Showing posts with label மலையாளி. Show all posts
Showing posts with label மலையாளி. Show all posts

Tuesday, 15 July 2025

ரிசானா நிமிஷா வேறுபாடு

 ரிசானா நிமிஷா வேறுபாடு

  ஏமனில் ஒரு மலையாள பிராடு !
அவளுடைய லோக்கல் கூட்டாளியை கொன்றுவிடுகிறாள்! 
 மரண தண்டனை அடைகிறாள்!
 அவளைப் பற்றி தெரிந்தும் 8.5 கோடி திரட்டி நட்ட ஈடு அளித்து அரும்பாடு பட்டு இன்று கடைசி நிமிடத்தில் மரண தண்டனையில் இருந்து அவரைக் காப்பாற்றிய மலையாளிகள் எங்கே?!

 17 வயது ஈழத்து சிறுமி ரிசானா!
 25 வயது என பொய் சொல்லி சவுதி க்கு வீட்டுவேலைக்கு போன இடத்தில் தவறுதலாக உணவு கொடுத்து ஒரு 4மாத கைக்குழந்தை இறந்ததால் மரண தண்டனை விதிக்கப்பட்டு 6 ஆண்டுகள் கழித்து 2013 இல் நடுத்தெருவில் தலையை வெட்டி கொல்லப்பட்டபோது வேடிக்கை பார்த்த நாம் எங்கே?! 

 

Saturday, 4 April 2020

தொடரும் வன ஆக்கிரமிப்பு

தொடரும் வன ஆக்கிரமிப்பு

மலையாளிகள் தமிழகத்து காடுகளை தினமும் ஒரு ஏக்கர் ஆக்கிரமிக்கிறார்கள் என்றால் அது மிகையில்லை.

தேனி மாவட்ட கம்பமெட்டு பகுதி இதற்கு நல்ல உதாரணம்.
தமிழக வனத்துறை, காவல்துறை, கலெக்டர், அமைச்சர் என அத்தனை பேர் வந்து பார்த்தும் எதுவுமே செய்யமுடியவில்லை.

கேரளா வன ஆக்கிரமிப்பு 1990 களில் மிகத் தீவிரமாக நடந்தது.
தேனி மாவட்டத்தில் குமுளியில் துவங்கி ஒன்னாம் மைல், இரண்டாம் மைல், ஆசாரிபள்ளம், கம்பமெட்டு, துாக்குபாலம், குதிரைபாஞ்சான், ராமக்கல்மெட்டு, போடிமெட்டு வரை வனப்பகுதிகள் நீள்கிறது.

குமுளி முதல் போடிமெட்டு வரை தமிழக வனப்பகுதி 700 எக்டர் வரை  ஆக்கிரமிப்பில் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
பூகோள அமைப்பில் கேரள மாநில பகுதியில் குடியிருப்புக்களாகவும், தமிழகத்தில் வனப்பகுதிகளாகவும் அமைந்துள்ளன.
இதனால் அரச ஆதரவுடன் மிக எளிதாக தமிழகப்பகுதிகளை ஆக்கிரமித்து காபி, ஏலக்காய், மிளகு, வாழை சாகுபடி செய்வது, குடியிருப்பு, சிறு தொழில், காற்றாலை மின்சாரம் தயாரிப்பு, சுற்றுலா, சொகுசு மாளிகைகள் என மலையாளிகள் அனுபவித்து வருகின்றனர்.

1994 ஆசாரிபள்ளம் பகுதியில் மிகப் பெரிய ஆப்பரேஷன் நடத்தி, 150 எக்டேர் வனப்பகுதியை தமிழக வனத்துறை மீட்டது.
ஆனால் எஞ்சிய பகுதிகளை மீட்கமுடியவில்லை.

கம்பமெட்டு பகுதியில் 2014 இல் மீண்டும் முழுமூச்சுடன் இறங்கிய மலையாளிகள் சிறிது சிறிதாக 500 மீட்டர் வரை ஆக்கிரமித்தனர்.

எந்த அதிகாரி நடவடிக்கை எடுக்க முற்பட்டாலும் உடனடியாக டிரான்ஸ்பர் செய்யப்படுவது வழக்கமாக இருந்தது.

2017 இல் இவர்கள் மெயின்ரோட்டில் ஒரு கன்டெயினர் வைத்து செக் போஸ்ட் அமைத்தபோது பாரஸ்டர் ராஜூ என்பவர் தட்டிக்கேட்க அவரை அடித்து கீழே தள்ளினர் மலையாள அதிகாரிகள்.
அவர் காவல்துறையை அழைத்துவர போக்குவரத்து பாதிக்கப்பட பிரச்சனை பெரிதானது.

தாசில்தார் வந்து பேசிப்பார்த்தபோதும் சர்வே எடுக்க விடாமல் மலையாளிகள் பிரச்சனை செய்தனர்.

பிறகு கலெக்டர் வந்து பேசியும் அவர்கள் வழிக்கு வராததால் அமைச்சர் உதயகுமார் நேரில் வந்து பார்வையிட்டார்.

அப்போது எடுத்த சர்வேயில் அந்தப்பக்கத்து கேரள காவல்நிலையமே தமிழக எல்லைக்குள் வருவது தெரிந்தது.

அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தி கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிப்புகளை அகற்றிவிடுவோம் என்று சொன்னார்.

கூட்டு சர்வே தேதி அறிவித்தார்கள்.

மலையாள நாளிதழ்கள் தமிழக அரசு இப்பகுதியில் கேரள மின்சாரத்தைத் திருடுவதாக செய்திகளை வெளியிட்டன.

பல பெரிய நிலப்பரப்புடன் அரியவகை மரங்கள், விலங்குகள், ஒரு அருவி என மலையாளிகள் விழுங்கியிருப்பது மிக அதிகம்.

இடையில் தென்னிந்தியா பார்வார்டு பிளாக் சார்பில் 50 பேர் சென்று எல்லைக் கற்களைப் பிடுங்கி எறிந்து ஆர்ப்பாட்டம் செய்து போராட்டம் நடத்தினர்.

