆகும்.
எருமைகள் மிகுந்த ஊர் என்று பொருள்கொள்ளலாம்.
கர்நாடகம் இன்று எருமை வளர்ப்பில் பின்தங்கிவிட்டாலும் கலாச்சாரத்தில் முக்கியத்துவம் உள்ளது.
நமக்கு சல்லிக்கட்டு போல கன்னடர்க்கு எருது போட்டி (மரபணு ஆய்வின் படி உலகிலேயே பழமையான எருது வகை இந்திய நீர் எருமைகள் தான்).
எருமை என்பதற்குச் சமற்கிருதச் சொல் மகிஷம்.
எருமையூர் என்பது மகிசூர் என்றாகிப் பிறகு மைசூர் என்றாயிற்று என்பர்.

  ஆனால் எருமையூர் மையூர் என்றும் அழைக்கப்பெற்றுள்ளது.
மையூர் என்பதே மைசூர் என்று ஆகியிருக்கவேண்டும்.
இதுவே இயல்பான மாற்றமாகப் படுகிறது.
இதற்கு இலக்கியச் சான்றாக வேளிர் குடியைச் சேர்ந்த 'மையூர் கிழான்' என்பவர் சேரமன்னன் இளஞ்சேரல் இரும்பொறையிடம் அமைச்சராக இருந்ததாக பதிற்றுப்பத்து கூறுகிறது (காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு).
மைசூர் நகரின் பெயராலே அம்மாநிலம் முழுவதும் 1980 வரை வழங்கப்பட்டது.
பிறகுதான் கர்நாடகா என்று மாற்றினர்.
எருமையூர் பற்றி இலக்கியங்களில் உள்ள குறிப்புகள்,
வடிகட்டப்பட்ட கள் கிடைக்கும் எருமையூர் எனுமாறு
"நார் அரி நறவின் எருமையூரன்" அகநானூறு (36) கூறுகிறது.
குடநாடு என்பது சேரநாட்டின் வடபகுதி.
இதில் நுண்வேலைப்பாடு நிறைந்த பூண் அணிந்த (கொம்புகளை உடைய) எருமை மாடுகள் நிறைந்திருந்தன என்பதை 'நுண்பூண் எருமை குடநாட்டன்ன' (அகநானூறு 115) எனும் வரிகள் உணர்த்தும்.
சேரநாட்டு வளத்தைக் கூறும் சிறுபாணாற்றுப்படை (41- 46) செங்கழுநீர்ப் பூக்களை எருமைகள் மிகுதியாக மேய்ந்துவிட்டு பலாமர நிழலில் உறங்கின என்று கூறுகிறது.
அதாவது சேரநாட்டிலும் அதையொட்டிய எருமைநாட்டிலும் எருமைகள் அதிகளவு இருந்தன.
ஆனால் அயிரி ஆறு (ஹரங்கி ஆறு) பாயுமிடத்தில் வடுகரின் எருமை நாடு இருந்தது எனுமாறு,
"வடுகர் பெருமகன் பேரிசை எருமை நன்னாடு"
என்று அகநானூறு (253) கூறுகிறது.
இதில் கூறப்பட்டுள்ள
'வடுகர் பெருமகன் எருமை நன்னாடு' என்பதை
'வடுகப் பெருமான் ஆளும் எருமை நாடு'
என்று பொருள் கொண்டால் 'எருமைநாடு' என்பது வடுகரின் நாடு என்றாகிறது.
இதை கன்னடர் தமது தரப்பு சான்றாக வைக்கக்கூடும்.
ஆனால் 'வடுகனான எருமை என்பான் ஆளும் நாடு'
என்று பொருள்கொள்வது சரியாக இருக்கும்.
ஏனென்றால் இப்பாடல் வரிகள் முதலில் அவனது பண்புகளைக் கூறி அத்தகைய எருமையின் நாட்டில் அயிரியாறு பாய்கிறது என்று அவனைப் பற்றித்தான் கூறுகிறதே தவிர அவனது நாட்டைப் பற்றி கூறவில்லை.

எருமை என்பவன் இரவில் தாக்குபவன் என்றும்
மாடுகளை மேய்க்கும் போது கோவலர் எழுப்பும்  ஒலிகளைக் கற்றுக்கொண்டு அதுபோல் ஒலியெழுப்பி காளைகளையும் கன்றுடன் பசுக்களையும் கவர்ந்து சென்று தனது மண்டபம் நிறைய கட்டிவைத்திருப்பவன் என்றும்
வலிமையான தோள்களை உடையவன் என்றும் கூறி
அவனை வடுகர் பெருமகன் என்றும் கூறுகிறது.
ஒரு குறிப்பிட்ட குடியின் தலைவனை அக்குடிப் பெயருடன் 'பெருமகன்' என்று சேர்த்துக் கூறுவது வழக்கம்.
எ.கா: ஆவியர் பெருமகன் (பேகன்)
கள்வர் பெருமகன் (தென்னன்)
குறவர் பெருமகன் (ஏறைக்கோன்)
ஆக 'வடுகரின் தலைவனான எருமை' என்று பொருள்கொள்வதே சரி!
அயிரி ஆறு எனும் ஹரங்கி ஆறு காவிரி உற்பத்தி ஆகி சிறிது தூரம் ஓடியதும் அதில் வந்து கலக்கும் குறுகிய நீளமுள்ள ஆறு ஆகும் (717 கி.மீ).
அயிர் என்பது நுண்ணிய அல்லது மிகச்சிறிய என்ற பொருளைத் தரும்.
எனவே இந்த ஆறுக்கு இது பொருத்தமான பெயரே!
(இவ்வாறு பற்றி அகநானூறு 177 இலும் வருகிறது)
இந்த சிற்றாறு எருமை ஆண்ட நாட்டின் முக்கிய நதி என்று கூறுவதன் மூலம் அவனது நாடு மிகவும் சிறியது என்பதையும் ஊகிக்கலாம்.
என்றால் குடகு வரை சேரர் ஆண்டதும்.
அதற்கு வடக்கே வடுகரின் மொழிபெயர் தேயம் இருந்ததையும் ஊகிக்கலாம்.
அதாவது தற்போதைய கூர்க் மாவட்டம் பாதிவரை சேரநாட்டுடையது.
பிற்பாடு ஹொய்சள அரசர் சாசனத்திலும் எருமை என்னும் பெயரால் மைசூர் குறிக்கப்பட்டுள்ளது
(சான்று: Epigraphia Carnatica., Vol X c. w. 20).
எனவே மகிஷூர் என்பது மைசூரின் பழைய பெயர் இல்லை.
படம்: எருமைநாடு மற்றும் அதனருகில் வடுகர் நாடு


