Showing posts with label குணா. Show all posts
Showing posts with label குணா. Show all posts

Friday, 31 January 2020

பெங்களூர் எங்களூர் - 2










பெங்களூர் எங்களூர் -2

 பெங்களூர் நகரை நிர்மாணித்தவர் கேம்பே கவுடா (1526 - 1574) என்பவர்.

 இவர் உண்மையில் வன்னியக் கவுண்டர் ஆவார்.

 கன்னடருக்கு தமிழர் என்று சொல்லவராமல் திகிளர் என்றுதான் கூறுவார்கள்.
 கேம்பே கவுடா ஒரு திகிளப் பள்ளி என்று குறிக்கப்படுகிறார்.

 இவர் பூர்வீகம் காஞ்சிபுரம்.
அங்கிருந்து 'முரசு ஒக்கல்' எனும் குடியினர் கன்னடநாட்டிற்கு போய் குடியமர்ந்தனர்.
 இவர்கள் இன்று முரசு ஒக்கலிகர் என்று அறியப்படுகின்றனர்.
 இவர்களின் குலதெய்வம் காஞ்சி காமாட்சி.

 மேலும் ஒரு சான்று உள்ளது.
கேம்பே கவுடா வம்சாவழியான மும்முடி தம்மபூப்பா என்பவர் "ராஜேந்திர சோழ சரித்தா" எனும் நூல் எழுதியுள்ளார்.
 [Mysore gazetteer, Vol 5, page 45, 1930.]

 தென் கர்நாடகத்தின் ஆதிகுடிகளான தமிழர்கள் சில நூற்றாண்டுகளுக்கு முன் தமிழை மறந்துவிட்டனர்.
 இவர்கள் திகிளர் என்றே இப்போது அழைக்கபடுகின்றனர்.
 பெங்களூரில் கொண்டாடப்படும் பச்சைக் கரகத் திருவிழா இவர்கள் நடத்துவதே ஆகும்.

 கைகளில் வாளேந்தி "பவளமலை எங்கள் மலைநாடே!" என்று தமிழில் பாடியவாறே பச்சைக் கரகத்தை தலையில் ஏந்துவர்.

 1930 இல் பெங்களூர் மாவட்ட மக்கட்தொகை 3,07,124 ஆகும்.
 இதில் திகிளர் 31,644 பேர்.

 (பெங்களூர் எங்களூர் -1 இல் உள்ள வரைபடத்தை ஒருமுறை பார்க்கவும்)

 1799 இல் திப்பு சுல்தான் தோற்கடிக்கப்பட்டு ஆங்கிலேயர் கைக்கு பெங்களூர் வந்தது முதல் 1947 வரை மைசூர் அரசுக்கும் இந்த பெங்களூர் மைய நகருக்கும் எந்த தொடர்பும் இல்லை.
 மைசூர் அரச அதிகாரம் புறநகர் பகுதியான பேட்டை வரை மட்டுமே.
 மற்றபடி பெங்களூர் சென்னை மாகாணத்தின் கீழ்ஆங்கிலேயரின் நேரடி நிர்வாகத்தில் இருந்தது.

 ஆம். 1809 இல் ஆங்கிலேயர்களது படைமுகாமாக பெங்களூர் தண்டு பகுதி (cantonment) இருந்தது.

 1815 இல் மன்னர் எழுத்துப் பூர்வமாக இதை ஆங்கிலேய தூதமைச்சருக்கு தனிச் சொத்தாகக் கொடுத்து வரிவசூலிலும் தலையிட மாட்டேன் என்று எழுதிக் கொடுத்தார் (release deed).

 அவ்வாறு மைசூர் மன்னர் கொடுத்தது அன்று 22 ஊர்களாக இருந்தது.
 அவை
அலசூர்,
ஆடுகோடி,
செல்லகட்டா,
தொம்மளூர்,
உப்பாரப்பள்ளி,
குப்பசந்திரா,
மாவள்ளி,
குறமங்கலம்,
நீலசந்திரா,
பேடரள்ளி,
சொன்னேனள்ளி
ஆகியனவாகும்.