அதன் பிறகு இருமாநில குழு சர்வே செய்து போனமாதம் நட்ட 14 எல்லை கற்களை ரகசியமாகப் பார்வையிட்டார் எம்.பி ஜோய்ஸ் ஜார்ஜ்

பிறகு நடப்பட்ட 14 கற்களையும் எம்.பி ஜோய்ஸ் ஜார்ஜ் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் பிடுங்கி எறிந்தனர்.
[தினகரன் 23.06.2017
தலைப்பு: கம்பம்மெட்டில் தொடரும் பதற்றம் தமிழக எல்லைக்கற்களை பிடுங்கி வீசி அட்டூழியம்]

1750 ஏக்கர் (700 ஹெக்டேர்) தமிழக வனப்பகுதியை ஆக்கிரமித்தபடி அமர்ந்திருக்கும் மலையாளிகள் இன்றுவரை ஒரு அங்குலம் கூட பின்வாங்கவில்லை.

இப்பிரச்சனையில் தினமலர் (தேனி மாவட்ட பதிப்பு) தொடர்ச்சியாக கவனம் செலுத்தி  வெளியிட்ட செய்தித் தலைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

கேரள ஆக்கிரமிப்புகளை
அகற்றாத தமிழக வனத்துறை
[செப் 09, 2019]

ஆக்கிரமிக்கப்பட்ட தமிழக வனப்பகுதிகள் மீட்பது எப்போது:முயற்சி கூட எடுக்காமல் வேடிக்கை பார்க்குது வனத்துறை
[செப் 20,2018]

தமிழக வனப்பகுதி
ஆக்கிரமிப்பு படிப்படியாக
அகற்ற திட்டம்
[மே 06, 2018]

ஆக்கிரமிக்கப்பட்ட தமிழக
வனப்பகுதிகள் மீட்கப்படுவது எப்போது? அதிரடியாக களம்
இறங்குமா வனத்துறை
[பிப் 02, 2018]

தமிழகம் மின்சாரம்
திருடுகிறதாம்! அவதூறு
பரப்புகிறது கேரளா
[ஆக் 07, 2017]

கம்பமெட்டில் தமிழக
வருவாய்த்துறை அமைச்சர்
ஆய்வு : வன எல்லை
நிர்ணயத்திற்கு கூட்டு சர்வே
செய்ய நடவடிக்கை
[ஆக் 05, 2017]

கம்பமெட்டில் சர்வே கற்களை
ஊன்றி போராட்டம் :
தென்னிந்திய பார்வர்டு பிளாக்
கட்சியினர் கைது
[ஜூலை 04, 2017]

தமிழக சர்வே கற்கள் அகற்றம்:
கேரள ஆக்கிரமிப்பு கும்பல்
அடாவடி
[ஜூன் 22, 2017]

தமிழக -- கேரள வன எல்லை
நிர்ணயம் ஜூன் 7ல் கூட்டு சர்வே
[ஜூன் 04, 2017]

வனப்பகுதியில்
கண்காணிப்பு கோபுரம்
அமைப்பது குறித்து இடத்தேர்வில் அதிகாரிகள் தீவிரம்
[மார் 25, 2017]

மாவட்ட வன அலுவலர்
டிரான்ஸ்பர் ஆக்கிரமிப்பு
அகற்றுவதில் தொய்வு
[மார் 10, 2017]

தமிழக வனப்பகுதி மீட்கப்படுமா -
மாவட்ட அதிகாரிகள் பாராமுகம்
[பிப் 27, 2017]

கம்பமெட்டில் செக்போஸ்ட்:அடம்
பிடிக்கும் கேரளா : தமிழக
அதிகாரிகள் ஏமாற்றம்
[பிப் 24, 2017]

தமிழக வனப்பகுதிகளில்
ஆக்கிரமிப்பு... தொடர்கிறது:
வன எல்லை நிர்ணயம் அவசியம்
[பிப் 25, 2016]

கம்பம் மெட்டு அருகே கேரள
காற்றாலைக்கு தமிழக
வனப்பகுதியை ஆக்கிரமித்து
ரோடு
[ஜூன் 23, 2014]

Thursday, 26 December 2019

பாலக்காடு தமிழர்களுக்கு மலையாளி செய்யும் அநீதி

பாலக்காடு தமிழர்களுக்கு மலையாளி செய்யும் அநீதி

 பாலக்காட்டில் டிசம்பா் 27, 28இல் தமிழ் மொழிச் சிறுபான்மை ஆணையம் விசாரணை

 பாலக்காட்டில் தமிழ் மொழிச் சிறுபான்மை ஆணைய விசாரணை வரும் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
 இது குறித்து
கேரள மாநிலத் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின்
மாநிலச் செயலாளா் மா.பேச்சிமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் ஹிந்து, இஸ்லாம், கிறிஸ்துவ மதத்தைச் சாா்ந்த தமிழ் பேசும் மக்கள் மற்றும் தமிழ் மரபினா்கள் என 10 லட்சம் போ் வாழ்கின்றனா்.
 இதில், ஹிந்துக்களில் பல ஜாதியினா் உள்ளனா்.
 தமிழக எல்லையோர கேரள மாநிலத்தில் பாலக்காடு, மூணாறு, குமுளி ,தேவிகுளம், திருவனந்தபுரத்தில் வாழும் தமிழா்கள் யாருமே கேரள
பிற்படுத்தப்பட்டோா் மற்றும் தாழ்த்தப்பட்டோா் பட்டியலில் சோ்க்கப்படவில்லை.
 இங்குள்ள தமிழா்களுக்கு ஜாதி சான்றிதழ் இன்றும் மறுக்கப்படுகிறது.
 முற்போக்கு ஜாதியனரான பிராமணா், நாயா், நம்பூதிரி இன மக்களுக்கு இணையாக இங்குள்ள தமிழா்கள் கருதப்படுகிறாா்கள்.
 அட்டப்பாடித் தமிழா்களுக்கு உரிமையுடைய நிலங்களுக்கு அரசு பட்டா வழங்குவதில்லை.
 கேரள மாநிலத் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் இவற்றையெல்லாம் சுட்டிக்காட்டி, கேரளத் தமிழா்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்குத் தீா்வுகாண வேண்டும் என்று கேரள முதல்வா் பிணராயி விஜயனிடம் முறையிட்டது.
 இதையடுத்து, அம்மாநில முதல்வா் இது தொடா்பாக கேரளத்தில் தமிழா்கள் வாழும் திருவனந்தபுரம், வட்டியூா்காவு, நேமம் இடுக்கி மாவட்டம், தேவிகுளம், பீா்மேடு, உடும்பன் சோலை, பாலக்காடு, சித்தூா், நெம்மாறை பகுதிகளை உள்ளட்டக்கிய சட்டப் பேரவைத் தொகுதிகளின் எம்.எல்.ஏ.க்களை அழைத்துப் பேசினாா்.
 இதைத் தொடா்ந்து கேரளத் தமிழா்களின் பிரச்னைகளுக்குத் தீா்வுகாண டாக்டா் நடுவட்டம் கோபாலகிருஷ்ணன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது.
 இந்த ஆணையத்தின் விசாரணை பாலக்காடு குடிமக்கள் நிலையத்தில் (சிவில் ஸ்டே ஷன்) ஆட்சியா் கருத்தரங்கு அரங்கில் டிசம்பா் 27, 28 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 வரை நடைபெற உள்ளது.
  எனவே, பாலக்காடு மாவட்டத்தில் உள்ள தமிழா்கள் தங்கள் கோரிக்கைகளை ஆணையத்திடம் அளிக்குமாறு தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் கேட்டுக் கொள்கிறது.
 மேலும் தகவல்களுக்கு 9388197671 எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: தினமணி
25.12.2019