Saturday, 4 April 2020

தொடரும் வன ஆக்கிரமிப்பு

தொடரும் வன ஆக்கிரமிப்பு

மலையாளிகள் தமிழகத்து காடுகளை தினமும் ஒரு ஏக்கர் ஆக்கிரமிக்கிறார்கள் என்றால் அது மிகையில்லை.

தேனி மாவட்ட கம்பமெட்டு பகுதி இதற்கு நல்ல உதாரணம்.
தமிழக வனத்துறை, காவல்துறை, கலெக்டர், அமைச்சர் என அத்தனை பேர் வந்து பார்த்தும் எதுவுமே செய்யமுடியவில்லை.

கேரளா வன ஆக்கிரமிப்பு 1990 களில் மிகத் தீவிரமாக நடந்தது.
தேனி மாவட்டத்தில் குமுளியில் துவங்கி ஒன்னாம் மைல், இரண்டாம் மைல், ஆசாரிபள்ளம், கம்பமெட்டு, துாக்குபாலம், குதிரைபாஞ்சான், ராமக்கல்மெட்டு, போடிமெட்டு வரை வனப்பகுதிகள் நீள்கிறது.

குமுளி முதல் போடிமெட்டு வரை தமிழக வனப்பகுதி 700 எக்டர் வரை  ஆக்கிரமிப்பில் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
பூகோள அமைப்பில் கேரள மாநில பகுதியில் குடியிருப்புக்களாகவும், தமிழகத்தில் வனப்பகுதிகளாகவும் அமைந்துள்ளன.
இதனால் அரச ஆதரவுடன் மிக எளிதாக தமிழகப்பகுதிகளை ஆக்கிரமித்து காபி, ஏலக்காய், மிளகு, வாழை சாகுபடி செய்வது, குடியிருப்பு, சிறு தொழில், காற்றாலை மின்சாரம் தயாரிப்பு, சுற்றுலா, சொகுசு மாளிகைகள் என மலையாளிகள் அனுபவித்து வருகின்றனர்.

1994 ஆசாரிபள்ளம் பகுதியில் மிகப் பெரிய ஆப்பரேஷன் நடத்தி, 150 எக்டேர் வனப்பகுதியை தமிழக வனத்துறை மீட்டது.
ஆனால் எஞ்சிய பகுதிகளை மீட்கமுடியவில்லை.

கம்பமெட்டு பகுதியில் 2014 இல் மீண்டும் முழுமூச்சுடன் இறங்கிய மலையாளிகள் சிறிது சிறிதாக 500 மீட்டர் வரை ஆக்கிரமித்தனர்.

எந்த அதிகாரி நடவடிக்கை எடுக்க முற்பட்டாலும் உடனடியாக டிரான்ஸ்பர் செய்யப்படுவது வழக்கமாக இருந்தது.

2017 இல் இவர்கள் மெயின்ரோட்டில் ஒரு கன்டெயினர் வைத்து செக் போஸ்ட் அமைத்தபோது பாரஸ்டர் ராஜூ என்பவர் தட்டிக்கேட்க அவரை அடித்து கீழே தள்ளினர் மலையாள அதிகாரிகள்.
அவர் காவல்துறையை அழைத்துவர போக்குவரத்து பாதிக்கப்பட பிரச்சனை பெரிதானது.

தாசில்தார் வந்து பேசிப்பார்த்தபோதும் சர்வே எடுக்க விடாமல் மலையாளிகள் பிரச்சனை செய்தனர்.

பிறகு கலெக்டர் வந்து பேசியும் அவர்கள் வழிக்கு வராததால் அமைச்சர் உதயகுமார் நேரில் வந்து பார்வையிட்டார்.

அப்போது எடுத்த சர்வேயில் அந்தப்பக்கத்து கேரள காவல்நிலையமே தமிழக எல்லைக்குள் வருவது தெரிந்தது.

அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தி கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிப்புகளை அகற்றிவிடுவோம் என்று சொன்னார்.

கூட்டு சர்வே தேதி அறிவித்தார்கள்.

மலையாள நாளிதழ்கள் தமிழக அரசு இப்பகுதியில் கேரள மின்சாரத்தைத் திருடுவதாக செய்திகளை வெளியிட்டன.

பல பெரிய நிலப்பரப்புடன் அரியவகை மரங்கள், விலங்குகள், ஒரு அருவி என மலையாளிகள் விழுங்கியிருப்பது மிக அதிகம்.

இடையில் தென்னிந்தியா பார்வார்டு பிளாக் சார்பில் 50 பேர் சென்று எல்லைக் கற்களைப் பிடுங்கி எறிந்து ஆர்ப்பாட்டம் செய்து போராட்டம் நடத்தினர்.