 1881 இல் பெங்களூர் கோட்டையை மட்டும் ஆங்கிலேயர் மன்னருக்கு கொடுத்தனர்.
 இதே ஆண்டில் cantonment என்று அழைக்கப்பட்டதை மாற்றி civil and military என்று பெயர் மாற்றினர்.

 1906 ஆம் ஆண்டு தற்போது "இந்திய அறிவியற்கூடம் (Indian institute of science)" இருக்கும் நிலமும் சேர்க்கப்பட்டு ஆங்கிலேயரின் நேரடி ஆட்சிப்பகுதி பரப்பளவு 13.54 சதுரக்கல் (சதுரமைல்) என விரிந்தது.

 ஆங்கிலேயர் தமது நிர்வாகப் பகுதியை ஆறு பிரிவுகளாக பகுத்திருந்தனர்.
அவை
1.அலசூர்
2.தென்பகுதி
3.கிழக்கு பொது அங்காடி (east general bazaar)
4.மேற்கு பொது அங்காடி (west general bazaar)
5.கிளீவ்லன்ட் நகர்
6. மேட்டுத்திடல் (high ground)

 அதாவது இன்றைய பெங்களூரின்
வடக்கே பாரதி நகர்,
நடுவில் சிவன்செட்டி வட்டம்,
தெற்கே நீலசந்திரா மற்றும் ஆடுகோடி
கிழக்கே அலசூர் உட்பட்ட நிலப்பரப்பு.

 இதில் தற்போதைய
தொம்மளூர்,
கப்பன் பூங்கா,
தூதமைச்சரக (residency) சாலை,
 தலைமை அஞ்சலகம்,
சூளை,
ரிச்மண்ட் நகர்,
ரசல் அங்காடி,
அணிவகுப்பு திடல் (parade ground),
 தூய யோவான் குன்று,
 கிளீவ்லேண்ட் நகர்,
காக்ஸ் நகர்,
புகையிலைத் தொழிலகம்,
ஃபிரேசர் நகர் (பாப்பிரெட்டி பாளையம்),
பிளாக் பள்ளி,
பெங்களூர் கிழக்கு (Bangalore east),
ரிச்சர்ட் நகர்
முதலியன அடங்கும்.

 மைசூர் அரசின் கட்டுப்பாட்டில் இருந்த பேட்டை பகுதி 11 சதுரக்கல் பரப்பளவு மட்டுமே இருந்தது.
 இதில் கோட்டை, சிக்கபேட்டை, தொட்டபேட்டை, சாமராஜப் பேட்டை, சங்கரபுரம், பசவன்குடி, சேசாத்திரிபுரம், மல்லேஸ்வரம், அரண்மனை ஆகியன இருந்தன.

 1947 வரை தண்டுப் பகுதிக்கும் பேட்டை பகுதிக்கும் இடையில் 6 சுங்கச்சாவடிகள் இருந்தன.
 அவை இன்றுள்ள
கண்டீரவா விளையாட்டரங்கம் எதிரிலும்
 ஓசூர் சாலையில் உள்ள கிறித்துவர் கல்லறைக்கு அருகிலும்
ராமநாரயண் செல்லாராம் கல்லூரி மூலையிலும்
 பழைய சென்னை சாலையில் உள்ள தொற்றுநோய் மருத்துவமனை பக்கத்திலும்
 கன்னிங்காம் சாலையிலும்
 தொம்மளூரிலும்
தலைமை அஞ்சலகம் அருகிலும்
 இருந்தன.

  1948 வரை தண்டு பகுதிக்கும் பேட்டை பகுதிக்கும் தனித்தனி நீதிமன்றங்கள் இருந்துள்ளன.
 தண்டுப் பகுதிக்கான சிறை வேலூர் சிறைதான்.

 1948 வரை இப்பகுதியில் பள்ளிகளில் கன்னடம் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் இருந்தது.

