Thursday 8 June 2023

சாம்ராஜ் போட்ட சர்பத்

இதுதான் சாம்ராஜ் என்கிற எவரோ ஒருவர் தலைவர் பிரபாகரன் பற்றி கேலியாக எழுதிய கவிதை.....

ஒண்டிப்புலி சர்பத் அந்தத் தீவில் மிகப் பிரபலம்.
சீறும் அதன் சிவப்பு முகமே குப்பியில் லட்சினை.
அது பெயருக்குப் பொருத்தமாய் ஊரில் வேறு எவரும் தலையெடுக்காது பார்த்துக்கொண்டது.
கூழ் பதநீர் கள் எல்லாவற்றிக்கும் தடை.
சர்க்கஸிலும் கூட புளிக்குழம்பு தேச விரோதம்.
மொழியிலிருந்து குதித்தோடியது அந்த நான்கு கால் மிருகம்.
கால் நூற்றாண்டு காலத்தில் அதற்கு சர்பத்திற்கும் ரத்தத்திற்கும் குழப்பம்.
ரத்தத்தை சர்பத் என்றது சர்பத்தை ரத்தம் என்றது.
தீவின் அக்கரையில் வாழும் அதன் கழுதைப்புலி முகவர்கள் விற்று வாழ்ந்தனர் வெகுகாலமாய் அதை.
ஒரு வைகாசி மாதத்தில் ஒண்டிப்புலி ஒண்டிப்புலியாய் கடற்கரையில் மரித்தது.
இறக்கும் மதியப் பொழுதிலும் கடலின் சிவப்பை அது சர்பத் என்றே
இறுதிவரை நம்பியது.
- சாம்ராஜ்

(நன்றி: yarl .com)

  இந்த எழவெல்லாம் ஒரு கவிதை என்றால் பல்லியின் எச்சம் கூட சிற்பம் என்றாகும்!

 இதிலிருந்து தெரிவது என்றால்...
 நாலாந்தர கவிதையாக இருந்தாலும் தமிழ்தேசியத்துக்கு எதிராக இருந்தால் அதை எழுதியவனுக்கு வாயில் கவ்வ கொடுத்துவிடுவார்கள் ஒரு விருதினை!

 

No comments:

Post a Comment