அதன் பிறகு இருமாநில குழு சர்வே செய்து போனமாதம் நட்ட 14 எல்லை கற்களை ரகசியமாகப் பார்வையிட்டார் எம்.பி ஜோய்ஸ் ஜார்ஜ்

பிறகு நடப்பட்ட 14 கற்களையும் எம்.பி ஜோய்ஸ் ஜார்ஜ் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் பிடுங்கி எறிந்தனர்.
[தினகரன் 23.06.2017
தலைப்பு: கம்பம்மெட்டில் தொடரும் பதற்றம் தமிழக எல்லைக்கற்களை பிடுங்கி வீசி அட்டூழியம்]

1750 ஏக்கர் (700 ஹெக்டேர்) தமிழக வனப்பகுதியை ஆக்கிரமித்தபடி அமர்ந்திருக்கும் மலையாளிகள் இன்றுவரை ஒரு அங்குலம் கூட பின்வாங்கவில்லை.

இப்பிரச்சனையில் தினமலர் (தேனி மாவட்ட பதிப்பு) தொடர்ச்சியாக கவனம் செலுத்தி  வெளியிட்ட செய்தித் தலைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

கேரள ஆக்கிரமிப்புகளை
அகற்றாத தமிழக வனத்துறை
[செப் 09, 2019]

ஆக்கிரமிக்கப்பட்ட தமிழக வனப்பகுதிகள் மீட்பது எப்போது:முயற்சி கூட எடுக்காமல் வேடிக்கை பார்க்குது வனத்துறை
[செப் 20,2018]

தமிழக வனப்பகுதி
ஆக்கிரமிப்பு படிப்படியாக
அகற்ற திட்டம்
[மே 06, 2018]

ஆக்கிரமிக்கப்பட்ட தமிழக
வனப்பகுதிகள் மீட்கப்படுவது எப்போது? அதிரடியாக களம்
இறங்குமா வனத்துறை
[பிப் 02, 2018]

தமிழகம் மின்சாரம்
திருடுகிறதாம்! அவதூறு
பரப்புகிறது கேரளா
[ஆக் 07, 2017]

கம்பமெட்டில் தமிழக
வருவாய்த்துறை அமைச்சர்
ஆய்வு : வன எல்லை
நிர்ணயத்திற்கு கூட்டு சர்வே
செய்ய நடவடிக்கை
[ஆக் 05, 2017]

கம்பமெட்டில் சர்வே கற்களை
ஊன்றி போராட்டம் :
தென்னிந்திய பார்வர்டு பிளாக்
கட்சியினர் கைது
[ஜூலை 04, 2017]

தமிழக சர்வே கற்கள் அகற்றம்:
கேரள ஆக்கிரமிப்பு கும்பல்
அடாவடி
[ஜூன் 22, 2017]

தமிழக -- கேரள வன எல்லை
நிர்ணயம் ஜூன் 7ல் கூட்டு சர்வே
[ஜூன் 04, 2017]

வனப்பகுதியில்
கண்காணிப்பு கோபுரம்
அமைப்பது குறித்து இடத்தேர்வில் அதிகாரிகள் தீவிரம்
[மார் 25, 2017]

மாவட்ட வன அலுவலர்
டிரான்ஸ்பர் ஆக்கிரமிப்பு
அகற்றுவதில் தொய்வு
[மார் 10, 2017]

தமிழக வனப்பகுதி மீட்கப்படுமா -
மாவட்ட அதிகாரிகள் பாராமுகம்
[பிப் 27, 2017]

கம்பமெட்டில் செக்போஸ்ட்:அடம்
பிடிக்கும் கேரளா : தமிழக
அதிகாரிகள் ஏமாற்றம்
[பிப் 24, 2017]

தமிழக வனப்பகுதிகளில்
ஆக்கிரமிப்பு... தொடர்கிறது:
வன எல்லை நிர்ணயம் அவசியம்
[பிப் 25, 2016]

கம்பம் மெட்டு அருகே கேரள
காற்றாலைக்கு தமிழக
வனப்பகுதியை ஆக்கிரமித்து
ரோடு
[ஜூன் 23, 2014]

தமிழ் எழுத்துக்களில் மலையாளம் (1789)

தமிழ் எழுத்துக்களில் மலையாளம் (1789)

1789 இல் திப்பு சுல்தான் கொச்சி டச்சுப்படைக்கு எழுதிய கடிதம் மற்றும் அதற்கு டச்சு தரப்பில் அனுப்பப்பட்ட மறுமொழி இங்கே தரப்பட்டுள்ளது.
  இதில் மலையாளம் தமிழ் எழுத்துக்களில் எழுத்தப்பட்டுள்ளதைக் காணலாம்.
சான்று: The dutch in malabar (page 110)
 அதாவது 9 ஆம் நூற்றாண்டிலேயே தமிழ் வட்டெழுத்து முறையுடன் சமஸ்கிருத உச்சரிப்புக்கான கிரந்த எழுத்துக்கள் கலந்து எழுதி மலையாள எழுத்து வடிவம் உருவாக்கப்பட்டுள்ளது.
 (இந்த கிரந்த எழுத்துகள் தமிழ் வடிவம் தழுவியவை, சமஸ்கிருதம் எழுதவே இந்த கிரந்த முறை அதிகம் பயன்பட்டது)
 இப்படி கேரளா முழுவதும் பல்வேறு எழுத்துமுறைகள் தோன்றின.
 1500 களில் துஞ்சத்து இராமானுசன் எழுத்தச்சன் என்பவர் மலையாள எழுத்துக்களை ஒழுங்காக்கி தொகுத்து தற்போதைய மலையாள எழுத்துருவைத் தோற்றுவித்தார்.
 ஆனால் 1800 கள் வரை புழக்கதில் கிரந்தம் கலந்த தமிழ் எழுத்துக்களே இருந்தன.
 1772 இல் மலையாளம் அச்சில் ஏறியது.
 1842 இல் முதல் முழுமையான மலையாள புத்தகம் வெளிவந்தது.
 1872 இல் மலையாள அகராதி வெளிவந்தது.
 இறுதியாக கேரளத்தின் வடபகுதியான மலபார் 1950 களில் தமிழ் எழுத்துருக்களை கைவிட்டது.
1971 இல் தான் மலையாள எழுத்துக்கள் குறைக்கப்பட்டு எளிதாக்கப்பட்டு தற்போதைய வடிவத்தை அடைந்தது. 
நன்றி: Gabriel Raja

Friday, 31 January 2020

பெங்களூர் எங்களூர் - 2










பெங்களூர் எங்களூர் -2

 பெங்களூர் நகரை நிர்மாணித்தவர் கேம்பே கவுடா (1526 - 1574) என்பவர்.