 1948 இல் மன்னர் வருகை தந்தபோது தண்டு மக்கள் மைசூர் அரசரை முதன்முதலாக பார்த்தனர்.

 1950 இல் தான் தண்டு நகராட்சியும் பேட்டை நகராட்சி இணைக்கப்பட்டு பெங்களூர் மாநகராட்சி உருவாக்கப்பட்டது.
 அப்போதும் தமிழரே பெரும்பான்மையாக இருந்தனர்.

 1956 வரை இப்பகுதி கல்வி நிர்வாகம் சென்னை பல்கலை மற்றும் சென்னை அரசிடம் இருந்து வந்தது.

 1956 இல் எந்த பொருத்தமும் இல்லாமல் பெங்களூர் கர்நாடகாவுடன் இணைக்கப்பட்டது.
 அப்போது அந்த மாநாகராட்சி எல்லைக்கும் தமிழக இல்லைக்கும் இடையே 4 கிலோமீட்டர் தொலைவுதான் இருந்தது.

 நன்றி: அறிஞர் குணா அவர்கள் எழுதிய
விழுதுகள் (கட்டுரைத் தொகுப்பு)






Monday, 26 August 2019

பெங்களூர் எங்களூர் - 1

பெங்களூர் எங்களூர் -1
1981 இல் கர்நாடகாவில் வாழும் தமிழர் எண்ணிக்கை 90லட்சம் ஆகும் [1].
இன்று அது 1.5 கோடியைத் தாண்டும்.
இவர்கள் கன்னடர்களின் பார்வையில் வந்தேறிகள் என்று இருப்பதுகூட பரவாயில்லை
ஆனால், தமிழகத் தமிழர் சிலரும் இவர்களை 'அங்கு போய் குடியேறியவர்கள்' என்று கூறுவது மன்னிக்க முடியாத வரலாற்று அறியாமை ஆகும்.
1991 இல் ஏறத்தாழ ஒரு கோடித் தமிழர்கள் தமிழகத்தின் எல்லையை ஒட்டிய பெங்களூர், கோலார் தங்கவயல், குடகு, பெல்லாரி, கொள்ளேகால் போன்ற பகுதிகளிலேயே வாழ்ந்து வருகின்றனர்.
இவர்கள் அப்பகுதிகளின் பூர்வ குடிகள்தாம்.
இவர்கள் தவிர பத்திராவதி, சிவமுகா, சித்திர துர்கம், சிக்கமளூர் போன்ற பகுதிகளிலும் தமிழர்கள் உண்டு.
இவர்கள்தான் பிறகு குடியேறியவர்கள்.
அதுவும் ஆங்கிலேயர்களால் இரும்புச் சுரங்களிலும், உருக்கு ஆலைகளிலும், தோட்டவேலைக்காகவும் கொண்டுசெல்லப்பட்டவர்கள்.
இவர்கள் இன்னமும் தமிழர் என்ற அடையாளத்துடன் கர்நாடக கடலில் பண்பாட்டுத் தீவுகளாக தனித்து வாழ்ந்துவருகின்றனர்.

மேற்கண்டவர்களையும் தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் கூட்டங்கூட்டமாக வந்தேறி இன அடையாளத்தை மறைத்துக்கொண்டு அதிகாரத்தைக் கைப்பற்றி தமிழரை ஏமாற்றிவரும் தெலுங்கரையும் ஒப்பிடுவது எந்த விதத்திலும் நியாயமே இல்லை.

