Monday 19 June 2023

1978 இல் தமிழகத்தில் வெளியான ஈழ வரைபடம்

1978 இல் தமிழகத்தில் வெளியான ஈழ வரைபடம் 

 1977 ஆகஸ்ட் இல் சிங்களப் பகுதிகளில் தமிழர்கள் மீது கலவரம் நடந்தது. 300 தமிழர்கள் கொல்லப்பட்டனர். 50,000 தமிழர்கள் அகதிகளாக தமிழர் பகுதிகளுக்கு சென்றனர்.
 கொழும்பு மற்றும் மலையகத் தமிழர்கள் இதில் கடுமையாகப் பாதிப்பட்டனர்.
 இதன் அதிர்வலை தமிழகம் வரை பரவியது.
தமிழகத்தில் சிலர் கூடி "தமிழக ஈழ நட்புறவுக் கழகம்" எனும் அமைப்பு தொடங்கப்பட்டு 1978 இல் சென்னையில் கூட்டம் நடத்தப்பட்டு "இலங்கையில் ஈழம்" எனும் நூல் வெளியிடப்பட்டது.
 அதில் 1978 வரையான இலங்கை வரலாறு விளக்கப்பட்டுள்ளது.
சிறப்பாக மலையகத் தமிழருக்கும் ஈழத் தமிழருக்குமான வேறுபாடு தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
 இதில் தொடக்கத்திலேயே ஈழ வரைபடம் இடம்பெற்றுள்ளது.
அதில் 'இலங்கையின் வடக்கு, கிழக்கு, மலையகத்தின் ஒரு பகுதி அதாவது திரு. வன்னிய சிங்கம் கூறிய தமிழ்ப்பகுதியே. பருத்தித்துறை முதல் பதுளை வரை மன்னார் முதல் மட்டக்களப்பு வரை பொத்துவிலும் உள்ளடக்கிய பகுதியே இங்கு ஈழம் என்று குறிக்கப்படுகிறது' என்கிற விளக்கமும் உள்ளது.
 தமிழகத்திற்கு ஈழம் பற்றி எதுவும் தெரியாது என்கிற கருத்தை இந்நூல் பொய்யாக்குகிறது. 
 1980 இல் மதுரையில் ஈழ விடுதலைக்கு ஆதரவாக மாநாடு நடந்துள்ளதும் இங்கே குறிப்பிடத் தகுந்தது.
 
இந்நூலைப் பாதுகாத்து வைத்துள்ள படிப்பகம் (padippakam) இணையத்திற்கு நன்றி! 

No comments:

Post a Comment