 இவர் உண்மையில் வன்னியக் கவுண்டர் ஆவார்.

 கன்னடருக்கு தமிழர் என்று சொல்லவராமல் திகிளர் என்றுதான் கூறுவார்கள்.
 கேம்பே கவுடா ஒரு திகிளப் பள்ளி என்று குறிக்கப்படுகிறார்.

 இவர் பூர்வீகம் காஞ்சிபுரம்.
அங்கிருந்து 'முரசு ஒக்கல்' எனும் குடியினர் கன்னடநாட்டிற்கு போய் குடியமர்ந்தனர்.
 இவர்கள் இன்று முரசு ஒக்கலிகர் என்று அறியப்படுகின்றனர்.
 இவர்களின் குலதெய்வம் காஞ்சி காமாட்சி.

 மேலும் ஒரு சான்று உள்ளது.
கேம்பே கவுடா வம்சாவழியான மும்முடி தம்மபூப்பா என்பவர் "ராஜேந்திர சோழ சரித்தா" எனும் நூல் எழுதியுள்ளார்.
 [Mysore gazetteer, Vol 5, page 45, 1930.]

 தென் கர்நாடகத்தின் ஆதிகுடிகளான தமிழர்கள் சில நூற்றாண்டுகளுக்கு முன் தமிழை மறந்துவிட்டனர்.
 இவர்கள் திகிளர் என்றே இப்போது அழைக்கபடுகின்றனர்.
 பெங்களூரில் கொண்டாடப்படும் பச்சைக் கரகத் திருவிழா இவர்கள் நடத்துவதே ஆகும்.

 கைகளில் வாளேந்தி "பவளமலை எங்கள் மலைநாடே!" என்று தமிழில் பாடியவாறே பச்சைக் கரகத்தை தலையில் ஏந்துவர்.

 1930 இல் பெங்களூர் மாவட்ட மக்கட்தொகை 3,07,124 ஆகும்.
 இதில் திகிளர் 31,644 பேர்.

 (பெங்களூர் எங்களூர் -1 இல் உள்ள வரைபடத்தை ஒருமுறை பார்க்கவும்)

 1799 இல் திப்பு சுல்தான் தோற்கடிக்கப்பட்டு ஆங்கிலேயர் கைக்கு பெங்களூர் வந்தது முதல் 1947 வரை மைசூர் அரசுக்கும் இந்த பெங்களூர் மைய நகருக்கும் எந்த தொடர்பும் இல்லை.
 மைசூர் அரச அதிகாரம் புறநகர் பகுதியான பேட்டை வரை மட்டுமே.
 மற்றபடி பெங்களூர் சென்னை மாகாணத்தின் கீழ்ஆங்கிலேயரின் நேரடி நிர்வாகத்தில் இருந்தது.

 ஆம். 1809 இல் ஆங்கிலேயர்களது படைமுகாமாக பெங்களூர் தண்டு பகுதி (cantonment) இருந்தது.

 1815 இல் மன்னர் எழுத்துப் பூர்வமாக இதை ஆங்கிலேய தூதமைச்சருக்கு தனிச் சொத்தாகக் கொடுத்து வரிவசூலிலும் தலையிட மாட்டேன் என்று எழுதிக் கொடுத்தார் (release deed).

 அவ்வாறு மைசூர் மன்னர் கொடுத்தது அன்று 22 ஊர்களாக இருந்தது.
 அவை
அலசூர்,
ஆடுகோடி,
செல்லகட்டா,
தொம்மளூர்,
உப்பாரப்பள்ளி,
குப்பசந்திரா,
மாவள்ளி,
குறமங்கலம்,
நீலசந்திரா,
பேடரள்ளி,
சொன்னேனள்ளி
ஆகியனவாகும்.

 1881 இல் பெங்களூர் கோட்டையை மட்டும் ஆங்கிலேயர் மன்னருக்கு கொடுத்தனர்.
 இதே ஆண்டில் cantonment என்று அழைக்கப்பட்டதை மாற்றி civil and military என்று பெயர் மாற்றினர்.

 1906 ஆம் ஆண்டு தற்போது "இந்திய அறிவியற்கூடம் (Indian institute of science)" இருக்கும் நிலமும் சேர்க்கப்பட்டு ஆங்கிலேயரின் நேரடி ஆட்சிப்பகுதி பரப்பளவு 13.54 சதுரக்கல் (சதுரமைல்) என விரிந்தது.

 ஆங்கிலேயர் தமது நிர்வாகப் பகுதியை ஆறு பிரிவுகளாக பகுத்திருந்தனர்.
அவை
1.அலசூர்
2.தென்பகுதி
3.கிழக்கு பொது அங்காடி (east general bazaar)
4.மேற்கு பொது அங்காடி (west general bazaar)
5.கிளீவ்லன்ட் நகர்
6. மேட்டுத்திடல் (high ground)

 அதாவது இன்றைய பெங்களூரின்
வடக்கே பாரதி நகர்,
நடுவில் சிவன்செட்டி வட்டம்,
தெற்கே நீலசந்திரா மற்றும் ஆடுகோடி
கிழக்கே அலசூர் உட்பட்ட நிலப்பரப்பு.