எடுத்துக்காட்டாக தமிழக எல்லையிலிருந்து கூப்பிடும் தூரத்தில் உள்ள பெங்களூர் பற்றி அறிவோம்.
1891 இல் பெங்களூர் மைய நகர் (cantonment அல்லது civil and military பகுதி) தமிழர் 39%, கன்னடர் 6.7%, 
என்றவாறு வாழ்ந்து வந்தனர்
[மொத்தம் 100081 பேர், தமிழர் 39079, கன்னடர் 6746].
ஆனால் மைய நகருக்கு வெளியே பேட்டைப் பகுதியில் (pettah அல்லது city பகுதி)
தமிழர் 23%, கன்னடர் 31%
என வாழ்ந்துவந்தனர்
  [மொத்தம் 69447 பேர், தமிழர் 15755, கன்னடர் 21936].
அதாவது பெங்களூர் நகரை கட்டி அதில் பெரும்பான்மையாக வாழ்ந்து வந்தது தமிழரே!
கன்னடர் அந்நகருக்கு வெளிப்புறத்தில் குடியேறி தமிழரை விட சிறிது அதிகமாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இரண்டு பகுதிகளையும் சேர்த்து பார்த்தாலும் தமிழரே அதிகம்.
1911 இல் பெங்களூர் மொத்தமும் சேர்த்து பார்க்கும்போது தமிழர் 32%, கன்னடர் 17% என்றே வரும் (தெலுங்கர் 25%).
இந்த முக்கியமான பெருநகரத்தைத் தமிழகத்துடன் சேர்க்காமல் கன்னடருக்கு வாரிக் கொடுத்துவிட்டது ஹிந்திய அரசு.
மக்கட்தொகை அடிப்படையில் தமிழருக்கு வந்திருக்கவேண்டும்.
அல்லது இரண்டாவது பெரும்பான்மையான தெலுங்கருக்காவது போயிருக்கவேண்டும்.
வரலாற்று ரீதியில் ஆராய்ந்து அது கன்னடருக்கு கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.
அதுபற்றி ஆராய்வோம்.
பெங்களூர் மாவட்டத்தின் ஒசக்கோட்டை உள்ளிட்ட பல பகுதிகள் கி.பி 997 இல் பல்லவரிடம் இருந்து சோழ அரசன் இராராசதேவனால் வெல்லப்பட்டது [2].
பெங்களூர் மாவட்டத்தின் மாகடி பட்டணத்தை 1139 ஆம் ஆண்டு நிறுவியது சோழர்களே! [3].

இன்று 'எலவங்கா' என்றழைக்கப்படும் பெங்களூர் பகுதி பதிமூன்றாம் நூற்றாண்டில் சோழரால் உருவாகப்பட்ட 'இராசேந்திர சோழவளநாட்டின்' பிரிவுகளில் ஒன்றான 'இலைப்பாக்க நாடு' ஆகும்.
இது ஒய்சளர் காலத்தில் 'எலவக்கா' என்றாகி 'எலவங்கா' என்று திரிந்தது [4].
பெங்களூர் மாவட்டத்தில் உள்ள 'தோட்டபல்லாபூர்' பண்டைநாளில் 'காடனூர் எழுபது' என்கிற பெயரில் வழங்கி வந்தது [5].
மைசூர் மாவட்டத்தின் 'தலைக்காடு' பகுதியை ஆண்டுவந்த கங்கர்கள் தமிழே பேசிவந்ததால் 'தமிழ்க் கங்கர்' எனப்பட்டனர் [6].
பெங்களூர் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான தமிழ்க் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.
அப்படி கிடைத்துள்ள ஊர்களாவன
அகரம்,
ஐகண்டபுரம்,
ஆவதி,
பைச்சபுரம்,
பேகூர்,
பிண்ணமங்கலா,
தொம்மளூர்,
கங்காவரம்,
அலசூர்,
அசிகலா,
எக்குண்டா,
ஒசக்கோட்டை,
கொண்டரள்ளி,
கூடலூர்,
குப்பேப்பள்ளி,
மாகடி,
மண்குண்டா,
மண்ணே,
நந்தகுடி,
நெலமங்கலா,
திருமலை,
ஓகட்டா,
வணக்கணள்ளி,
வரநாயக்கனள்ளி.

