தெலுங்கர்களைப் புறக்கணிக்கும் தினகரன்
22.03.2019 தேதியிட்ட நெற்றிக்கண் பத்திரிக்கை
"அ.ம.மு.க -வில் எங்களைப் புறக்கணிக்கின்றனர்
- புலம்பும் நாயக்கர் சமூகத்தினர்" என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள கட்டுரையில் கீழ்க்கண்டவாறு உள்ளது,
// குறிப்பாகத் தென்மாவட்டங்களில் உள சட்டமன்றத் தொகுதிகளில் கணிசமாக உள்ள நாயக்கர் (தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள்) சமுதாயத்தைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை எனக் குமுறல்கள் கேட்கின்றன.//
//தென்மாவட்டங்களைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் நாயக்கர் சமூகத்தினர் ஓட்டுகள் பத்தாயிரம் முதல் பதினைந்தாயிரம் வரை உள்ளது.//
//ஆனால் நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு தகுதிக்கு ஏற்ற பொறுப்புகளோ பதவிகளோ கொடுக்கப்படவில்லை.
மற்ற கட்சிகளில் இருந்தபோது மாவட்ட அளவிலான பதவிகள் வகித்தவர்களுக்கு கூட ஒன்றிய அளவிலான பதவிகள் கூட வழங்கப்படவில்லை//
இந்த கட்டுரையானது தினகரன் தலைமையில் முக்குலத்தோருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகவும்
நாயக்கர்கள் ஓட்டு வங்கி இருந்தும் புறக்கணிக்கப் படுவதாகவும்
தினகரனைச் சாதி ரீதியில் குற்றம்சாட்டும் வகையில் உள்ளது.
மேலும் தகுதியைப் பொறுத்து வாய்ப்பு தராதவர் என்றும்
ஒரு குறிப்பிட்ட சமூக வாக்குவங்கியை தவறவிடுவதாகவும் குறைசொல்லும் வகையில் உள்ளதே தவிர ஆதரித்து இல்லை.
ஆனால் தினகரன் நிறுத்தியுள்ள வேட்பாளர்களைப் பார்த்தால் அதில் பல்வேறு சாதிகளுக்கும் வாய்ப்பு கொடுத்துள்ளது தெரிகிறது.
வட மாவட்டங்களை விட தென்மாவட்டங்களில் வந்தேறிகள் அதிகம்தான் என்றாலும் அவர்களது எண்ணிக்கை பதவி பகிர்ந்தளிக்கும் அளவுக்கெல்லாம் இல்லை.
மேற்கண்ட கட்டுரையாளர் (ராஜன்) வந்தேறியாக இருக்க அதிக வாய்ப்புள்ளது.
தினகரனை ஏன் நாம்தமிழர் கட்சிக்கு அடுத்த இடத்தில் வலியுறுத்துகிறோம் என்று இப்போது புரிந்துகொள்ளலாம்.
போகிற போக்கைப் பார்த்தால் சீமான் போட்ட அடித்தளத்தில் அவருக்கு முன் தினகரன் கோட்டை கட்டி அமர்ந்துவிடுவார் என்றே தோன்றுகிறது.
படம் உதவி: மேகநாதன் முனுசாமி
Tuesday, 26 March 2019
தெலுங்கர்களைப் புறக்கணிக்கும் தினகரன்
Thursday, 22 November 2018
27 லாரி கழிவுகள் - மலையாளிகள் அனுப்பிய நிவாரணம்
27 லாரி கழிவுகள் - மலையாளிகள் அனுப்பிய நிவாரணம்
அதில் 4 லாரிகள் ஆபத்தான மருத்துவக் கழிவுகள்!
மீதி 23 வெள்ள வடிந்த பகுதிகளை சுத்தப்படுத்தி எடுத்த குப்பைகள்!
நாம் இளித்தவாயர்கள் என்பது 1008 வது முறையாக நிரூபணம் ஆகியுள்ளது!
-------
தினகரன் வெளியிட்ட செய்தி
கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு கழிவுகளை ஏற்றிவந்த 27 லாரிகளுக்கு அபராதம் விதித்து சுகாதாரதுறை நடவடிக்கை
தென்காசி: கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு கழிவுகளை ஏற்றிவந்த 27 லாரிகள் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டன.
மருத்துவ கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை ஏற்றிவந்த லாரிகள் தென்காசி அருகே உள்ள புளியரையில் தடுத்து நிறுத்தப்பட்டன.