பதிவர்: வெ.பார்கவன் தமிழன்





Friday, 15 November 2019

ஒரு தற்கொலைக்கு எத்தனை சாயங்கள்




















ஒரு தற்கொலைக்கு எத்தனை சாயங்கள்

 பிற மாநிலங்களில் நேர்காணலில் நீங்கள் BC என்று கூறினால் அவனுக்கு புரியாது.
 OBC என்று கூறவேண்டும்.
ஏனென்றால் தமிழகத்தில் மட்டுமே 69% இடவொதுக்கீடு.

 மற்றபடி எல்லா மாநிலங்களிலும் 50% மட்டுமே!

 இதில் OC (other castes) என்பது 50%.
 இது இடவொதுக்கீடு என்று ஆகாது.

 அதாவது ஒரு கல்லூரியில் 100 சீட் இருக்கிறது என்றால்
 50 சீட் வரை மதிப்பெண் அடிப்படையில் நிரப்பபடும்.
 இதில் போதுமான மதிப்பெண் எடுத்த SC, ST யும் கூட இடம்பெறுவர்.

 மீதி 50% இடவொதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்படும்.
 அதாவது குறைந்த மதிப்பெண்  OBC, SC, ST இதில் இடம்பெறுவர்.

 மத்திய அரசு பின்பற்றும் இடவொதுக்கீடு
Scheduled Castes (SCs): 15%
Scheduled Tribes (STs): 7.5%
Other Backward Castes (OBCs): 27%
இது போக
புதிதாக 10% Reservation for Economically Weaker Sections (EWS)

 ஓசி என்று எந்த ஒதுக்கீடும் கிடையாது.
 இங்கே OC என்றாலே பார்ப்பனர் என்று பிரச்சாரம் செய்யப்படுகிறது.

 ஐஐடி யில் இந்த இடவொதுக்கீடு சரியாக பின்பற்றப்படவில்லை.
 இது விதிமீறல்தான்.

 ஆனால் இதில் தமிழக அரசுக்கோ, தமிழக குடிமக்களுக்கோ, தமிழக பார்ப்பனருக்கோ எந்த தொடர்பும் இல்லை.

 தமிழகத்தின் கட்டுப்பாட்டிலேயே இல்லாத IIT முழுக்க மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது.
 பல மாநிலத்து மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.

 அங்கே நடக்கும் கொடுமைக்கு நாம் எப்படி பொறுப்பாக முடியும்?!

 பாத்திமா லத்தீப் விடயத்தில் "தமிழகத்தை நம்பிதானே அனுப்பினோம்?" என்று பெற்றோர் புலம்புவது அப்பாவித்தனமா அல்லது உள்நோக்கமுடையதா என்று புரியவில்லை.

 இதுவே தமிழகத்தில் ஒரு பொது இடத்தில் பாத்திமா பாதிக்கப்பட்டிருந்தால் தமிழகம் பொறுப்பு.
 மற்றபடி பாத்திமா தற்கொலைக்கு தனிமனிதர்கள் தான் காரணம்.

தன் சாவுக்கு காரணமென அந்த மாணவி குறிப்பிட்ட மூன்று பேருமே வெவ்வேறு பின்னணி கொண்டவர்கள்

 1. சுதர்ஷன் பத்பநாபன், ஆரியத்துவ ஆதரவாளர்.
 (அறப்போர் இயக்கத்தை சார்ந்தவர் அல்ல என்று அந்த அமைப்பு மறுத்திருக்கிறது. )

2.ஹேமசந்திர காரா,
மாற்றுத்திறனாளி.

3. மிலிந்த் ப்ராமே,
அம்பேத்கர் பெரியார் வாசக வட்ட ஆலோசகர்.
 தலித்திய திராவிட ஆதரவாளர்.

 இந்த தற்கொலைக்கு இசுலாமிய இயக்கங்கள் மதச் சாயம் பூசி,
திராவிட இயக்கங்கள் சாதிச் சாயம் பூசி,
கேரள அரசு இனச் சாயமும் பூசி அரசியல் ஆதாயம் பார்க்கிறார்கள்.

 தனிமனிதர் மட்டுமன்றி கல்வி முறையும் கூட ஒரு முக்கிய காரணம்.
 இந்தியாவில் மாணவர்கள் தற்கொலை மிக அதிக அளவில் உள்ளது.
  3 இடியட்ஸ் (நண்பன்) மாதிரி சில படங்கள் கூட வெளிவந்துள்ளன.