[மேற்கண்ட ஊர்களில் நூற்றுக்கணக்கான தமிழ்க் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.
எண்ணிக்கை அடிப்படையில் பாதியளவுகூட கன்னடக் கல்வெட்டுகள் கிடைக்கவில்லை.
எல்லையோர மாவட்டங்கள் முழுவதுமே தமிழ்க் கல்வெட்டுகள் கிடைத்து உள்ளன.
கிடைத்த இடங்களை வரைபடமாக ஏற்கனவே "பழைய மைசூர் மாநிலத்தில் தமிழ்க் கல்வெட்டுகள் (வரைபடம்)" எனும் பதிவாக இட்டுள்ளேன்.]

மேற்கண்ட ஊர்ப் பெயர்கள் தற்காலப் பெயர்கள்தாம். அதாவது திரிந்த தமிழ்ப் பெயர்கள்.
அதாவது,
அகரம் அருகேயுள்ள 'இப்பலூர்' உண்மையில் 'இருவுளியூர்' ஆகும் [7].
'ஐகண்டபுரம்' உண்மையில் 'ஐவர்கண்டபுரம்' ஆகும் [8].
'ஆவதி' உண்மையில் 'ஆகுதி' ஆகும் [9].
'பிண்ணமங்கலா' உண்மையில் 'விண்ணமங்கலம்' ஆகும் [10].
'தொம்மளூர்' உண்மையில் 'தும்பளூர்' ஆகும் [11].
'காண்கானள்ளி' உண்மையில் 'காணிக்காரன்பள்ளி'  [12].
'கூடலூர்' கல்வெட்டில் 'இராசராச சதுர்வேதி மங்கலம்' என்று குறிக்கப்பட்டுள்ளது  [13].
'மாலூர் பட்டணம்' கல்வெட்டில் 'நிகரிலி சோழபுரம்' என்று குறிக்கப்பட்டுள்ளது  [14].
'மண்குண்டா' என்பது உண்மையில் 'மணலூர்'  [15].
'மண்ணே' என்பது 'மண்ணைநாடு'  [16].
'நந்தகுடி' என்பது 'நொந்தகுழி'  [17].
'மடவாளம்' என்பது 'மடவளாகம்',  'ஓகட்டா' என்பது 'ஓவட்டம்' அதேபோல்
'வணக்கனள்ளி' என்பது 'வண்ணக்கார பட்டணம்' [18].
பெங்களூர் பகுதி கல்வெட்டில் 'விக்கிரமசோழ மண்டலம்' என்ற பெயரில் குறித்துள்ளனர்  [19].
இன்றும் பெங்களூரில் 'கங்கைகொண்ட சோழனள்ளி' உண்டு.
பெங்களூருக்கு வடக்கே 'சோழநாயக்கனள்ளி' மற்றும் 'சோழதேவனள்ளி' ஆகிய பெயர்களுடைய பகுதிகள் உள்ளன.
இன்று கன்னடருக்கு ஆதரவாக
சோழர் கல்வெட்டுகளை விட பழமையான ஒரு கன்னட நடுகல் கல்வெட்டு மிகவும் பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டு வெளிவந்தது.
அதைவிடவும் பழமையான தமிழ்க் கல்வெட்டு கிடைக்காமல் இருந்திருக்காது.
அது மறைக்கப்பட்டிருக்க அதிகம் வாய்ப்புள்ளது.
  மைசூரில் தென்னிந்திய கல்வெட்டுத் துறை தலைமைச் செயலகம் இருப்பதால் அங்கு பல தமிழ்க் கல்வெட்டுகள் அழிக்கப்பட்டுள்ளன.
இந்த இனவெறிப் போக்கு பற்றி ஜூனியர் விகடன் (18.06.2006), விகடன் (02.05.2013), மற்றும் தினமலர் (04.02.2018) ஆகிய பத்திரிக்கைகள் கட்டுரைகளும் வெளியிட்டுள்ளன.
[1] தமிழும் தமிழரும், முனைவர் ந. கடிகாசலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 1982, பக் 27.
[2 - 19] Mysore Gazetteer, Vol V, ed., C.Hayavadana Rao, 1930, pp 38-39, 342, 39, 369, 76-77, 86, 168, 94, 189, 194, 38-39, 202-03, 205, 239 land 39.
பெரும்பான்மையான தகவல்களுக்கு நன்றி,
நூல்: விழுதுகள் (கட்டுரைத் தொகுப்பு)
ஆசிரியர்: குணா
காலகட்டம்: 1991