லாரிகளை பறிமுதல் செய்த போலீசார் அவற்றை சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
கேரளாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பல மாவட்டங்கள் மிகவும் பாதிப்புக்குள்ளானது.
அப்போது அம்மாநிலத்தில் பயன்படுத்த முடியாத பொருட்கள், பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் சேகரிக்கப்பட்டு தமிழகத்தில் கொட்டப்பட்டு வருகின்றன.
அதுமட்டுமல்லாது கடந்த 10 ஆண்டுகளாகவே இதுபோன்று தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நெல்லை வழியாக கேரளாவில் கழிவுகளை ஏற்றி வந்த 23 லாரிகளை போலீசார் தடுத்து நிறுத்தி, அவற்றை பறிமுதல் செய்து சுகாதாரதுறையினரிடம் ஒப்படைத்தனர்.
லாரிகளில் இருந்த கழிவுகள் குறித்து ஆய்வு செய்த அதிகாரிகள் பிளாஸ்டிக் கழிவுகளை ஏற்றிவந்த 23 லாரிகளுக்கு தலா ஒரு லட்சமும், மருத்துவ கழிவுகளை ஏற்றிவந்த 4 லாரிகளுக்கு தலா 3 லட்சமும் அபராதம் விதித்தனர்.
05:10 pm Nov 22, 2018 | dotcom@dinakaran.com
தென்மாவட்டங்களில் வருகிறது 4வழிச்சாலை அதுவும் 1863 ஏக்கரை அழித்து - நேரம் பார்த்து அடிக்கும் அரசு
தென்மாவட்டங்களில் வருகிறது 4வழிச்சாலை அதுவும் 1863 ஏக்கரை அழித்து
- நேரம் பார்த்து அடிக்கும் அரசு
மதுரை, விருதுநகர், நெல்லை ஆகிய 3 மாவட்டங்களில் 1,863 ஏக்கர் விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட நடவடிக்கை!
நில உரிமையாளர்களுக்கு முன்னறிவிப்பு எதுவும் இன்றி நன்செய் வயல்களில் அடையாள குறியீட்டு கற்கள் நடப்பட்டன!
---------
செங்கோட்டை திருமங்கலம் நான்கு வழிச்சாலை பணிக்கு புளியரை பகுதியில் நாற்று நடப்பட்ட வயல்களில் அளவு கல் நடும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இதனால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.
தமிழகத்தில் சாலை வழி சரக்கு போக்குவரத்தை மேம்படுத்தவும், பயண நேரத்தை குறைக்கவும் "பாரத் மாலா பரியோஜனா" மற்றும் தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதிதாக நான்கு வழிச்சாலைகள் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு துவங்கியுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் செங்கோட்டை முதல் திருமங்கலம் வரையிலான 147 கிமீ தூரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்க மதுரை, விருதுநகர், நெல்லை ஆகிய 3 மாவட்டங்களில் 1,863 ஏக்கர் விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் 818.113 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன.
விளைநிலங்கள், குடியிருப்புகள், நீர்நிலைகள் மற்றும் வனத்தையொட்டிய பகுதிகள் வழியாக அமைக்கப்படும் இந்த நான்கு வழிச்சாலை பணிகளை முதற்கட்டமாக ராஜபாளையம் சத்திரப்பட்டியில் இருந்து செங்கோட்டை வரையிலான 69 கி.மீ. தொலைவிற்கு அரசு துரிதப்படுத்தி உள்ளது.
இந்த திட்டப்பணிகளுக்காக நேற்று முன்தினம் நெடுஞ்சாலை துறை சார்பில் புளியரையில் தொடங்கி தாட்கோ நகர், லாலா குடியிருப்பு வழியாக நாற்றுகள் நடப்பட்ட வயல்களில் குறியீட்டு அளவுகல் நடப்பட்டன.
இன்று (21ம் தேதி) நில எடுப்பு தாசில்தார் தலைமையில் இதற்கான பணிகள் துவங்கப்பட உள்ளது.
செங்கோட்டை திருமங்கலம் இடையேயான நான்கு வழிச்சாலை பணிக்கு விளைநிலங்களை கையகப்படுத்த விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு ராஜபாளையம் சத்திரப்பட்டியில் தொடங்கி மீனாட்சிபுரம், இனாம் கோவில்பட்டி, விஸ்வநாதப்பேரி, சிவகிரி, உள்ளார், வாசுதேவநல்லூர் பகுதிகளில் நில உரிமையாளர்களுக்கு முன்னறிவிப்பு எதுவும் இன்றி நன்செய் வயல்களில் அடையாள குறியீட்டு கற்கள் நடப்பட்டன.