 தற்கொலை கூட கோழைத்தனம்.
 ஆனால் தமிழகத்திலிருந்து இதே போல மத்திய அரசு நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு சென்ற தமிழகத்து மாணவர்கள் 4 பேர் கொலை செய்யப்பட்டு அது தற்கொலையாக மாற்றப்பட்டுள்ளது
 (தேடுக: தமிழக மாணவர்களைக் காவுவாங்கும் டெல்லி வேட்டொலி).

 தற்கொலைக்கு உண்மையான காரணத்தை ஆராய்ந்து தொடர்புள்ளோரை தண்டிக்கவேண்டும்.

 கல்விமுறையில் மாற்றம் கொண்டுவரவேண்டும்.

 பாத்திமா லதீப் விடயத்தில் இதற்கு அரசியல் சாயம் பூசி திசைமாற்றி அந்த மாணவிக்கு மேலும் அநீதி இழைக்க வேண்டாம்.

Wednesday, 19 December 2018

கேரளச் சுற்றுலா தமிழகத்தினுள்

கேரளச் சுற்றுலா தமிழகத்தினுள்

பல அரிய உயிரினங்கள் வாழ்கின்ற,
UNESCO ஆல் பாதுகாக்கப்பட்ட பகுதியென அறிவிக்கப்பட்ட,
தமிழக வனத்துறை வசமுள்ள,
பொதிகை மலையில் மையப் பகுதியில் கேரளா காட்டுவழி நடைபயண சுற்றுலா நடத்தி காசு பார்க்கிறது.

அதுவும் எல்லை தாண்டி தமிழகத்தினுள்.

நடுக்காட்டில் செம்மூஞ்சி என்கிற இடம் வரை நடத்தினர்.

பிறகு பாண்டிப்பத்து என்கிற இடம் வரை இன்னொரு கிளை நீண்டது.

தற்போது கேரள சுற்றுலாவின் கரங்கள் காரையாறு அணைவரை நீள்கின்றன.

ஆம் முழு காட்டையும் தாண்டி சிறப்பு மண்டலமான "முண்டந்துறை புலிகள் காப்பகம்" வழியாக காரையார் அணை வரை வந்துவிட்டது.

இதற்கென தமிழக அரசிடம் அனுமதி பெற்றதாக தெரியவில்லை.

முல்லைப்பெரியாறு அணை மற்றும் மூணாறு பகுதிகளில் அதாவது எல்லைப் பகுதியில் உள்ள நீர்நிலைகளில் தமிழக படகுகளை இயக்கவிடாமல் அடாவடி செய்து நமது சுற்றுலா வருமானத்தில் மண்ணைப் போடும் மலையாளிகள் தமிழர்களைக் கொள்ளையடிப்பதில் சிறு வாய்ப்பையும் தவறவிடுவதில்லை.

தமது மாநில காடுகளை அழித்து அதனால் வெள்ளத்தை வரவைத்துக்கொண்ட மலையாளி நமது காட்டிலும் உலாவ ஆரம்பித்துவிட்டான்.

இப்போது இருக்கும் காட்டுவழி
பிறகு ஒற்றையடிப்பாதை ஆகும்
பிறகு இரு சக்கர வாகனம் வரும்.
பிறகு மகிழுந்தும் பிறகு பேருந்தும் வரத்தொடங்கும்.

இவ்வாறு நமது காட்டை இரண்டாகப் பிழந்து போடவுள்ளனர்.

வானத்திலிருந்து குதித்தது போல காரையார் அணையிலிருந்து திடீரென இறங்கி வரும் மனிதர்கள் யார் என்று பொதுமக்கள் வேண்டுமானால் குழம்பலாம்.

ஆனால் தமிழக வனத்துறை கூட தடுப்பது இல்லையே?!

இவர்களுக்கும் கேரளா எலும்புத்துண்டுகளை வீசி எறிகிறதா?!

Thursday, 22 November 2018

27 லாரி கழிவுகள் - மலையாளிகள் அனுப்பிய நிவாரணம்

27 லாரி கழிவுகள் - மலையாளிகள் அனுப்பிய நிவாரணம்

அதில் 4 லாரிகள் ஆபத்தான மருத்துவக் கழிவுகள்!

மீதி 23 வெள்ள வடிந்த பகுதிகளை சுத்தப்படுத்தி எடுத்த குப்பைகள்!

நாம் இளித்தவாயர்கள் என்பது 1008 வது முறையாக நிரூபணம் ஆகியுள்ளது!
-------

தினகரன் வெளியிட்ட செய்தி

கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு கழிவுகளை ஏற்றிவந்த 27 லாரிகளுக்கு அபராதம் விதித்து சுகாதாரதுறை நடவடிக்கை

தென்காசி: கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு கழிவுகளை ஏற்றிவந்த 27 லாரிகள் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டன.

மருத்துவ கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை ஏற்றிவந்த லாரிகள் தென்காசி அருகே உள்ள புளியரையில் தடுத்து நிறுத்தப்பட்டன.

லாரிகளை பறிமுதல் செய்த போலீசார் அவற்றை சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

கேரளாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பல மாவட்டங்கள் மிகவும் பாதிப்புக்குள்ளானது.

அப்போது அம்மாநிலத்தில் பயன்படுத்த முடியாத பொருட்கள், பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் சேகரிக்கப்பட்டு தமிழகத்தில் கொட்டப்பட்டு வருகின்றன.

அதுமட்டுமல்லாது கடந்த 10 ஆண்டுகளாகவே இதுபோன்று தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நெல்லை வழியாக கேரளாவில் கழிவுகளை ஏற்றி வந்த 23 லாரிகளை போலீசார் தடுத்து நிறுத்தி, அவற்றை பறிமுதல் செய்து சுகாதாரதுறையினரிடம் ஒப்படைத்தனர்.

லாரிகளில் இருந்த கழிவுகள் குறித்து ஆய்வு செய்த அதிகாரிகள் பிளாஸ்டிக் கழிவுகளை ஏற்றிவந்த 23 லாரிகளுக்கு தலா ஒரு லட்சமும், மருத்துவ கழிவுகளை ஏற்றிவந்த 4 லாரிகளுக்கு தலா 3 லட்சமும் அபராதம் விதித்தனர்.