வரைபடம்: பெங்களூர்
காலகட்டம்: 1914
(காண: https://vaettoli.wordpress.com/2019/08/27/பெங்களூர்-எங்களூர்-1/ )
அடுத்த பகுதி விரைவில்...


Saturday, 24 August 2019

திருநெல்வேலி வரை தெலுங்கர்

திருநெல்வேலி வரை தெலுங்கர்

தெலுங்கரின் திட்டமிட்ட குடியேற்றம் ஆந்திரத்துக்கு அண்மையில் உள்ள எல்லை மாவட்டங்கள் மட்டுமல்லாது தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டம் வரை நடந்துவந்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் 1881 லேயே அதன் மக்கட்தொகையில் 15% வந்தேறிகள்.
அவர்களில் தெலுங்கர் 8.6% இருந்துள்ளனர்.
(இவர்களில் பெரும்பாலோர் கம்மா ஆவர்).

இது அம்மாவடத்தில் தமிழ்ச் சாதிகளில் எந்தவொரு பெரிய சாதிக்கும் சளைக்காத எண்ணிக்கை ஆகும்.
அன்றைய நிலையில் திருநெல்வேலியில் தமிழ்ச் சாதியினர்
சாணார் 13.7%
பள்ளர் 11.1%
மறவர் 9.1%
வேளாளர் 8.2%
பறையர் 5.6%
இடையர் 5.3%
கம்மாளர் 4%
என்றவாறு இருந்தனர்.

வடக்கில் கோவை மாவட்டமே தெலுங்கர் குடியேற்றத்திற்கு அதிகம் இலக்காகி உள்ளது.
1921 லேயே மக்கட்தொகையில் 15% தெலுங்கர் இருந்துள்ளனர்.
(இவர்களில் மிகப் பெரும்பாலோர் சக்கிலியர் ஆவர்).

இதற்கு இணையானது சென்னை.
1961 நிலவரப்படி சென்னை மக்கட்தொகையில் 14.1% தெலுங்கர் ஆவர்.

1965 வாக்கில் இந்தியாவில் தெலுங்கு இனத்தின் 18% மக்கள் (67 லட்சம்) ஆந்திராவுக்கு வெளியே வாழ்ந்துவந்தனர்.
இதில் ஏறத்தாழ 9% (34 லட்சம்) மக்கள் தமிழகத்தில் குடியேறியுள்ளனர்.

அதாவது சுருக்கமாகக் கூறினால் தெலுங்கரில் பத்தில் ஒருவர் தமிழகத்தில் இருக்கிறார்.

இதன் பிறகுதான் திராவிடம் ஆட்சிக்கு வருகிறது!

தமிழகத்தில் தெலுங்கு வந்தேறிகளின் குடியேற்றமும் பொற்காலமும் உச்சத்திற்கு சென்றது.

என்றால் தற்போதைய நிலையை யூகியுங்கள்!

(புள்ளிவிபரங்கள் அறிஞர் குணா எழுதிய "விழுதுகள்" நூலில் இருந்து எடுக்கபெற்றன)

வரைபடம்
https://vaettoli.wordpress.com/2019/08/24/திருநெல்வேலி-வரை-தெலுங்க/

Monday, 24 April 2017

ஆணிவேர் - அறிஞர் குணா பார்ப்பனர் மற்றும் பறையர் பற்றி

பார்ப்பனர் மற்றும் அவர்களது பிரிவுகள் பற்றி அலசுகிறது இந்த கட்டுரை

நன்றி: அறிஞர். பெங்களூர் குணா (குணசீலன் சாமுவேல்)
Gunaseelan Samuel