தகவலறிந்து திரண்ட விவசாயிகள், அளவுகல் நட்ட ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து கண்டன சுவரொட்டிகளும் ஒட்டினர்.
கடந்த 24ம் தேதி சிவகிரி தாலுகாவை சேர்ந்த சிறு குறு விவசாயிகள், நிலம் கையகப்படுத்தும் பணிக்கான மாவட்ட சிறப்பு அலுவலருக்கு தங்களது ஆட்சேபனையை பதிவு தபாலில் அனுப்பினர்.
அளவு குறியீட்டு கற்களை பிடுங்கி எறிந்து கறுப்புக்கொடிகளை நட்டனர்.
மேலும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திலும் நான்கு வழிச்சாலை பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தனர்.
இந்நிலையில் விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி புளியரை பகுதியில் நாற்று நடப்பட்ட வயல்களில் அளவு குறியீட்டுக் கற்கள் பதிக்கப்பட்டதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நன்றி: தினகரன்
Wednesday, 21 November 2018
தென்மாவட்டங்களில் வருகிறது 4வழிச்சாலை அதுவும் 1863 ஏக்கரை அழித்து - நேரம் பார்த்து அடிக்கும் அரசு
தென்மாவட்டங்களில் வருகிறது 4வழிச்சாலை அதுவும் 1863 ஏக்கரை அழித்து
- நேரம் பார்த்து அடிக்கும் அரசு
மதுரை, விருதுநகர், நெல்லை ஆகிய 3 மாவட்டங்களில் 1,863 ஏக்கர் விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட நடவடிக்கை!
நில உரிமையாளர்களுக்கு முன்னறிவிப்பு எதுவும் இன்றி நன்செய் வயல்களில் அடையாள குறியீட்டு கற்கள் நடப்பட்டன!
---------
செங்கோட்டை திருமங்கலம் நான்கு வழிச்சாலை பணிக்கு புளியரை பகுதியில் நாற்று நடப்பட்ட வயல்களில் அளவு கல் நடும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இதனால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.
தமிழகத்தில் சாலை வழி சரக்கு போக்குவரத்தை மேம்படுத்தவும், பயண நேரத்தை குறைக்கவும் "பாரத் மாலா பரியோஜனா" மற்றும் தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதிதாக நான்கு வழிச்சாலைகள் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு துவங்கியுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் செங்கோட்டை முதல் திருமங்கலம் வரையிலான 147 கிமீ தூரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்க மதுரை, விருதுநகர், நெல்லை ஆகிய 3 மாவட்டங்களில் 1,863 ஏக்கர் விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் 818.113 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன.
விளைநிலங்கள், குடியிருப்புகள், நீர்நிலைகள் மற்றும் வனத்தையொட்டிய பகுதிகள் வழியாக அமைக்கப்படும் இந்த நான்கு வழிச்சாலை பணிகளை முதற்கட்டமாக ராஜபாளையம் சத்திரப்பட்டியில் இருந்து செங்கோட்டை வரையிலான 69 கி.மீ. தொலைவிற்கு அரசு துரிதப்படுத்தி உள்ளது.
இந்த திட்டப்பணிகளுக்காக நேற்று முன்தினம் நெடுஞ்சாலை துறை சார்பில் புளியரையில் தொடங்கி தாட்கோ நகர், லாலா குடியிருப்பு வழியாக நாற்றுகள் நடப்பட்ட வயல்களில் குறியீட்டு அளவுகல் நடப்பட்டன.
இன்று (21ம் தேதி) நில எடுப்பு தாசில்தார் தலைமையில் இதற்கான பணிகள் துவங்கப்பட உள்ளது.
செங்கோட்டை திருமங்கலம் இடையேயான நான்கு வழிச்சாலை பணிக்கு விளைநிலங்களை கையகப்படுத்த விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு ராஜபாளையம் சத்திரப்பட்டியில் தொடங்கி மீனாட்சிபுரம், இனாம் கோவில்பட்டி, விஸ்வநாதப்பேரி, சிவகிரி, உள்ளார், வாசுதேவநல்லூர் பகுதிகளில் நில உரிமையாளர்களுக்கு முன்னறிவிப்பு எதுவும் இன்றி நன்செய் வயல்களில் அடையாள குறியீட்டு கற்கள் நடப்பட்டன.