05:10 pm Nov 22, 2018 | dotcom@dinakaran.com

Wednesday, 24 October 2018

இரண்டு புதிய அணைகள் - முல்லைப்பெரியாறு அணை டம்மியாக்கப்பட்டு உடைக்கப்படும்

முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாக மேலும் இரண்டு அணை
- அனுமதி வாங்கியது கேரளா

கடந்த ஆகஸ்ட் மாதம் கேரளாவில் நடந்த வரலாறு காணாத மழை ஏற்படுத்திய சுவடுகள் இன்னும் நினைவை விட்டு நீங்கவில்லை.
அதற்குக் காரணமாக மலையைக் குடைந்து கட்டடங்கள், சாலைகள் எனப் பலவற்றை அமைத்திருந்ததும், கிட்டத்தட்ட 43 அணைகள் கட்டியிருந்ததையும் சுற்றுச் சூழலியலாளர்கள் சுட்டிக் காட்டினர்.
இதனால் பெருமளவில் நிலச்சரிவு ஏற்பட்டதையும், வீடுகள் இடிந்ததையும் சுட்டிக் காட்டினர்.
ஆனால், கேரள அரசோ முல்லைப் பெரியாறு அணையின்மீது குற்றம் சாட்டியது.
இதற்குப் பல எதிர்ப்புகள் எழுந்தபோதும், தனது திசையைத் திருப்பாமல் முல்லைப் பெரியாறு அணையின் கீழே மேலும் ஒரு புதிய அணையைக் கட்ட முடிவெடுத்துள்ளது.

இந்தப் புதிய அணை கேரள மாநிலம், பீர்மேடு தாலுகா, மஞ்சுமலை கிராமத்தில் அமையவிருக்கிறது.
இந்த இடம் வண்டிப் பெரியாரிலிருந்து 8 கி.மீ தொலைவில் இருக்கிறது.

இதற்கான சுற்றுச்சூழல் அறிக்கை தயாரிக்க, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தை நாடி அனுமதியும் வாங்கிவிட்டது கேரளா.

இதனை அவ்வளவு எளிதில் கடந்து போய்விட முடியாது.
2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பை கொஞ்சம் திருப்பிப் பார்க்க வேண்டும்.
"அணை தொடர்பான சிக்கல்களுக்குத் தமிழகமும், கேரளாவும் ஒரு மனதுடன் முடிவெடுத்து நீதிமன்றத்தை அணுகலாம்.
கேரளா தனியாக அணையைக் கட்ட விரும்பினால், தமிழக அரசின் ஒப்புதல் கடிதத்தைப் பெற்று, அதைச் சுற்றுச்சூழல் அனுமதி கடிதத்தோடு இணைக்க வேண்டும்" எனத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், இதற்கு நேர்மாறாக கேரளா தனித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் விண்ணப்பித்து சுற்றுச்சூழல் தாக்கல் அறிக்கையைத் தயார் செய்ய அனுமதி வாங்கியிருக்கிறது கேரளா.

இதுபற்றிப் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பொறியாளர் சுந்தர்ராஜனிடம் பேசினோம்.
"தமிழக அரசு உடனடியாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும்.
முல்லைப் பெரியாறு அணைக்குக் கீழே புதிய அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை செய்ய கேரள ந அரசுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கியிருப்பது மிகப்பெரும் சூழலியல் பேரிடராகும்.

கேரளத்தில் அண்மையில் ஏற்பட்ட மழை பொழிவினால் மிகப்பெரும் சேதம் ஏற்பட்டு ஒட்டுமொத்த மாநிலமே நீரில் மிதந்ததற்கு மேற்குத் தொடர்ச்சி மலைகளை குடைந்து பல சுரங்கங்கள், சாலைகள், ரிசார்ட்டுகள் என அமைத்ததே முக்கியக் காரணமாகும்.

மேலும் தேவையே இல்லாத இடங்களில் மின்சார உற்பத்திக்காக அணைகள் கட்டியதும் இப்பேரழிவுக்கு முக்கியக் காரணமாகும்.
உலக நாடுகள் பலவும் இப்பிரச்னையை உணர்ந்து பல ஆண்டுகளுக்குமுன் கட்டிய அணைகளை இடித்து வருகின்றன.

இதுமட்டுமல்லாமல் அணைகள் கட்டுவதால் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக உள்ளது எனப் (reservoir induced seismicity ) பல ஆய்வுகளும் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் முல்லைப் பெரியாறு போன்ற சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இன்னொரு அணையைக் கட்டுவது அறிவார்ந்த செயல் கிடையாது.

அதுமட்டுமன்றி முல்லைப் பெரியாறு அணை தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய 5 மாவட்டங்களின் 2 லட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்களின் நீர்த்தேவையினையும், பல கோடி மக்களின் குடிநீர்த் தேவையினையும் பூர்த்தி செய்து வருகிறது.
இந்நிலையில் புதிய அணை கட்டினால் தமிழகத்துக்கு ஒரு சொட்டுத் தண்ணீர் கூட கிடைக்காமல் போய்விடும்.

மேலும் 2014-ம் ஆண்டு, முல்லைப் பெரியாறு வழக்கில் ஆர்.எம்.லோதா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பில் 'இரண்டு மாநிலங்களும் ஒருமனதாக புதிய அணை கட்ட முடிவு எடுத்து நீதிமன்றத்தை அணுக வேண்டும் எனவும், கேரள அரசு அணை கட்ட விரும்பினால் தமிழக அரசின் ஒப்புதல் கடிதம் பெற்று அதைச் சுற்றுச்சூழல் அனுமதிக்கான விண்ணப்பத்தோடு இணைத்துத்தான் விண்ணப்பிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
தற்போது மத்திய சுற்றுச்சூழல்துறை வழங்கியிருக்கும் இந்த முதற்கட்ட அனுமதி வெளிப்படையான நீதிமன்ற அவமதிப்பாகும்.
தமிழக மக்களின் நலன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு உடனடியாக மத்திய சுற்றுச்சூழல்துறையின் அனுமதியை எதிர்த்து தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு தொடர வேண்டும் எனப் பூவுலகின் நண்பர்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் தற்போது இருக்கும் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து 1,200 அடி கீழ்த்திசையில் புதிய அணை அமைக்கப்படவுள்ளதால் நிச்சயமாக தமிழகத்துக்கு நீர் கிடைப்பதற்கான வாய்ப்பு இல்லை.