 இதில் தற்போதைய
தொம்மளூர்,
கப்பன் பூங்கா,
தூதமைச்சரக (residency) சாலை,
 தலைமை அஞ்சலகம்,
சூளை,
ரிச்மண்ட் நகர்,
ரசல் அங்காடி,
அணிவகுப்பு திடல் (parade ground),
 தூய யோவான் குன்று,
 கிளீவ்லேண்ட் நகர்,
காக்ஸ் நகர்,
புகையிலைத் தொழிலகம்,
ஃபிரேசர் நகர் (பாப்பிரெட்டி பாளையம்),
பிளாக் பள்ளி,
பெங்களூர் கிழக்கு (Bangalore east),
ரிச்சர்ட் நகர்
முதலியன அடங்கும்.

 மைசூர் அரசின் கட்டுப்பாட்டில் இருந்த பேட்டை பகுதி 11 சதுரக்கல் பரப்பளவு மட்டுமே இருந்தது.
 இதில் கோட்டை, சிக்கபேட்டை, தொட்டபேட்டை, சாமராஜப் பேட்டை, சங்கரபுரம், பசவன்குடி, சேசாத்திரிபுரம், மல்லேஸ்வரம், அரண்மனை ஆகியன இருந்தன.

 1947 வரை தண்டுப் பகுதிக்கும் பேட்டை பகுதிக்கும் இடையில் 6 சுங்கச்சாவடிகள் இருந்தன.
 அவை இன்றுள்ள
கண்டீரவா விளையாட்டரங்கம் எதிரிலும்
 ஓசூர் சாலையில் உள்ள கிறித்துவர் கல்லறைக்கு அருகிலும்
ராமநாரயண் செல்லாராம் கல்லூரி மூலையிலும்
 பழைய சென்னை சாலையில் உள்ள தொற்றுநோய் மருத்துவமனை பக்கத்திலும்
 கன்னிங்காம் சாலையிலும்
 தொம்மளூரிலும்
தலைமை அஞ்சலகம் அருகிலும்
 இருந்தன.

  1948 வரை தண்டு பகுதிக்கும் பேட்டை பகுதிக்கும் தனித்தனி நீதிமன்றங்கள் இருந்துள்ளன.
 தண்டுப் பகுதிக்கான சிறை வேலூர் சிறைதான்.

 1948 வரை இப்பகுதியில் பள்ளிகளில் கன்னடம் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் இருந்தது.

 1948 இல் மன்னர் வருகை தந்தபோது தண்டு மக்கள் மைசூர் அரசரை முதன்முதலாக பார்த்தனர்.

 1950 இல் தான் தண்டு நகராட்சியும் பேட்டை நகராட்சி இணைக்கப்பட்டு பெங்களூர் மாநகராட்சி உருவாக்கப்பட்டது.
 அப்போதும் தமிழரே பெரும்பான்மையாக இருந்தனர்.

 1956 வரை இப்பகுதி கல்வி நிர்வாகம் சென்னை பல்கலை மற்றும் சென்னை அரசிடம் இருந்து வந்தது.

 1956 இல் எந்த பொருத்தமும் இல்லாமல் பெங்களூர் கர்நாடகாவுடன் இணைக்கப்பட்டது.
 அப்போது அந்த மாநாகராட்சி எல்லைக்கும் தமிழக இல்லைக்கும் இடையே 4 கிலோமீட்டர் தொலைவுதான் இருந்தது.

 நன்றி: அறிஞர் குணா அவர்கள் எழுதிய
விழுதுகள் (கட்டுரைத் தொகுப்பு)






Wednesday, 29 January 2020

காத்திருக்கும் தங்கம் - 1

காத்திருக்கும் தங்கம் -1

-------
காலம்: கி.பி. 1790

 "நமது 33 வது ரெஜிமண்ட் திப்பு சுல்தானோடு போரிட நேரும் என்று நினைக்கிறாயா?"

 "ஆம். நிச்சயம். அதோ அங்கே பார்.
இவர்கள்தான் அதற்கு காரணம்"

 "என்ன?! ஆற்று மணலை அள்ளி வாணாலியில் போட்டு சலித்துக் கொண்டிருக்கும் இவர்களா இதற்கு காரணம்?!"

 "ஆம் இவர்களுக்கு அரிப்பறையர் என்று பெயர்.
 இவர்கள் ஆற்று மணலைப் பார்த்தே அதில் தங்கத் துகள்கள் இருக்குமா என்று கணித்து அதை சலித்து எடுக்கும் திறமை உள்ளவர்கள்.
 இவர்களைப் பார்த்துதான் நம் தளபதி இந்த பகுதியில் தங்கம் இருக்கும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக இங்கிலாத்திற்கு அறிக்கை அளித்துள்ளார்.
 கட்டாயம் திப்புவை வீழ்த்தி தங்கத்தை தோண்டி எடுக்காமல் விடமாட்டார்கள்"

--------------
காலம்: கி.பி. 1802

 "இதற்காகவா இவ்வளவு கஷ்டப்பட்டு திப்பு சுல்தானை தோற்கடித்தோம்.
 மகாராஜா நீங்கள் ராஜாவாகவே இருக்க வேண்டுமானால் கோலார் தங்க வயல் எங்களுக்கு வேண்டும்.
 உங்களுக்கு 5% கமிசன் கொடுத்து விடுகிறோம்"

 "சரி சரி 7% கொடுத்துவிடலாம்.
நாங்கள் ஆங்கிலேயர்.
வாக்கு தவறமாட்டோம்.
 உங்கள் மைசூர் ராஜ்யத்தின் மொத்த வருவாயில் இது மூன்றில் ஒரு பங்காக இருக்கும்"

-----------
காலம்: 1860

 "கிடைத்துவிட்டது! ஆகா கிடைத்துவிட்டது"

 "என்ன கேப்டன் பிளம்மர் என்ன கிடைத்துவிட்டது"

 "மைசூர் சுரங்கத்திற்கு மேற்கே 173 அடி ஆழத்தில் தங்க மலையே இருக்கிறது.
 ஏற்கனவே சோழர்கள் காலத்தில் வெட்டி எடுத்த தடத்தை வைத்து கண்டுபிடித்து விட்டேன்"

