Saturday 10 June 2023

பச்சையப்பன் கல்லூரியில் பறையர் இடம்பெற்றது யாரால்

பச்சையப்பன் கல்லூரியில் பறையர் இடம்பெற்றது யாரால்?

இந்த ராமசாமி பக்தர்கள் எத்தனை ஸ்டிக்கர்தான் கைவசம் வைத்துக்கொண்டு திரிகின்றனர் என்று தெரியவில்லை.
பச்சையப்பன் கல்லூரியில் ஈ.வே.ரா தான் பறையர்களுக்கு இடம் வாங்கிக் கொடுத்தாராம்!
ஆனால் பாருங்கள் இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் எழுதிய சுயசரிதையான 'ஜீவிய சரிதம்' நூலில்
‘‘ஜாதி இந்துக்கள் ஸ்தாபித்திருக்கும் ‘பச்சையப்பன்’ கலாசாலையில் பிள்ளைகளைச் சில காலத்திற்குப் பிறகு சேர்க்கவும் இம்மனுவே காரணம்’’ என்று தன்னைப் பற்றி கூறியுள்ளார்.

அதாவது பச்சையப்பன் கல்லூரியில் எம்.சி.ராஜா, இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரின் தொடர்முயற்சியால் 21.11.1927ல் அனுமதி கிடைத்தது.
உடனே ஈ.வே.ரா அனுமதி கிடைத்த செய்தி தனக்கு தெரியாதது போல பச்சையப்பன் கல்லூரியைக் கண்டித்து தன் விபச்சார எழுத்து நடையில் கடுமையாக எழுதி அது ஆறு நாட்கள் கழித்து  27.11.1927 குடி அரசு இதழில் வெளியிடப்பட்டது.
அது வருமாறு,
"தமிழ்நாட்டின் பூர்வீகமான குடியாய் இருந்து தமிழ் நாட்டில் பிறந்து, தமிழ் நாட்டில் வளர்ந்து, இந்துக்கள் என்று மதிக்கப்பட்டு வாழ்ந்து வரும் ஆதிதிராவிடர்கள் என்னும் தமிழ் மக்கள் மாத்திரம் இந்து கோவிலுக்குள் போகக் கூடாது என்றும் பச்சையப்பன் கல்லூரியில் படிக்கக் கூடாது என்றும் சொல்லுவது யோக்கியமாகுமா? இம்மாதிரி கோவில்களையும் (டைனாமெட்டு) வெடிகுண்டு போட்டு உடைத்தெரிந்தால் மனிதனால் உண்டாக்கப்பட்ட சட்டப்படி குற்றம் என்பதாக சொல்லப்பட்டாலும் கடவுளால் உண்டாக்கப்பட்ட சட்டப்படி குற்றமாகுமா? என்று கேட்பதுடன் நம் நாட்டு ஆதிதிராவிடர்கள் என்போர்கள் விபசாரி மக்களை விட இழிந்தவர்களா? என்று அறிய விரும்புகின்றோம்."
(குடி அரசு - கட்டுரை - 27.11.1927)

இந்த ஒன்றை வைத்து பச்சையப்பன் கல்லூரியில் பறையர் இடம்பெற காரணமே ஈவேரா அதைக் கையில் எடுத்ததுதான் என்று ஸ்டிக்கர் ஒட்டிவிட்டனர்.

இதற்கு 18 ஆண்டுகள் முன்பே அயோத்திதாசர் 1909 இல் முதன்முதலாக இது பற்றி எழுதியுள்ளார். அது வருமாறு,
"மகாகனந்தங்கிய பச்சையப்பன் என்பவரின் பொதுச்சொத்துக்கு மேற்பார்வை உடையோராய் நியமிக்கப் பெற்ற சாதியாசாரமுடையோர் அதே பச்சையப்பன் காலேஜில் கைத்தொழிற்சாலையை ஏற்படுத்தி, 'சாதியாசாரமுள்ளவர்களை மட்டிலும் அச்சாலையில் சேர்க்கப்படும். சாதியாசாரமில்லாதவர்களை அவற்றுள் சேர்ப்பதில்லை’ என்று பயிரங்க விளம்பரம் வெளியிட்டிருக்கிறார்கள்."
(தமிழன், சனவரி 6, 1909)

அதன்பிறகு எம்.சி.ராஜா மற்றும் ரெட்டமலை சீனிவாசன் ஆகியோரின் தொடர்ச்சியான முயற்சியால் பச்சையப்பன் கல்லூரியில் அனைவருக்கும் இடம் தரப்பட்டது.

ஆட்சியில் இருந்த நீதிக் கட்சி வெற்று கடிதங்களையும் அலங்கார அறிக்கைகளையும் விடுத்ததைத் தவிர எதுவும் செய்யவில்லை.

நன்றி: நீதிக் கட்சியின் மறுபக்கம், ம.வெங்கடேசன்

No comments:

Post a Comment