அணையின் உயரம் 174.6 அடி, நீளம் 1,214 அடி.
இதற்குத் துணை அணையாக 82 அடியில் இன்னொரு அணையும் கட்டப்படவுள்ளது.
திட்டத்தின் மொத்த மதிப்பீடு 663 கோடியாகும்.
இந்த அணை கட்டுவதால் 0.017 டி.எம்.சி நீரை மட்டுமே அதிகமாக தேக்கி வைக்க முடியும்.
0.502 சதுர கிலோமீட்டர் மட்டுமே நீர்ப்பிடிப்பு பகுதி அதிகரிக்கும்.

ஆனால் முல்லைப் பெரியாறு புலிகள் சரணாலயத்தின் 123 ஏக்கர் வனப்பகுதி நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது.

இந்தச் சிறிய அளவு நன்மைக்காக மிகப்பெரும் சூழலியல் சீர்கேட்டை அனுமதிக்க முடியாது.
புதிய அணை கட்டி முடித்த பின்னர் பழைய அணையானது பகுதி பகுதியாகச் செயலிழக்கம் செய்யப்பட்டு உடைக்கப்படும் எனவும்,
அனைத்து அனுமதிகளும் பெறப்பட்ட 4 ஆண்டுகளில் புதிய அணை கட்டி முடிக்கத் திட்டமிட்டிருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது.
தமிழக அரசு உடனடியாக நீதிமன்றத்தை நாடி இத்திட்டத்தைத் தடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்" என்றார்.

கேரளா, "முல்லைப் பெரியாறு அணையின் வாழ்நாள் முடிந்துவிட்டது,
அண்மைக் காலமாக கேரளாவில் அதிகமான நில அதிர்வுகள் ஏற்படுகின்றன,
அதனால் புதிய அணை தேவைப்படுகிறது,
புதிய அணை கட்டினால் மக்களைப் பாதிப்பிலிருந்து காத்துக் கொள்ள முடியும்" என்று தனது கோரிக்கையை முன் வைத்துள்ளது.

இதற்கு முன்னர் முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்த நிபுணர் குழு அணை முழுப் பலத்தோடு இருக்கிறது என்று அறிக்கை கொடுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

கேரளா, தமிழக அரசோடு ஆலோசிக்காமல் இரண்டு அணைகளைக் கட்ட சுற்றுச்சூழல் தாக்கீடு அறிக்கை தயாரிக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி வாங்கிவிட்டது.

இதில் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து, முல்லைப் பெரியாறு அணையைக் காக்க வேண்டும் என்பதே சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது.

இனி முடிவு தமிழக அரசின் கைகளில்...!

நன்றி: Tamilri.com (TRI)

Thursday, 23 August 2018

142 இனி 139

142 இனி 139

மலையாள பாம்புக்கு ஓடி ஓடி பால்வார்த்த இளிச்சவாய் தமிழர்களே!

இதோ அது கடித்துவிட்டது!

இன்று முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டம் 139 அடியாகக் குறைக்கப்பட உள்ளது.

முன்பே சொன்னேன் இந்த இனவெறியர்களுக்கு உதவி செய்யாதீர்கள் என்று.

இடுக்கி மாவட்டம் 95% தமிழர் வாழும் பகுதி.

முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ள இடுக்கி மாவட்டமே நமக்கு சொந்தமானதுதான்.

அதை மீட்க களம் இறங்குங்கள்!

ஒரு வாரம் கேரளாவுக்கு செல்லும் உணவை தடுத்து நிறுத்துங்கள் போதும்.

Monday, 20 August 2018

ஈழப் படுகொலையில் மலையாளிகளின் பங்கு

ஈழப் படுகொலையில்  மலையாளிகளின் பங்கு

2009 போரில் புலிகள் அழிக்கப்படவும் ஈழப் படுகொலையில் 1,75,000 தமிழர்கள் கொல்லப்படவும் மிக முக்கிய காரணம் இலங்கைக்கு இந்தியா செய்த உதவி.

அந்த உதவிகளுக்கு முக்கிய காரணம்  மலையாளிகள்.

அப்போது இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி ஒரு மலையாளி.

பாதுகாப்பு செயலர் எம்.கே.நாராயணன் ஒரு மலையாளி.

வெளியுறவுச் செயலர் சிவசங்கர் மேனன் ஒரு மலையாளி.

குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டிலுக்கு செயலாளராக இருந்தவர் கிறிஷ்டி பெர்னாண்டஸ் ஒரு மலையாளி.

பிரதமர் அலுவலகத்தில் முதன்மைச்செயலாளராக இருந்தவர் டி.கே. நாயர் ஒரு மலையாளி.

பிரதமரின் அலுவலகத்தில் இவருக்கு அடுத்தப்படியான அதிகாரி கோபாலகிருஷ்ணன் ஒரு மலையாளி.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் செயலாளர் வின்சென்ட் ஜார்ஜ் ஒரு மலையாளி.

மத்திய அமைச்சரவை செயலாளர்  கே.எம். சந்திரசேகர் ஒரு மலையாளி.

உள்துறை செயலாளராக இருந்த சி.கே. பிள்ளை ஒரு மலையாளி.

வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா மேனன் ராவ் ஒரு மலையாளி.

தகவல் தொழில் நுட்பத்துறைச் செயலாளர் பி.கே.தாமஸ் ஒரு மலையாளி.

விவசாயம் மற்றும் கூட்டுறவுத்துறை செயலாளர் நந்தகுமார் ஒரு மலையாளி.

சிவில் விமானப்போக்குவரத்து துறை செயலாளர் மாதவன் நம்பியார் ஒரு மலையாளி.

செய்தி ஒலிபரப்பு துறை செயலாளர் ரகுமேனன் ஒரு மலையாளி.

  நகர்ப்புற வளர்ச்சி துறை செயலாளர் ராமச்சந்திரன் ஒரு மலையாளி.