 "அப்படியா?! அது என்ன தடம்"

 "ஆம். வட ஆற்காடு மாவட்டத்தின் ஜவ்வாது மலை மீது இருந்து பார்த்தேன்.
 கோலாரிலிருந்து மனிதனால் உருவாக்கப்பட்டு கைவிடப்பட்ட ஒரு பாதை மலைகளுக்கு நடுவே தமிழ் பகுதி வரை வருவது தெரிகிறது"

 "எனதருமை பிளம்மர்!
 உன் விடாமுயற்சிக்கு வெற்றி கிடைத்துவிட்டது.
 இனி இந்த தற்காலிகச் சுரங்கம் உலகமே அறியும் இடமாக ஆகப்போகிறது"

--------
காலம்: கி.பி. 1880

 "பூமிக்கடியில இந்த தங்க மலைத் தொடர் (lode) வடக்கு நோக்கி நீள்கிறது.
 வெட்டி எடுத்தால் உலகத்தின் மொத்த தங்க தேவையையே பூர்த்தி செய்யலாம்"

 "நல்லது மிஸ்டர் ஆர்.பி.பூட்!
 நம் நாட்டிலிருந்து வல்லுநர்களை வரவழைத்து முழுவீச்சில் சுரங்கம் தோண்டிவிட வேண்டியதுதான்.
 நீ என்ன சொல்கிறார் ஹெய்டன்?!"

 "நாம் முதலில் மதராஸ் மாகாணத்தில் இருந்து தமிழர்களை வரவழைக்கலாம்.
 அவர்கள்தான் உலோக தொழில்நுட்பத்தில் உலகிற்கே முன்னோடி.
 இப்போது கடும் பஞ்சம் நிலவுவதால் குறைந்த கூலிக்கு அழைத்து வரலாம்.
 இங்கே ஏற்கனவே கால்வாசி தமிழ் பேசுபவர்களும் இருக்கிறார்கள்.
 குறிப்பாக சேலத்தில் கட்டிப் பறையர் என்றொரு சாதி உண்டு.
அவர்கள் செய்த தனித்துவமான எஃகு மூலம் செய்யப்பட்ட டமாஸ்கஸ் வாளைத்தான் அலெக்சாண்டர் வைத்திருந்தார் என்று சொன்னால் நம்புவீர்களா?!"

---------
 காலம்: கி.பி. 1905

 "இந்தியாவிலேயே முதன்முதலாக மின்சார உற்பத்தி செய்த சாதனைக்குப் பிறகு
 இந்த ஆண்டு நாம் 27 டன் தங்கத்தை எடுத்துள்ளோம்.
 இப்போது கோலார் உலகிலேயே பெரிய தங்கச் சுரங்கம் என்ற பெயர்பெற்றுள்ளது.
 இது பின்னாட்களில் மாறலாம்.
 ஆனால் ஓராண்டில் இவ்வளவு டன் தங்கம் வேறு எங்கும் கிடைக்குமா என்று கேட்டால் அதற்கு வாய்ப்பில்லை என்றுதான் கூறவேண்டும்.
 நமது கம்பனியான ஜான் டெய்லர் அண்ட் சன்ஸ் அதன் பொற்காலத்தில் இருக்கிறது"

 "இனி நம் திட்டங்கள் என்ன?"

 "பத்தாண்டுகள் முன்பு மைசூர் அரசிடம் பேசி சுரங்கங்களுக்கு தனி இரயில் பாதை போட்டு மெட்ராஸ் பெங்களூர் ரயில் பாதையுடன் இணைத்தோம்.
 அதிலிருந்து நமக்கு அமோக வளர்ச்சிதான்!
 இதுவரை இங்கே ஆண்கள் மட்டும் இருந்த காரணாத்தால் கிளப், விளையாட்டு அரங்கம், பொழுதுபோக்கு திடல் என கட்டினோம்.
 ஆனால் தற்போது 100 ஆங்கிலேயக் குடும்பங்கள் குடியேறியுள்ளன.
 எனவே நமது பிள்ளைகளுக்கு ஒரு சிறிய ஆங்கில பள்ளியும்
 வேலைசெய்யும் தொழிலாளர்களுக்காக ஒரு மருத்துவமனையும் கட்டவுள்ளோம்"

 "இது எத்தனை ஆண்டுகள் தொடரும்?!"

 "கணிப்புப்படி இன்னும் 50 ஆண்டுகள் வரை இதில் தங்கம் கிடைக்கும்.
 ஆனாலும் விரிவாக்க ஆய்வுகள் நடந்துவருகின்றன."

------

 காலம்: 1920

 "கோலாரின் மக்கட்தொகை ஒரு லட்சத்தை நெருங்கவுள்ளது.
 இருபத்தி நாலாயிரம் பேர் வேலை செய்கிறார்கள்.
 கோலார் சுரங்கம் 1200 அடி ஆழம் வரை சென்றுவிட்டது.
 இதுவே உலகின் முதலாவது ஆழமான சுரங்கம்.
 உலகப் போர் காரணமாக தங்கத்தின் விலை மேன்மேலும் கூட்டிக்கொண்டே போகுமாம்.
 இதெல்லாம் தெரியுமா உனக்கு?!"

 "இதில் என்ன பெருமை முருகேசா?!
 இங்கே 400 ஆங்கிலேயர்கள் 600 ஆங்கிலோ இந்தியன்கள் பதவியில் இருக்கிறார்கள்.
 இதுபோக 23000 பேர் தொழிலாளர்கள்.
 பெரும்பாலும் தமிழர்கள்.
 அதிலும் குறிப்பாக நம் போன்ற பறையர்கள்.
 நமக்கு மிஞ்சியது என்ன?!
கூரைவேய்ந்த லைன் வீடுகளில்தான் வசிக்கிறோம்.
 15 மணிநேரம் வேலை.
நாட்டிலேயே முதன்முதலாக மின்சாரம் இங்கே வந்தது.
 30 ஆண்டுகள் தாண்டியும் நம் வீடுகளில் இன்னமும் மின்சாரம் வரவில்லையே!"

