Friday 9 June 2023

247 மாணவர்கள் விளையாடும் வாய்ப்பை இழந்தனர் அமைச்சர் நடிப்பில் பிசி

247 மாணவர்கள் விளையாடும் வாய்ப்பை இழந்தனர் அமைச்சர் நடிப்பில் பிசி 

 தமிழை விளையாட்டுத் துறை அமைச்சரின் மெத்தனத்தால் தேசிய அளவில் விளையாடக் காத்திருக்கும் 247 மாணவர்கள் வாய்ப்பை இழந்தனர்.
 பங்கேற்க கடிதம் போடவில்லை!
 நிதி ஒதுக்கவில்லை!
இதன் மூலம் மாணவர்களுக்கு கிடைக்கும் உபரி மதிப்பெண்கள் கிடைக்காது!

 பதில் சொல்லவேண்டிய அமைச்சர் உதயநிதி மாமன்னன் படப்பிடிப்பில் இருக்கிறார்!

 //நடப்பாண்டு 247 மாணவர்களை தேர்வு செய்து மே 29ஆம் தேதிக்குள் ஆன்லைனில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் தமிழகத்தில் இருந்து மாணவர்களை தேர்வு செய்து அனுப்ப எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பள்ளி கல்வித் துறை , பள்ளி மாணவர்களுக்கான தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுவது குறித்த கடிதம் முறையாக சென்று சேரவில்லை எனவும் தகவல் பரிமாற்றத்தில் குழப்பம் ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 
மேலும் ஆண்டுதோறும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதற்கு பள்ளி மாணவர்களுக்கு நிதி ஒதுக்கப்படும் நிலையில், நடப்பாண்டு அதற்கான நிதி முறையாக ஒதுக்கப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது. 

இதனால் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. 

தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற சான்றிதழ் வைத்திருக்கும் மாணவர்களுக்கு உயர்கல்வியில் சேரும் பொழுது பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் கூடுதலாக மதிப்பெண்கள் விளையாட்டு பிரிவு தரவரிசையின் போது வழங்கப்படும். நடப்பாண்டில் அந்த வாய்ப்பினை தமிழக மாணவர்கள் இழந்துள்ளனர்.//

நன்றி: தந்தி டிவி .காம்
தமிழகம்? காரணம் என்ன..?
9 Jun 2023 4:50 AM GMT

No comments:

Post a Comment