ஜவுளி துறை செயலாளர் ரீட்டாமேனன் ஒரு மலையாளி.

கால்நடை பராமரிப்பு துறை செயலாளர் கங்காதரன் ஒரு மலையாளி.

குடிநீர் வழங்கல் துறை செயலாளர் சாந்தா ஷீலா நாயர் ஒரு மலையாளி

சட்டத்துறை செயலாளர் விசுவநாதன் ஒரு மலையாளி.

மத்திய அரசுத்துறை செயலாளர்கள் 53 பேரில் 19 பேர் மலையாளிகள்.

அதாவது நாட்டு மக்கட்தொகையில் 3% கூட தேறாத மலையாளிகள் மத்திய இரண்டாம் நிலை அதிகாரத்தில் 33% இருந்தனர்!

(இதில் இருவர் தமிழகத்தின் தரப்பிலிருந்து சென்றவர்கள்)

இது போக  ஐ.நா. பொதுச்செயலரின் சிறப்புத் தூதுவர் விஜய் நம்பியார் ஒரு மலையாளி.

இவரது சகோதரர் சதீஷ் நம்பியார் இந்திய ராணுவத்தில் உயர் அதிகாரி.

2007 இல் இலங்கையில் போரை நடத்த திட்டமிட்ட இந்தியா அதற்கு அமைத்த ரகசிய குழுவில் 3ல் இருவர் மலையாளிகள்.

சிவசங்கர் மேனன், எம்.கே.நாராயணன் மற்றும் இவர்களுடன் பாதுகாப்புத்துறை செயலர் விஜய் சிங் என்பவரும் சேர்ந்து அந்த ரகசிய குழு அமைக்கப்பட்டது.

இக்குழு இதேபோல இலங்கையிலும் ராஜபக்ச அமைத்த (பசில், கோத்தபயா, லலித் வீரதுங்கா) மூவர் குழுவுடன் கூட்டாக இணைந்து
இலங்கையில் தமிழருக்கு எதிரான போரை வழி நடத்தியது.

அதாவது சிங்களவர் மூலம் தமிழர் மீது போரை நடத்தியதே இந்தியாவின் இந்த ரகசிய குழுதான்.
அப்போது இந்தியாவை கட்டுப்படுத்தியதே மலையாளிகள்தான்.

2007-2009 இல் இவ்விரு குழுக்களும் 8 நேரடிச் சந்திப்புகளையும் நடத்தியுள்ளன.

போர் சமயத்தில் ராஜபக்சவின் மூவர் குழு 5 முறை இந்தியா வந்துள்ளது.

இந்திய மூவர் குழு 3 முறை இலங்கை சென்றுள்ளது.

அதாவது தொலைதொடர்புகள் இருந்தாலும் நேரடி சந்திப்புகளும் நடந்தன.
இவை அனைத்தும் ரகசியமாக நடந்தன.

இக்குழு எவ்வாறு திட்டமிட்டு ஈழப் போராட்டத்தை ரத்த சகதியில் மூழ்கடித்தனர் என்று பார்ப்போம்.

இலங்கையில் ஓரளவு சுமூகமான சூழல் நிலவுவதாக உலகிற்குக் காட்ட 2008 சார்க் (SAARC) மாநாடு ஆசிய வல்லரசுகளால் இலங்கையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இம்மாநாடு நடக்கும்வரை ஓரளவு முறையான மிதமான போரை நடத்தி அதன்பிறகு 2009 லோக்சபா தேர்தலுக்குள் இனப்படுகொலையுடன் முடியும் கொடூரமான போரை நடத்தி புலிகளை அழித்தொழிப்பதாகத் திட்டம் தீட்டினர்.

(அதாவது சார்க் மாநாடு முடிந்தபிறகு தடைசெய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தி சர்வதேச விதிகளை மீறி போர் நடந்தது)

  2004 இல் பா.ஜ.க அரசு போட்ட இந்தியா- இலங்கை free trade ஒப்பந்தப்படி எல்லா ராணுவ உதவிகளையும் செய்வோம் என வாக்குகொடுத்துவிட்டு வந்தது அக்குழு.

2007 இல் முதற்கட்டமாக இலங்கைக்கு ஐந்து எம்.ஐ-17 ரக ஹெலிகாப்டர்களை ரகசியமாக வழங்கிய இந்திய வான்படை அதில் இலங்கை சின்னத்தை பொறித்து பயன்படுத்தச் சொன்னது.

ஆனால் அடுத்து களமிறக்கப்பட்டது இந்திய கடற்படைதான்.
அது இந்தோனேசியா வையும் தாண்டி ஆஸ்திரேலியா வரை கண்கானித்து புலிகளுக்கு கடல் வழிகள் மூலம் வரும் ஆயுதங்களைத் துப்பறிந்து இலங்கைக்கு தகவல் கொடுத்தது.

தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி மையத்தை தலைமையாகக் கொண்டு   புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியை ஒட்டிய கடலும் அவர்களது நடமாட்டமும் சக்தி வாய்ந்த ராடார்கள் மூலமும் ரோந்து கப்பல்கள் மூலமும் கண்கானிக்கப்பட்டு இலங்கைக்கு உடனுக்குடன் தெரியப்படுத்தப் பட்டது.

அடுத்தடுத்து புலிகளுக்கு வந்த சிறிதும் பெரிதுமான பத்து கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டன.

2006 இலேயே புலிகளின் மிகப் பெரிய போர்க்கப்பல் மூழ்கடிப்பட்டபோதே புலிகள் இதில் இந்தியாவின் பங்கு இருக்கும் என்பதை யூகித்திருந்தனர்.

2007 தொடக்கத்தில் புலிகளின் மூன்று கப்பல்கள் துல்லியமாகக் கண்டறியப்பட்டு மூழ்கடிக்கப்பட்ட போது புலிகளுக்கு புரிந்துவிட்டது.