-------
காலம்: 1953

 "கோலாரில் காலம் முடிந்துவிட்டது.
முதன்முதலாக உரிகையம் சுரங்கத்தை மூடிவிட்டனர்.
 இனி படிப்படியாக எல்லாவற்றையும் மூடிவிடுவார்களாம்.
 டெய்லர் கம்பனி வெளியேறவுள்ளது.
 இந்த சுரங்கத்தை நாட்டுடைமை ஆக்கி அரசே எடுத்துக் கொள்ளுமாம்"

 "ஆம். இந்திய அரசு எடுத்துக் கொள்ளுமாம்.
 ஆங்கிலேயர் மைசூர் அரசுக்கு கமிசனாவது கொடுத்தனர்.
 இனி கர்நாடக அரசுக்கு சல்லிக்காசு கொடுக்காது மத்திய அரசு என்று கூறுகிறார்கள்".

 "என்றால் மத்திய அரசும் மாநில அரசும் சுரங்கத்தை நம்பி வாழும் ஒரு லட்சம் பேரை கதியில்லாமல் ஆக்கப் போகிறார்கள் என்று சொல்"

--------

காலம்: 1983

 "கன்னடத்தை கட்டாயமாக்கும் கோகாக் அறிக்கைக்கு கோலார் தமிழர்கள் எதிர்ப்பா?!
 
 "ஓகோ! அவ்வளவு திமிராகி விட்டதா?!"

 "அதற்கு தக்க பாடம் கற்றுக்கொண்டனர்.
 தமிழில் கல்வி வேண்டி நடந்த போராடத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தி 4 பேரைக் கொலை செய்தாயிற்று"

"ஹா! ஹா! ஹா!"

 "மாரிக்குப்பம் பகுதியில் தமிழர்கள் ரயில் நிலையத்தையும் அஞ்சல் அலுவலகத்தையும் கொளுத்திவிட்டனர்"

 "என்ன?!"

"இனி அவர்கள் அஞ்சலகமே இல்லாமல் அல்லாட வேண்டியதுதான்"

 "தங்கவயலை விரைவில் மூடிவிட்டால் இவர்கள் கொட்டம் அடங்கிவிடும்"

-------------
 காலம்: 1989

 " என்ன சொல்கிறீர்கள் மிஸ்டர் நடராஜன் ஐயர்?!
கோலாரில் ஒரு கிராம் தங்கம் எடுக்க 668 ரூபாய் ஆகிறதா?!
பம்பாயில் ஒரு கிராம் தங்கமே 350 ரூபாய்தானே?!"

 "ஆம். 1960 இல் உற்பத்தி செலவு கிராமுக்கு 12 ரூபாய்தான்.
 1972 இல் 33 ரூபாய்.
 தற்போது தங்கம் கிடைப்பது சிக்கலாகவும் அப்படியே கிடைத்தாலும் தரம் குறைந்ததாகவும் இருக்கிறது.
 அதாவது நாம் வெட்டிவரும் தங்கமலை ஆழத்தை நோக்கி செல்கிறது"

 "என்றால் இதை மூடிவிடலாமா?!"

 "மூடிவிடலாம்தான். ஆனால் இதை நம்பியிருக்கும் பத்தாயிரம் தொழிலாளருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் என்ன பதில் சொல்வது?
 நூறு ஆண்டுகளாக இங்கே வாழ்ந்துவரும் அவர்களை எங்கே போகச் சொல்வது?
 ஆழ்சுரங்கம் வெட்டுதல் மற்றும் குடைந்து வழி அமைத்தல் ஆகியவற்றில் இவர்கள் திறமை வேறு எவருக்கும் வராது"

 "அதெல்லாம் கவலை இல்லை.
அவர்கள் வந்தேறிகள்.
 இதை நடத்தி லாபம் வந்தாலும் மத்திய அரசு எடுத்துக் கொள்கிறது.
 அதனால்தான் இவர்களுக்கு மாநில மின்துறை கூட சலுகை விலையில் மின்சாரம் வழங்குவது கிடையாது.
 தொழிற்சங்க தலைவரை கூப்பிட்டு இவர்கள் தகுதி இல்லாதவர்கள் என்று எழுதித் தரச்சொல்லி
 ஏதோ பெயருக்கு மாற்று திட்டம் ஒன்றை செயல்படுத்தி சிலபேருக்கு மாற்று வேலை வழங்கிவிட்டு அப்படியே கைகழுவி விடலாம்"

 "ஐயா! என்னால் அப்படி முறைகேடாக செயல்பட முடியாது"

 "நீங்கள் செய்துதான் தீரவேண்டும்"

 "என்னை வற்புறுத்தினால் எனது சுரங்க தொழில்நுட்ப இயக்குநர் பதவியை ராஜினாமா செய்வேன்"

 "நீங்கள் இப்படி பலமுறை மிரட்டி காரியத்தை சாதிக்கிறீர்கள்.
 உங்களைப் போன்ற சிலர்தான் எப்போதோ மூடியிருக்க வேண்டிய தங்கவயலை மூடவிடாமல் பெரும் தடையாக இருக்கிறீர்கள்.
 ஓ! நீங்களும் அந்த இனம்தானே!?"