தகவலறிந்து திரண்ட விவசாயிகள், அளவுகல் நட்ட ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து கண்டன சுவரொட்டிகளும் ஒட்டினர்.
கடந்த 24ம் தேதி சிவகிரி தாலுகாவை சேர்ந்த சிறு குறு விவசாயிகள், நிலம் கையகப்படுத்தும் பணிக்கான மாவட்ட சிறப்பு அலுவலருக்கு தங்களது ஆட்சேபனையை பதிவு தபாலில் அனுப்பினர்.
அளவு குறியீட்டு கற்களை பிடுங்கி எறிந்து கறுப்புக்கொடிகளை நட்டனர்.
மேலும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திலும் நான்கு வழிச்சாலை பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தனர்.
இந்நிலையில் விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி புளியரை பகுதியில் நாற்று நடப்பட்ட வயல்களில் அளவு குறியீட்டுக் கற்கள் பதிக்கப்பட்டதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நன்றி: தினகரன்
Tuesday, 19 September 2017
தினகரன், பன்னீர்செல்வம், பழனிச்சாமி
தினகரன், பன்னீர்செல்வம், பழனிச்சாமி
இந்த மூன்றுபேருமே கெட்டவர்கள்தான் என்றாலும்,
இதில் அறவே புறக்கணிப்படவேண்டிய இரண்டு நம்பிக்கை துரோகிகள் பன்னீர் மற்றும் எடப்பாடி ஆவர்.
மற்ற அரசியல் விமர்சனங்களை விடுவோம்.
எடப்பாடி பழனிச்சாமி தன்னை முதலமைச்சராக்கிய சசிகலாவையே கட்சியை விட்டு நீக்கி நன்றிகெட்டவன் என்று தன்னை நிரூபித்தார்.
ஆக மூவரில் மிக மோசமான நம்பிக்கை துரோகி இவரே.
பன்னீர்செல்வம் சசிகலாவின் தலைமையை ஏற்றுக்கொண்டு முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுத்தார்.
அதன்பிறகு முடிவை மாற்றிக்கொண்டு கட்சியை உடைக்க முயன்று ஒட்டுமொத்த கட்சிக்கே துரோகம் செய்தவர்.
அதிலும் உறுதியாக இல்லாமல் கிடைக்கும் பதவியைப் பெற்றுக்கொண்டு மீண்டும் இணைந்தவர்.
அதாவது சந்தர்ப்பவாதி, நிறம் மாறும் பச்சோந்தி.
(ஆனால் ஜெயலலிதாவிற்கு விசுவாசமாக இருந்தார்)
இவர் எடப்பாடிக்கு அடுத்த நம்பிக்கை துரோகி.
மேலும் மேற்கண்ட இருவருமே முதுகெலும்பு இல்லாதவர்கள்.
(இருவருமே குடும்ப அரசியல் செய்பவர்கள்தான்)
ஆனால்,
தினகரன் ஓரளவு வளைந்துகொடுத்து போனாலும் முதுகெலும்புள்ளவர்,
நம்பிக்கை துரோகம் செய்யாதவர்.
சிலநேரம் பணிந்தும் சிலநேரம் பணியாமலும் மத்திய மாநில அரசுகளை ஒற்றை மனிதனாக எதிர்த்துக் களமாடுபவர்.
(சசிகலாவும் இதைப் போன்றவர்தான்)
அரசியலில் நல்லவர்களை விட வல்லவர்களே நிலைப்பார்கள்.
இந்த மூவரில் நான் சசிகலா/தினகரன் அணியை ஆதரிக்கிறேன்.
(ஒரு தெலுங்கரை முதல்வராக முன்வைக்கிறார் அதுதான் ஒரு பெரிய குறை).
மற்றபடி எனக்கு அதிமுக சிதைந்து அழிந்துபோவதே முதல் விருப்பம்.
தினகரன் நடக்கும் ஆட்சியைக் கலைத்துவிட்டு தனது ஆதரவாளர்களுடன் திராவிடர் எனும் அடையாளத்தை விட்டுவிட்டு தமிழர் எனும் பெயரில் கட்சி தொடங்கினால் தமிழகத்திற்கு மிகப்பெரிய நன்மையாக முடியும்.
தமிழக மக்கள் கட்டாயம் பெரிய அளவில் ஆதரிப்பார்கள்.
(புகைப்படத்திற்கு நன்றி: உமாமகேஸ்வரன் அதங்குடியான்)