யாழ்ப்பாணம் நெடுந்தீவில் இருந்த இலங்கை கடற்படை முகாமைத் தாக்கிய புலிகள்,
இந்தியா வழங்கிய சக்தி வாய்ந்த ராடார் கோபுரம் மற்றும் தகவல் பரிமாற்ற அலுவலகம் ஆகியவற்றை தாக்கி அழித்தனர்.
7 வீரர்களைக் கொன்ற கடற்புலிகள், 2 விமான எதிர்ப்பு துப்பாக்கிகள், 2 மெஷின் கன், ஒரு ஆர்பிஜி லாஞ்சர், எட்டு ரைபிள்களை கைப்பற்றிக் கொண்டு தப்பினர்.

இதன்பிறகு இந்திய கடற்படை முழுமூச்சாக களத்தில் இறங்கியது.

இப்போது புலிகள் தமிழகத்தின் உதவியை நாடினர்.
கனிமொழியைத் தொடர்புகொண்டு மத்திய அரசின் கூட்டணியில் இருந்து விலகி காங்கிரஸ் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருமாறு கோரினர்.

ஆனால் வந்தேறித் தெலுங்கரான கருணாநிதி அப்படி எதையும் செய்யவில்லை.

தமிழகத்தில் ஈழ ஆதரவுப் போராட்டங்களையும் தமிழக மக்கள் அனுப்பும் உதவியையும் காவல்துறையைப் பயன்படுத்தி தடுத்து நிறுத்தினார் அவர்.

அப்போது தமிழக நிலை பற்றி அறிய முதலமைச்சரைச் சந்தித்த சிவசங்கர் மேனனிடம் புலிகளை எப்படியாவது ஒழித்துவிடுமாறு கருணாநிதி கெஞ்சியுள்ளார்.
[சான்று நூல்:
Choices: Inside the Making of India's Foreign Policy - Shivshankar menon]

இந்தியா உதவினாலும் பாகிஸ்தான் மற்றும் சீனாவிடமும் ராஜபக்ச சில உதவிகளை வாங்க சிவசங்கர் மேனன் கோபித்துக்கொண்ட நிகழ்வும் நடந்தது.

ராஜபக்ச ஆரம்பத்தில் கேட்ட வான் பாதுகாப்பு சாதனங்கள், ஆர்ட்டில்லரி துப்பாக்கிகள், ஆளில்லாத உளவு விமானங்கள் (நிஷாந்த்), லேசர் சாதனங்கள் ஆகியன அனுப்பிவைக்கப் பட்டன.

2008 இல் இந்திய கடற்படையின் பேராதரவுடனும் கூட்டு ரோந்துப் பணிகளின் மூலமாகவும் ஒரே ஆண்டில் புலிகளுக்குச் சொந்தமான 10,000 டன் ராணுவ தளவாடங்களை மூழ்கடித்துள்ளதாகவும்
புலிகளிடம் தற்போது கப்பல்களோ படகுகளோ இல்லை என்றும்
அதனால் புலிகளின் கடற்படை பலம் தற்போது இல்லை என்றும் இலங்கை கடற்படை தளபதி கரன்னகோடா அறிவித்தார்.

இங்கே கவனிக்க வேண்டியது அப்போது இலங்கைக்கு சொந்தமான ஒரு போர்க்கப்பல் கூட இல்லை என்பது.

இலங்கை கடற்படையை விட வலிமையான புலிகளின் கடற்படையை
கூட்டுரோந்து என்ற பெயரில் இந்தியா அனுப்பிவைத்த மூன்று அதிவிரைவு படகுகள் மற்றும் ஒரு ஏவுகணை பொருத்தப்பட்ட கப்பல் மூலமே அழித்தது இலங்கை.
இதுபோக வாஜ்பாய் காலத்தில் தரப்பட்ட அதிநவீன கடல்ரோந்து படகான சுகன்யாவும் பயன்படுத்தப்பட்டது.

சார்க் மாநாடு 2008 ஆகஸ்ட் இல் பலத்த பாதுகாப்புடன் கொழும்பு மாநகரில் நடந்து முடிந்தது.
இந்த பாதுகாப்பு இந்திய ராணுவம் இலங்கை சென்று கொடுத்ததாகும்.

மாநாட்டுக்கு சென்ற இந்தியக் குழு அங்கேயே தங்கி பொன்சேகா இலங்கை ராணுவ தளபதி பொன்சேகா, கடற்படைத் தளபதி கரன்னகோடா ஆகியோரைச் சந்தித்து ராணுவ திட்டங்களை குறித்து விவாதித்தது.

2 லட்சம் உயிர்கள் போகும் என கணிக்கப்பட்டு கடைசிக் கட்ட தாக்குதலுக்கு ஒப்புதல் அளித்துவிட்டு வந்தது.

பிறகு நடந்த கொடூரமான தாக்குதலில் கொத்துகொத்தாக மக்கள் மடிந்தனர்.

அப்போது  பிரிட்டனின் இலங்கைக்கான தூதுவர் இந்தியாவின் நிலைப்பாடு குறித்த பேச்சுவார்த்தை நடத்தியபோது
சிவசங்கர் மேனன்,
புலிகளை அழிப்பதில் இந்தியா உறுதியாக இருப்பதாகவும்
போர்நிறுத்தத்தை  இந்தியா விரும்பவில்லை என்றும் 
இந்திய அரசின் சார்பில் தெரிவித்ததை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.

கடைசி நேரத்தில் வாக்குறுதி கொடுத்து புலித் தளபதிகளை சரணடைய சம்மதிக்கவைத்து
நடேசன், புலித்தேவன், ரமேஷ் உள்ளிட்​டோர் வெள்ளைக்கொடியுடன் வந்தபோது அவர்களைக் கொன்றுவிட்டு பூசி மெழுகியது ஐ.நா சிறப்புத் தூதுவர் விஜய் நம்பியார் ஆவார்.

போர் முடிந்த பிறகு பொன்சேகாவை உலகிலேயே சிறந்த தளபதி என்று சிவ்சங்கர் மேனன் புகழ்ந்தார்.

இலங்கைக்கு இந்தியா 100 கோடி சன்மானம் கொடுத்தது.

2009 இல் சர்வதேச சக்திகள் நடத்திய ஈழ இனப்படுகொலை பாவத்தில் நேரடி மற்றும் பெரும்பான்மையான பங்கு மலையாளிகளுடையது.