 "ஐயா நான் நியாயத்தைப் பேசுகிறேன்.
சென்ற 4 ஆண்டுகளாக நான் நடத்திய ஆய்வுப்படி இதன் அருகிலேயே இன்னொரு தங்க மலை புதைந்து இருக்கிறது.
 அங்கே சுரங்கம் தோண்டினால் 6000 பேருக்காவது வேலை கொடுக்கலாம்.
 15 ஆண்டுகள் மூடுவது பற்றி யோசிக்க வேண்டாம்"

 "சரி! இது இறுதி வாய்ப்பு! தங்கம் இருந்தால் மட்டும் போதாது குறைந்த செலவில் எடுக்க முடியுமா என்பதுதான் முக்கியம்"

----------
காலம்: 1990
இடம்: அசோகா விடுதி, பெங்களூர்.

 "கனிம வளத்துறை செயலர் பி.கே. லாஹிரி அவர்களே!
 கோலார் சுரங்க தலைவர் ஐ.எம். ஆகா அவர்களே!
 மேலாண்மை இயக்குநர் பி.ஏ.கே. ஷெட்டிகர் அவர்களே!
 மற்றும் அதிகாரிகளே!
 நாம் இங்கு கூடியிருப்பது தங்கவயல் தொழிலாளர்களின் எதிர்காலத்தைப் பற்றி விவாதிக்கத்தான்"

 "அது பற்றி மேற்கொண்டு விவாதிக்க என்ன இருக்கிறது மிஸ்டர் ஐயர்?!"

 "நாம் வெட்டியெடுத்து தீர்ந்துபோன சாம்பியன் படிவத் தொடர்க்கு கீழே 3000 அடி ஆழத்தில் 200 கிலோ தங்கம் தரவல்ல மேலும் ஒரு தங்க மலை இருப்பது பற்றி நான் கூறியபோது ஆழம் அதிகம் என்று காரணம் காட்டி  நீங்கள் மறுத்துவிட்டீர்கள்.
அதனால் தற்போது ஆழம் குறைந்த இடத்தில் மேலும் இரண்டு தங்க படிவங்களை நான் கண்டறிந்துள்ளேன்.
 இங்கே Shallow depth mining செய்யலாம்"

 "குறைந்த ஆழம் என்றால் செலவு குறைவு எனவே யோசிக்கலாம்.
கூறுங்கள் பார்ப்போம்"

 "மைசூர் சுரங்கப் பகுதியில் இருந்து நந்திதுர்க்க சுரங்கப் பகுதிவரை குறைந்த ஆழத்தில் தங்க படிவத்தொடரின் கிளைகள் உள்ளன"

 "குறைந்த செலவு என்கிற நமது கொள்கை அதற்கு பொருந்துமா?!"

 "இதற்குப் பொருத்தமாக இருப்பது மைசூர் சுரங்கத்தில் உள்ள பல தங்கப் படிவத் தொடர்களில் ஒன்றான பிரவுன் படிவத்தொடர்.
 இது அங்கு புதைந்துள்ள தங்கமலையின் அடிப்பரப்பு வரை செல்கிறது.
 diamond drilling செய்து ஆராய்ந்தால் இதை உறுதிசெய்யலாம்"

 "சரி இரண்டாவது?"

 "இரண்டாவதுதான் மிக முக்கியமானது.
தற்போது வெட்டியெடுத்த அதே தங்கமலைத் தொடருக்கு இணையாக 400 அடி ஆழத்தில் தங்கம் இருக்கிறது.
 இது 5000 அடி வரை நீள்கிறது.
இங்கே ஒரு டன் தங்க கனிமம் எடுத்தால் அதில் குறைந்தபட்சம் 10 கிராம் முதல் அதிகபட்சம் 35 கிராம் வரை தங்கம் கிடைக்கும்.
 சுருக்கமாகக் கூறினால் 1934 இல் கோலார் இருந்த அதே நிலையை எட்டலாம்"

 "முதல் இடத்திற்கு அருகிலேயே என்றால் இதுபற்றி முதலில் யோசிக்கலாம்.
 எங்கே என்று தெளிவாக சொல்லமுடியுமா?"

 "McTaggart's Inclined shaft இருக்குமிடம் தொடங்கி அதாவது பாரத மண்வாரித் தொழிலகம் அமையப்போகிற இடத்தில் இருந்து கோல்கொண்டா Shaft இருக்கும் இடம்வரை ஏற்கனவே வெட்டியெடுத்த சாம்பியன் தங்கப்படிவ ஓட்டத்திற்கு இணையான போக்கில் இது இருக்கிறது.
 இதை வெட்டியெடுத்தால் 6000 பேருக்கு 15 ஆண்டுகள் வரை வேலைவாய்ப்பு கிடைக்கும்"

 "வேலைவாய்ப்பு பற்றி பிறகு பேசலாம்.
 இவை இரண்டுதானா?! மேலும் உண்டா?!"

 "குறைந்த ஆழத்தில் என்றால் மூன்றாவது ஒன்று உண்டு.
 ஆனால் அதை முழுமையாக ஆராயவில்லை.
 நந்திதுர்க்க சுரங்கத்தின் தலைப்பகுதி Oriental Lode எனும் படிவத்தொடர்.
 இதன் அடிப்பரப்பு கிளை அதாவது foot- wall தான் அந்த மூன்றாவது இடம்"

 "சரி. மிஸ்டர் லாகிரி!
இவர் கூறுவதை செய்யலாமா?"

 "அது வந்து...
எனக்கு இவர் சொல்வது ஒன்றுமே புரியவில்லை"

 "என்னது புரியவில்லையா?! நியாயப்படி நீங்கள்தான் இந்த இடத்தில் நின்று இதையெல்லாம் விளக்கவேண்டும்!
 மிஸ்டர் ஐயர் இதை எழுத்துப் பூர்வமாக விரிவாக சமர்ப்பிக்க முடியுமா?"

 "ஏன் அதை ஒரு வல்லுநர் குழு நியமித்து ஆராயப் போகிறீர்களா?"

 "சரியாகச் சொன்னீர்கள்"

"ஆக இங்கிருக்கும் யாருக்குமே நான் சொன்னது புரியவில்லை"

-------
(தொடரும்)